சனி, 26 அக்டோபர், 2019

மராட்டிய மாநிலத்தில் 2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி!

மும்பை, அக்.26 மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியானது, ல தூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் ஆகிய2 தொகுதிகளில் நோட் டாவிடம் தோற்றுள் ளது.

மறைந்த காங்கிரஸ் தலை வர் விலாஸ்ராவ் தேஷ்முக். முன்னாள் முதல்வரும் ஆவார். இவரது இரண்டு மகன்களும் காங்கிரஸ் சார் பில் வெற்றி பெற்றுள்ளனர். மூத்த மகன் அமித் தேஷ்முக், லதூர்(நகரம்) தொகுதியில் பாஜக வேட்பாளரை 42 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்த நிலை யில், இளைய மகன் திராஜ் தேஷ்முக், லதூர் (ஊரகம்) தொகுதியில் சுமார் ஒரு லட் சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்துள்ளார்.

திராஜ் தேஷ்முக், மொத் தம் பதிவான ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 599 வாக்குகளில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 615 (சுமார் 67.59 சதவிகிதம்) வாக்குகளை அள்ளிய நிலை யில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சச்சின் என்ற ரவி தேஷ்முக் சுமார் 13 ஆயிரம் வாக்குகளை மட் டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு போயிருக்கிறார். இத்தொகுதியில் நோட்டா 27 ஆயிரத்து 500 வாக்கு களைப் பெற்றுள்ளது. இதே போல, பலூஸ் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதாம், மொத்த வாக்குகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் (83.04 சதவிகிதம்) வாக்கு களைப் பெற, அவரை எதிர்த் துப் போட்டியிட்ட சிவ சேனா வேட்பாளருக்கு வெறும் 8 ஆயிரத்து 976 வாக் குகள் மட்டுமே கிடைத்துள் ளது. இங்கு நோட்டா பெற் றது 20 ஆயிரத்து 631 வாக் குகள் ஆகும். இவ்வாறு லதூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் தொகுதிகளில் நோட்டாவி டம் தோற்றது, சிவசேனா - பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

இதுதவிர அக்கல்குவா என்ற தொகுதியில் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரை, காங்கிரஸ் வேட்பாளர் வென்றுள்ள நிலையில், இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 4 ஆயிரத்து 856 வாக்குகள் கிடைத்துள்ளன.

- விடுதலை நாளேடு 26 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக