வியாழன், 24 செப்டம்பர், 2020

சமஸ்கிருதம் ஒரு மொழியா

சமஸ்கிருதம் ஒரு மொழியா
September 5, 2020 • Viduthalai • மற்றவை

சமஸ்கிருதம் ஒரு மொழியா?

- சரவணா ராஜேந்திரன்

சமஸ்கிருதம் என்பது, இந்தோ - யூரோப்பியன் மொழிக் குடும்பத்தில், ஒரு மொழியாகக் கருதப்பட்டு வருகிறது. இதிலிருந்து தான் இந்தி போன்ற பல மொழிகள் தோன்றியதாகப் பல காலமாகச் சொல்லப்படுகிறது. இந்த மொழியைப் பற்றி, பலவிதமான முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. தற்போது சில இந்தோ - யூரோப்பியன் மொழியியலாளர்கள், 'சம்ஸ்கிருதம்' என்று ஒரு மொழியே எக்காலத்திலும் இருந்ததில்லை என்ற ஒரு கருத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் முன்வைக்கும் ஆய்வுக்குறிய கேள்விகள்:

எந்த ஒரு மொழியும் தோன்ற, ஒரு இனம் தேவை. இனமில்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.

எடுத்துக்காட்டாக, ஜப்பானியர்கள், ஜப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள். அதுபோல் தமிழர் தமிழையும் ,செர்மானியர், செர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள். சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?

இரண்டாவதாக, எந்த ஒரு மொழியும், பேசப்பட்டால் தான் மொழியாகும். பேசப்படவில்லையென்றால், அது ‘குறியீடு' (Code) எனப்படும். எந்த இயல்பான மொழியும், பேச்சில் முதலில் தொடங்கி, பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான், எழுத்து வடிவம் பெறமுடியும். பேச்சு நிலையையே தொடாத எந்த ஒரு இயல் மொழியும், எழுத்து வடிவாகி, ஒரு இலக்கியம் ஆக முடியவே முடியாது!

சமஸ்கிருதம் என்ற மொழி, எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை. அப்படி அது பேசப்பட்டிருந்தால் , இப்போது சமஸ்கிருதத்திற்காக உயிரையே விடத் தயாராக இருக்கும் ஒரு சிறு வகுப்பினராவது இன்னும் அதைப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படியும் யாரும் இல்லை.

பார்ப்பனர்கள் இப்போது சமஸ்கிருதம் பேசுவதில்லை. இந்தியாவின் தற்போதைய பார்ப்பன மக்கள் தொகை சுமார் 5% என்று சொல்லப்படுகிறது. இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம்.

இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால், அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால், ஏன் தற்போது 10,000 மக்கள் கூட பேசவில்லை. அவ்வாறு பேசுகிறார்கள் என்று சொல்லப்படும் தரவுகள் கூட, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகப் பேசும் சில முக்கிய புள்ளிகளின் அழுத்தத்தால், ஊடகத்தின் மூலம் வெளிவரும் போலியான தகவல்களே அன்றி, உண்மையில்லை.

சமஸ்கிருதம் பேசப்படும் ஊர் என்று கருத்தப்படும் கர்நாடகாவில் உள்ள மத்தூரில் சாதாரணமாக தெருக்களில், கன்னடமும், துளுவும் தான் பேசிக்கொள்கிறார்கள். வீடுகளில் கன்னடத் தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டு இருக்கிறது, முன்வராண்டாவில் ஆங்கிலம், கன்னட மொழி நாளிதழ், வார, மாத இதழ்கள் தான் தென்படுகின்றன. எங்கும் சமஸ்கிருதம் காணவில்லை.

ஒருவேளை அழிந்து போன பல்லாயிரம் மொழிகள் போல, சமஸ்கிருத மொழி அழிந்து விட்டது என்று சொன்னால், பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும், நேராக அழிவதில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்வோம்.

 முதலில் அதைப் பேசும் மக்கள் அழிய வேண்டும். அப்போது தான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும். அது முதலில் 'அழிவின் விளிம்பு மொழியாக' (Endangered language) மாறி, சில ஆயிரம் மக்கள் பேசும் மொழியாகி, பின்னர் சில 100 மக்கள் பேசும் மொழியாகி, பின்னர் ஒரு குடும்பம் பேசும் மொழியாகி, கடைசியில் ஒருவர் பேசும் மொழியாகி, இறுதியில் முற்றிலும் அழிந்து போகும். எடுத்துக்காட்டாக, பிரேசிலில் 'வாரிக்கென' என்ற மொழி, இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள். இந்த 20 பேரின் காலத்திற்குப் பிறகு, அது அழிந்து போகும்.

சமஸ்கிருதம், இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக, எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை விளிம்பு நிலை மொழிப் பட்டியல் உறுதி செய்கிறது. ஏனென்றால், சமஸ்கிருதம் எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான்.

சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால், அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால், அதைப் பேசியவர்கள் ஒரு போதும் அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை! வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள்.

மூன்றாவதாக, மொழி என்றால் அது 'தாய்' பேசும் மொழியாகக் கட்டாயம் இருக்கவேண்டும்.

அதனால் தான் 'தாய் மொழி' என அழைக்கப்படுகிறது. இந்து மத விதிகளின் படி, 'பெண்கள்', அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் பேச அனுமதி இல்லை. ஆக, சமஸ்கிருதம் 'தாய் மொழி'யாக வாய்ப்பே இல்லை.

எந்த மொழியும், ஆண், பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும்.

ஆனால், சமஸ்கிருதம் பேச பெண்களுக்குத் தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே!

ஆக, பெண்களிடம் பேச முடியாத, பெண்கள் பேச முடியாத ஒரு மொழி, பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி என்பது தெளிவாகிறது. பேசப்படாதது எக்காலத்திலும் மொழி ஆகாது.

ஆனால், எழுதப்படாதது மொழி ஆகலாம். பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும், எழுத்துகள் இன்றி உள்ளன.

இதனடிப்படையில் சமஸ்கிருதம் என்பது ஓர் இயல்பு மொழி அல்ல. அப்படியென்றால் அது தான் என்ன?

 சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு இரகசியக் குறியீடு (Code) மொழி தான். ஜாவா, கோபால் போன்ற, கணினி குறியீடு மொழி போல! அது பேசும்மொழி அல்ல. குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசியக் குறியீட்டு மொழி ஆகும். அந்த குறியீட்டு மொழியில் பல இலக்கியங்களையும், படைப்புகளையும், தகவல்களையும் ஒரு சாராருக்கு மட்டும் புரியும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அடுத்தது பேசப்படாத ஒரு மொழி, பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை! ஏனென்றால், பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான்.

பேசப்படாத ஒரு மொழி, சொற்களைப் பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி! முடியாது என்பது தெளிவு! பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும், பேச்சு வழியாகத் தோன்றிய சொற்கள் தான், பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை.

சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல், சமஸ்கிருதச் சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது! சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல், சமஸ்கிருதச் சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள் தான் உருவாக்கியிருக்க முடியும் என்பது தெளிவு. தமிழ், இந்திய தீபகற்பத்தில் முதன்மை மற்றும் பரவலாக பேசும் பழமை வாய்ந்த மொழி ஆகும், இதற்குச் சான்றுகள் கூறத்தேவையில்லை. அனைத்தும் பொதுவெளியில் உள்ளது. இதனடிப்படையில், சமஸ்கிருதச் சொற்களை அப்போது இங்கே வந்த ஆரியர்கள் தமிழில் இருந்து உருவாக்கியிருக்கக் கூடும்.

மேற்கூறிய காரணங்களால், சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது!

இந்தோ - யூரோப்பியன் மொழியியலாளர்கள் இந்தக் கருத்துகளை ஹார்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்குச் சமர்ப்பிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

இங்கு ஒரு பெரிய கேள்வி எழும்! அது என்னவென்றால், பவுத்தம் மற்றும் சமண மத நூல்கள் பல சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளதே? உண்மையில், பவுத்த, சமண மதங்கள் தோற்றுவிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் வரை, அது பாலி போன்ற தொன்மை மொழி மற்றும் கடி(கரி)போலி, மகதம் போன்ற பேச்சு மொழிகளில் தான் கருத்துகள் எழுதப்பட்டு, பரப்பி வந்தது. பவுத்த மதத்துறவிகள் பெரும்பாலானோர், சமஸ்கிருதத்தை முழுமையாக பவுத்த நூல்கள் எழுதப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. நாலந்தா மற்றும் தட்சசீல பல்கலைக்கழகங்களில், பெரும்பாலும் பாலிமொழி நூல்கள்தான் அதிகம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால், பவுத்த நூல்களை சமஸ்கிருத மொழிக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட காலம் கி.பி. 150 ஆகும் இதை துவக்கி வைத்தவர் நாகர்ஜுனா என்ற பார்ப்பனர்.நாகர்ஜுனா, பவுத்தத்தை ஏற்பது போல் ஏற்றுக்கொண்டு, அதைச் சனாதன விதிகளுக்குள் கொண்டு வந்து சிலை வழிபாடு, பூஜை வசூல் போன்றவற்றைக் கட்டி எழுப்பி, பவுத்தைதைச் சிதைத்தது மட்டுமல்லாமல், அதுவரை பாலி மொழியில் எழுதப்பட்டு வந்த பவுத்த நூல்களை, சங்கேத வார்த்தைகளாக சமஸ்கிருதத்தில் எழுதத் துவங்கினார், இது குறித்து அவரது சுயசரிதையிலேயே உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பாலி அல்லது பௌத்த கலப்பு சமஸ்கிருதம் உபயோகிக்காமல், தூய சமஸ்கிருதத்தை தமது நூல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவரது காலத்திற்குப் பிறகுதான், இந்தியாவில் பவுத்தம் அழியத் துவங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும், பவுத்தம் அதிகம் எழுதப்பட்ட பாலிமொழி, இன்று வங்கம் மற்றும் பர்மியம், தாய்லாந்து மொழியாக இன்று உருபெற்று விளங்குகிறது!

ஆனால் சமஸ்கிருதம், என்ன ஆயிற்று? சொல்லித் தெரியவேண்டியதில்லை.


அறிவு நாணயமற்ற "துக்ளக்"கே!


September 22, 2020 • Viduthalai • மற்றவை

இன்று வெளிவந்துள்ள (30.9.2020) 'துக்ளக்' கார்ட்டூன் இது.

'தமிழ் இந்து ஏட்டில் (12.9.2020) திராவிடர் கழகத் தலைவர் இப்படி சொன்னதாக வாசகர்கள் எழுதும் 'பஞ்ச்' டைலாக் என்ற பெயரில் வெளிவந்தது. இதுகுறித்து 'தமிழ் இந்து' ஏட்டின் ஆசிரியரைத் தொடர்புகொண்டபோது, அறிவு நாணயத்துடன் 'தவறுக்கு வருந்துகிறோம்' என்று எல்லோர் கண்களிலும் படுவதுபோன்று வெளிவந்துள்ளது. அந்தச் செய்தியை 'விடுதலை' முதல் பக்கத்தில் வெளியிட்டது. இவ்வளவுக்குப் பிறகும், இப்படி 'துக்ளக்' கார்ட்டூன் போடுகிறதென்றால் இந்தப் பித்தலாட்டத்துக்குப் பெயர்தான் துக்ளக். 'கண்ணாடி மான்யப் பரம்பரை' அல்லவா? எதற்குத்தான் வெட்கப்படப் போகிறது.


விவேகானந்தர்

ஒற்றைப் பத்தி: விவேகானந்தர்
September 23, 2020 • Viduthalai • மற்றவை


‘‘வீரத்துறவி விவேகானந்தர், விவேகானந்தர்'' என்று நீட்டி முழக்குகிறீர்களே- ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பி.ஜே.பி.யின ரும்- கல்விக் கூடங்களுக்கெல் லாம் ‘விவேகானந்தர் ரதம்' என்ற பெயரால் மாணவர்களிடத்தில் விவேகானந்தரைக் கொண்டு சேர்க்கிறார்களே - அவரின் மற் றொரு பக்கத்தைப் பார்க்கத் தவறுவது ஏன்?

அமெரிக்காவில் சென்று அவர் உரையாற்றியதுகூட ஹிந்து மதத்தைப் பற்றியல்ல - பிராமண மதத்தைப்பற்றிதான் பேசினார்.

இன்றைக்கு இட ஒதுக்கீட் டுக்கு எதிராகவும், கல்வி குறித் தும் ‘சங்கிகள்' பேசுகிறார்களே, அதுபற்றியும் அவர் கூறுவது என்ன?

இதோ:

  1. ‘‘ஏ, பிராமணர்களே, பிரா மணர்களுக்குக் கீழ் ஜாதியின ரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறதென்றால், பிரா மணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர் கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காக செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்குக் கொடுங் கள். ஏனெனில், அவர்களுக்குத் தான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என் றால், எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவியிலேயே அறி வாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும், ஆசிரியர் களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும். (நூல்: கொழும்பு முதல் அல்மோரா வரை பக்கம் 139, 140).
  2. 1901 மார்ச் 31 ஆம் நாள் டாக்காவில் பகோஜ் பள்ளியின் திறந்த வெளி மைதானத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை யிலிருந்து....

பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை: உங்கள் குலப்பெரு மையும், பாரம்பரியப் பெருமித மும் வீணே, அதை விட்டொழி யுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி பார்த்தால் இப்போது உங்களிடம் பிராமணத்துவம் இல்லை. ஏனெ னில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள், உங்கள் முன்னோ ரின் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையிருக்குமானால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட் டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள்.

குமாரில பட்டர் பவுத்தர் களை ஒழிக்க விரும்பி முதலில் பவுத்தர் ஆனார். பின்னர் பலரை வாதத்தில் வென்றார். பலரது மரணத்திற்குக் காரணமானார். தமது பாவங் களைக் கழுவுவதற் காக தூஷாக் கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அவரைப் போன்ற நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லா விடில் உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள். எல்லோ ருக்கும் உத விக்கரம் நீட்டுங்கள். அறிவின் கதவை திறவுங்கள். தளர்த்தப் பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகை களையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்.''

இந்த விவேகானந்தரை அறிவீர்களா?

 - மயிலாடன்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பெரியாரை பற்றி தெரியாத தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.

பெரியாரை பற்றி தெரியாத தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______

பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த மக்களுக்கு, 

நன்றாகக் கேளுங்கள்  கல்வி மறுக்கப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம். 

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த  தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்வோம் ...

அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார். மக்களின்  சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார்.

நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்கள், உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது 
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்? என்று கேட்டார். 
___

"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால்..

இதற்கு... இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம்? என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது - என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!
____

பெரியார் என்னும் சகாப்தம்

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். 

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 
____

நான் சொல்வதை கேட்டால் தான் 
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம் 
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக  எவானவது  உண்டா?
____

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு 

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...

1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் மாற்றியது யார்? 
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி தலைமையா?

பதில் சொல்லுங்கள்!

#பகிருங்கள்

Arivalan Arivu
Mohamed Nazim