திங்கள், 30 நவம்பர், 2020

முகப்புக் கட்டுரை : இந்தியா எங்கும் எழுச்சிக்கு வித்திட்ட திராவிடர் கழக பவள விழா மாநாடு!


செவ்வாய், 24 நவம்பர், 2020

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்

*மழையால்பாதிக்கப்பட்டால்*
*பொது மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற*
*உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்*
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
17 *தேனி மாவட்டம்Theni*
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம்
Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம்
Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691...

வியாழன், 12 நவம்பர், 2020

திருமாவளவன்மீது பாயும் தீவட்டிகளே ! (மனு-பெண்)

 இதற்கென்ன உங்கள் பதில் ? 

மனுதர்மம் - அத்தியாயம் 9 ; ஸ்மிருதி சுலோகம் 19 " மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் , சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன . அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்திற்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தங்களைக் கேளுங்கள் . "

 ஸ்மிருதி சுலோகம் 20 : " ஒருவன் தன்னிட தாய்க்கு மா விபச்சாரம் நேரிட்டதாக அறிந்து அதற்குப் பிராயாச்சித்தம் செய்கிறான் . என் தாயானவள் கற்பின்றி அயலான் வீட்டிற்குப் போய் , அங்கு பரபுருஷனைப் பார்த்து , யாதாவது மனதினால் ஆசைப்பட்டிருந்தால் அந்த ஆசையினால் உண்டான ரேதஸ்ஸை என் பிதா தனது ரேதஸ்தினால் பரிசுத்தம் செய்யக் கடவன் . "
இது மாதர் நிலையில்லா மனமுடையவர் என்கிறதற்கு திருஷ்டாந்தரம் . 

ஆதாரம் : 1979 ஆம் ஆண்டு மனுதர்ம சாஸ்த்ரம்.
- விடுதலை நாளேடு, 28.10.20

செவ்வாய், 10 நவம்பர், 2020

ஆண்ட பரம்பரை – ஓரு சிறப்பு பார்வை (சத்திரியர் உண்டா?)

சமீபகாலமாக, முகநூலில் மட்டுமல்ல, போதுவெளிகளிலும், நான் கவனித்த ஒரு போக்கு என்னவென்றால்.

ஆங்கிலேயன் வருவதற்கு முன் நாங்கள் எல்லோரும் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்தோம் அவன் வந்து தான் சட்டம் போட்டு, எங்களை இப்படி பிரித்துவிட்டான் தெரியுமா என்பது ஒரு சாராரின் வாதம்

இந்துமதத்தின் மூலமுமாக தமிழுக்கு பார்பனர் எவ்வளவு தொண்டு செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராரின் வாதம்

எல்லோருமே, யாரை பார்த்தாலும் நாங்கெல்லாம் அந்த காலத்துல ஆண்டபரம்பரை தெரியுமா என்ற ஒரு முரட்டு வாதம் வைக்கிறார்கள்.

சரி முன்னோர் பெருமை பேசுகிறார்கள் என்று நினைத்தால், எல்லோருமே சொல்வது நாங்க மட்டும் தான் ஆண்டபரம்பரை மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு அடிமை பணி செய்த பரம்பரை என்று வேறு ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே, பார்பானை திட்டினால் கண்டிப்பாக பார்பானுக்கு முன்னால் ஒடிவந்து உனக்கு என்னடா தெரியும் என்று கேட்கிறார்கள்.

மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், தமிழர்கள் என்று தன்னை, ஆண்டபரம்பரையாக அடையாளப்படுத்தி கொள்ள இந்துமதம் அடையாளமாக தேவைபடுகிறது, அந்த மதபுராணக் கதைகள் சொல்லிகொடுக்கும் பார்பனன், தன் பாரம்பரிய காவலனாக தமிழர்கள் கண்களுக்கு தெரிகிறான்.

பிராமணன் என்று தனக்கு மேலே ஒருவன் இருப்பதை ஒப்புக்கொண்டால் தான் தன்னை ஆண்டபரம்பரை சத்திரியன் என்று சொல்லிக்கொள்ள முடியும் என்றாலும் பரவாயில்லை, அதற்காக நான் பார்பானுக்கு ஆதரவு கொடுப்பேன் என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. 

சரி பார்பானின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம், வெறும் அனுமானங்கள் மூலம் அல்ல வரலாற்று பூர்வமாக பார்ப்போம்.

1600-களில் மாவீரன் சத்திரபதி சிவாஜியையே சத்திரியன் அல்ல, அவனுக்கு மன்னனாக பட்டம் சூட்ட மாட்டோம் என்று சொன்னவர்கள் தான் இந்த திருட்டு பார்பனர்,

மாவீரன் சிவாஜி, தவிர வேறு யாருமே அவுரங்கசீபை எதிர்த்து போராடவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை, அவனுக்கே பார்பனரால் அந்த கதி என்றால் மற்ற ஆண்ட பரம்பரைகளை என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்

(இது பற்றி விரிவாக படிக்க எனது சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள் பகுதியை  பாருங்கள்)

குப்தர்கள் காலத்திலிருந்து மொகலாயர் காலம் வரை பார்பனருக்கு தங்கள் மனுதர்ம நாலு வருண விதிகளை மக்கள் மேல் செலுத்தி நோகாமல் வாழ எந்த தடையும் ஏற்படவில்லை.

ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் அது முடியவில்லை, அவர்கள் குழந்தை திருமணம் முதல் பெண்களை உயிருடன் எரிக்கும் உடன்கட்டை ஏரும் வழக்கம் வரை பலவற்றை தடுத்து சட்டம் போட்டார்கள்,

அவர்களிடம் பார்பனரின் பருப்பு வேகவில்லை.

1837-ல் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில், கிருஸ்துவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம் உள்ளது

இந்துகளுக்கு ஏற்ற மாதிரி எப்படி சட்டம் இயற்றுவது என்று ஆங்கிலேயர் பார்பனரை கேட்டார்கள்.

இது நடந்ததது 1837 முதல் 1928 வரை
பார்பனர் சொன்னது இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 1 

பார்பனர்களின் வாதம், இந்துகளில் பிராமணர், சத்திரியர்கள் இருவரை தவிர யாருக்கும் சொத்துகளை வாங்கவோ விற்கவோ உரிமையில்லை,

மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்திரியர் மட்டுமே சொத்துகளை வைத்து கொள்ள உரிமை உண்டு.

புராண காலத்தில் பரசுராமர், தன் தந்தையை ஒரு சத்திரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்திரியர்களையும் கொன்றுவிட்டார், எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் பார்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள், மனு தர்மப்படி இவர்களில் பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை,

எனவே, பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்குக்கு 1837-ல் பார்பனர் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் பிரைவி கவுன்சில் இப்படி ஒரேஅடியாக உங்கள் புராணக்கதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துகொள்ளமுடியாது, நிச்சயம் சத்திரியர்கள் இருப்பார்கள் ஏன்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 2 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

பார்பானுக்கு சிப்பாய் கலக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை, இந்தியாவில் சத்திரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகிறான்

இந்த வழக்கு வழக்கம் போல பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது 

இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு பிரிட்டிஷ் கோர்ட்களில் வழங்குகிறார்கள்

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 3 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901 1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 4 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் .L.R. (1928) 52 Bom.497 மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த  பார்பனர், 1926-ல் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்திரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். 

அந்த வழக்கின் 229 பக்க தீர்ப்பில், மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் (long gap from 1600-1900)

முதல் ஐந்து குடும்பங்கள் 
இரண்டாவது 96 குடும்பங்கள் 
மற்றவர்கள் 

என்று பிரிக்கலாம், இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்திரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் சத்திரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 5 

மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927-ல் நாங்களும் யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்சம் நாங்களும் சத்திரியர்கள் தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, எதிர்த்து வாதாடிய பார்பனர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கிறார்கள்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர் நிறுவ முயன்றது என்னவென்றால், இந்தியாவில் சத்திரியன் என்று யாரும் இல்லை.

இந்து மனு தர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து கொள்ளலாம் படிக்கலாம், இன்னும் பிற பிற லாம் லாம் லாம்

ஆகவே, தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்,

 பார்பான்  உங்களை நேரில் பார்க்கும் போது ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்டபரம்பரை என்றுதான் சொல்லுவான்

ஆனால் உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தகாரன் (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்) உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டுகொள்ளாதீர்கள்

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமுகத்தின் மீது அன்பு இருந்தால், ஆண்ட பரம்பரை, புராண கதை சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு, உங்கள் சமுகத்தில், கல்வியில், அறிவில் நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்

குறைந்த பட்சம் உங்கள் சொந்த சமுகத்தில், உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னற உதவுங்கள், பணமாக முடியவில்லை என்றாலும் உங்கள் நேரத்தை கொடுங்கள், படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்  

ஆண்ட பரம்பரை கதை பேசினால், பார்பான் உண்டியல் மட்டுமே நிரம்பும், அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

இது போன்று இந்தியாவின் வரலாற்றில் தெரியாத பல்வேறு பக்கங்களை படிக்க இன்றே "தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்" நூலை கீழ்கண்ட லிங்கில் வாங்கவும்

விலை - Rs.200/- மட்டுமே, COD வசதியும் உண்டு 

http://tamilnool.club/index.php?route=product/product&product_id=137

- கிருஷ்ணாவேல் TS, முகநூல் பதிவு,

மனுதர்மத்தை விமர்சித்து தொல்.திருமாவளவன் பேச்சு - எம்.பி., பதவியிலிருந்து விலக்கக் கோரிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி!


பெண்களையும், பார்ப்பனரல்லாதாரையும் இழிவுபடுத்தும் மனுதர்மம் - மக்களின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே!
-------------------------------------------------------------
மனுஸ்மிருதி - ஜாதியை, பெண்ணடிமையை வற்புறுத்திப் பாதுகாக்கும் அறத்திற்கும், சமத்துவத்திற்கும், அறிவுச் சுதந்திரத்திற்கும் எதிரான ஒரு நூல் என்பதை, அய்ரோப்பிய யூனியன் நாடுகள் சார்பில் கடந்த செப்டம்பரில் (25, 26), அங்கே நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களது உரையைத் திரித்து வெளியிட்டதோடு, அதன் காரணமாக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றெல்லாம் பா.ஜ.க.வினர் - வேறு அரசியல் மூலதன சரக்கு தி.மு.க. கூட்டணிக்கு எதிராக ஒன்றும் கிடைக்காததால், இதனை வைத்துப் பிரச்சாரம், சிற்சில இடங்களில் போராட்டம் என்ற கூத்தும் நடைபெற்றன!

வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

ஒரு வழக்குரைஞர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், திருமாவளவனை நாடாளுமன்றப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உத்தரவிடவேண்டும் என்று வழக்கு ஒன்றையும் தொடுத்தார்; அது விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்து, தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு (ஜஸ்டீஸ் சத்திய நாராயணன், ஜஸ்டீஸ் ஹேமலதா) முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்து, சில கேள்விகளையும் எழுப்பியது. அதற்கு உரிய முறையில் வழக்குப் போட்டவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில், அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு மறுத்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்!

1. திருமாவளவனின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது; ஆட்சேபகரமாக இருந்தால், அதுபற்றி யோசித்து நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும்.

2. இதுபோன்ற வழக்குகள் போடுவதன்மூலம் நீதிமன்றத்தை அரசியல் பிரச்சாரமாக, பிரச்சினைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை களமாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

3. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் திருமாவளவனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோருகிறீர்கள்? 
என்று எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித தெளிவான பதிலும் அளிக்க முடியாமல் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் ‘மிஸ்டு கால்’மூலம் தங்கள் கட்சியை வளர்க்க முயன்ற பா.ஜ.க.வினர் அதில் வெற்றி பெற முடியாத நிலையில், இப்படி திட்டமிட்டே, திரிபுவாதம், அழிவழக்குகள் போடுவதை ஒரு அச்சுறுத்தல் உத்தியாகவும், அரசியல் பிரச்சாரம், கட்சி மேலிடத்தின் செல்வாக்கை உண்டாக்கி,  அதன் பார்வை விழுந்தால் தாங்கள் ஏதாவது பதவி பெறலாமே என்பதற்காக (மத்திய ஆட்சி பா.ஜ.க. வசம் இருப்பதால், பல மத்திய அரசு நிறுவனங்களில் இவர்கள் இடந்தேடிகளாகவும் ஆகும் வாய்ப்புகள் உள்ளன) இப்படி ஒரு முயற்சியில்  ஈடுபடுவதும், தமிழ்நாட்டில் உள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இரவோடு இரவாக காவி பூசுதல், சிலரைக் காட்டி (லெட்டர் பேட் அமைப்புகள்மூலம்)  விளம்பரம் தேடிடும் வித்தைகளையும் கையாளும் மலிவான ‘புஸ்’வாண வேடிக்கை விட்டுப் பார்க்கிறார்கள்.

வல்லடி வழக்கு - வம்பு வளர்ப்புகள் 
அசைத்துவிட முடியாது!

கடற்பாறைகளான கொள்கை லட்சிய மாவீரர்களை, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், கழக வழி நிற்கும் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்களானவர்களையும் இத்தகைய வல்லடி வழக்கு, வம்பு வளர்ப்புகளும் ஒன்றும் அசைத்துவிட முடியாது!

மாறாக, இது காவிகளுக்கு எதிராகவே இளைஞர்கள் மத்தியில் திரும்பும்; திரும்பிக் கொண்டிருப்பது உறுதி!
வழக்குப் போட்டவர்களால் எவ்வளவு பலவீனமான வாதம் - அந்த உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை படித்தால், எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.

‘‘2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ள மனுஸ்மிருதிக்கு (இதுவே கடைந்தெடுத்த புளுகு) விளக்கமளிக்க திருமாவளவன் சமஸ்கிருதப் புலமை பெற்றவர் அல்ல; அவர் கருத்துத் தவறானது. அவர்தாம் கூறியதை நியாயப்படுத்தி பேசி வருகிறார்; எனவே, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்‘’ என்று கோரிக்கை வைத்தது எவ்வகையிலாவது பொருத்தமான வாதம் ஆகுமா?

ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?

(1) சமஸ்கிருத நூல்களைப்பற்றி சமஸ்கிருதம் தெரிந்தவர் மட்டும்தான் பேசவேண்டும் என்றால், அசல் மனுதர்ம மொழி பெயர்ப்புகள் சமஸ்கிருத சுலோகத்தோடு இணைத்து போடப்பட்டு, அச்சிடப்பட்டு, நூறாண்டுகளுக்கு முன் வந்த பதிப்பு - ஆதாரமில்லையா?

(2) டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம் படித்த அறிஞர், சமஸ்கிருதப் பண்டிதர்கள் கருத்தையெல்லாம் கரைத்துக் குடித்து மனுதர்ம நூலைப் படித்து 1927 இல் பகிரங்கமாகக் கொளுத்தினார் - அவர்தான் அரசமைப்புச் சட்டம் உருவாகவே மூலகர்த்தா என்பதை மறந்துவிட்டு, இப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதனை அரசியல் மேடையாக்கிட முயலலாமா?

(3) நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டுக்கு விரோதம் மனு என்பதால்தானே, மனித தர்மத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் மனுதர்மத்தை எதிர்க்கின்றனர்!

(4) நாட்டில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் சரி பகுதியாக உள்ள பெண்களை, சம உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் லாயக்கானவர்கள் அல்ல என்றும், இழிவுபடுத்தியும் எழுதியிருப்பது ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?

‘‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி’’ என்ற மனோன்மணியம் சுந்தரனார் கூற்றை மறுக்க முடியுமா?

காவிகளே, உருப்படியான அரசியலை 
நடத்திட முன்வாருங்கள்!!

எனவே, ஆழந்தெரியாமல் காலை விட்டு, அவதிப்பட்டு, அவமானத்தைச் சுமக்கின்ற காவிகளே, உருப்படியான அரசியலை நடத்திட முன்வாருங்கள்!!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்

10.11.2020 
சென்னை.

திங்கள், 9 நவம்பர், 2020

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல

Jameel Hasan

செத்த பாம்புக்கு மகுடி  ஏன் ஊதனும் ...???

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல. அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. மொழி ஆர்வலர்கள் மத்தியில் ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்.
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் கூறியிருப்பதாவது:எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை.இனமில்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது .எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள்,ஜப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.அதுபோல் ,தமிழர் தமிழையும் ,ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.

சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?இரண்டாவதாக, எந்த ஒரு மொழியும், பேசப்பட்டால்தான் மொழியாகும் பேசப்படவில்லையென்றால் அது ‘குறியீடு' எனப்படும் .எந்த இயல்பான மொழியும் ,பேச்சில் முதலில் தொடங்கி,பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும்.சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை. இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம். இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால்,அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கவேண்டும்.அப்படியென்றால் ,ஏன் தற்போது ஒரு 10 லட்சம் மக்கள் கூட சமஸ்கிருதம் பேசுவதில்லை ?
ஒருக்கால்,பேசிக்கொண்டிருந்த மொழி அழிந்து விட்டது என்று சொன்னால்,பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும் நேராக அழிவதில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்வோம் . முதலில் அதைப் பேசும் மக்கள் அழிய வேண்டும் . அப்போதுதான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும்.எடுத்துக்காட்டாக பிரேசிலில் ‘வாரிக்கென’ என்ற மொழி இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள் . இந்த 20 பேரின் காலத்திற்குப் பிறகு ,அது அழிந்து போகும் .

சமஸ்கிருதம் இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை இந்த விளிம்பு நிலை மொழிப் பட்டியல் உறுதி செய்கிறது . ஏனென்றால் சமஸ்கிருதம் எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான் .சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால் ,அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால்,அதைப் பேசியவர்கள் ஒரு போதும் அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை . வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள் .எந்த மொழியும் , ஆண் ,பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும் .ஆனால் , சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே .ஆக , பெண்களிடம் பேச முடியாத ,பெண்கள் பேச முடியாத ஒன்று ,பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து .
இவையெல்லாம் கணக்கில் கொண்டால் ,சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி என்பது தெளிவாகிறது.பேசப்படாதது எக்காலத்திலும் மொழி ஆகாது . ஆனால் எழுதப்படாதது மொழி ஆகலாம். பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும் ,எழுத்துகள் இன்றி உள்ளன.மூன்றாவதாக , மொழி என்றால் அது ‘தாய்’ பேசும் மொழியாகக் கட்டாயம் இருக்கவேண்டும்.அதனால்தான் ‘தாய் மொழி’ என அழைக்கப்படுகிறது .இந்து மத விதிகளின் படி ‘பெண்கள்’, அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் சொல்ல அனுமதி இல்லை .

 
ஆக ,சமஸ்கிருதம் ‘தாய் மொழி’யாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இவர்கள்
ஆக சமஸ்கிருதம் என்பது ஒரு இயல்பு மொழி அல்ல .அப்படியென்றால் அது தான் என்ன ? சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு இரகசியக் குறியீடு மொழி தான்.குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசிய குறியீட்டு மொழி அது . அடுத்தது பேசப்படாத மொழி ,பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது .பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .ஏனென்றால் ,பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான் .பேசப்படாத ஒரு மொழி, சொற்களைப் பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி .முடியாது என்பது தெளிவு .பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும் என்பது தெளிவு .பேச்சு வழியாகத் தோன்றிய சொற்கள் தான் , பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை .

சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் ,சமஸ்கிருத சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது .சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருதச் சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள்தான் உருவாக்கியிருக்க முடியும் என்பது தெளிவு . ஆக , தமிழைத் தாய்மொழியாக பாவிக்கும் தமிழ் பிராமணர்களே சமஸ்கிருத சொற்களைத் தமிழிலிருந்து உருவாக்கியிருக்கக் கூடும் .
மேற்கூறிய காரணங்களால் சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது .
மொழியியலாளர்கள் இந்தக் கருத்துகளை ஆர்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்குச் சமர்ப்பிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது . இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
-ஆறுமுகம் பச்சையப்பன், முகநூல் பதிவு, 9.11.20

பார்ப்பனர்களின் சட்டத்திற்கு எதிரான சட்டங்கள்!

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், 
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் 
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், 
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, 
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் 
(இந்து மனு சட்டம் VII 374, 375), 

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும். 
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது

சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த 
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற 
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே!

கருஞ்சட்டை

 

'விஜயபாரதம்‘ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் - எவ்வளவு மொத்துப் பட்டாலும் புத்தி கொள்முதல் பெறுவதாகத் தெரியவில்லை.

அடால்ப் ஹிட்லரின் சீடர்கள் அல்லவா - அதனால் அவர் அமைச்சரவையிலிருந்த அந்தக் கோயல்பல்சின் அசல் நகலாக பொய் மூட்டைகளை நாள்தோறும் அவிழ்த்துக் கொட்டிக் கொண்டே திரிகிறார்கள். இது அவர்களின் கடைந்தெடுத்த பிழைப்பாகவே ஆகி விட்டது.

சமூக வலை தளங்களில் பொய்களை உலவ விடுவதற்காகவே தனிக் குழு அமைத்து செயல்படும் கும்பல் அல்லவா!

திராவிடர் கழகத் தலைவர் வீட்டுத் திருமணத்தில் தாலி கட்டப்பட்டது - சடங்குகள் செய்யப்பட்டன என்று இதே விஜய பாரதம் எழுதி மூக்குடைப்பட்டு, (விரைவில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட உள்ளனர்) அதன் ரத்தம் இன்னும் வழிந்தோடும் நிலையில் அடுத்த கட்ட பொய்க்குத் தாவி இருக்கிறது இந்த மங்கி 'பிராண்டு!'

இந்த வார விஜயபாரதத்தில் 'ஈ.வே.ரா. மணியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் (10.8.2018, பக். 27) கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈ.வே.ரா. தனக்கு அடுத்த வாரிசாக யாரை நிய மிக்கலாம் என்பது பற்றி ராஜாஜியிடம் கலந்து ஆலோ சித்தார். திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரை, நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், அன்பழகன், கருணாநிதி போன்றவர்களில் ஒருவரை தனக்கு அடுத்த வாரிசாக நியமிக்க விரும்பவில்லை. இவர்கள் மீது ஈவேராவிற்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் ராஜாஜியிடம் தனக்கு அடுத்த வாரிசாக மணியம் மையை நியமிக்கப் போவதாகவும், அவரையே திரு மணம் செய்து கொள்ள போவதாகவும் ஆலோசித் துள்ளார். ராஜாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

இது உண்மையா? ராஜாஜி சம்மதம் தெரிவித்தாரா? மாறுபட்ட கருத்தைச் சொன்னாரா?

இதுபற்றி உண்மை நிலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆதாரபூர்வமாக ஆவணங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தினார்.

“பெரியார் மணியம்மை திருமணம்“ என்னும் தலைப்பில் உண்மை நிலவரங்கள் வெளிப்பாடு என்னும் நூலாகவே  (பக்கம் 225, 226) வெளிவந்துள்ளது. (2007ஆம் ஆண்டு)அந்த விவரம் இதோ:

ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம்

அந்தரங்கம்

அன்புக்குரிய ஆப்த நண்பருக்கு,

தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன்.

என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு நாட்டுக்கு எந்தவிதத்திலாவது உதவும்.

தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில் ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி, இந்தப் பதவியை வகிப்பவன் அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்துக்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள். என் அன்புக்கு அடை யாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சி கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்பு வதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களு டைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப் பட்ட பின் செய்வது நலம்.

எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன் னிக்க வேண்டும்.

இவை அன்புடன்

இராசகோபாலாச்சாரி

இந்த நூல் வெளிவந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைக்கு முற்றிலுமே மாறாக இப்படியொரு அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு பொய் மலத்தில் புழுத்த புழுவாக, தன் பூணூல் புத்தியைக் காட்டிக் கொள்வது என்பதை மக்கள் உணர்வார்களா? இது எந்தத் தரத்தைச் சார்ந்தது?

அப்பாவித்தனமாக அந்த அமைப்புகளில் சிக்கிக் கொண்ட அனுமார்த் தமிழர்களும் உணர்ந்து திருந்து வார்களாக?

-'கருஞ்சட்டை'
- விடுதலை நாளேடு, 7.8.18

சனி, 7 நவம்பர், 2020

மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற மனுநீதிக்கொள்கை

ஆத்திரம் ஆவேசம் அடையாதீர்கள் ; படித்த பின்..... பிராமணன் எழுதிவைத்துள்ள மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற  மனுநீதிக்கொள்கை
(தயவுசெய்து ஆழ்ந்து கருத்தூண்றி கவனமாகப் படியுங்கள்... குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக படித்துணர்ந்து சிந்திக்க வேண்டும்)
1. *"பிராமண குலத்தில் பிறந்தவன் ஆச்சாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது"*
 (அத்தியாயம் 8. சுலோகம் 20.)

2. *"சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாயிருக்கும்"*
 (அத்தியாயம்8. சுலோகம்.22.)

3. *"சூத்திரனாகவும், மிலேச்சனாகவும் (இழிவானவன்) பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி"*
 (அத்.8. சுலோ. 22.)

4. *"ஸ்திரிகள்(பெண்கள்) புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை"* 
(அத்.8. சுலோ.112.)

5. *"நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை 'சத்தியமாகச் சொல்லுகிறேன்' என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது 'சத்தியம்'என உணர வேண்டும்"*
 (அத். 8. சுலோ. 113 115.)

6. *"சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ. 270.)

7. *"சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ.271.)

8. *"பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்* 
(அத்.8. சுலோ.272.)

9. *"சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்"* 
(அத்.8. சுலோ.281.)

10. *"பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை"* 
(அத்.8. சுலோ.349.)

11. *"சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."*
*"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்."* 
(அத்.8. சுலோ.380.)

12. *"அரசன் ; பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு சூத்திரனை பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்."* 
(அத். 8. சுலோ.410.)

13. *"பிராமணன் கூலி கொடுக்காமல் சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவதற்குத்தான் கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்"* 
(அத். 8. சுலோ.413.)

14. *"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்"* 
(அத். 8. சுலோ.417.)

15. *"சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது"* 
(அத். 9. சுலோ.416.)

16. *"பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை"*
 (அத். 8. சுலோ.155.)

17. *"பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்."* 
(அத்.9. சுலோ.248.)

18. *"பிராமணன் மூடனானாலும்(முட்டாள்) அவனே மேலானதெய்வம்"* 
(அத். 9. சுலோ. 317.)

19. *"பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவர்கள் (வணங்கத் தக்கவர்கள்) ஆவார்கள்."* 
(அத். 9. சுலோ.319.)

20. *"பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்."* 
(அத்.9 சுலோ. 320.)

21. *"சூத்திரன் ;  பிராமணுக்குபணி விடை செய்வது  ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும் க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால்களவு செய்தாவது, அல்லது பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு."* 
(அத்.11. சுலோ.12.)

22. *"சூத்திரன் வீட்டிலிருந்து கேட்காமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." 
(அத்.11. சுலோ.13.)

23. *"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது."* 
(அத்.11. சுலோ.20.)

24. *"பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."* 
(அத்.11. சுலோ.66.)

25. *"ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் என்னவோ ; அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்."* 
(அத்.11. சுலோ.131.)

25(அ). *"அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது."* 
(அத்.11. சுலோ.132.)

26. *"க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் (அரசாட்சி) பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமணுக்கு பணி விடை செய்வதே தவமாகும்."* 
(அத்.11 சுலோ.285.)

27. *"சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்."*
 (அத்.10. சுலோ.75.)

28. *"பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் ; அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

29. *"சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

30. *"பிராமணன் உண்டு மிகுந்த(மீதி) எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்."* 
(அத்.10. சுலோ.125.)

31. *"சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாக இருந்தாலும் கண்டிப்பாக பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்."* (அத்.10. சுலோ.129.)
(கோபம் கொப்பளிக்க ; மனக்குமுறலுடன் படித்து முடித்திருப்பீர்கள்.....சிந்தித்துப் பாருங்கள்...)
பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரான மனுஸ்மிருதி...என்பதை புரிந்து கொள்ளுங்கள்; தமிழ் மக்களே...
-கட்செவி வழியாக...

வெள்ளி, 6 நவம்பர், 2020

தீபாவளி.. இதுதான்உண்மை.!!!?

#தீபாவளி.. இதுதான்உண்மை.!!!?

#தீபாவளி சமணரிட மிருந்து  பெற்றுக் கொண்ட பண்டிகை.

 கடைசி #தீர்த்தங்கரரான #வர்த்தமான_மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார்.

 இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

 வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான #மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே #இயற்கைஎய்தினார். 

பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது #மகாவீரர்_இயற்கைஎய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். 

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து ..அவர்களோடு யோசனை செய்து ..உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு..

 அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் #விளக்குகளை_ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். 

அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; #தீபாவலி) 

மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.

 விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

#சமணசமயம்_வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.

 இந்த வழக்கத்தை நீக்க முடியாத #ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 

ஆனால் பொருத்தமற்ற #புராணக்கதைகளைக்_கற்பித்துக் கொண்டார்கள்.

 #திருமால்_நரகாசுரனைக்_கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் #தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. 

அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். 

#சமணர்_கொண்டாடி வந்த #மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் #தீபாவளி என்பதில் அய்யமில்லை.

 ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் #நரகாசுரன்_கதை.

அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும்  பக்கம்: 79-80
#மீள்வாசிப்பு
- ஆனந்தகுமார், முகநூல் பதிவு, 7.11.19

மனுதர்மத்தைக் காப்பாற்ற முடியாத மனுவாதிகள்!

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் கற்பிக்கிறதே - ஒரு குலத்துக்கொரு நீதி பேசுகிறதே மனுஸ்மிருதி - பெண்களை விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று ஒட்டு மொத்தமாகக் கேவலப்படுத்துகிறதே - நான்கு வருணங்களைக் கடவுள் பிர்மாவே படைத்தார், அதில் நான்காம் வருணத்தவரான சூத்திரன் விபச்சாரி மகன் என்று கூறுகிறதே என்று ஆதாரத்தோடு சுட்டிக் காட் டினால் அறிவு நாணயமாகப் பதில் சொல்ல வாக்கற்ற கோழைகள் வேறு பக்கம் திசை திருப்புகிறார்கள்.

தொல்காப்பியம் போன்ற சங்க நூல்களைக் கொளுத்துவீர்களா என்று 'துக்ளக்' குருமூர்த்தி அய்யர் எதிர் கேள்வி எழுப்புகிறார். இதன் மூலம் 'ஆம் நாங்கள் மனுஸ்மிருதி பேர்வழிகள் தான் - அதில் எள்ளளவும் யாருக்கும் அய்யப்பாடு வேண்டாம்' என்று 'காப்புக் கட்டி' சத்தியம் செய்து விட்டார்கள் என்று பொருள்.
இனி யாராவது 'பார்ப்பனர்கள் முன்புபோல் இல்லை - எவ்வளவோ திருந்தி விட்டார்கள்' என்று நாக் கூசாமல்  சொல்ல முன் வருவார்களேயானால், அவர் களை பைத்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்பி, 'சங்கிலி போட்டுக்' கட்டி வைக்க வேண்டியதுதான்.

தொல்காப்பியம் குறித்து தந்தை பெரியார் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

"தமிழர்களிடத்தில் இல்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் ஜாதி முறையை ஆரியர் மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்” என்று பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) 'தமிழ்மொழியின் வரலாறு' எனும் நூலில் எழுதுவதும் உண்மையே!
அதே நேரத்தில் தொல்காப்பியத்தில் பெண்கள் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்றோ, சூத்திரன் என்றோ, அவன் விபச்சாரி மகன் என்றோ சொல்லப் பட்டிருந்தால் 'துக்ளக்' பூணூல் கூட்டம் எடுத்துக்காட்ட வேண்டும்.

ஆண்களுக்குச் சமத்துவமாகப் பெண்கள் இல்லை என்பது வேறு. அந்தப் பெண்களே விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று இழிவுபடுத்துவது வேறு.
இழிவுபடுத்துவதும், உரிமை மறுப்பதும் ஒன்றல்ல; உரிமை மறுப்பு என்பது கருத்துக்குக் கருத்து மோதல் - எதிர்த்துப் போராடுதல் ஆகும். ஆனால் இழிவு படுத்துவது என்பது எதுவாக இருந்தாலும் எரிக்கப்பட வேண்டியது என்பதை சுயமரியாதை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

"எதிர்ப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு - எரிப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு;  இரண்டும் ஒன்றல்ல;  ஆனால் பகுத்தறிவு என்றாலே, அது பித்தலாட்டம்" ('துக்ளக்' 4.3.2009) என்று கருதுகிற கூட்டத்திடம் இதனை எதிர்பார்க்க முடியாதல்லவா!

மனிதன் என்றாலே ஆறாவது அறிவு - அது பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியானது- மானுடவியல் கூறுமாகும்.

அதையே பித்தலாட்டம் என்பவர்களை அய்ந்தறி வுப் பட்டியலில் வைக்க வேண்டியதுதான்; நாம் யாரா ரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெட்கப்படத்தான் வேண்டும்.  மனுதர்மத்திற்கு வக்காலத்து  வாங்கும் 'சோ'வே கடைசி வரை அதைக் காப்பாற்ற முடியவில்லையே!

"சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று ஒருபுறம் கூறுகிறது மனுதர்மம் - பிராமணர் அல்லாதார்களிட மிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமண னுக்கு அளிக்கிறது. பிராமணர் அல்லாதவன் எனும் போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா?

இந்த முரண்பாடு - அதாவது மேற்கண்ட விதிக்கு சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு மனுஸ்மிருதியில் இருக்கத்தான் செய்கிறது"
('துக்ளக்' 8.11.2000)
என்று உண்மையை வேறு வழியின்றி ஒப்புக் கொண்டவர்தான் குருமூர்த்தி அய்யரின் குருநாதர் திருவாளர் சோ. ராமசாமி. 

இதற்கெல்லாம் அவர் களிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அடுத்த இதழில் வேறு பக்கம் தாவி விடுவார்கள் - பகுத்தறிவை வெறுக்கும் இந்த அறிவுக் 'கொழுந்துகள்(?)'

