விஜயபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 நவம்பர், 2021

நிதானம் தேவை - "விஜயபாரதமே!"


“விஜயபாரதம்“ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் (29.11.2021 பக்கம் 12, 13) “ஈ.வெ.ரா.சிலையா? பிரிவினை பேச சதியா?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

(1) சிலை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள், ஹிந்து மத துவேஷிகள், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்துபவர்கள், இவர்களின் வழிகாட்டியான ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு சிலை ஏன்? அவ்வாறு சிலை வைத்தால் அதை வணங்குபவனுக்கு என்ன பெயர்? ஏன் என்றால் கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என விமர்சனம் செய்தவருக்கு சிலை வைத்தால், அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துபவரும் காட்டுமிராண்டிதானே?” என்று புத்திசாலி போல பேனா பிடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இதழ்!

சங்கராச்சாரியாரிடம் தாக்கத்தை

ஏற்படுத்திய தந்தை பெரியார்

சங்கராச்சாரியாரிடமே கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் என்றால் யாருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை.

தந்தை பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மேனா (பல்லக்கு)வில் சென்றார். அதனைக் கவனித்த தந்தை பெரியார் மற்றவர்கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து கொண்டுள்ளாரே! இவர்களைத் துறவி என்று எப்படி சொல்ல முடியும்? என்றார். பெரியாரின் பேச்சு பெரியவாள் என்று சொல்லப்படும் அவரின் காதில் விழுந்தது. அவ்வளவுதான். மேனாவை விட்டு கீழே நடக்க ஆரம்பித்தார் சங்கராச்சாரியார்.

அவர் ஏதோ சொல்கிறார், பெரிசா எடுத்துக்காதீங்கோ என்று கேட்டுக் கொண்டார்கள்.

“அவர் சொல்வது சரிதான்.... சுகத்தை துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி எங்கே சென்றாலும் நடந்தே செல்வேன் என்றார்.

(ஆதாரம்: சக்தி விகடன், பொறுப்பாசிரியர், ரவி பிரகாஷ்)

குறிப்பு: காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரிடம் 40 ஆண்டு காலம் பணிபுரிந்த லட்சுமி நாராயணன் என்னும் 76 வயதுள்ள பெரியவரிடம் (மாங்காட்டில்) எழுத்தாளர் சாருகேசியுடன், சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் எழுதிய கட்டுரையிலிருந்து.

 

ரீஃபார்ம்களைப் பற்றி சங்கராச்சாரியார்

“ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருந்த நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்“ - சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி

- என்று குறிப்பிட்டுள்ளார் (‘தெய்வத்தின் குரல்;’ மூன்றாம் பகுதி, பக்கம் எண்.336)

இந்த சங்கராச்சாரியார் காலத்தில் வாழ்ந்த ரீஃபார்மர் தந்தை பெரியார்தானே!

முதலில் "விஜயபாரதங்கள்" ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரின் சிலை வழிபாட்டுக்கு உரியதல்ல. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்ற வாசகமே அதனை உணர்த்துமே!

இந்த அடிப்படைக் கூடத் தெரியாமல் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு எழுதுவது பரிதாபமே!

தனக்கு உதவியாளராக இருந்த மகள் போன்ற மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக சிலையா? என்பது ஆர்.எஸ்.எஸின் கேள்வி.

கேட்டுக் கேட்டு புளித்துப் போனது இது. தனது உதவியாளரை - தனக்குப் பின் இயக்கத்தில் சொத்துப் பாதுகாப்புக்கும், நடப்புக்கும் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு என்று எடுத்துச் சொன்னபிறகு, முதலையும் மூர்க்கனும் கொண்டது விடான் என்ற பாணியிலே இருப்பவர்களைத் திருத்துவது கடினமே.

பெரியார் எதிர்பார்த்தது போலவே இயக்க உடமைகளுக்கும், இயக்க நடப்புகளுக்கும் அவர் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருந்தார்,  செயல்பட்டார் என்பது அறிவுடையோர்க்குத் தெரியும்.

தனது மடத்துக்கு வந்த பெண்மணியை கையைப் பிடித்து இழுத்த ஆட்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ஜெகத்குரு.

பெண்ணுரிமைக்காகவும், ஒழுக்கத்துக்காகவும் குரல் கொடுத்துப் பிரச்சாரம் செய்த தலைவருக்குச் சிலை வைத்தால் ஒரு கூட்டத்திற்கு நெறி கட்டுகிறது. புரிந்து கொள்ளத்தக்கதே!

நற்செயல்களுக்காக ஒருவருக்குச் சிலை வைக்கலாம் என்று ஒத்துக் கொள்கிறது “விஜயபாரதம்.”

