சமஸ்கிருதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமஸ்கிருதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 மார்ச், 2021

அத்துமீறுகிறவர்களுக்குப் பதிலடி என்ன? மகாதானபுரம் மஹாதானபுரமாக மாற்றப்பட்டது, எப்படி?


தமிழ் இனி மெல்ல பாஜகவினரால் அழிக்கப்படும் என்பதற்கு அடுத்த சான்று,

 கரூர் மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் என்ற பெயர் கொண்ட ரயில் நிலையத்தின் பெயர் பலகையை எடுத்துவிட்டு புதிய பெயர்பலகையில் மஹாதானபுரம் என்ற வடமொழிச்சொல்லைச் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் சக்திவேல் கூறியதாவது:

‘‘ரயில் நிலையத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து எங்களுக்குப் பெயர் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது. அதில் தமிழில் இருந்த மகாதானபுரம் என்பதில் உள்ள ‘‘கா'' என்பதை மட்டும் அகற்றிவிட்டு ‘‘ஹா'' என்று சேர்த்துள்ளனர். தலைமையிடமிருந்து  வந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. ஆகவே, பழைய எழுத்துப்பலகையில் இருந்த பெயரை அழித்துவிட்டு புதிய பெயரைச் சேர்த்துள்ளோம்'' என்று கூறினார்.

இது தொடர்பாக சேலம் கோட்டம் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

 பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று ஒன்றை வெளியிட்டவர்கள் அதில் முதல்பக்கமே வழக்கொழிந்து போன எழுத்துருவிலேயே இல்லாத ‘‘      ” பயன்படுத்தி தங்களின் தமிழ் வெறுப்பைக்  காட்டி னார்கள்.

 ஆனால், மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழில் பாரதி, திருக்குறள், அவ்வையார் பாட்டு எல்லாம் அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் வித்தியாசமான உச்சரிப்பில் பேசிவிட்டுச் செல்வார். அவர் இதைத்தான் சொல்கிறார் என்று, அடுத்த நாள் ஊடகத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொள்ளவேண்டிய அவலம் உள்ளது.

 இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஊடுருவி உள்ள வட இந்திய அதிகாரிகள், தங்களின் தமிழ் வெறுப்பை எந்த அளவு   அரங்கேற்ற வேண்டுமோ அந்த   அளவு செயல்படுத்தி வருகின்றனர்.

 கடந்த ஆண்டு முழு அடைப்பின் போது சேலம் கோட்டத்தில் அதிக அளவு வட இந்தியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அப்படிச் சேர்ந்தவர்களின் நடவடிக்கையே தற்போது வெளிவந்துள்ளது, இந்தி பேசுபவர்களை திட்டமிட்டே மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்புகிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும்.

தமிழுணர்வு தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை இந்தி  மயமாக்க - இந்து மயமாக்கத் துடிப்போர்க்குப் பதிலடி கொடுக்கவேண்டாமா?

பா.ஜ.க.வுக்கு அடிமையாகிவிட்ட அதிமுகவுக்கும் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்க வேண்டாமா?

ஆதரிப்பீர், தி.மு.க.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி

*https://www.hindutamil.in/news/india/540102-extra-fund-for-sanskrit.html*

*"செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி"*

*- ஆர். ஷபிமுன்னா -*

புதுடெல்லி, பிப். 18 -
செம்மொழி பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியாவைவிட, சுமார் 22 மடங்கு கூடுதலாக சம்ஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் சம்ஸ்கிருதத்தை அடுத்து, கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்மொழியும் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றன. இவற்றில் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் ஆய்வுக்கு மட்டுமே மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. மற்ற 4-ல் மலையாளம் மற்றும் ஒடியாவுக்கு என தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. அத்துடன் அம்மொழிகளுக்காக மத்திய அரசின் ஆய்வு மையங்கள் கூட இன்னும் தனியாக தொடங்கப்படவில்லை. மாறாக மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திலேயே அவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு அதன் துறைகள் உயர் ஆய்வு மையங்களாக மாற்றப்பட்டன. பிறகு தெலுங்கு உயர் ஆய்வு மையம் மட்டும் ஆந்திராவின் நெல்லூருக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் சமீபத்திய கூட்டத்தொடரின்போது, சம்ஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி தொகை ஒதுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி வெகுவாகக் குறைந்து வருகிறது. இதன்படி, 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழாய்வு நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக தமிழக முதல்வர் இருந்தும் அதனால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதன் பொறுப்பு இயக்குநர்களாக நியமிக்கப் படுபவர்களும், தமிழறிஞர்களாக இல்லை என்பதால் அந்த நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் கட்டுமான வளர்ச்சி தடைபட்டு வருகின்றன.
சர்வதேச நாடுகளுடன் தமிழுக்கான ஒருங்கிணைப்பு கிடைக்காததுடன் ஆய்வுகளும் முறையாக நடைபெறாமல் உள்ளன. தொடக்கத்தில் மூத்த ஆய்வறிஞர்கள் 10 பேர் இருந்தனர். தற்போது ஒருவர்கூட இல்லை. புதிதாக அமர்த்தப்பட வேண்டிய சுமார் 150 பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதுபோன்ற செயல்களால் 13 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இழப்பையும் மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனக் கருதப்படுகிறது.

