தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்
தீர்மானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்மானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 நவம்பர், 2023

தஞ்சையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்


திராவிடர் கழக இளைஞரணி சார்பில் குலக்கல்விக்கு எதிராக தெருமுனைக் கூட்டங்கள்

 Viduthalai  November 14, 2023  கழகம்,

தஞ்சையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

4

தஞ்சாவூர், நவ. 14-- திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்   தஞ்சாவூர் அன்னை அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் நவம்பர் 5 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் முனைவர் ராஜவேல் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி துணைச் செய லாளர் இரா.வெற்றி குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் ஆ.பிர பாகரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

 கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் இளைஞரணி தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என் பது குறித்தும், இளைஞரணியை வலுப்படுத்துவதற்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார்.

கழகக் காப்பாளர் மு.அய் யனார், தஞ்சை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித் துப் பேசினர்.

நிறைவாக கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின் சுனாரெசு பெரியார் கருத்துரை ஆற்றினார். அப்போது இளை ஞரணி செயல்பாடுகள் குறித் தும், சமூக ஊடகங்களில் இளை ஞர் அணியினர் செயல்படைய வேண்டிய விதங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் கள் சென்னை சோ.சுரேஷ்,  நாகை நாத்திக.பொன்முடி,  செந்துறை சு.அறிவன், திண்டுக் கல் நா.கமல்குமார்,  ஆத்தூர் ப.வேல்முருகன்,  தாராபுரம் ஆ. முனீஸ்வரன்,  ஜெகதாபட்டினம் ச.குமார், கோபி ப.வெற்றிவேல், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்தி ராபதி, மாவட்ட ப.க பொறுப் பாளர் வீரக்குமார், விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி மணிகண்டன், அரியலூர் ஒன் றிய இளைஞரணி செயலாளர் கி.கமலக்கண்ணன், மணல் மேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.யோவான், தஞ்சை மாநகர இளைஞரணி பொறுப் பாளர்கள் மணிகண்டன், பிர காஷ், பெரியார் பிஞ்சு முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தின் முடிவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திண்டிவனம் வழக்குரைஞர் தா.தம்பி பிர பாகரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், உலகத் தலை வர் தந்தை பெரியார் அவர்க ளின் கொள்கைகளை உலகமய மாக்கும் பணியில் ஓயாது உழைத்து வரும் தமிழர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்தநாள் விழாவை (சுயமரியாதை நாள்)  2023 டிசம்பர் 2 ஆம் நாள் தொடங்கி மனிதநேய பணிகளான குருதிக் கொடை வழங்குதல், உடற் கொடை வழங்குதல், மருத்து வமனை உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நமக்கு அளித்த தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல், கழக கொடியேற் றுதல், கொள்கை விளக்க பிரச் சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வதெனவும், 

விஸ்வகர்மா யோஜனா என்னும் பெயரில் மீண்டும் குலக்கல்வியை திணிக்கும் ஒன் றிய அரசின் நவீன தீண்டா மைக்கு எதிராகவும், குலக்கல் வித் திட்டத்தின் ஆபத்துகளை விளக்கி கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும்,   கழக இளை ஞரணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப் பாளர்கள் தங்கள் பொறுப் புக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல் கூட்டங் களை நடத்தி கிராம கிளை, ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி களில் வட்டக் கழக வாரியாக இளைஞர் அணி அமைப் புகளை வலுப்படுத்தி முழு வீச்சுடன் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மேலும், மாநில, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் புதிய இளைஞரணி அமைப்புகளை தங்கள் பகுதிகளில் உருவாக்கி இளைஞரணி அமைப்பை பர வலாக்கிட வேண்டும். மேலும், கழக இளைஞரணி பொறுப் பாளர்கள் அந்தந்த மாவட்டங் களில் நடைபெறும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கும் மாணவர்கள் இளைஞர்களின் முகவரி மற் றும் தொலைபேசி எண்களை பெற்று அவர்களை தொடர்பு கொண்டு இயக்க நடவடிக்கை களில் பங்கேற்க செய்வதென வும், ஜாதி ஒழிப்பும் -தீண்டாமை ஒழிப்போம் நமது கண்ணான கொள்கை. ஜாதி தீண்டாமைப் போன்ற கொடுமைகள் எந்த பகுதியில் நடந்தாலும் கழக இளைஞரணி தோழர்கள் உட னடியாக தலைமைக் கழகத் திற்கு தெரிவித்து களப்பணியில் உடனடியாக இறங்க வேண்டும் எனவும், தீண்டாமை சட்டப் படி குற்றம். மனிதாபிமானத்திற் கும் மனித உரிமைக்கும் எதி ரானது என்பது போன்ற விளம் பரங்களை கழக இளைஞரணித் தோழர்கள் தமிழ்நாடு முழு வதும் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜாதி - தீண்டாமை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, சமூக மாற்றம் பற்றி தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய பிரச்சனை யும் கூட என்பதை உணர்ந்து கழக இளைஞரணியினர் முனைப் புடன் செயல்படுவதனவும், கழக இளைஞரணி சார்பில் பெரியார் சமூக காப்பணி பயிற்சி பட்டறை அறிமுக வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் கீழ்க்கண்டவாறு நடத்துவதெனவும் தீர்மானிக் கப்படுகிறது:

பெரியார் சமூக காப்பணி பயிற்சி வகுப்பு பட்டியல்:

டிசம்பர் - 9, 10 -  வடசென்னை, கும்மிடிப்பூண்டி,ஆவடி, சென்னை

டிசம்பர் 16- 17 - திருவொற்றியூர், தென்சென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம் .

டிசம்பர் 30, 31 - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை.

ஜனவரி 6, 7 - வேலூர், செய்யாறு, திருப்பத்தூர்.

ஜனவரி 20, 21 -திண்டிவனம், விழுப்புரம், கல்லக்குறிச்சி, திரு வண்ணாமலை.

ஜனவரி 27, 28 - கடலூர், சிதம்பரம்,விருத்தாசலம், புதுச்சேரி.

பிப்ரவரி 3,4 - ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர்.

பிப்ரவரி 10, 11 - சேலம், ஆத் தூர்,மேட்டூர் , நாமக்கல்.

பிப்ரவரி 17, 18  - மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை.

பிப்ரவரி 24, 25- மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர்.

மார்ச் 2, 3 - அரியலூர், பெரம் பலூர், லால்குடி.

மார்ச் 9 , 10 - திருச்சி, துறையூர், கரூர்.

மார்ச் 16, 17 - ஈரோடு, கோபி, மேட்டுப்பாளையம், நீலகிரி.

மார்ச் 23, 24 - தாராபுரம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி.

மார்ச் 30, 31 - புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம்.

ஏப்ரல் 6, 7 - சிவகங்கை, காரைக் குடி.

ஏப்ரல் 13 , 14 - திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி.

ஏப்ரல் 20, 21  - மதுரை மாநகர், மதுரை புறநகர், ராஜபாளையம், விருதுநகர்.

ஏப்ரல் 27, 28  - குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி.

கழக மாவட்டத்திற்கு 5 முதல் 10 தோழர்களை பங்கேற் கச் செய்திட வேண்டுமெனவும், கழக இளைஞரணி சார்பில் 2023 டிசம்பர், 2024 ஜனவரி மாதத்தில் திருச்சி, சென்னை, புதுச்சேரி, தர்மபுரி, ஈரோடு, திருவாரூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய ஊர்களில் களப்பணி பயிற்சி முகாம்கள் நடத்துவதெனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வயதை குறித்திடும் வகையில், தஞ்சை மாவட்ட இளைஞரணி சார் பில் தஞ்சை மாநகரில் 91 அடி உயர கொடிக்கம்பம் நிறுவி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கழகத் தின் லட்சியக்கூடிய ஏற்றுவதெ னவும், தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி சார்பில் விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்குவதெனவும் தீர்மானிக் கப்பட்டது.

 புதிய பொறுப்பாளர்:

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.பிரகாஷ் - பெரியபாளையம்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:57 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இளைஞர் அணி, கலந்துரையாடல், தஞ்சை, தீர்மானம்

ஞாயிறு, 20 மார்ச், 2022

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தின் சிறப்புத் தீர்மானங்கள்!


   March 19, 2022 • Viduthalai

கழகப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழர் தலைவருக்குப் பாராட்டு!

தி.மு.க. அரசின் தந்தை பெரியார் - திராவிட மாடல் திட்டங்களுக்குப் பாராட்டு!

'நீட்' தேர்வு - புதிய தேசியக் கல்வி, மாநில உரிமைகள் பறிப்புகளுக்குக் கடும் எதிர்ப்பு!

மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருக!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்பாடு

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவை!

கழக வேலைத் திட்டங்கள் - எழுவர் விடுதலை

ஏப்ரல் 3 ஆம் தேதிமுதல் 25 ஆம் தேதிவரை நாகர்கோவில்முதல் சென்னை வரை தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தீவிரப் பிரச்சாரத் திட்டம்!

கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தின் சிறப்புத் தீர்மானங்கள்!

