பெரியார் திடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் திடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மே, 2026

பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து


கொள்கை எதிரிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்!

திராவிடர் கழகம்

* பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து * தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

சென்னை, மே 11 தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10.5.2026) காலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள்  அங்கிருந்து நேரே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு விரைந்தார். அங்கு பொறுப்பில் இணைந்து மேலும் சில கோப்புகளில் கையொப்பமிட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி மதியம் 3:10 மணி அளவில், தமது அமைச்சரவையினருடன் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார்.

திராவிடர் கழகம்

பெரியார் அருங்காட்சியக வாயிலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துப் பெற்றார். “என்றும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

மகிழ்வுடன் அதனை ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, ‘தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்’ என்ற புத்தகத்தையும், தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையையும் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

“வாழ்த்துகள்.  தமிழ்நாட்டைக் கொள்கை எதிரிகளிட மிருந்து காப்பாற்றுவதே நம்முடைய கடமை” என்று அப்போது முதலமைச்சர் அவர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்தார். முதலமைச்சர் அதனை ஏற்று ஆமோதித்தார்.

பெரியார் அருங்காட்சியகம் குறித்த செய்திகளை அவருக்குத் தெரிவித்த தமிழர் தலைவர் அவர்கள், பின்னர் அருங்காட்சியகத்தினைச் சில நிமிடங்கள் சுற்றிக்காட்டி, வரலாற்றுச் செய்திகளை முதலமைச்சருக்கு சுட்டிக் காட்டினார்.    அப்போது திராவிடர் கழகத் துணைத்தலைவர், கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுடன் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, வெங்கட் ரமணன், டாக்டர் பிரபு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்று, சிறிதுநேரம் உரையாடி விடைபெற்ற பின்னர், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைத் தந்தை பெரியார் நினைவிடத்திற்குத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகியவற்றிற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர். ‘‘தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்’’ ‘‘கொள்கைத் தலைவருக்குப் புகழ் வணக்கம், மண்ணுரிமைப் போராளி, பெண்ணுரிமைப் போராளி, சமூகச் சிந்தனையாளர் தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்’’ ‘‘வாழ்க வாழ்க வாழ்கவே பெண்ணுரிமை வாழ்கவே’’  என்று முழக்கங்களை அமைச்சர் ராஜ்மோகன் எழுப்ப  பிற அமைச்சர்களும் த.வெ.க தொண்டர்களும் முழக்கமிட்டனர்.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

பெரியார் களம் நடத்திய சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கழகத் தலைவர் ‘‘ஜனநாயகம்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்!

 

ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர்
இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது

ஆசிரியர் உரை

சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

சட்ட விளக்க வகுப்புகள்

சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், 27.12.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், பெரியார் களம் சார்பில் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல் வகுப்பாக, “சமூக மாற்றமும் – பெண்ணுரிமைக்கான சட்டங்களும்” எனும் தலைப்பில், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இரண்டாம் வகுப்பாக, ”சமூகநீதி – சட்டமும், போராட்டமும்” எனும் தலைப்பில், கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மூன்றாம் வகுப்பாக, “மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நான்காம் வகுப்பாக, “இந்துசமய அறநிலையத்துறை சட்டமும் – கோயில் உரிமைகளும்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அய்ந்தாம் வகுப்பாக, “தீண்டாமை ஒழிப்பும் முக்கிய வழக்குகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தினர். ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

டாக்டர் அம்பேத்கரின் கணிப்பு!


‘‘மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்த திராவிடர் கழகத் தலைவர், சட்டம் தொடர்பான ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினார். முதலில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துவதை வரவேற்ற அவர், “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, ” அதிகமான தலைப்புகளில் வகுப்புகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அதிகம் பகிரப்படாத கருத்தை மாணவர்கள் முன்வைத்தார். அதாவது, “Even though i bounded by the supreme court judgment. But, i’m not respect to the same” என்று ஆழமாக சொன்னதை நினைவுபடுத்தினார். மேலும் அவர், Secularism, Socialism ஆகிய சொற்கள் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு விவாதங்களில் வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய முக்கியமான, ஆழமான கருத்துகளை, புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தார்.

சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் அதனை மீறலாமா?

மதச்சார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியவர்கள், ”என் மதம் தான் – இந்து மதம் தான் ஆளவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டினார். Secularism, Socialism ஆகிய இரண்டும் இடைச்செருகல் என்று, ஒன்றிய அரசின் விளம்பரத்தில் அந்த இரண்டும் சொற்கள் இல்லாமல் வெளியிட்டதை நினைவுபடுத்தி, ”இடைச்செருகலாக இருந்தாலும், அந்த சட்டத்தின் மீதுதானே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அதை எப்படி மீற முடியும்?” என்ற ஆழமான கேள்வியை  மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தார். தொடர்ந்து, அதைவிட மோசமான ஒரு தகவலை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “இந்தியா என்றாலே இந்து நாடுதான். இதை அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொண்டால் என்ன? ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் என்ன?” என்று இதுவரை மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாக பேசுவதை நினைவூட்டி, இதே சிந்தனைப் போக்கில், “ஜனநாயக முறையில் தேர்வாகித்தான் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். அந்த திசையில்தான் இந்தியாவும் சென்றுகொண்டிருக்கிறது” என்று சட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைமையை புரியவைத்து தமது வகுப்பை நிறைவு செய்தார்.

சான்றிதழ் வழங்கல்!

நிகழ்வில் சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 50 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் கேள்வி பதில் பகுதி நடைபெற்றது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்களும் மற்றவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இறுதியாக அனைத்து மாணவர்களும் நடைபெற்ற பயிலரங்கம் பற்றி தங்களது கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ”பெரியார் களம்” அமைப்பு சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண், கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்; வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.  பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன்  வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், க, கலைமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். இறுதியில் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

-விடுதலை நாளேடு, 28.12.25


வெள்ளி, 4 அக்டோபர், 2024

துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!


விடுதலை நாளேடு
Published September 29, 2024

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ெசன்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, தாய்க்கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அமைச்சர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் முன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை (சென்னை, 29.9.2024)

விடுதலை நாளேடு
Published September 29, 2024

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து விடுதலை மலர் வழங்கினார். புதியதாக தமிழ்நாடு அரசின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கும் பமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 29.9.2024)


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் உரிமையும், கடமையும்’ என்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கம்!


விடுதலை நாளேடு,
Published February 2, 2024

நிறைவாக தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை

சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று (1.2.2024) நடைபெற்ற ஊர்வலம், கண்டனப்போராட்டத்தில் திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள், பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் ஒத்துழைப் புடன், 22 கழக மாவட்டங்களிலிருந்து கழக மாணவர்கள் சென்னையில் திரண்டனர். நேற்று (1.2.2024) காலை பல்வேறு மாணவர் அமைப்பினர்களுடன் இணைந்து புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான ஊர்வலம், கண்டன போராட்டத்தில் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாணவரணி செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர் பாண்டியன் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் பெருந் திரளாக கலந்துகொண்டனர்.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மன்னார்குடி, கோவை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, சென்னை, அரியலூர், செய்யாறு, ஆத்தூர், கிருஷ்ணகிரி, கோபிசெட்டிப்பாளையம், இராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் திராவிட மாணவர் கழகம் சார்பில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் திடலில்…
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் கடமையும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று (1.2.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தலை மையில் நடைபெற்றது. மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம் வரவேற்றார். திருவாரூர் நர்மதா இணைப்புரை வழங்கினார்.
கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் மாணவர் கழக பொறுப்பாளர்கள் உரையாற் றினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் கடமையும் சமூக தளத்தில்…எனும் தலைப்பில் கோவை மேட்டுப்பாளையம் அன்புமதி, அரசியல் தளத்தில் … தலைப்பில் .ஆவடி மாவட்ட மாணவர்கழகத் தலைவர் அறிவுமதி, பண்பாட்டுத்தளத்தில்… எனும் தலைப்பில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.
மணிமொழி, சிவபாரதி, ராகுல், இனியன், அறிவுச்சுடர் உள்ளிட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.

