வெள்ளி, 29 நவம்பர், 2019

ஆத்திரப்படுவீர் ஒடுக்கப்பட்டோரே!

கேட்ட கேள்விக்கு எங்காவது பதில் இருக்கிறதா? பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடவே கூடாது என்பது பார்ப்பன 'தினமலர்' கூட்டத்தின் கருத்து என்பதை இதன்மூலம் பார்ப்பனரல்லாதார் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் இந்துக்களே ஒன்று சேர்வீர்! என்பார் கள். அந்த இந்துவான பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு! என்றால் இப்படி எதிர் குரல் கொடுப்பார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாதாம். ஆனால் உயர்ஜாதி பார்ப்பனரின் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டவேண்டுமாம்.

ஸ்டேட் பேங்க் தேர்வில் தாழ்த்தப்பட்டவர்களும் பிறப்டுத்தப்பட்டவர்களும் 61.25 மார்க்கு வாங்க வேண்டுமாம். ஆனால் உயர்ஜாதி பார்ப்பனக் கும்பல் 25.5 சதவீதம் வாங் கினால் போதுமாம். இதைச் சுட்டிக்காட்டினால் பிற்படுத்தப்பட் டோர் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டுகிறாராம் வீரமணி. பிற்படுத்தப்பட்ட மக்கள் மரக்கட்டைகள் என்ற நினைப்பா?

ஆரியத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டு ஆத்திரப்படத்தான் செய்வார்கள். உணர்ச்சி பொங்க ஆத்திரப்படாவிட்டால் - முதல் அரசமைப் புச் சட்டத் திருத்தம் வந்திருக்குமா? 69 விழுக்காடு இடங்கள் தான் தமிழ்நாட்டில் கிடைத்திருக்குமா? ஆத்திரப்படுங்கள் - ஒடுக்கப்பட்டோரே!

அப்பொழுதுதான் ஆரியத்தின் அகங்காரமும் - ஆதிக் கமும் அடங்கும், ஒடுங்கும்! - நம் உரிமையும் காப்பாற்றப்படும்.

- விடுதலை நாளேடு 28 11 19

மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைகளுக்கு நம்முடன் இணைந்து உத்தவ் தாக்கரே குரல் கொடுப்பார்

தளபதி  மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

மும்பை, நவ.29 மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணியின் சார்பில்  அமைந்துள்ள அரசுக்கு  தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

நேற்று (28.11.2019) மும்பையில் நடைபெற்ற பதவி யேற்பு விழாவில் பங்கேற்று தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மராட்டிய மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்த £ர். அவர் தமது சுட்டுரை பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

திரு. உத்தவ் தாக்கரே அவர்களுக்கு, முதலமைச்சர் பதவிக்காலம் சிறப்பாக அமைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இந்த சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க, நான் மும்பையில் இருந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

மகாராட்டிர மாநிலத்திற்கு உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வழங்கும் என நம்புகிறேன்.

மகாராட்டிராவில் வாழும் தமிழர்களின் பாது காப்பையும் - அம்மாநிலத்தில் தமிழர்களின் முன்னேற் றத்தையும்  உறுதிசெய்ய; புதிய அரசு, தமிழர்களோடு இணைந்து பணிபுரியும் என்று நம்புகிறேன்.

மேலும், உயரிய மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகள் குறித்து திரு. உத்தவ் தாக்கரே அவர்கள், நம்மோடு இணைந்து குரல் கொடுப்பார் என்றும் நம்புகிறேன்.

மும்பை மாநகருக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. சரத் பவார் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கக்கூடிய வகை யில், மகாராட்டிராவில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்று மையை ஏற்படுத்துவதில், அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 29 11 19

வியாழன், 28 நவம்பர், 2019

கொஞ்சமாவது அறிவு நாணயம் இல்லாத பேர்வழிதான் குருமூர்த்தியா?

'சோ' மறைவுக்குப் பிறகு 'துக்ளக்'கை தன் வசமாக்கிய கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை என்று அறிமுகமான திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஒவ்வொரு நாளும் தன் பூணூல் தனத்திற்கு "முத்தம்" கொடுத்து பச்சைப் பார்ப்பனத்தனத்தைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

13.11.2019 நாளிட்ட 'விடுதலை'யில் திருக்குறளை & தங்கத் தட்டில் உள்ள மலம் என்று தந்தை பெரியார் சொன்னதாக பார்ப்பன ஏடுகளும், அரட்டைக் கச்சேரிக்காரர்களும் எழுதுவது, பேசி வருவது பச்சைப் பொய் என்று ஆதாரத்துடன் மறுக்கப்பட்டது.

தந்தை பெரியார் அப்படி சொன்னது கம்பராமாயணத்தைத் தான் என்று சாமி சிதம்பரனாரால் எழுதப்பட்ட தமிழர் தலைவர் நூலில் (பக்கம் & 62இல்) உள்ளது என்று ஆதாரப் பூர்வமாக சொன்னதற்குப் பிறகும் திருவாளர் குருமூர்த்தி அய்யர் கொஞ்சம்கூட அறிவு நாணயமின்றி மறுபடியும், மறுபடியும் இந்த வார 'துக்ளக்'கிலும்கூட (27.11.2019 - & பக்.10லும், 15லும் திருக்குறளை மலம் என்று சொன்னார் ஈ.வெ.ரா. என்று எழுதுகிறார் என்றால் இந்த ஈனங்களை எதைக் கொண்டு சாற்றுவதோ!

கோர்ட்டுக் கூண்டில் ஏற்றி 'குடுமி'யை ஆட்டினால்தான் அடங்குவார்களோ!

 - விடுதலை நாளேடு 23. 11.19

தினமலரின் திரிபுவாதம்

வேறு நாட்டுப் பிரச்சினைகளில் தினமலர்க் கூட்டம் தலையிட்டதே இல்லையா? ஏன் ஈழத் தமிழர்கள் பற்றி எப்படி எல்லாம் நயவஞ்சகமாக எழுதித் தள்ளினர்? திருவாளர் சோ, ஜெயவர்த்தனேயின் விருந்தாளியாக தங்கி குஷியாக இருந்த போது தினமலர் பேனாக்களுக்கு சுளுக்கு ஏற்பட்டு விட்டதா? பிரதமர் நரசிம்மராவ் இலங்கை சென்றபோது, ஒரு பார்ப்பனர் குடும்பத்தைத் தன்னோடு  அழைத்து வந்தது நினைவில் இருக்கிறதா? இலங்கைத் தீவில் ஒரு பார்ப்பனனின் ஒரு துளி ரத்தம் சிந்தியிருந்தால் - & அதுகூட  வேண்டாம் உச்சிக் குடுமியில் ஒன்றே ஒன்று உதிர்ந்திருந்தால்கூட 'தினமலர்கள்'  அது வெளிநாட்டு விவகாரம் என்று வேடிக்கை பார்க்குமா?

பார்ப்பனர்கள்பற்றி தெரிந்து கொள்ள, 'தினமலர்கள்' ஒவ்வொரு நாளும் இப்படி தமிழர் விரோத செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பது ஒரு வகையில் நல்லது தானே!

- விடுதலை நாளேடு 22 11 19

ஜாதி வாலை வெட்டியவர் யார்?

அட 'உலக்கைக் கொழுந்தே' தந்தை பெரியார் தொண்டால் தான் தினமலரின் கிருஷ்ண மூர்த்தி கூட, தன் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெய ரைப் போட்டுக் கொள்வதை வெட்கப்படும்படி மாற்றி காட் டினார் பெரியார் என்பதுதான் கடந்த கால நிகழ்கால வரலாறு.

ஒரு கேள்வி - ஜாதி ஒழிய வேண்டுமா? கூடாதா? - தினமலர் பதில் என்ன?

- விடுதலை நாளேடு 20 11 19

புதன், 27 நவம்பர், 2019

சமூகநீதியின் வரலாறு முதலமைச்சருக்குத் தெரியுமா?

தந்தை பெரியார் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் - தமிழர் தலைவர் வீரமணியின் முயற்சிகளை அறிவாரா?

தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்த வரலாற்றுப்பூர்வமான அறிக்கை

சென்னை, நவ.27 நீதிக்கட்சி காலம் முதல் 69 விழுக் காடு இடங்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றி ருக்கும் உரிமைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் உழைத்த உழைப்பும், முயற்சியும் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குத் தெரியுமா? சமூகநீதியைப் பறிக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சிகள் எடுக்காதது ஏன்? உதட்டால் பேசினால் போதுமா? செயல்பட வேண்டாமா என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வர லாற்றுப்பூர்வமான கடிதம் வருமாறு:

‘எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?’ எனும் தலைப்பில் முரசொலியில் (27.11.2019) உங்களில் ஒருவன், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட் டுள்ளதாவது

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் அய்யன் வள்ளுவர் வகுத்த வழியில், சமூகநீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கும் தமிழகத்தில், நூறாண்டு களுக்கு முன்பே, அந்தக் கொள்கைக்கு விதையிட்டு, நீர்வார்த்து வளர்த்த இயக்கம்தான் திராவிட அரசியல் இயக்கமான நீதிக்கட்சி. அதன் ஆட்சிக் காலத்தில்தான் “கம்யூனல் ஜி.ஓ. “ என்கிற வகுப்புவாரி உரிமை அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கப் பட்டது. அதன்மூலமாக அனைத்துச் சமுதாயத்தின ருக்கும் வேலை வாய்ப்பும் கல்வி உரிமையும் கிடைத்தன. இது, பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் நமக்குக் கிடைத்த சிறிய அதிகார வரம்பைக் கொண்டு, தொடக்கத்தில் சமூகநீதி காத்திட  நிறைவேற்றப்பட்ட பெரும் செயலாகும்.

"எவரும் எவருக்கும் எஜமானரும் அல்ல, யாரும் யாருக்கும் அடிமையுமல்ல" என்ற சமத்துவத்தின் அடிப்படையில் உருவான இந்த இடஒதுக்கீட்டினைத் தடுக்கும் நோக்கத்தோடு, சுதந்திரம் பெற்று குடியர சான இந்தியாவில், செண்பகம் துரைராஜ் என்பவர் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றங்கள், இந்த வகுப்புவாரி உரிமையைச் செல்லாது என அறிவித்து உத்தரவிட்ட நிலையில், சமூகநீதியைக் காப் பாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் எனத் தமிழகமே போர்க்கோலம் பூண்டது. திராவிட இயக்கங்களான தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமும், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக அறப்போர்க்களத்தில் இறங் கியதால், டில்லிவரை அதிர்ந்தது.

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றை நன்கறிந்த வரும், சமூக ஒடுக்குமுறைகளை, தான் பிறந்து வளர்ந்த மண்ணில் கண்டவருமான பெருந்தலைவர் காம ராஜர் அவர்கள், அன்றைய பிரதமர் பண்டித நேரு அவர்களிடம், தமிழகத்தின் எழுச்சியை எடுத்துரைத்த பிறகு, 1951 இல் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது.  அதன்மூலம் இடஒதுக்கீடு நிலைபெற்றது.

தி.மு.கழகம் தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டிலேயே இப்படியொரு வெற்றிகரமான போராட்டம் என்பதுதான், நமது சமூகநீதி வரலாற் றுப் பயணம்.

1967 இல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1969 இல் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வரான பிறகு, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு சட்டரீதியான வலுச் சேர்க்கவும், நடைமுறையில் கூடுதல் பலன ளிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்படுவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வாய்ப்புகளுக்காக, "சட்ட நாதன் கமிஷன்" அமைக்கப்பட்டது. அதன்பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியின் விளைவாகத்தான், அதுவரை 25 சதவிகிதம் என்று இருந்த, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, 31 சதவிகிதம் என உயர்த்தப்பட்டது. 16 சதவிகிதம் என்று  இருந்த, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 18 சதவிகிதம் என உயர்த்தப்பட்டது.

சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் படைத்த சாதனை இது.

அதன்பிறகு, எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சி அமைந்தபோது, திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கத் தையே புறக்கணித்திடும் வகையில், இட ஒதுக்கீட் டில்  பொருளாதார அளவுகோலி னைக் கொண்டு வந்தார். "ஆண்டு வருமானம் 9,000 ரூபாய்க்கு மேல் இருப்பவர் களின் குடும்பத்தாருக்கு, இடஒதுக்கீடு கிடையாது" என அறிவித்தார்.

அந்த அறிவிப்பு கண்டு தமிழ்நாடு தகித்தது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், சமூக நீதி சக்திகள் போராட்டங் கள் நடத்தின. அதன் விளை வாக, 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல் வியைச் சந்தித்தது. அந்தத் தோல்வி தந்த கசப்பான அனுபவத்தின் காரணமாக, மக்களின் வாக்குகளை மனதில் வைத்து, வருமான வரம்பை நீக்கியதுடன், 31 சதவிகிதமாக இருந்த, பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 50 சதவிகித மாக உயர்த்தினார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அதன்பிறகும் அவருடைய ஆட்சிக்காலத்தின் இறுதியில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள் பெருமளவில் நடந்தன. ஆனால் அது குறித்து எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை.

1989ஆம் ஆண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது தான், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 30 சதவிகித இடங்களை அவர்களுக்கு உறுதி செய்து, மீதி 20 சதவிகித இடங்களை தனியாகப் பிரித்து, "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" என்ற புதிய பிரிவினை உண் டாக்கி, அவர்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேற் றப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 18 சதவிகிதம் முழுமையும்

தாழ்த்தப்பட்ட இனத்திற்கும், பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகித இடஒதுக்கீடும் வழங்கி ஆணையிட்டு நிறை வேற்றியவர், தலைவர் கலைஞர்  அவர்கள். இதுதான் தமிழ்நாட்டில் நிலவும் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் வரலாறு. இந்த 69 சதவிகிதம் என்பதை, எண்ணிக்கை அளவிலும் ஏற்றத்தாழ்வற்ற முறையிலும், அனைத்துச் சமூகத் தினருக்கும் கிடைக்கச் செய்தது, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசு.

அதுமட்டுமன்று! இன்றைய நாளில் (நவம்பர் 27) நினைவு போற்றப்படும், "சமூகநீதிக் காவலர்" வி.பி.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, தேசிய முன்னணியில் அங்கம் வகித்த தி.மு.க.வின் பெருமுயற்சியால், மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் 27 சதவிகித இடங்களை, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக் கீடு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை என்பது, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாறியது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியதால், வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது. பதவி துறந்தாலும் கொள்கை மறவாத சமூகநீதிக்காவலருக்கு, சமூகநீதியின் தொட் டிலான தமிழ்நாட்டில், சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அதன்பின், இந்தியாவில் இடஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காட்டினைத் தாண்டக்கூடாது என, இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் கற்கோட்டையாக உரு வாக்கி வைத்திருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அப்போது ஆட்சியில் இருந்தவர், ஜெயலலிதா அம்மையார். அவர் ஆட்சியில் இட ஒதுக்கீட்டைக்  காப்பதற்கான சட்டப்  பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ இல்லை.

அதேநேரத்தில், இடஒதுக்கீடு பறிபோவதை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திய ஜெயலலிதா அரசைக் கண்டித்து, சமூகநீதியைக் காக்கும் போராட் டத்தை முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர் அவர் கள். அப்போது, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தற்போது நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ள திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்த அப்துல் லத்தீப் உள்ளிட்டோர் போராட்டக் களத்திற்கு ஆயத் தமாகி, தலைவரின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தபோது, தலைவர் கலைஞர் அவர்களையும் அவருடன் போராட்டக் களத்திற்குப் புறப்பட்ட தலைவர்களையும், கோபாலபுரத்திலேயே கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியதுதான் அம்மையார் ஜெயலலிதாவின் அரசு.

தொடர்ச்சியான போராட்டக் குரலும், கண்டன அறிக்கைகளும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் சட்டரீதியாக வழங்கிய கருத்துருவும், அம்மை யார் ஜெயலலிதாவின் கண்களை மெல்லத் திறக்கச் செய்தன. அதன்பிறகே, சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டு, சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. அதன்பிறகும்கூட, உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளால் இன்ற ளவிலும் 69 சதவிகித இடஒதுக்கீட்டினைப் பாதுகாத்திட தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தவேண்டியுள்ளது.

இத்தகைய போராட்டங்களுக்கு நடுவிலும், 69 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பிற்குள்ளாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித ஒதுக்கீட்டில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு 3.5 சதவிகித தனி ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட இனத் தவருக்கான 18 சதவிகித ஒதுக்கீட்டில் அந்த இனத்தைச் சேர்ந்த அருந்ததிய சமுதாயத்தின ருக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடும் வழங்கியவர், தலைவர் கலைஞர் அவர்கள்.

பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவிகித ஒதுக்கீடு ஆகியவற்றையும் இந்த 69 விழுக்காட் டிற்குள் நடைமுறைக்குக் கொண்டு வந்து, முழுமையான சமூகநீதியைத் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு நிறைவேற்றியது.

ஜெயலலிதா ஆட்சியில் இதுபோல எவருக் கேனும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? எத்தனை விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது?

