சனி, 18 ஜூலை, 2020

பெரியாரின் மொழி சிந்தனைகள்


தந்தை பெரியாரின் தமிழ் தொண்டு மற்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது ஏன்?
https://tamizmalar.mooligaimannan.com/2018/03/blog-post_9.html?m=1

திருக்குறளை வளம் என்றாரா பெரியார்!
1
https://tamizmalar.mooligaimannan.com/2019/05/blog-post_30.html?m=1
2
https://tamizmalar.mooligaimannan.com/2019/05/2.html?m=1

3
https://tamizmalar.mooligaimannan.com/2020/05/blog-post_77.html?m=1
4
https://vetrivalavan.mooligaimannan.com/2020/01/blog-post_7.html?m=1

ஞாயிறு, 5 ஜூலை, 2020

பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!


பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!
–கி.தளபதிராஜ்

விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்திருந்தார்.

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா.

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு விடையளித்திருந்தார். ‘சில‘ தமிழ்த் தேசியர்கள் பெரியாரை எதிர்ப்பது, அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக என்று தான் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஏனோ தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் தோழர் மணியரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவர் தனது இயக்க முகநூல் பக்கத்தில் “வீரமணி அவர்கள், அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் விடை கூறவில்லை!” என்று தொடங்கி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். மேற்படி பதிலில் என்ன பன்பு குறைந்து விட்டது என்று தெரியவில்லை.

மனியரசன் தனது கட்டுரையில், “தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்! பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன் என்கிறார்.

தமிழினத்திற்காக தன் வாழ்நாளையே அற்பனித்த பெரியாரை பழித்து, அந்த மகத்தான தலைவரின் அருந்தொண்டுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இவர்களின் மலிவான அரசியலுக்கு, தமிழர் தலைவரின் பதில் எந்தளவிற்கு பன்பு கெட்டு விட்டது என்று புரியவில்லை.

மணியரசன் என்ன சொல்ல வருகிறார்?

‘திராவிடர்கள்’ என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947). என்று சொல்கிறார்.

‘திராவிடியன்’ என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க, 1947ல் வெளிவந்த என்சைக்ளோபிடியாவை காட்டுகிறார் மணியரசன். 2007ல் பிரசுரிக்கப்பட்ட அதே என்சைளோபிடியாவில் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை தவிர்க்கும் பொருட்டு திராவிடியன் என்ற சொல்லையே நீக்கி வெளியிட்டிருட்டிருக்கிறது ஆனந்த விகடன்.

திராவிடர் என்ற சொல் பார்ப்பனர்களைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரமாக, சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” “தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம்” “உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா” “உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம்” எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருவதாகவும், ‘சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!’ என்றும் ஒரு நீண்ட பட்டியலையே ஆதாரத் தகவலாக கொடுத்திருக்கிறார் அவர் இப்படி எவ்வளவு சாட்சிகளை இழுத்து வந்தாலும் அதில் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று தான்.

திராவிடர் கழகத்திற்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திராவிடர் கழகத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. ஏன் எனில் திராவிடர் என்பது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல். திராவிட கட்சிகளில் பார்ப்பனர்கள் உறுப்பினராகலாம். இதில் உள்ள ‘திராவிட’ என்பது இடத்தைக் குறிக்கிறது.’திராவிடர் என்பதோ இனத்தைக் குறிக்கிறது’.

மணியரசனார் குறிப்பிடும் பெயர்கள் அனைத்தும் ‘திராவிட’ என்றே குறிப்பிடப் பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். திராவிடப் பகுதியில் வாழும் பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், கேரள பார்ப்பனர்கள், ஆந்திரப் பார்ப்பனர்கள் என்பது போல் திராவிடப் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பார்ப்பனராவது திராவிடன் என்றோ, திராவிடர் என்றோ பெயர் வைத்திருக்கிறார்களா? அதே போல் திராவிட் என்பதும் இடத்தைத்தான் குறிக்கும். அதற்கு சைதாப்பேட், குரோம்பேட், தேனாம்பேட் என ஆயிரம் உதாரணங்களை நாமும் காட்ட முடியும்.

‘பாப்பாத்தி’ என்று பெண்குழந்தைகளுக்கும், ‘அய்யர்’ என்று ஆண்களுக்கும் நம்மவர்களிடையே பெயர்கள் புழக்கத்தில் இருப்பதையும் பார்க்கிறோம். அதற்காக அந்த பெயருடையவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் என நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்று நினைத்தால் மணியரசனின் வாதங்களை கை கொட்டி சிரிக்கத்தான் வேண்டும்.

தமிழகத்திலிருந்து வடநாட்டிற்கு பிழைக்கச்சென்ற பார்ப்பனர்கள் தாங்கள் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் என்பதைக் குறிக்க திராவிட் என்ற சொல்லை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர். கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரைச் சேர்ந்த வேதவிற்பன்னரான லட்சுமணசாஸ்திரி என்ற பார்ப்பனர் காசிக்குச் சென்று வசித்தபோது தன் பெயரில் திராவிட் என இணைத்துக் கொண்டார். இவர் சாரதா சட்டத்தை எதிர்த்துப் போராடியவர் என்று மறைந்த சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரர் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் 'பால்ய விவாகம்' பற்றி எழுதியபோது குறிப்பிட்டிருக்கிறாரே.

“திராவிடர் என்ற சொல்லுக்கு தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள்” என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை என்கிறார் மணியரசன்.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களைப் பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்?” என்று கேட்டபோது “நான் தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்” என்று சொன்னதாக அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் பதிவாகியிருக்கிறதே அதற்கு என்ன அர்த்தம்?

தமிழர் – திரமிளர் – திராவிடர் என பாவாணர் எடுத்து இயம்பவில்லையா?

ஆரிய திராவிட போர் எந்த இலக்கியத்தில் இருக்கிறது என்கிறாரே? ஆரிய திராவிடப் போராட்டம் என்பது என்ன மல்யுத்தமா? ஆயுதப் போரா? சிப்பாய்களைக் கொண்டு படையெடுப்பதா? மாறாக அது பண்பாட்டு படையெடுப்பு அல்லவா? பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் மூலைக்கு பார்ப்பனர்களால் இடப்பட்ட கண்ணுக்குத் தெரியாத விலங்கை உடைக்கும் போராட்டமல்லவா? பெரியார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றியிருந்தால், பார்ப்பன சூழ்ச்சியை இந்த சமூகம் அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொண்டிருந்தால் மணியரசனார் சொல்வது போல சங்க இலக்கியங்களில் இவையெல்லாம் இடம் பெற்றிருக்கும். என்ன செய்வது பெரியார் 19ஆம் நூற்றாண்டில்தானே பிறந்தார்?

தமிழர் விழாவான பொங்கலை திராவிடர் திருநாள் என்று ஏன் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார் மணியரசன். தமிழர்களுக்கான ஒரே விழாவாக இருந்த பொங்கலையும் “ஸ்வாகா” பண்ணப் பார்த்தது தான் பார்ப்பனீயம். அந்த சூட்சமத்தை மக்களிடம் போட்டுடைத்தார் பெரியார்.

“பொங்கல் பண்டிகையைக் கூட பார்ப்பனர்கள் தம் வழியில் திருப்பிக் கொண்டனர். ‘சங்கராந்தி’ ‘போகி’ ‘பொங்கல்’ என்று சொல்லி இந்த மூன்றும் அவனது புராணத்தில் உள்ளதை அனுசரித்து அக் கருத்துப்படி இந்திரனுக்கு, கிரகங்களுகென்று அமைக்கப்பட்டிருக்கிறதென்று ஆக்கிக் கொண்டனர்” என்றார். இந்த பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கத்தான் தமிழர் விழா என்பதோடு நிறுத்தாமல் திராவிடர் திருநாள் என்கிறோம்.

இலக்கியங்களில் ஆரியர் திராவிடர் போராட்டத்திற்கான சான்றுகள் இல்லை என்று சொல்லும் மணியரசன், ஆரியர் – திராவிடர் இனக்குழுக்களுக்கான அறிவுப்பூர்வமான அராய்ச்சி முடிவுகளைப் பற்றி என்ன சொல்கிறார்?

2009-ல் ரெய்க்கின் தலைமையிலான ஒரு குழு, ‘நேச்சர்’ இதழில் ‘இந்திய மக்கள்தொகை வரலாற்றின் மறு கட்டுமானம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

இந்திய மக்கள்தொகையின் மரபணுக் கட்டுமானத்தை ஆய்வுசெய்த இந்தக் கட்டுரை, வட இந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் என்கிற கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டது. வட இந்திய மூதாதையர் மரபணுரீதியாக மத்தியக் கிழக்கு ஆசிய, மத்திய ஆசிய, ஐரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றும், தென்னிந்திய மூதாதையர் பிரத்யேகமாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது.

தற்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் குழுவினர் பலரும் ஏறக்குறைய இந்த இரண்டு வகை மூதாதையர்களின் கலப்பானவர்கள் என்றும், தொன்றுதொட்டு உயர் சாதியைச் சேர்ந்த இந்தோ – ஐரோப்பிய மொழி பேசுபவர்களிடையே வட இந்திய மூதாதையர் பாரம்பரியம் அதிகமாக இருக்கிறது என்றும் நிறுவியது அக்கட்டுரை.