நன்றி விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper, 6.11.20

வியாழன், 5 நவம்பர், 2020

மனித இயல்பை மிஞ்சியவர் பெரியார்!

மனித இயல்பை மிஞ்சியவர்
====================

(தந்தை பெரியாரிடம் பேரன்புகொண்டவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஏ.சி.ஜான்சன். 23.12.1973ஆம் தேதி இரவு விடியும் வரை அய்யா அவர்களைக் காப்பாற்ற போராடிய மூன்று டாக்டர்களில் ஒருவர். அய்யா அவர்களை அதிகமான அளவில் புகைப்படங்களும், சினிமாப் படங்களும் எடுத்து வைத்துள்ளவர் - டாக்டர் ஜான்சன். அய்யா அவர்களும், டாக்டரும் பழகுவது தந்தையும் மகனும் பழகுவதுபோலவே இருக்கும்.)

இந்த உலகத்தின் பெருஞ் சக்திகள், மாபெரும் இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் மனிதனிடத்தில் அச்சத்தையும் பதைபதைப்பையும் உண்டாக்குகின்றன. இது எதுவரை? அவற்றினிடத்தில் நெருங்கிப் போகவும், அவற்றைப் பற்றி ஆய்வு நடத்தவும், அவை பற்றி மேலும் விவரங்களைக் கண்டு பிடிக்கவும் மனிதனுக்கு எப்போது துணிவு வருகிறதோ அதுவரை!

கடக்க இயலாதவை யாயும் பேரச்சமூட்டுபவையாயும் மாகடல்கள் மனிதனுக்குக் காட்சியளித்தன. எதுவரை? கரையிலே வந்து முட்டி மோதுகின்ற அலைகளுக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதற்காக கொலம்பசும் வா°கோடகாமாவும் வேறு சில முன்னோடிகளும் புறப்படும்வரை தான். அவர்கள் மாபெரும் நாடுகளையும் மிகப் பெருஞ் செல்வங்களையும் கண்டுபிடித்தார்கள்; உலக வரலாற்றின் போக்கினையே மாற்றியமைத்தார்கள்.

பெரியார் என்ற சொல்!

‘பெரியார்’ என்னும் சொல்லின் பொருள் காருண்யம் மிக்கது. ‘பெரியார்’ என்னும் அந்தச் சொல்லே பல்வேறு மக்களின் இதயத்தில் வலிமை வாய்ந்த உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவல்லது. சிலருக்கு அச்சம்; சிலருக்கு வெறுப்பு; சிலருக்குத் திகில்! பிறருக்கோ உண்மை அன்பு.

அவநம்பிக்கை, அச்சம், வெறுப்பு எல்லாம் பிரதானமாக யாருக்கு ஏற்படுகிறது? பெரியாரைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு - வெகு தொலைவில் நின்று கொண்டு, குழம்பி மங்கிப்போன தங்கள் கண்களால் அவரைப் பார்ப்பவர்களுக்கு!

பெரியார்மீது நம்பிக்கை வைக்காதவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருந்திருக்க நியாயமில்லை. அவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு போய் மாட்டிக் கொள்ளாதபடி அதிஜாக்கிரதையாக நான் பார்த்துக் கொள்வேன். உண்மையில், எனக்கு 35 வயதுக்கு மேலாகும்வரை நான் அவரைப் பார்த்ததே கிடையாது. பெரியார், பிளேக் என்னும் கொள்ளை நோய் போல வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு மனிதர் என்று நான் கருதினேன்.

வெறுத்தேன் - வியந்தேன்

பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; மேலும் அவர் எதையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறவர். எனவே, ஒரு மனிதனின்பால் இன்னொரு மனிதனை அன்பு கொள்ளச் செய்யும் நல்லியல்புகள் எதுவும் அவரிடம் இருக்காது என்று மக்களில் பலர்

கருதினார்கள்.

அப்போது, காலஞ்சென்ற முதல்வர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களின் இறுதி நாட்கள். நான் அன்னாருக்கு மருத்துவச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன். ஒரு நாள், முதல்வரைப் பார்க்க வந்திருந்த பழுத்த பழமான மனிதர் ஒருவரை நான்கு பேர் நடத்திக் கூட்டிக் கொண்டு வந்ததை நான் கண்டேன்.

உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்த முதல்வரைக் கண்டதும் அந்தப் பெரிய முதியவர் தமது அடக்க இயலாத துயரத்தின் காரணமாக இடிந்து விழுந்தாற்போல ஆகிவிட்டார்; அண்டையில் நின்றவர்கள் ‘பெரியார்’ என்று ‘கிசுகிசு’ குரலில் பேசிக்கொண்டார்கள். நாம் நிரம்ப விஷயங்கள் கேள்விப்பட்டோமே அந்த மனிதர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டேன். ஆனால், அவரது துயரம் மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. இது என்னை வியப்பிலாழ்த்தியது.

அடுத்த முறை எனக்குப் பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அம்மருத்துவமனையில் நான் கதிரியக்கச் சிகிச்சை மருத்துவனாகப் பணியாற்றி வருகிறேன்.

பெரியாருக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஹெர்னியாவுக்காக (குடல் இறக்கம்) அறுவைச் சிகிச்சை செய்வதற்காக டாக்டர் பட் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாக, பெரியாரின் சிறு நீர்க்கழிவு உறுப்புகளின் ஒரு பகுதி குடலிறக்கத்தினுள் இழுக்கப்பட்டு சிக்கிக் கிடந்தது. இதன் விளைவாக, சிறு நீர்க்கழிவுக்கு ஓரளவு தடை எற்பட்டிருந்தது.

சிறு நீர்க்கழிவுப் பாதையை எக்°ரே மூலம் பரிசோதிக்கும்போது நான் அழைக்கப்பட்டேன். பெரியாரின் மூத்திரப் பையினுள் ஒரு குழாய் செருகப்பட்டது. மாறுபட்ட திரவம் ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. இப்பொருள் உள்ளே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறு நீர்ப்பை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நான் கண்டேன். இயல்பாக, இது நோயாளிக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

பெரியாரின் பேராற்றல் என்னுள் பதிந்தது!

ஆம்; பெரியார் வேதனையாலும் துன்பத்தாலும் துடிதுடித்துக் கொண்டுதான் இருந்தார். துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை ஆசுவாசப்படுத்துவதற்காக நான் கேட்டேன், “வலிக்கிறதா, அய்யா?” பெரிய புள்ளிகளுக்குப் பரிசோதனை நடைபெறுகிறது என்றால் அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். பரிசோதனையின்போது அவர்களுக்கு வலி ஏற்பட்டுவிட்டாலோ, அவர்களுள் பெரும்பாலோரால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலாது. அவர்கள் கண்டபடி கத்துவார்கள்; புகார் சொல்லுவார்கள்; பக்கத்தில் நிற்பவர்களை யெல்லாம் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் பெரியார் என் கைகளில் ஒன்றைச் ‘சட்’டென எட்டிப் பிடித்தார். “உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யுங்கள்; நீங்கள் அருகிலே இருப்பதால் இப்போது வலி அதிகமாக இல்லை” என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே என் கையை எடுத்துத் தமது கன்னத்தோடு வைத்து அணைத்துக் கொண்டார். தனது தாயின் ஆதரவில் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் செயலைப் போன்றிருந்தது இது.

இச்செயல் எனக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. இந்தப் பேராளரின் பெருந்தன்மை பேராற்றலுடன் என்னுள்ளே பதிந்தது. அவரது சிறு நீர்ப்பையின் நிலைமையை நான் கண்டதும் அவர்மீது நான் கொண்ட வியப்பு மேலும் பெருகியது. இவரது சிறுநீர்ப்பை இருந்த நிலையில் உடல் நல மிக்க எந்தவொரு பலசாலி இளைஞனின் சிறுநீர்ப்பையும் இருந்திருந்தால் உடலாலும் மனத்தாலும் எதையும் செய்ய முடியாத அளவு அவன் உடைந்து போயிருப்பான்.

சிறுநீர்ப்பாதையில் கிருமி தாக்கினால் அது மனத்தையும் இலகுவில் பாதித்துவிடும். புத்தி மாறாட்டத்தை உண்டாக்கிவிடும். பரிசோதனை முடிவடைந்தது. அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது தன்னுடன் நான் இருக்க இயலுமா? அதற்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்க என்னால் இயலுமா என்று பெரியார் என்னிடம் கேட்டார். இதற்கு நான் டாக்டர் பட் அவர்களிடம் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை நடந்த போது பெரியாருடனேயே இருந்தேன்.

நான் பார்த்த பிற அறுவைச் சிகிச்சைகளைவிட இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. முறையாக உள்ள உறுப்பு அமைப்புகளைக் காண்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சிறு நீர்ப்பையிலிருந்து சிறு நீரை வெளியேற்றுவதற்காக மாட்டப்படும் குழாயை உடம்பின் எந்த இடத்திலே துளைத்துப் பொருத்துவது? சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது டாக்டர் பட் அவர்களுக்கு இமாலயப் பிரச்சினையாகி விட்டது.

டாக்டர் பட் அவர்கள் ஆன்றடங்கிய அறுவை மருத்துவர். இதை நான் நன்கு அறிவேன். எதற்கும் நிலை குலையாதவர் அவர். (சில ஆண்டுகளுக்கு முன் அவரது சொந்தச் சகோதரிக்குப் பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் செய்யும்படி ஏற்பட்டது; அப்போது கூட அவரிடம் கலக்கமே இல்லை) அத்தகைய டாக்டர் பட் அவர்களுக்கே இது பெரிய காரியமாகப்பட்டது. அவர் பெருமளவு பதைபதைப்புடன் இருந்தார்.

டாக்டர் பட்டின் அபாரத்திறன்

பெரியாரின் பழுத்த வயது காரணமாக அவரது இருதய நிலை பற்றி சற்றுப் பயம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தை அவரால் தாக்குப் பிடிக்க முடிமுh என்பது பற்றியும் அச்சமேற்பட்டிருந்தது. சிறுநீரை வெளியேற்றுவதற்கு இடுப்புக்கு மேலே குழாய் பொருத்துவது என்பது தான் மிகவும் சாதாரணமான மருத்துவ நடைமுறை. இந்தக் குழாய் பெரியாருக்குப் பல்லாண்டு நிலைத்து இருக்க வேண்டும்; இதனை எப்படிப் பொருத்துவது என்பதற்கு டாக்டர் பட் அவர்களின் அறிவு அனைத்தும், ஆதாரம் அனைத்தும் திரட்டிப் பயன்படுத்தப்படவேண்டியதிருந்தது. இவற்றை அவர் திரட்டிப் பயன்படுத்திய அந்த நாளை நான் எம் மொழியில் பாராட்டுவேன்! டாக்டர் பட் அவர்களின் உதவியாளனாக நான் இருந்த நாளைவிட இந்த நாளில் தான் நான் அவரை உச்சிமேற்கொண்டு மெச்சிப் பாராட்டினேன்.

இறுதியாக, அறுவைச் சிகிச்சை நடந்தேறியது. பெரியார் வார்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டர். மறுநாள் நாங்கள் பெரியாரைப் பார்க்கப் போனோம். டாக்டர் பட் அவர்களுக்கும் எனக்கும் நன்றி சொல்லப் பெரியார் விரும்பினார். எங்களை எப்படியாவது தொட்டு நன்றி கூறவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார் பெரியார்.

அவர் பணிவை உரைக்க இயலுமோ?

மல்யுத்தப் போட்டியின்போது எதிரியின் காலைப் பிடித்து அவர்களை அப்படியே தாக்கி அப்பால் வீசியெறியும் மாமல்லர்களை நான் கண்டிருக்கிறேன். “வெல்வதற்காக குனிதல்” என்ற ஆங்கிலச் சொற்றொடரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு மாபெரும் முதிய தலைவர் - தொண்ணூறுக்கும் அதிகமான வயதடைந்தவர் - என்னை நோக்கி வளைந்து குனிகிறார்; அதன் மூலம் அவர் பால் நான் கொண்டிருந்த பகைமையைக் கெல்லியெறிகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை! கேவலம் பொருள் சிதைந்து அழிவுறும் சொற்களால் அவரது பணிவினை எப்படி விளக்குவது?

உண்மையில், தம்மோடு தொடர்புகொள்கிறவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் இவ்வாறே நடக்கிறார். அவர்கள் பெரியவர்களா? சின்னவர்களா? என்பது பற்றியோ அவர்கள் ஏழைகளா, பணக்காரர்களா என்பது பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை. இந்த நிகழ்ச்சியின் விளைவாக என் உள்ளத்தில் ஒரு தீர்மானம் உருவாகியிருந்தது. இந்த ஒப்புயர்வற்ற மனிதரை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் தீர்மானம். இதன் பிறகு நான் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தேன்; அவரது அரசியல், சமுதாய இலட்சியங்கள் அனைத்தையும் பற்றி அவரிடம் மிகவும் மனந்திறந்து விவாதித்திருக்கிறேன்.

நான் பல பெரிய மனிதர்களையும் நோயாளிகளையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் 60 வயதுக்குப் பிறகு மாறாத குறிப்பிட்ட கருத்துக்களைப் பிடிவாதமாக மனதில் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். 70 வயதுக்குப் பிறகு அவர்களின் கருத்துக்கள் ஆட்டம் கண்டிருக்கும். 80 வயதுக்குப் பிறகோ நொய்ந்துபோன பல கருத்துக்களே அவர்களிடம் இருக்கும். இவையும் கூட அவர்களுடைய குணப்பண்புகளுடன் கூட புதைக்கப்பட வேண்டியவைதான்.

ஆனால், நான் பெரியாருடன் உறவாடத் தொடங்கியபோது அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் மிகவும் உயர்ந்தவையாக, மிகவும் உன்னதமானவையாக இருக்கக் கண்டேன். இந்தத் தொண்ணூற்று வயதுப் பழுத்த முதியவரின் உள்ளம் எனக்குத் திறந்து காட்டிய ஆழங்களையும் உயரங்களையும் அரை குறையாகப் புரிந்து கொள்வதற்குக் கூட நான் எனது மனத்தை முற்றிலும் ஒரு முகப்படுத்த வேண்டியிருந்தது. அத்துணை உயர்வும் உன்னதமும் படைத்தவை அவரது சிந்தனைகளும் கருத்துகளும்.

கூர்ந்த அறிவு

அவரது கூர்ந்த மதி எவராலும் நம்பொணாத அளவு அத்துணைக் கூர்மையானது. அவருடன் பிறர் பேசிக் கொண்டிருக்கும்போது, அப்பேச்சிலுள்ள ஒரு தெளிவற்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொள்வார் - அதில் இரு பொருள் தொனிக்கும் வகையில்! அரசியல்வாதிகளால் வேறு ஏதோ காரியத்துக்காகச் சொல்லப்பட்ட வாக்கியங்களையும் அவர்தம் மனதில் பிடித்துக் கொள்வார். எப்படி? அவருக்கோ காது கேட்பதில் சிரமம், கேட்கும் கருவியைக் காதிலே பொருத்திய வண்ணம் பிறர் பேசுவதைக் கேட்டு அதில் தமக்கு வேண்டிய வாக்கியங்களை அப்படியே மடக்கிப் பிடித்துக் குறித்துக்

கொள்வார்.

அவரது கண்கள் வயது காரணமாக ஓரளவு மங்கலாகி விட்டன. என்றாலும் இந்தக் கண்களைக் கொண்டே துருவித் துருவிப் படித்துவிடுவார். இதற்காக அவர் பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தினார். அசல் ஷெர்லாக்ஹோம்° தான்! துப்பறிவதற்கு உண்டான ஒரு தடையத்தைக் கூட அவர் தப்பவிட்டுவிடமாட்டாரே! 94ஆவது 95ஆவது வயதுகளின் போது அவர் எழுதிய நாட்குறிப்பேடுகளையும் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று குழம்பிப் போகாதபடி அவர் தேதி கொடுப்பதையும் நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்!

இவருக்கு நிகர் இங்கர்சாலுமல்ல!

இவையனைத்துக்கும் மேலாக, நூற்றாண்டினை எட்டி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த அவரது உடல் வலுதான் என் உள்ளத்தில் வெகு ஆழமாகப் பதிந்தது. சாக்ரட்டீ°, பெர்னாட்ஷா, இங்கர்சால் போன்ற பெரிய பெரிய சமுதாய தொண்டர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மாபெரும் சக்தி படைத்த, மாபெரும் இலட்சியங்களை வரித்துக் கொண்ட மனிதர்கள் தங்களது உன்னதமான இலட்சியங்களை எழுத்தில் வடித்துச் சென்றவர்கள் ஏராளம். எனினும் இந்த மனிதருக்கு ஈடு நிற்கக்கூடியவர்கள் வெகு சிலரே - ஏன், யாருமே இல்லையென்று கூட கூறலாம். ஏனென்றால்... இவர் மட்டுமே காலை 7 மணிக்குக் கன்னியாகுமரியிலே ஒரு கூட்டத்துக்கு தேதி - நேரம் ஒதுக்கிவிட்டு அதே நாள் மாலை 5 மணிக்கு ஈரோட்டிலே இன்னொரு கூட்டத்துக்கும் அதற்கு மேல் நள்ளிரவில் 200 மைல் தொலைவிலுள்ள இன்னொரு ஊரில் கூட்டத்துக்கும் நேரம் கொடுக்கக்கூடியவர்.

அய்யா ஒரு கார் பாட்டரி

அவர் மனித உருவில் ஓடிக் கொண்டிருந்த ஓர் என்ஜின், அது மட்டுமா? அவர் அளவு வேகத்தில் ஓடக்கூடிய ஓட்டப்பந்தய வீரர் யாருமே இல்லை. டாக்டர் பட் அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள் - அவர் ஒரு கார் பாட்டரியைப் போன்றவர். இடைவிடாமல் கார் ஓடிக் கொண்டே இருந்தாலன்றி பாட்டரி மீண்டும் மீண்டும் சக்திபெற (சார்ஜ்) இயலாது!

ஒருமுறை கடுமையான வயிற்றுப் போக்கினைத் தொடர்ந்து ஏறத்தாழ மயக்கமடைந்து விட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அவருடைய வயதுக்கு அது அவரது உயிருக்கே உலை வைக்கக் கூடியது. ஊசி குத்துவதையோ செயற்கை முறையில் உணவு ஏற்றப்படுவதையோ பெரியார் எப்போதுமே பெரிதும் வெறுத்து வந்தார். அவரது தொண்டையில் சில அவுன்° திரவ உணவை உள்ளே இறக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.

திரவ நிலை சில மணி நேரத்துக்குள் ஓரளவு சமமாகி விட்டது. அரைகுறை மயக்க நிலையிலிருந்து பெரியார் விழித்துக் கொண்டார். “நாம் எங்கே இருக்கிறோம்” என்று கேட்டார். மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையும் தாம் மயக்கமடைந்திருந்த நிலையிலேயே தமது சிறுநீர் வெளிப்போக்குக் குழாய் மாற்றப்பட்டிருப்பதையும் தாம் சிறிது திரவ உணவு உட்கொண்டிருப்பதையும் உணர்ந்தார். உடனடியாக, “சரி! சரி! அடுத்து மாநாட்டுக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நேரமாகி விட்டது! எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது!” என்று கூறிக் கொண்டே அவர் எழுந்து  விட்டார்.

எந்தக் கூட்டத்துக்கும் அவர் காலந் தவறிப் போனார் என்பது என்றும் நடக்காத ஒன்று. கூட்டம் 4 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றால், அவர் சரியாக 3-55 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்து விடுவார். உடல் தொடர்பான வசதிக் குறைவுகள், அதிகமான உடல் எடை, ஓரளவு கீல்வாதம், பெருமளவிலான குடலிறக்கம் இது அவரது சிறு குடல், சிறு நீர்ப்பை, மற்ற உயிர்நாடியான உள்ளுறுப்புகள் ஆகியவற்றின் அளவில் பாதிக்கு மேல் இருந்தது - ஆகியவை காரணமாக அவர் நடமாடுவதே மிகவும் கஷ்டமான காரியம்.

இது போதாது என்று, சிறு நீர்ப் போக்குக்காகப் பொருத்தப்பட்டிருந்த குழாய் வேறு. இந்தக் குழாய் ஒரு பாட்டிலுடன் இணைக்கப்பட்டு அந்தப் பாட்டில் ஒரு வாளியினுள் வைக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட வேண்டும். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் நடமாட்டத்தையோ பிரயாணத்தையோ தவிர்த்திருப்பார்கள். ஆனால் பெரியார் அப்படியல்ல, எப்போதும் அவர் பயணம் செய்து கொண்டே இருந்தார். தினம் இரண்டுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் கொடுத்தார் - இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் 200க்கு மேற்பட்ட மைல் தொலைவு இருக்கும்!

முதுமையில் இளமை

நான் இப்போது என் வாழ்வில் இளமை துள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நான் விளையாட்டு வீரனும் கூட! ஒரே நாளில் சென்னைக்குப் போய்த் திரும்புவது என்றால் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது; இரவில் நான் மிகவும் களைத்துப் போய்விடுகிறேன். ஆனால் பெரியார் என்றுமே களைப்பறியாதவர். தாம் களைத்துப் போயிருப்பதாக அவர் தமக்குத் தாமே கூட ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தமது கார் ஒரு முறை நடு வழியில் பழுது பட்டுப்போனபோது தாம் போக வேண்டிய திசையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை நிறுத்தி, அதில் ஏறி, கூட்டத்துக்குச் சரியான நேரத்தில் இருக்கும்படியாகத் தாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார் - சிறுநீர்ப் போக்குக் குழாய், பாட்டில், வாளி இவற்றுடன்! நடமாடுவதற்கே பெரும் கஷ்டப்பட வேண்டிய நிலையில்!

பொதுக் கூட்டங்களில் ஏதோ படுகிழடுகள் ஊர்வதுபோல அவர் என்றுமே இருக்கமாட்டார். மிகவும் சாதுரியமும் எதையும் அளந்தறிந்து பேசும் அறிவாற்றலும் பெற்றவர் அவர். சாமானிய மக்கள் பேசும் பாணியில் பேசத் தொடங்கியவர் அவர். ஆனால் மக்கள் மனத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவிப் பதியும் வண்ணம் அவர் பேச்சு அமைந்தது. அப்பேச்சு மக்களின் மனத்தை கவர்ந்து ஆட்கொண்டது. ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ மக்கள் கவனத்தைப் பிறிதின்பால் செலுத்த முடியாதபடி இழுத்து வைத்துக் கொண்டது.

மனித இயல்பை மிஞ்சியவர்

நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு போயிற்று. பலமுறை, கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பாக, அவர் சொல்லொணாத உடல் வேதனையினால் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த வேதனையே அவரது மனத்தின் கவனத்தை அலைக்கழித்துவிடும் என்று நான் அஞ்சியிருக்கிறேன். எனினும், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு தடவை கூட இடர்ப்பாடு அடைந்ததை நான் கண்டதில்லை. இது ஒன்றே பெரிய சாதனையாகும் - மனித இயல்பினை மீறிய அதிமனித சாதனையாகும்.