தந்தை பெரியாரை விட மக்கள் நலனுக்கு, சமூகநீதிக்கு, பெண்ணுரிமைக்கு, மூடத்தன எதிர்ப்புக்கு, பொது ஒழுக்கத்துக்குப் பாடுபட்ட தலைவர் யார்?

திருச்சியில் முதன்முதன் தந்தை பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்ட போது, சிலைக்குழுவின் துணைத் தலைவர் யார்? அ.வே.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் நாத்திகரா? சிறீரங்கம் வெங்கடேச தீட்சிதர் யார்? கடவுள் மறுப்பாளரா?

தவத்திரு குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியாரை தலைவர் பெரியார் என்று அழைத்தது எல்லாம் எந்த அடிப்படையில்?

ஆர்.எஸ்.எஸின் வேரில் புழுத்த வருணாசிரம ஜாதிப் புற்றுநோயை ஒழித்து மனித சமூகத்தில் சகோதரத்துவத்தைப் பேணிய ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவர் என்பதற்காகத் தானே.

ஒன்றிய அரசு அவரின் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது எந்த அடிப்படையில்?

“இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார் தான் அந்தப்புரட்சியைச் செய்தவர்”  என்பது அமெரிக்காவில் உள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்து ஆகும்!

- பேராசிரியர் ஜான்னரலி

(‘ஆனந்தவிகடன்’, 16.7.1972)

இந்து ராஜ்ஜியம் என்று கூறி மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தி குளிர்காயும் ஆதிக்கக் கூட்டத்திற்குப் பெரியார் என்றால் பேரிடியாகத்தான் இருக்கும், பூகம்பமாகத்தான் தோன்றும்.

இவற்றையெல்லாம் கடந்து உலகநாடுகள் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு பெருந்தலைவர் பெரியாரைத் தூற்றினால், தூற்றியவர்கள்தான் அவமானப்படுவார்கள், தூற்றப்படுவார்கள்.

“கீழை நாடுகளைப் பற்றி பெர்ட்ரான்டு ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்த வரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர் தான்!

- ஏ.எஸ்.பி.அய்யர் சட்டக்கல்லூரி இயக்குநர்.

10.2.1960 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சட்டக்கல்லூரி இயக்குநரான ஏ.எஸ்.பி.அய்யர் இவ்வாறு கூறினார். அந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றினார் என்பது முக்கியமானதாகும்,

1927ஆம் ஆண்டிலேயே தன் பெயருக்குப்பின்னால் இருந்த நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்த பெரியாரைக் குறிப்பிடும்பொழுது ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடுகிறது ‘விஜயபாரதம்‘ என்றால், அது அவர்களின் பூணூல் ஜாதிப் புத்தியைத்தானே காட்டும்!

ஒழுக்கமுள்ள ஒரு கடவுளைக்கூட “கற்பிக்க” லாயக்கற்ற கும்பல், ஒழுக்கத்தின் ஊற்றுக்கண்ணாக - பொதுப்பணியைத் தொண்டறமாகக் கருதி 95 வயது வரை உழைத்த ஒரு தலைவரைக் கொச்சைப்படுத்த விரும்பினால்,   மக்கள் அவர்களைத்தான் கொச்சையாக நினைப்பார்கள் - அற்பர்களாகக் கூட்டி ஒதுக்குவார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடும்பொழுது, ஆளுநர் உட்பட எழுந்து நின்று மரியாதைகாட்டும் நிலையில், குத்துக்கல்லாக உட்கார்ந்த பேர்வழிதானே விஜயபாரதங்களுக்குப் பெரியவாள்!

அதே நேரத்தில் அரசு விழாக்களில் கடவுள் வாழ்த்து பாடப்படும்பொழுது பொது ஒழுக்கம், நாகரிகத்தைப் பேணும் வகையில், தள்ளாத வயதில் தானாக நிற்க முடியாத நிலையிலும், இரு பக்கங்களிலும் தொண்டர்களை நிறுத்தி, அவர்களின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு, அந்தக் கடவுள் வாழ்த்துப்பாடி முடிக்கப்படும் வரை நின்றாரே.

அவர் மனிதரா - காவி வேட்டி மைனர்களா?

ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்துக்கு ஒன்று சொல்லிக் கொள்வோம்!

மூன்று முறை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட போது தடை செய்யப்பட்ட அமைப்பும் கூட!

காந்தியார் சுடப்பட்ட நிலையில் சுட்டவன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பான் என்று தெரிந்த நிலையில் மும்பையில் என்ன நடந்தது?

அக்ரகாரங்கள் எரிந்தன. பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனரே!

தந்தை பெரியார் அன்று கண்ஜாடை காட்டியிருந்தால், இங்கு பார்ப்பனர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும், அக்ரகாரங்களின் நிலை எந்த நிலைக்கு ஆளாகி இருக்கும்?

ஒரு பொறுப்பான தலைவர் என்ற முறையில் அந்த நிலையைத் தடுத்து நிறுத்திட்ட மாபெரும் உன்னதத் தலைவர் தந்தை பெரியார்.

அன்றைய முதலமைச்சரான ஒழுக்க சீலர் ஓமந்தூராரின் அழைப்பின் பேரில் வானொலியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையால் தமிழ் மண்  அமைதிப் பூங்காவாயிற்று என்பதை மறக்க வேண்டாம்!

தந்தை பெரியாருடன் கருத்து மாறுபட்ட நிலையில் கூட தோழர் ஜீவா சொன்னார் - “பெரியாரை விமர்சிக்கும்போது நிதானம் வேண்டும்!” என்றாரே, அதனை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

‘விஜயபாரதமே’ யாரைப்பற்றி எழுதுகிறோம் என்பதில் நிதானம் தேவை! தேவை!!

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கருவாட்டுச் சாம்பாரா?

 

கேள்விதோஷப் பரிகாரம் உண்மையா?

பதில்மனித வாழ்க்கை அவரவர் விதிப்படி நடக்கிறது என்கிறது ஆன்மிகம்விதியை மதியால் வெல்லலாம் என்பது  அனுபவம்சில பரிகாரங் கள்மூலம் அவற்றைத் தவிர்க்கலாம் என்கிறது ஜோதிடம்முயற்சி மட்டுமே நம்மிடம் - முடிவு இறைவனின் சித்தம்.                                                       - ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ்வார இதழ், 17.9.2021

விதியை மதியால் வெல்லலாம் என்பது அனுபவம் என்று ஒப்புக்கொண்ட பிறகுமற்ற வழவழா குழகுழா வெண்டைக்காய் விளக்கெண் ணெய் விளக்கம் ஏன்?

அது என்ன கருவாட்டுச் சாம்பார்?

மதச்சார்பின்மைபற்றி 'விஜயபாரதம்' பேசலாமா?

 

ஆர்.எஸ்.எஸ்வார இதழான 'விஜயபாரதம்ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பாகவத் கருத்து என்று ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

"ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த பிரமுகர் பாவுராவ் தேவரஸ் இங்கிலாந்து சென்றிருந்தார்அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்விருது பெற்றோர் உள்ளிட்ட பிரமுகர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்இவரை வரவேற்றுப் பேசிய ஆங்கிலேயர், 'பாரத நாட்டின் தொடர்பு நமக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சிபாரதத்திற்கு நாம்தான் ஜனநாயகத்தை அளித்திருக்கிறோம்என்று பேசினார்அவரை திருத்தினார் பாவுராவ்: "உங்கள் விருந்துக்கு நன்றிநீங்கள் பேசியதில் ஒரு சிறு பிழைஜனநாயகத்தை நீங்கள் எங்களுக்கு தரவில்லைஇங்கிலாந்து என்ற தேசமே இல்லாத காலத்தில் பாரதம் ஜனநாயக குடியரசுகளாக தழைத்தோங்கி இருந்ததுஒருவேளை அங்கிருந்து கிரேக்க நாடு வழியாக உங்களுக்கு ஜனநாயகம் வந்து சேர்ந்திருக்கலாம்!"

'கர் வாப்சிஎன்ற தாய் மதம் திரும்பும் விஷயம் குறித்து நாடாளுமன்றமே பரபரப்பாகிய நேரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நான் சந்தித்தேன்உடல் நிலை காரணமாக பல நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த அவர் என்னைச் சந்திக்க இசைந்தார்சந்தித்த போது அவரே கூறியது இது: "பாரதத்திற்கு மதச்சார்பின்மை போதிக்க இவர்கள் யார்பாரதத்தின் அரசியல் சாசனம் மதச்சார்பின்மை பற்றி பேசுவதால் தேசம் மதச்சார்பற்றதாக இருக்கிறது என்பது அல்ல உண்மைஅரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மைஎனவேதான் நமது அரசியல் சாசனம் மதச்சார்பின்மை பேசுகிறது." சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணாப் முகர்ஜி தொடர்ந்து இவ்வாறு கூறினர்; "நமது அரசியல் சாசனத்தை எழுதியவர்களுக்கு அப்போதுதானா மதச்சார்பின்மை எண்ணம் ஏற்பட்டது? 5,000 ஆண்டுகளாக பாரத மண்ணில் நிலவும் பாரம்பரியம் தந்த கொடை மதச்சார்பின்மை". பின்னர் நமது சங்க சிக்ஷா வர்க முகாமிற்கு வந்திருந்தபோதுகூட பிரணாப் முகர்ஜி இதையே கூறினார்அது பதிவாகியுள்ளதுமதச்சார்பின்மை என்பது நமது கலாச்சார பாரம்பரியம் என்பதுதான் விஷயம்."

