பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2021

தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!


புதன், 13 ஜனவரி, 2021

தமிழர் புத்தாண்டுப் பொங்கலே வருக!



#தலையங்கம்

தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு என்பது தை முதல் நாளே தான் என்பது தமிழ்ப் புலவர்களால் அறுதியிட்டு உறுதி செய்யப்பட்ட ஒன்று!

மாறாக ஆரியத்தின் ஊடுருவல் - பண்பாட்டுப் படை யெடுப்பின் காரணமாக தமிழ் வருடங்கள் 60 என்றும், அவை 'பிரபவ' முதல் 'அட்சய' முடிய உள்ளவை என்றும் புராணப் புளுகைத் திணித்துள்ளனர். இந்த 60 ஆண்டுகளின் பெயர்களுள் ஒன்றுகூட தமிழ்ச் சொல் கிடையாது என்பதிலிருந்தே தமிழ் ஆண்டுக்கும், இவற்றிற்கும் எந்தவித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பது வெளிப்படை.

இந்த அவலத்தோடு முடிந்து விட்டதா? தமிழ் ஆண்டுகள் பிறந்தது எனும் பெயரில் புராண ஆபாசத்தைத் திணித்துள்ளனர்.

ஆரியம் என்பது அருவருப்பானதும் - அறிவுக்குப் பொருத்தம் அற்றதும் - ஆபாசமானதுமாகும் என்பதற்கு இந்த ஆண்டுகளின் பிறப்பைப் பற்றி எழுதி வைக்கப் பட்டுள்ளவைகளே போதுமானதாகும்.

"ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, "நீர் அறுபதனாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கும் ஒரு கன்னியை தரலாகாதா என்ன?" என, அதற்குக் கண்ணன் "நான் இல்லா பெண்ணை வரிக்க" என, அதற்கு உடன்பட்டு  எல்லா வீடுகளிலும் பார்த்து வர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து, அவர் திருமேனியில் மய்யல் கொண்டு, "நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்" என்றான்.

கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து, அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே, பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானவைகளாம். இவர்கள் யாவரும் வருடங் களாகப் பதம் பெற்றனர்" என்கிற அசிங்கமான - ஆரியத் தனமானவற்றை ஏற்று சித்திரை முதல் தொடங்கி பங்குனி வரை உள்ளவற்றை எப்படி ஏற்க முடியும்?

தமிழர் பண்பாட்டு விழா என்னும் பாலில் ஆரியப் பண்பாடு என்னும் நஞ்சைக் கலப்பதை எப்படி ஏற்க முடியும்?

சிவபெருமான் தனது காளை வாகனமாகிய பாசவரிடம் 'நீ பூமிக்குச் செல்வாயாக! அங்கு வாழும் மனிதர்களிடம் நாள்தோறும் மக்கள் எண்ணெய்த் தேய்த்து நீராட வேண்டும்; மாதத்தில் ஒரு நாள் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் எனது அருள்கிட்டும் என்றும் சொல்லிவிட்டு வா' என்று சிவன் ஆணையிட்டானாம்.

ஆனால் பாசவர் (காளை) பூமிக்குச் சென்று 'நாள்தோறும் உணவு உண்ண வேண்டும்', மாதத்திற்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்து நீராட வேண்டும்' என்று தவறாகக் கூறியதால் சினமுற்ற சிவன், 'நீ இனி பூமியில் கிடந்து உழவுக்குப் பயனடைவாயாக' என்று காளைக்கு சாபம் விட்டானாம்.

விவசாயம் என்பதே மனுதர்மப்படி பாவ தொழிலாகும். அந்த எண்ணத்தில் இது போன்ற புழுதிகளை எழுதி வைத்துள்ளனர்.

தமிழர்தம் அறுவடைத் திருநாளான தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கலை சங்கராந்தி என்று கூறி இதிலும் மூடப் புராணக் கதையைப் புகுத்தி விட்டனர்.

திராவிட இயக்கம் தான் தமிழர் தம் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்குப் புத்துயிர் ஊட்டி நாடெங்கும் திருப்பத்தை ஏற்படுத்தியது. திராவிட இயக்கம் நடத்திய இதழ்கள், ஏடுகள் எல்லாம் பொங்கல் மலரை வெளியிட்டன.

கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், வீர விளையாட்டுகள் என்று புது மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தைமுதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்ற தமிழ் அறிஞர்களின் கனவை நனவாக்கி, அரசு சார்பில்  சமத்துவப் பொங்கலை நாடெங்கும் கொண்டாடச் செய்தார். அடுத்து வந்த ஆட்சி பார்ப்பனத்தனத்துடன் ரத்து செய்ததுவெட்கக்கேடு!

கழகத்தின் சார்பில் சென்னையில் கழகத் தலைமையகத்தில் பெரியார் திடலில் தமிழர் விழாவாம் பொங்கல் விழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கலுக்கு மட்டுமே வாழ்த்துகள் கூறுவதும், வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும் என்ற புதிய முறை மேற் கொள்ளப்பட்டது.

அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியால் எல்லா வாழ்த் துகளும் கைப்பேசி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி பொங்கலுக்கு அளிக்கப் பட்ட விடுமுறையைக்கூட ரத்து செய்ததுண்டு. கடும் எதிர்ப்பின் காரணமாக மாற்றி ஆணை பிறப்பித்தனர்.

கரோனா காலம் என்றாலும் முடிந்தவரை திராவிடர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்!

அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் திராவிடர் புத்தாட்சி ஏற்படும் - திமுக தலைமையில் ஆட்சி அமையும். முன் கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பொங்கலோ! பொங்கல்!!
- விடுதலை நாளேடு, தலையங்கம், 13.1.21

திங்கள், 13 ஜனவரி, 2020

தமிழர் விழா!

தந்தை பெரியார்

பொங்கல் விழா எதற்குக் கொண்டா டப்படுகிறது என்பது இன்னமும் பலருக்கு தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண் டிகை ஒன்று கூடக்கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

முதலில் அப்பண்டிகைகளின் பெயர் களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமி ழர்களுக்கென்றும் தமிழர்களின் பண்பு நாகரீகம் கலாச்சார பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண் டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப் பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக் காக கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலி ருந்து  தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக் கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும் பான்மையானவர்களாகிய விவசாயிக ளுக்குண்டான பண்டிகையாகும். அவர் கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத் தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாக சமைத்து உண்ணும் பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக் கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இது வரைப் பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக் கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண் டாடும் முறையை பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உற வினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும் தான் தமிழர்களுக்கென்று உள்ள பண் டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப் பனப் பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரீக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட் டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய - அற்புதங்கள் பலவற்றை சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக்கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள் தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறதே அன்றி அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை...

சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து

- 'விடுதலை', 26.01.1954

- விடுதலை நாளேடு, 11.1.20