அவர் ஆணையிட்டிருந்தால் மருத்துவத் தொழிலையே துறந்திருப்பேன்

அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு - அவரது பொதுக் கூட்ட உரைகள் சிலவற்றை நான் கேட்ட பிறகு - அவர் என்னைப் பார்த்து, உன் மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தமது பணியில் நாட்டை மேம்படுத்தும் அவர்தம் பணியில் சேர்ந்துவிடும்படி கேட்டிருப்பாரேயானால், நான் அவ்வாறே செய்திருப்பேன்; அது எனக்குப் பெரிய கௌரவம் என்றும் கருதியிருப்பேன், நான் அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டேன்.

அறிவியல் அடிப்படையிலான நிகழ்ச்சி ஒன்றினை நான் எவ்வாறு ஆராய்ந்திருப்பேனோ அதே போலப் பெரியாரையும் நான் ஆராய்ந்திருக்கிறேன். நான் எனது இந்த ஆய்வில் மிகவும் ஜாக்கிரதையாக, இருந்தேன்; மிகுந்த கவனத்துடன் நான் படுத்து ஆராய்ந்தேன், என் அறிவில் பட்டது இது தான் - பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மாமனிதர்களுள் ஒருவரே பெரியார்.

சிலருக்கு அறிவாற்றல் மிகுந்திருக்கும்; ஆனால் அதற்கு இணையான உடல் வலிமை இருக்காது. இவை இரண்டும் பெற்றிருந்தால், முரண்பாடுகளைச் சந்திக்கும் துணிச்சலும் பெரியார் பாதிக்கப்பட்டிருந்த அளவு உடல் நிலையில் இடர்ப்பாடுகள் நிறைந்து 90 வயதிலும் கூட கடுமையாக உழைக்கும் தெம்பும் பெற்றவர்கள் வரலாற்றில் யாருமே இருந்ததில்லை.

பெரியார் வேறு நாட்டில் பிறந்திருந்தால்...

ஒரு அறிவியலறிஞன் என்ற முறையில் நான் கண்டது “மருத்துவத் துறையின் அற்புதமே பெரியார்” என்ற உண்மையைத் தான். அவர் இந்த நூற்றாண்டின் அற்புதம். அவர் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் வேறு ஏதேனுமொரு நாட்டில் பிறந்திருந்தாரானால் இந்த உலகமே அவரது புகழ் பாடியிருக்கும். ஆனால் பெரியாரைப் பெற்றிருந்தது இந்தியாவின் நல்வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். இந்த மாமனிதர் என்ன செய்துள்ளார் என்பதை நமது நாடு முழுமையாகப் புரிந்து கொண்டு பாராட்டாமலிருக்கலாம் என்ற போதிலும், இந்திய வரலாற்றின் போக்கினைப் பெரியார் மாற்றியமைத்தார் என்ற உண்மை எவராலும் மறுக்கவொண்ணாதது.

சீர்திருத்த சக்கரத்தை இயக்கிவிட்டார்

மூடநம்பிக்கை, பேராசை, சுயநலம், அச்சம், துணிவின்மை போன்ற பலப்பல சக்திகள் பெரியாரின் இலட்சியங்களுக்கு எதிராக இன்னமும் கூட செயற்படுகின்றன. எனினும் பெரியார் சீர்திருத்தச் சகடத்தின் சக்கரங்களை இயக்கி வைத்து விட்டார். பெரியார் நட்டு வளர்த்துள்ள மரம் ஒரு நாள் கனி தரும் என்பதை நாம் நம்பலாம்.

பெரியார், சாதாரணமான மனிதன் ஒருவனைப் போலத் தமது வாழ்வின் சுவைகளை என்றுமே அனுபவிக்கவில்லை. அவரது வாழ்க்கை முழுவதுமே தியாகமயமானது. பணங்காசில் அவர் மிகவும் காரியக்காரராக இருந்தார் என்று பலர் பலபடப் பேசுகிறார்கள். பணம் தான் பெரியாருக்கு வைட்டமின் சத்து என்று கூட நகைச்சுவையாகக் கூறப்பட்டது. இது உண்மையே! என்றாலும் அவர் இந்த வைட்டமின் சத்தினைத் தமக்காக என்றுமே சாப்பிட்டதில்லை. நாட்டுக்கே அந்தச் சத்தினை வழங்கினார். நாட்டுக்குத் தானே அந்தச் சத்துப்பொருள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. தன்னிடமிருந்த சத்துப் பொருளை (பணத்தை) அவர் மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தும் அறக்கட்டளைகள் என்ற வடிவில் வாரி வழங்கிவிட்டார்.

படுத்துறங்குவதற்கு வசதியான படுக்கை அவருக்கு இருந்ததில்லை. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப மனிதன் தனக்குத் தேவையென்று விரும்பக் கூடிய வசதிகளைக் கூட அவர் அனுபவிக்கவில்லை.

அவர் குரல் ஓயாது

இந்தத் தலைவரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது இடிக் குரலில் பெரியார் முழங்கும் பேருரைகளை இனி ஒலிப்பதிவு நாடாக்களிலன்றிக் கேட்க இயலாது. கருணை பொங்கித் ததும்பும் அவரது திருமுகத்தையும் அவரது அபாரத் துணிச்சலையும் இனி நமது இதயத்தின் நினைவலைகளிலும் புகைப்பட உருவங்களிலும் தான் காணமுடியும். என்றாலும் அவர் இயக்கிவைத்த சிந்தனையின் அதிர்வு அலைகள் ஓய்ந்துவிடவில்லை. அவற்றை ஒழிந்துவிடுவது என்பதும் யராலும் எப்போதும் இயலாது!

- டாக்டர் ஏ.சி.ஜான்சன்

தந்தை பெரியார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்107

மனித இயல்பை மிஞ்சியவர்

 

(தந்தை பெரியாரிடம் பேரன்புகொண்டவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஏ.சி.ஜான்சன். 23.12.1973ஆம் தேதி இரவு விடியும் வரை அய்யா அவர்களைக் காப்பாற்ற போராடிய மூன்று டாக்டர்களில் ஒருவர். அய்யா அவர்களை அதிகமான அளவில் புகைப்படங்களும், சினிமாப் படங்களும் எடுத்து வைத்துள்ளவர் - டாக்டர் ஜான்சன். அய்யா அவர்களும், டாக்டரும் பழகுவது தந்தையும் மகனும் பழகுவதுபோலவே இருக்கும்.)

இந்த உலகத்தின் பெருஞ் சக்திகள், மாபெரும் இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் மனிதனிடத்தில் அச்சத்தையும் பதைபதைப்பையும் உண்டாக்குகின்றன. இது எதுவரை? அவற்றினிடத்தில் நெருங்கிப் போகவும், அவற்றைப் பற்றி ஆய்வு நடத்தவும், அவை பற்றி மேலும் விவரங்களைக் கண்டு பிடிக்கவும் மனிதனுக்கு எப்போது துணிவு வருகிறதோ அதுவரை!

கடக்க இயலாதவை யாயும் பேரச்சமூட்டுபவையாயும் மாகடல்கள் மனிதனுக்குக் காட்சியளித்தன. எதுவரை? கரையிலே வந்து முட்டி மோதுகின்ற அலைகளுக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதற்காக கொலம்பசும் வா°கோடகாமாவும் வேறு சில முன்னோடிகளும் புறப்படும்வரை தான். அவர்கள் மாபெரும் நாடுகளையும் மிகப் பெருஞ் செல்வங்களையும் கண்டுபிடித்தார்கள்; உலக வரலாற்றின் போக்கினையே மாற்றியமைத்தார்கள்.

பெரியார் என்ற சொல்!

‘பெரியார்’ என்னும் சொல்லின் பொருள் காருண்யம் மிக்கது. ‘பெரியார்’ என்னும் அந்தச் சொல்லே பல்வேறு மக்களின் இதயத்தில் வலிமை வாய்ந்த உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவல்லது. சிலருக்கு அச்சம்; சிலருக்கு வெறுப்பு; சிலருக்குத் திகில்! பிறருக்கோ உண்மை அன்பு.

அவநம்பிக்கை, அச்சம், வெறுப்பு எல்லாம் பிரதானமாக யாருக்கு ஏற்படுகிறது? பெரியாரைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு - வெகு தொலைவில் நின்று கொண்டு, குழம்பி மங்கிப்போன தங்கள் கண்களால் அவரைப் பார்ப்பவர்களுக்கு!

பெரியார்மீது நம்பிக்கை வைக்காதவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருந்திருக்க நியாயமில்லை. அவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு போய் மாட்டிக் கொள்ளாதபடி அதிஜாக்கிரதையாக நான் பார்த்துக் கொள்வேன். உண்மையில், எனக்கு 35 வயதுக்கு மேலாகும்வரை நான் அவரைப் பார்த்ததே கிடையாது. பெரியார், பிளேக் என்னும் கொள்ளை நோய் போல வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு மனிதர் என்று நான் கருதினேன்.

வெறுத்தேன் - வியந்தேன்

பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; மேலும் அவர் எதையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறவர். எனவே, ஒரு மனிதனின்பால் இன்னொரு மனிதனை அன்பு கொள்ளச் செய்யும் நல்லியல்புகள் எதுவும் அவரிடம் இருக்காது என்று மக்களில் பலர்

கருதினார்கள்.

அப்போது, காலஞ்சென்ற முதல்வர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களின் இறுதி நாட்கள். நான் அன்னாருக்கு மருத்துவச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன். ஒரு நாள், முதல்வரைப் பார்க்க வந்திருந்த பழுத்த பழமான மனிதர் ஒருவரை நான்கு பேர் நடத்திக் கூட்டிக் கொண்டு வந்ததை நான் கண்டேன்.

உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்த முதல்வரைக் கண்டதும் அந்தப் பெரிய முதியவர் தமது அடக்க இயலாத துயரத்தின் காரணமாக இடிந்து விழுந்தாற்போல ஆகிவிட்டார்; அண்டையில் நின்றவர்கள் ‘பெரியார்’ என்று ‘கிசுகிசு’ குரலில் பேசிக்கொண்டார்கள். நாம் நிரம்ப விஷயங்கள் கேள்விப்பட்டோமே அந்த மனிதர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டேன். ஆனால், அவரது துயரம் மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. இது என்னை வியப்பிலாழ்த்தியது.

அடுத்த முறை எனக்குப் பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அம்மருத்துவமனையில் நான் கதிரியக்கச் சிகிச்சை மருத்துவனாகப் பணியாற்றி வருகிறேன்.

பெரியாருக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஹெர்னியாவுக்காக (குடல் இறக்கம்) அறுவைச் சிகிச்சை செய்வதற்காக டாக்டர் பட் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாக, பெரியாரின் சிறு நீர்க்கழிவு உறுப்புகளின் ஒரு பகுதி குடலிறக்கத்தினுள் இழுக்கப்பட்டு சிக்கிக் கிடந்தது. இதன் விளைவாக, சிறு நீர்க்கழிவுக்கு ஓரளவு தடை எற்பட்டிருந்தது.

சிறு நீர்க்கழிவுப் பாதையை எக்°ரே மூலம் பரிசோதிக்கும்போது நான் அழைக்கப்பட்டேன். பெரியாரின் மூத்திரப் பையினுள் ஒரு குழாய் செருகப்பட்டது. மாறுபட்ட திரவம் ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. இப்பொருள் உள்ளே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறு நீர்ப்பை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நான் கண்டேன். இயல்பாக, இது நோயாளிக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

பெரியாரின் பேராற்றல் என்னுள் பதிந்தது!

