வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பெண்ணே! பெண்ணே! பெரியாரை எண்ணி பெருமிதப்படு!

-- ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியாரின் மானுடப் பற்று மகத்தான சாதனை செய்த மறக்க முடியாத சமூக விஞ் ஞானம்! தன் காலத்திலேயே தாங்கொணா எதிர்பபையும் சந்தித்து , அந்த எதிர்ப்பே பிறகு அவரது கொள்கைப் பயிருக்கு நல்ல உரமாகி , விளைச்சல் வெற்றித் தந்ததைக் கண்டு களித்த வரலாறு அவருக்கே உண்டு . 

மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்கள் - இந்திய நாட்டில் படையெடுத்து மூளைக்குப்  போடப்பட்ட அடிமை விலங்கு காரணமாக அவர்களது சுதந்திரம் பறிக்கப்பட்டு - அடிமை வாழ்வு வாழ வேண்டியது ஆண்டவன் கட்டளையாகவும் , சனாதனத்தின் சங்கிலியாகவும் பிணைக்கப்பட்டது . 

' நாஸ்தீரி ஸ்வாதந்தர்யம் அர்ஹதி " ( பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கலாகாது)
 " ஸ்தீரியோ ஹீமூலதோஷனாம் ( பெண்தான் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம்) 
"பால்யே பிதிர்வ ஸே விஷ்டேது பாணிக் கிரஹா யௌவ்வளே புத்தரானாம் பர்த்தரீ ப்ரேது நப ஜேத் ஸ்தீரி ஸ்வதந்தரதாம் ' பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதைக் கேள்.
வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள் " 

ஸ்தீரினாந்த சூத்ர ஜாதினாம் " ( பெண்கள் அனைவருமே சூத்ர ஜாதி)
" நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம் ' 
( அதனால் பெண்களும் , சூத்திரர்களும் வேதம் படிக்கக் கூடாது ; வேதம் ஓதுவதைக் கேட்கக் கூடாது)
" ஸ்த்ரீதாம் உபநயனஸ்தானே விவாஹம் மனு ரப்ரவீத் அதாவது , பெண்களுக்கு உபநயனம் கிடையாது - எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது பெண்களுக்கு பூணூல் கல்யாணம் கூடாது - கிடையாது . 
" சிதாவாரோஹணம் பிரம்மச்சரீயம் " ( கணவனை இழந்த பெண் என்றால் அவளை
அவனது சிதையிலேயே தீ வைத்து தீர்த்துக்கட்டு! . 

இப்படியெல்லாம் ஆதிகாலத்து சனாதன தர்மம் இருந்தது- பெண்ணடிமை என்பது உயிர்க்கொலையில்கூட முடிந்துள்ளது . பிறப்பு முதல் இறப்பு வரை அடிமைகளாகவே இருக்கப் படைக்கப்பட்டவர்கள் . இவற்றில் பெரும்பாலான கொடுமைகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆட்சி- அதனையொட்டிய காலனிய ஆட்சிகளில் பல சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டன . 

பெண்களின் விடுதலைக்கு மிக முக்கியத் தேவை அவர்களுக்குப் படிப்புரிமையும் , சொத்துரிமையும் என்றார் தந்தை பெரியார் . குழந்தைத் திருமணம் , அதனால் விளைந்த ' பால்ய விதவைக் கொடுமைகள் ' மலிந்திருந்தன . மனிதநேயத்தோடு , அதனை உடைக்க முன்வந்தார் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பே! 

அதனை தனது வீட்டில் - குடும்பத்திலிருந்தே துவக்கினார் - தனது தங்கை மகளின் பால்ய விதவைத்தனத்தை எதிர்த்து , மறுமணம் முடித்து , ' புரட்சி ' செய்து , அதனால் , தன்னுடைய புயலைப் பொருட் குடும்பத்திலும் , ஊரிலும், ஜாதியிலும் எழுந்த புயலை பொருட்படுத்தாது, இலட்சிய பயணத்தை தொடர்ந்த ஒரு மனிதாபிமானி!

- விடுதலை, தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
( கட்டுரையின் ஒரு பகுதி)

சனி, 21 டிசம்பர், 2019

வன்புணர்ச்சியை (Rape) சமஸ்கிருத சுலோகங்கள் தடுக்குமாம்!

‘‘ஊசி மிளகாய்’’

நமது நாட்டில் மத்தியில் ஏற்பட்ட காவி ஆட்சியில் கவர்னர்களாக நியமிக் கப்பட்ட பலரும் "அதி மேதாவிகளான நவீன பிரகஸ்பதிகள்!"

என்ன அற்புதமான யோசனைகளை இலவசமாகவே அள்ளி விடுகின்றனர்!

நோபல் பரிசுக் குழுவினர் ஏனோ இன்னமும் இத்தகைய மஹா, மஹா "அறிவியல் அற்புதானந்தாக்களை"க் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்! வருத்தமாக இருக்கிறது!

நாட்டில் நடைபெறும் 'ரேப்' எனப்படும் வன்புணர்ச்சிகள் (Rape) - பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மராத்திய கவர்னர் 'பக்தசிங் கோஷியாரி' என்ற உலக மகா அறிவாளி ஒரு அரிய யோசனையை தள்ளினார்.

சமஸ்கிருத சுலோகங்கள் 'ரேப்'பை, வன்புணர்ச்சியைத் தடுக்கும். எனவே மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்தால் இவைகளை நடக்காமல் தடுத்து விடலாமாம்!

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் 20.12.2019 அன்று இப்படி ஒரு செய்தி!

எப்படி வாயால் சிரிப்பது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? பாவம்.

பா.ஜ.க. ஆட்சியில் எப்படிப்பட்ட "கான்சிஸ்டியூஷனல் எக்ஸ்பர்ட்டுகள்" கவர்னர்களாக நியமனம் ஆகி இருக் கிறார்கள் பார்த்தீர்களா?

அதிகாலை எழுந்து கட்சி மாறிய வர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து, 72 மணி நேரத்திற்குப் பின் ராஜினாமா வாங்கி, அடுத்தவருக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யத் தயாரான அரசியல்சட்டப் பாதுகாவலர் இவர்!

இவர் ஒரு நிகழ்ச்சியில், ஜம்னா லால் பஜாஜ் நிறுவன விழாவில் மேற் கண்டவாறு திருவாய் மலர்ந்துள்ளார்!

ஹிந்துத்துவாவில் மூழ்கித் திளைத்த ஒரு தகுதியாலேயே  - இவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்!

அதனால் இப்படி தங்களிடம் உள்ள 'சரக்கை' வெளியே அவிழ்த்துக்  கொட்டுகிறார்கள்!

"என்ன விநோதம் பாரு

எவ்வளவு ஜோக்குப் பாரு பாரு!"

என்று பாடுங்கள்!

இந்தயோசனையை முன்பே தந்திருந்தால் "பொள்ளாச்சி" நிகழ்வு களைத் தடுத்திருக்கலாமோ!

தேவபாஷை சமஸ்கிருதம் - தேவர் களுக்குத் தலைவர் புராணப்படி தேவேந்திரன் -

அந்த இந்திரன் அகலிகையை "கற்பழித்தானே" அப்போது சமஸ்கிருத சுலோகங்கள் ஏதும் கிடைக்காததால் தானோ? அட சாம்பிராணிகளா?

சிவபெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் நெருங்கியபோது சமஸ்கிருத சுலோகங்களை  அவர்கள் ஓதப்பட வாய்ப்பில்லாததால்தானோ அந்த அசம்பாவிதங்கள் நடந்தனவோ - நமக்குப் புரியவில்லை.

மராத்திய கவர்னர் பெருமான் தான் விளக்க வேண்டும்.

அவருக்குத் தெரிந்திருக்காத ஒரு தகவலை நாம் தெரிவித்து சந்தேகம் கேட்கத் தோன்றுகிறது?

காஞ்சிபுரத்தில் ஓர் அர்ச்சகன் சமஸ்கிருத சுலோகங்களைத்தான் தினமும் கடவுள் பிரார்த்தனையின்போது கூறி அர்ச்சனை செய்பவன், கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே எத்தனைக் குடும்பப் பெண்களிடம் முறையற்ற (வன்புணர்ச்சி) செய்கையில் ஈடுபட்ட கதை சிரிப்பாய் சிரிக்கிறது.

சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் பத்ரிநாத்தையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.

சமஸ்கிருத சுலோகங்கள் ஏன் இவர்களை தடுக்கவில்லை?

இதுதான் யாருக்கும் புரியாத 'தேவரகசியம்' போலும்!

பல கோடி மக்களால் பேசப்படும்(?) எழுதப்படும்(?) நம் தேவபாஷைக்கு 'ஜே ஜே!' .

இவரையே அடுத்து துணை ஜனாதி பதி - ஜனாதிபதியாகவும் ஆக்கினாலும் ஆக்குவார்கள் - யார் கண்டது?

- விடுதலை நாளேடு 21 12 19