('விஜயபாரதம்' - 13.8.2021)

இதனைப் படிக்கும் பொழுது ஏற்பட்ட நகைச்சுவைக்கு அளவேயில்லை.

'பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!" என்று 'ஆரிய மாயை'  நூலில்  அறிஞர் அண்ணா எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

2015 குடியரசு நாளில் (26.1.2015) ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட  அதிகாரப் பூர்வமான அரசு விளம்பரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preambleஇடம் பெற்றுள்ள 'சோசலிஸ்ட்' 'செக்குலர்' (மதச்சார்பின்மைஎன்ற முக்கிய சொற்களையே திட்டமிட்டு நீக்கியவர்கள்தானே இவர்கள்?

ஒரே நாடு என்றும்ஒரே மதம் என்றும்ஒரே கலாச்சாரம் என்றும்இந்து ராஜ்யம் என்றும்ராமராஜ்ஜியம் என்றும் பேசுகின்ற நாக்கிற்குச் சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சார பாரம்பரியம் என்று பேசுவது அறிவு நாணயமானதுதானா?

450 ஆண்டு கால வரலாறு படைத்த 'அயோத்தி பாபர் மசூதியை இடித்தவர்கள்', '1,100 கோடி ரூபாயில் ராமன் கோயில் கட்டிக் கொண்டு இருப்பவர்கள்' - எந்த முகத்தை வைத்துக் கொண்டு மதச் சார்பின்மை பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள்?

"எனது புனிதமான இந்து மதத்துக்கும்இந்து சமுதாயத்துக்கும்இந்து கலாச்சாரத்திற்கும் பாசமிகு பாரத் வர்ஷத்தில்அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்து ராஷ்டிர சுயம் சேவக்கில் (ஆர்.எஸ்.எஸில்நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும்எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்இந்தச் சங்கத்தின் பணிகள் அனைத்தையும் இதயப் பூர்வமாக ஏற்க வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன்இதுதான் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்.காரரும் ஆர்.எஸ்.எஸில் சேரும் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.

இத்தகைய ஆர்.எஸ்.எஸின் தேசியத் தலைவர்தான், "பாரத தேசத்தின் பாரம்பரியம் என்பதே 'மதச்சார்பின்மைஎன்று கூச்சநாச்சம் இல்லாமல் கூறுகிறார்.

காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் ஒருவரான அர்ஜுன் சிங் ஒரு வினாவைத் தொடுத்தார். 'ஆர்.எஸ்.எஸில் எடுத்துக் கொள்ளப்படும் உறுதிமொழி - பதவி ஏற்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கப்போவதாக எடுத்துக் கொள்கிறார்களே - இந்த உறுதிமொழி - இரண்டில் எதற்கு விசுவாசமாக இருக்கப் போகிறார்கள்?' என்று அர்ஜுன் சிங் சரியாகக் கிடுக்கிப்பிடி போட்டாரே - இதுவரை பதில் உண்டா?

இவரை விட்டுத் தள்ளுங்கள். 'ஜென்டில்மேன்என்று சொல்லுகிறார்களே அடல் பிஹாரி வாஜ்பேயின் கருத்து என்ன!

புனாவில் சத்ரபதி சிவாஜியின் 325ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பேயி என்ன பேசினார்.

Mr.Vajpayee said Chattrapathi was secular to the true sence as against today is "Distorted Secularism"  for he paid equal respect to all religions and never discriminated on the ground of religion. (The Hindu 27.6.1998).

சத்ரபதி சிவாஜி இப்பொழுதுள்ள "உருக்குலைக்கப்பட்ட மதச் சார்பின்மைக் கொள்கையை"ப் போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்க வில்லைஎல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார்.

இது தான் பிரதமர் என்ற நிலையில்கூட .பிவாஜ்பேயி பேசியதாகும்வாஜ்பேயியே இந்த நிலை எனில்மோகன் பாகவத் பேசுவதுபற்றிக் கேட்கவா வேண்டும்?

மோகன் பாகவத்துக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ்தலைவர் கே.எஸ்சுதர்சன் ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ்ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

"சிறீ ராமபிரான்சிறீ கிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' - 16.10.2000)

என்று ஆர்.எஸ்.எஸ்தலைவர் சுதர்சன் பேசியதற்கு என்ன பதில்விஜயபாரதம் விளக்குமாமோகன்பாகவத் முறையாகப் பதில் கூறுவாரா?

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

“சாஷ்டாங்க நமஸ்காரம் மு.க. ஸ்டாலின்ஜி!”


மின்சாரம்

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர் களே! நீங்கள் முதல் அமைச்சர் ஆகப் போவது திண்ணம் என்று அறிந்ததால் முன் கூட்டியே “மாண்புமிகு” என்று அழைக்கிறோம். கால் கை (காக்கா) பிடிப்பதுதான் எங்களின்  பரம்பரைக்  குணம் என்பது தங்களுக்குத் தான் ‘பேஷா’ தெரியுமே!

