புதன், 2 அக்டோபர், 2019

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 'வாழ்வியல் சிந்தனைகள்'- இரசித்த வரிகள்

'வாழ்வியல் சிந்தனைகள்' பாகம்-3இல் இருந்து இரசித்த வரிகள்
சுகன்யாயோகன்
Team Pratilipi எனும் பெயரில் ‘இன்றைய கதைகள் உங்களுக்காக’ எனும் தலைப்பில் கூகுள் குழுமம் இயங்கி வருகிறது. அதில் வாசகர்கள் பலரும் தங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுகன்யா யோகன் எனும் வாசகர் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள வாழ்வியல் சிந்தனைகள் 3ஆம் பாகத்தில் தான் படித்ததில் ரசித்த வரிகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
மனித வாழ்க்கையில் உடல் ஆனாலும், உடலை இயக்கும் மூளையானாலும் அவைகளும் இயந் திரங்கள் தானே! பழுது, தேய்மானம் அவற்றிற்கும் உண்டு என்பதனை ஏனோ நம்மில் பலர் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.
நீங்கள் சிரிக்கும் போது மட்டுமே உலகம் உங்களுடன் சிரிக்கிறது. நீங்கள் அழும் போது அது உங்களுடன் அழுவதில்லை.
அனுபவம் என்பது நல்ல பள்ளி தான்; ஆனால், அதற்கான கட்டணம் மிக அதிகம்.
புத்திசாலிகள் தம்முடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்; ஆனால், அதி புத்திசாலிகள் பிறருடைய தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
துணிச்சல் பெண்களுக்கு வருவதுதான் உண்மை யான விடியல்.
வாழ்க்கை என்பது கவர்ச்சியோ, உணர்ச்சியின் வடிகாலோ கிடையாது.
ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் உண்டு. இழப்புக்களுக்கு ஈடு செய்யவும் முடியும்.
அடிக்கடி உணர்ச்சி வசப்படாதீர்கள் உணர்ச் சிகளை நீங்கள் ஆளுங்கள்; உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டு விடாதீர்கள்.
நாம் ஒவ்வொருவரும் உலகத்தை மாற்றிவிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒருவரும் அவரை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.
நீங்கள் ஒரு சுதந்திரமற்ற அடிமையாக விரும் பினால், பிறர் மீது மனப்புழுக்கத்தை தேக்கி வையுங்கள்.
புத்தரை ஒருவன் இழிமொழிகளால் வசவுகளால் அர்ச்சித்த போது அவர் சொன்னாராம், "நான் பிச்சை வாங்கும் போது, போடும் உணவை ஏற்காவிட்டால் என்னவாகும்? அது பிச்சையிட முன்வந்தவருக்கே திரும்பும் அல்லவா! அதுபோல இழிமொழிகளை நான் ஏற்காதபோது எனக்கென்ன அதுபற்றிக் கவலை."
10 மணிக்குத்தான் என்னைச் சந்தித்தார். 12 மணிக்கெல்லாம் என்மீது உயிரையே விடுகிறாரே அவர் என்றால் அவன் 1 மணிக்கு உன் உயிரை வாங்கப் போகிறான் என்று பொருள்
ஏமாறுவது பெரும்பாலான 'படித்த பாமரர்கள்' உள்பட பலருக்கும் வழமை! ஏமாற்றுவது இந்த மூட நம்பிக்கை வியாபாரிகளின் முழு உரிமை.
மனைகளுக்கு சுவர் தேவை. மனங்களுக்கு சுவர் தேவையற்றது.
உலகம் முழுவதையும் அசைக்கும் ஆற்றல் உங்கள் உள் மனதில் உள்ளது.
வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருந்ததால்தான் வெற்றி பெற்றோம் என்று எண்ணுவது சரியல்ல.
உழைப்பு உழைக்கும் மக்களின் உடமை அல்லவா?
எதையும் மறைக்க மறைக்க அதனைத் தெரிந்து கொள்ளக் குறுக்கு வழி தேடல்கள் அதிகரிக்கும்.
மூன்றாமவர் கூறியதை முற்றாக உண்மை எனக் கொண்டு வெறுப்பையும், வேதனையையும் வளர்த்துக் கொள்ளாதீர்.
ஒருவர் ஒன்றைச் சொல்லி அதற்கு பொறுப்பு ஏற்கத் தயங்கினால், அவர் கோழை என்றே பொருள். அதற்கு மேல் அவரை நிர்பந்திக்க வேண்டியதில்லை.
வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்து என்பது மூலதனம்.
வளமான பூங்காவை கூட அதில் அமர்ந்து கொண்டே பாலைவனத்துப் பயணம் போல் நினைப் பவர் எவராலும் எதுவும் சாதிக்க முடியாது.
சமுதாயத்தில் வேண்டிய மாற்றங்கள் சீராக நடக்க வேண்டும். அதற்கு வழி வேண்டும். அதை யாராவது தடுத்தால், கைதி வந்த பிறகு உணவை மூடினால் என்ன கதியோ அந்தக் கதிதான் நேரும்.
எவர்க்கும் உதவு முன், அவர்கள் ஏன் நம்மை நாடி வந்தார்கள் என்பதை கொஞ்சம் நின்று நிதானித்து தெளிவு பெற வேண்டும்.
மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு சொல்லாதீர்கள்; உங்கள் பிரச்சினைகளுக்கே உங் களால் எளிதில் விடை காண முடியாத நிலையில் ஏன் இந்த அதிகபிரசங்கத்தனம்?
நிறைவு, செம்மை என்பன பொருளற்ற ஆசையாகும், முழுமைக்கு ஏது எல்லை?
எந்தச் செயலை உங்களுக்கு பிறர் செய்யக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அந்தச் செயலை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாதீர்.
திடீர்கள் வாழ்வில் நீண்ட காலம் நிலைக்காதவை.
நேற்று பற்றி எண்ணும் சுவையும், நாளை பற்றிய பயமும் இன்றைய சுகத்தைச் சுமையாக்கும்.
பிறரது துன்பத்தில் இன்பம் காணும் விசித்திர மனிதர்கள்! பொறாமை புழுக்களாகவே நிரந்தரமாக வாழ்தல்; தனக்குக் கிட்டும் வாய்ப்புக்களைக் கூட மற்றவர் அழிவுக்கே பயன்படுத்தும் இழிந்த மனி தர்கள். இந்த பிறவிகளைப் புரிந்து அடையாளம் கண்டு வாழ்ந்தால் பிறகு வருந்தி அழ வேண்டிய தில்லை எவரும்.

- விடுதலை நாளேடு, 2.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக