எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2024

அரசமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை சோசலிசம் என்ற சொற்களை எதிர்ப்பதா?

 



விடுதலை நாளேடு 

பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, அக்.22 இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா? என பொதுநல வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளது.
இ்ந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது அதன் முகப்புரையி்ல் ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. ஆனால்,இடையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. எனவே, இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் எனக் கூறி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர்கள் அஸ்வினி உபத்யாய், விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க விரும்பவில்லையா? என்றுநீதிபதி சஞ்சீவ் கன்னா கேள்வி எழுப்பினார்.

இதற்கு, இந்த வழக்கின் மனுதாரரான விஷ்ணு சங்கர் ஜெயின்”இந்தியா மதச்சார்பற்றது அல்ல என்று நாங்கள் இங்கு கூறவில்லை. அரசமைப்பு சட்டத் தின் முகப்புரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். மேலும், சோசலிசம் என்ற வார்த்தையை சேர்ப்பது சுதந்திரத்தை குறைக்கும் என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது” என்றார்.
மற்றொரு மனுதாரரான வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாய் வாதிடுகையில், “நாங்கள் எப்போதுமே மதச்சார்பற்றவர்கள். மக்களின் விருப்பத்தை கேட்காமல் அவர்கள் இந்த வார்த்தையை முகப்புரையில் சேர்த்துள்ளனர். நாளை ஜனநாயகம் என்ற வார்த்தை கூட நீக்கப்படலாம்” என்றார். மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், “மதச்சார்பின்மை’ மற்றும்’சோசலிசம் ஆகிய வார்த்தைகளை இயற்றுவதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம் என்று கூறுவது தவறு. எனவே முகப்புரையை நாம்இரண்டு பகுதிகளாக வைத்திருக்கலாம். ஒன்று தேதியுடன் மற்றொன்று தேதியில்லாமல்” என்றார். மனுதாரர்களின் வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள் கூறியதாவது:

அரசமைப்பின் கட்டமைப்பு என்பது மதச்சார்பின்மைதான். பல தீர்ப்புகள் மதச்சார்பின்மையின் அடிப் படையில்தான் இந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்துள்ளது. சமத் துவத்துக்கான உரிமை, சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் மற்றும் பகுதி III-இன் கீழ் உள்ள உரிமைகளைப் பார்த்தால் அரசமைப்பின் முக்கியமான அம்சமாக மதச்சார்பின்மை உள்ளது தெளிவாக தெரியும். சோசலிசம் என்பது நாட்டின் அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கு சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும், இது அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட வார்த் தைகள் என்பதால் அடைப்புக் குறிக்குள் இடப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுதாரர்கள் உரிய ஆவணங்களை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்த வழக்கு தொடர்பாக அறிவிக்கை அனுப்ப மறுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

திங்கள், 16 டிசம்பர், 2019

சமஸ்கிருத எதிர்ப்பு என்பது பார்ப்பன-ஆரிய எதிர்ப்பே மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் உருவாக்கம்

மக்களவையில் 12.12.2019 அன்று மசோதா, திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

அடுத்து தேசிய கல்விக்கொள்கையில் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

ஆனால், சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர், இஸ்லாமியர் என்பதால்,உத்தர பிரதேசத்தில் உள்ள பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு பார்ப்பன மாண வர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு.

ஆக, பார்ப்பனர்கள் தவிர்த்து யார் படித்தாலும், ஒன்றும் ஆகப் போவதில்லை. இருப்பினும் தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திட அனைத்து வழிக ளிலும் செயல்படுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை ஆரிய, பார்ப்பன, வழக்கு ஒழிந்த மொழி என்று தொடர்ந்து சொல்லி வருவது திராவிடர் இயக்கமே. அதன் தொடர்ச்சிதான், மக்கள வையில் திமுக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோ தாவை எதிர்த்தது. கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெங்க டேசன் அவர்களும் இணைந்தது மகிழ்ச்சியே.

1926-க்கு முன்னால் உள்ள

வரலாற்றுச் செய்தி:

சென்னை மாநிலக் கல்லூரியில், சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300.  தமிழ் பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியா ருக்கு மாதச் சம்பளம் ரூ.80.  இதனை எதிர்த்து தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார். அன்றைய நீதிக்கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த இராமராய நிங்கவாரு என்ற பனகல் அரசர், இந்த வேற்றுமையை ஒழித்தார்.

ஆக, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது ஹிந்திக்கும் முன்னால், திராவிடர் இயக்கம் மேற்கொண்ட போர்.

அது,  டிசம்பர் 12-ஆம் தேதி  இந்திய அளவில் நாடாளுமன்றத்தில்  திராவிடர் இயக்கத்தின் குரலாக எதிரொலித்தது.

இன்று நடைபெறும் ஆட்சி ‘பச்சைப் பார்ப்பன ஆட்சி' என்றும், சூத்திரனை - பிராமணன் மேல்ஜாதி - கீழ்ஜாதிக்காரன் என்பவன் அப்படியே நீடித்து நிலைத்து என்றென்றும் ‘சிரஞ்சீவி'யாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டுவரும் ஆட்சி என்றும் காட்டுவதற்கு இதுவரை பலவித ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்றாலும், இன்றும் ஒரு எடுத்துக்காட்டு காட்டுகிறேன்.

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்' என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந் நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை' எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்கம்

கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில் லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள -  இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய  ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய் மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன 'மேலோர்' மொழியாக - சமஸ்கிரு தத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டி தர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு புரொஃபசருக்கு) 75 ரூபாய் தான் சம்பளம். சமற்கிருத ஆசிரியருக்குப் பெயர் - ‘புரொஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்று ஞாபகம்) என்பவர் வாங் கின சம்பளம் ரூ.300க்குமேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங் கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல்ராஜா அவர்களே இதைக்கண்டு மனம் கொதித்து என்னி டத்தில் நேரில் சொல்லி, “நீங்கள் இதைக்கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்' என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமைவாய்ந்தவர். என்ற போதிலும்கூட அந்தமாதிரி - அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட போடும். ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் எறும் தமிழ்ப்பண்டிதர் கள் இதே நிலைமையில்தான் இருக்கக்கூடும்.

- தந்தை பெரியார், விடுதலை, 15.2.1960

தகவல்: கோ.கருணாநிதி, வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்

- விடுதலை நாளேடு 15 12 19