சென்னை, மார்ச் 19 ஏப்ரல் 3 ஆம் தேதிமுதல் ஏப்ரல் 25 ஆம் தேதிவரை நாகர்கோவில் முதல் சென்னை வரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், 'நீட்' எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு இவற்றை முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரத் திட்டம் உள்பட 17 தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் வருமாறு:

இரங்கல் தீர்மானம்: 1

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு (மறைவு 06.10.2021) பகுத்தறிவுப் புலவர் புலமை பித்தன் (மறைவு 8.9.2021) தெற்குநத்தம் வழக்குரைஞர் சி.கோவிந்தராசு (மறைவு 10.9.2021) டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் (மறைவு 24.9.2021) வீரபாண்டி ராஜா மறைவு 02.10.2021) பெரியார் பெருந்தொண்டர் திருச்சி மாவடியான் (மறைவு 15.10.2021) அரியகுடி வீர சுப்பையா (மறைவு 16.10.2021) பெருநிலக்கிழார் எஸ்.இராமலிங்கம் (மறைவு 20.10.2021) மதுரை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் (மறைவு 29.10.2021) வெண்கரும்பூர் க.நாராயணசாமி (மறைவு 29.10.2021) மலர் மாமணி புலவர் பெ.அ.இளஞ்செழியன் (மறைவு 02.11.2021) சிங்கப்பூர் தமிழ்முரசு இராமகிஷ்ணன் (மறைவு 04.11.2021) மத்தூர் அரங்க.ரவி (மறைவு 04.11.2021) குருவாரெட்டியூர் பிரகலாதன் (மறைவு 09.11.2021) வழக்குரைஞர் அ.பாலகுரு (மறைவு 21.10.2021) உரத்தநாடு ஆர்.பி.சாமி (மறைவு 29.11.2021) விழுப்புரம் மேனாள் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் (மறைவு 01.12.2021) காரைக்குடி உமையாள் ராமநாதன் (மறைவு 13.12.2021) பெரியார் பெருந்தொண்டர் வல்லவாரி இரணியன் (மறைவு 21.12.2021) கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் (மறைவு 22.12.2021) துரை.மகாலிங்கம் (மறைவு 24.12.2021) திராவிடர் விவசாய தொழிலாளர் கழக மாநில செயலாளர் இராயபுரம் கோபால் (மறைவு 27.12.2021) சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர் உ.சுப்பையா (மறைவு 13.01.2022) கவிவேந்தர் கா.வேழவேந்தன் (மறைவு 27.1.2022) மதுரை தமிழரசன் ( மறைவு 28.1.2022) ஆத்தூர் அங்கம்மாள் (மறைவு 28.1.2022) தஞ்சை எஸ்.சிங்காரவேலு (மறைவு 01.2.2021) பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் (மறைவு 05.2.2022) டே  ப் சன்யாசி (மறைவு 10.2.2022) பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை தேசிங்கு (மறைவு 26.02.2022) மேனாள் மாவட்ட கழகத் தலைவர் பெரம்பலூர் ஆறுமுகம் (மறைவு 27.2.2022) கரந்தை ச.இராமநாதன் (மறைவு 6.3.2022) பெங்களூர் முத்துச்செல்வன் என்ற மீனாட்சி சுந்தரம் (மறைவு 09.3.2022) பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை த.பெரியார்தாசன் (மறைவு 10.3.2022) மதுரை ஈரோட்டுச் செல்வன் (மறைவு 17.3.2022)

ஆகியோர் மறைவிற்கு கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் இக்கூட்டம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தன்னலம் துறந்து இயக்கபணி ஆற்றி மறைந்த கழகத் தோழர்களுக்கு இக்கூட்டம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2

திராவிடர் கழகத் தலைவருக்கு வாழ்த்தும், பாராட்டும், நன்றியும்!

தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று கழகத்தை சிறப்பாக நடத்தினார். அன்னையாரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்டுக்குலையாமல் கழகத்தை காத்ததுடன், மேலும் சிறப்பாக வளர்த்தும், பெரியார் கல்வி நிறுவனங்களை மேலும் பெருக்கியும், விரிவாக்கியும் வளர்த்தும், கட்டுமானப் பணிகளை வியக்கத்தக்க முறையில் நிர்மாணித்தும், தமிழினத்துக்கு அரும்பெரும் வெற்றிச் சாதனைகளை குவித்தும், பிரச்சாரப் பணிகள், களப் பணிகளில், காலத்துக்கேற்ற வகையில் யூகங்களை வகுத்தும், நாளும் செயல்பட்டு வரும் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டில் (18.3.2022) அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிப் பெருக்கில் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது, 

89ஆம் ஆண்டு அகவையில் 79 ஆண்டு அப்பழுக்கற்ற தொண்டறம் புரிந்து வாழும் நமது ஒப்பற்ற தலைவர் நூற்றாண்டும் கண்டு மேலும் வாழ்ந்து கழகத்துக்கும் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றுமாறும் வாழ்த்துகிறோம்.

கழகப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழகத் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துகளைத் தெரிவித்தனர் (சென்னை, 19.3.2022)

தீர்மானம் எண்: 3

அ) தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு

தந்தை பெரியார் பிறந்த நாளை - சமூகநீதி நாளாக அறிவித்ததோடு, அந்நாளில் அரசு அலுவலர்கள் அனை வரும் தந்தை பெரியாரின் அன்பு நெறி, பகுத்தறிவு நெறி, சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம், சமூகநீதி, ஆளுமைத்திறன் கொண்ட சமுதாயம் சமைக்கும் வகையில் எனது பயணம் தொடரும் என்று உறுதி ஏற்கச் செய்ய ஆணை பிறப்பித்த ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாட்டாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசின் 2022-2023 நிதிநிலை அறிக்கையில் (தாக்கல் செய்யப்பட்ட நாள் 18.3.2022) தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு - 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிட அய்ந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம் என்ற நிலை இதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுபோலவே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனித்தன்மையான, ஜாதி ஒழிப்புச் சிந்தனையோடு ஆக்கப்பூர்வமாக உருவாக்கப்பட்ட 149 பெரியார் நினைவு சமத்துவப் புரங்களை சீரமைத்திட ரூ.190 கோடி - நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எல்லா வகையிலும் தந்தை பெரியார் கொள்கைப் பரவிடவும், நிலை நிறுத்தப்படவும் திட்டமிட்ட வகை யில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை வரலாறு என்றென்றும் போற்றும் என்பதை மகிழ்ச்சியுடன் இக்கூட்டம் பதிவு செய்கிறது, பாராட்டுகிறது, வாழ்த்துகிறது, நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

ஆ) பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுகலைக் கல்வியில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் கிடைத்திட அயராது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் மிகுந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

மருத்துவக் கல்வியில் உயர் சிறப்புக் கல்வி (Super Speciality)  படிக்க - அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, வெற்றி பெற்றுத் தந்து சமூகநீதி சரித்திரத்தில் மேலும் முத்திரை பதித்த தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் மனந்திறந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 4

நாகர்கோயில் முதல் - சென்னை வரை பிரச்சாரத் திட்டம்

சமூகநீதி, நீட், மாநில உரிமை மீட்பு முதலியவற்றை முன்னிறுத்தி வரும் ஏப்ரல் 3 முதல், நாகர்கோயில் முதல் சென்னை வரை திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெறும் இத்தொடர் கூட்டங்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகள், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் முக்கியமாகப் பங்கேற்பார்கள் (பிரச்சாரத் தேதி, ஊர்கள் தனியே). கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அவர்களுடன் ஒருங்கிணைந்து இந்தக் காலகட்டத்திற்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் இத்தொடர் பிரச்சாரத் திட்டத்தை வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் நடத்தித் தரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுபட்ட மாவட்டங்களில் கழகச் சொற்பொழி வாளர்களை அழைத்து தெருமுனைக் கூட்டங்களை நடத்துமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளபடுகின்றனர்,

தீர்மானம் எண்: 5

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட வேண்டும்

+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நடை முறையை மாற்றி, நீட் என்ற நுழைவுத் தேர்வை நடத்தி, நீட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும்.

பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் சுற்றுச் சூழல், வாழ்க்கை முறைகள், தட்பவெப்பங்கள், தொழில்முறைகள், பல்வேறு கல்வித் திட்டங்கள் நிலவும் இந்தியத் துணைக் கண்டத்தில், ஒரே மாதிரியான தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர்க்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பல்வேறு பாடத்திட்ட முறைகளில் கல்விக் கூடங்கள் நடந்துவரும் இந்தியத் துணைக் கண்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களின் கல்வித் திட்ட அடிப்படையில் நீட் தேர்வை நடத்துவது - குறிப்பிட்ட சிபிஎஸ்இ முறையில் படிக்கும் மாணவர்களுக்கே வாய்ப்புகள் அதிகமாகும் என்பது வெளிப்படையாகும்.

+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடந்தபோது ஒரே ஒரு விழுக்காடு இடம் பெற்ற சிபிஎஸ்இ மாணவர்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 39 விழுக்காடு இடங்கள் கிடைத்தன என்றால், நீட் தேர்வு யாருக்குக் கூடுதலான வாய்ப்பினை அளிக்கக் கூடியது என்பது வெளிப்படையானதாகும்.

முதல் தலைமுறையாக கல்வி கற்க முன்வந்தோர், கிராமப்புற ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர் இந்த நீட் தேர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தப்பட்ட சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. நீட் தேர்வு என்பது கண்ணும், கருத்தும் உள்ள எவருக்கும் எளிதாகப் புரியக் கூடிய ஒன்றாகும்.

இந்த சமூக அநீதியை எதிர்த்துத்தான் தொடக்கம் முதல் திராவிடர் கழகம் பிரச்சாரம், போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் திமுக ஆட்சியில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்குத் தேவைப்படும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.

தமிழ்நாடு அரசின் சமூகநீதியைக் காப்பாற்றிட மேற்கொண்டு வரும் அரிய பணிகளுக்கு கட்சி மாச்சரியங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த ஒத்துழைப்பினையும் அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 6

கல்வியை மாநிலப் பட்டியலில்  கொண்டு வருக!

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியானது 1976ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் ஒத்திசைவுப் பட்டியலுக்குக் (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt லிவீst) கொண்டு செல்லப்பட்டது. மாநில அரசின் கருத்துக் கேட்கப்படவில்லை.

கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதால் நீட் என்றும், புதிய தேசியக் கல்விக் கொள்கை என்றும், ஒன்றிய அரசு மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமலேயே மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது. இந்தியா என்பது ஒரே நாடல்ல; பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியமாகும். ஒவ்வொரு மாநிலத்தின் தட்பவெப்பம், இயற்கைச் சூழல் தொழில்கள், பண்பாடுகள், வாழ்க்கை இயல்பு முறைகள் வேறுபட்டு நிற்கும் நிலையில் கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதுதான் சரியானதும் பொருத்தமானதும் நியாயமானதுமாகும். எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மாநில அரசுகளும் இந்த வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் : 7

புதிய தேசியக் கல்வித் திட்டம் புறக்கணிக்கப்பட வேண்டியதே!

ஒன்றிய அரசு செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள தேசியக் கல்விக் கொள்கைகள் பற்றி பல தளங்களிலும் விரிவாகப் பேசப்படுகிறது. இதன் பாரதூர விளைவுகள் குறித்து சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய மாநாட்டில் மாணவர்களும் கல்வியாளர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர் (8.8.2016)

அரக்கோணத்திலும் திராவிடர் கழகத்தின் சார்பில் இதற்காகவே திராவிடர் கழக மாணவரணி மாநாடு கூட்டி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய கல்வி என்று தோற்றத்திற்கு வசீகரமாக இருந்தாலும் அதன் உள்ளுக்குள் சனாதனப் பிற்போக்கு அம்சங்கள் படம் எடுத்து ஆடுகின்றன.

புதிய கல்விக் கொள்கை என்ன சொல்லுகிறது?

1. இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டமே!

2. இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை உள்ளடக்கியது!

3. அய்ந்தாம் வகுப்புவரை தேர்வு முறையில்லை. அதற்குப்பின் தேர்வு உண்டு. அதில் இரண்டு முறைக்குமேல் மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால், தொழில் பயிற்சிக்குச் செல்லவேண்டும். (அதாவது அதிகபட்சப் படிப்பே 5 ஆம் வகுப்புவரைதான்) 5 ஆம் வகுப்புவரை படித்தவன் தொழிலைக் கற்றுக்கொள்வது என்பது குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள மட்டுமே சாத்தியமாகும்!

4. உயர்கல்வி என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகும். அரசு உயர்கல்வியில் புதிய நிறுவனங்களைத் தொடங்காது.

5. மாநில அரசின் முடிவில் தலையிடுகிறது.

6. இந்தக் கல்வித் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்படும்.

7. இத்திட்டம் கல்வியாளர்களைக் கொண்டு வகுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்.காரரான ஜெ.எஸ்.ராஜ்புத் என்பவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

8. கல்வியைப் பன்னாட்டு மயமாக்கும் வர்த்தகத் தன்மை உடையது.

9. பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதமே இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், கல்வியை உலக மயமாக்கிடத் துடிப்பது விபரீதமான ஒன்றே!

10. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவில் ஒரே மாதிரியான பாடத் திட்டமும் நிர்ணயிக்கப்படுமாம். இதன் பொருள் இந்தியாவின் பன்முகத்தன்மை, பண்பாடு, மொழி, தட்பவெப்பம் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, இந்தியா ஒரே நாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை அரங்கேற்றப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் இடஒதுக்கீடு வரை பாதிப்புக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லாமையால் மருத்துவக் கல்லூரி பொதுப்போட்டியில்கூட தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், கிராமப்புற மக்கள்கூட சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளனர். புதிய கல்வித் திட்டத்தில் திணிக்கப்படும் நுழைவுத் தேர்வுமூலம் இந்த நிலை வேரோடு முற்றிலும் துடைத்து எறியப்பட்டுவிடும்.

எனவே, புதிய கல்விக் கொள்கை என்பதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாது என்று இக்கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டிற்கான புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு இருப்பதையும் இக்கூட்டம் வரவேற்கிறது.

தீர்மானம் எண் : 8

தனியார் துறைகளில் தேவை  இடஒதுக்கீடு

ஒன்றிய அரசு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்க்குத் தாரைவார்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சோசலிஸக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதாகும்; சோசலிச அரசு என்பதற்கு மாறாக கார்ப்பரேட் அரசு என்பதாக மாறிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மாற்றம் தேவை என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தனியார்களுக்கு அரசுத்துறைகளும், பொதுத் துறைகளும் தாரை வார்க்கப்படும்போது இத்துறைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது.

தனியார்த் துறைகளில் இப்போது இடஒதுக்கீடு கிடையாது என்ற நடைமுறைக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகும்போது, இதில் பதுங்கியுள்ள சமூகநீதிக்கு எதிரான வன்மம் வெளிப்படையாகவே தெரிகிறது.

எனவே, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட உரிய சட்டத்தைக் கொண்டு வரு மாறு ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் இந்தவகையில் ஒன்றிய அரசை திடமாக வலியுறுத்திச் செயல்படவைக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

(ஆ) குறிப்பிட்ட சில துறைகளில் இடஒதுக் கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை ரத்து செய்து, அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

குறிப்பாக நீதித்துறையில் நீதிபதிகள் நியமனங் களிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

(இ) ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரவாதம் செய்யப்பட்டும், கடந்த எட்டு ஆண்டுகளில் அந்தவகையில் எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். ஒன்றிய அரசுத் துறைகளில் 8.70 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சராலே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018 காலகட்டத்தில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது இருமடங்காக அதிகரித்துள்ளதாக சி.எம்.அய்.இ. என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உடனடியாக வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப் படும் கோடானுகோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்றும் வேலை வாய்ப்பு என்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 9

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் அவர்கள் தம் நீண்ட பொதுவாழ்வில் இறுதியாக அறிவித்தது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அதற்கான சட்டங்கள் இரு முறை நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டின்  கோயில்களில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதிகளிலிருந்தும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர்.

கேரள மாநிலத்திலும் 60க்கும் மேற்பட்ட கோயில்களில் இவ்வாறு நியமனங்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் இரண்டு கோயில்களில் இவ்வாறே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இதனை எதிர்த்து, கோயில்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கட்டை விரலுக்கும் கீழே வைத்திருந்தவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

அனுபவமும், திறமையும் வாய்ந்த வழக்குரை ஞர்களை நியமித்து, நடைமுறையில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலை தொடர ஆவன செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனை வருக்கும் அர்ச்சகராகப் பணியாற்றிட வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்நாடு அரசினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10

மாநில உரிமைகளைப் பறிப்பதா?

உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசின் துறைகளாக உள்ள நிலையில், மாவட்ட நீதிமன்றங்களும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தாகும்.

நாகப்பட்டினத்தில் இருக்கும் ஒரு மாவட்ட நீதிபதியை ஒன்றிய அரசு நினைத்தால் அஸ்ஸாமுக்கும் காஷ்மீருக்கும் கூட மாற்றலாம்.

இப்படி மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன் றையும் விழுங்கும் முதலையாக ஒன்றிய அரசு உரு வெடுத்திருப்பதை இக்கூட்டம் கண்டனம் செய்கிறது. உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் இதில் தலையிட்டு மாநில உரிமையை மீட்க வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

மாநில அரசின் உரிமைகளை மேலும் மேலும் பறிக்கும் ஒன்றிய அரசின் ஒற்றை ஆட்சிப் போக்கை மாநில அரசுகள் வலிமையாக எதிர்த்து, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை முறியடிக்கவேண்டும் என்று இக்கூட்டம் மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் : 11

கருநாடகத்தில் சட்டத்தை மீறிக் கட்டத் துடிக்கும் மேகதாது அணை தடுக்கப்படவேண்டும்

1. 1892இல் முதன் முதலாக காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை உருவானது. அப்போது, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக முதல் ஒப்பந்தம் உருவானது.

2. ஒப்பந்தப்படி சென்னை மாகாண அரசு அனுமதி யின்றி, மைசூர் அரசு, காவிரியின் குறுக்கே அணைகள் கட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

3. 1900ஆம் ஆண்டில் கூட சென்னை மாகாண அரசின் அனுமதி பெற்றே கருநாடகம் காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்மின் நிலையம் அமைத்தது.

4. அதன்பிறகு 1924ஆம் ஆண்டு சென்னை மாநிலமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே, 1929இல் கருநாடக அரசு, 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையைக் கட்டியது.

5. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி, கருநாடக அரசு காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்குக் கூடுதலாகக் கிடைக்க வேண்டிய நீரைத் தடுத்தது. இதுவே தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி நடந்த கருநாடகாவின் முதல் விதிமீறல்.

6. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கருநாடக அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 575 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.

7. 1924இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1974இல் இரு அரசுகளும் புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகத் தவறாகக் கூறி, கருநாடக அரசு தம் மாநிலத்தில் காவிரி நீர்ப் பாசனப் பரப்பை விரிவுபடுத்தியது. காவிரியின் துணையாறுகளின் குறுக்கே புதிதாக பல சிறிய அணைகளைக் கட்டி, காவிரியில் கலக்கும் நீரைத் தடுத்ததால், தமிழ்நாட்டுக்கு வரும் நீர் வரத்து குறையத் தொடங்கியது.

8. காவிரி நடுவர் நீதிமன்றம், 1991 ஜூன், 25இல் கரு நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி. நீர் வழங்கவேண்டும் என, இடைக்காலத் தீர்ப்பில் கூறியது.

9. 2007 பிப்ரவரி 5இல் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாடு 419 டி.எம்.சி, கருநாடகா 270 டி.எம்.சி., கேரளா 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி., என்றவாறு நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

10. 2015ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டு வதற்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய கருநாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

11. 2018ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கருநாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

12. இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, கடந்த அஇஅதிமுக ஆட்சியில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.

13. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கருநாடக அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் கூறியது.

14. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

15. மேகதாது அணை கட்ட அனுமதியே தரவில்லை, தமிழ்நாடு அரசின் மனு அர்த்தமற்றது. அதனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனுதாக்கல் செய்தது.

16. மேகதாதுவில் அணை கட்டி 66 டி.எம்.சி தண் ணீரைத் தேக்கினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும்.

17. காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றிக் கட்டப்படுகிறதா என 25.05.2021 அன்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதுடன், ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

18. இந்த உத்தரவை எதிர்த்து கருநாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர, 11.06.2021 ஜூன் மாதம் 11ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

19. இந்த நிலையில் கருநாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளன.

20. கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆண்டுக்குள் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று 10.03.2022 அன்று அறிக்கை விட்டார்.

21. தமிழ்நாடு அல்லது கருநாடகா என எந்த மாநிலம் அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அந்த ஆணையத்தில் தென்மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற தீர்ப்பால் காவிரி நதிநீர் முறையான வகையில் பங்கிட்டுத்தர வேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. மேலும் காவிரி நதி மீதான எந்தவிதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும்.

22. சட்டத்தின் நிலைப்பாடுகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பும் இவ்வளவு தெளிவாக இருக்க, இவற்றை யெல்லாம் துச்சமாக மதிப்பது - அரசு என்ற தன்மைக்கு உகந்தது தானா என்ற கேள்வி எழுகிறது.

23. ஒன்றியத்திலும் கருநாடகத்திலும் பி.ஜே.பி ஆட்சி நடைபெறுவதால், மேகதாதுவில் அணையைக் கட்டினால்,அது இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிவதற்குச் சமமாகும்.

தமிழ்நாடு அரசு மேகதாதுவில் நகர்த்தப்படும் புள்ளிகளைத் துல்லியமாக அவ்வப்பொழுது விழிப் பாகக் கவனித்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் : 12

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருப்பது மிக அவசியம்

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பார்ப்பனர்களுக்கே சொந்தமானது என்பது போல் நாளடைவில் ஆனது; இந்தத் கோயில்களுக்கென்று இருந்த சொத்துகள் நிலங்கள் எல்லாம் பார்ப்பனப் பெருச்சாளிகளின் கூடாரமாகிவிட்டன.

இந்த நிலையில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத்துறை சட்டம் நிறைவேற்றப்பட்டது (1926) ஓய்வு பெற்ற நீதிபதி பி.வெங்கட்ரமண ராவ் நாயுடு தலைமையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறைக் கூட்டம் மேலும் செயல் படுத்தப்பட்டது. (1959) சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இதற்கான நியாயத்தை உறுதிப்படுத்தியது. (1960-1962)

தீட்சதர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு அளவே இல்லை. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு கோயில்களை ஏற்கெனவே உண்டுகொழுத்த கோயில் பெருச்சாளிகளிடம் கோயிலையும், அதன் திரண்ட சொத்துகளையும் ஒப்படைக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கோயில்கள் அரசின் கட்டைவிரலின் கீழ் இருக்கவேண்டுமா என்று நீதிபதிகளே கருத்து தெரிவிக்கும் நிலையை அலட்சியப்படுத்திவிடவும் முடியாது. எந்தவித சமரசத்துக்கும் இடமில்லாமல், கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதே பாதுகாப்பானது என்பதால் இப்பொழுது இருக்கும் நிலையே தொடரப்படவேண்டும் என்று இக்கூட்டம் ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் போன்று தனியார் களின் வசம் இருக்கும் கோயில்களும் இந்து அற நிலையத் துறையின் வசம் கொண்டுவரப்பட தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் : 13

கல்விக் கூடங்களில் வீண் மத சர்ச்சை

கல்விக்கூடம் செல்லும் மாணவர்களுக்குச் சீருடை என்பது, கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதில் இஸ்லாமியப் பெண்கள் அணிந்து வரும் ஹிஜாப் உடையை அந்த இஸ்லாமியப் பெண்கள் அணிந்துவரக்கூடாது என்ற பிரச்சினை, கருநாடக மாநிலத்தில் வெடித்தது, இப்பொழுது அகில இந்திய அளவில் பேருரு எடுத்துள்ளது. கருநாடக மாநில உயர்நீதிமன்றமும் ஹிஜாப் உடை அணிந்துவரக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மத அடையாளம் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம் என்றால், திருநீறு அணிவது, நாமம் போடுவது, பூணூல் அணிவது, குடுமி வைத்துக் கொள்வது என்பவையெல்லாம் பச்சையான மத அடையாளங்கள் தாம். ஆகையால் அவற்றையும் அணிந்து வரக்கூடாது என்று சட்டம் இயற்றுமாறு ஒன்றிய அரசினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

உண்மையான மதச்சார்பின்மையை பாரபட்சம் இல்லாமல் நிலைநிறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் ஒன்றிய அரசை மேலும் மேலும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

ஜாதி ஆணவக் கொலை புதிய சட்டம் தேவை!

அண்மைக்காலமாக ஜாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சட்டப்படியான வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் எந்த ஜாதியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும்விரும்பித் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்கான உரிமையாகும். இதில் ஜாதி, மத வெறித்தனத்துடன் தலையிட்டுக் கொலை செய்வது மனிதத் தன்மைக்கும், சமத்துவ உணர்வுக்கும் எதிரானதாகும். இத்தகு ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஜாதி, மத ஆணவக் கொலையைத் தடுத்து நிறுத்திட, அவசரமாகச் சட்டம் இயற்றுமாறு, ஒன்றிய மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 15

பா.ஜ.க.வின் திட்டங்கள் - ஊடுருவல்கள்

அண்மையில் அய்ந்து மாநிலத் தேர்தல்களில் உ.பி. உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து புனேயைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுகாஷ் பல்சிகார் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்குரியது:

1. உ.பி.யில் பாஜகவின் அரசியல் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

2. தங்களை ஹிந்துக்கள் என்று சொல்ல வைத்து அதில்  ஒன்று திரட்டுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மக்களின் மிக இன்றியமையாத பிரச்சினைகளான - வேலைவாய்ப்பின்மை, வறுமை, விவசாயிகளின் போராட்டம், ஹத்ராஸ் பாலியல் நிகழ்வு, லக்கிம்பூர்கேரியில் ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி நடத்திய கொலை இவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

3. நாட்டைக் காப்பாற்ற தாங்கள்தான் உரிய தலைமை என மக்களை நம்பவைப்பது

என பாஜக அரசியல் ஏனைய கட்சிகளைவிட மாற்றாக அமைந்துள்ளது. இதற்கு மாற்றான அரசியலை எதிர்க்கட்சிகள் வலுவாக ஒன்றுபட்டு அமைக்க முடியவில்லை.

தற்போது தமிழ்நாடு, கேரளம் ஆகிய இந்த இரண்டு மாநிலங்களில்தான் பாஜகவின் ஹிந்துத்துவாவிற்கு மாற்றுச் சித்தாந்தத்தைத் தரக்கூடிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு வழிகளில் கால்பதிக்கத் திட்டமிட்டு, செயலாற்றி வருகிறது.

எடுத்துக்காட்டாக,

பாரதிய சிக்ஸான் மண்டல் எனும் வலதுசாரி இந்து அமைப்பு கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடையே வேகமாகப் பரவி வருகிறது.

நாக்பூரைத் தலைமையகமாகக் கொண்ட இவ் வமைப்பு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் கிளைகளைத் தொடங்கி வருகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விஜய பாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழின் சந்தாதாரர் ஆக்கப்பட்டு வாரந்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படுகிறது.

பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் உறுப்பி னர்கள் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று இந்த உறுப்பினர்களிடையே விவா திக்கப்படுகிறது. மத்திய அரசு நம்மிடையே உள்ளது, ஆளுநர் அலுவலகம் நமது கையில் உள்ளது. ஆகவே, உயர்கல்வித் துறையில் உயர்பதவிகளை நம்மால் மட்டுமே அடைய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது.

இதில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலா னவர்கள் சங்க அனுபவம் கொண்டவர்களோ சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களோ கிடையாது; இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தங்களுக்குப் பதவி வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக இவர்கள் ஆர்எஸ்எஸின் கிளைகளான விஎச்பி, ஏபிவிபி போன்ற அமைப்புகளின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பாரதீய சிக்சான் மண்டல் என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்கள் தங்களது துறைகளில் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களைச் சேர்த்து அவர்கள் மூலமாக ஏபிவிபி எனும் இந்து மாணவர் அமைப்பை வளர்க்கின்றனர்.

இதை கல்லூரி அளவில் கண்காணிக்கவும் எதிர் வினை ஆற்றவும் செயல்திட்டம் வேண்டும்.

மற்றொன்று, சில மாவட்டங்களில் உள்ள தனியார் ஆலைகளில் கிராமப்புற இளைஞர்களைப் பணியில் அமர்த்தி, நிறுவனம் சம்பளம் தரவும், இளைஞர்கள் ஆலைகளில் பணி செய்திடாமல், கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்திடும் நிலையும் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகளின் மறை முகமான தந்திரமான மேற்கண்ட நடவடிக்கைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, இதற்கான எதிர் நடவடிக்கைகள், திட்டங்களை சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கி, முறையான வகையில், தீவிரமாக ஈடு படுவது என்றும், இதில் ஒத்த கருத்தினைக் கொண்ட இடதுசாரி மற்றும் முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து செயல்படுவது என்றும் திராவிடர் கழகம் தீர்மானிக்கிறது.

சட்டத்துக்கு விரோதமாகவும் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும் இரகசியமாகவும் செயல்பாடுகளைக் கொண்ட பாரதீய சிக்சான் மண்டல் எனும் அமைப்பு செயல்படுவதையும், அந்த அமைப்போடு தொடர்பு கொண்டும் ஈடுபாடு கொண்டும் கல்லூரி பல்கலைக் கழக பேராசிரியர்களுடன் தொடர்புக்கொண்டு செயல்படுவதையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும், இதை உடனடியாகச் செயல்படுத்தாவிட்டால் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குள் ஜாதி, மத சச்சரவுகள் - கலகங்கள் உருவாகும் ஆபத்து விளையும் என்பதையும் இக்கூட்டம் எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது.

பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது வரை இவ்வமைப்பு விவாதிக்கிறது என்பது எத்தகைய விபரீதம் என்பதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இதில் முக்கிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை எடுப்பது அவசியமானது என்பதைத் தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் : 16

கழக வேலைத் திட்டங்கள்

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டையொட்டி (1925-2025) பல்வேறு திட்டங்களை வகுத்து, அமைப்பைப் பலப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளது.

சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமைக் கட்சிக்கும் 2025 என்பதுதான் நூற்றாண்டாகும்.

மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிளவுகளை ஏற்படுத்தி, கலவரங்களை உண்டாக்குவது, பிற்போக்குத் தனமான பழைய சனாதன எண்ணங்களை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் பரப்புவது, பகுத்தறிவுக்கு எதிரான மூடநம்பிக்கைகளைப் பரப்புவது, சமூகநீதியை அறவே ஒழித்துக் கட்டுவது, பெண்ணடிமைத் தனத்தைப் போற்றுவது பார்ப்பனீயத்தை எல்லா வகையிலும் நிலை நிறுத்தாது போன்ற பிற்போக்குத்தனங்களை - அவர்களிடம் உள்ள அதிகார பலம், பணபலம், பத்திரிகை பலம், மக்களிடம் மண்டியுள்ள மூடத்தனம் இவற்றின் அடிப்படையில் செயல்படத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திராவிடர் கழகமும் முற்போக்கு அமைப்புகளும் இணைந்து உரிய திட்டங்களை வகுத்துச் செயல்படுவது அவசியமாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், கீழ்க்கண்ட திட்டங்களை வகுத்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(அ) கிராமப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள்

(ஆ) சுவரெழுத்துப் பணிகள்

(இ) துண்டு அறிக்கைகள் வெளியீடு

(ஈ) மாணவரணி, இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழக அமைப்பு - ஆகியவற்றைப் பலப்படுத்துவது, உறுப்பினர்களைப் பெருமளவில் சேர்ப்பது குறிப்பாக மாணவர் கழகங்களைக் கல்வி நிறுவங்களில் உருவாக்கி மாணவர்கள் மத்தியில் பெரியாரியலை வளர்த்தெடுப்பது - ஒவ்வொரு அணியும் தமக்கென்று உள்ள பணிகளில் அக்கறை செலுத்தி, ஆற்றிய பணிகளை - சாதனைகளை தலைமைக் கழகத்திற்கு ஆவண ரீதியாகத் தெரிவிப்பது.

(உ) பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை மாவட்டங்கள், ஒன்றியங்கள் வாரியாக நடத்துவது

(ஊ) புத்தக சந்தைகளை நடத்துவது

(எ) இயக்க ஏடுகளுக்கு இலக்கு வைத்து சந்தா சேர்ப்பது

(ஏ) சமூக வலைத்தளங்களைப் பெருமளவில் பயன்படுத்திப் பிரச்சாரம் - அதற்காக அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் தொழில்நுட்ப அணி - தன் பணிகளைத் திட்டமிட்டு விரிவுபடுத்துவது

(அய்) மாவட்டம், ஒன்றியம், கிராமம் வாரியாகக் கிளைக்கழகக் கழகங்களை அமைத்து கூட்டங்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டி ஆக்க ரீதியான கழகப் பணிகளைத் துரிதப்படுத்துவது

(ஒ) கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கழகத்தின் உயிர் மூச்சான விடுதலைக்கு சந்தாத்தாரராக இருப்பதை உறுதிப்படுத்துவது

(ஓ) கழகப் பொதுச்செயலாளர்கள், மாநில அமைப்பாளர், அமைப்புச் செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதிப் பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வது. சம்பந்தப்பட்ட பகுதியில் இயக்கப் பணிகளை, பிரச்சாரங்களை அதிகப்படுத்துவது உள்ளூர் இளைஞர்கள், மாணவர்களுடன் இணக்கமாகத் தொடர்பு கொண்டு கழகக் கொள்கைகளை எடுத்துக்கூறி இயக்கத்தின்பால் ஈர்ப்பது

(அவ்) பெரியார் படிப்பகங்களையும் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி நூலகங்களையும் சரிவரப் பராமரித்து, பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவில் அவற்றைப் பயன்படுத்தி பயன்பெறச் செய்வது உள்ளிட்ட கழகப் பணிகளைத் தொய்வில்லாமல் கழகத்தினர் மேற்கொள்வது என்று திட்டவட்டமாக முடிவு செய்கிறது.

தீர்மானம் எண் : 17

ஏழுபேரை விடுதலைச் செய்க!

ஒரு கொலைக் குற்றம் தொடர்பாக ஏழுபேர் கடந்த 30 ஆண்டுகாலமாக சிறையில் வாடுகின்றனர். இவர்களை விடுதலை செய்யவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியும், தமிழ்நாடு அரசும் எழுவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தும், வாதாடியும் வரும்நிலையில், இதற்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநரும் ஒன்றிய அரசும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு அவர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:31 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செயற்குழு, தீர்மானம், பெரியார் திடல்

வியாழன், 25 மார்ச், 2021

இலங்கைக்கு எதிரான அய்.நா. தீர்மானம்: பாஜகவின் தமிழர் விரோதப்போக்கு!


March 24, 2021 • Viduthalai

இலங்கை அரசுக்கு எதிரான அய்.நா.தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக, அங்கு 2009  இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும், முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் அய்.நா. மனித உரிமை அவையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அய்.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியுள்ளது ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும்.

ஆனால், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசோ எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும், துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது.

தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்!

கி.வீரமணி  

தலைவர்,

திராவிடர் கழகம்

23.3.2021          

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:24 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அய்.நா., அறிக்கை, இலங்கை, தீர்மானம்

திங்கள், 15 மார்ச், 2021

பொதுக்குழுவில் கழகத் தலைவரின் "நவமணி" அறிவிப்புகள்


March 14, 2021 • Viduthalai

 1) திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள "தி.மு.க. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்! பா.ஜ.க. - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்?" என்ற நூலை நாடெங்கும் பரப்பிட வேண்டும்.

2) கரோனா காலத்திலும் 'விடுதலை' பி.டி.எப். மூலம் வெளிவந்தது. வாசகர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதி கரித்தது - கரோனா காலத்திலும் 'விடுதலை'க் குழுமத்தினரின் பணி சிறப்பானது. அன்னையார் பிறந்தநாள் முதல் (10.3.2021) மீண்டும் எட்டுப் பக்கங் களுடன் பல வண்ணத்தில் வெளி வந்துள்ளது. 'விடுதலை' சந்தா எண் ணிக்கை பெருக வேண்டும்; கழகத் தோழர்கள் இந்தப் பணியில் முக்கியமாக ஈடுபட வேண்டும்.

நம்முடைய செய்திகளை இருட்ட டிப்பதில் ஊடகங்கள் விழிப்பாக இருப்ப தால் 'விடுதலை' பரப்பும் பணியில், சந்தா சேர்க்கும் பணியை கழகத்தினர் (பகுத்தறி வாளர் கழகம் உட்பட) தீவிரமாக ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

3) மே மாதத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட வேண்டும் (ஏலகிரி, மேட்டுப்பாளையம், குற்றலாம் உட்பட).

4) 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்களை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். குறி வைக்கிறது. இதனை நாம் முறியடித்தாக வேண்டும். இளைஞர்கள், மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை, வெளியீடுகள் மூலமும், இயக்கப் பொறுப்பாளர்கள், களப்பணி யாளர்களது தக்க அணுகுமுறைகள் மூலமும் முறியடித்தாக வேண்டும்; இது பெரியார் மண் - திராவிட இயக்கச் சித்தாந்த மண் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

5) சிறுகனூரில் "பெரியார் உலகம்" பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதியின் வெற்றிகள் - களங்கள்

மகளிர் எழுச்சி வரலாறு

இயக்க வரலாற்றின் முக்கிய கட்டங்கள்

கோளரங்கம்

என்று பல்வேறு அம்சங்களுடன் பெரியார் உலகம் மலரும்.

"பெரியார் உலகம் - மக்கள் பங்களிப்புடன் நடந்தேற வேண்டும்.

வீட்டுக்கு வீடு, கடைக்குக்கடை நமது தோழர்கள் நேரில் சென்று விளக்கி, நன்கொடையை திரட்ட வேண்டும்.

ரூ.10, ரூ.25, ரூ.500 என்கிற வகையில் அதற்கான நன்கொடைப் புத்தகங்கள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும்.

