நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

 

சென்னைஆக. 17- முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நிய மனம் தொடர்பாக கடந்த ஜூலை 6ஆம் தேதி விண்ணப் பங்களை வரவேற்று அறநிலை யத் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டதுஇதில் அர்ச்சகர்களுக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்த வர்களும் அர்ச்சகர் பணியி டத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்துஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத் தரவிடக் கோரிஅகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச்செய லர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளது என்றும்ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை கோயில்க ளில் அர்ச்சகர்களாக நியமிப் பது சட்டவிரோதமானது என் பதால் 38 கோயில்களில் அர்ச் சகர்கள் நியமனம் தொடர் பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த்அர்ச்சகர்கள் பணி நிய மனம் தொடர்பாக தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண் டும் என உத்தரவிட்டு விசார ணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசா  ணைக்கு வந்ததுஅப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக் குரைஞர்கள் பி.வள்ளியப்பன்பி.அய்யப்பன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முக சுந்தரம்இதே கோரிக்கை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர் வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிஇதுபோல நியமிக்கப் படும் அர்ச்சகர்களுக்கு முறை யாக பயிற்சி அளிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞர்முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச் சகர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிஇந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளி, 30 ஜூலை, 2021

சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களா?

 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை,ஜூலை30- சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென்று எந்தக் கடவுளும் கேட்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபாதைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் கடைகளை அகற்றக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவ ராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (29.7.2021)  நீதிபதிகள் என்.கிருபாகரன்டி.விதமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்ததுஅப்போது மனுதாரர் தரப்பில்,

பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனகோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை பயன்படுத்தி அதன் அருகிலேயே நடைபாதை கடைகளும் ஆக்கிரமித்து விடுகின்றனஎனவே ஓட்டேரி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் கோயில்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறி அதற்கான ஒளிப்படங்களையும் தாக்கல் செய்தார்.  மேலும் உயர் நீதிமன்றத்தின் வெளியே நடை பாதையை ஆக்கிர மித்து அமைக்கப்பட்டிருந்த கோயில்நீதிமன்ற உத்தர வுப்படி அகற்றப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென எந்த கடவுளும் கேட்பதில்லைஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையில் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே” என வேதனை தெரிவித்தனர்பின்னர் நீதிபதிகள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுவிசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.