வியாழன், 24 அக்டோபர், 2019

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை: அசாம் மாநில அரசு அறிவிப்பு

கவுகாத்தி, அக். 24- இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற் றால் அவர்களுக்கு அரசு வேலை இல்லை என அசாம் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வர்களுக்கு எந்த அரசாங்க வேலைகளும் வழங்கப்பட மாட்டாது என்று அசாம் அமைச்சரவை முடிவு செய் துள்ளது.

கடந்த திங்கள்கிழமை மாலை நடைபெற்ற அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வெளியிடப் பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய நில சீர்திருத்தக் கொள்கை மற்றும் இரண்டு குழந்தைக ளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

நிலமற்ற பழங்குடி மக்க ளுக்கு வேளாண்மை செய்ய வும் வீடு கட்டவும் நிலம் ஒதுக் கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. மேலும், அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுகாலத் துக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இச் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றும் அரசு எச்சரித் துள்ளது.

அத்துடன் 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2 குழந்தைக ளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்ப தற்கான ஒப்புதலையும் அமைச் சரவை கொடுத்துள்ளது. தற் போதைய அரசு ஊழியர்க ளும் இதனை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என அசாம் முதலமைச்சர் சர் பானந்தா சோனோவாலி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 24 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக