சனி, 30 ஜனவரி, 2021

இரு கொடுமைகள் போதிப்பது என்ன?


தலைநகர் டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் 2018ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக மரணமடைந்து கிடந்த விவகாரத்தில், மந்திரம் மற்றும் பில்லி சூனியம் குறித்து எழுதப்பட்ட நாட்குறிப்பு (டைரி) நிகழ்விடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது. 

அதில் அந்த குடும்பத்துக்குத் தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.  அது குறித்து விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் தரப்பு கூறும்போது, "தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் லலித், பவனேஷ் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலைக் கட்டிவைத்து வழிபட்டுள்ளனர்.

இவர்களின் வழிபாட்டு முறை மிகவும் புதிராகவும், மூடநம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கிறது.  ஆனால் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்தவர்களே! 

வீட்டில் கைப்பற்றப்பட்ட நாட் குறிப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் தெளிவாகின.  இவர்கள் தற்கொலை செய்துகொள்ள 2017ஆம் ஆண்டு முதலே தயாராகி வந்துள்ளனர். சொர்க்கத்தை அடையும் வழி என்ற ரீதியிலான குறிப்புகள் நாட் குறிப்பில் உள்ளது. இது தற்கொலைக்கு காரணமாகும்.

உடல்களில் கண்கள், காதுகள், வாய், கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்டு இருந்தன. தற்கொலை செய்யும் முறையும்கூட அந்த நாட் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. எங்களின் முதல் கட்ட விசாரணையில், நாராயண் தேவியை முதலில் அவரின் இரு மகன்களும் கொலை செய்துவிட்டு, மனைவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். அதன்பின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, இறுதியாக தாங்களும் தூக்குமாட்டி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் தேதிக்கு முன்னாள் இரவு, உணவு முன்பதிவு செய்துள்ளனர். இரவு 11 மணியளவில் உணவு விநியோகம் ஆகும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  அதன் பின்னர் அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்லவில்லை, யாரும் அந்த வீட்டுக்கு வரவும் இல்லை.

வீட்டில் வளர்த்து வந்த நாயை மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட் குறிப்பில் சொர்க்கத்தை அடையும் வழி என்று பல   மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தது. அதில் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் தற்கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது.

தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை செய்ய வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது.

தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறை பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்றும் கூட எழுதப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்புகள் அனைத்தும் 2018 ஜூன் 26ஆம் தேதி எழுதப்பட்டு, ஜூன் 30-ஆம் தேதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய், கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும்" என அந்த நாட்குறிப்பில்  (டைரியில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வைகிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளனர்" என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டதில்,  வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(50), லலித் பாட்டியா(45), மகள் பிரதிபா(57). பவனேஷ் மனைவி சவிதா(48), சவிதாவின் மகள் மீனு(23), நிதி(25), துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவருக்கு திருமணம் நடந்து ஓர் ஆண்டு மட்டுமே ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது - இவர் அய்.டி.யில் பணிபுரிபவர்.

 இது 2018இல் என்றால் 2021இல் ஆந்திராவில் மெத்த படித்த இருவர் தங்கள் இரு பெண்களை சாமியாரின் ஆலோசனையின் பெயரில் படுகொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் முக்கிய அறிக்கையினை வெளியிட்டார்;  படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத இந்த நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஊடகங்களும், வழிகாட்ட வேண்டியவர்களும் இந்தப் பிரச்சினைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்காதது ஏனோ!

நம் இயக்கத்தின் கொள்கை இந்தியா முழுவதும் பரவ வேண்டிய அவசியம் இருக்கிறது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு - ஒரு பார்வை!

.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணை யின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, "Skin-to-skin contact with sexual intent" அதாவது பாலியல் நோக்கத்துடன் ஒருவரை ஆடையில்லாத உடலோடு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும், 'Mere groping' will not fall under sexual assault அதாவது பாலியல் நோக்கத்துடன் விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகளைக் கழற்றி, அவரது ஆடைகளுக்குள் கைகளை விட்டு உடல் தொடர்பில் ஈடுபடாமல், மார்ப கங்களை ஆடைக்கு மேல் வெறுமனே தொட்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போக்ஸோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன்  குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலமோ அல்லது குழந்தையைக் குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொட வைப்பதன் மூலமோ ஊடுருவாமல் உடலைத் தொடுவதை உள்ளடக்கியது என்றும் நீதிபதி தெரிவித்துளார்

பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் தொடுவது. குறிப்பாக, அப்படித் தொடப்படுவதை விரும்பாதவரைத் தொடுதல் என்பதை ஆங்கிலத்தில் Groping என்பார் கள். தடவுதல் என்று எளிமையாக இதைப் பொருள் கொள்ளலாம். இந்த Groping என்பதைத்தான் பாலியல் குற்றமல்ல என்கிறது மேற்படித் தீர்ப்பு. மேலும், நீதிமன்ற உத்தரவு தோலுடன் தோல் கொள்ளும் தொடர்பைப் பற்றிப் பேசுகிறது. அப்படியானால், ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது என்று ஆகிறது என்பது கவனிக்கத் தக்கது.

தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்ற பேச்சுகள் இருக்கும் ஒரு காலகட்டத்தில் - சூழ்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு கேள்வி களையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தவறான தொடு தல், தவறான பார்வை குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விழிப்புணர்வு பேரணிகள், பரப்புரைகள் நடந்துவரும் நிலையில் நாக்பூர் அமர்வு நீதிபதியின் இந்தக்கருத்து அதிர்ச்சிகரமானதாக உள்ளது என்று பெண்குழந்தை பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

"தீர்ப்புகள் நீதிபதிகளின் வியாக்கியானத்தைப் பொறுத்து அமைகிறது" என்று தந்தை பெரியார் கூறியதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

எந்த நோக்கத்தில் ஒரு பெண்ணைச் சீண்டுகிறான் என்பதுதானே முக்கியம்? இதில் அரை குறைத்தனம் என்பது, சந்து பொந்துகளில் தாராளமாக நுழைந்து குற்றவாளிகள் தப்பி ராஜநடை போடலாம் என்பதற்கான ராஜபாட்டையை நீதிமன்றமே திறந்து விடலாமா?

இது தீர்ப்பா? கருத்தா? எதுவாக இருந்தாலும் இது மறு ஆய்வுக்கும், கருத்துக்கும் உட்படுத்தப்பட வேண்டும். பெண்ணியவாதிகளின் குரல் இத்திசையில் ஓங்கி ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

பெரியார் திடல் பணித் தோழர் சு.விமல்ராஜ் - க.தீபா வாழ்க்கை இணையேற்பு விழா


கழகப் பொதுச் செயலாளர் தலைமையேற்று நடத்தி வைத்தார்

கரூர், ஜன. 28- பெரியார் திடல் பணித் தோழர் சு.விமல்ராஜ் - க.தீபா வாழ்க்கை இணையேற்பு விழாவை தலைமையேற்று கழகப் பொதுச் செயலாளர்  வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்.

பெரியார் திடல் பணித் தோழரும், கரூர் மாவட்டம், கொமட்டேரி பி. சுப்பிரமணியன் -விஜயா ஆகியோரின் மகனுமாகிய சு.விமல்ராஜுவுக்கும், கரூர் மாவட்டம், குரும்பபட்டி வீ.கருப்பசாமி -- தமிழரசி ஆகியோரின் மகள் க.தீபா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் 27.1.2021 அன்று காலை 10 மணி யளவில் தரகம்பட்டியில் மணமக்க ளுக்கு உறுதிமொழி கூறி மணவிழா வினை நடத்தி வைத்தார்.

மணமகனின் நண்பர் க.கலைமணி வரவேற்று உரையாற்றினார். திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து கடிதமும், கழகத்தின் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்க ளின் வாழ்த்து கடிதமும் வாசிக்கப் பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்தி கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி, கரூர் மாவட்டச் செயலாளர்  ம.காளி முத்து, பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கட வூர்  ஒன்றிய பெருந்தலைவர் நா.செல் வராஜ், வீரியபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் க.ராமசாமி, சேங்கல் காவேரி மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் பி. முருகேசன், மணமகனு டன் ஆசிரியர் பயிற்சி பயின்ற மேனாள் மாணவர்கள் தருமபுரி மா.தேவேந்திரன், புதுக்கோட்டை மு.கண்ணதாசன், கரூர் பத்மபிரியா பிரகாஷ்,  மற்றும் பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். வை.கலை யரசன் இணைப்புரையாற்றினார். இறுதியாக மணமகள் க.தீபா நன்றி யுரையாற்றினார்.

நிகழ்வில் கரூர் மாவட்ட கலை, இலக்கிய அணி தலைவர் மா.இராம சாமி, கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொம்மன், பொதுக்குழு உறுப்பினர், வைரவன், மாவட்ட துணைச் செயலாளர் வே. ராஜி, மாவட்ட இளைஞரணிச் செய லாளர் ம.ஜெகநாதன், நகர கழகச் செயலாளர் ம.சதாசிவம், கடவூர் ஒன்றிய கழகச் செயலாளர் இரா.கார்த்திக், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் இராஜா, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இராஜாமணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அம்பிகா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கவுதம், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கிராஜ், திரா விட மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் சே.மெ.மதிவதனி, திராவிட மாணவர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் யாழ்.திலீபன், வட சென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், திருச்சி வி.சி.வில்வம், பெரியார் புத்தக விற்பனை நிலைய பணி தோழர்கள் சுமதி, பூங்குழலி, ரேணுகா, மீனாகுமாரி, ரீனா, பவானி, சந்தியா,  பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் தமிழகம் முழுவதுமிருந்து திரளாக வந்து இருந்தனர்.

கழக பொதுச் செயலாளர் உரை

தொடர்ந்து உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர், தொடக்கத்தி லேயே மணமக்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது உரை வருமாறு: "தன் பிள்ளை களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அவர்களின் விருப் பப்படியே இந்த திருமணம் சுயமரி யாதைத் திருமணமாக நடைபெறுவ தற்கு காரணமாக இருந்தவர்கள்.

சுயமரியாதைத் திருமணத்தில் மணமக்களை பாருங்கள் எப்படி மகிழ்ச்சியாக அமர்ந்து இருக்கிறார் கள். மற்ற திருமணங்களையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் சுள்ளிகள் புகைந்து கொண்டிருக்கும். மணமகன் ஒருபுறம் கண்ணை கசக்கி கொண்டு இருப்பார்; மணமகள் ஒருபுறம் கண்ணை கசக்கிக் கொண்டு இருப் பார் ஆனால் இந்த திருமணம் அப் படியில்லை, தமிழில் புரியும்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு சடங்குகளற்ற பகுத்தறிவு முறையான திருமணமாகும். இது ஒரு மாபெரும் பண்பாட்டுப் புரட்சியாகும்.

எளிமையான திருமண முறை

இந்த பகுதியில் இருக்கக்கூடிய தாய்மார்களுக்கு புதியதாக இருக் கலாம். பல பேர் இதுபோன்ற திரு மணங்களை பார்த்தும் கூட இருக் கலாம். சுயமரியாதை திருமணம் என் பது மிகவும் எளிமையான திருமண முறையாகும். ஆடம்பரம் இல்லாமல், பெரிய தொகையையெல்லாம் செல விட்டு செய்வது அல்ல;  ஏன் சொல் லுகிறோம் என்றால் சிறுக சிறுக சேர்த்த பணத்தை ஆடம்பரம் என்ற பெயரில் தேவையில்லாத காரியங்க ளுக்கு வீணாக்குவதை தவிர்த்துவிட்டு, தன்னுடைய பிள்ளைகள் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி  வைத்தால் அவர்களுக்கு பின்னாளில் பெரிய உதவியாக இருக்கும். விவாஹ சுப முகூர்த்தம், பாணிக்கிரஹனம், கன்னிகாதானம், தாராமுகூர்த்தம் என்ற ஆரியப் பார்ப்பனரால் அறிமுகம் செய்யப் பட்டுப் புழக்கத்தில் இருந்த திருமணங் கள் பற்றிய சொற்கள் மதிப்பிழந்து போக,  பெண்ணடிமை ஒழிக்கும் தமிழ்மொழி தற்போது ஆட்சி செலுத்துகின்றது.

சுயமரியாதைத் திருமணம் என்பதாகத் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்ட தன்மான முறை வாழ்க்கை ஒப்பந்தவிழா இன் றைக்கு மிகமிக இயல்பான - சட்டப்படி செல்லுபடியாகும் மணவினையாக நிலையூன்றப்பட்டு விட்டது.

மணமகன் கொள்கை குடும்பத்து பிள்ளை

மணமகன் விமல்ராஜ் எங்கள் கொள்கை குடும்பத்து பிள்ளை. திருச்சியில் எங்கள் நிறுவனத்தில் (2007-2009) படித்த காலம் முதலே நன்கு அறிமுகமானவர்.  பிறகு 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் புத்தக நிலையத்தில் பணியாற்றிய எங்கள் வீட்டு பிள்ளை ஆவார். எங்க ளது கொள்கைப் பிரச்சாரத்தில் இரண்டு வழிமுறைகள் முக்கியமா னது. ஒன்று பேச்சின் மூலம் கொள் கையை பரப்புதல், மற்றொன்று புத்த கத்தின் மூலம் மக்களை விழிப்புணர்வு அடைய செய்வது; அந்த மாபெரும் பிரச்சார பணியில் தன்னை அர்ப் பணித்துக்கொண்டு பல ஆண்டுகளாக சென்னைப் பெரியார் திடலில் பணி என்பதைவிட சிறப்பான தொண் டினை ஆற்றி வரும் இளைஞர் குழு வில் அன்புக்குரிய விமல்ராஜ் முக்கிய மானவர். அடக்கமாக, திறமையாக கொடுத்த பணியினை உண்மைத் தன் மையுடன் ஆற்றிவரும் பாராட்டுக்குரியவர்.

உரிமையோடும் - மகிழ்ச்சியோடும்

நீங்கள் தான் வந்து என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் உரிமையோடும், மகிழ்ச்சியோடும் இங்கே வந்துருக்கிறோம். ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு மேலாக  எங்க ளோடு தொடர்பு உடையவர். பள் ளிப்படிப்பை முடித்தவுடன் எங்களி டத்தில் வந்தவர்.  ஆசிரியர் பட்டயப் படிப்பு, எம்.ஏ,பி.எட்,எம்.பில்., தற் போது முனைவர் படிப்பிற்கு தயா ராகி வரக்கூடிய அளவிற்கு எங்களால் தயாரிக்கப்பட்டவர் - எங்கள் வீட்டு பிள்ளை என்று பெருமையோடும், உரிமையோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிகச் சிறப்பான பணி

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனம் ஆயிரக்கணக்கான ஆசிரியர் களை உருவாக்கி இருந்தாலும், (2007-2009)கல்வி ஆண்டில் படித்தவர்கள் பல துறைகளில் மிகச்சிறப்பான பணியினை மேற்கொண்டு வருவதை எண்ணி பார்க்கும் போது இதைவிட எங்களுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கிறது.

காவல்துறை, ஆசிரியர்கள், அரசுத் துறை, தனியார் துறை, விவசாயம் உள்ளிட்ட பணிகளில் அசைக்க முடி யாத கொள்கை முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள். அதில் பலர் இங்கே வந்துள்ளனர்.

தஞ்சாவூர் ஞானசேகரன், புதுக் கோட்டை கண்ணதாசன், கார்த்திகே யன், க.செல்வகுமார் அரியலூர் அருண், மணப்பாறை மான்போர்டு ரீகன், சேலம் கண்ணன், திண்டுக்கல் சிவக்குமார், நாமக்கல் கண்ணதாசன், ஜெகதீசன், இளையராஜா, ஒட்டன் சத்திரம் திலீபன், ச.விஜய், ம.சக்திவேல், கரூர் செ.கொடியரசு, ஆறுமுகராஜா பிரகாஷ், சுரேஷ் சிவகங்கை முரு கானந்தம், லால்குடி சங்கிலிமுருகன், திண்டுக்கல் லாரன்ஸ், கடலூர் ஜெயக்குமார் என்று ஒவ்வொரு தோழர்களும் அவர்களால் முடிந்த பணியைத் தேர்வு செய்து மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.

ஆற்றல் வாய்ந்தவர்கள்

ஒருகாலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். திராவிடர் இயக்கம், கல்வி வள்ளல் காமராசருடைய ஆட்சி தொடர்ந்த நிலையில், நம்முடைய இளைஞர்கள் எல்லோரும் படித்து, நல்ல சிறப்பான ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக் கிறார்கள்.

இன்று நடைபெறக்கூடிய சுயமரி யாதை திருமணத்திற்கு கூட பல்வேறு தடைகள் இருந்திருக்கலாம்; ஆனால் இது தான் சரியான திருமண முறை என்பதை அறிந்து, மணமக்கள் இதனை உறுதியோடு இன்று செய்து கொள்ள இருக்கிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்னும் எள்ளலும் கொடுமையும் நிரம்பிய கூற்று இப்போது எவர் வாயிலிருந்தும் வெளிப்படுவதில்லை.

செயல் வீராங்கனைகள்

அழகழகான சீருடைகள் அணிந்து பெண்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிக ளுக்கும் இன்று கோடிக்கணக்கில் செல்லும் காட்சியும், பல்வகைத் தொழில் நுட்பக் கல்விகளை பெண் கள் பயிலும் காட்சியும், ஆசிரியை களாகவும் அலுவலர்களாவும், மேலா ளர்களாவும், இயக்குநர்களாவும், தொழில் நுட்பக் கலைஞர்களாகவும், தொழிற்துறை உரிமையாளர்களா கவும் எண்ணிக்கையில் அடங்காப் பெண்கள் செயல் வீராங்கனைகளாக மிளிரும் மாட்சியும், நம்மைப் புரட் சிக் கவிஞரின் பெண்களால் முன் னேறக் கூடும்; நம் வண்டமிழ் நாடும் எந்நாடும் எனும் வரிகளைப் பாட வைக்கின்றன!

மணமக்கள் நீங்கள் இருவரும் பெரியாரைப் பின்பற்றி சிக்கனமாக வும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் எல்லோருக்கும் எடுத்துக் காட்டான வாழ்வு வாழ வேண்டும்" என வாழ்த்தி மணவிழாவை நிறைவு செய்தார்.

முனைவர் அதிரடி க.அன்பழகன்-நர்மதா இல்ல மணவிழா


தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை, கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

 


பட்டுக்கோட்டை, ஜன. 27- திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் - பெரியார் மணியம்மை பலகலைக்கழக நூலக இயக்குநர் நர் மதா ஆகியோரது மகள் ந.அ.இளமதி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரது மகன் இரா.வீரமணி ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா பட்டுக் கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் 24.1.2021

ஞாயிறு காலை 10 மணியளவில் நடை பெற்றது.

மணமகளின் தந்தையார் திரா விடர் கழக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் சூம் (Zoom) ஆப் மூலமாக காணொலியில் வாழ்த்துரையாற் றினார்கள். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கி மணமக்களுக்கு உறுதிமொழி கூறி மணவிழாவினை நடத்தி வைத் தார்கள். பட்டுக்கோட்டை மாவட் டத் தலைவர் வீரையன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, மனித நேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பா.பாலசுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், இணைப்புரையாற்றினார்.

இறுதியாக மதுக்கூர் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் முத்து.வீரையன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் பங்கேற்றோர்

திராவிடர் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், மாநில கலைத்தறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை, மாநில ப.க. துணைத் தலைவர்கள் கோபு.பழனிவேல், பொன்னமராவதி சரவ ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மன்னார்குடி மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி, பட்டுக்கோட்டை மாவட் டச் செயலாளர் வை.சிதம்பரம், புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ.இராவணன், திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், திருவாரூர் மண்டலம் ச.பொன்முடி, கோவை மண்டல செயலாளர் சிற்றரசு, ஈரோடு மண்டல செயலாளர் பிரக லாதன், மாநில வீரவிளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ் ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில வீதிநாடகக் கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகர், கழக சொற்பொழிவாளர்கள் இராம.அன்பழகன், பூவை.புலிகேசி, சில்லத்தூர் சிற்றரசு, திருச்சி மாவட் டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, மாவட்டச் செயலாளர் விரப்பன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் கரம்பக்குடி முத்து, திருத் துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட் டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போ லியன், மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ் குப்தா, பொதுக்குழு உறுப் பினர் தெ.செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட தலைவர் சுப்பையா, பொதுக் குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்டச் செயலாளர் காளாப்பூர் ராஜாராம், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, திருவாரூர் மண்டல மகளி ரணி செயலாளர் கோ.செந் தமிழ்செல்வி, திருத்துரைப்பூண்டி மாவட்ட ப.க.தலைவர் புயல்குமார், பொதக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லத்தம்பி, பேராவூரணி நீலகண் டன், குடந்தை சு.விஜயக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் சின்னக்கண்ணு, மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், குடந்தை மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல், மன்னார்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் திருத் துறைப்பூண்டி குணசேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் நடுவை கு.அய்யாத்துரை, திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் இரா.சிவக்கு மார், ஈரோடு மாவட்ட ப.க. தலைவர் மருத்தூர் மோகனசுந்தர்ராஜ், கோபி. யோகானந்தம், குறிஞ்சி குமரேசன், தாம்பரம் மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புசெல் வன், பெரியார் வீர விளையாட்டக் கழக தலைவர் பேரா.ப.சுப்ரமணியன், பெரியார் கல்வி நிறுவனங்களின் (திருச்சி) ஒருங்கிணைப்பாளர் தங் காத்தாள், திருச்சி மூர்த்தி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வேலுச்சாமி, இணைவேந்தர் முனைவர் தேவதாஸ், திருச்சி மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, பெரியார் பாலிடெக்னிக் பேரா.மணிவண்ணன், நெடுவை தோ.தம்பிக்கண்ணு உள் ளிட்ட மாநில, மண்டல, ஒன்றிய, நகர, கிளைக்கழக திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவரணி அமைப்பாளர் டாக் டர் அஞ்சுகம் பூபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், பேராவூரணி அசோக் குமார், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேல், மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் கா.அசோக் ராணி, மதுக்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆர்.இளங்கோ, வி.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பா.ராமநாதன், என்.பி.பார்த்தீபன், ப.முருகானந்தம், பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் எஸ்ஆர்என் செந்தில்குமார், உரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.கார்த்திகேயன், மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள் ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். சூம் ஆப் செயலியை மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

ஆமாம், வீரமணியிடம் பெரியார் திடல் இருக்கிறது!

செய்தியும், சிந்தனையும்! - ‘துக்ளக்'கின் முதுகை உரிக்கும் பதிலடி!

ஆமாம்வீரமணியிடம் பெரியார் திடல் இருக்கிறது!

பெரியார் திடல் என்பது கொள்கை வீரியத்தின் குறியீடு!!

 மின்சாரம் -

கேள்விவீரமணி காலத்து தி..வைக் கண்டு தி.மு.பயப்படவில்லைஆனால்திருமாவளவனின் வி.சி..வைக் கண்டு தி.மு.பயப்படுகிறதே?

பதில்வீரமணியிடம் பெரியார் திடல்தான் இருக்கிறதுதிருமாவளவனிடம் பெரியார் கூட்டம் இருக்கிறது என்று அஞ்சுகிறதோ தி.மு..?

துக்ளக்', 3.2.2021, பக்கம் 9

சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி!' என்று ‘ஆரிய மாயைநூலில் எடுத்த எடுப்பிலேயே தீட்டியிருப்பார் அறிஞர் அண்ணா.

அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறதுஆம்வீரமணியிடம் பெரியார் திடல் இருக்கின்றதுவீரமணியிடம் ‘விடுதலைஇருக்கிறதுபெரியார் திடலிலிருந்து பகுத்தறிவுப் பிரச்சார வெடிகுண்டுகள் அன்றாடம் புறப்பட்டுக் கொண்டு இருக்கின்றனபெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றமும் இருக்கிறதுபகுத்தறிவுச் சூறாவளிப் பிரச்சாரங்களும் நடந்துகொண்டுள்ளனபெரியார் நூலகம் - ஆய்வகம் இருக் கிறதுபன்னாட்டைச் சேர்ந்தவர்களும் தந்தை பெரியார் சித்தாந்தங்கள்தத்துவங்கள்திராவிடர் இயக்கத்தின் பரிமாணங்கள்பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்இதன்மூலம் உலகெங்கும் போய்ச் சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெரியார் திடலில் அய்..எஸ்., அய்.பி.எஸ்பயிற்சி மய்யம் இயங்கிக் கொண்டிருக்கிறதுஒடுக்கப்பட்ட சமூக இரு பால் மாணவர்கள் ஆரவாரமின்றிப் பயிற்சி பெற்று வருகின் றனர்.

பெரியார் நூல்கள் விற்பனையகம் - உள்ளே நுழைந்த வுடன் வரவேற்கிறதுபெரியார் இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதிக நூல்கள் விற்பனையாவது பெரியார் இயக்க நூல்கள்தான் என்ற செய்தி, ‘நூல்'களின் ஆதிக்கத்தின் ஆணி வேரை அறுத்தெறிகின்றது.

விஜயபாரதஅரங்கு அழுது வடிவதையும் ஓட்டிக் கொண்டும் இருப்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வீரமணியிடம்பெரியார் திடல் இருக்கிறது என்பது உண்மைதான்பெரியார் திடல் என்பது ஒரு குறியீடு - அதன் உள்ளடக்கம் வீரியமானதே!

இவையெல்லாம் ‘துக்ளக்குருமூர்த்தி கும்பலுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்துவருவதால்அந்த ஆத்திரத்தை வசைப்பாடியும்கேலிஏகடியம் செய்தும் தங்கள் ஆற்றாமை என்னும் அரிப்பை ரத்தம் சொட்டும் வரை சொரிந்து ஆசுவாசப்படுகின்றது.

துக்ளக்', ‘தினமலர்வகையறாக்கள் ஒவ்வொரு இதழிலும் வீரமணியைப்பற்றி விதண்டாவாதமாக எழுதாவிட்டால் தூக்கம் வராது.  அது அச்சத்தின் வெளிப்பாடுதான்.

தி.., தி.மு.., விடுதலை சிறுத்தைகள் மூன்று குழல் துப்பாக்கி என்று ஆகிவிட்ட பிறகுஇந்தக் கூட்டத்திற்கு குருதிக் கொதிப்பு அதிகரித்து விட்டதாகவே தெரிகிறது.

தி..விடம் இருந்தும்வீரமணியிடம் இருந்தும்மு..ஸ்டா லின் விலகி இருக்கவேண்டும் என்று குருமூர்த்தி அய்யர் எழுதி எழுதி............. தேய்ந்து கட்டெறும்பு ஆனதுதான் மிச்சம்!

‘‘எங்கள் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல்தான்''  என்று தி.மு.தலைவர் பளிச்சென்று செவுளில் அறைந்ததுபோல் பதில் சொன்ன பிறகுஅறிவு நாணயத்தோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டாமா?

பரவாயில்லைஎழுச்சித் தமிழர் திருமாவளவனிடம் பெரியார் கூட்டம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டவரைக்கும் மகிழ்ச்சிதான்.

எப்படி இருந்தாலும்எங்கு இருந்தாலும்அவற்றின் கொள்கைப் பீரங்கிகள்குண்டுகள் ஆரிய புரியைத்தானே துளைத்து எடுக்கும் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

பெரியார் கொள்கையாளர்கள் தி.., தி.மு.., வி.சி.அமைப்புகளில் மட்டுமல்லஎல்லாக் கட்சிகளிலும்எல்லா அமைப்புகளிலும் கண்ணுக்குத் தெரிந்தும்கண்ணுக்குத் தெரியாமலும் (Visible and Invisibleஇருக்கத்தான் செய்கிறார் கள்இன்னும் சொல்லப்போனால்உலகெங்கும் பரவியும்தான் இருக்கிறார்கள். (ஏன்இவர்கள் அலுவலகங்களிலும்கூட ஓசையின்றி இருக்கக் கூடும்).

நாடாளுமன்றத்துக்குள்ளேயே ‘வாழ்க பெரியார்!' ‘வெல்க திராவிடம்!' என்ற முழக்கமும் கேட்கிறதே - காகப்பட்டர் களுக்குக் காதென்ன செவிடோ!

எல்லாக் கட்சிகளிலும் பெரியாரின் அடையாளமாக வீரமணி இருப்பதால்தான் தேர்தல்களில் போட்டியிட பார்ப்ப னர்களை வேட்பாளர்களாகக்கூட நிறுத்துவதில்லை.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேர வையில்பார்ப்பனரின் எண்ணிக்கை ஒண்ணே ஒண்ணுகண்ணே கண்ணுதான்! (அவர்கூட இருக்கும் இடம் தெரியவில்லை).

துக்ளக்ஒப்புக்கொண்ட இன்னொரு முக்கிய சேதி - கருத்து உண்டே!

கேள்விதமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?

பதில்ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடக் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்தன்மை.

துக்ளக்', 19.2.2020, பக்கம் 29

திராவிடர் கழகம் பெரியார் திடலில் மட்டுமல்ல - தமிழகம் தழுவிய அளவில் தமிழ் மக்களிடம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று ‘துக்ளக்'கே ஒப்புக் கொண்ட பின், ‘செலக்டிவ் அம்னி ஷியாவால்திருவாளர் குருமூர்த்தி இப்படி எழுதுகிறாரோ!

I. பதில் உண்டா பார்ப்பன 'துக்ளக்'கே!


மின்சாரம்

கேள்விகணவன்  - பகுத்தறிவுவாதியாகவும்மனைவி ஆன்மிகவாதியாகவும் இருப்பது பற்றி?

பதில்ஓட்டுக்குப் பகுத்தறிவு - வீட்டுக்கு ஆன்மிகம்

(‘துக்ளக்‘ 20.1.2021 பக்.10)

பதிலடிபகுத்தறிவு என்பது மற்றவர்மீது திணிப்பது அல்லமனைவிக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தால் அதனை ஏற்பதுதான் பகுத்தறிவுஇந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வி.டிசாவர்க்கார் ஆன்மிகவாதியா - நாத்திகவாதியா?

நாத்திகத்தை ஹிந்து மதம் ஏற்கிறதா இல்லையாகோயிலுக்குச் சென்று சங்கராச்சாரி சாமி கும்பிடலாமாநானே கடவுள் என்பதுதானே சங்கராச்சாரியார்?

சிலை வணக்கம் மூடனுக்கு என்பதுதானே உத்திரகீதை?

இன்னும் சொல்லப் போனால் கடவுளை மறுப்பதல்ல நாத்திகம்வேதத்தை மறுப்பதுதான் நாத்திகம் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்துள்ளாரேஅதற்கு என்ன பதில்?

(தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி பக்கம் 407-408).

ஆமாம் - மனிதன் என்பதற்கு அடையாளமே அவனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருப்பதுதான்  ஆனால் பகுத்தறிவுபற்றி துக்ளக் திருவாளர் ‘சோ’ ராமசாமியின் நிலைப்பாடு என்ன?

இதோ ‘சோ’ துக்ளக் மூலம் பேசுகிறார்.

கேள்விபகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: “ஏன் நிறுத்தி விட்டீர்கள்பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறதுமோசடிஏமாற்று வேலை போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?” என்று கேட்க வேண்டியதுதானேஇப்போது தான் உங்கள் கேள்வி முழுமை அடையும். (‘துக்ளக்‘ 4.3.2009)

பதிலடிபகுத்தறிவு என்றால் பித்தலாட்டம்மோசடிஏமாற்று வேலை என்று கருதுகிற கூட்டத்தை எப்படிப்பட்ட மனிதர்களின் பட்டியலில் வைப்பதுஅடிக்கடி ‘துக்ளக்‘ அட்டைப் படத்தில் (ஏன் முதல் இதழிலேயேகார்ட்டூனை போடுமே  நினைவிருக்கிறதா - அதுதான் கழுதைப் படம் - அது நினைவிற்கு வந்தால் நாம் பொறுப்பல்ல.

***

கேள்விநாத்திகவாதிபகுத்தறிவுவாதி என்ன வித்தியாசம்?

பதில்நாத்திகவாதி அனைத்துக் கடவுள்களையும் மறுப்பார்நேர்மையான பகுத்தறிவுவாதி அனைத்து நம்பிக்கைகளையும் வெறுப்பார்திராவிட நாத்திக - பகுத்தறிவுவாதி ஹிந்துக் கடவுள்களை மட்டும் வெறுத்து ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் பழிப்பார் (‘துக்ளக்‘ 20.1.2021 பக்கம் 10).

பதிலடிகடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று திராவிடர் கழகம் சொல்லுவது ஹிந்து மதக் கடவுள்களை மட்டுமே அல்லவே - எல்லா மதக் கடவுள்களையும் சேர்த்துத்தானே.

ஹிந்து மதத்தின் மீது கூடுதல் தாக்குதலுக்குக் காரணம் என்னஹிந்து மதக் கடவுள் பிர்மாதானே தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத்தான் என்றும்  தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தான் என்றும்இடுப்பிலிருந்து வைசியனையும்பாதங்களிலிருந்து சூத்திரனையும் படைத்தான் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளதுசூத்திரன் என்றால் வேசி மகன் என்றும் ஹிந்துமத சுருதியும் ஸ்மிருதியும் கூறும் நிலையில்தன்மானம் உள்ளவன் ‘அந்த ஹிந்து மதக் கடவுள்மீது தானே கூடுதலாக தன் தாக்குதலைத் தொடுப்பான்!

தங்களை ஆன்மிகவாதி - கடவுள் நம்பிக்கைவாதி என்று கூறிக் கொள்ளும் ஹிந்து மதவாதிகள் மற்ற மதக் கடவுளை ஏற்கிறார்களாஅப்படி என்றால் அந்த மதக்காரன் பார்வையில் ஹிந்து மதவாதி கடவுளை மறுக்கும் நாத்திகன் தானே - முசுலிம்கிறித்தவர்கள் பார்வையில் சங்கராச்சாரிகளும்ஜீயர்களும்சோ ராமசாமிகளும்குருமூர்த்தி அய்யர்களும்நாத்திகர்கள் தானே!

இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை உடைத்து நொறுக்கிய அத்வானிஉமாபாரதிமுரளி மனோகர் ஜோஷிஅசோக் சிங்கால் உள்ளிட்ட ஹிந்துத்துவவாதிகள் கடவுள் உடைப்பாளர்கள் (ICNOCLASTபட்டியலில் வந்து விடவில்லையா?

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றவர்கள் யார்நாத்திகர்களா - ஆத்திகர்களாயோக்கியமான பதில் தேவை!

ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே

வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல் சொல்லுமே

(பாடல் 421)

***

பறைச்சியாவது ஏதடாபணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்துயிரும் உம்முளே

(பாடல் 38)

***

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திர சழக்கரே

பொஸ்தகத்தை மெத்த வைத்து போதமோதும் பொய்யரே

நிட்டைஏது ஞானமேது நீரிருந்த அட்சரம்

பட்டை ஏது சொல்வீரே பாதகக் கபடரே (பாடல் 242)

***

இட்ட குண்டம் ஏதடா இருக்குவேதம் ஏதடா

சுட்ட மண்கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா

முட்டி நின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை

பற்றி நின்றது ஏதடா பட்டநாதபட்டரே!

