இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜனவரி, 2024

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! தமிழர் தலைவர் வரவேற்பு


வெள்ளி, 10 நவம்பர், 2023

இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் - அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் - அறிக்கை

* இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? 

* இடஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தானே இடஒதுக்கீடு என்றுள்ளது? 

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கிய 

உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் தானே ஓ.பி.சி.?

1

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்று வரையறை செய்துள்ள நிலையில், பொருளாதார அளவுகோலைத் திணித்து உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒன்றிய பிஜேபி அரசு - அதன் பிரதமர் சமூக நீதி - இடஒதுக்கீடு பற்றிப் பேசலாமா? ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் மூன்றே மூன்று பேர்தானே ஓ.பி.சி. என்று அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

 அவரது அறிக்கை வருமாறு:

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அய்தராபாத்தில் 7.11.2023 அன்று பேசிய பிரதமர் மோடி அவர்கள்,

"சமூகநீதி கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் தனது  அரசு (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் - பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தின்  தலைப்பு என்ன தெரியுமா? "பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம்" ("Self Respect to  BC's") என்பதாகும்.

இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்:

அவரது ஒன்றிய அமைச்சரவையில் 27 சதவிகித ஓ.பி.சி.  (OBC) அமைச்சர்கள், உள்ளனராம்.

2014இல் பிரதமர் பதவிக்கு அவர் வந்தபோது எத்தனை சதவிகிதம் இவர்கள் இருந்தனர் என்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க முடியாத இக்கட்டு நிலையே ஏற்படும்!

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களைப் பற்றி கூறியிருக்கும்போது, நமது பிரதமர் அவர்களை நோக்கி சில சந்தேகங்களை வைக்க ஒடுக்கப்பட்ட மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டின் அளவுகோலில் பொருளாதாரம் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)இன்படி OBC என்ற பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளப்படுத்தல் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் ("Sociallly and Educationally") என்பதுதானே - அதை மாற்றி, முந்தைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட இந்திரா சஹானி வழக்கில் பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு (முன்பு) 10% சதவிகிதம் செல்லாது என்பதை தலைகீழாக்கி அவசர அவசரமாக 103ஆவது அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து 4  நாட்களில் சரியான விவாதமே நாடாளுமன்றத்தில் நடத்தாமல், நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கி,  50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மேலே 10 சதவிகித இடஒதுக்கீடு - அதுவும் உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டுமே; எல்லா ஜாதி ஏழைகளும் இதன் கீழ் வர மாட்டார்கள் என்று அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே தகர்த்தெறிந்தீர்களே, மாநிலங்களின் ஒப்புதல்களைப் பெற்று நிறைவேற்றாது 'தானடித்த மூப்பாக'வேத்தானே நடத்தினர்.

2

உயர்ஜாதியினரில் சமூக கல்வி ரீதியாக 

பின் தங்கியோர் உண்டா?

உயர் ஜாதி ஏழைகள் - கல்வியிலும், சமூக ரீதியாகவும், பிற்படுத்தப்பட்டவர்களா? புள்ளி விவரக் கணக்கு ஏதேனும் நடத்தப்பட்டதா?

 ஒன்றிய அமைச்சரவையில்  பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்று இப்போது  தேர்தல் பிரச்சார சங்கீதம் பாடுகிறாரே - அந்தப்படி அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் 100க்கு 100 சதவிகிதம் உயர்ந்தவர்கள், தேவையற்ற அஜீரணக்காரர்கள் - பசியேப்பக்காரர்கள் அல்ல என்ற உண்மையை இவர் மறுக்க முடியுமா?

அவர்களிலும்கூட அன்றாட வருமான அளவு நாள் ஒன்றுக்கு 2222 ரூபாய் பெறுபவர்கள்  ஏழைகளா?

பதில் அளிக்கட்டுமே பிரதமரோ, அத்துறை அமைச்சரோ!

இதுவரை அவரது அதிகார வர்க்கத்தில் எத்தனைப் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்?

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்?

90 ஒன்றிய அரசு இலாக்காக்களில் செயலாளர்களில் வெறும் 3 பேர் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இளந் தலைவர் ராகுல் காந்தி விடுத்த கேள்விக்கணைக்கு அவர் பதில் அளிப்பாரா?