பெரியார் பட ஊர்வலங்களை நடத்தி பெரியார் என்ன செய்தார் - அவர் தொண்டால் நம் மக்கள் பெற்ற பலன்கள் எத்தகையவை என்பதை விளக்கிப் பிரச்சாரம் செய்து நன்கொடை  திரட்டப் பட வேண்டும்.

6) கிராமங்களை முன்னிறுத்தி நமது பிரச்சாரப் பணிகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

7) பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருமகள் இறையனுக்குப் பிறகு அவரது மருமகள் பசும்பொன் செந்தில் குமாரி நிலையத்தின் இயக்குநராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். நாள் தோறும் திருமணங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திரும ணங்கள் ஏராளம் நடைபெற்று வரு கின்றன. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த நிறுவனம் தொடங்கப்பட வேண்டும்.

8) இயக்கத்தில் தலைமுறை இடை வெளியின்றி இருபால் தோழர்கள் பெருகி வருகின்றனர் - இதற்கு இந்தப் பொதுக் குழுவே சாட்சி.

மூத்த தலைமுறை என்று வருகின்ற போது, இங்கு வந்துள்ளவர்களை வைத்தே கூறிவிடலாம். அய்யா ராஜகிரி தங்கராசு, நாகர்கோயில் கிருஷ்ணேஸ்வரி,  குடந்தை வசந்தா கல்யாணி என்று  குறிப்பிட வேண்டும்.

நடுத்தர வயது என்று எடுத்துக் கொண்டால் நமது பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, இளைய தலைமுறையினர் என்று எடுத்துக் கொண்டால் மகளிர்ப் பாசறையைச் சேர்ந்த வழக்குரைஞர் மணியம்மை, வழக்குரைஞர் மதிவதனி போன்றவர் களைக் குறிப்பிட வேண்டும்.

நமது பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் போன்ற எண்ணற்ற தோழர்கள் தந்தை பெரியாரை நேரில் பார்க்காத தலைமுறையாவர். தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு இயக்கத்தில் இணைந்தவர்கள் மட்டுமல்ல - களப்பணியாளர்கள்.

இயக்கம் மக்கள்  சக்தியோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள்.

9) கரோனா ஒழிந்து விட்டது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறக் கூடாது. குறிப்பாக முகக் கவசம், சோப் போட்டுக் கை கழுவுதல் - தடுப்பூசி இவற்றில் கவனமாக நம் தோழர்கள் இருக்க வேண்டும். மற்றவர் களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

நடக்க இருக்கும் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றம் - காட்சி மாற்றம் மட்டுமல்ல - இனத்தின் மீட்சிக்கான மாற்றம். திராவிடத்துக்கும் - ஆரியத்துக்குமான சித்தாந்தப் போராட்டம்.

234 தொகுதிகளிலும் திமுக அணியை வெற்றி பெறச் செய்ய நம் தோழர்கள் உழைக்க வேண்டும். எனது தேர்தல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கப் படும்.

குடந்தை பொதுக் குழு வரலாறு படைத்து விட்டதற்குக் காரணமான மாவட்டத் தலைவர் நிம்மதி முதல் அனைத்துத் தோழர்களுக்கும், பொறுப் பாளர்களுக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:07 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: குடந்தை, தீர்மானம், பொதுக்குழு

புதன், 26 பிப்ரவரி, 2020

திருச்சி - திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

* நீட் தேர்வை ரத்து செய்க! தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக!

* ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக!

* சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடுக்கு வழி செய்க!

* குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேட்டைக் கை விடுக!

சென்னையில் மார்ச் 10ஆம் தேதி

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

மார்ச் 23 ஆம் தேதி ‘நீட்' மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடெங்கும் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்!

திருச்சி, பிப்.21 சென்னையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா உள்ளிட்ட 14 தீர்மானங்கள், திருச்சி பெரியார்  மாளிகை, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில், (21.2.2020) திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1  இரங்கல் தீர்மானம்

இன்று (21.2.2020) திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட

இரங்கல் தீர்மானம்

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், திராவிட இயக்க ஆர்வலருமான ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் (வயது 90, மறைவு 27.12.2019),

குஜராத் மாநில உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (வயது 93, மறைவு 15.1.2020),

முதுபெரும் சுயமரியாதை வீரர் புரவலர் மதுரை ஆசிரியர் இராமசாமி (வயது 85, மறைவு 21.1.2020 - உடற்கொடை)

கோவை பாரதியார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் கே.மாரிமுத்து (வயது 92, மறைவு 28.1.2020)

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நெல்லை தோப்பில் முகமது மீரான் (வயது 74, மறைவு 10.5.2019),

சுயமரியாதை வீரர், மேனாள் மக்களவை உறுப்பினர் கோவை மு.இராமநாதன் (வயது 87, மறைவு 9.5.2019), சென்னை மாவட்ட தி.மு.க. மேனாள் செயலாளரும், மேனாள் மேலவை உறுப்பி னருமான ஆர்.டி.சீதாபதி  (வயது 82, மறைவு 21.5.2019), புதுச்சேரி திராவிடப் பேரவை நிறுவனர் ‘மிசா' நந்திவர்மன் (30.5.2019), திராவிட இயக்க எழுத்தாளர் ஆங்கில நூல்களின் படைப்பாளர் பேராசிரியர் அ.அய்யாசாமி (வயது 78, மறைவு 16.6.2019), திருமருகல் ஒன்றிய மேனாள் பெருந்தலை வர் சுயமரியாதை வீரர் சற்குணம் (வயது 91, மறைவு 30.6.2019), பகுத்தறிவுப் பாவலர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 6.11.2029 - உடற்கொடை), சிகாகோ தமிழ் ஆர்வலர் புரவலர் ராம்மோகன் (மறைவு, 12.12.2019), மலேசிய திராவிடர் கழகத் தோழர் மோகன் இராமசாமி (வயது 45, மறைவு 28.12.2019),

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள் அவர்க ளின் வாழ்விணையரும், சுயமரியாதைச் சுடரொளி யுமான இரா.சின்னப்பன் (வயது 71, மறைவு 28.1.2020),

பிரபல அறுவை மருத்துவரும் அரசு மருத்து வர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் லட்சுமி நரசிம் மன் (வயது 51, மறைவு 7.2.2020) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தன் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவரும், இளைஞர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவருமான - கழகப் பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை

கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற் கொடை), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்த திருச்சி ஞான செபஸ்தியான் (வயது 101, மறைவு 4.6.2019), முது பெரும் பெரியார் பெருந்தொண்டர், மேனாள்  சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர் பொறியாளர் சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் (வயது 90, மறைவு 6.6.2019), முதுபெரும் சுயமரியாதை வீராங் கனையும் எழுத்தாளர் ஓவியா அவர்களின் பாட்டியு மாகிய ஒரு நூற்றாண்டையும் கண்ட காந்திமதியம் மாள் (வயது 100, மறைவு 12.7.2019),

சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந் தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டினமூர்த்தி (வயது 84, மறைவு 19.8.2019 - உடற்கொடை), கழகச் செயல் வீரர் கபிஸ்தலம் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019), கழக வீராங்கனை - மகளிரணி செயற்பாட்டாளர் ஆசிரியர் பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை), திருச்சி மாவட்டக் கழக மேனாள் செயலாளரும், இயக்கச் செயல்வீரருமான ‘உண்மை' கிருஷ்ணன் (வயது 92, மறைவு 24.12.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஓடாக்கநல்லூர் தன.திருமலை (வயது 94, மறைவு 10.1.2020), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்புப் போராட்ட வீரர், செந்துறை கருத்தமணி என்ற நாராயணசாமி (வயது 96, மறைவு 24.7.2019),முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை கோ.அரங்கநாதன் (வயது 98, மறைவு 5.2.2020),

திருச்சி மேலகற்கண்டார்கோட்டை கழகத் தோழர் ஜோசப் செல்வராஜ் (வயது 44, மறைவு 26.4.2019), தூத்துக்குடி கழக மாவட்ட  மகளிரணி தலைவர் பெ.சாந்தி (வயது 53, மறைவு 1.5.2019 - உடற்கொடை), தூத்துக்குடி மாவட்ட புதூர் ஒன்றிய கழகத் தலைவர் சா.முத்துராஜ் (மறைவு 18.5.2019), கல்லக்குறிச்சி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.கண்ணன் (மறைவு 27.5.2019), பண்ருட்டி திருவதிகை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் து.செல்வராஜ் (வயது 78, மறைவு 31.5.2019), திருத்துறைப் பூண்டி கழக மாவட்டம் - விக்கிரபாண்டியம் கழகத் தலைவர் இரா.அழகேசன் (வயது 96, மறைவு 1.6.2019),

பிச்சாண்டார் கோவில் தோழர் செங்குளத்தான் (மறைவு, 20.6.2019), வேட்டவலம் பெரியார் பெருந்தொண்டர் ம.ஜெயராம் (வயது 82), ஆத்தூர் வாழப்பாடி பொறியாளர் பகுத்தறிவு (வயது 45, மறைவு 15.7.2019), பண்ருட்டி கோ.புஷ்பவல்லி (வயது 86, மறைவு 20.7.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காஞ்சிபுரம் அ.கோவிந்தன் (வயது 97, மறைவு 6.8.2019), தஞ்சை மாவட்ட மேனாள் மாவட்டக் கழக இளைஞரணி தலைவர் நீடாமங்கலம் வழக்குரைஞர் வி.அருளரசன் (மறைவு 6.8.2019), திருவாரூர் மாவட்டக் கழக மேனாள் செயலாளர் கமலாபுரம் காமராஜ் (மறைவு 11.8.2019), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் லால்குடி ராஜா என்ற இன்னாசிமுத்து (வயது 93, மறைவு 11.8.2019), தஞ்சை பூதலூர் கழகத் தலைவர் சந்தானம் (வயது 96, மறைவு 31.8.2019), மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை கழக செயலாளர் முருகன் (வயது 69, மறைவு 29.8.2019), லால்குடி - மேலவாளாடி திராவிடர் கழக செயலாளர் க.மாரிமுத்து (வயது 73, மறைவு 17.9.2019),

