மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
சனி, 17 ஏப்ரல், 2021
ஞாயிறு, 19 ஜனவரி, 2020
தினமலரே, நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா?
'ஆம்! தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஹிந்து மதத்தை எதிர்த்தவர்கள்தான். அண்ணல் அம்பேத்கர் "நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஆனால் அதே நேரத்தில் ஹிந்துவாக சாகமாட்டேன்" என்று சொன்னதோடு பல லட்சம் மக்களோடு ஹிந்து மதத்துக்கு முழுக்குப் போட்டார்.
ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரர்கள் என்றே ஒப்புக் கொள்ள வேண்டும். சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டால் வேசி மக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் மட்டுமல்ல - மானத்தை மதிக்கும் பார்ப்பனர் அல்லாதார் 'ஹிந்து'க் கடவுள்களையோ, சாஸ்திரங்களையோ ஏற்றுக் கொள்ள முடியுமா? நாங்கள் இன்றைக்கும் சூத்திரர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் 'தினமலர்' திரிநூல்களின் இன வெறியா?
பிரிவினைவாதிகள் யார்?
'விடுதலை' பத்திரிகை செய்தி என்று போட்டு அதில் 'விடுதலை'யில் வெளி வராத வரிகளைப் போடலாமா? 'ராமன் சக்தியை நம்பாத இவர்கள் ஈ.வெ.ரா.வின் கூற்றான 'கடவுளை மற, மனிதனை நினை' என்பதைப் பின்பற்ற வேண்டும்' இந்த வரிகள் 'விடுதலை'யில் வெளிவந்துள்ளதா?
எவ்வளவுக் கேவலமான அறிவு நாணயமற்ற கும்பல் இது.
ஒரு அய்ந்து நாள்கள் இடைவெளியிலேயே இப்படித் திரித்து வெளியிடுவது தான் திரிநூல்களின் பத்திரிகா தருமமா? 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று பத்தினித்தன்மைக்குப் புதுவித தர்மம் கற்பிக்கும் கைபர் கணவாய் கும்பல் அல்லவா?
சரி, அடுத்து வருவோம், ராம பிரானை நம்புபவர்கள், இசட் பிரிவுப் பாதுகாப்பை விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?
"மனிதனை நினை என்பது எந்த மனிதனை என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும். உங்களுக்குத்தான் மனிதர்களில் பலரைப் பிடிக்காதே, எங்கிருந்தோ வந்தவர்கள் என்று கூறி பிரிவினைவாதம் பேசுவீர்களே" என்றும் ஒரு முன்னுரையையும் கொடுத்துள்ளது 'தினமலர்'.
தனிப்பட்ட முறையில் எந்த மனிதரையும் நாங்கள் வெறுப்பதில்லை. ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை பேட்டி கண்டபோது - வினா ஒன்றை எழுப்பினார்.
"நீங்கள் ஏன் ஆன்டி பிராமினா இருக்கிறீர்கள்" என்பதுதான் அந்தக் கேள்வி; அப்பொழுது 'விடுதலை' ஆசிரியர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "வீ ஆர் புரோ-ஹியூமன் (Pro-Human). எனவே ஆன்டி பிராமின் (Anti Brahmin)" என்று பதில் கூறினார். மனிதர்களைப் பிறப்பின் பெயரால் பிரிவினை செய்தது யார்? ஹிந்து மதம் தானே - அந்த பிரிவினை கூடாது என்பது திராவிடர் கழகம் தானே - ஏன் தலைகீழாகப் புரட்டுகிறீர்கள்?
நீங்களும் பிராமணராக இருக்கக் கூடாது - மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.
ஓ! புரட்டல் வாதம் தானே 'தினமலர்' கூட்டத்தினுடையது!
- விடுதலை நாளேடு 19 1 20
சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடந்தது என்ன?
ரஜினிக்கு மறுப்பு
'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு
தமிழர் தலைவர் பேட்டி
'துக்ளக்' 50-ஆம் ஆண்டுவிழா நிறைவு நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி குறித்து உண்மைக்கு மாறான செய்தியை கூறிய ரஜினிகாந்த் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா'விற்கு கி.வீரமணி அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அப்படி வருபவர் மீதான நம்பகத்தன்மை அற்றுப் போய் விட்டது. அரசியலுக்கு வருகிறேன் என் பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவேண்டும். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: "ரஜினி காந்த் உண்மைக்கு மாறாகக் கூறி உள்ளார். மேடையில் சோ வைப் புகழ்கிறேன் என்று சோ 'துக்ளக்' கில் எழுதாத ஒன்றையும், 'துக்ளக்'கில் அச்சிடாத ஒன்றை குறித்தும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது?. ரஜினி யின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
மேலும் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையும் போய்விட்டது. இவர் கூறியுள்ளது 49-ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் நிகழ்வு ஆகும். இரண்டாம் நாள் கடவுளர் படங்கள் வாகனங்களில் மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொண்டு வரப்பட்டன. அப்போது பெரி யாருக்குக் கருப்புக்கொடி காட்டிய ஜன சங்கத்தினர்(இன்றைய பாஜக) பெரியார் மீது செருப்பை வீசினார்கள். ஆனால் அப்போது பெரியார் வாகனம் முன்னே சென்றுவிட்டது, அந்த செருப்பு கடவுளர் படங்கள் கொண்டுவந்த வாகனத்தின் மீது விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது" என்று கூறினார்.
ரஜினி 'துக்ளக்' விழாவில் பேசியதாவது: "1971இல் சேலத்தில் சிறீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர் சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். அது 50 ரூபாய்க்கு 'பிளாக்'கில் விற்றது" என்று கூறியிருந்தார்.
தந்தை பெரியார் மீது ரஜினிகாந்த் கூறிய இந்த உண்மைக்கு மாறான கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகள் பல மாவட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
- விடுதலை நாளேடு 19 1 20
