புதன், 30 மார்ச், 2022

'நீட்' நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது!

மாநிலங்களவையில் பெரியார் அவர்களின் 'சச்சி இராமாயணம்' "பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள்!" ஆர்.ஜே.டி. உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா முழக்கம்

 

புதுடில்லி, மார்ச் 28- நாடாளுமன்றம் -மாநிலங்களவையில் ராஷ்ட் ரிய ஜனதா தளம் உறுப்பினர் தந்தை பெரியாரின் "சச்சி ராமாயணம்" இந்தி நூலைத் தூக்கிக் காட்டி பெரியாரைப் புரிந்து கொள்வீர்! என்று முழங்கினார்.

மாநிலங்களவையில் கடந்த 25 3.2022 அன்று பாஜக உறுப் பினர் ராகேஷ் சின்கா என்பவர் முன்மொழிந்த  “பண்டைய இந் திய அறிவு மரபுகளை புதுப் பிக்க வேண்டும்” என்ற தனி நபர் மசோதாமீது பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர்  டாக்டர் மனோஜ் குமார் ஜா உரையாற்றுகையில், தந்தை பெரியார் எழுதிய "இராமா யணப் பாத்திரங்கள்" நூலின் இந்தி மொழியாக்கம் செய்யப் பட்டு வெளியான ‘சச்சி இரா மாயணம்’ புத்தகத்தை எடுத் துக்காட்டி உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்ட தாவது,

பெரியாரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வட இந்தியாவில் அவரது பெய ரைத் தவிர மற்ற அவரின் படைப்புகளை படித்தவர்கள் மிகக் குறைவு. அய்யா, அது ஒரு புத்தகம், 'சச்சி ராமாயணம்' - தடை செய்யப்பட்டது. அவரு டைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவருடைய புத்தகம் தடை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, மக்கள் போராடிய போது, "அலகாபாத் உயர்நீதிமன்றம் பெரியார் பற்றி என்ன கூறியது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." ராகேஷ் ஜி, இதை உங்கள் முன் வைக்கி றேன்,

 'இதில் எழுதப்பட்டிருப்பது அய்ரிஷ் மக்களின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைக ளையோ புண்படுத்தும் என்று நாங்கள் நம்ப முடியாது. வேண்டுமென்றே இந்துக்க ளின் உணர்வுகளைப் புண்படுத் துவதை விட, தனது ஜாதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை காட்டுவதே ஆசிரியரின் நோக் கமாக இருக்கலாம், நிச்சயமாக அதை அரசமைப்புச் சட்டத் துக்கு எதிரானதாகக் கருத முடியாது”. இவ்வாறு அலகா பாத் உயர்நீதிமன்றம் கூறியுள் ளது. 

பெரியார் என்ன நம்பினார், அவரது கருத்தைப் பார்க்க வேண்டாமா? பாபாசாகேப் எதை நம்பினார்? நமது பழங் கால இந்தியா என்ற கருத்து ஏன் நடக்கிறது - நமது தமிழ்நாடு சகாக்களும் சொன்னதை, சிவதாசன்ஜியும் சொல்கிறார் - உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், இது மாட்டு பெல்ட் (நீஷீஷ் தீமீறீt), அதன் கருத்தை பண்டைய கருத்தாகவே கருதுவோம். பிறகு, இந்தியா, எப்படி, 'ஏக் பாரத், சிறந்த இந்தியா'வாக முன்னேற முடியும்?

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை இந்தியா ஒன்று என்று நீங்கள் சொன்னால், 'ஏக் பாரத், ஷ்ரேத் பாரத்' என்று நீங்கள் சொன்னால், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இனத்தை மய்யமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல் நாம் முன்னேற வேண்டும்.

கடந்த கால அரு வருப்பான பயணம் குறித்துப் பேசினேன். விமர்சனக் கல்வி என்பது ஒரு விஷயம். கல்விக்கு பல வரையறைகள் இருக்கலாம், ஆனால் கல்வியின் இறுதி வரையறை - "கல்வி என்பது விடுதலைக்கான கருவியாக இருக்க வேண்டும். எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும், அது சித்தாந்த பந்தமாக இருந் தாலும், மத பந்தமாக இருந்தா லும் அல்லது எந்த வகையான அடிமைத்தனமாக இருந்தா லும் சரி, அந்த மக்களை விடு விப்பதாக இருக்க வேண்டும்" என்று பீகார் மாநில மாநிலங் களவை உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா பேசியுள்ளார்.

இசைக்கு மொழி தடையில்லை என்போர் - கலைக்கு மட்டும் மதத் தடை ஏன்? கேரள கோவிலில் இந்து அல்லாத பரத நாட்டியக் கலைஞர் நிகழ்ச்சிக்குத் தடை!


 திருச்சூர்மார்ச் 29  கேரளாவின் திருச்சூர் மாவட் டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல் மாணிக்யம் கோயிலில்இந்து அல்லாதவர் என்பதால் கோவில் வளாகத்தில் நடத்திட திட்ட மிடப்பட்ட பரதநாட்டிய  நிகழ்ச்சி தடை செய்யப் பட்டுள்ளது என்று பரத நாட்டியக் கலைஞர் மான்சியா வி.பி குற்றம் சாட்டியுள்ளார்.

பரத நாட்டியத்தில் பி.எச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள மான்சியாமுஸ்லி மாகப்  பிறந்து வளர்ந்த போதிலும்பாரம்பரிய நடனக் கலைஞராக இருந்ததற்காக இஸ்லாமிய மதகுருக்களின் கோபத்தையும்புறக்கணிப்பையும் எதிர்கொண்டார்.

மான்சியா தனது முகநூல் பதிவில், ''எனது நடன நிகழ்ச்சி ஏப்ரல் 21 ஆம் தேதி கோவில் வளாகத்தில் நடைபெற இருந்ததுநான் இந்து அல்லாதவர் என்பதால் கோவிலில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று கோவில் அலுவலக அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்ஒரு நல்ல நடனக் கலைஞரா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல்மதத்தின் அடிப்படையில்தான் அனைத்து நிலைகளும் ஆய்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளனஇதனிடையேதிருமணத்திற்குப் பிறகு நான் இந்துவாக மாறினேனா என்ற கேள்வியையும் எதிர்கொண்டேன். (அவர் இசையமைப்பாளர் ஷியாம் கல்யாணை மணந்தார்). எனக்கு மதம் இல்லைநான் எங்கு செல்ல வேண்டும்” என்று மான்சியா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்சில ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் உள்ள குருவாயூர் சிறீ கிருஷ்ணா கோவிலில் இந்து  அல்லாதவர் என்ற காரணத்திற்காக தடை செய்யப் பட்டதாகக் கூறப்பட்டதால்மத அடிப்படையிலான நிகழ்ச்சியிலிருந்து இத்தகைய விலக்கு தனக்கு முதல் அனுபவம் அல்ல என்றும் மான்சியா கூறினார். “கலை மற்றும் கலைஞர்கள் மதம்ஜாதியால் பின்னிப் பிணைந்துள்ளனர்ஒரு மதத்திற்குத் தடை விதிக்கப் பட்டால்அது மற்றொரு மதத்தின் ஏகபோகமாக மாறுகிறதுஇந்த அனுபவம் எனக்குப் புதிதல்லநமது மதச்சார்பற்ற கேரளாவிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நினைவூட்டவே அதை இங்கே பதிவு செய்கிறேன்” என்று மான்சியா குறிப் பிட்டுள்ளார்.