கோவை மாவட்ட வெள்ளலூர் கழக செயலாளர் தி.க. மணி (மறைவு 30.9.2019), கரூர் மாவட்டக் கழக மகளிர்ப் பாசறை செயலாளர் ஜே.செயலட்சுமி (வயது 29, மறைவு 1.10.2019), புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி கழக செயலாளர் கருப்பையா (வயது 75, மறைவு 21.10.2019), திருவாரூர் கிடாரங்கொண்டான் கழகத் தலைவர் கண்ணையன் (வயது 62, மறைவு 14.10.2019), தஞ்சை மாவட்டம் உடையார் கோவில் கழகத் தலைவர் சா.புகழேந்தி (வயது 60, மறைவு 11.11.2019), கும்பகோணம் கழக மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியக் கழக வீரர் பிச்சைமுத்து (மறைவு 27.11.2019), ஆவடி திருமுல்லைவாயில் எஸ்.பால கிருஷ்ணன் (வயது 83, மறைவு 1.12.2019), தஞ்சை பூதலூர் கோவிலடி பெரியார் பெருந்தொண்டர் சவுந்தரராசன் (வயது 81, மறைவு 2.12.2019),

கும்பகோணம் கழக மாவட்ட மகளிரணி  அமை ப்பாளர் கலைச்செல்வி (வயது 60, மறைவு 4.12.2019), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம்.சாகுல் அமீது (வயது 92), புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் சு.இளங்கோவன் (வயது 78, மறைவு 1.1.2020), தோழர் பெங்களூர் பாண்டியன், கழக செயல் வீரர் வாண்டையார் இருப்பு இராம கிருஷ்ணன் (மறைவு 30.1.2020), கந்தர்வக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் கோமாபுரம் இ.முரு கையா (மறைவு 30.1.2020), வடலூர் கழக வீரர் துரை.ஞானசேகரன் (மறைவு 13.5.2019 - உடற்கொடை),

வேலூர் மாவட்டம் - திருவலம் பெரியார் பெருந் தொண்டர் ‘தொண்டறச் செம்மல்' சி.எம்.சி.ராஜா (வயது 94, மறைவு 9.2.2020)

ஆகிய இயக்க வீரர்கள், வீராங்கனைகளின் மறைவுக்கு இப்பொதுக்குழு இரங்கலைத் தெரிவிப் பதுடன், அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆறுதலையும் தெரிவித்து, அப்பெருமக் களின் அளப்பரியா, ஈடு இணையற்ற கழகப் பெருந் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

தீர்மானம் எண்: 2

அன்னை மணியம்மையாருக்கு

நூற்றாண்டு நிறைவு விழா நடத்துதல்

தந்தை பெரியார் அவர்களுக்குச் செயலாளராகவும், தாயாகவும், செவிலியராகவும் இருந்தவரும், அவர்களின் ஆயுள் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவரும், தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், கல்வி நிறுவனங்களையும் கட்டிக் காத்தவருமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை வரும் மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் வெகு சிறப்புடன் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2020 மே 16 ஆம் தேதி அரியலூரில் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டை எழுச்சியுடன் நடத் துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 3

நீட் மற்றும் நெக்ஸ்ட் (NEXT)

தேர்வை நிரந்தரமாக நீக்குக!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை தொடர்ந்து பதினொரு நாட்கள் தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய நீட் ரத்து, புதிய கல்விக் கொள்கையின் விபரீதம், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகளால் ஏற்படும் இடர்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய விழிப் புணர்வுப் பயணம், கட்சிகளைக் கடந்து அனைத்து மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நீட் தேர்வின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப் பைப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அளவில் கொண்டு சேர்த்தது.

சமூகநீதி வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியான இந்தப் பரப்புரைப் பயணத்தினை மேற்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பயண ஏற்பாட்டாளர் களுக்கும், கழகத் தோழர்களுக்கும் இப்பொதுக் குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆதரவு அளித்த பொது மக்களுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.

வட நாட்டில், நீட் தேர்வு என்பது கண் துடைப்புக்கான தேர்வு, மோசடி என்பதை வட நாட்டுச் செய்தித்தாள்களே அம்பலப்படுத்தி வருகின்றன.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா குறித்து, மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த நீட் தேர்வு மற்றும் மருத்துவர் தகுதிக்கான நெக்ஸ்ட் (NEXT) தேர்வையும் நிரந்தரமாக ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. நீட்டினால் ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய புள்ளி விவரங் களே தெளிவாக உணர்த்துகின்றன. தனிப் பயிற்சி (Coaching) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் இலட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். ஏழை எளிய மக்கள் அத்தகு பயிற்சிகளில் சேர முடியாத நிலை. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீட்டைத் தொடர்வது கண்டனத்திற்குரியது - மாநில அரசும் இப்பிரச்சினையில் போதிய அக்கறை செலுத்தவில்லை. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

‘நீட்'டை முழுவதுமாக ரத்து செய்யக் கோரும் வகை யில் மத்திய அரசு அலுவலகங்களின்முன், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4

தேசிய கல்விக் கொள்கை வரைவு- 2019 - திரும்பப் பெறுக!

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரானதாகவும், சமஸ்கிருதமயமான கல்வியைத் திணிக்கக்கூடியதாகவும் முழுமையாக வணிக மயமாக்குகின்ற வகையிலும் வகை செய்யப் பட்டுள்ள இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.

இந்தியப் பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

1976இல் நெருக்கடி காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் (State List) இருந்து ஒத்திசைவுப் பட்டி யலுக்கு (Concurrent  List)  கொண்டு செல்லப்பட்டது. இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு, கல்வியை முற்றிலும் மத்திய தொகுப்புக்கு மட்டும் உரியது போன்று தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.

இந்தியா போன்ற பன்மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல மதங்கள் மாறுபட்ட இயற்கைச் சூழல்கள் கொண்ட நாட்டில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு, மொழி சார்ந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் கொண்டு செல்வதற்கான நியாயத் தீர்வாக இருக்கும். இதற்கான முயற்சியை அனைத்துக் கட்சி களும் எடுத்திட வேண்டும் என்றும் நாடாளுமன்றம் வாயிலாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (அ)

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி

சமூக நீதிக் கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கும் வகையில், மத்திய அரசு பார்ப்பன  உயர்ஜாதியினர்க்கு 10% இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி அதனை அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் அமல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் அனைத்துத் துறை சார்ந்த உயர் பதவிகளிலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன-உயர்ஜாதி யினர்க்கு, மேலும் இடஒதுக்கீடு என்பது சட்ட விரோத மான சமூகநீதிக்கு விரோதமான, நியாய விரோதமான செயலேயாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு, பல அமைப்புகளால் தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பினை விரைவில் வழங்கி, சமூக  நீதியைக் காத்திட வேண்டும் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், மாநில அரசுகளும் இந்த வகையில் வலியுறுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (ஆ)

யு.பி.எஸ்.சி., அய்.ஏ.எஸ். முதலிய  மத்திய அரசு தேர்வுகள் எழுதுவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக உயர்ஜாதி ஏழையினருக்கும்  வயது வரம்பு சலுகை என்கிற அளவுக்கு மத்திய பி.ஜே.பி. உயர் ஜாதியினர்மீது பெரும் அக்கறை கொண்டு மேலும் மேலும் சலுகைகள் அளிப்பதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக ஏற்கெனவே கல்வி, வேலை வாய்ப்புகளில் வளர்ந்த நிலையில் உள்ளவர்களை சமநிலையில் வைத்துப் பார்ப் பது சமூகநீதிக்கு எதிரானது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதனைக் கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்

ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவை

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினரின் கணக்குகள்தான் எடுக்கப் படும்; பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள ஜாதி வாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக் காட்டில் இடஒதுக்கீடு கேட்டு  வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஜாதிவாரிப் பட்டியல் எடுக்கப்படும்போது, உயர் ஜாதியினரின் எண்ணிக்கையும் வெளிப்பட்டு, அவர் களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் உண்மை வெளிப்படும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் -உயர்ஜாதி அதிகார வர்க்கம் தடுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படை யாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப்  புள்ளி விவரம் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் கபடத்தனமான இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுத்து, ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன் னிட்டும் தவிர்க்கக் கூடாது; ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் பொதுக்குழு அனைத்துக் கட்சி களையும் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஒடிசா மாநில அர சைப் போல, தமிழக அரசும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006 இல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  எத னையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப் பட வேண்டும் எனஇப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8 (அ)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக ஆட்சி யில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லும் என்ற அடிப்படை யில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநில இடது சாரி அரசால் 60-க்கும் மேற்பட்ட கோவில் களில் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை நியமித்துள்ளது. தமிழ் நாட்டில் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகராக பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.மாரிசாமி என்ற ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மேலும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக பணி நியமனம் செய்யு மாறு பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் பயிற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.