சென்ட்ரலிலும், ஸ்டேட்டிலும் முறையே எங்களவா ஆட்சியும், அதற்கு அடிமைப்பட்ட ஆட்சியும் இருந்ததால் நாங்கள் ஏதோ ‘தத்துப் பித்து’ன்னு உளறியிருப்போம்.

பெரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதையெல்லாம் மனஸில வச்சிக்காதீங்கோ!

‘ஸ்ரீவீரமணியிடமிருந்து விலகி இருங்கோ’ என்று சொல்லிப் பாத்தோம் நீங்கள் கேக்கலை - இப்படியெல்லாம் ‘மித்திரபேதம்‘ செய்வதெல்லாம் எங்கள வாள் ரத்தத்திலேயே பிறந்தது- அதை யெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கோ!

நாயக்கர் சிலைக்கு எங்களவாள் தூண்டுதலால் ஆங்காங்கே விஷமங்கள் நடந்தது வாஸ்தவம்தான். இனிமே அதெல்லாம் நடக்காதுன்னு எங்களுக்கு நன்னாதெரியும்.

ஈ.வெ.ரா. சாலை என்னும் பெரியார் பெயரை மாத்தியிருக்கா - அதெல்லாம் பிசகு.

இதற்காக ‘டுவிட்டரில்’ தாங்கள் எழு திய வாசகத்தில் உஷ்ணம் அதிகமாயிருந் ததை நாங்கள் புரிந்துகொண்டோம் - இனிமேல் நாங்கள் ‘உஷாரா’ இருப் போம்!


‘விஜயபாரதம்', 16.4.2021 - பக்கம் 34
இந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடி தான் நமது கட்டுரையும் கார்ட்டூனும்!

அனைத்து ஜாதியினரையும் ஹிந்துக் கோயில்களில் வேக வேகமாக அர்ச்ச கராக நியமிப்பேள். அது எங்கள் அஸ் திவாரத்தில் கை வைக்கும் வேலைதான். ஆனாலும் நாங்கள் என்ன செய்யட்டும் - எங்களையும் கொஞ்சம் கவனிச்சிக் கிங்கோ!

ஜெயலலிதாதான் எங்களவாளில் கடைசி சீஃப் மினிஸ்டர்.  அதைத் தெரிஞ்சுதான் எங்கள் ஜெகத் குருவை   ‘அரஸ்ட்’ செய்து ஜெயிலில் தள்ளியபோதுகூட, உணர்ச்சி வயப்படாமல், மிகவும் புத்தி சாலித்தனமாக (இதை உங்களவா எங்க ளிடம் கத்துக் கொள்ள வேண்டிய விஷ யம்) ஜாக்கிரதையாக ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரிச்சோம்!

எதிர் காலத்திலே உங்களவாள்தான் ஆட்சிப் பீடத்திலே இருப்பா - உங்களை தாஜா பண்ணிதான் எங்கக் காலத்தை வோட்டணும்.

சிறுபிள்ளைத்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது குத்துக் கல்லாட் டம் (காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந் திர சரஸ்வதி கூறுவது) நான் உட்கார்ந் திருந்தது தப்புதான்! தமிழ் என்பது எங்கள் கண்ணோட்டத்தில் நீஷப் பாஷை. திருக்குறள் மனு தர்மத்தின் சாரம் என்று சொல்லுவது - நம்புவ தெல்லாம் எங்களுக்கே உரித்தானவை தான்!

திடீர்’னு இவற்றையெல்லாம் மாத்திக் கிறது என்பது பஷ்டமான கஷ்டம்! எங்க நிலையைப் புரிஞ்சிக்கிங்கோ!

எங்களவாளில் சில அதிகப் பிரசங்கி அபிஷ்டு ராஜாக்கள் இருக்கா - அவங்களாலே எங்களுக்கு எப்போதும் ரோதனைதான்!

வீரமா பேசுவா - அடுத்த நிமிஷமே மன்னிச்சிடுங்கோ என்று காலைப் பிடிப்பா, அவங்களை வச்சு தயவு செய்து எங்களையும் அந்த லிஸ்டில்  சேர்த் திடாதீங்கோ!

ஆர்.எஸ்.எஸ். மெகசினான ‘விஜய பாரத’த்துக்கு எப்பொழுதும் கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம்.

அதுல ஒரு கார்ட்டூன் போட்டிருக்கா! நீங்க நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், வீரமணியும், சுப.வீர பாண்டியனும் உங்க (மு.க.ஸ்டாலின்) காலைப் பிடிச்சிக் கெஞ்சுவது போலவும் போட்டிருக்கா.!

அதெல்லாம் முட்டாள்தனம் - வீண் வம்பை விலைக்கு வாங்கும் விஷமம் . 