‘எட்ஜ்’என்கிற இதழுக்கு ரெய்க் அளித்த ஒரு நேர்காணலில், இந்தோ – ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பி புல்வெளிகளில் தோன்றி பிறகு ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவின என்கிற கருத்தாக்கம் குறித்து,

“மரபணு ஆராய்ச்சி முடிவுகள் ஸ்டெப்பி புல்வெளி தொடர்பான இந்தக் கருத்தாக்கத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது. ஏனெனில், ஆதிகால வடக்கு யுரேஷிய மூதாதையர் ஐரோப்பாவுக்கு வந்ததற்கான வலுவான தடங்களைக் கடந்த ஆண்டு கண்ட நமக்கு, அவர்கள் எந்த காலகட்டத்தில் ஐரோப்பாவுக்கு வந்தனர் என்று இப்போது தெரியவந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

“அந்த மூதாதையர் 4,500 ஆண்டுகளுக்கு முன் கிழக்கில் இருக்கும் ஸ்டெப்பியிலிருந்து வந்தனர். மேலும், இந்தியாவில் 2,000 மற்றும் 4,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் குழுக்களின் மிகத் தீவிரமான கலப்பு ஏற்பட்டது. மிகப் புராதனமானதும், உலகத்திலேயே மிகவும் பழமையான இலக்கியங்களில் ஒன்றானதும், கலப்புச் சமுதாயத்தை விவரிப்பதுமான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலகட்டத்தோடு இயைந்துசெல்கிறது இந்தக் காலம்” என்றும் அவர் கூறினார்.

”ரெய்க்கின் பார்வையில், இந்தோ – ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவிச் சென்று, மிகப் பெரும் மக்கள்தொகை மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம் இது என்பதே இந்தக் கருத்தின் சாரம் என ஃபிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

அதைப்போலவே ஜெர்மனியைச் சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிளாங்க் நிலையம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற சர்வதேச குழு ஒன்று மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தக் குழு தங்கள் ஆய்வு முடிவுகளை “ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்” என்ற இதழில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் தமிழ் உள்ளிட்ட 80 மொழி வகைகள் அடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது. இப்படி பல்வேறு சான்றுகள் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆராய்ச்சிகளெல்லாம் ஒரு புறம் இருக்க திராவிடர் என்ற சொல் குறித்து பெரியார் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.

“பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு குறி சொல்லாகவே ‘திராவிடர்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறேனே ஒழிய இதில் இரத்த பரிசோதனை ஒன்றும் நடத்தப்பட வில்லை!” என்கிறார் பெரியார்.

“பிராமணர், பிராமண மகா சபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பெருமையும், உரிமையும் கிடைக்கின்றது. நாம் நம்மை சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் ஜாதியினருக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பனரின் தாசி மகன் என்ற பட்டம் தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால் தான், அப்பெயரால் எவ்வித சலுகையோ, உரிமையோ கிடைக்காததால் தான், அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத் தலைப்பில் அதே இழி தன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்து வருகிறார்கள். அதனால் தான் நம்மை சூத்திரன் என்று கூறிகொள்ளாமல் திராவிடர் என்று கூறிக் கொள்கிறோம். சூத்திரன் என்பவர்களுக்கு திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொறுத்தமான பெயரை வேறு யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்” என்கிறார் பெரியார்.

திராவிடர் என்ற சொல்லுக்கு பெரியார் இவ்வளவு தெளிவாக விளக்கமளித்து விட்ட பிறகும், பெரியாரை சிறுமைப்படுத்த நினைப்பது, அவரது தொண்டிற்கு உள்நோக்கம் கற்பிப்பது எவ்வளவு அறிவு நாணயமற்ற செயல்?

‘திராவிடர்’ கழகத் தலைவர் வீரமணிக்குத் ‘தமிழர்’ தலைவர் பட்டம் ஏன் என்கிறார் மணியரசன். திராவிடர் கழகம் என்பது ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்ககாக ஏற்படுத்தப்பட்டது. பெரியார் குறிப்பிட்டதைப்போல் பார்ப்பனர்களை தவிர்த்து திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அது ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கான இயக்கம்தான். அதே நேரத்தில், அந்த இயக்கத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பார்ப்பனரல்லாத தமிழர்கள் தங்கள் தலைவரை தமிழர் தலைவர் என்று அழைத்து மகிழ்கிறார்கள் என்று சொன்னால் இதில் மணியரசன்களுக்கு வயிற்றெறிச்சல் ஏன் வருகிறது?

இப்போது சொல்லுங்கள்!

