சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரை

  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரை

10

சென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழாவில் இன்று (1.12.2023) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாட்டினுடைய அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு நம்முடைய ‘திராவிட மாடல்' அரசு மணிமண்டபம் அமைத்துச் சிறப்புச் செய்கிறது. இது அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

“வான்புகழ் வள்ளுவர்! அறநெறி இலக்கணம் வகுத்த அவ்வை! சமரச நெறி வகுத்த வள்ளலார்! இந்த வரிசை யில், தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையை போற்றும் வகையில், சென்னையில், அவ ருடைய முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று நான் அறிவித்தேன். 

சென்னை கிண்டி காந்தி மண்படம் வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருடைய முழு உருவச் சிலை யுடன் கூடிய மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தோடு 'அறிவொளி இல்லமாக' அமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவுலகப் பேரொளியான அவருடைய மணிமண்ட பத்தை திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

· தமிழ்நாட்டு அரசியலில் தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்! தமிழ் அல்லது திராவிடம் என்பது மொழி மட்டுமல்ல! அதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக பார்த்தவர் அயோத்தி தாசர் அவர்கள்.

· 1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் 'பூர்வத் தமிழர்' என்று பதியச் சொன்னவர் அயோத்திதாசர் அவர்கள்.  

· 1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘திராவிட மகாஜன சபை’! 

· 1907 ஆம் ஆண்டு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி, அதையே ’தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தார்.

· ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமை களையும் மறந்து தமிழர்களாக, ஜாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று இறுதி வரை எழுதியவர், பேசியவர், போராடியவர் அயோத்தி தாசர் அவர்கள்.

· எழுத்தாளர், 

· ஆய்வாளர்,

· வரலாற்று ஆசிரியர்,

· மானுடவியல் சிந்தனையாளர்,

· பதிப்பாளர்,

· பத்திரிகையாளர்,

· மருத்துவர், 

· பேச்சாளர், 

· மொழியியல் வல்லுநர், 

· பன்மொழிப் புலவர், 

· புதிய கோட்பாட்டாளர், 

· சிறந்த செயல்பாட்டாளர், 

· சளைக்காத போராளி- என்று

பன்முக ஆற்றல் கொண்டவராக செயல்பட்ட அயோத்திதாசர் அவர்கள், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர்! இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது.

 “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டி தர்தான்" என்று ‘பகுத்தறிவுப் பகவலன்’ தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். இவருடைய பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் உலக அளவில் வாசகர்கள் உரு வானார்கள்.

“இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜாதியும் மதமுமே தடை” என்று சொன்ன அயோத்திதாசர், “மனிதர்களை, மனிதர்களாக பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்” என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய 175 ஆவது ஆண்டு விழாவின் நினை வாகவும், அவருடைய அறிவை வணங்குகின்ற வித மாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த, “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்" வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுடைய சிந்தனை களும், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத் துக்குப் பயன்படவேண்டும்.

நன்றி, வணக்கம்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் முழு உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்


1

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஆ.இராசா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து காண்டனர்.


சனி, 6 மே, 2023

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!

  

 சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

17

சென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர் களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்”   என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,  இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக் களின் பிதாமகர், மறைந்த வி.பி.சிங் அவர் களுக்கு, இந்த 'திராவிட மாடல்' அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார்; பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார்; தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 

1969-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் நின்று வென்றார்.   உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; ஒன்றிய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.  தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.  வி.பி.சிங் பிரதமராக இருந்தது பதி னோரு மாதங்கள்தான் என்றாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.  அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம்தான் ஙி.றி. மண்டல் தலைமையிலான ஆணையம்.  சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, ஙி.றி. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள். 

அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல; ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.    மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, 'முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது' என்று அமைச்சர் ஒருவரே சொன்னபோது, 'இதோ, இப்போதே தேதியைச் சொல்கிறேன்' என்ற கம்பீரத்துக்குச் சொந்தக்காரர் வி.பி.சிங் அவர்கள்.   அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. 

'சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது' என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் 'சுயமரியாதைச் சுடரொளி' வி.பி.சிங் அவர்கள்.   'வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள்' என்று கூறும் அளவிற்கு சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.  பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தொடக்கப் புள்ளி; தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி; வேலை உரி மையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது; தேர்தல் சீர்திருத்தங்கள்;  மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில்;  தேசியப் பாதுகாப்புக் குழு; உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்;  டில்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்; அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி)  அச்சிட வேண்டும்;  நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் வி.பி. சிங் அவர்கள்.  

தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்.  தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார்.  'ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமை யானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் 'சுய மரியாதை' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.   தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.   ''எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என் னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்'' என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.  

அதற்கேற்றாற்போல், 21-8-1990 அன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இந்தப் பேரவையில் உரையாற்றியபோது, “இந்திய வரலாற்றிலேயே, புதியதொரு சகாப்தமாக சமூகநீதி வழங்கிடும், இந்தப் புரட்சிகரமான முடிவை எடுத்துள்ள தேசிய முன்னணி அரசுக்கும், பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கும், இந்தப் பேரவை தனது இதயமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது”  என வாழ்த்தி, இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, வி.பி. சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன்.  பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங் அவர்கள். அவர் பிரதமர் ஆனபின்னர், டில்லி சென்றோம்; சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறி முகப்படுத்தினார்கள்.  “இவரை எனக்கு அறிமுகப்படுத்து கிறீர்களா?  இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தி னீர்கள்!" என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.  

அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூகநீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் தி.மு.க. போராடியதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது, தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.   அதனை மனதில் வைத்துத்தான், அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உரு வாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூல மாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும் பாலான கட்சிகள் அதில் பங் கெடுத்தன. அகில இந்தியா வுக்கே தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று அக் கட்சிகள் அழைப்பு விடுத் துள்ளன.  தமிழ்நாட்டின் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மட்டு மல்ல; இந்தியா முழுமைக் குமான அனைத்து மக்களுக் காகவும் குரல் கொடுத்து வருகிறோம். சி.ஆர்.பி.எப். தேர்வானது இந்தி, ஆங்கி லத்தில் மட்டும்தான் நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச் சருக்கு நான் கடிதம் அனுப்பி வைத்தேன். தி.மு.க. மாணவ ரணியும், இளைஞரணியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட அறிவிப்பைச் செய்தார்கள். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளும் நடைபெறும் என்ற வெற்றிச் செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.  

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.  தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக் காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள்.  இலங்கைப் பிரச்சி னைக்குத் தீர்வுகாண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங் அவர்களது புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க என்று கூறி அமைகிறேன். 

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

செவ்வாய், 2 மே, 2023

தலைவர்களின் சிலை மற்றும் நினைவிடங்களில் அவர்களை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் ‘க்யூஆர் கோட்' முறை அறிமுகம்

  

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

3

சென்னை, ஏப்.21 மக்கள் அதிகமாக பார்வை யிடும் நினைவிடங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளில் உடனடியாக அந்த இடங்களின் வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு! அவர்களின் மக்கள் நலத் தொண்டுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள அந்தச்சிலை களின் கீழே கியூஆர் கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தெரிவித்துள் ளார். முதல்முதலாக  திருவள்ளுவர் சிலை யிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர் களின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சுவாமி நாதன் கூறும்போது, 

ஒருவாரத்திற்குள்  நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளின் அருகில் கியூ ஆர் ஸ்கேனர் கோடுகளைப் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்படும், ‘‘மாநிலத்தில் 81 நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த இடங்களில் நினைவகங்களில் முப்பரிமாண முறையில் ஒளிப்படம் எடுக்கும் பணி தொடங்கப்படும். பின்னர் அந்த ஒளிப்படங்கள்  www.tndipr.com இல் பதிவேற்றப்படும். இதன்மூலம்  பொதுமக்கள்  நினைவுச்சின்னங்களின் முழு அமைப்பையும் பார்க்கலாம். 

முதலில் சென்னையில் 15 சிலைகள் மற்றும் நினைவிடங்களில் இந்த க்யூஆர் கோட் வைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவிற்கு வந்து விட்டது. தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய இடங்களிலும் இன்னும் 2 மாதங்களுக்குள் பணிகள் முடிந்துவிடும் என்று அமைச்சர் கூறினார்.

QR என்பது Quick Response  என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலகம் முழுவதும்  அனை வராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது. இவற்றில் உள்ள குறியீடுகள் பல வண்ணங்களில் சதுரங்களின் வரிசையைக் கொண்டதாகும். கைபேசி காமி ராவைப் பயன்படுத்தி குறியீட்டில் இருக்கும் முழுமையான விவரங்களைக் காணமுடியும்.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றிட உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னது சரியா?

 

நடைபாதைக் கோவில்களை அகற்றிட உச்சநீதிமன்றம் கூறியதே - 5 ஆண்டுகள் ஓடியும் செயல்படுத்தாதது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புமீது ‘‘மறுசீராய்வு'' மனு தாக்கல் செய்யப்படவேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி - அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலை கள் அகற்றப்படவேண்டும் என்று கூறிய தீர்ப்புக் குறித்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது அறிக்கை வருமாறு:

நம் நாட்டின் ஜனநாயகத்தில் - அரசமைப்புச் சட்டப் படிநீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசி நம்பிக்கை.

சட்டத்தின்படி ஏற்கப்படக் கூடிய வழக்குதானா?

மக்களின் உரிமைகளையும்அரசமைப்புச் சட்டத் தின் விதிகளையும் முழுமையாக காப்பாற்றிட அவையே பாதுகாப்பு அரணாகக் கடமையாற்றிடும் வகையில் நடந்துமக்களின் அதிகாரமே இறுதியானது என்பதை நிலை நிறுத்திநியாயத் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது தேர்ந்த நீதி வழங்கி வரும் நிலையில்சிற்சில நேரங்கள்சில மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள்சட்டத்தின்படி ஒரு வழக்கு ஏற்கக் கூடியதாதள்ளுபடி செய்யப்படவேண்டியதா என்பதை அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப தீர்ப்புகளை அமைப்பதைத் தாண்டிதங்களது சொந்தக் கருத்துகளை பக்கம் பக்க மாக எழுதுவதுநீதியை எங்கோ அழைத்துச் செல்வதாக அமைந்துவிடுகிறது.

எடுத்துக்காட்டாகசென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த டாக்டர் அம்பேத்கர் சிலை அமைத்தது பற்றிய ஒரு வழக்கு ஆகும்.

இந்த வழக்கின் (W.P.23140 of 2014 and W.P. 1 and 2 of 2014தீர்ப்பை மாண்பமை தனி நீதிபதி அவர்கள் 7.10.2021 அன்று வழங்கியுள்ளார்கள்.

25 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அது;

சுட்டிக்காட்டுவது நமது கடமை!

இதில் ‘ரிட்மனுதாரர் ஒரு வழக்குரைஞர்இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 226-இன்படிசெர்ஷியோராரி (Writ of Certiorariரிட்டின்கீழ் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தலைவரின் சிலை வைப்பதுபற்றி சரிதவறு சட்டப்படி என்று தீர்ப்பு வழங்குவதைத் தாண்டிதமிழ்நாட்டில் உள்ள தலை வர்களின் சிலைகள்பற்றியது - அந்த சிலைகளை அப் புறப்படுத்தி 6 மாதங்களுக்குள் அவற்றை ஒரு ‘சிலைப் பூங்காஆகவும்பொதுவிடங்களில் தற்போதுள்ளவற்றை அகற்றி வைக்கவேண்டும் என்றும் ஒரு பெரிய ‘மலைப் பிரசங்கமேசெய்வதுபோன்று பல விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை எழுதியிருப்பது சட்டக் கருத்துப்படியோ (Question of Lawபல தகவல் - உண்மைகள்படியோ (Question of  Factsசரியானது என்று கூறத்தக்க தீர்ப்பாக இல்லாமல் உள்ளது என்று எம்மைப்போன்ற பொதுவாழ்வில் உள்ள தொண்டர்கள் சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!

மாண்பமை நீதிபதி அவர்கள் எழுதியுள்ள இந்தத் தீர்ப்புக்கு நாம் எந்த உள்நோக்கமும் கற்பிக்க விரும்ப வில்லைஆனால்அது சரியான தீர்ப்பாக சட்டப்படியும் சரிசரியான உண்மைகளின்படியும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதை விளக்கியே ஆக வேண்டியுள்ளது.

நீதிபதி அவர்களின் ‘மலைப்பிரசங்கம்!'

தீர்ப்பைப்பற்றி முதலில் சட்டப் பிரச்சினையை ஆராயலாம்.

1. இவ்வழக்கு  certiorari ரிட்  ஆக பதிவு செய்துள்ள வழக்குஇதில் நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நியாயம் கேட்க உரிமை உண்டுகிராமத்தில் உள்ள ஒரு வழக்குரைஞர் வழக்குப் போட்டுள்ளார்.

இவர் அந்த ஊர் பஞ்சாயத்தில் பொறுப்பில் உள்ள வராஇல்லையா என்பதுகூட அதில் தெளிவுபடுத்தப் படாத நிலையில்இந்த ‘ரிட்மனுவின் Maintainability ஏற்கத்தக்கதா என்பதே முதல் கேள்விஎடுத்த எடுப்பி லேயே தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டிய சட்டத் தேவை இதில் உள்ளடங்கியுள்ளதால் - சரிவிசார ணைக்கு வந்துவிட்டதுஇனி தீர்ப்பு வழங்கியாகவேண் டும் என்ற நிலையில்குறிப்பிட்ட சிலை அமைத்தது சரி அல்லது தவறு என்பதோடு அமையவேண்டிய ஒரு தீர்ப்பாகும்.

பாரா 17 இல்,‘‘Let us Consider the present situation across the State of Tamil Nadu....!''

 ‘‘இந்த நிலையில்தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிலவரம்பற்றி நாம் ஆராய முனையவேண்டும்'' என்று தொடங்கிமேலும்  (17 பாராக்களைத் தொடர்ந்து 18 முதல் 34 பாரா வரைசிலைகள் வைப்பதுபற்றிய ஒரு ‘‘மலைப்பிரசங்கம்'' நிகழ்த்தியிருப்பது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது என்று புரியவில்லை!

சட்டக் கண்ணோட்டத்தில் இதுபோன்ற கருத்துகளை இது ஒரு பொதுநல மனுவாக (Public Interest Litigation - PILஇருந்தால்தானே சட்டப்படி கூற முடியும்?

அதற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு (Two Judges Benchஆக அது இருக்கவேண்டும்.

உச்சநீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டா?

தனி நீதிபதி இப்படி எழுதியிருப்பதற்கு உச்சநீதி மன்றத்திற்கு உள்ள இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142 (Article)  அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லாத போதுஇப்படி எழுதிடப்படும் தீர்ப்பு எப்படி சட்டப்படி சரியானதாகும்? (ஏனெனில்உச்சநீதிமன்றத் தீர்ப்புபோல இதைக் கருதி தனக்கில்லாத அதிகாரத்தின் அடிப்படை யில்இப்படி தேவையற்ற விவாதங்கள் - அதிலும் அரசியல் ரீதியான தீர்ப்புகள் எப்படி சரியானதாகும்?)

அடுத்துQuestion of  Facts  என்ற உண்மைகள் அடிப்படையில் ஆராய்ந்தாலும்இத்தீர்ப்பின் ‘மலைப் பிரசங்க'ப் பகுதியில் உள்ள பல கருத்துகள் சரியாஎன்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அரசு அனுமதிபெற்று வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற முடியுமா?