அனுகூல சத்ரு என்ற ஒன்று உண்டு. அதுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்கள் - அதன் வார இதழ்தான் ‘விஜயபாரதம்‘  அதையெல்லாம் காலைப்பிடிச்சிக்  கேட்கிறோம், அலட் சியப்படுத்துங்கள்.

1946இல் சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர் களுக்கு நல்ல புத்தியைக் காட்டும் வகையில் சர். சி.பி. ராமசாமி அய்யர் சொன்னதை யெல்லாம் மறந்த காரணத் தால் நாதியில்லாமல் நடு ரோட்டில் நிக்கிறோம்.

‘பிராமணர்களே!

இடஒதுக்கீட்டை கிண்டல் செய்யா தீர்கள் - எதிர்க்காதீர்கள்’ என்றார். ‘பிராமணரல்லாதாரை ஏளனம் செய் தால் சீரழிந்து வேரறுந்து போவீர்கள்’ என்று தொலைநோக்கோடு சொன்னார் சர். சி.பி. அய்யர். முட்டாள்தனமாகக் அவற்றை யோசிக்க மறுத்தோம். ‘விஜய பாரதம்‘ அப்படித்தான் வீரமணியையும், சுப.வீ.யையும் ஏளனம் செய்து கார்ட்டூன் போட்டுள்ளது.

உங்கள் பாதார விந்தத்துக்குக் கோடிக் கோடி நமஸ்காரம்! எங்களைப் பெரிய மனசு வைத்து மன்னித்து விடுங் கள். உங்கள் வம்புக்கு இனி ஒருக்காலும் வர மாட்டோம், வரவே மாட்டோம்.

இப்படிக்கு

கு. மூர்த்தி

விஜயேந்திர சரஸ்வதி

குறிப்பு: எங்கள் தலைவர்களை இழிவு படுத்தினால் சங்கராச்சாரியார்களின்  ‘தி(தெ)ருவிளையாடல்கள்’  - அனுராதா ரமணனின் பேட்டிகள் என்று வண்டி வண்டியாக வெளிவரும் - எச்சரிக்கை!

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே!

கருஞ்சட்டை

 

'விஜயபாரதம்‘ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் - எவ்வளவு மொத்துப் பட்டாலும் புத்தி கொள்முதல் பெறுவதாகத் தெரியவில்லை.

அடால்ப் ஹிட்லரின் சீடர்கள் அல்லவா - அதனால் அவர் அமைச்சரவையிலிருந்த அந்தக் கோயல்பல்சின் அசல் நகலாக பொய் மூட்டைகளை நாள்தோறும் அவிழ்த்துக் கொட்டிக் கொண்டே திரிகிறார்கள். இது அவர்களின் கடைந்தெடுத்த பிழைப்பாகவே ஆகி விட்டது.

சமூக வலை தளங்களில் பொய்களை உலவ விடுவதற்காகவே தனிக் குழு அமைத்து செயல்படும் கும்பல் அல்லவா!

திராவிடர் கழகத் தலைவர் வீட்டுத் திருமணத்தில் தாலி கட்டப்பட்டது - சடங்குகள் செய்யப்பட்டன என்று இதே விஜய பாரதம் எழுதி மூக்குடைப்பட்டு, (விரைவில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட உள்ளனர்) அதன் ரத்தம் இன்னும் வழிந்தோடும் நிலையில் அடுத்த கட்ட பொய்க்குத் தாவி இருக்கிறது இந்த மங்கி 'பிராண்டு!'

இந்த வார விஜயபாரதத்தில் 'ஈ.வே.ரா. மணியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் (10.8.2018, பக். 27) கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈ.வே.ரா. தனக்கு அடுத்த வாரிசாக யாரை நிய மிக்கலாம் என்பது பற்றி ராஜாஜியிடம் கலந்து ஆலோ சித்தார். திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரை, நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், அன்பழகன், கருணாநிதி போன்றவர்களில் ஒருவரை தனக்கு அடுத்த வாரிசாக நியமிக்க விரும்பவில்லை. இவர்கள் மீது ஈவேராவிற்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் ராஜாஜியிடம் தனக்கு அடுத்த வாரிசாக மணியம் மையை நியமிக்கப் போவதாகவும், அவரையே திரு மணம் செய்து கொள்ள போவதாகவும் ஆலோசித் துள்ளார். ராஜாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

இது உண்மையா? ராஜாஜி சம்மதம் தெரிவித்தாரா? மாறுபட்ட கருத்தைச் சொன்னாரா?

இதுபற்றி உண்மை நிலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆதாரபூர்வமாக ஆவணங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தினார்.

“பெரியார் மணியம்மை திருமணம்“ என்னும் தலைப்பில் உண்மை நிலவரங்கள் வெளிப்பாடு என்னும் நூலாகவே  (பக்கம் 225, 226) வெளிவந்துள்ளது. (2007ஆம் ஆண்டு)அந்த விவரம் இதோ:

ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம்

அந்தரங்கம்

அன்புக்குரிய ஆப்த நண்பருக்கு,

தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன்.

என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு நாட்டுக்கு எந்தவிதத்திலாவது உதவும்.

தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில் ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி, இந்தப் பதவியை வகிப்பவன் அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்துக்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள். என் அன்புக்கு அடை யாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சி கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்பு வதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களு டைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப் பட்ட பின் செய்வது நலம்.

எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன் னிக்க வேண்டும்.

இவை அன்புடன்

இராசகோபாலாச்சாரி

இந்த நூல் வெளிவந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைக்கு முற்றிலுமே மாறாக இப்படியொரு அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு பொய் மலத்தில் புழுத்த புழுவாக, தன் பூணூல் புத்தியைக் காட்டிக் கொள்வது என்பதை மக்கள் உணர்வார்களா? இது எந்தத் தரத்தைச் சார்ந்தது?

அப்பாவித்தனமாக அந்த அமைப்புகளில் சிக்கிக் கொண்ட அனுமார்த் தமிழர்களும் உணர்ந்து திருந்து வார்களாக?

-'கருஞ்சட்டை'
- விடுதலை நாளேடு, 7.8.18

புதன், 22 ஜனவரி, 2020

விஜயபாரதத்துக்கு ‘விடுதலை’யின் பதில்கள் ‘விடுதலை’யின் கேள்விக்கு???

கேள்வி: சுவாமி விவேகானந்தரின் நல்லதொரு அமுத மொழி?

பதில்: பூக்களாக இருக்காதே... உதிர்ந்திடுவாய்... செடிகளாக இரு... பூத்துக்கொண்டே இருப்பாய்.

(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)

விவேகானந்தர் இதை மட்டுமா சொல்லி யிருக்கிறார்.

இதோ விவேகானந்தர்.

மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமை களும், கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும்.  சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகு மென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்.

(மறைமலை அடிகளாரின் ‘தமிழர் மதம்‘, பக்கம் 24)

கேள்வி: கைலாஷ், மானசரோவர் யாத்திரை பற்றி?

பதில்: கைலாயம் என்பது இமய மலையில் உள்ளது. இதன் உயரம் 6638 மீட்டர். சிந்துநதி பிரமாண்டமான சட்லஜ் நதிகள் இங்குதான் உற்பத்தி யாகிறது. மானசரோவர் என்பது அங்குள்ள பிரமாண்டமான ஏரி. சீன எல்லை யைக் கடந்துதான் கைலாயம் செல்லவேண்டும்.

சிவன், பார்வதி தேவியுடன் உறையும் இடம், தமிழ்நாட்டில் ஈரோட்டில் இருந்துதான் கைலாஷ் யாத்திரைக்கு அதிகமான பேர் சென்று வரு கிறார்கள். ஏதோ ஈ.வெ.ரா. பிறந்த மண் என்பதெல்லாம் ஹம்பக்.

(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)

மானசரோவர் - அதாவது கைலாஷைப் பற்றி விஜயபாரதம் ‘ஆகா’ எப்படியெல்லாம் சிலாகித்து எழுதுகிறது. சிவன் பார்வதி உறையும் இடமாம்.

அந்த இடம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது? எந்த நாட்டின் கீழ் இருக்கிறது? அதுதான் முக்கியம். அந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தால் ‘விஜயபாரதம்‘ வகையறாக்கள் வண்டி வண்டியாக அள்ளி விடும். சிவ - பார்வதி உறையும் இடத்தில் வண்டவாளம் பல்லிளித்து விடும்.

வானதி பதிப்பகம் வெளியிட்ட - சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூலின் பக்கம் 145, 146 என்ன சொல்லுகிறது?

இதோ:

திருக்கைலயங்கிரி என்று தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம். இது திப்பெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்பட்ட எல்லைப் பிராந் தியம், ‘கைலாஸ் மானஸரோவர்’ எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன் மீகத் துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம். இதற்குப் பாரதத்தில் வழங்கிய புராதனப் பெயர் ‘த்ரிவிஷ்டபம்‘ (தீப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில்தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது. பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப்பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன. ‘த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே, அதி வீஷ்ட பிச்ரிதா:--’’ என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

‘‘மூன்று தைவ சக்திகள் - அக்னி இடிமின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்; இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை ‘த்ரவிஷ்டபம்‘ (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை ‘த்ரதவிஷ்டபம்‘ என்றே குறிப்பிட்டு, ஆரிய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார். கிம்புருஷ வர்ஷம், கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக் கிறார். கைலாஸ பர்வதத்தை ‘ஹேம் கூடம்‘’ என்று மகாபாரதமும் ‘கிரௌஞ்ச பர்வதம்‘ என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954 இல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவே இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள். கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது. 1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், 1962  இல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்கப் பின் கைலாஸ் மானஸரோவர் புனித யாத்திரை தடைப்பட்டுவிட்டது.

