சித்தராமையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தராமையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா


15

பெங்களூரு, செப். 17- ஸநாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றும் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

கருநாடக அரசின் சமூக நலத்துறை தொடர்பாக பன் னாட்டு ஜனநாயக தின விழா பெங்களூரு விதான சவுதாவில்  நடைபெற்றது. இதில் முதல மைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அரசியல் சாசன புத்தகத்தை வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா, காவல் துறை அமைச்சர் பரமேஸ்வர், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, உணவுத்துறை அமைச்சர் கே. எச்.முனியப்பா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன்னட மொழி வளர்ச் சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, பொதுப் பணித்துறை அமைச்சர் சதீஸ் ஜார்கிகோளி, மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, சட்டமன்ற மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களும் உறுதிமொழி எடுத் தனர். அதுபோல் இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளும் பங்கேற்றிருந்தனர். அவர்கள் விதானசவுதா கட்டடம் முன் பாக நின்று அரசியல் சாசன புத் தகத்தை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் சித் தராமையா பேசும்போது கூறிய தாவது:- அரசியல் சாசனத்தை ஒழித்துவிட்டு மனு தர்மத்தை (ஸநாதன தர்மம்) அமலுக்கு கொண்டு வந்தால், 90 சதவீத இந்தியர்கள் அடிமைத்தனத்தில் தள்ளப்படுவார்கள். இதற்காக பல்வேறு சதிகள் நடைபெற்று வருகின்றன. நாம் இந்திய மக்கள் என்று சொன்னதுமே அரசியல் சாசன புத்தகம் திறந்து கொள் கிறது. அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நாம் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றா விட்டால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது.

சமத்துவ சமுதாயம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளின் படி எங்கள் அரசு அனைவரின் முன்னேற்றத்திற்காக திட்டங் களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்குவது தான் எங்கள் திட்டங்களின் நோக் கம் ஆகும். அரசியல் சாசனம் தொடங்கப்பட்ட பிறகு நமது நாட்டில் ஜனநாயகம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்தே ஜனநாயக கோட்பாடுகள் நமது மண்ணில் இருந்தது. அரசியல் சாசனத்தை அமலுக்கு கொண்டுவந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலிருந்து நமது அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட் டது. அரசியல் சாசனத்திற்கு எதிரான சக்திகள், மனு தர் மத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றன. இதில் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். இவ் வாறு சித்தராமையா கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பன்னாட்டு ஜனநாயக தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள், பள்ளி, -கல்லூரி மாணவ-மாணவிகள் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்கும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இதில் பங்கேற்ற வர்கள் அனைவரும் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பிரதமர் மோடி மத்தியபிர தேச மாநிலம் போபாலில் நடந்த விழாவில், ஸநாதன தர்மத்தை ஒழிப்பதையே குறிக் கோளாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுவ தாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, ஸநாதன தர்மத்தை அமல்படுத்தினால் மக்கள் அடிமைப்படுத்தப்படு வார்கள் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 29 மே, 2023

கருநாடக மாநிலம் - சித்தராமையா பதவி ஏற்பு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட ஆறு முதலமைச்சர்கள் பங்கேற்பு

 

 29

பெங்களூரு, மே 21  பெங்களூருவில் நேற்று (20.5.2023) நடைபெற்ற  விழாவில் கருநாடக மாநிலத்தின் 24-ஆவது முதல் வராக பதவியேற்றார் சித்தராமையா. துணை முதலமைச்சராக    டிகே சிவகுமார் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்ச ராகவும், துணை முதலமைச்சராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும்  பதவி ஏற் றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங் களூரு கன்டீரவா அரங்கில் நேற்று (20.5.2023) கோலாகலமாக நடைபெற்றது.

முதலில், முதலமைச்சராக சித்த ராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து, அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ் வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார் கேவின் மகன் பிரியங்க்    கார்கே,   ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது  ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற் றார்கள். அவர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித் தராமையா கருநாடகாவின் 24-ஆவது முதலமைச்சர் ஆவார். 

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன் னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர்கள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன் (ஜார்க் கண்ட்), பீகார் துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக் கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத் திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல். இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளி பரப்பு செய்யப்பட்டன.  

பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித் தராமையா, பெங்களூரு விதானசவுதா வில் (சட்டமன்றம்) உள்ள முதல மைச்சர் அறைக்கு சென்றார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா அரங்கை சுற்றி யுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.