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு சரியான பதிலல்லவா?

http://dravidiankural.com/2020/06/29/maniyarasanukku-kelvikal1/ 

சனி, 4 ஜூலை, 2020

நம் புலவர்கள்!'


17 ஆம் நூற்றாண்டு வாக்கில் கூட இலக்கியம் எனும் போர்வை யில் எத்தகைய கருத்துகள் உலா வந்தன என்பது கவனிக்கத்தக்கது.
கி.பி.17 ஆம் நூற்றாண்டில் சுப்பிரமணிய தீட்சதர் என்பவர் ஒரு நூலை எழுதினார். அந் நூலின் பெயர் ‘‘பிரயோக விவே கம்'' என்பதாகும்.
இந்நூல் குறித்து தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது.
‘‘வடமொழியும், தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல. ஒரு மொழி என்னும் மயக்கவுணர் வுடன், வடமொழியே தமிழ் மொழியின் மூலம் என்னும் மாறு பட்ட உணர்வும் கொண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றிய நூல் களுள் இப்பிரயோக விவேகம் ஒன்று'' என்று குறிப்பிடுகிறார்.
கி.பி.17 ஆம் நூற்றாண்டுகளில் சிற்றிலக்கிய மரபில் சதக இலக் கியங்களில் வைதீகத்தின் தாக் கத்தை மிகுதியாகப் பார்க்க முடி கின்றது - நீதிகளைப் போதிக்கும் மரபில் உருவாக்கப்பட்ட தண்ட லையார் சதகத்தினை அடுத்து எழுதப்பட்ட பல சதக இலக்கியங் கள் அந்தணர்களை உயர்வுபடுத் தியே பேசுகின்றன. உதாரணமாக அண்ணாமலைச் சதகம் - குமரேச சதகம், அறப்பளீசுர சதகம் முத லான நூல்களில் இப்போக்கைக் காணலாம். நான்கு வருணத்தாரின் இயல்புகளை நூலின் தொடக்கத் தில் பதிவு செய்யும் குமரேச சத கத்தில் மனுதர்ம சாஸ்திர நூலின் செல்வாக்கைப் பார்க்க முடிகின் றது. தமிழ்ப் புலமைவாதிகள் இக்கால கட்டத்தில் மனுவைப் படித்து, அதனைத் தம் நீதி போதனை நூல்களில் கொண்டு வந்தனர் என்பதற்கு இது நல்ல சான்று. இதே போக்கிலேயே கயிலைநாதர் சதகம் இயற்றப்பட் டுள்ளது. ஆனால், அண்ணா மலைச் சதகம் ஒருபடி மேலே போய் நான்கு வருணத்தாரையும் தரம் பிரித்து, விளக்கம் கொடுத்த நீதி கூறுகின்றது. அந்தணர்களை உயர்வு படுத்திக் கூறி, நான்கு வர் ணத்தாரின் அறுவகைத் தொழில் களைப்பற்றியும் வைசியர், வேளா ளரின் பெருமைகளையும் எடுத் துக் கூறுகிறது.
இதுபோன்றே அம்பலவாணர் கவிராயர் இயுற்றிய அறப்பளீசுர சதகம் வடமொழியையும், வேதத் தையும் மிக உயர்வாக விளக்கு கின்றது. சான்றாக,
வேதியர்க்(கு) அதிகமாம் ஜாதியும், கனகமக
மேருவுக்கு அதிகமலை யும், வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்(கு) அதிக
மேதினியினில் ஓடுநதி யும் சோதிதரும் ஆதவற்(கு) அதிகமாம் காந்தியும்,
சூழ் கனற்(கு) அதிகசுசி யும், தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக்(கு) உயர்ந்தகலை யும் ஆதிவட மொழிதனக்(கு) அதிகமாம் மொழியும், நுகர்
அன்னதா னந்தனிலும் ஓர் அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்
ஆராய்ந்த பேருரைசெய் வார்! ஆதவன் பிரமன்விண் ணவர்முனிவர் பரவவரும்
அண்ணலே! அருமைமத வேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே. (பாடல். 55.)
சூரியன், பிரம்மன், தேவர், முனிவர் ஆகியோர் வந்து வாழ்த் தும் முதல்வனே! வேதம் ஓது பவர்களுக்கு மேலான ஜாதியும், மேருவைவிடப் பெரிய மலையும், கங்கைக்கு மேலான ஆறும், ஞாயி றினும் ஒளிமிக்க பொருளும், தீயைவிடத் தூய்மையான ஒளியும், பெற்றோரினும் உயர்ந்த தெய்வமும், வேதத்தைவிட உயர்ந்த நூல்களும், வடமொழி யைவிட உயர்ந்த மொழியும், உண வைவிட உயர்ந்த கொடையும் இல்லை என நுட்பமான ஆராய்ச்சி அறிவுடையோர் கூறு வர் என்பது இப்பாடலின் கருத்து.
நம் தமிழ்ப் புலவர்களையும், தமிழில் இடம்பெற்ற இந்தப் பாழாய்ப் போன குப்பைகளையும் தந்தை பெரியார் கண்டித்ததில் குற்றமும் உண்டோ சொல்!
- மயிலாடன்
- 2.7.20

பெரிய‘‘வாள்''தான்!