- திரு.சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூல், பக்கம் 145, 146, (வானதி பதிப்பக வெளியீடு)

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படு கின்ற இடம்!

சிவபெருமான் உறைவதாகக் கூறப்படு கின்ற இடம்!

மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிர மிக்க முடிந்தது? அவன் படை எடுத்து வந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்? திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக் கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று? உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?

இதற்கெல்லாம் ‘விஜயபாரதம்‘ விலா வாரியாக பதில் சொன்னால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது.

கேள்வி: திருவள்ளுவர் ஒரு ஹிந்துவா?

பதில்: சந்தேகமென்ன? அவர் ஹிந்துதான்.

அவருக்கு சென்னை மயிலாப் பூரில் கோவில் கட்டி ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகிறார்களே! அது சரி, எங்காவது ஒரு முஸ்லிமோ, கிறிஸ்துவரோ தன் வீட்டில் வள்ளுவர் படம் வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா?

- ‘விஜயபாரதம்‘, 22.11.2019, பக்கம் 35

திருவள்ளுவர் காலம் என்ன? 2000 ஆண்டுகளுக்குமுன் ஹிந்து மதம் என்ற ஒன்று உண்டா?

உங்கள் லோகக் குரு மூத்த சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாக்குமூலத்தைக் கொடுத்தால் அதை அப்படியே அட்சரம் பிறழாமல் ‘ஆம் என்க!’ என்று ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா!

பெரியவாள் சொன்னால் அது தெய் வத்தின் குரலாயிற்றே! ஆம் இதுவும் வானதி பதிப்பகம் வெளியிட்டதுதான். மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அருள்வாக்கை எல்லாம் தொகுத்து வெளியிடப்பட்டதுதான். ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் 167 ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.

‘‘நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று மொழிப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோமோ அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பற்றியது’’ என்று “திருவாய்” மலர்ந்துள்ளாரே!

வெள்ளைக்காரன் இங்கு வந்தது எப்போது?

திருவள்ளுவர் வாழ்ந்தது எப்போது?

திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் கோவில் இருக்கிறதாம். அதை எப்பொழுது, யார் கட்டினார்கள்?

கோவிலை - அதுவும் ஹிந்து மதத்தில் கோவில் கட்டுவது என்பது மிகவும் மலி வான விடயமாயிற்றே. ஒருவனுடைய கொள் கையை ஒழிக்கவேண்டுமானால், அவனைக் கடவுளாக்கிட வேண்டும் என்பார்களே - அதுதான் திருவள்ளுவர் விடயத்திலும்.

சனாதன, வருண தருமத்தை ஒழிக்க வந்த கவுதம புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்ன கூட்டம் எதைத்தான் செய்யாது?

பிள்ளையாரிலேயே தான் எத்தனை எத்தனைப் பிள்ளையார்? வேப்ப மரத்துக்குக் கீழிருந்தால், அது வேம்படி விநாயகர்; கடன்கார விநாயகர், ஒரு பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்திருந்தால், வல்லபைக் கணபதி - வெட்கக்கேடு.

கேள்வி: ‘கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது’ என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளாரே?

பதில்: காஞ்சிப் பெரியவர் போல ஃபேன் இல்லாமல், கார் இல்லாமல் கால்நடையாக ஊர் ஊராகப் போகிறவர்கள் கூடங்குளத் திட்டம் - ஏன் மின்சாரமே வேண்டாம் என்று கூறலாம். ஆனால், அவர்கூட, தனக்கு வேண்டாமென்றாலும், மற்றவர்களுக்கு மின்சாரம் தேவை என்பதால், கூடங்குளம் வேண்டாம் என்று கூறமாட்டார்.

‘துக்ளக்‘, 3.7.2019, பக்கம் 17

சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஃபேன் இல் லாமல், கார் இல்லாமல் கால்நடையாகப் போனார் - இருக்கட்டும்.

சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருந்தபோது ஜூனியர் சங்கராச் சாரியாராகவும், அவர் மறைந்த பிறகு மூத்த சங்கராச்சாரியாராகவும் இருந்த ஜெயேந்திர சரஸ்வதி கால்நடையாகப் போகவில்லையே! காரிலும், விமானத்திலும்தானே பறந்தார். அவர்மீது ‘துக்ளக்‘குக்கு என்ன கோபம்?

கிண்டலா? கேலியா?

-  விடுதலை ஞாயிறு மலர் 7 12 19