இவரது அரசு எத்தனை எஸ்.சி., எஸ்.டி., உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்த 9 ஆண்டு ஆட்சியில் நியமனம் செய்துள்ளது?

மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் களோ, பேராசிரியர்களோ எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இவர்களில் இவரது ஆட்சியில் நியமனம் பெற்றோர் புள்ளி விவரங்களைப் பார்த்தால் ஒடுக்கப்பட்டோர் உரிமை காற்றில் பறந்திருக்கும் நிலை தெளிவாகுமே! எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்? சமூகநீதி என்றால் இதுவா? பதில் கூறட்டும்! 

இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
10.11.2023


செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

பதவி உயர்வில் இடஒதுக்கீடு - தொல். திருமாவளவன் கடிதம்


1

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான  தொல். திருமாவளவன் கடிதம் கொடுத்திருக்கிறார்.

ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன. மற்ற சமூகத்தினரை காட்டிலும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்வதே மிகவும் சவாலானதாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில். அவர்களுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு வெறும் உத்தரவாக மட்டுமே இருக்கின்றன.

இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளனர். இந்த கடிதத்தில்,

"பிஜேபி எம்.பியான கிரித் சோலங்கி தலைமையிலான எஸ்.சி. எஸ்.டி., நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த அய்ந் தாண்டுகளில் குரூப் A-யில் பதவி உயர்வு பெற்ற எஸ்.சி. எஸ்.டி., ஊழியர்களின் பிரதிநிதித்துவம், எஸ்.சி.க்கான 15%க்கும் எஸ்.டி.க்கு 7.5% க்கும் குறைவாகவே உள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ளது. இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவம் குரூப் 'சி' மற்றும் 'டி'-க்கும் காணப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்ய, எஸ்.சி. எஸ்.டி., பிரிவினருக்கான பின்னடைவு காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது; அதுமட்டுமின்றி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக நியமனங்களில் எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தர விட்டுள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன, இட ஒதுக்கீட் டைப் புறக்கணிக்கின்றன. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,   பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் சிவில் மேல்முறையீட்டு எண். 629 இல், "ஜர்னைல் சிங் & பிறர் Vs லச்மி நரேன் குப்தா & பிறர்" என்ற வழக்கில், பதவி உயர்வு அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை வழங்குவதற்காக எஸ்.சி.,  மற்றும் எஸ்.டி.களின் பிரதிநிதித்துவத்தை அளவிடுவதற்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. மதிப்பீட்டின் அலகு என்பது 'கேடர்' ஆகும், இது குரூப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

ஒவ்வொரு தனிப்பட்ட கேடருக்கும் கணக்கிடக்கூடிய தரவு தொகுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒன்றிய அரசின் கடமை. உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரவுகளை உடனடியாக சேகரிக்கவும் அதன் அடிப்படையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.யினருக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்கவேண்டும்" என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் எவற்றை குறிக்கின்றன எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது உச்சநீதிமன்றம் உள்பட அறிந்திருக்கும் செய்தியாகும். நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதனை எடுத்துக்காட்டி உள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்கள் நிர்வாகத்தில் உரிய இடம் பெற்று இருக்காவிட்டால் அது எப்படி உண்மையான ஜனநாயகமாகும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கு நிராகரிக்கப்பட்டால் நாட்டில் புரட்சி வெடிப்பது சாத்தியமாகும் என்று சொல்லி இருப்பதையும் ஒன்றிய அரசுக்கு இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம் - வலியுறுத்துகிறோம். 

1992 முதல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஒன்றிய அரசுத் துறைகளில் அளிக்கப்பட்டும் இதுவரை அவர்களுக்குரிய 27% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் - அரசு தரும் புள்ளி விவரங்களின்படி பார்த்தாலே இல்லை என்பது வெளிப்படை. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தவிர்க்கப்படவே முடியாத ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது சமூகநீதியிலும் ஜனநாயக ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும். 

இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு சமூக நீதிக்கு எதிரானது  என்று வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று. அதே நேரத்தில் உயர் ஜாதியினர் கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் அவர்களுக்கு கதவுகளை திறந்து விடும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது  சமூக அநீதியாகும். குறுக்கு வழியில் பாய்ந்து சமூக நீதியின் ஆணிவேரையே வெட்டுகின்ற அபாயகரமான செயலாகும். 

இந்த நிலையில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் கைகோத்து ஒன்றிணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதிக்கு எதிரான பிஜேபியை மிகப்பெரிய அளவில் வீழ்த்த வேண்டும் என்ற சபதத்தை - உறுதியை எடுத்துக் கொள்வார்களாக!

திங்கள், 24 ஜனவரி, 2022

அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு - தி.மு.க. முயற்சிக்கு வெற்றி!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மண்டல் ஆணைய தீர்ப்பிற்குப் பிறகு - இந்தியச் சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள மிக முக்கிய வெற்றி!

சனி, 22 ஜனவரி, 2022

இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக இல்லாமல் அனைவருக்கும் பங்கிட்டு அளிக்கும் உரிய ஏற்பாடே!

வெள்ளி, 8 அக்டோபர், 2021

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., விளக்கவுரை

 தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர் பி.ஜே.பி.பற்றி எழுதாமல் - ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்?

‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., விளக்கவுரை

சென்னைசெப்.14 பி.ஜே.பி.பற்றி எழுதாமல்ஆர்.எஸ்.எஸைப்பற்றி ஏன் எழுதவேண்டும்என்பதற்கான விளக்கத்தை அளித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை’’

புத்தக வெளியீட்டு விழா!

கடந்த 8.9.2021  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்..

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற நம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

அய்யா அவர்களின் - தமிழர் தலைவரின்

ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை என்னும் நூலை வெளியிட்டுசிறப்புரை வழங்கி விடைபெற்று சென்றி ருக்கின்ற மக்களவை உறுப்பினர் மானமிகு தயாநிதி மாறன் அவர்களே,

புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்திருக்கின்ற திராவிட முன்னேறக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி அவர்களே,

எனக்கு முன்னர் இங்கு வாழ்த்துரை வழங்கி இந் நிகழ்வை சிறப்பித்திருக்கின்ற சட்டப்பேரவை உறுப் பினர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற தங்கை மணியம்மை அவர்களேநிறைவாக நம்மிடையே சிறப்புரை வழங்க விருக்கின்ற நூலாசிரியரும்தமிழர் தலைவருமான அய்யா அவர்களே,

வழக்கம்போல இந்த அரங்கில் திரண்டுஇந்த நிகழ்வையும் சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களேஜனநாயக சக்திகளேஉங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்னுடைய கடமை!

நேற்று நான் புதுடில்லிக்குப் புறப்படுகின்றபொழுதுநம்முடைய கவிஞர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டுஅய்யா அவர்களின் இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து என்னிடத்தில் கூறினார்.

நான் இன்றிரவுதான் கடைசி விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வருவதாகத் திட்டமிட்டு இருந்தேன்.

அய்யா அவர்களின் அந்தத் தகவலை கேட்டதும்உடனே வருகிறேன்தமிழர் தலைவரின் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்னுடைய கடமை - அந்த வாய்ப்பை நான் நழுவவிடமாட்டேன் என்று ஒப்புதல் அளித்தேன்.

இந்த நிகழ்விற்குப் பிறகுஇன்னும் சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவேண்டும்நீண்ட நேரம் பேசவேண்டும் என்கிற பேராவல்தமிழர் தலைவர் அவர்கள் இந்தக் கரோனா கொடுந்தொற்றின் நெருக்கடி சூழலிலும்நேரத்தை எந்த அளவிற்குப் பயனுள்ள அளவில் செலவிட்டிருக்கிறார் என்பதை எண்ணி வியந்து போகிறேன்பெருமைப்படுகிறேன்.

தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையளித்திருக்கிறார் தமிழர் தலைவர்

ஓய்வாக இருக்கவேண்டும் என்று சோர்ந்து வீழ்ந்து விடாமல்இந்தச் சூழலிலும்கூட காலத்திற்கான தேவை யைக் கருதிஇந்த நூலைப் படைத்துதமிழ்ச் சமூகத் திற்குக் கொடையளித்திருக்கிறார்.

பி.ஜே.பி.யைப்பற்றி எழுதாமல்ஆர்.எஸ்.எசைப்பற்றி ஏன் எழுதவேண்டும்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது பி.ஜே.பி. - நம்மோடு களத்தில் மல்லுக் கட்டி நிற்பது பி.ஜே.பிஆகவேபி.ஜே.பிஎன்ற அரசியல் கட்சியைப்பற்றி எழுதாமல்அதை அம்பலப்படுத்த முனையாமல்ஆர்.எஸ்.எஸ்.பற்றி எழுதவேண்டிய தேவை என்னஇதை நாம் கூர்ந்து நோக்கவேண்டும்ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிப் படித்த முதல் நூல்  ‘‘ஆர்.எஸ்.எஸ். - ஓர் அபாயம்‘’

40 ஆண்டுகளுக்கு முன்னால்என் நினைவைத் திரும்பிப் பார்க்கிறேன்இதே பெரியார் திடலில், 1980-களில் நான் வாங்கிப் படித்த முதல் நூல் என்று கருது கிறேன், ‘‘ஆர்.எஸ்.எஸ்ஓர் அபாயம்'' என்கிற நூல் - பெரியார் திடலில் வாங்கிய புத்தகம்அப்பொழுது நான் கல்லூரி மாணவன்.

40 ஆண்டுகளுக்குப் பிறகுமீண்டும் இதே பெரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ்.பற்றி ஒரு நூல் எழுதத் தேவை எழுந்துள்ளதுஅதுவும் தமிழர் தலைவர் அவர்களேஅந்த நூலை எழுதவேண்டிய ஒரு தேவை எழுந்துள்ளது.

அந்த நூலை வெளியிட்டுபெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை நான் பெரியார் திடலில் பெற்றிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பும் - 40 ஆண்டுகளுக்குப் பின்பும்!

40 ஆண்டுகளுக்கு முன்பும்ஆர்.எஸ்.எசை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருந்தது - அம்பலப்படுத்தவேண்டிய தேவை இருந்தது.

40 ஆண்டுகளுக்குப் பின்பும் ஆர்.எஸ்.எசை மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி என்பதுஆர்.எஸ்.எஸ்பெற்ற பிள்ளை - ஆர்.எஸ்.எஸ்என்கிற நாற்றங்காலில் வளர்ந்து நிற்கின்ற ஒரு மாமரம் - பெரிய மரம் - நச்சு மரம்.

ஆர்.எஸ்.எசைப் புரிந்துகொண்டால்தான்பி.ஜே.பியைப் புரிந்துகொள்ள முடியும்ஆகவேதான்பெரியார் திடல்திராவிடர் கழகம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்குறித்த விவரங்களைத் திரட்டிஅடுத்தடுத்த தலை முறைக்கு சமர்ப்பித்துக் கொண்டே - ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தக் கூடிய வகையில்தயாநிதி மாறன் அவர்கள் சொன்ன தைப்போலஓர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லுகிற வகையில்பல்வேறு தலைப்புகளின்கீழ்மிக அருமையான ஒரு நூலை நமக்கு அளித்திருக்கிறார்அருளியிருக்கிறார் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

1925 இல் தோன்றிய இரண்டு முக்கிய இயக்கங்கள்!

தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிடுகிறார், 1925 இல் இந்திய சமூகச் சூழலில்இரண்டு முக்கிய இயக்கங்கள் - கருத்தியல் சார்ந்த இயக்கங்கள் தோன்றினஒன்றுஆர்.எஸ்.எஸ்., இன்னொன்று சுயமரியாதை இயக்கம்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில்இந்தத் தமிழ் மண்ணில் தோன்றிய இயக்கம்இரண்டும் நேர் எதிர் துருவங்களில் இயங்கக் கூடிய இயக்கங்கள்.

ஆர்.எஸ்.எஸ்இயக்கம் உருவாகுவதற்கு முன்பேமதம் சார்ந்த அமைப்புகள் பல தோன்றியிருக்கின்றனஆர்.எஸ்.எஸ்தோன்றுவதற்கு அரை நூற்றாண்டு களுக்கு முன்பே ஆரிய சமாஜம் தோன்றியதுதயானந்த சரசுவதி சாமிகள் உருவாக்கிய அமைப்பு.

ஹிந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்கின்ற அடிப்படையில் உருவாக்கிய அந்த அமைப்பு ஹிந்து என்கிற  கருத்தியலை  இங்கே கட்டமைத்த இயக்கம்.

சுவாமி விவேகானந்தரும்கூட ஹிந்து என்று சொல்கிறபொழுதுநமக்குள் ஒரு சக்தி பிறக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்குஅந்த சொல்லாடலை வெகுவாக மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த் தவர்ஹிந்து மகாசபை தோன்றியது.

இப்படி பல இயக்கங்கள் தோன்றினாலும்கூடஅந்த இயக்கங்கள் எல்லாவற்றையும்விடஆர்.எஸ்.எஸ்என்கிற இயக்கம்தான் இன்றைக்கு மிகப்பெரிய அளவிலே பேசு பொருளாக மாறியிருக்கிறது.

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது

ஆர்.எஸ்.எஸ்என்கிற அந்த இயக்கம் - இன்றைக்கு இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அள விற்கு வலிமை பெற்றிருக்கிறதுபி.ஜே.பிஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்றாலும்உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் அமர்ந்திருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக யார் என்று அடையாளப் படுத்தக் கூடிய இடத்தில்பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்கள் இல்லைஆர்.எஸ்.எஸின் முன்னணித் தலைவர்கள்தான் இருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் எந்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவேண்டும் என்று பி.ஜே.பி.யின் தலை வர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதைவிடஆர்.எஸ்எஸ்.சின் தலைவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இயற்றவேண்டும் - அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று பி.ஜே.பிவிரும்பியது என்பதைவிட,

ஆர்.எஸ்.எஸ்விரும்பியது - ஆர்.எஸ்.எஸ்.தான் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பான உண்மை - எதார்த்தமான உண்மை.

ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிற அடிப்படையில்...

ஆகவேதான்தமிழர் தலைவர் அவர்கள் ஆர்.எஸ்எஸைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிற அடிப்படையில்இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்எப்படியெல்லாம் ஹிந்துத் றதுவா கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது - அதனு டைய நோக்கம் என்னஹிந்து ஒற்றுமை என்றால்அதனுடைய நோக்கம் என்ன?

ஹிந்துத்துவா என்ற கோட்பாடு எதை நோக்கியதாக இருக்கிறது?

எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர்

பார்ப்பனர்கள் மூன்றே சதவிகிதம்பேர் என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்அவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள்மிகமிக சிறுபான்மை சமூகத் தைச் சார்ந்தவர்கள்.  எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர்ஆனால்கருத்தியல் அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

கருத்தியல் சார்ந்த பெரும்பான்மையாக அவர்கள் இருக்கிறார்கள்அதற்கான யுக்திகள் - கருத்தியல் சார்ந்த பெரும்பான்மையை கட்டமைப்பதற்கான யுக்திகள்தான் ஆர்.எஸ்.எஸ்கையாளக்கூடிய பல்வேறு வழிமுறைகள்.

அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தற்காலத்து வளர்ச்சிதான் ஹிந்துத்துவா என்ற கருத்தியல் வளர்ச்சிபுதிதாக இன்றைக்கு உருவாக்கியிருக்கிற ஒரு கோட்பாடு.

இவர்கள் எல்லோருக்கும் அடிப்படையான கருத்தியல் என்பது சனாதனம்.

அதனுடைய நேரிடையான பொருள் என்பது - நிலையானது - அழிவில்லாதது என்று பொருள்.

ஆனால்அந்த அழிவில்லாதது என்னவென்றால்நானே படைத்த நால் வருண தருமத்தை என்னாலேயே மாற்ற முடியாது என்பதுதான்.

மாற்ற இயலாதது - அழிக்க முடியாதது - இது இயங்கியலுக்கே முரணானதுஇயங்கியல் போக்குக்கு எதிரானதுஎல்லாம் மாறும் என்பதுதான் இயங்கியல்.

நான்கு வருணம் என்கிற சமூகப் பாகுபாடு மாறாது

ஆனால்மாறவே மாறாது - யாராலும் மாற்றவே முடியாது - சனாதனத்தின் அடிப்படை அதுதான்.

என்ன மாறாது?

பிறப்பின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வு என்கிற இந்த சமூக பாகுபாடு - சமூக வேறுபாடு மாறாது.

நான்கு வருணம் என்கிற இந்த சமூகப் பாகுபாடு மாறாதுநான்கு வருணங்களில் பிராமண வர்ணம் என்கிற அந்தப் பார்ப்பனர்கள்தான் எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் என்கிற இந்த நிலைப்பாடு மாறாது - இந்தக் கருத்தியல் மாறாது.

ஒவ்வொருவருக்குமான வருணதர்மம் என்று சொல்லக்கூடிய வருணம் சார்ந்த தொழில் மாறாது - அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும் - செய்யக் கடமைப்பட்டவர்கள்இறைவன் அப்படி அதை நியமித்திருக்கிறான் - தீர்மானித்திருக்கிறான் - நிர்ணயித் திருக்கிறான்அது மாறாது.

ஆகவேசனாதனம் என்கிற சொல் எவ்வளவு பெரிய கோட்பாட்டை உள்ளடக்கியதாகக் கொண்டிருக்கிறதுஅதை அவர்கள் தங்களுக்கான கருத்தியலாக வளர்த்த காலத்தில்அது  பார்ப்பனியம்.

தங்களுக்கே உரியது என்று அவர்கள்  அதை கையில் எடுத்த காலம் - பார்ப்பனியமாக அதை வளர்த் தெடுத்தது.

ஹிந்து என்கிற சொல்லாடல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது

அது தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில்மேலும் வளர்த்தெடுக்கப்படவேண்டியசெழுமைப்படுத்தவேண்டிய தேவையைப் பெறுகிறது  அப்பொழுதுதான் அது ஹிந்துயிசமாக மாறுகிறது.

ஹிந்து என்கிற சொல்லாடல் அவர்களுக்குத் தேவைப்படுகிறதுபிராமணர்கள் - பிராமணரல்லாத வர்கள் அல்லது பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதவர்கள் என்று ஒரு மிகப்பெரிய இடைவெளி இருந்த சூழலில்பார்ப்பனரல்லாதவர்களை ஹிந்துக்களாக தம்மோடு அரவணைத்துக் கொள்வதன்மூலம்தான்அணிதிரட்டிக் கொள்வதன்மூலம்தான் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்கிற தேவை பார்ப்பனர்களுக்கு எழுகிறது.

அதனால் அவர்கள் திட்டமிட்டு வளர்த்தவளர்த்தெடுத்த செழுமைப்படுத்திய அடுத்த நிலைதான் ஹிந்துயிசம் என்கிற அரசியல்அது ஒரு ஆன்மிகம் அரசியல் சார்ந்ததுகல்ச்சுரல் அன்ட் பிரிச்சுவல் என்ற தளத்திலே மட்டும் ஒருங்கிணைப்பதற்கு மட்டும் பயன்படுத்தியது.

உன் தெய்வமும் ஹிந்து தெய்வம்தான்உன் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரம்தான்உன் வழிபாட்டு முறையும் ஹிந்து வழிபாட்டு முறைதான் என்று கலாச் சார தளத்திலே ஆன்மிக தளத்திலே இணைத்துக் கொள்வதற்கான ஒரு கோட்பாடாக அதை வளர்த் தெடுக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் - அதைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் - அப் பொழுது தான் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

பெருந்தெய்வங்களோடு சிறு தெய்வங்களை இணைத்தது கலாச்சாரத் தளம்.

சிவன் - பெருமாள் அல்லது சிவன் - விஷ்ணு என் கிற பெருந்தெய்வ வழிபாடுகளோடு முருகன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை இணைத்துக் கொண்டார்கள்முனீஸ்வரன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை இணைத்துக் கொண்டார்கள்.

நம்முடைய கலாச்சாரத்தை - நடுகல் வழிபாட்டுக் கலாச்சாரத்தை....

நம்முடைய முன்னோர்களை எண்ணிநாம் நடுகல் நட்டு அவர்களை வழிபடுகிற வழிபாட்டு முறையைக் கையாண்டு வந்த நம்முடைய கலாச்சாரத்தை - நடுகல் வழிபாட்டுக் கலாச்சாரத்தை - அவர்களின் பெருந்தெய்வ வழிபாட்டுக் கலாச்சார முறையோடு இணைத்துக் கொண்டார்கள்.

கலாச்சார தளத்திலேஆன்மிகத் தளத்திலே இணைத்துக் கொண்டார்கள்இணைப்பதற்கு இவர் களும் இடங்கொடுத்தார்கள்இயைந்து போனார்கள்இணங்கிப் போனார்கள்.

இன்றைக்குக் குலதெய்வ வழிபாட்டு முறையே அருகி வருகிறதுமுருகனும் ஹிந்துக் கடவுளாக ஏற்கப் பட்டுவிட்டான்சிவபெருமானுக்குப் பிள்ளையாக அறிவிக்கப்பட்டு விட்டான்.

மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதற்கு...

ஆகவேபெருந்தெய்வ வழிபாட்டு முறையும்சிறுதெய்வ வழிபாட்டு முறையும் அல்லது குலதெய்வ வழிபாட்டு முறையும் இணைக்கப்பட்ட வரையில்அந்தக் கலாச்சார தளத்திலே அல்லது ஆன்மிக தளத்திலே அது ஹிந்துயிசமாக வளர்ந்த நிலையில்தங்களுடைய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதுஅதிகார வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறதுஅரசியல் தளத்திலே ஆளுமை செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்கிற சூழலில்இங்கே ஒரு மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதற்குஅரசியல் தளத்தில் திட்டமிட்டுவளர்த்துக்கொண்ட இன்றைய தத்துவம் தான்இன்றைய கோட்பாடுதான் ஹிந்துத்துவா என்பது.

ஹிந்துத்துவா என்பது மிகமிக அண்மைக்காலத்திலே இவர்கள் வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு கோட்பாடு.

எல்லாம் ஆர்.எஸ்.எஸ்செயல்பாட்டுத் தளத்திலே தீர்மானிக்கப்பட்டவைஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்காக இவர்கள் உருவாக்கிய அமைப்புதான் ஜனசங்கம் என்பது.

ஜனசங்கம்தான்பின்னாளில் பாரதீய ஜனதா கட்சியாக மாறுகிறதுஜனசங்கம் தேர்தலில் நின்ற பொழுதுஇரண்டே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதுஅதன் பிறகு அவர்கள் பாரதீய ஜனதா கட்சி என்று ஓர் அரசியல் பிரிவை உருவாக்கிஹிந்துராஷ்டிம் என்கிற ஒரு புதிய கருத்தை முன்வைத்துஹிந்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்துஹிந்துப் பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில்ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது.

ஹிந்து பெரும்பான்மையை வலிந்து திரட்டுவது...

எனக்கு இஸ்லாமியர்களின் வாக்கு தேவையில்லை என்றுகிறித்துவர்களின் வாக்கு தேவையில்லை என்றுமுஸ்லிம் வெறுப்பையும்கிறித்துவ வெறுப்பையும் - அதற்கான மூலாதாரமாக வைத்துஹிந்து பெரும் பான்மையை வலிந்து திரட்டுவதுஅதற்கு அவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு ஸ்டேட்டஜி.

பாபர் மசூதி இடிப்புக்கு முன் நிகழ்ந்த ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் - வரலாற்று நிகழ்வு அதுமண்டல் பரிந்துரையை வி.பி.சிங் அவர்கள் நடை முறைப்படுத்தியபொழுது பாரதீய ஜனதா கட்சி கையாண்ட யுக்தியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்விவேலை வாய்ப்பு கேள்விக்குறி

ஷெட்யூல்டு காஸ்ட் அண்ட் ஷெட்யூல்டு டிரைப்ஸ் மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்விவேலை வாய்ப்பு கேள்விக்குறியாக மாறுகிறது.

அப்பொழுதே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்இதை முக்கியமான கோரிக்கையாக வைக்கிறார்பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் குறித்து ஒரு கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்றுகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம்தான்ஆனால்அது நடைமுறைக்கு வரவில்லை.

(தொடரும்)