ஆம்; பெரியார் வேதனையாலும் துன்பத்தாலும் துடிதுடித்துக் கொண்டுதான் இருந்தார். துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை ஆசுவாசப்படுத்துவதற்காக நான் கேட்டேன், “வலிக்கிறதா, அய்யா?” பெரிய புள்ளிகளுக்குப் பரிசோதனை நடைபெறுகிறது என்றால் அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். பரிசோதனையின்போது அவர்களுக்கு வலி ஏற்பட்டுவிட்டாலோ, அவர்களுள் பெரும்பாலோரால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலாது. அவர்கள் கண்டபடி கத்துவார்கள்; புகார் சொல்லுவார்கள்; பக்கத்தில் நிற்பவர்களை யெல்லாம் திட்டித் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் பெரியார் என் கைகளில் ஒன்றைச் ‘சட்’டென எட்டிப் பிடித்தார். “உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யுங்கள்; நீங்கள் அருகிலே இருப்பதால் இப்போது வலி அதிகமாக இல்லை” என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே என் கையை எடுத்துத் தமது கன்னத்தோடு வைத்து அணைத்துக் கொண்டார். தனது தாயின் ஆதரவில் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் செயலைப் போன்றிருந்தது இது.

இச்செயல் எனக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. இந்தப் பேராளரின் பெருந்தன்மை பேராற்றலுடன் என்னுள்ளே பதிந்தது. அவரது சிறு நீர்ப்பையின் நிலைமையை நான் கண்டதும் அவர்மீது நான் கொண்ட வியப்பு மேலும் பெருகியது. இவரது சிறுநீர்ப்பை இருந்த நிலையில் உடல் நல மிக்க எந்தவொரு பலசாலி இளைஞனின் சிறுநீர்ப்பையும் இருந்திருந்தால் உடலாலும் மனத்தாலும் எதையும் செய்ய முடியாத அளவு அவன் உடைந்து போயிருப்பான்.

சிறுநீர்ப்பாதையில் கிருமி தாக்கினால் அது மனத்தையும் இலகுவில் பாதித்துவிடும். புத்தி மாறாட்டத்தை உண்டாக்கிவிடும். பரிசோதனை முடிவடைந்தது. அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது தன்னுடன் நான் இருக்க இயலுமா? அதற்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்க என்னால் இயலுமா என்று பெரியார் என்னிடம் கேட்டார். இதற்கு நான் டாக்டர் பட் அவர்களிடம் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை நடந்த போது பெரியாருடனேயே இருந்தேன்.

நான் பார்த்த பிற அறுவைச் சிகிச்சைகளைவிட இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. முறையாக உள்ள உறுப்பு அமைப்புகளைக் காண்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சிறு நீர்ப்பையிலிருந்து சிறு நீரை வெளியேற்றுவதற்காக மாட்டப்படும் குழாயை உடம்பின் எந்த இடத்திலே துளைத்துப் பொருத்துவது? சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது டாக்டர் பட் அவர்களுக்கு இமாலயப் பிரச்சினையாகி விட்டது.

டாக்டர் பட் அவர்கள் ஆன்றடங்கிய அறுவை மருத்துவர். இதை நான் நன்கு அறிவேன். எதற்கும் நிலை குலையாதவர் அவர். (சில ஆண்டுகளுக்கு முன் அவரது சொந்தச் சகோதரிக்குப் பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் செய்யும்படி ஏற்பட்டது; அப்போது கூட அவரிடம் கலக்கமே இல்லை) அத்தகைய டாக்டர் பட் அவர்களுக்கே இது பெரிய காரியமாகப்பட்டது. அவர் பெருமளவு பதைபதைப்புடன் இருந்தார்.

டாக்டர் பட்டின் அபாரத்திறன்

பெரியாரின் பழுத்த வயது காரணமாக அவரது இருதய நிலை பற்றி சற்றுப் பயம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தை அவரால் தாக்குப் பிடிக்க முடிமுh என்பது பற்றியும் அச்சமேற்பட்டிருந்தது. சிறுநீரை வெளியேற்றுவதற்கு இடுப்புக்கு மேலே குழாய் பொருத்துவது என்பது தான் மிகவும் சாதாரணமான மருத்துவ நடைமுறை. இந்தக் குழாய் பெரியாருக்குப் பல்லாண்டு நிலைத்து இருக்க வேண்டும்; இதனை எப்படிப் பொருத்துவது என்பதற்கு டாக்டர் பட் அவர்களின் அறிவு அனைத்தும், ஆதாரம் அனைத்தும் திரட்டிப் பயன்படுத்தப்படவேண்டியதிருந்தது. இவற்றை அவர் திரட்டிப் பயன்படுத்திய அந்த நாளை நான் எம் மொழியில் பாராட்டுவேன்! டாக்டர் பட் அவர்களின் உதவியாளனாக நான் இருந்த நாளைவிட இந்த நாளில் தான் நான் அவரை உச்சிமேற்கொண்டு மெச்சிப் பாராட்டினேன்.

இறுதியாக, அறுவைச் சிகிச்சை நடந்தேறியது. பெரியார் வார்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டர். மறுநாள் நாங்கள் பெரியாரைப் பார்க்கப் போனோம். டாக்டர் பட் அவர்களுக்கும் எனக்கும் நன்றி சொல்லப் பெரியார் விரும்பினார். எங்களை எப்படியாவது தொட்டு நன்றி கூறவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார் பெரியார்.

அவர் பணிவை உரைக்க இயலுமோ?

மல்யுத்தப் போட்டியின்போது எதிரியின் காலைப் பிடித்து அவர்களை அப்படியே தாக்கி அப்பால் வீசியெறியும் மாமல்லர்களை நான் கண்டிருக்கிறேன். “வெல்வதற்காக குனிதல்” என்ற ஆங்கிலச் சொற்றொடரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு மாபெரும் முதிய தலைவர் - தொண்ணூறுக்கும் அதிகமான வயதடைந்தவர் - என்னை நோக்கி வளைந்து குனிகிறார்; அதன் மூலம் அவர் பால் நான் கொண்டிருந்த பகைமையைக் கெல்லியெறிகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை! கேவலம் பொருள் சிதைந்து அழிவுறும் சொற்களால் அவரது பணிவினை எப்படி விளக்குவது?

உண்மையில், தம்மோடு தொடர்புகொள்கிறவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் இவ்வாறே நடக்கிறார். அவர்கள் பெரியவர்களா? சின்னவர்களா? என்பது பற்றியோ அவர்கள் ஏழைகளா, பணக்காரர்களா என்பது பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை. இந்த நிகழ்ச்சியின் விளைவாக என் உள்ளத்தில் ஒரு தீர்மானம் உருவாகியிருந்தது. இந்த ஒப்புயர்வற்ற மனிதரை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் தீர்மானம். இதன் பிறகு நான் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தேன்; அவரது அரசியல், சமுதாய இலட்சியங்கள் அனைத்தையும் பற்றி அவரிடம் மிகவும் மனந்திறந்து விவாதித்திருக்கிறேன்.

நான் பல பெரிய மனிதர்களையும் நோயாளிகளையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் 60 வயதுக்குப் பிறகு மாறாத குறிப்பிட்ட கருத்துக்களைப் பிடிவாதமாக மனதில் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். 70 வயதுக்குப் பிறகு அவர்களின் கருத்துக்கள் ஆட்டம் கண்டிருக்கும். 80 வயதுக்குப் பிறகோ நொய்ந்துபோன பல கருத்துக்களே அவர்களிடம் இருக்கும். இவையும் கூட அவர்களுடைய குணப்பண்புகளுடன் கூட புதைக்கப்பட வேண்டியவைதான்.

ஆனால், நான் பெரியாருடன் உறவாடத் தொடங்கியபோது அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் மிகவும் உயர்ந்தவையாக, மிகவும் உன்னதமானவையாக இருக்கக் கண்டேன். இந்தத் தொண்ணூற்று வயதுப் பழுத்த முதியவரின் உள்ளம் எனக்குத் திறந்து காட்டிய ஆழங்களையும் உயரங்களையும் அரை குறையாகப் புரிந்து கொள்வதற்குக் கூட நான் எனது மனத்தை முற்றிலும் ஒரு முகப்படுத்த வேண்டியிருந்தது. அத்துணை உயர்வும் உன்னதமும் படைத்தவை அவரது சிந்தனைகளும் கருத்துகளும்.

கூர்ந்த அறிவு

அவரது கூர்ந்த மதி எவராலும் நம்பொணாத அளவு அத்துணைக் கூர்மையானது. அவருடன் பிறர் பேசிக் கொண்டிருக்கும்போது, அப்பேச்சிலுள்ள ஒரு தெளிவற்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொள்வார் - அதில் இரு பொருள் தொனிக்கும் வகையில்! அரசியல்வாதிகளால் வேறு ஏதோ காரியத்துக்காகச் சொல்லப்பட்ட வாக்கியங்களையும் அவர்தம் மனதில் பிடித்துக் கொள்வார். எப்படி? அவருக்கோ காது கேட்பதில் சிரமம், கேட்கும் கருவியைக் காதிலே பொருத்திய வண்ணம் பிறர் பேசுவதைக் கேட்டு அதில் தமக்கு வேண்டிய வாக்கியங்களை அப்படியே மடக்கிப் பிடித்துக் குறித்துக்

கொள்வார்.

அவரது கண்கள் வயது காரணமாக ஓரளவு மங்கலாகி விட்டன. என்றாலும் இந்தக் கண்களைக் கொண்டே துருவித் துருவிப் படித்துவிடுவார். இதற்காக அவர் பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தினார். அசல் ஷெர்லாக்ஹோம்° தான்! துப்பறிவதற்கு உண்டான ஒரு தடையத்தைக் கூட அவர் தப்பவிட்டுவிடமாட்டாரே! 94ஆவது 95ஆவது வயதுகளின் போது அவர் எழுதிய நாட்குறிப்பேடுகளையும் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று குழம்பிப் போகாதபடி அவர் தேதி கொடுப்பதையும் நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்!

இவருக்கு நிகர் இங்கர்சாலுமல்ல!

இவையனைத்துக்கும் மேலாக, நூற்றாண்டினை எட்டி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த அவரது உடல் வலுதான் என் உள்ளத்தில் வெகு ஆழமாகப் பதிந்தது. சாக்ரட்டீ°, பெர்னாட்ஷா, இங்கர்சால் போன்ற பெரிய பெரிய சமுதாய தொண்டர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மாபெரும் சக்தி படைத்த, மாபெரும் இலட்சியங்களை வரித்துக் கொண்ட மனிதர்கள் தங்களது உன்னதமான இலட்சியங்களை எழுத்தில் வடித்துச் சென்றவர்கள் ஏராளம். எனினும் இந்த மனிதருக்கு ஈடு நிற்கக்கூடியவர்கள் வெகு சிலரே - ஏன், யாருமே இல்லையென்று கூட கூறலாம். ஏனென்றால்... இவர் மட்டுமே காலை 7 மணிக்குக் கன்னியாகுமரியிலே ஒரு கூட்டத்துக்கு தேதி - நேரம் ஒதுக்கிவிட்டு அதே நாள் மாலை 5 மணிக்கு ஈரோட்டிலே இன்னொரு கூட்டத்துக்கும் அதற்கு மேல் நள்ளிரவில் 200 மைல் தொலைவிலுள்ள இன்னொரு ஊரில் கூட்டத்துக்கும் நேரம் கொடுக்கக்கூடியவர்.

அய்யா ஒரு கார் பாட்டரி

அவர் மனித உருவில் ஓடிக் கொண்டிருந்த ஓர் என்ஜின், அது மட்டுமா? அவர் அளவு வேகத்தில் ஓடக்கூடிய ஓட்டப்பந்தய வீரர் யாருமே இல்லை. டாக்டர் பட் அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள் - அவர் ஒரு கார் பாட்டரியைப் போன்றவர். இடைவிடாமல் கார் ஓடிக் கொண்டே இருந்தாலன்றி பாட்டரி மீண்டும் மீண்டும் சக்திபெற (சார்ஜ்) இயலாது!

ஒருமுறை கடுமையான வயிற்றுப் போக்கினைத் தொடர்ந்து ஏறத்தாழ மயக்கமடைந்து விட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அவருடைய வயதுக்கு அது அவரது உயிருக்கே உலை வைக்கக் கூடியது. ஊசி குத்துவதையோ செயற்கை முறையில் உணவு ஏற்றப்படுவதையோ பெரியார் எப்போதுமே பெரிதும் வெறுத்து வந்தார். அவரது தொண்டையில் சில அவுன்° திரவ உணவை உள்ளே இறக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.

திரவ நிலை சில மணி நேரத்துக்குள் ஓரளவு சமமாகி விட்டது. அரைகுறை மயக்க நிலையிலிருந்து பெரியார் விழித்துக் கொண்டார். “நாம் எங்கே இருக்கிறோம்” என்று கேட்டார். மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையும் தாம் மயக்கமடைந்திருந்த நிலையிலேயே தமது சிறுநீர் வெளிப்போக்குக் குழாய் மாற்றப்பட்டிருப்பதையும் தாம் சிறிது திரவ உணவு உட்கொண்டிருப்பதையும் உணர்ந்தார். உடனடியாக, “சரி! சரி! அடுத்து மாநாட்டுக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நேரமாகி விட்டது! எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது!” என்று கூறிக் கொண்டே அவர் எழுந்து

விட்டார்.

எந்தக் கூட்டத்துக்கும் அவர் காலந் தவறிப் போனார் என்பது என்றும் நடக்காத ஒன்று. கூட்டம் 4 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றால், அவர் சரியாக 3-55 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்து விடுவார். உடல் தொடர்பான வசதிக் குறைவுகள், அதிகமான உடல் எடை, ஓரளவு கீல்வாதம், பெருமளவிலான குடலிறக்கம் இது அவரது சிறு குடல், சிறு நீர்ப்பை, மற்ற உயிர்நாடியான உள்ளுறுப்புகள் ஆகியவற்றின் அளவில் பாதிக்கு மேல் இருந்தது - ஆகியவை காரணமாக அவர் நடமாடுவதே மிகவும் கஷ்டமான காரியம்.

இது போதாது என்று, சிறு நீர்ப் போக்குக்காகப் பொருத்தப்பட்டிருந்த குழாய் வேறு. இந்தக் குழாய் ஒரு பாட்டிலுடன் இணைக்கப்பட்டு அந்தப் பாட்டில் ஒரு வாளியினுள் வைக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட வேண்டும். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் நடமாட்டத்தையோ பிரயாணத்தையோ தவிர்த்திருப்பார்கள். ஆனால் பெரியார் அப்படியல்ல, எப்போதும் அவர் பயணம் செய்து கொண்டே இருந்தார். தினம் இரண்டுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் கொடுத்தார் - இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் 200க்கு மேற்பட்ட மைல் தொலைவு இருக்கும்!

முதுமையில் இளமை

நான் இப்போது என் வாழ்வில் இளமை துள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நான் விளையாட்டு வீரனும் கூட! ஒரே நாளில் சென்னைக்குப் போய்த் திரும்புவது என்றால் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது; இரவில் நான் மிகவும் களைத்துப் போய்விடுகிறேன். ஆனால் பெரியார் என்றுமே களைப்பறியாதவர். தாம் களைத்துப் போயிருப்பதாக அவர் தமக்குத் தாமே கூட ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தமது கார் ஒரு முறை நடு வழியில் பழுது பட்டுப்போனபோது தாம் போக வேண்டிய திசையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை நிறுத்தி, அதில் ஏறி, கூட்டத்துக்குச் சரியான நேரத்தில் இருக்கும்படியாகத் தாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார் - சிறுநீர்ப் போக்குக் குழாய், பாட்டில், வாளி இவற்றுடன்! நடமாடுவதற்கே பெரும் கஷ்டப்பட வேண்டிய நிலையில்!

பொதுக் கூட்டங்களில் ஏதோ படுகிழடுகள் ஊர்வதுபோல அவர் என்றுமே இருக்கமாட்டார். மிகவும் சாதுரியமும் எதையும் அளந்தறிந்து பேசும் அறிவாற்றலும் பெற்றவர் அவர். சாமானிய மக்கள் பேசும் பாணியில் பேசத் தொடங்கியவர் அவர். ஆனால் மக்கள் மனத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவிப் பதியும் வண்ணம் அவர் பேச்சு அமைந்தது. அப்பேச்சு மக்களின் மனத்தை கவர்ந்து ஆட்கொண்டது. ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ மக்கள் கவனத்தைப் பிறிதின்பால் செலுத்த முடியாதபடி இழுத்து வைத்துக் கொண்டது.

மனித இயல்பை மிஞ்சியவர்

நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு போயிற்று. பலமுறை, கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பாக, அவர் சொல்லொணாத உடல் வேதனையினால் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த வேதனையே அவரது மனத்தின் கவனத்தை அலைக்கழித்துவிடும் என்று நான் அஞ்சியிருக்கிறேன். எனினும், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு தடவை கூட இடர்ப்பாடு அடைந்ததை நான் கண்டதில்லை. இது ஒன்றே பெரிய சாதனையாகும் - மனித இயல்பினை மீறிய அதிமனித சாதனையாகும்.

அவர் ஆணையிட்டிருந்தால் மருத்துவத் தொழிலையே துறந்திருப்பேன்

அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு - அவரது பொதுக் கூட்ட உரைகள் சிலவற்றை நான் கேட்ட பிறகு - அவர் என்னைப் பார்த்து, உன் மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தமது பணியில் நாட்டை மேம்படுத்தும் அவர்தம் பணியில் சேர்ந்துவிடும்படி கேட்டிருப்பாரேயானால், நான் அவ்வாறே செய்திருப்பேன்; அது எனக்குப் பெரிய கௌரவம் என்றும் கருதியிருப்பேன், நான் அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டேன்.

அறிவியல் அடிப்படையிலான நிகழ்ச்சி ஒன்றினை நான் எவ்வாறு ஆராய்ந்திருப்பேனோ அதே போலப் பெரியாரையும் நான் ஆராய்ந்திருக்கிறேன். நான் எனது இந்த ஆய்வில் மிகவும் ஜாக்கிரதையாக, இருந்தேன்; மிகுந்த கவனத்துடன் நான் படுத்து ஆராய்ந்தேன், என் அறிவில் பட்டது இது தான் - பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மாமனிதர்களுள் ஒருவரே பெரியார்.

சிலருக்கு அறிவாற்றல் மிகுந்திருக்கும்; ஆனால் அதற்கு இணையான உடல் வலிமை இருக்காது. இவை இரண்டும் பெற்றிருந்தால், முரண்பாடுகளைச் சந்திக்கும் துணிச்சலும் பெரியார் பாதிக்கப்பட்டிருந்த அளவு உடல் நிலையில் இடர்ப்பாடுகள் நிறைந்து 90 வயதிலும் கூட கடுமையாக உழைக்கும் தெம்பும் பெற்றவர்கள் வரலாற்றில் யாருமே இருந்ததில்லை.

பெரியார் வேறு நாட்டில் பிறந்திருந்தால்...

ஒரு அறிவியலறிஞன் என்ற முறையில் நான் கண்டது “மருத்துவத் துறையின் அற்புதமே பெரியார்” என்ற உண்மையைத் தான். அவர் இந்த நூற்றாண்டின் அற்புதம். அவர் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் வேறு ஏதேனுமொரு நாட்டில் பிறந்திருந்தாரானால் இந்த உலகமே அவரது புகழ் பாடியிருக்கும். ஆனால் பெரியாரைப் பெற்றிருந்தது இந்தியாவின் நல்வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். இந்த மாமனிதர் என்ன செய்துள்ளார் என்பதை நமது நாடு முழுமையாகப் புரிந்து கொண்டு பாராட்டாமலிருக்கலாம் என்ற போதிலும், இந்திய வரலாற்றின் போக்கினைப் பெரியார் மாற்றியமைத்தார் என்ற உண்மை எவராலும் மறுக்கவொண்ணாதது.

சீர்திருத்த சக்கரத்தை இயக்கிவிட்டார்

மூடநம்பிக்கை, பேராசை, சுயநலம், அச்சம், துணிவின்மை போன்ற பலப்பல சக்திகள் பெரியாரின் இலட்சியங்களுக்கு எதிராக இன்னமும் கூட செயற்படுகின்றன. எனினும் பெரியார் சீர்திருத்தச் சகடத்தின் சக்கரங்களை இயக்கி வைத்து விட்டார். பெரியார் நட்டு வளர்த்துள்ள மரம் ஒரு நாள் கனி தரும் என்பதை நாம் நம்பலாம்.

பெரியார், சாதாரணமான மனிதன் ஒருவனைப் போலத் தமது வாழ்வின் சுவைகளை என்றுமே அனுபவிக்கவில்லை. அவரது வாழ்க்கை முழுவதுமே தியாகமயமானது. பணங்காசில் அவர் மிகவும் காரியக்காரராக இருந்தார் என்று பலர் பலபடப் பேசுகிறார்கள். பணம் தான் பெரியாருக்கு வைட்டமின் சத்து என்று கூட நகைச்சுவையாகக் கூறப்பட்டது. இது உண்மையே! என்றாலும் அவர் இந்த வைட்டமின் சத்தினைத் தமக்காக என்றுமே சாப்பிட்டதில்லை. நாட்டுக்கே அந்தச் சத்தினை வழங்கினார். நாட்டுக்குத் தானே அந்தச் சத்துப்பொருள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. தன்னிடமிருந்த சத்துப் பொருளை (பணத்தை) அவர் மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தும் அறக்கட்டளைகள் என்ற வடிவில் வாரி வழங்கிவிட்டார்.

படுத்துறங்குவதற்கு வசதியான படுக்கை அவருக்கு இருந்ததில்லை. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப மனிதன் தனக்குத் தேவையென்று விரும்பக் கூடிய வசதிகளைக் கூட அவர் அனுபவிக்கவில்லை.

அவர் குரல் ஓயாது

இந்தத் தலைவரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது இடிக் குரலில் பெரியார் முழங்கும் பேருரைகளை இனி ஒலிப்பதிவு நாடாக்களிலன்றிக் கேட்க இயலாது. கருணை பொங்கித் ததும்பும் அவரது திருமுகத்தையும் அவரது அபாரத் துணிச்சலையும் இனி நமது இதயத்தின் நினைவலைகளிலும் புகைப்பட உருவங்களிலும் தான் காணமுடியும். என்றாலும் அவர் இயக்கிவைத்த சிந்தனையின் அதிர்வு அலைகள் ஓய்ந்துவிடவில்லை. அவற்றை ஒழிந்துவிடுவது என்பதும் யராலும் எப்போதும் இயலாது!

- டாக்டர் ஏ.சி.ஜான்சன்

தந்தை பெரியார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்