தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்
நீதிக்கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிக்கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 நவம்பர், 2024

‘நீதிக்கட்சி’ பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!

 ஆசிரியர் அறிக்கை

விடுதலை நாளேடு
Published November 20, 2024

இன்று நீதிக்கட்சி பிறந்த நாள் (1916)

வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாக இருந்து தங்கள் பதவி வாய்ப்புகளை வரித்துக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்!
‘எல்லாம் பார்ப்பன மயம்’ என்ற நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கப் பிறந்ததே நீதிக்கட்சி!
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள் அறிக்கை

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட இந்நாளில், அது பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில், நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, மண்டபத்திற்கு ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டவேண்டும் என்று நீதிக் கட்சியின் நீட்சியான ‘திராவிட மாடல்‘ ஆட்சி நடத்தும் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘நீதிக்கட்சி’ என்று எளிய மக்களால், வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் (South Indian Liberal Federation) என்ற அமைப்பு பிறந்த நாள் இன்று (20.11.1916).
பார்ப்பனரல்லாதார் இயக்கம் – The Non-Brahmin Movement என்று பரவலாக அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதுமான சமூகநீதிக்கான இயக்கம் அது.

ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்!
பஞ்சம, சூத்திர, கீழ்ஜாதிகள் என்று ஆரிய வருண தர்மத்தால் பிரிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்புகள், சொத்துரிமை, திருமண உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நாட்டின் பெரும்பாலான மக்களாகிய ஒடுக்கப்பட்ட, பழங்குடியினர், ஆதிதிரா விடர்கள், திராவிடர்கள் உள்பட அனைவருக்கும் சமத்து வமும், சம உரிமையும் கோரியே, நீதி கேட்டுப் பிறந்த இயக்கத்தின் தொடக்க நாள் இன்று!
இந்த நாட்டில் வணிகத்திற்காக வந்த பிரிட்டீஷ்கா ரர்களின் கம்பெனி (கிழக்கிந்திய கம்பெனி) நாளடைவில் அதன் ஆதிக்கக் கரங்களை நீட்டி, அதிகாரத்துவம் பெற்று, பிறகு அது பிரிட்டீஷ் சாம்ராஜ்ய காலனியாதிக்கத்திற்கு உட்படுத்திய ஒன்றாக ஆகியது!
பிரிட்டீஷ் ஆட்சிக்கு ராஜவிசுவாச தீர்மானங்களை நிறைவேற்றி பலன் பெற்றவர்கள் பார்ப்பனர்களே!
வேத, மனு தர்மத்தையும் வைத்து, கல்வியை ஏகபோகத்திற்குக் கொண்ட மேல் வருண பார்ப்பனர்கள், ஆங்கிலத்தை முதலில் படித்து, பிரிட்டீஷ்காரர்களிடம் ராஜ விசுவாசம் பொங்க, ராஜபக்தியைக் காட்டி, அவர்களுக்குத் தேவையான உதவியாளர்களாக, அரசு ஊழியர்களாக அவர்களை நெருங்கி, அதிகாரத்தினைக் கைப்பற்றினர்.

அந்த நாளில், காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பினை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்கார அய்.சி.எஸ். ஓய்வு பெற்ற அதிகாரியை ஆதரித்து, ஆரிய பார்ப்பனர் ‘ததாஸ்து’ பாடி ஒவ்வொரு ஆண்டும் அந்த அரசியல் அமைப்பின் மாநாட்டிலும் வெள்ளை அரசுக்கு ராஜ விசுவாச தீர்மானம், மன்னர் வாழ்த்து, வெள்ளையர்களை மாநாட்டுத் தலைமை ஏற்கச் செய்வது, பிரிட்டீஷ் அரசு மஹாவிஷ்ணுவால் அனுப்பப்பட்ட அவதாரம் என்றெல்லாம் பலபடப் புகழ்ந்து தங்களது செல்வாக்கினை உயர்த்திக் கொண்டனர். சுயநலத்தைப் பெருக்கிக் கொண்டனர்.
அடுத்தகட்டமாக, வெள்ளையர்களுக்கே முக்கிய அய்.சி.எஸ்., அய்க்கோர்ட் ஜட்ஜ் என்ற பெரும் பதவிகள் சென்றதைக் கண்டு, அதில் தாங்களும் பங்குபெற வேண்டும் என்றே, தேசியப் போர்வையில் இந்தியர்களுக்கும் பங்கு வேண்டும் அதிகார வர்க்கத்தில் என்று வெள்ளையர்களைக் கேட்டு, ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டதால், அவர்கள் தங்களது ஏகபோகத்தை நிலை நிறுத்த சில முக்கிய பதவிகள் ‘முதல் இந்தியர்’ என்ற பெயரில் பார்ப்பனருக்கே தரப்பட்ட நிலை தொடர்ந்ததைக் கண்டு குமுறி எழுந்ததுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

பெரும்பான்மையான மக்களின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும்
குரல் கொடுத்த இயக்கமே நீதிக்கட்சி!
அனைவருக்கும் பரவலாக கல்வி, அரசுப் பணி பகிர்ந்தளிக்கவே போராடப் பிறந்ததே இந்தப் பார்ப்பன ரல்லாதார் இயக்கம்.
பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சமத்துவ, சம வாய்ப்புக்காகவே விழிப்புணர்வை ஏற்படுத்த முன்னோட்ட முயற்சியை டாக்டர் சி.நடேசனார், சென்னை திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் மூலம், கல்வி உதவிகள்மூலம் கால்கோள் இட்டார்.
அதன்பிறகு 1916 பார்ப்பனரல்லாதார் சமூக நிலையைப் படம் பிடித்துப் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை – Non Brahmin Manifesto சர்.பி.டி. தியாகராயர், டி.எம்.நாயர், பனகால் அரசர் போன்ற பெருமக்கள் வெளியிட்டு, அதன் பின்னரே நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கம் பிறந்தது!
தங்களிடம் பங்கு கேட்க வந்துவிட்டார்களே என்று ஆத்திரத்தால் பொங்கிய ஆரியம், இதனை ‘வகுப்புவாத இயக்கம்’ என்று வர்ணித்து, விஷமப் பிரச்சாரம் செய்தது!
ஊடகங்கள், செய்தித்தாள்கள் எல்லாம் ‘பார்ப்பனர் வசம்’ என்பதால், அது அவர்களுக்கு எளிதாகிவிட்டது!
அதை பார்ப்பனரல்லாதார் உடனடியாக ‘கபக்’ என்று பற்றிக் கொண்டதால், 1920 இல் நடைபெற்ற (குறைந்த அதிகாரம் உடைய நிலையில்) நீதிக்கட்சி சென்னை ராஜதானி ஆட்சியை தங்கள் வசமாகும் அளவுக்கு மக்களது பேராதரவினைப் பெற்று, அதன் முதல் தேர்தலிலேயே முத்திரைப் பதித்தது!

நீதிக்கட்சி பதவி வேட்டைக் கட்சியல்ல!
அந்த இயக்கத்தைத் தான் வெறும் பதவி வேட்டை இயக்கம், உத்தியோகத்திற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு வால் பிடித்த இயக்கம் என்று அவதூறு மழை பொழிந்தது ஆரியம்!
அவற்றையெல்லாம் தாண்டி, நெருப்பாற்றில் நீந்திதான் – வெற்றியடைந்து திராவிடர் ஆட்சி – சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்கும் ஆட்சியாக – இன்றும் எட்டுத் திசையும் எழிலார்ந்த பெருமை கொள்ளும் இயக்கமாய் பெரும் ஆலமரமாகி, அதன் பலமான தந்தை பெரியார் என்ற வேருடன் விழுதுகளும் பரவலாகி தழைத்தோங்கி வளர்ந்துள்ளது!

தி.மு.க. ஆட்சி என்பது நீதிக்கட்சியின் நீட்சியே!
1967 இல் அண்ணா, ‘‘எனது ஆட்சி – நீதிக்கட்சிகளின் பேரன்கள் ஆட்சி’’ என்றார்!
இன்று, அது பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப் பேரன்கள் ஆட்சியில்– திராவிடத்தின் மீட்சியில் ஓங்குபுகழ் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், அண்ணா, கலைஞர் ஆட்சிகளுக்குப் பிறகு, சாதனை சரித்திரத்துடன் உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஆயிரங்காலத்துப் பயிர்களாகி, அடலேறுகளின் துணைகொண்டு தகைமையோடு தலைநிமிர்ந்து ஆட்சி புரிகிறது!
109 ஆம் ஆண்டில் முதுமை இல்லை – இளமையும், முதிர்ச்சியே எங்கும்– என்றும்!
நமது ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் நாயகருக்கு – முதலமைச்சருக்கு நமது முக்கிய வேண்டுகோள் ஒன்று.

முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்!
சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள முந்தைய வி.பி.ஹால் என்ற விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற பாரம்பரிய வரலாறு படைத்த அந்தப் பழைய கட்டடத்தினை பழுது பார்த்து, அப்படியே அதன் பூர்வ மரபு உரிமையோடு இன்று நமது தி.மு.க. ஆட்சி மாநகராட்சி சீரமைப்பு செய்து வருகிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் திறப்பு விழா நடைபெறவிருக்கும் அக்கட்டடத்தில்தான் சமூகநீதிப் பிரகடனங்கள் – நிகழ்வுகள், மொழி உரிமைக் குரல் எல்லாம் நடந்தேறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது!
எனவே, ‘சமூகநீதி மாளிகை’ என்ற புதிய பெயரை இணைத்து, அந்த அரங்கிற்கு சூட்டுவதோடு, அந்தத் தலைவர்களின் சிலைகளையும் நிறுவுவது மிகவும் பொருத்தமாகும்!
திராவிட உணர்வாளர்கள், சமூகநீதி யாளர்கள் சார்பில் இதை ஓர் அன்பு வேண்டுகோளாக மாண்பமை மானமிகு முதலமைச்சருக்கு நாம் சமர்ப்பிக்கின்றோம் – செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு!
‘அனைவருக்கும் அனைத்தும்’ – ‘அனைத்தும் அனைவருக்குமான’ சமூகநீதி ஆட்சி வெல்க!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
20.11.2024 


இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:46 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, நீதிக்கட்சி

வியாழன், 22 டிசம்பர், 2022

எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கம்


சென்னை பெரியார் திடலில் உள்ள 
  December 21, 2022 • Viduthalai

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், நேற்று (21.12.2022) சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கத்தில், பங்கேற்ற பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் - அவரது வாழ்விணையர்  மேனாள் துணைவேந்தர் யசோதா ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்,  பேராசிரியர் மு.நாகநாதன், பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ரா.சரவணன், பேராசிரியர் அ.கருணானந்தன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் 

(சென்னை, பெரியார் திடல், 20.12.2022).


இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:09 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கருத்தரங்கம், நீதிக்கட்சி

திங்கள், 21 டிசம்பர், 2020

திராவிடம் வெல்கவே! நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....


December 17, 2020 • Viduthalai

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நீதிக்கட்சித் தலைவர்களின் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் தோழர்கள் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 17.12.2020).

இந்நாள் தமிழ்நாட்டு வரலாற்றில், குறிப்பாக பார்ப் பனர்கள் அல்லாத ‘சூத்திரர்' ‘பஞ்சமர்' என்று ஆக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் - ஆட்சி ரீதியாக திருப்பம் ஏற்பட்ட வைரக் கல்வெட்டு நாள்.

ஆம்! இந்நாள்தான் (17.12.1920) நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், சென்னை மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கடலூர் ஏ.சுப்பராயலு (ரெட்டியார்) தலைமையில் மூவர் கொண்ட அமைச்சரவை பதவி யேற்ற நாள்! (மற்ற இரு அமைச்சர்கள் பனகல் அரசர், கே.வி.ரெட்டி).

இந்த டிசம்பர் 20 இல்தான் (1916) வெள்ளுடை வேந்தர்  பிட்டி தியாகராயரால் நீதிக்கட்சி சார்பில் ‘‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை'' (The Non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.

ஒரு நூறாண்டுக்கு முன் பார்ப்பனர் அல்லாத திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி ஆட்சி 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் செய்த சாதனைகள் அனைத்தும் இன்று நம் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கும், வாய்ப்புகளுக்கும், வளமைகளுக்கும் போடப்பட்ட மிகப் பலமான அடிக்கற்கள் ஆகும்.

அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே சட்ட ரீதியாக இந்திய அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் இன்று தமிழ்நாட்டு மக்கள் 69 விழுக்காடு அளவில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பயன் பெறுகிறார்கள் என்றால், அதற்கான தொடக்கத்தைக் கொடுத்த அந்தத் தூயதான நல்லாட்சிக்கு நன்றி உணர்வுடன் இந்நாளில் நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்!

எத்தனை எத்தனை மகத்தான சாதனைகள் அவை. இப்பொழுது நினைத்தால்கூட மயிர்க்கூச்செரிகிறது.

‘‘ஜனநாயகக் குழந்தை தவழ்ந்து விளையாடும் தொட்டில்'' என்று போற்றப்படும் இங்கிலாந்தில்கூட முழுமையான வடிவத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை 1928 இல் தான் கொண்டுவரப்பட்டது - தொடர் போராட் டங்களுக்குப் பிறகு.

ஆனால், நீதிக்கட்சி நிர்வாகம் செய்த சென்னை மாநிலத்தில் 1921 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசு ஆணை எண்: 108, நாள்: 10.5.1921).

எடுத்துக்காட்டாக நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய ஆணைகளும், சட்டங்களும் இதோ:

* முதல் வகுப்புரிமை ஆணை (M.R.O. Public Ordinary Service G.O. No.613, Dated: 16.9.1921).

* பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. (M.R.O. Public Ordinary Service G.O. No.658, Dated: 15.8.1922).

* ‘‘பஞ்சமர்'' என்ற சொல் நீக்கப் பெற்று, ‘‘ஆதிதிராவிடர்'' என அழைக்கப்படவேண்டும். (அரசாணை எண்: 817 நாள்: 25.3.1922).

* கல்லூரிகளில் முதல்வர்கள் பார்ப்பனர்களாக இருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் கல்லூரிகளில் சேர முட்டுக்கட்டை நிலவிய சூழலில், ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் குழுக்கள் (Selection Board) அமைக்கப் பட்டது. (அரசாணை எண்: 536 நாள்: 20.5.1922).

* கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கென்றே தனி ஆணை (அரசாணை எண்: 849 நாள்: 21.6.1923).

* சென்னை பல்கலைக் கழக செனட்டின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும், பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்யும் ஆணை (பல்கலைக் கழக சட்டம் ஆணை 1923).

* பொதுக் கிணறு, குளம், சாலைகளில் தாழ்த்தப் பட்டோர் புழங்கும் உரிமை (தீர்மானம் முன்மொழிவு: இரட்டைமலை சீனிவாசன் - கெசட்டில் வெளியீடு 24.2.1925).

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்கப்பட வேண்டும். (அரசாணை எண்: (அ) 205 நாள்: 11.2.1924, (ஆ) 825 நாள்: 24.9.1924). தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காகவே தனியே லேபர் துறை.

* இந்து சமய அறநிலைய சட்டம் (அரசாணை எண்: 29 நாள்: 27.1.1925).

* சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை சேர்ப்பதற்கென்றே ஓர் ஆணை (எண்: (அ) 636 நாள்: 2.5.1922 (ஆ) 1880 நாள்: 15.9.1928).

* ஆங்கிலேயர் எதிர்ப்புக்கிடையே மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கியது பனகல் அரசர் தலைமையிலான அமைச்சரவை.

* மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் தேவை என்ற நிபந்தனையை நீக்கியதும் பனகல் அமைச்சரவையே.

* நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ்.முத்தையா முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு முதன்முதலில் செயல்பாட்டுக்கும் வந்த வகுப்புரிமை ஆணை (G.O. M.S. No.1880 Education Dated: 15.9.1928 மற்றும் அரசு ஆணை எண்: 226 நாள்: 27.2.1929).

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கான சட்டம் இயற்றல் (1928 டிசம்பர் 21).

* சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கம் (அரசாணை எண்: 484 நாள்: 18.10.1929).

* தேவதாசி ஒழிப்புச் சட்டம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால். (1930 இல்)

* சென்னை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் படிப்பு உண்டு. ஆனால், தமிழுக்கென்று ஒரு துறை இல்லை. இந்த நிலையை மாற்றியது நீதிக்கட்சி.

* சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300; தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாய முதலியாருக்கு மாதச் சம்பளம் ரூ.81. இந்தப் பேதத்தை நீக்கியதும் நீதிக்கட்சி ஆட்சியே!

* வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மேயராக இருந்தபோதுதான் முதன்முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நண்பகல் உணவளிக்க வழி செய்யப்பட்டது. அதன்பின் தான் நகராட்சி சட்டத்தைத் திருத்தி, நீதிக்கட்சி ஆட்சியில் மாநில அரசே மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது. (அரசாணை எண்: 1008 (L&M) நாள்: 7.6.1922).

* தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக இருந் ததை மாற்றி தமிழும் சொல்லிக் கொடுக்க ஆவன செய்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான ஏ.டி. பன்னீர் செல்வம். (ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தவர்).

* அரசு மாணவர் விடுதிகளான ராஜா மடம், உரத்தநாடு விடுதிகள் பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமாகவே இருந்ததை அனைவருக்கும் பயன் படும்படிச் செய்தவரும் அவரே!

* இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சியின் முக்கிய தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து என்று ஆணை பிறப்பித்தார்.

* தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் ஆவார்.

இந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் அரசியல் ரீதி யில் தி.மு.க.வாகும்.

சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்; சுயமரியாதைத் திருமணச் சட்டம்; இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான்; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், சுயமரியாதை இயக்க வீராங் கனைகளின் பெயரில் மகளிர் வளரச்சி - உரிமை சட்டங் கள் - திட்டங்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையர்க்கு தங்கம் - நிதி உதவி.

நுழைவுத் தேர்வு ரத்து - நீட்டை எதிர்த்து வழக்கு.

பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கியது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இலவச கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோருக்கு என்று தனித்தனி துறைகள், அரசு ஊழியர் இரகசிய குறிப்பாணை (Personal File) இரத்து,

தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம்; தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடங்கும் ஆணை.

பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சிப் பதவிகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு, இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்ற நிலை, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு, கோவில்களில் கருணை இல்லம், மீனவர்களுக்கு இலவச வீடுத் திட்டம், பசுமைப் புரட்சி திட்டம், வெண்மைப் புரட்சி திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி ஒதுக்கீடு, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், தமிழ் செம்மொழியாக அங்கீகாரம், தொழிற்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி உழவர் சந்தை, சமச்சீர் கல்வி முறை, திருவாரூர், கோவையில் மத்திய பல்கலைக் கழகங்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளில் பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் - அதற்குள் மய்யக் கருவாக - புள்ளியாக சமூகநீதி  - இனப் பண்பாடு எனும் கண்ணோட்டமும் கண்டிப்பாக இருக்கும்.

இந்தியாவிலேயே சமூகநீதி என்ற சமுதாயக் கொள்கை உடைய ஓர் அரசியல் கட்சி உண்டு என்றால், அது தி.மு.க.தான்!

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவைக்கான நூற்றாண்டு என்னும் வைர ஒளி மின்னும் நாளில் (17.12.1920) இவற்றையெல்லாம் அசை போடுவோம்!

அன்று எதிர்க்கத் தொடங்கிய உயர்ஜாதி ஆணவ எதிர்ப்பு இன்றுவரை தொடர்வதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், அதன் வழி வந்த விழுதான தி.மு.க.வை ஆட்சிப் பீடத்தில் நிறுத்த உறுதி எடுப்போம்!

வெல்க திராவிடம் -

வெல்கவே!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

17.12.2020

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சாதனை, திராவிடம், நீதிக்கட்சி
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • வாகை சூடிய வாசிங்டன்
    கலி. பூங்குன்றன் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத்...
  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.