அயோத்திதாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அயோத்திதாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தமிழன் - திராவிடன் இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்திதாசர்!

   

அவரின் 175 ஆம் ஆண்டில் மணிமண்டபம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

v3

சென்னை,செப்.3- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருவள்ளுவர்அவ்வையார்கபிலர்வள்ள லார் வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த் தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்தி தாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அறிவிப்பு ஒன்றை, 110 ஆவது விதியின்கீழ் இந்த மாமன்றத்தில் எடுத்து வைப் பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில்இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது.  ஒன்றுதமிழன்இன்னொன்றுதிராவிடம்இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான்அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக் கெடுப்பில் 'பூர்வத் தமிழர்என்று பதியச் சொன் னவர் பண்டிதர் அவர்கள்.  1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் 'திராவிட மகாஜன சபைஎன்பதாகும்.  1907 ஆம்  ஆண்டு 'ஒரு பைசாத் தமிழன்என்ற இதழைத் தொடங்கிஅதையே 'தமிழன்என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர். 'பூர்வீக ஜாதிபேதமற்ற திராவிடர்காள்என்று அழைத்தவர் அவர்அதனால்தான் தமிழன்திராவிடம் ஆகிய இரண்டு சொற்களையும் அறி வாயுதமாக அவர் ஏந்தினார் என்று குறிப்பிட்டேன்அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது.

எழுத்தாளர்ஆய்வாளர்வரலாற்று ஆசிரியர்மானுடவியல் சிந்தனையாளர்பதிப்பாளர்பத்திரி கையாளர்மருத்துவர்பேச்சாளர்மொழியியல் வல்லுநர்பன்மொழிப் புலவர்புதிய கோட் பாட்டாளர்சிறந்த செயல்பாட்டாளர்சளைக்காத போராளி எனப் பன்முக ஆற்றலைக் கொண்ட வர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்அவரது தாத்தா கந்தப்பன் அவர்கள்தன்னிடம் இருந்த திருக்குறள் ஓலைச் சுவடிகளை எல்லீஸ் அவர்களிடம் கொடுத்துதிருக்குறளை அச்சுப் பதிப்பாக கொண்டுவந்ததை நினைக்கும்போதுகுறளுக்கு அவருடைய குடும்பம் ஆற்றிய தொண் டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களே, “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும்சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்என்று குறிப்பிட்டிருக்கிறார்அதனால்அவர் சொன்னதைத்  தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  ‘‘இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு ஜாதியும் மதமுமே தடை'' என்று சொன்ன அயோத்திதாசர், ''மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோஅவர்தான் மனிதர்என்று முழங்கினார்.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய  175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாகவும்அவரது அறிவை வணங்கும் வித மாகவும்வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடு வதில் இந்த அரசு பெருமைப்படுகிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளிஎன்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களு டைய சிந்தனைகளும்இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று சொல்லி அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரை

  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரை

10

சென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழாவில் இன்று (1.12.2023) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாட்டினுடைய அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு நம்முடைய ‘திராவிட மாடல்' அரசு மணிமண்டபம் அமைத்துச் சிறப்புச் செய்கிறது. இது அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

“வான்புகழ் வள்ளுவர்! அறநெறி இலக்கணம் வகுத்த அவ்வை! சமரச நெறி வகுத்த வள்ளலார்! இந்த வரிசை யில், தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையை போற்றும் வகையில், சென்னையில், அவ ருடைய முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று நான் அறிவித்தேன். 

சென்னை கிண்டி காந்தி மண்படம் வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருடைய முழு உருவச் சிலை யுடன் கூடிய மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தோடு 'அறிவொளி இல்லமாக' அமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவுலகப் பேரொளியான அவருடைய மணிமண்ட பத்தை திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

· தமிழ்நாட்டு அரசியலில் தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்! தமிழ் அல்லது திராவிடம் என்பது மொழி மட்டுமல்ல! அதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக பார்த்தவர் அயோத்தி தாசர் அவர்கள்.

· 1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் 'பூர்வத் தமிழர்' என்று பதியச் சொன்னவர் அயோத்திதாசர் அவர்கள்.  

· 1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘திராவிட மகாஜன சபை’! 

· 1907 ஆம் ஆண்டு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி, அதையே ’தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தார்.

· ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமை களையும் மறந்து தமிழர்களாக, ஜாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று இறுதி வரை எழுதியவர், பேசியவர், போராடியவர் அயோத்தி தாசர் அவர்கள்.

· எழுத்தாளர், 

· ஆய்வாளர்,

· வரலாற்று ஆசிரியர்,

· மானுடவியல் சிந்தனையாளர்,

· பதிப்பாளர்,

· பத்திரிகையாளர்,

· மருத்துவர், 

· பேச்சாளர், 

· மொழியியல் வல்லுநர், 

· பன்மொழிப் புலவர், 

· புதிய கோட்பாட்டாளர், 

· சிறந்த செயல்பாட்டாளர், 

· சளைக்காத போராளி- என்று

பன்முக ஆற்றல் கொண்டவராக செயல்பட்ட அயோத்திதாசர் அவர்கள், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர்! இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது.

 “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டி தர்தான்" என்று ‘பகுத்தறிவுப் பகவலன்’ தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். இவருடைய பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் உலக அளவில் வாசகர்கள் உரு வானார்கள்.

“இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜாதியும் மதமுமே தடை” என்று சொன்ன அயோத்திதாசர், “மனிதர்களை, மனிதர்களாக பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்” என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய 175 ஆவது ஆண்டு விழாவின் நினை வாகவும், அவருடைய அறிவை வணங்குகின்ற வித மாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த, “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்" வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுடைய சிந்தனை களும், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத் துக்குப் பயன்படவேண்டும்.

நன்றி, வணக்கம்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

சனி, 2 டிசம்பர், 2023

அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!

பிற இதழிலிருந்து - அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேரொளியாம் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சென்னை கிண்டியில் மணிமண்டபம் அமைத்து அதனைத் திறந்து வைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

•“தமிழ்நாட்டு அரசியலில் - தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சாற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

வள்ளுவர் - அவ்வை - கபிலர் - வள்ளலார் - வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அளவில் சென்னையில் அவரது உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று அறிவித்தார் முதலமைச்சர் அவர்கள். அயோத்திதாசப் பண்டிதர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு அது நேற்றைய தினம் (1.12.2023) முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆரியர் எதிர்ப்பு - பார்ப்பனர் மறுப்பு - ஜாதி பேதம் - பெண்ணுரிமை - தமிழ்ப் பற்று - இடஒதுக்கீடு - பவுத்தம் - தமிழ்ப் பண்பாடு - ஆகியவை குறித்து காலனியாதிக்கக் காலத்திலேயே எழுதியும் - கோரிக்கை வைத்தும் - இதழ் நடத்தியும் போராடி வந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள். அதனால்தான் தனது முன்னோடியாக அயோத்திதாசப் பண்டிதரை தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடியாக இருப்பவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் ஜி.அப்பாத்துரையாரும்தான்” என்று பெங்களூரில் பேசியவர் தந்தை பெரியார். அயோத்திதாசருக்குப் பிறகு ‘தமிழன்’ இதழை நடத்தியவர் தான்அப்பாத்துரையார். அவருக்கும் பெரியாருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது.பெங்களூருக்கு பெரியாரை அழைத்து மாநாடுகளில் பேச வைத்துள்ளார் அப்பாத்துரையார்.

‘தமிழன்’ இதழை 1907 முதல் 1914 வரை நடத்தினார் அயோத்திதாசப் பண்டிதர். அவருக்குப் பிறகு 1926 ஆம் ஆண்டு மீண்டும் அந்த இதழ் வெளியானது. அதனை வரவேற்று தனது ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதி இருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் செய்திகளை அதிகம் வெளியிடும் இதழாக பிற்காலத் ‘தமிழன்’ இதழ் அமைந்தது. எனவே திராவிட இயக்க எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக அயோத்திதாசரைக் குறிப்பிட்டு எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ‘உண்மை’, ‘விடுதலை’ ஆகிய இரண்டு இதழ்களிலும் அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், 1993 ஆம் ஆண்டு ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலை எழுதினார். இதில் அயோத்திதாசர் வரலாறு முழுமையாகச் சொல்லப்பட்டது. பெரியாரிய ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா ஆகிய இருவரும் இணைந்துTowards a non - brahmin millennium : From Iyothee Thase to periyar என்ற நூலை 1998 ஆம் ஆண்டு வெளியிட்டனர். 1999 ஆம் ஆண்டுதான் ஞான.அலாசியஸ் தொகுத்த அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் புத்தகம் வெளியானது. இதன் பிறகு அவர் அதிகம் பேசப்பட்டார்.

அறிவுச்சூழலில் அதிகம் பேசப்படத் தொடங்கிய அயோத்திதாசப் பண்டிதருக்கான அரசு அங்கீகாரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது.

1999 ஆம் ஆண்டு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த தலித் எழில்மலை அவர்கள், தாம்பரத்தில் சித்த மருத்துவ நிலையம் அமைக்க அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் இடம் கேட்டார். ‘நீங்கள் இடம் கொடுத்தால் அயோத்திதாசர் பெயரால் அந்த மருத்துவ நிலையத்தை அமைக்க முடியும்’ என்று அமைச்சர் தலித் எழில்மலை சொன்னார். அந்தப் பெயருக்காகவே இடம் தருவதாகச் சொல்லி 12 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார் முதலமைச்சர் கலைஞர். 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் அதனைத் திறந்து வைத்தார்.

ஒன்றிய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அயோத்திதாசரின் அஞ்சல் தலை வெளியிடும் முயற்சிகளுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்டார். 21.10.2005 அன்று சென்னையில் அயோத்திதாசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடந்தது. தலைவர் கலைஞர் பங்கெடுத்தார்.‘தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி’என்று அயோத்திதாசரை அழைத்தார் கலைஞர்.

2007-2008 நிதி நிலை அறிக்கையில், அயோத்திதாசரின் ‘ஒரு பைசா தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடும் என தி.மு.க. அரசு அறிவித்தது.

அயோத்திதாசப் பண்டிதரால் தொடங்கப்பட்ட ‘ஒரு பைசா தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை தி.மு.க. அரசு 8.7.2008 அன்று சென்னையில் நடத்தியது. மாண்புமிகு அமைச்சர்கள் இனமானப் பேராசிரியர் அன்பழகன், பரிதி இளம்வழுதி, தமிழரசி ஆகியோர் பங்கெடுத்த இந்த விழாவில் - சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான ஆர்.நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்களான யசோதா, ரவிக்குமார் மற்றும் பேராசிரியர் பெரியார் தாசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

2008-2009 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது தி.மு.க. அரசு.

இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயோத்திதாசப் பண்டிதருக்கு சென்னையில் அவர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துள்ளார்.

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாசப் பண்டிதர்குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.

- இப்படி அயோத்திதாசப் பண்டிதரின் புகழைப் பரப்புவதில் திராவிட இயக்கமும், தி.மு.க. அரசும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருந்துள்ளதை திறந்த மனத்தோடு இருப்பவர்கள் நன்கு உணரலாம். தொண்டையில் ‘முள்’ அடைத்திருந்தால் உணர முடியாது.

- நன்றி: 'முரசொலி', தலையங்கம், 2.12.2023


வெள்ளி, 1 டிசம்பர், 2023

திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் முழு உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்


1

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஆ.இராசா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து காண்டனர்.