பொது இடங்களில் தமிழ்நாட்டில் பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல முக்கிய தலைவர்களின் சிலைகள் வைப்பதற்கு அரசிடம் சிலைக்குழுவினர் அனுமதி கேட்டுவாங்கி - அந்த அனுமதியும்நெடுஞ்சாலைத் துறைநகராட்சிஊராட்சித் துறைஅதன்பிறகு காவல் துறைபோக்குவரத்துத் துறை (Traffic Cell), வருவாய்த் துறை என்று இத்தனைத் துறைகளின் பரிந்துரைகளுக்குப் பிறகேபராமரிப்புபற்றியும்மற்ற சில நிபந்தனைகளை சிலைக் குழுவினருக்குப் போட்டும்அவர்களிடமிருந்து உரிய பணம் - தொகைக் கட்டுமாறு கேட்டுகட்டிய பின் ரசீது கொடுத்தும்தனி அரசு ஆணை (G.O.கொடுத்த பிறகே தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஒன்றிரண்டு சிலைகள் அனுமதியில்லாமல் வைக்கப் பட்டால்அதை காவல்துறைவருவாய்த் துறையினர் அகற்றிவிடுவதும்தான் நடைமுறையில் நாம் காண்பதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட்டதா?

‘‘Unauthorised Structures''  என்பதில் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாட்டில் இருக்கின்ற நடைபாதைக் கோயில்கள்பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும்சின்னங்களையும் உடனடியாக அப்புறப்படுத்தவேண் டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியதுண்டு (28.4.2016). தமிழ்நாட்டில் மட்டும் 77,450 கோவில்கள் அகற்றப்படவேண்டியவை என்று இரு நீதிபதிகள் கூறினார்களே - அகற்றாவிடின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் செயலாளர்கள் நீதிமன்றம் வந்து நேரில் விளக்கவேண்டும் என்று கூறினார்களே, 5 ஆண்டுகள் ஓடியும்இதன்மீது நடவடிக்கை இல்லையேஏன்இது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வராதா?

அதுமட்டுமல்லதலைவர்களின் சிலைகளால்தான் அரசியல் கலவரங்கள் ஏற்படுகின்றனஎனவேஎடுத்து வேறு பக்கத்தில் வைக்கவேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமாஅப்படியே சாத்தியமானாலும் அங்கேயே கலவரம் வர வாய்ப்பு இருக்காதாசட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்காதா?

கோவில் திருவிழாக்களை மய்யப்படுத்திக் கலவரங்கள் நடக்கவில்லையா?

போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து - ‘தடையில்லா சான்றுவழங்கிய பிறகேசிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன பல ஆண்டுகளாகஅதை ஏன் அப்புறப்படுத்தவேண்டும்சட்டப்படி சரியானதாகுமா அந்த வாதம்?

சில ஊர்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை வருவாய்த் துறை Alienation என்ற மதிப்பீட்டுத் தொகை பெற்றேசிலைக் குழுவினருக்கு உரிமையாக்கியுள்ளது.

பொது இடங்களைக்கூடசிலைப் பகுதியை மட்டும் Alienation என்ற வருவாய்த் துறை மூலம் அனுமதிஉரிமை பெற்றே சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லுவது சட்ட விரோதம் அல்லவாஅரசு ஆணைகள்படியே வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி பல ஊர் களில் கலவரங்கள் ஏற்பட்டுகோவிலை மூன்று அல்லது ஆறு மாதங்கள்கூட பூட்டுகிறார்கள்தேர் இழுப்பதிலும் பிரச்சினை உள்ள சில ஊர்களில்இதற்காக விழாவைத் தடுப்பது என்று ஆணையிட முடியுமா?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழக்கூடும்!

மறுசீராய்வு மனு போடுவது அவசியம்!

எனவேஇத்தகைய சட்டத்திற்கும் அப்பாற்பட்ட தீர்ப்புகளை மாண்பமை நீதிபதிகள் தவிர்த்தால் அவர் களுக்கும் பெருமைசட்டத்தின்படி நடந்த சாதனையாக வும் மிளிரும் என்பதால்இதனை நாம் தவிர்க்க இயலாத பொதுநல உணர்வில் சுட்டிக்காட்டுகிறோம்.

இத்தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு அல்லது ரிவிஷன் போடுவது அவசியமாகும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

11.10.2021