*நன்றி : "இந்து தமிழ் திசை" நாளேடு 18-02-2020*

திங்கள், 16 டிசம்பர், 2019

சமஸ்கிருத எதிர்ப்பு என்பது பார்ப்பன-ஆரிய எதிர்ப்பே மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் உருவாக்கம்

மக்களவையில் 12.12.2019 அன்று மசோதா, திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

அடுத்து தேசிய கல்விக்கொள்கையில் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

ஆனால், சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர், இஸ்லாமியர் என்பதால்,உத்தர பிரதேசத்தில் உள்ள பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு பார்ப்பன மாண வர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு.

ஆக, பார்ப்பனர்கள் தவிர்த்து யார் படித்தாலும், ஒன்றும் ஆகப் போவதில்லை. இருப்பினும் தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திட அனைத்து வழிக ளிலும் செயல்படுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை ஆரிய, பார்ப்பன, வழக்கு ஒழிந்த மொழி என்று தொடர்ந்து சொல்லி வருவது திராவிடர் இயக்கமே. அதன் தொடர்ச்சிதான், மக்கள வையில் திமுக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோ தாவை எதிர்த்தது. கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெங்க டேசன் அவர்களும் இணைந்தது மகிழ்ச்சியே.

1926-க்கு முன்னால் உள்ள

வரலாற்றுச் செய்தி:

சென்னை மாநிலக் கல்லூரியில், சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300.  தமிழ் பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியா ருக்கு மாதச் சம்பளம் ரூ.80.  இதனை எதிர்த்து தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார். அன்றைய நீதிக்கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த இராமராய நிங்கவாரு என்ற பனகல் அரசர், இந்த வேற்றுமையை ஒழித்தார்.

ஆக, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது ஹிந்திக்கும் முன்னால், திராவிடர் இயக்கம் மேற்கொண்ட போர்.

அது,  டிசம்பர் 12-ஆம் தேதி  இந்திய அளவில் நாடாளுமன்றத்தில்  திராவிடர் இயக்கத்தின் குரலாக எதிரொலித்தது.

இன்று நடைபெறும் ஆட்சி ‘பச்சைப் பார்ப்பன ஆட்சி' என்றும், சூத்திரனை - பிராமணன் மேல்ஜாதி - கீழ்ஜாதிக்காரன் என்பவன் அப்படியே நீடித்து நிலைத்து என்றென்றும் ‘சிரஞ்சீவி'யாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டுவரும் ஆட்சி என்றும் காட்டுவதற்கு இதுவரை பலவித ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்றாலும், இன்றும் ஒரு எடுத்துக்காட்டு காட்டுகிறேன்.

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்' என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந் நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை' எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்கம்

கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில் லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள -  இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய  ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய் மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன 'மேலோர்' மொழியாக - சமஸ்கிரு தத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டி தர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு புரொஃபசருக்கு) 75 ரூபாய் தான் சம்பளம். சமற்கிருத ஆசிரியருக்குப் பெயர் - ‘புரொஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்று ஞாபகம்) என்பவர் வாங் கின சம்பளம் ரூ.300க்குமேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங் கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல்ராஜா அவர்களே இதைக்கண்டு மனம் கொதித்து என்னி டத்தில் நேரில் சொல்லி, “நீங்கள் இதைக்கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்' என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமைவாய்ந்தவர். என்ற போதிலும்கூட அந்தமாதிரி - அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட போடும். ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் எறும் தமிழ்ப்பண்டிதர் கள் இதே நிலைமையில்தான் இருக்கக்கூடும்.

- தந்தை பெரியார், விடுதலை, 15.2.1960

தகவல்: கோ.கருணாநிதி, வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்

- விடுதலை நாளேடு 15 12 19