தீர்மானம் எண்: 8 (ஆ)

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்ற அரசு ஆணை (நிலை) எண் 28 ஊரக வளர்ச்சி (மதிக) தெளிவாக இருந்தும் சில சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதமாகும். இதனைத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிடுக!

நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான் மையை தவறாகப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் (CAA), மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை குழிதோண்டிப் புதைப் பதேயாகும். அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சி னையைத் திசைதிருப்பி, மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் விபரீத செயலே என்று இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.

மேலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) என்பதும், அதில் பெற்றோரின் பிறந்த சான்றிதழ் உள் ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் கேட்பதும், அனைத்து மக்களையும் துன்புறுத்தும் அலைக்கழிக்கவும் செய்யும் நடைமுறை சாத்தியமில்லாத செயல்பாடே ஆகும்.

அனைத்துத் தரப்பு மக்களும், இதன் ஆபத்தை உணர்ந்து, மத்திய அரசு இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்துவதை  அலட்சியப்படுத்தாமல், மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும்வகையில், மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மக்கள் பதிவு ஆகியவற்றை உடனே திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10

ஜாதி ஒழிப்பு - பாலியல் வன்கொடுமைத் தடுப்பு - சட்டங்கள் தேவை

ஜாதி ஆணவக் கொலைகளும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் நாளும் பெருகி வருவது வெட்கக் கேடானதாகும். சுதந்திர நாடு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, உண்மை சுதந்திரத்துக்கு எதிரான ஜாதிய கட்டமைப்பு காப்பாற்றப்படுவது வேத னைக்குரியதாகும். அதேபோல பாலின பாகுபாடும் சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் சகோதரத்துவத் துக்கும் முற்றும் எதிரானவையே!

இந்த நிலையில் ஜாதி ஒழிப்புக்கான சட்டங்களும் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளால் இயற்றப் படுவதோடுகூட, அவற்றைத் துல்லியமாக செயல்படுத் துவதுதான் சுதந்திர நாடு என்பதற்கான அடிப்படை அடையாளம் என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகவே தெரிவித்துக் கொள்கிறது.

அதுபோலவே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை பெற்றோர்களே படுகொலை செய்வது என்பது மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் குற்றமாகும்.

சுடுகாட்டிலும்கூட ஜாதி வேறுபாடு கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். கையால் மலம் அள்ளும் கொடுமை உடனடியாகத் தடுக்கப்டவேண்டும் என்றும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்கள் மீதான 576 வன்முறை வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே நிலுவையில் உள்ளன. தமிழ் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 14,545 நிலுவையில் உள்ளன. இதில் 1751 பாலியல் வல்லுறவு வழக்குகளுடன் 3181 பெண் களுக்குத் தொந்தரவு கொடுத்த வழக்குகளும் ஆகும்.

மாநிலக் குற்றவியல் பதிவுச் செயலகத்தின் பகுப் பாய்வுப் புள்ளி விவரம், தமிழ்நாட்டில் 82 விழுக்காடு பாலியல் குற்ற வழக்குகள் காவல்துறை மற்றும் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது!

இந்தியக் குழந்தைகளில் 53.22 விழுக்காடு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், இதில் 21.09 விழுக்காடு குழந்தைகள் மிகவும் கொடூரமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய உறவினர்களே இக்குற்றங்களில் ஈடுபடு கின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையங்கள் என்று இருந்தும், மகளிருக்கென்றே தனிக் காவல் நிலை யங்கள்கூட இருந்தும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்வது வெட்கக் கேடானது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகள் முடிக்கப் பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் கடினமான விதிகளை வகுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த நிர்பயா பெயரில் பெண்கள் வன்கொடுமையைத் தடுப்பதற்காக மத்திய அரசு ஓர் ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தும், அந்த நிதியைப் பெரும்பாலான மாநிலங்கள் தமிழ்நாடு உள்பட பயன்படுத்தவில்லை என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியதே. அந்நிதியைத் தக்க வகையில் பயன்படுத்திட முன்வர வேண்டும் என்று இப்பொதுக் குழு மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகளையும் துப் பாக்கிப் பயிற்சியையும் அளிப்பதற்கும் வகை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

கல்வி, உத்தியோகங்களில் பெண்களுக்கு 50 விழுக் காடு இடங்கள் அளிக்கப்படுவதற்குத் தேவையான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மத்திய அமைச்சரவையில் 75 பேர்களுள் பெண் களுக்கான எண்ணிக்கை வெறும் ஒன்பது பேர்கள் மட்டுமே. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றிட, தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ) இதனை நிறைவேற்றுவதில் காட்டும் தயக்கம், அதன் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

பெண்களின் 50 விழுக்காடு வாக்குகள் மட்டும் தேவை; அதே நேரத்தில் அவர்களுக்கான உரிமை களைப் பெற்றுத் தருவதில் தயக்கமும், தடங்கலும் செய்யும் அரசியலைப் புரிந்து கொண்டு, 50 விழுக்காடு இடங்கள் என்பதை முன்னிறுத்தி வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஆதரவு தருவது - வாக்களிப்பது என்ற முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் சமுகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 11

இரயில்வே துறையில்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ளன. ரூ.15,000 கோடி அளவுக்கான திட்டங்கள் இவை.

2019 செப்டம்பரில் தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் தென்னக இரயில்வே மேலாளரைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் வைத்தனர்.

ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில்  வெறும் பத்தாயிரம் ரூபாயை அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கேலிக்குரியதாக ஆக்கி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத் துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12

இணைய வழி சூதாட்டம் என்னும்

பேராபத்தினைத் தடுத்து நிறுத்துக!

ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையவழி சூதாட்டம்  விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழி கின்றன.  நாட்டு மக்களை சீரழிக்கும் வகையில், பல்வேறு வடிவங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது இணையவழி சூதாட்டங்கள் மக்களின் பணத்தை மட்டுமின்றி, நிம்மதியையும் பறிக்கின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் இணையவழி சூதாட்ட மாகும். முகநூல் தொடங்கி செய்தி இணையதளங்கள் வரை எதைத் திறந்தாலும், அதில் வாசகர்களை கவரும் வகையில் பெரிய அளவில் தெரியும் விளம்பரங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களாகவே உள் ளன. அத்துடன், ஆன்லைன் சூதாட்டத்தில் பங் கேற்க விரும்புபவர்கள் அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது.

இதற்கு மயங்கி, ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள், தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகின்றனர். கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. நவீன செல்போன்களின் வருகையால் பாமரர்கூட  இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் சிக்கிவருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து விட்டு தவிக்கின்றனர்.

பிரபலமடைந்து வரும் ஆன்லைன் ரம்மி இணையத்தில் நஞ்சு போன்று பரவி லட்சக்கணக் கானவர்களை பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஒருமுறை இதில் விளையாட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும். கடந்த காலங்களில் தமிழகத்தில் பெருக்கெடுத்த பரிசுச் சீட்டுக்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்தன. மக்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு அதற்குத் தடை விதித்தது.

தற்போது இணையவழி  சூதாட்டம் தமிழகத்தில்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

2018 ஆம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் ‘மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் நடைபெறுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரம்மி ஆடுவதும் சூதாட்டம் தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால், அதை எதிர்த்து சூதாட்ட விடுதிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டி ஆன் லைன் ரம்மி நிறுவனங்கள் மனுத் தாக்கல் செய்தன. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி, தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்று கூறி, பல நிறுவனங்கள் அதை நடத்தி வருகின்றன.

தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரபல நடிகர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் இந்த விளையாட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்புடனே விளம்பரம் செய்யப்படுகிறது.

உண்மையில், சூதாட்ட விடுதிகளில் விளையாடப் படுவதைப் போன்றுதான் ஆன்லைனிலும் ரம்மி விளையாடப்படுகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்;  ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சினை கள் ஏற்படக்கூடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

இந்த இணையவழி சூதாட்டம் காரணமாக சென்னை,  கோவை, பெங்களூரு, போபால், டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் 15 தற்கொலைகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

எனவே, இந்தச் சமூக அழிவு விஷ விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13

‘ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரால் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பதும், கிராமப்புற வளர்ச்சிகளில் கவனம் செலுத்தாமையும்!

‘ஸ்மார்ட் சிட்டி' என்று கூறி, ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டுவதும், அதேநேரத்தில், கிராமப்புறங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமையும் கண்டிக்கத்தக்கதாகும்.

நகரங்கள் என்றால் வருண தருமத்தில் பிராமணத்தன்மை கொண்டது போலும், கிராமப்புறங்கள் பஞ்சம, சூத்திர வருணத்தன்மை கொண்டதுபோலும் நிலவுவதை - தந்தை பெரியார் சுட்டிக்காட்டியதையும் இந்த இடத்தில் நினைவூட்டி, கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்ற திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் ‘இஸ்கான்' அமைப்பு என்ற ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின்மூலமாக சென்னை மாநகரத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் காலை உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்க்கப்பட இருப்பது - பார்ப்பனீய, இந்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கையே! உணவுப் பிரச்சினையில் மத நஞ்சைப் புகுத்துவதை ஏற்க முடியாது என்றும், இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

உணவில் மத நஞ்சைப் புகுத்தும் இந்தத் திட்டத்தைக் கண்டித்தும், எதிர்த்தும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் வரும் 25.2.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள்

கரவொலி எழுப்பி வரவேற்றனர்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை கழகத் தோழர்கள் எழுந்து நின்று உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். (21.2.2020)

- விடுதலை நாளேடு 21.2. 20

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:09 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திருச்சி, தீர்மானம், பொதுக்குழு
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • வாகை சூடிய வாசிங்டன்
    கலி. பூங்குன்றன் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத்...
  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.