ஜெகத்குரு என்கிறார்கள்; மகாபெரியவாள் என்கிறார்கள், இந்து மதத்தின் தலைவர் என்று சொல்லுகிறார்கள். எங்காவது இந்து மதத்தில் நாம் அனைவரும் சமம் - ஏற்றத்தாழ்வு இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்து சகோதரராக இருந்து செயல் படுவோம் என்று ஒரே ஒரு வார்த்தையை சங்கரமடத்துக் காரர்கள் - சங்கராச்சாரியார்கள் இதுவரை கூறியதுண்டா? எழு தியதுண்டா? இனியேனும் செய்வார்களா?
இதனை சவால் விட்டே கேட்கிறோம்.
தீண்டாமை வேண்டும் - அது க்ஷேமகரமானது என்கிறார், எல்லாரும் ஒன்றாகிவிட வேண் டும் என்பதும் நாஸ்திகம் என் கிறார், மற்ற தேசங்கள் மாதிரி எல்லோரும் சமத்துவமாக வேண்டும் என்று கிளர்ச்சி செய் வது பண்புக்குறைவான போக்கு என்கிறார்.
  • இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஜெகத்குரு? எப்படி மகா பெரியவாள்? எப்படி ஒட்டு மொத்தமாக இந்து மதத்துக்குத் தலைவர் ஆவார்?
இதுவரை இவர்கள் பேசியது, எழுதியது எல்லாம் என்ன? பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் என்கிறார் - இதில் கம்யூனலாகவே சொல்லுகிறேன் என்கிறார். கன்னி கழியாத பிரா மணப் பெண்களுக்காக கன்னி காதான டிரஸ்டு ஏற்பாடு என் கிறவரை சரியாகச் சொல்ல வேண்டுமானால் ‘பிராமண சங்கத் தலைவர்' என்று சொல் லுவதுதானே சரி!
பார்ப்பனர்களுக்கு வக் காலத்து வாங்குவதில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந் திர சரஸ்வதியார்களின் தந்திர மும் அலாதியானது.
‘‘மற்ற ஜாதிகள் ‘‘பிராமணர்'' களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷ ணைக் கொடுமையோ, பெண் கள் இத்தனை பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி ‘‘தண்ணி தெளித்து'' விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால், ஏழை ‘‘பிராம்மண'' பெண்களை உத் தேசித்தே இந்த கன்னிகாதான டிரஸ்ட்.''
(‘தெய்வத்தின் குரல்',
2 ஆம் பாகம், பக்கம் 903)
பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று பார்ப் பனப் பெண்கள் இருப்பது - அவர்களுக்கு வளரச்சிதானே - மேம்பட்ட நிலைதானே! அதனைக் குறையாக சித்தரிக்க முயல்வதைக் கவனியுங்கள். அது குறையென்றால், பிராமணப் பெண்கள் படிக்கக் கூடாது, உத் யோகம் பார்க்கக் கூடாது என்று சொல்லவேண்டியதுதானே!
எத்தகைய தளுக்கு, குலுக்கு ‘மோகினி அவதார' ஏமாற்றுப் பேச்சு! இதுதான் பார்ப்பனிய தந்திரம் என்பது.
‘‘நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிரா மணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்கும் குறைச்சலான தல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஸ்டங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயப் போட்டாகவேண்டும். எத் தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிறது மாதிரிச் செய்ய பிராம்மணனுக்கு ‘ரைட்' ஏது?''
(‘தெய்வத்தின் குரல்',
2 ஆம் பாகம், பக்கம் 1013-1014)
எவ்வளவு தமாஷ்! எவ்வ ளவு சாமர்த்தியம்! ஆமாம், இவாளை பழையது சாப்பிட்டு ஜில்லென்று இருக்கவேண்டாம் என்று யார் கையைப் பிடித்து இழுத்தது?
  • மயிலாடன்
  • விடுதலை நாளேடு, 4.7.20

துக்ளக்' வகையறாக்கள் எழுதுவதை நிறுத்த வேண்டாம்!


* மின்சாரம் *
கேள்வி: அமெரிக்காவில் உள்ள இனவெறி, நமது நாட்டில் உள்ள ஜாதிவெறி - ஒரு ஒப்பீடு செய்க!
பதில்: ஜாதிகள் நூற்றுக்கணக்கில் இருப்பதால், ஜாதி வெறி கரைந்து, குறையும் வாய்ப்பு இருக்கிறது; குறைந் தும் வருகிறது. நிறம் இரண்டே இருப்பதால், நிறவெறி குறையவும் இல்லை, குறையும் வாய்ப்புமில்லை.
('துக்ளக்' 24.6.2020, பக்கம் 22)
ஆகா, என்ன கண்டிபிடிப்பு!
முதல் வரியே அண்டப்புளுகு. இந்தியாவில் ஜாதிகள் நூற்றுக்கணக்கில் மட்டும்தான் இருக் கின்றவா? 40 ஆயிரம் ஜாதிகள் இருக்கின்றன.
பார்ப்பனர்களுக்குள்ளேயே எண்ணற்ற பிரிவுகள் உள்ளனவே! பிரிவுக்குள்ளே பிரிவுகள் இருக் கின்றனவே!
அய்யங்காருக்குள்ளேயே வடகலை - தென்கலைச் சண்டைகளின் களேபரம் சாதாரணமானதுதானா?
சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள்வாரா?
வெறி என்பது வெறும் எண்ணிக்கை விளையாட்டா - எண்ணத்தில் பதிந்திருக்கும் விஷத்தின் விபரீதமா?
எந்த வெறியும் ஒழித்துக் கட்டப்பட வேண்டியதே நிற வெறியைக் காட்டி ஜாதி வெறியைக் காப்பாற்றும் யுக்தியில் இறங்குகிறது 'துக்ளக்.
சரி, 'துக்ளக்' குருமூர்த்திகள் சொல்லும் விவாதப் படியே பார்ப்போம்.
அவர் கூறுவதுபடி நூற்றுக்கணக்கில் இருப்பதால் ஜாதி வெறி கரைந்து விட்டதா? குறைந்து விட்டதா? முதலில் 'துக்ளக்' கூட்டத்தின் கருத்து - ஜாதி இருக்க வேண்டும் என்பதா? ஒழிக்கப்பட வேண்டும் என்பதா?
அவாளின் மகா பெரியவாள் ஜாதியையும் தாண்டி, தீண்டாமை க்ஷேமகரமானது - அது ஒழிக்கப்படவே கூடாது என்று சொல்றாளே! இதுவரை துக்ளக் அதைப் பற்றியெல்லாம் குறைந்தபட்சம் முணுமுணுத்ததுதான் உண்டா?
இன்னும் பூணூலை அணிந்து கொண்டு திரிகிறார்களே அதற்கென்று ஒரு நாளையே ஒதுக்கி (ஆவணி அவிட்டம்) பூணூலை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே! பூணூல் என்ன ஜாதி ஒழிப்பின் விளம்பரப் பெயர்ப் பலகையா?
குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாரே - அது குறித்து பூணூல் 'துக்ளக்' ஒரே ஒரு வார்த்தை கண்டித்து எழுதியதுண்டா?
குறைந்தபட்சம் இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்று அறிவிக்கத் தயாரா? ஒத்துக் கொள்ளத் தயாரா?
எல்லா ஜாதியினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் இது முடியாத காரியம் என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூற வில்லையா? மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று கூறியவரும் அவர் தானே - இதனை அன்றைக்கே 'விடுதலை' வெளியிட்டு (8.3.1982) வெளுத்து வாங்கியதே.
தாழ்த்தப்பட்டவரான அம்பேத்கர் இந்திய அர சியல் சட்டக் குழுவுக்குத் தலைவராக இருந்ததால்தான் 540 குறைபாடுகள் இருந்தன என்று பூரி சங்கராச்சாரியார் கூறினாரா? இல்லையா? ('இண்டியன் எக்ஸ்பிரஸ்' 23.6.1988 பக்கம் 1)
இந்த யோக்கியர்கள் எவ்வளவு பம்மாத்துடன் பதில் அளிக்கிறார்கள்.
நிறவெறி அமெரிக்காவில் இருப்பது உண்மைதான் - ஆனால், தொட்டால் தீட்டு என்று எந்த வெள்ளைக் காரனும் சொல்லுவதில்லையே - தொட்டு விட்டால் 'ஸ்நானம்' பண்ணுவதில்லையே!
வெள்ளைக்கார துரை வீட்டில் ஒரு கருப்பர் சமையல்காரராக இருக்க முடியுமே - ஒரு சவுண்டி வீட்டில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமல்ல - ஒரு பார்ப்பனர் அல்லாதார் சமையல் பணியில் ஈடுபட முடியுமா?
சர்ச்சுக்குள் கருப்பர்கள் நுழையக் கூடாது என்ற தடையில்லையே!
கருப்பர்கள் 'ப்ரீஸ்ட்' ஆகக் கூடாது, அப்படியானால் அவர்களின் கடவுள் தீட்டுப்பட்டு விடுவார் ஏன் - செத்தே போய் விடுவார் என்று நீதிமன்றத்தில் படியேறிக் கூறவில்லையே!
சு.சாமி சங்கர மடத்துக்குள் சென்றால் சங்கராச் சாரியின் பக்கத்தில் சரிசமமாக நாற்காலியில் அமரலாம்; ஒரு அப்துல்கலாமோ, மத்திய அமைச்சர் ஒரு பொன்.இராதா கிருஷ்ணனோ Ôதரை டிக்கெட்டுÕதானே தரையில்தானே!
இதுதானே இந்து மதத்தில் - பார்ப்பனீயத்தின் மனித விரோத குரோத - குரூரப் புத்தி!
சங்கரமடத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்காத -கால் வைக்காத ஒரே குடியரசுத் தலைவர் மாண்பமை கே.ஆர். நாராயணன்தானே. ஏன்? அங்கு போய் அவர் அவமானப்பட விரும்பவில்லை.
குருமூர்த்திகளே, 'தினமலர்களே', 'துக்ளக்', 'விஜய பாரதங்களே, எழுதுங்கள் - எழுதுங்கள் - இன்னும் எழுதுங்கள் இந்த வகையில் எழுதிக் கொண்டே இருங்கள்.
அப்பொழுதுதான் உங்களின் கந்தல் புராணத்தின் குடலைப் பிடுங்கும் துருநாற்றம் என்ன என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்க எங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் - எழுதுவதை நிறுத்திக் கொண்டு விடாதீர்கள்!
-விடுதலை நாளேடு, 4.7.20

இரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது - இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டமே!


லாலுபிரசாத் இரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது இலாபம் கொழிக்கச் செய்தாரே!
வெகுமக்களுக்கு வசதியான பயண வாகனத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து, கொள்ளை லாபம் அடிக்கச் செய்வது மக்கள் விரோதச் செயலே!
இதனைக் கைவிட செய்ய அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பது அவசியம், அவசரம்!!
வெகுமக்களுக்குப் பெரும்பாலும் பயன் படும் வாகனமான இரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது மக்கள் விரோத செயலே! தனியார்த் துறைக்குத் தாரை வார்த்து, இட ஒதுக்கீட்டை ஒழிப்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை; அதனைத்தான் மத்திய அரசு இப்பொழுது வேறு வழியில் செய்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும், கட்சியினரும் வெகுமக்களுக்கு விரோத மான மத்திய அரசின் இந்த முடிவை முறி யடிக்க ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, ரயில்வே துறையை தனியாரிடம்விட ஆயத்தமாகி விட்டது. முதலில், ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைப்பதுபோல, சில பயணிகள் ரயில்கள் தனியார் மயமாகும் வகையில் தனியார் ரயில்களை விடுவார்களாம்!
ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியே....
நாட்டு மக்களின் எளிமையான குறைந்த கட்டணத்தில் பயணம் செய்திடவும், ஏராள மானவர்கள் எளிதில் எங்கும் செல்லவும் வாய்ப்பான ரயில்வேயை தனியார்களுக்கும் - கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் விடுவது என்பது திடீரென்று இவர்களுக்குத் தோன்றிய யோசனையோ, திட்டமோ அல்ல; அரசுத் துறை - பொதுத் துறையை அறவே ஒழிக்கவேண்டும் - சமதர்மச் சிந்தனையையும், செயலாக்கங் களையும் படிப்படியாக நீக்கவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியே, முதல்கட்ட மாக இப்படிப்பட்ட முயற்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்த ஆட்சியில் - அதனிடம் உள்ள ஒரு மிருக பலத் தைப் பயன்படுத்தி திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது!
ரயில்வே பட்ஜெட்டை ஒழித்து - பொது பட்ஜெட்!
முன்பே, பிரதமர் மோடி பதவியேற்றவுடன், ரயில்வே துறைக்கென, பொது பட்ஜெட்டுக்கு முன், தனி வரவு - செலவுத் திட்டங்கள், அதில் நாடு முழுவதற்கும் புதுப்புது ரயில்வே திட்டங் கள் - இவற்றை அறிவித்து, நாட்டில் பரவலாக போக்குவரத்து வசதி பெருக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வந்த முறையை ஒழித்து, பொது பட்ஜெட் என்பதிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து முதற்கட்டமாக அதன் முக்கியத்துவமே குறைக்கப்பட்டது.
அமைதிப் புரட்சி செய்தார் லாலு பிரசாத்!
ரயில்வே துறை நட்டத்தில் இயங்குகிறது என்று ரயில்வே துறை அமைச்சர் கூறியது அதிர்ச்சிக்குரியதாக இருந்தது! ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனத் தலைவர், பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் அவர்கள், ரயில்வே அமைச்சராக அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் (யு.பி.ஏ.) இடம் பெற்றிருந்தபோது, தனி வரலாறு படைத்துக் காட்டினார்! பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி, பொது பட்ஜெட்டிற்குக் கூடுதல் வருவாயாக அளித்தார்; பயணிகள் கட் டணத்தை உயர்த்தாமலேயே, சரக்குக் கட் டணத்தைக்கூட குறைவாக உயர்த்தி, ஏராள மான தடங்களில் புதுப்புது ரயில்களை விட்டும், வருவாயைப் பெருக்கி, லாபம் குவித்தார்; சுமை தூக்கும் பணி புரியும் போர்ட்டர்களைக்கூட ரயில்வே (அரசு) ஊழியர்களாக்கி அமைதிப் புரட்சி செய்தார்!
இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என்று கூறியதோடு, தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு தீவிர முயற்சியில் இறங்கிவிட்டனர்; லாபம் ஈட்டும் பொதுத் துறை தொழில் நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப் படுகின்றன; பொது சுரங்கங்கள்கூட இனி ஏலம் விடப்பட இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புத் துறையில்கூட 100 சதவிகித தனியார் முதலீட்டை ஏற்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது என்பது இறையாண்மையை எதிர்காலத்தில் கேள்விக்குறி ஆக்குவதல்லவா?
மக்கள் நலன்தான் ஓர் அரசின் முக்கிய குறிக்கோள்!
ரயில்கள்தான் ஏழைகளின் பயண வாகனம் - வசதிக்கான வாகனங்கள்! அதை தனியார் வசம் விட்டால், முதலில் கட்டணக் குறைப்பு போல காட்டி, பிறகு தங்கள் விருப்பம்போல் உயர்த்தி தனிக்காட்டு ராஜாவாகக் கொள்ளை யடிக்க வாய்ப்பு ஏற்படும் - மக்கள் நலன்தான் ஓர் அரசின் முக்கிய குறிக்கோள்; சரியான நிர்வாகம் நடத்தினால், நட்டம் வர வாய்ப்பு இல்லை என்பதற்கு, லாலு நிர்வாக சாதனையே சாட்சி!
அப்படியே இருந்தாலும், நட்டமே வந் தாலும், பொருளாதார தத்துவப்படி - Cost of Service; value of Service என்ற இரண்டு விதி களுக்கிடையே, அதாவது அரசுகள் மக்களின் நலம் கருதி நட்டத்தை ஏற்பதுகூட சில சேவை களுக்கு முக்கியமாகும்; உதாரணம், அஞ்சல்துறை. (கார்டு அச்சிடுவதுகூட அதிக செலவு என்றாலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிட அதைக் குறைந்த விலையில் விற்பது ஓர் உதாரணம்).
எனவே, மக்கள் வரிப் பணத்தில், அரசுகள் மக்கள் நல அரசுகளாக நடப்பதே சரி!
ஆகும் செலவு - அடக்கம் தாண்டி, அதன் விழு மிய பயன் ஏழை, எளிய மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதை பொருளாதாரம் பயின்ற எவரும் அறிவர். இது பொது விதி. அதை ஏன் மத்திய அரசு புரிந்துகொள்ளாமல், தனியாருக்குக் கதவு திறந்துவிடவேண்டும்?
மறுபரிசீலனை தேவை!
தனியார் துறைக்கு ரயில்வே போனால், சமூகநீதி என்ற இட ஒதுக்கீடு தற்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - பொதுத் துறை என்பதால் கிடைக்கும் வசதி அறவே ஒழிக்கப் பட்டு விடும். இந்த ஆபத்தும் இதில் உள் அடக்க நோக்கமாகும்.
அண்மையில் மத்திய பா.ஜ.க. அரசு, இந்திய ரயில்வேயில் புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதித்துள்ளது என்பதே இதற்குப் போதிய ஆதாரமாகும். இதை ரயில்வே தொழிலாளர் சங்கங்களும் எதிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனவே, அனைத்துக் கட்சிகள், சமூக நல அமைப்புகள் இணைந்து இதனை எதிர்த்து, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வற்புறுத்தி, மக்கள் கருத்தை உருவாக்க முன்வருதல் அவசரம், அவசியம்!
மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்!
கி. வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
4.7.2020