இது குறித்து கூடல்மாணிக்யம் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரதீப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​''கோவிலின் தற்போதைய பாரம்பரியத்தின்படிஇந்துக்கள் மட்டுமே கோவிலின் வளாகத்திற்குள் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்'' என்றார். ''இந்தக் கோவில் வளாகம் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் துள்ளதுகோவில் வளாகத்தில் 10 நாள்கள் திருவிழா நடக்கும்விழாவின்போது சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்நமது நெறிமுறைகளின்படிகலைஞர்களை அவர்கள் இந்துக்களா அல்லது இந்து அல்லாதவர்களா என்று கேட்க வேண்டும்மான்சியா தனக்கு மதம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்திருந்தார்அத னால்,  அவருக்கு இடம் மறுக்கப்பட்டதுகோவிலில் தற்போதுள்ள வழக்கப்படிதான் செய்துள்ளோம்” என்று கூறினார்.

ஞாயிறு, 20 மார்ச், 2022

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தின் சிறப்புத் தீர்மானங்கள்!

புதன், 9 மார்ச், 2022

துக்ளக்'குக்குப் பதிலடி!


கேள்வி: ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையா? என்ற ஸ்டாலினின் கருத்தைப்பற்றி?

பதில்: ஸ்டாலினுக்கு ஆடுபற்றியும் கொஞ்சம் கூற வேண்டியிருக்கிறது. செம்மறி ஆட்டுக்குத் தாடி கிடையாது. எனவே, இயற்கையில் தாடி இல்லாத ஆடும் உண்டு. ஆனால், அரசியல் சாசனத்தில் ஆளுநர் இல்லாத மாநிலம் இருக்க முடியாது. ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்கும் அரசியல் சாசனத்தில் முதல்வர் இல்லாத மாநிலம் இருக்க முடியும்.

- 'துக்ளக்'

சிந்தனை: ஆட்டுக்குத் தாடி எதற்கு என்று கேட்டால், செம்மறி ஆட்டின் வாலைப் பிடித்துத் தொங்குகிறார் குரு மூர்த்தி அய்யர்வாள்.

செம்மறி ஆட்டுக்குத் தாடி இல்லாமையால் அதற்கு என்ன பயன்?

மிக சாமர்த்தியமாக எழுதுவதாக 'துக்ளக்'குகளுக்கு ஒரு அற்பத்தனம்!

ஆளுநர் என்போர் ஒன்றிய அரசின் ஏஜெண்டாகத்தானே நடந்து வரு கின்றனர்; மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட ஆட்சியின் முடிவுகளுக்கு முட்டுக் கட்டை போட குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி தானே ஆளுநர். அதிகாரிகள், ஆட்சியாளர்களை அதிகாரம் செய்ய முடியுமா?

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க ஆளுநர் ஒப்புதல் மறுத்தும், or other wise    என்ற அரசியல் சாசனப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்தது எப்படி?

மற்றவற்றிற்கெல்லாம் வெள்ளைக்காரன் - கிறிஸ்தவன் ஏற்பாடு களை ஏளனம் செய்யும் பா.ஜ.க., இதில் மட்டும் வெள்ளைக்காரர் களுக்கு வெண் சாமரம் வீசுவானேன்?

தி.க.வின் நிலைப்பாடு - "இனமலர்கள்" புரிந்து கொள்ளட்டும்!


 


13 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் திராவிடர் கழகம் கெட்டி மேளம் அடித்ததா?

கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சி நடந்ததே அப்பொழுது  தி.க. என்ன உருமிமேளம் அடித்ததோ?

எந்த நிலையிலும் குடுமிகளின் கொட்டத்தை அடக்குவதில் மட்டும் உறுதியாக இருந்து வந்திருக்கிறது.

கொள்கையின் அடிப்படையில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொள்கையின் அடிப்படையில் ஆதரவும் - எதிர்ப்பும் என்பது தான் தி.க.வின் நிலைப்பாடு - "இனமலர்கள்" புரிந்து கொள்ளட்டும்!

கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் படுகொலை செய்யப்பட்ட வழக்கு