(பாடல் 306)

இவற்றையெல்லாம் பாடிய சிவவாக்கியர் ஆத்திகராநாத்திகரா சொல்லு துக்ளக்கே - குருமூர்த்தியே!

சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் - பின்

சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்

சாஸ்திரம் பார்க்கின்ற பாப்பாரப் பெண்கள்

தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே

என்று பாடிய ஞான வெட்டியான் ஆத்திகரா - நாத்திகரா - அய்யன்மார்களே ஆத்திரப்படாமல் பதில் சொல்வீர்களா?


II. கங்கை புனிதமா? காகப்பட்டர் சந்ததி குருமூர்த்திகளே பதில் கூறுக!

‘துக்ளக் என்னும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகாரப் பூர்வமற்ற (?) இதழான ‘துக்ளக்‘கின் 51ஆம் ஆண்டு விழாவில் (14.1.2021) பேசிய அதன் ஆசிரியர் சாமிநாதன் குருமூர்த்தி பார்ப்பன ஆண வத்துடன் பேசியவை - அரசியலைத் தாண் டிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

“ஊழலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தி யாசமும் இல்லை.

வீடுபற்றி எரியும்போது கங்கை ஜலத் திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக்கூட வாரி வீச வேண்டும்; அதுபோல திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் சரி அவர்களையும் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்“ என்று பேசியிருக்கிறார்.

குருமூர்த்திகளின் தரம் சாக்கடை அளவுக்குக் கொப்பளித்துக் குமிழ் விடு கிறது.

மத்தியில் பார்ப்பன ஆட்சி கொலு வீற்றிருப்பதாலும், மாநிலத்தில் கூனிக் குறுகும் ஓர் அடிமை ஆட்சி நடப்பதாலும் உஞ்சி விருத்திகளின் பூணூல்கள் கூட தடி எடுத்துக் கிளம்பி விட்டனவா?

பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி புல்லேந்தும் கைகளில் வாளேந்துவோம் என்று ‘வீரவசனம்‘ பேசப்பட்டபோது விரல் உரலானால் உரல் என்னாகும் என்று ஒரு கட்டத்தில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இப்பொழுது பார்ப்பனர்களுக்குத் குளிர் விட்டுப் போய் விட்டதாகத் தெரி கிறது. துள்ளட்டும் துள்ளட்டும் - துள்ளிய மாடுகள் பொதி சுமக்கும் என்பது அனுபவ மொழி.

இந்த வார துக்ளக்கில் கூட (27.1.2021) திமுக தலைவரின் பித்தலாட்ட வாக்குறுதி கள் என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.

மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலை வரை - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரை - அடுத்து முதல் அமைச்சராக வரப் போகிற தலைவரைப் பார்த்து “பித்தலாட் டம்“ என்ற சொல்லைப் பயன்படுத்தும் அளவுக்கு பார்ப்பனக் கொழுப்பு தலையில் வழிகிறது.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். கங்கை நீர் என்பது ஏதோ புனிதத் தன்மை வாய்ந்தது என்பதுபோல ஹிந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படை யில் சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் துன்மார்க்கம் கவனிக்கத்தக்கது!

கங்கை 2525 கி.மீ. தூரம் பாய்கிறது. சிவபெருமான் தலையில் இருப்பதாகக் கூறப்படும் கங்கை நதியில்தான் -  புனித நகரம் என்று புருடா விடும் காசி நகரின் சாக்கடை எல்லாம் சங்கமமாகிறது! அதன் அளவு 20 மில்லியன் காலன் ஆகும். நாள்தோறும் கங்கையின் கரையில் 400 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. மோட்ச உலகுக்கு அவர்களைப் ‘பார்சல்’ செய்வதற் காக எரிக்கப்பட்ட பிணங்களின் சாம்பல் அந்தப் ‘புனித’ கங்கையில்தான் கரைக்கப் படுகிறது. ஆண்டுதோறும் 9000 கிழட்டுப் பசுக்கள் அந்த உத்தம புனித கங்கையில் தான் தள்ளப்படுகின்றன.

கோமாதா புத்திரர்களின் கொடூரத்தைக் கவனிக்கவும்.

இந்தக் கங்கை நீரைக் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்திய காரணத்தால் 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கொடுமையான தொற்று நோய்க்கு மக்கள் ஆளானதுண்டு.

இந்தியாவில் குழந்தைகள் மரணம் அதிகம் என்பது கங்கை நதி பாயும் இடங் களைச் சுற்றித்தான் அதிகமாகும். கொல்கத் தா  நகரில்  296 தொழிற்சாலைகளில் உள்ள இரசாயன கழிவுகளும் கலப்பது கங்கை யில்தான்.

 உலகில் பாயும் சுகாதாரக் கேடான ஆறுகளில் கங்கைக்கு இரண்டாம் இடம்!

புளுகுகளில் மகாப் புளுகு கங்கை புனித நீர் என்பதுதான். இந்தக் கங்கையைச் சுத்தம் செய்யத்தான் மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடியைக் கொட்டியுள்ளது.

புனித கங்கையை சுத்தப்படுத்துவது என்று கூறுவது அராஜகம் - நாத்திக செயல் என்று சங்பரிவார்கள் எதிர்ப்புக் கொடி யைத் துக்காதது ஏன்? ஏன்?