சமூக தளத்தில்…
சமூக தளத்தில்… தலைப்பில் மேட்டுப் பாளையம் இரா.அன்புமதி உரையில்,
கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் முன்னேறச் செய்ய வேண்டும். சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் மனித சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்வதுதான் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிஜேபி அரசு கல்வி, வேலைவாய்ப்புகளை அடியோடு அடித்து நொறுக்குவதற்கான செயல் திட்டங்களை சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது.
‘சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது, சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், படிப் பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என்று மனுதர்மத்தில் சொல்லி, இதையெல்லாம் செய்தனர். அதன் பிறகு படிப்படியாக கல்வியைக்கொடுத்தது திராவிடர் இயக்கமும், நீதிக்கட்சியும்தான். ஆனால், இன்றைக்கு மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மனுதர்மத்தை நிலைநாட்டுவதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். ‘நீட்’, புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா பெயரால் மாணவர் களின் முன்னேற்றத்தைத் தடுத்து சமூக வளர்ச்சியை முடக்குவதற்கானசெயலை இந்த ஒன்றிய பிஜேபி அரசு செய்து வருகிறது. ‘நீட்’ என்கிற பெயரால் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்காக அன்று முதல் இன்றும் திராவிடர் இயக்கம்தான் போராடி வருகிறது. நம்மை வழிநடத்தி வருபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்.

அரசியல் தளத்தில்…
அரசியல் தளத்தில்…தலைப்பில் ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி.அறிவுமதி உரையில்,
பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்கள், அரசியல் என்றால் பாலிடிக்ஸ் எனக்குப் பிடிக் காது என்று பெருமையாக சொல்கிற காலம். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய காலம் என்பது ஒவ்வொருத்தரையும் அரசியல் படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக் கிறோம். 18 வயது நிரம்பியவர்களாக, படித்தவர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இன்று கல்வி அறிவு பெற்றவர்களின் விகிதம் 50 விழுக்காடாக இருக்கிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன்பு பார்த்தால், 1901இல் ஆங்கிலேய அரசு கணக்கெடுப்பில் தமிழ் நாட்டில் படித்தவர்கள் எண்ணக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழேதான் இருந்தது. அப்படியென்றால் கிட்டதட்ட 99 சதவீதம்பேர் படிக்காமல் இருந்துள்ளனர். அதற்குக் காரணம் படிக்கும் உரிமையைக்கொடுக்காமல் இருந்த காலம். ஆனால், இன்றைக்கு நிலைமை நாம் எல்லாரும் படித்திருக்கிறோம். நாம் பெற்றுள்ள இடஒதுக்கீடு, சமூகப்போராட்டங்களால் நம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
அப்படி இருக்கும் நம்மை திரும்ப பின்னோக்கி இழுத்துச்செல்கிறது பாசிச பாஜக அரசு.அதை நாம் முறியடிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்க் கூட்டம் மாணவர் களிடையே அவர்களுடைய சித்தாந்தங்களை திணித்து வருகிறார்கள். நம்முடைய சித்தாந்தம் திராவிட சித்தாந்தம். அவர்களுடைய சித் தாந்தம் ஆரியசித்தாந்தம்.
திராவிடத்துக்கு எதிரானது ஆரியம். எல் லோருக்கும் கல்வி இன்றியமையாததுஎன்பது திராவிடம். சூத்திரர்- பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கூடாது என்பது ஆரியம்.
அதையெல்லாம் நாம் மீட்டுக்கொண்டு வருகிற வேளையில், அவர்கள் ஹிந்துத்துவா, ஹிந்துராஜ்ஜியம் என்ற மதவெறியுடன் நம்மைத் திரும்பவும் பழைய நிலைக்கே அனுப்பப்பார்க்கிறார்கள். அரசியல் மாற்றத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பண்பாட்டுத்தளத்தில்…
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் உரையில், ஆரிய பண்பாட்டுப்படையெடுப்பாலேயே தீபாவளி, தமிழே இல்லாத ஆண்டுகளை தமிழ்ப்புத்தாண்டு என்று ஆரியப் பண்பாட்டைத் திணித்து வருகிறார்கள். தமிழில் பெயர் சூட்ட பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். நம்முடைய பண்பாட்டை மீட்டெடுக்க கழகத்தில் நாம் பயணிக்க வேண்டும். நம் எதிரிகள் என்றால் மனுதர்மம், ராஜாஜி, இன்று பிஜேபி மோடியாக இருக்கிறது என்றால், சித்தாந்த எதிரியாக இருக்கிறார்கள். குலக் கல்வியைக் கண்டு கொதித்தெழுந்த தந்தை பெரியார் அதனை முறியடித்து வெற்றி பெற்றார். கத்தி வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெட்ரோலையும், தீப்பந்தத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்லும்போது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என்றார் பெரியார். தேவாசுரப்போராட்டம் என்றார் ராஜாஜி. ஆரிய – திராவிடப் போராட்டம் என்று சொன்ன தந்தைபெரியார் வென்றார். குலத்தொழிலை வலியுறுத்திச் சொல்கின்ற ஆரியம் நாம் படிக்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறது. ஸநாதனம், நீட், புதிய கல்விக்கொள்கை, விஸ்கர்ம யோஜனா என்று இன்றைக்கும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடப்போராட்டத்தில் நாம் வென்றெடுக்க தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பணியாற்ற வேண்டும். அதன் மூலம் கல்வி, பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

பொதுச்செயலாளர்
வீ.அன்புராஜ் உரையில்
பொழுதுபோக்குகின்றவர்கள் மத்தியில் கல்வி உரிமை காப்போம், புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், ஒன்றிய பாஜக அரசை நிராகரிப்போம் என்று சுமார் 22 மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் வந்துள் ளீர்கள். மாணவர்கள், பெற்றோர்கள், கழகப்பொறுபபாளர்களுக்கு பாராட்டு. அடுத்த தலைமுறைமீது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. திராவிடர் கழகம் எனும் முத்திரை பதித்துள்ளீர்கள். கழகத்தைத் தவிர வேறு எங்கும் இதுபோன்று களத்திற்கே செல்லும் வாய்ப்பு, பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நம்முடைய இயக்கத்தில்தான் 38 இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது. 2761 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 1599 பேர். பெண்கள் 1162 பேர் புதிதாக இயக்கத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
பலகைகளில் எழுதுவது, சுவர் எழுத்துப் பிரச்சாரங்கள் என்பது கழகத்தால் தொடர்ச் சியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த பிரச் சாரங்கள் தற்பொது தொழில்நுட்பத்துடன் இணையத்தில் சமூக ஊடகங்களிலும் தொடர்கின்றன.
தற்பொழுது 13 லட்சத்துக்கும் மேற் பட்டவர்கள் புதிய வாக்காளர்களாக உள்ளனர். அவர்களிடம் இந்த உணர்வைக் கொண்டு செல்ல வேண்டும். ‘விடுதலை’ செய்திகளை எடுத்து பரப்பவேண்டும். அமைதிப் புரட்சியாக செயல்பட வேண்டும்.
‘நீட்’ குழப்பங்கள், படிக்கும் போதே பாதியில் இடையில் நின்றுபோகிறவர்கள் என 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசால் என்னவெல்லாம் நடந்துள்ளது என்று அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவாக சிறப்புரை ஆற்றினார்.
மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோ ருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.தங்கமணி நன்றி கூறினார்.

புதன், 14 டிசம்பர், 2022

தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை

ஞாயிறு, 31 ஜூலை, 2022

சென்னை பெரியார் திடலில் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா - ஆசிரியர் கி.வீரமணி கலந்துறவாடல்

ஞாயிறு, 20 மார்ச், 2022

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தின் சிறப்புத் தீர்மானங்கள்!