இடஒதுக்கீட்டின் வரலாறு பற்றி அக்கறையில்லாமல், உண்மை விவரங்களை அறியாமல், "சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப் போம்" என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் உதட்டளவில் உரக்கப் பேசியிருக்கிறார்.

திரு.ராமசாமி படையாச்சியார் மணிமண்ட பத்தைத் திறந்துவைக்கும் விழாவில்தான் முதல மைச்சர் இப்படிப் பேசியிருக்கிறார்.

எந்த முதலமைச்சர்? மருத்துவக் கல்விக்கான பட்ட மேற்படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு பறிபோயிருப்ப தையே அறியாத முதலமைச்சர்.

"நீட் "தேர்வு எனும் கொடுவாளால் மருத்துவக் கனவு காணும் கிராமப்புற - ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவ மணிகளின் எதிர்காலம் வெட்டிச் சாய்க்கப்படுகிறதே, அந்த "நீட்" தேர்வை ரத்து செய்யக்கோரி நிறைவேற்றப்பட்ட  சட்டமன்றத் தீர்மானம், மத்திய அரசின் குப்பைக் கூடைக்குப் போனதைக்கூட அறியாத முதலமைச்சர்.

அரியலூர் மாணவி அனிதா தொடங்கி ஏராளமான  மாணவச் செல்வங்களின் உயிரைப் பறித்து, அவர்தம் குடும்பத்தாரைக் கண்ணீருடன் கதற வைக்கும் கொடூரத்தை உணரக் கூட இதயமில்லாத முதலமைச்சர்தான், "சமூகநீதிக்கு ஆபத்து என்றால் அதனைப் பாதுகாப்போம்" என்று பேசியிருக்கிறார்.

இடஒதுக்கீட்டிற்கான அளவுகோல் என்பது; "சமூக  ரீதியிலும் கல்வி ரீதியிலும் (Socially and Educationally) பின்தங்கியிருப்பாருக்கான உரிமை!" என்பதேயாகும். இதைத்தான் நமது அஅரச மைப்புச்சட்டமும் நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இதில் பொருளாதார அளவு கோலுக்கு இடமில்லை  என்பதை அழுத்தம் திருத்தமாக அவை தெரிவித்தபிறகும், "பொரு ளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு" என்ற சட்டத்தை மத்திய அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்து, அதனை மட்டும் அனைத்து மட்டங்க ளிலும் நிறைவேற்றி வரும் நிலையில், அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட - வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட - ஜாதிப் படிநிலையின் அடிப்படையில் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்பதையாவது தமிழ்நாட்டின் முதல மைச்சர் பொறுப்பில் இருப்பவர் உணர்ந்திருக் கிறாரா?

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துக்களை அறிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசின் சார்பில் கூட்டினார்களே, அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அக்கறைகூட இல்லாமல் அதனைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், அரசின் நிலைப்பாட்டைத் தெரி விக்கப் பயந்து, மத்திய ஆட்சியாளர்களின் மனம் கோணாத வகையில் மவுனம் சாதிக்கும் எடப் பாடி பழனிசாமி அவர்கள், சமூகநீதிக்கு ஆபத்து என்றால் குரல் கொடுப்போம் என்பது ; வேடிக்கை மட்டுமல்ல, வேதனை மிகுந்ததுமாகும்.

மத்திய அரசின் ரயில்வே, அஞ்சலகம், வங்கி கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீட்டினையும் அந்தந்த மாநிலத்தவ ருக்கான வேலைவாய்ப்புகளையும் தீர்த்துக்கட் டும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுக மாகவும் நடைபெறுகின்றன. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீட்டு முறை ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. பட்டியல் இனத்தவர், பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடுகளிலும் பல முறைகேடுகள் நடக்கின்றன.

மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த மருத் துவக் கல்வியையும் பறித்து, அதிலும் இடஒதுக்கீடு இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. இத்தனை ஆபத்துகள் மொத்தமாகச் சூழ்ந்துள்ள நிலை யில், நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல, இம்சை அரசன் புறாவை வறுத்துச் சாப்பிட் டதுபோல, ஏதோ ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டு பேசுகிறார், எடப்பாடி பழனிசாமி.

இவரது அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?

சமூகநீதிக்கு பெரும் அபாயம் சூழ்ந்துள்ள இந்த நிலையிலும், அதனைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளு மன்றச் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது, தி.மு.கழகம்.

மத்திய அரசுப் பணிகளில் "இதர பிற்படுத் தப்பட்டோர்" உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டினை வழங்கிட வலியுறுத்தியும், தற்போதைய தேவைக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தக் கோரியும் தி.மு.கழக உறுப்பினர்களும் தோழமைக் கட் சிகளின் உறுப்பினர்களும் குரல்  கொடுத்து வருகின்றனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, "India For Sale" என்கிற அளவுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செயல் பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும் இனி சமூகநீதிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் தி.மு. கழகம்தான்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து போராடுவதும் தி.மு.கழகக் கூட்ட ணிதான்.

கருங்கற்களால் ஆன கோட்டை போல, சமூகநீதியைக் கட்டிக் காத்தது தி.மு.கழக அரசு. அந்தக் கோட்டையைத் தகர்த்து, சமூகநீதிக்குக் கல்லறை கட்ட நினைப்போருக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கிறது அ.தி.மு.க. அரசு.

சமூகநீதிக் கொள்கை வேரூன்றியுள்ள தமிழ் நாட்டு மண்ணில், அதற்கு எதிரான சக்திகளை முறியடித்து, சமூகநீதியைக் காக்கும் அரணாக தி.மு.கழகம் எப்போதும் திகழும்!

இவ்வாறு  திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 27 11 19

செவ்வாய், 26 நவம்பர், 2019

மலேசியாவில் திராவிடர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

ஒரு குடையின்கீழ் நின்று சிறப்பாகப் பணியாற்றிட முடிவு

கோலாலம்பூர், நவ.25 மலேசியாவில் பல்வேறு அமைப்புகளாக செயல்படும் திராவிட அமைப்பினர் ஒருங்கிணைந்து ஒரு குடையின்கீழ் சிறப்பாக செயல் பட முடிவு எடுக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங் கினார்.

நேற்று (24.11.2019- ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கிள்ளான், கிரிஸ்டல் கிராவ்ன் விடுதி கூட்ட அறையில் மலேசியாவில் உள்ள திராவிடர் அமைப்பு களுடனான சந்திப்புக் கூட்டம் மலேசிய திராவிடர் கழக ஏற்பாட்டில் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மலேசியாவில்  உள்ள திராவிட அமைப்புகள் ஒற்று மையுடன் பெரியார் பணிகளை செய்திட வேண்டும் என்பதற்காகவும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டதற் கிணங்க  இச்சந்திப்பு கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒத்த கருத்துடைய  திராவிடர் அமைப்புகளின் தலைவர்களும், பொறுப் பாளர்களும்   தங்கள் கருத்துகளை முன்வைத்து பெரியார் என்ற பெயரில் ஒன்றிணைவதாக ஒப்புதல் வழங்கினர்

தமிழர் தலைவர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமதுரையில், சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற் படுத்திய ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும். சிறப்பான வாழ்க்கை வாழ தந்தை பெரியார் நமக்குக் காட்டிய வழியினை உலகெங்கும் பரப்பும் நம்மிடையே ஒற்றுமை குணம் மேலோங்க வேண்டும் என்றும், இதனைக்  கருத்தில் கொண்டு பல்வேறு பிரிவுகளாக செயல் பட்டு வரும் திராவிட அமைப்புகள் இன்று பெரியார் என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

இச்சந்திப்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் நினைவு நாள் நிகழ்வுகளை ஒன்றி ணைந்து அனைத்துத் திராவிட இயக்கங்கள் நடத்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன் முதல் நிகழ்வாக தந்தை பெரியார் 46ஆம் ஆண்டு நினைவு நாளை தலைநகரில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்

இச்சந்திப்பு கூட்டத்தில் மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ச.த.அண்ணாமலை, துணைத் தலைவர் சா.பாரதி, பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம், மலேசிய மாந்த நேய ஆலோ சகர் இரெ.சு.முத்தையா, தலைவர் நாக.பஞ்சு, மலேசிய தன்மான இயக்கத் தலைவர் கெ.வாசு, உதவித் தலைவர் மரு.கிருட்டிணன், பெரியார் பாசறைத் தலைவர் வா.அமுதவாணன், பொரு ளாளர் அ.அல்லி மலர் அவர்களு டன் அனைத்து திராவிட அமைப்புகளின் வழியி லான அய்ம்பதிற்கும் மேற்பட்ட பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு  மலேசிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், திராவிட அமைப்புகள் சந்திப்புக் கூட்ட ஒருங்கிணைப்பாளருமான  பொன்.பொன்வாசகம் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 25.11.19

திமிர் அடங்கவில்லை "தினமலர்" கும்பலுக்கு!

பூணூல் கூட்டம் சொந்த உழைப்பால் முன்னேறி யிருக்குதாம். அப்படி என்ன உழைத்தார்களாம்? பட்டியல் போடட்டுமே இந்தப் பார்ப்பனர் கூட்டம்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சாஸ்திரம் எழுதி வைத்தது யார்?

தலைமுறை தலைமுறைகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கைதூக்கிவிட்டது நீதிக்கட்சி ஆட்சிதானே.   அதற்குப் பாதுகாப்பு அரண் அமைத்தது தந்தை பெரியார் தானே.

அந்தப் பாதுகாப்பு ஆணையை எதிர்த்து உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் வரை படையெடுத்து அந்த ஆணையை ரத்து செய்வதற்குக் காரணமாக இருந்தது பூணூல் கும்பல்தானே.

இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே மரபுகளை உதைத்துத் தள்ளி, நீதிமன்றத்தில் பார்ப்பனர் களுக்காக வாதாடவில்லையா? இந்தப் புத்தியைப் பூணூல் புத்தி என்று அழைக்காமல், பூமாலை போட்டு ஆரத்தி எடுக்க வேண்டுமா?

இன்று வரை பூணூல் போடுவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஒரு தனி நாளையே குறிப்பிட்டு பூணூல் தரிப்பதன் தாத்பரியம் என்ன?

தூவிஜாதி (இரு பிறப்பாளர்) பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்னும் ஜாதி ஆணவம்தானே.

நீ - இரு பிறவியாளன் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்றால் பார்ப்பனர் அல்லாத மக்கள் எல்லாம் யார்? சூத்திரன்தானே.  சூத்திரனை வேசிமகன் என்று எழுதியுள்ளதே- உங்கள் மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோகம் 415). இதனை எதிர்த்தால் பார்ப்பனத் துவேஷமா?

எங்களை வேசி மகன் - சூத்திரன் என்று கூறுவோரை எதிர்த்தால் பார்ப்பனத் துவேஷமா?

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்று கூறுவது சுயமரியாதை உணர்வின் ஆவேசம் அல்லவா?

உடல் முழுவதும் நெய்யைத் தடவி புத்திரன் நிமித்தம் யாருடனும் புணரலாம் என்று கூறும் பூணூல் கூட்டம் மான அவமானம் பற்றிக் கவலைப்படலாமா?

சொந்த உழைப்பால் முன்னேறி எந்த குறையும் இல்லாமல் இருக்கிறார்களாம் பார்ப்பனர்கள்.

அட அண்டப்புளுகு திலகங்களே, ஆகாயப் புளுகின் அப்பன்களே!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் இராமச்சந்திர அய்யர் தன் பதிவேட்டில் (SR) தன் வயதைத் திருத்தி மோசடி செய்து பதவி நீடித்த கேவலத்தை என்னவென்று சொல்லுவது!

அன்றைய ஜனாதிபதியாக இருந்த இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், காது காதும் வைத்தாற்போல் தண்டனை யிலிருந்தும், ஒரு பைசா இழப்புமின்றித் தப்ப வைத்ததுதான் 'தினமலர்' திரிநூல்களின் அகராதியில் "எந்தக் குறையுமில்லாதவர் பார்ப்பனர்" என்பதற்கான பொழிப்புரை - கருத்துரையா?

ஒன்றைக் கொடுத்து ஒன்பது வாங்க வேண்டாம்.  கொட்ட ஆரம்பித்தால்  தாங்க மாட்டீர்கள்! தர்ப்பைப் புல் கூட்டம் தணலோடு விளையாடிப் பார்க்க வேண்டாம். மத்தியில் பார்ப்பனத் தர்பார் ஆட்சி என்பதால் ஆணவ நிர்வாண ஆட்டம் போட ஆசைப்படவேண்டாம் - எச்சரிக்கை!

-  விடுதலை நாளேடு, 26.11.19

சனி, 23 நவம்பர், 2019

இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு துரோகம் இழைக்கும் மத்திய பிஜேபி அரசு!

வெள்ளை அறிக்கை வெளியிடுக!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தல்

சென்னை, நவ.23, “பொதுத் தொகுப்பிலுள்ள மருத்துவ இடங்களிலும், இதர பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தினருக் கான இடஒதுக்கீட்டை நிரா கரிப்பது மாபெரும் துரோக மாகும்” என தி.மு.க. தலைவர் தளபதி மு.க.. ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.11.2019) மத்திய பா.ஜ.க. அரசுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

“மாநில அரசும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங் களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங் களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை” என்று தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சரோ, அல்லது மாண்புமிகு பிரதமர் அவர்களோ நாடாளுமன்றத்தில் உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

2017_18-ஆம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத் துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமு தாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் ‘மண்டல் கமிஷன்’ அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்!

இடஒதுக்கீடு கொள்கை பறிக்கப்பட்டுள்ளது

2018_19-ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே! இரு வருடங் களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இட ஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற் குரியது

பிற்படுத்தப்பட்ட

சமுதாயத்தினரை வஞ்சிப்பதா?

பா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப் பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலு வலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில்,  இப்போது பொதுத் தொகுப் பில் உள்ள மருத்துவ இடங்களிலும்  ‘இட ஒதுக்கீட்டை’ நிராகரிப்பது பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப் பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச் சர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக் கப்பட்டு விட்டது.

மத்திய அரசின் செய லகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் மட்டத்தில் அறவே இல்லை என்றதொரு நிலை உருவாக் கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ‘நீட்’ தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு - இப்போது அரசியல் சட் டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும் - மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

வெள்ளை அறிக்கை தாக்கல் செய்க!

ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017_18, 2018_19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத் தனை மருத்துவ இடங்கள் வழங்கப் பட்டன?

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத் திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள் ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங் களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்து வதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோ தாவைக் கொண்டு வர வேண்டும்

என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன்.

இவ்வாறு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 23 11 19

பார்ப்பன ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது! பறக்கிறது!!

மத்திய அரசின் செயலாளர்கள் 82 இல் எஸ்.சி. எண்ணிக்கை வெறும் 4

20 அய்அய்எம் நிறுவனங்களில் பேராசிரியர்கள் எஸ்.சி. எண்ணிக்கை வெறும் 11 பேர் மட்டுமே

என்று தணியும் இந்தக் கொடுமையின் துயரம்?

புதுடில்லி,நவ.23 மத்திய அரசுத் துறை செயலாளர்களில்  82 பேர்களில் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் வெறும் 4 பேர்களே. 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் வெறும் 11 பேர்களே என்கிற அதிர்ச்சிகர தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகி யுள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் உயர்பதவிகளுக்கானப் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனமாகிய அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கான பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்கள், முசுலீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச் சர்கள் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் பதவிகள், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பதிலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கே.சோமநாத்பிரசாத்

நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.சோமநாத்பிரசாத் எழுப்பிய கேள் விக்கு, மத்திய பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிடுகையில்,

மத்திய அரசுத் துறைகளில் செயலாளர் பதவிக் கான 82 பணியிடங்களில் நான்கு இடங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளதாகவும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாகிய 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் 11 பேர் மட்டுமே உள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் அதிகாரத்துறை, நிலவளங் கள்  துறை, மருந்தியல் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய துறைகளில் செயலா ளர்களுக்கான பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்  மட்டுமே உள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள நிலை

அரசுத்துறைகளில் அதிகாரமிக்க உயர் பதவியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் களுக்கு  பிரதிநித்துவம் அளிக்கப்படாதது மட்டு மன்றி, உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களுக் கான பணியிடங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

பர்தாப் சிங் பாஜ்வா

மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் உறுப் பினர் பர்தாப் சிங் பாஜ்வா எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்போக்ரியால் நிஷாங்க் பதில் அளித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனமாகிய 20 அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களில் ஒட்டு மொத்தமாக வெறும் 11 இடங்களில் மட்டுமே தாழ்த் தப்பட்ட, பழங்குடியினத்தவர் உள்ளனர். அதன்படி, அகமதாபாத், கொல்கத்தா அய்அய்எம் கல்லூரிகள் உள்பட 12 அய்அய்எம் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.

பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட 5 அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த் தப்பட்ட அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் களுக்கு  ஓரிடம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கோழிக்கோடு, ஷில்லாங், ஜம்மு ஆகிய அய்அய்எம் கல்லூரிகளில்பேராசிரியர் பணியிடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்தவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக உத்தரவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த 20.11.2019 அன்று அய்அய்எம் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கைமூலம் உத்தரவு அனுப்பியுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு) சட்டம் 2019இன்படி,தாழ்த்தப்பட்டவர் களுக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு, சமூக அளவிலும், கல்வியிலும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு (இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு) 27 விழுக்காடு, பொருளாதாரத்தில் நலி வுற்றவர்களுக்கு 10 விழுக்காடு என்கிற இடஒதுக்கீடு கட்டாயம். அந்த அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அனைத்து பணிநியமனங்களிலும், ரோஸ்டர் முறையிலேயே இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே அய்அய்எம்  உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் நிய மனங்களில்  இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படா மலேயே இருந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான பணியிடங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத நிலையே உள்ளது.

முந்தைய அனைத்து உத்தரவுகளையும் கடந்து 20.11.2019 தேதியிட்ட உத்தரவின்படியே  மத்திய அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீட்டின்படி பேராசி ரியர்கள் பணியிடங்களில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

கே.உசைன் தல்வாய்

அரசுத் துறைகளில் செயலாளர்கள், இணை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கான இடங் களில் தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும்  பழங்குடியினர் உள் ளிட்டவர்களின் பிரதிநிதித்துவம்குறித்த தகவல்களை அளிக்குமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.உசைன் தல்வாய் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சர் பதில் கூறுகையில், உயர் பதவிக் கான பணியிடங்களில் உள்ளவர்களின் இடஒதுக்கீட்டு தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்றார்.

பிரதிநித்துவம்குறித்த தகவல்கள் பணிநியமனத்தின் தொடக்கத்தில் திரட்டப்பட்டவையே ஆகும். உயர் பதவிக்கான பணியிடங்களில் பணிநியமனம், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினரின் பிரதிநிதித்துவத் தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் பதிலில் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு 23 11 19

வெள்ளி, 22 நவம்பர், 2019

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

இரத்தம் கொதிக்கவில்லையா?

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?

நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். நாடாளுமன்றத்தில் உள்ள பிற்படுத் தப்பட்ட உறுப்பினர்களே, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? இரத்தம் கொதிக்கவில்லையா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற் கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம்!

அதில் மொத்தமுள்ள 30,774 இடங் களில் 50 சதவிகிதம் அதாவது 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் வழங்கப்படவேண்டும். ஆனால், மத்திய அரசோ அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர் வதால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்காமல் போகும்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் ‘பம்பர்' பரிசா?

ஆனால், இதே ஆணையில் 10 சதவிகிதம் உயர்ஜாதியில் ஏழையினருக்கு (EWS) மொத்தமுள்ள 15,387 இடங்களி லும்  இடம் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உயர் ஜாதியினருக்குத் தனியாக மேலும் பொதுப் பிரிவில் உள்ள 7,693 இடங்கள் போக, 1,538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 27 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், வெறும்  300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளன. இதன்மூலம் இழப்பு 3,800 இடங்கள். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் - கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கைவாசிகளான பிற்படுத்தப்பட் டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மாநில அரசு என்ன செய்துகொண்டுள் ளது? பா.ஜ.க.வுக்கு பஜனை பாடவே நேரம் போதவில்லையா? கண்டிக்கத் தக்கது.

உயர்ஜாதியினருக்கு மட்டும்

சட்ட விரோதமாக பம்பர் பரிசா?

இவ்வளவுக்கும் மக்கள் தொகையில் மிகவும் அதிகமானவர்கள் பிற்படுத்தப் பட்டோரே! (மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு) ஜனநாயகப்படி பெரும் பான்மையான மக்களுக்குரிய உரிமை வழங்கப்படுவதற்கு மாறாக மறுக்கப்படும் கொடூரம்!

தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு!

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் சுமார் 1,758 மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் இங்கே;  அதிலும் இந்தியாவிலேயே முன் னணி மாநிலமாக உள்ளது. இருந்த போதிலும், இந்த 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 879 இடங்களை மத்திய அரசிடம் கொடுத்து விடுகிறோம். இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாததால் (இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுகிறது). சுமார் 450 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற் படுத்தப்பட்டோரும் மருத்துவ இடங் களை இழக்கிறார்கள்.

உயர்ஜாதியில் ஏழைகள்மீது கரிசனம் பாரீர்!

அதேநேரத்தில், சட்ட விரோதமான - உச்சநீதிமன்றத்தாலேயே நிராகரிக் கப்பட்ட பொருளாதார அளவுகோலை உயர்ஜாதியில் ஏழை என்பவர்கள்பால் செலுத்தி (10 விழுக்காடு) இடங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

வங்கித் தேர்வில்

நடந்தது என்ன?

எடுத்துக்காட்டாக கடந்த ஜூன் மாதம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிளார்க் பணிகளுக்காக நடத் தப்பட்ட தேர்வில் எப்படி மதிப்பெண் (கட்-ஆஃப் மார்க்) மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது?

பொதுப் பிரிவினருக்கு 61.25%

இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 61.25 %

மலைவாழ் மக்களுக்கு 53.95% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரியுமா? 25.5%

நியாயப்படி கல்விக் கூடங்களில் 25.5% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி கிடையாது. ஆனால்,  பி.ஜே.பி. என்னும் மனுதர்ம ஆட்சியிலே 61.25% மதிப்பெண் பெற்றால்தான் தாழ்த்தப் பட்டோருக்கு, இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு  தேர்ச்சி. ஆனால், உயர்ஜாதியின ருக்கோ கட் ஆஃப் மார்க் வெறும் 25.5 சதவிகிதம்.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதானே!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்யவேண்டும்?

இரத்தம் கொதிக்கவில்லையா? நாடா ளுமன்றத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?.

மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் இது குறித்து நேற்று குரல் எழுப்பியுள்ளது பாராட்டத்தக்கது. நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த மனுதர்ம சமூக அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும். இதைத் தி.மு.க. உறுப்பினர் களும் முன்னெடுக்கவேண்டும் என்பது நமது கனிவான வேண்டுகோள்!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கானது. ஆனால், மனுநீதி பி.ஜே.பி. ஆட்சியிலோ குறைந்த எண் ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக் குத்தான் எல்லாமும் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இனி நாம் என்ன செய்யவேண்டும்? குட்ட குட்ட குனிந்து கொண்டு இருக்கப் போகிறோமா?

உரிமை மறுக்கப்பட்ட மக்கள் எரி மலையாகக் கிளர்ந்து எழுவது எந்நாள்? தந்தை பெரியார் பிறந்த மண்தான் குரல் கொடுக்கவேண்டும் - கொடுப்போம் - நிமிர்ந்திடுவீர், எழுந்திடுவீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.11.2019

வியாழன், 21 நவம்பர், 2019

'தினமலரே' பொய்ச் செய்திகளை அவிழ்த்துக் கொட்டாதே!

ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டத்துக்குப் பெயர் தொழிற் கல்வியாம். 2019லும் பார்ப்பனர்கள் திருந்தவில்லை. அதே ஆதிக்கப் புத்தியில்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்று போதாதா?

சரி,காலையில் படிப்பு --& மாலையில்  அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்விதானே!

இந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததுடன் 6000 பள்ளிகளை அவர் இழுத்து மூடியது ஏன்? ஏன்? சூத்திரன், பஞ்சமன் படிக்கக் கூடாது என்பதுதானே! ஓர் ஆட்சியின் கடமை பள்ளிகளைத் திறப்பதா & மூடுவதா?

குப்பன் மகன் சுப்பன் மாலை வேளையில் எந்தத் தொழிலை செய்வான் & கற்பான்? விவசாய வேலையோ, சவர வேலையோ, துணி துவைக்கும் வேலையோ தானே செய்வான்! ஆனால் பார்ப்பன மாணவர்கள் என்ன செய்வார்களாம்?

பார்ப்பனர்கள்தானே அந்தக் கால கட்டத்தில் டாக்டர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், உத்தியோகஸ்தர்கள். இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அப்பன் தொழிலைச் செய்வார்கள் என்றால் இதன் பொருள் விளங்கவில்லையா? ராஜாஜி கொண்டு வந்தது தொழிற்கல்வி என்றால் தந்தை பெரியார் தலைமையில் மக்கள் பொங்கி எழுந்தனரே - - & ராஜாஜி பதவியிலிருந்து ஓடியது ஏன்? காமராஜர் என்ன செய்தார்? ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தாரே- & அதனால் தானே அவரைப் பச்சைத் தமிழன் & கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டினார் பெரியார். திரிநூல் 'தினமலரே' - & காலம் கடந்து விட்டது என்பதற்காக பொய்ச் செய்திகளை அவிழ்த்துக் கொட்டாதே!

- விடுதலை நாளேடு 21 11 19

பெரியாரை சிறுமைப்படுத்துவதா? டில்லியில் ராம்தேவ் கொடும்பாவி தீக்கிரை!

தந்தை பெரியாரைப்பற்றி அவதூறாகப் பேசிய பாபா ராம்தேவ் கொடும்பாவி நேற்று (20.11.2019) டில்லிப் பல்கலைக் கழகத்தில்  மாணவர்களால் கொளுத்தப்பட்டது.

- விடுதலை நாளேடு 21 11 19

புதன், 20 நவம்பர், 2019

ரமண ரிஷி ?

*- மயிலாடன் -*

‘தினகரன்' வசந்தம் இணைப்பில் (17.11.2019) ‘‘நினைத்தாலே நடக்கும்!'' என்ற தலைப்பில் ரமணர் அற்புதம் என்று விலா வாரியாக வாரி கொட்டியுள்ளது.
‘‘பகவான் ரமணர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந் தார். எளிய உணவுதான். தயிர்ச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ‘‘நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா?'' என்று கேட்டார். இல்லை என்று சொன்னதுமே எந்தப் புகாரும் இல்லாமல் சாப்பிட்டு எழுந்தார்.
ஆசிரம நிர்வாகிக்கு தகவல் போனது. அவர் தர்ம சங்கடப் பட்டார். உடனடியாக மதுரையில் இருந்த பக்தர் ஒருவருக்கு,  ‘‘ஒரு கூடை நார்த்தங்காய் உடனே அனுப்பவும்'' என்று கடிதம் எழுதினார்.
கடிதத்தைப் பார்த்த ரமண ருக்குக் கோபம் வந்தது (‘மகா னுக்கு' எல்லாம் கோபம் வர லாமோ!) ‘‘இவர்களுக்கெல்லாம் முக்தி, நார்த்தங்காயில் தான் கிடைக்கும் போலிருக்கு. இல் லேன்னா இதையெல்லாமா யார் யார் கிட்டேயோ கேட்டு லெட்டர் போடுவாங்க. நமக்கு வரணும்னு விதி இருந்தா, அதுவே வரும். உங்க இஷ்டம்போல ஆசிர மத்தை நடத்துங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கடிதத் தைத் தூக்கிப் போட்டார்.
இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே பக்தர் ஒருவர் இரண்டு கூடைகளோடு ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.
அவரை சிரித்தவாறே எதிர்கொண்ட பகவான்,
‘‘என்ன கூடையில் நார்த்தங்காயா?'' என்று கேட்டார். (எல்லாம் சொல்லி வைத்து நடக்கும்போலும்!)
அந்தப் பக்தர் ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ரயிலில் முக வரியின்றி பார்சலுக்கு ஏற்றப் பட்டிருந்த இரண்டு கூடைகளைத் தான் ஆசிரமத்துக்கு எடுத்து வந்திருந்தார். அதற்குள் என்ன இருக்குமென்றுகூட அவருக்குத் தெரியாது. (இது முறைகேடு அல்லவா!)

அந்தப் பக்தர் சந்தோஷத் தோடு ஒரு கூடையைத் திறந்து பார்த்தார்.
நார்த்தாங்காயேதான். இன்னொரு கூடையிலே ஆரஞ்சுப் பழம் இருக்கலாம். ஆரஞ்சிலே ஊறுகாய் போட்டா சகிக்காது; இரண்டு பழங்களும் கலந்துடாம கவனமா இருங்க'' என்றார் ரமணர்
*‘‘இதெல்லாம் அற்புதமா, இல்லை என்றால் தற்செயலா நடந்ததா சாமி?''* என்று நடந்த அத்தனை சம்பவங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி  கேட்டார்.

‘‘அறிஞர்களின் இதயங்களில் பொக்கிஷமாக விளங்கும் பிரக்ஞை சிந்தாமணியாகும். கற்பகவிருட்சத்தைப்போல அது நினைக்கப்படுவது அத்தனையும் நிறைவேற்றி வைக்கும்'' என்று யோக வாசிஸ்டத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார்'' இதுதான் ‘தினகரன்' வசந்தம் தரும் செய்தி.

இந்தப் பிரக்ஞையாபதிக்கு ஆசிரமத்தில் நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா? இல்லையா? என்பதுகூடத் தெரியவில்லை என்பதுதான் விதர்ப்பமான கேள்வி.
அது சரி, இப்படிப்பட்ட மகான் மரணம் அடைந்தது எப்படி? குத்திக் காட்டுவது நம் நோக்கமன்று. ஆனால், மகானு மல்ல - புடலங்காயும் அல்ல. சராசரி மனிதனுக்கு ஏற்படுவது போன்ற பொல்லா நோய் வந்து மரணமடைந்ததுதான் ‘மகான்' என்ற சொல்லாடலைத் தோலுரிக்கிறது.
ரமணரின் முதுகுத்துண்டில் என்புருக்கி நோய் இருந்தது. பிறகு முதுகுதண்டுவடத்தில் சர்கோமா எனும் புற்றுநோய்க் கட்டி புறப் பட்டது. நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றியும், அகலாமல் வளர்ந்த வண்ணம் இருந்தது. கதிரியக்கச் சிகிச் சைக்கும் அது கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்க வில்லை. ஹோமியோபதியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நோய் முற்றிய நிலையில், 14.4.1950 அன்று மாலை மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்குமேல் வாசகர் சிந்தனைக்கு....!

*நன்றி : "விடுதலை" நாளேடு 18.11.2019*

திங்கள், 18 நவம்பர், 2019

மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கெல்லாம் பாராட்டு! பாராட்டு!! விருதுநகர்ப் பிரகடனத்தை நிறைவேற்றுவோம்!

* சுயமரியாதை இயக்க வீரர்கள் கோட்டம் விருதுநகர்

* விருதுநகர் மண்ணிலே வரலாறு படைத்த ப.க. பொன்விழா மாநாடு

நாடு தழுவிய போராட்ட விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்க!

விருதுநகரில் கடந்த சனியன்று (16.11.2019) நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அருமைத் தோழர்களுக்கெல்லாம் பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து - விருதுநகரில் வெளியிட்ட பிரகடனத்தையும் நிறைவேற்றி முடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விருதுநகர் - கடந்த காலத்தில் திராவிடர் இயக்கமான ‘நீதிக்கட்சி' என்ற ஜஸ்டீஸ் கட்சி (எஸ்.அய்.எல்.எஃப். - தென்னிந்தியர்  நல உரிமைச் சங்கம்) பூத்துக்குலுங்கிய மண் - அதனோடு அரசியல் களத்தில் எதிர்புறத்தில் நின்று போராடிய காமராசரை, தந்தை பெரியார் ‘பச்சைத் தமிழர்' என்று அழைத்து - ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடிக்கும் வீரராக  அவரை ஆக்கி, ஆட்சியில் அமர்த்த துணிவை முன்வைத்து, செயல்  ஊக்கியாக இருந்தவர் தந்தை பெரியார் என்பது  இளைய தலை முறை இன்று கற்கவேண்டிய வரலாற்றுப் பாடம்; அந்த காமராசரின் பிறந்த பூமியில் தான் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இம்மாநாடு!

விருதுநகர் - சுயமரியாதை இயக்க சீலர்களின் கோட்டம்!

அக்காலத்திலேயே சுயமரியாதை இயக் கத்தின் முதல் தலைவராக தந்தை பெரியார் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பட்டி வீரன் பட்டி டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டி யனாருக்கு அடுத்தபடி முக்கியத்துவம் பெற்று, இறுதிவரை நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகவும் திகழ்ந்தவர் விருதுநகர் வே.வே.இராமசாமி (நாடார்) அவர்கள்.

இவர் காலத்தில் உருவான இளைஞர்தான் ‘வாலிபப் பெரியார்' என்று பலரால் அழைக் கப் பெற்ற ஏ.வி.பி.ஆசைத்தம்பி!  முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சாத்தூர் பா.இராசாமணி. (கடைசியில் காங்கிரசில் சேர்ந்து காமராசரின் சாத்தூர் பிரதிநிதியாக ஆன போதிலும், என்றும் பெரியார் தொண்டராகவே திகழ்ந்தவர் அவர்).

ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எழுத்தாளர் விருதை ந.இராமசாமி போன்றவர்கள் பணி யாற்றியவர்கள். தி.மு.க.வுக்கு போன பின்னரும், விருதுநகர் திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர் ஏ.வி.பழனி யப்பன் - (ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தந்தை யார்) - அவரது தங்கை, தங்கை கணவர் எல்லாம் நம் இயக்கத்தோடே பயணித்த வர்களே! சாத்தூர் காசிராசன், விருதை இளஞ்செழியன், இராமர் போன்றவர்கள் திராவிடர் கழகத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர்கள்.

அடுத்த கட்டத்தில் வரும் 1921 இல்  ஜனவரியில் நூற்றாண்டு தொடங்கும் கழகச் செயல் வீரர் - ஏ.வெங்கடாசலபதி பி.ஏ.,  அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக, பொதுக்குழு உறுப்பினராக இறுதிவரை உறுதியுடன் செயலாற்றியவர்.

இன்றும் அவரது மகன் புகழேந்தி கழகக் கடமை வீரராகவே திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.

அருப்புக்கோட்டையோ விருதுநகர் அருகில் உள்ள சுயமரியாதைக்கோட்டை (அதை விரிக்கின் பெருகும்).

விருதுநகர் மாநாட்டு வெற்றிக்கு

உழைத்த வீரர்கள்!

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுயமரியாதை மண்ணில் பகுத்தறி வாளர் கழகத் தலைவராக, மாநிலத் துணைத் தலைவராக தலைமை ஆசிரியர் கொள்கைச் சீலர் நல்லதம்பி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

இதனால் பணி ஓய்வுக்கு முன் பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் வந்தன - மலைபோல் வந்தவை பனிபோல் கரைந் தன - இவரும், இவர் குடும்பத்தினரின் உறுதி காரணமாகவும், அவரது ஒழுக்கத் திறன் காரணமாகவும்!

மாணவப் பருவந்தொட்டே திராவிடர் கழகத்திற்கு அருமையான செயல் வீரராக இருந்து மாவட்ட கழகத்தைக் கட்டிக் காத்தவர் சிவகாசி ‘வானவில்' மணி அவர்கள்;  விருதுநகர் மாவட்டத்துக்குக் கிடைத்த அரியதோர் மாவட்டச் செயலாளர் உழைப்பின் உருவம், கொள்கைத் தங்கம் அருப்புக்கோட்டை ஆதவன் ஆவார். எளிமை, இனிமை, உழைப்பு, அடக்கம், ‘விடுதலை' பரப்பும் வித்தகர் - தோழர் ஆதவன் அவர்கள். அவருக்குப் பெருந் துணை அருப்புக்கோட்டைச் சிந்தனை யாளர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் எஸ்.எஸ்.ஆனந்தம் அவர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் இள இரத் தங்கள் பொறுப்பில் அமரட்டும் என்ற உணர்வோடு, செயல் வீரர் - திறன்மிக்க தீரர் திருப்பதி அவர்களை மாவட்டத் தலை வராக்கிட முன்மொழிந்து வழிவிட்டார் வானவில் மணி. தோழர் திருப்பதியின் திறன் - செயல் ஆற்றும் தன்மை - இராசபாளையம் பகுதியில் தொடங்கி, தென் மாவட்டங்கள் வரை மிகவும் இடையறாத பணிகள் என்றாலும், முகம் சுளிக்கா முயற்சிமூலம் வெற்றிக்கனி பறிக்கும் தனித்தன்மையாளர். அவருக்கு அருமையான (டீம்) ஒத்துழைப்புக் குழு உண்டு.

இயக்கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ்,  தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம், தென் மாவட் டங்களின் பிரச்சார செயலாளர் எடிசன்ராசா, மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, பொதுச்செயலாளர்  இரா. தமிழ்ச்செல்வன், ப.க. பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன்,  ப.க. எழுத்தாளர் மன்றத் தலைவர் டாக்டர் வா.நேரு,  பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர், மாநாட்டு வரவேற்புக் குழுப் பொருளாளர்ச.குருசாமி (கே.டி.சி.), கடை வீதி வசூல் குழு, தெருமுனைப் பிரச்சாரக் குழு, மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் விருத்தாசலம்  த.சீ.இளந்திரையன்,  மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.சுரேஷ், மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், தஞ்சை மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஏ.யோவான், எஸ்.குமார், ஏ.பிரகாஷ், தென் காசி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வே.முருகன், விருத்தாசலம் மாவட்ட  இளைஞரணி பிரவீன்குமார் ஆகியோரின் (சில பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக் கவும்). கூட்டு உழைப்பு விருதுநகர் மாநாட்டு வெற்றியை கனியாக்கி நம் மடிமீது விழச் செய்தது!

விருதுநகர் காணாத மக்கள் பெருவெள்ளம்!

விருதுநகர் காணாத கூட்டமும், பகுத் தறிவுப் பிரச்சாரப் பெரு வெள்ளமும் கரை புரண்டு ஓடியது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

தொடக்கத்திலிருந்தே காவல்துறை கீழ்மட்ட அதிகாரிகள் தந்த தொல்லைகள் பல என்றாலும், நியாயம் வழங்கினர் மேல் மட்ட கடமை உணர்ந்த காக்கி அதிகாரிகள்.

கட்டுப்பாடோடு கருஞ்சட்டை இராணு வம் களம் கண்டு பலம் பெருக்கிற்று; மக்களுக்கு வளம் சேர்க்க வாகை சூடியது.

நம்மால் மட்டுமே முடியும்!

உழைத்த தோழர்கள், ஒத்துழைத்த பொதுமக்கள், மகளிரணியினர் உள்பட அனைவருக்கும் எமது மகிழ்ச்சியும், மகிழ்ச்சி கலந்த நன்றி, பாராட்டுகளும்!

தோழர்களே, கொள்கை ஆதரவாளர் களே! 2020 ஜனவரி 3 ஆம் வாரத்திலிருந்து 10 நாள்கள், 30 கூட்டங்கள் குமரிமுதல் சென்னைவரை தொடர் பிரச்சாரம் எனது தலைமையில் நடைபெற ஆயத்த ஏற்பாடு களில் முந்துங்கள்.

விருதுநகர் பிரகடனத்தின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க ஆயத்தமாகுங்கள்!

வந்து கலந்துகொண்ட அத்துணை அறிஞர்களுக்கும் எமது நன்றி!

‘‘உழைப்பின்  வாரா உறுதிகள் உளவோ?''

‘‘நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது;

வேறு எவராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!

விருதுநகர்ப் பிரகடனத்தை நிறை வேற்றுவோம்!

வாழ்க பெரியார்! வெல்க நம் இலட்சியங்கள்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

18.11.2019


பெரியார் அறிவுசார் பயங்கரவாதி என்ற ராம் தேவுக்கு வட மாநிலங்களில் கடும் கண்டனம்

வடக்கேயும் பயணித்துவிட்டார் தந்தை பெரியார்

'ராம்தேவைக் கைது செய்!' என்ற முழக்கம் வெடித்துக் கிளம்பியது

புதுடில்லி, நவ. 18- தந்தை பெரியார் அறிவுசார் பயங்கரவாதி என்று சொன்ன சாமியார் ராம் தேவைக் கைது செய்யச் சொல்லி வடநாட்டில் எதிர்ப்பு முழக்கங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளது.

ராமன் கோவில் விவகாரம் தொடர் பாக நடந்த விவாதத்தின் போது யோகா சாமியார் ராம்தேவ் பெரியாரை அறிவுசார் பயங்கரவாதி, அவருடைய சிந்தனைகளால் தூண்டப்பட்டவர்கள் தங்களை மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக் கொண்டு பயங்கரவாத செயல் களில் ஈடுபட அச்சப்படுவதில்லை என்று கூறினார். மேலும் பெரியார் தனது கருத்துக்களால் அறிவுசார் பயங்கர வாதிகளைத்தான் உருவாக்கினார் என் றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அறிவுசார் பயங்கரவாதிகள் என்றும் பேசினார்.

யார் இந்த ராம்தேவ்?

யார் இந்த ராம்தேவ்? நிறுவனம் துவங்கிய சில ஆண்டுகளிலேயே 40 ஆண்டு பெரு நிறு வனங்களுக்கு நிகரான வருவாயை ஈட்டியவர். இதற்கு முறையான கணக்கு கிடையாது அரியானா பாஜக அரசு இவருக்கு ரூ.700 கோடியை அப்படியே தூக்கிக் கொடுத்தது. 60 ஏக்கர் நிலத்தை வாரிவழங்கியது, அதில் அவர் யோகா பல்கலைக்கழகம் கட்டவேண்டுமாம். அதற்கு அரியானா அரசு அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் என்று கூறியது, பிறகு இந்த 700 கோடி ரூபாய் எதற்கு தந்தார்கள், அது மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் யோகா கற்றுத்தருவதற்கு கொடுத்த முன்பணத்தொகை என்று கூறப்பட்டது, சாமியார் ராம்தேவ்-நிறுவனம் வெளிப்படையாக வரிமோசடி செய்தபோதும் பலகோடி ரூபாய்களுக்கு கணக்கு காட்டாமல் இருந்த போதும் அவர் பக்கம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எதுவுமே பாயவில்லை.

பதஞ்சலி என்ற பெயரால் பெரும் கொள்ளை

2013 ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு என்ற போர்வை யில் வெறும் ரூ.42 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கொண்ட சாமியார் ராம் தேவின் பதஞ்சலி இன்று ரூ.10,000 கோடி சொத்துமதிப்புகளைக் கொண்டுள்ளது, இவரது ஒவ்வொரு புதிய நிறுவனத்திற்கும் அனைத்து மத்திய அமைச்சர்களும் செல்கின்றனர். மோடி யும் அவ்வப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தன்னை மிகவும் பிற்படுத்தப்பட்டவன் என்று கூறி தன்னுடைய வணிகத்தை மேம்படுத்தினார்.  யாதவ் வகுப்பைச் சேர்ந்த வர் என்று சொல்லிக் கொண்டு முலாயம் சிங் மற்றும் லல்லு பிரசாத் போன்றவர்களிடம் நெருக்கம் காட்டி தன்னுடைய வணிகத்தை தொடர்ந்துவந்தார். தற்போது அரசியலில் இந்துத்துவ சக்திகள் பலம் பெற்றதால் இந்துத்துவ சக்திகளுக்கு சாதகமாக அவர் களின் ஓசைக்கு இவரும் சுதி ஏற்றுகிறார், தனது வணி கத்திற்காக இவர் எந்த ஒரு செயலையும் செய்ய தயங் காத பேர்வழி!

2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்று கேள்வி கேட்டார். எனது நிறுவனத்தில் பிறப்டுத்தப்பட்டவர்கள், தாழ்த் தப்பட்டவர் கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே திறமையானவர்கள்; ஆகவே திறமை இருந்தால் யாரும் எந்த வேலையும் பார்க்க முடியும் , இட ஒதுக்கீடு என்பது திறமையில்லாதவர்களைப் பதவியில் அமர்த்த வைக்கும் ஒன்றாகும் என்று பேசினார்.

காவல்துறையின் போக்கு

அரியானாவில் தாழ்த்தப்பட்ட ஒருவரின் வீட்டைத் தாக்கிய நபர்கள் அந்த வீட்டுக்குத் தீவைத்தனர். அந்த தீயில் இரண்டு குழந்தைகள் எரிந்து சாம்பலாயின. 2017-ஆம் ஆண்டு நடந்த இக்கொடூர நிகழ்வு குறித்து நேரில் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். அப்போது, ராம்தேவ் ராகுல் காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் முதலிரவு கொண்டாட செல்கிறார் என்று கொச்சைப் படுத்தி பேசிய பேர்வழி இவர்.  இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் அதைப் பதிவு செய்யாமல் சமூகத்தில் முக்கிய நபரின் புகழுக்கு களங்கம் விளைவித்தனர் என்று கூறி தனிநபர் உரிமையில் தலையிடுவது என்ற சட்டப்பிரிவில் புகார் அளித்தவர்கள் மீதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பெரியார் அறிவுசார் பயங்கரவாதியாம்

யோகா கூட்டம் ஒன்றில் பேசிய ராம்தேவ் திடீரென்று பெரியார் குறித்து பேச ஆரம்பித்து விட்டார், அவர் இந்தியில் பேசியதாவது., இப்போது சிலர் கிளம்பி இருக்கிறார்கள்,  நாங்கள் திராவிடர்கள் - ஆரியர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள். இந்த நச்சுக்கருத்தை திணித்தவர் யார்? "ராமசாமி நாயக்கர் ஒரு நாத்திகர்" - அவர் கூறுகிறார் கடவுளைக் கும்பிடுகிறவர்கள் காட்டுமிராண்டிகள்  கடவுளைப் பரப்பியவன் முட்டாள், மதங்களை விஷம் என்று கூறுகிறார், அதை ஊரெல்லாம் கூறினார், அதை இன்றும் சிலர் மக்களிடையே பரப்பி வருகின்றனர் என்றார்.

அதன் பிறகு ராமர் கோவில் தொடர்பான விவாதம் ஒன்றில் பேசிய அவர் மூல்நிவாசி (திராவிட அமைப்பினர்) பாம் சேப் அமைப்பினர் - இவர்கள் மக்களைப் பிரிக்க திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்களுக்கு நான் அறிவுசார் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டியுள்ளேன். இது ராமனின் பூமி; இங்கு இவர்களின் கருத்துகள் இனி எடுபடாது என்று கூறினார்.  இது போன்ற (திராவிடர், மூல்நிவாசி, கடவுள் மறுப்பு) கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அரசு ஒரு சட்டத்தை இயற்றவேண்டும். இவர்களின் கருத்துக் களை சமூக வலைதளத்தில் பரப்புவதை தடைசெய்ய வேண்டும்  இவர்களது கருத்துக்கள் எந்த எந்த தளத்தில் உள்ளதோ அனைத்தையும் அகற்றிவிடவேண்டும், அம்பேத்கர் மற்றும் மகாத்மா புலேவின் கருத்துக்களை பரப்புபவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று கூறினார்.

இவரது இந்தப்பேச்சை அடுத்து வட இந்தியாவில் இவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி யுள்ளன.

ராம் தேவைக் கைது செய்!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய ராம்தேவ்வை கைதுசெய்ய வேண்டும் என  வட இந்தியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன.

"பாபா ராம்தேவ்வை கைது செய்!", பதஞ்சலி நிறுவனத் தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பீர் என ட்விட்டரில் நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. #ArrestRamdev என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் "பெரியாரை பின்பற்றுபவர்கள் வளர்ந்துவருகின்றனர். கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள்" என்று பெரியார் கூறுகிறார். கடவுளை மிகப் பெரிய பிசாசு என்கிறார், என்றெல்லாம் ராம்தேவ் பேசியு ள்ளார்.

லெனின், மார்க்ஸ் ஒருபோதும் இந்த நாட்டுக்கு சிறந்த மனிதர்களாக இருக்க முடியாது. அம்பேத்கரை பின்பற்றுவ தாக கூறும் சிலர் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நான் அவர்களுக்காக ஒரு சொல்லை உருவாக்கியுள்ளேன், அதுதான் அறிவுசார் பயங்கரவாதம். கருத்தியல் பயங்கர வாதத்துக்கு எதிராக சட்டங்களை உருவாக்க வேண்டும் எனச் சில நாள்களுக்கு முன்பு பேசினார். இதில் பெரியார் மற்றும் அவரின் சித்தாந்தம் குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்தக் கருத்துதான் பாபா ராம்தேவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. பாபா ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்ற னர். பாபா ராம்தேவ் பேசிய வீடியோவைப் பகிர்ந்து வரு கின்றனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர், வித்யா பூஷண் ராவத் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அம்பேத்கர் மற்றும் பெரியாரை சரியாகப் படித்திருந்தால் பாபா ராம்தேவ் பயனடைவார்.

ராம்தேவ் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் சமூக நீதி மற்றும் சுய மரியாதையை நம்பும் மக்கள் அவரது தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 18 11 19

வியாழன், 14 நவம்பர், 2019

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதிநிதியைப் பெற தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவலம்

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்க  மத்திய அரசு நிதி

நிதியைப் பெற தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவலம்

சென்னை,நவ.9, பணிபுரியும் பெண் களுக்கான விடுதிகள் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெற எடப்பாடி அரசு 3 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற தகவல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மத்திய அரசில் இருந்து பெறப்படும் நிதி பெறப்பட வேண்டிய என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் தங்களின் குடும்பத்தை வீட்டு பிரிந்து வந்து பல்வேறு நகரங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான வர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும் பாலும் மேன்சன்கள் எனப்படும் தனி யார் விடுதிகளில்தான் தங்கு கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதியை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 28 விடுதிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது

சென்னையில் மாத ஊதியம் ரூ. 25 ஆயிரத்துக்குள்ளும், இதர மாவட்டங் களில் மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்துக் குள்ளும் பணி புரியும் பெண்கள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறலாம். சென்னையில் மாதமொன்றுக்கு ரூ.300ம், இதர மாவட்டங்களில் மாத மொன்றுக்கு ரூ.200ம் வாடகை வசூலிக்கப்படுகிறது

இந்நிலையில் பணிபுரியும் பெண் களுக்கான புதிய விடுதிகள் கட்ட மத்திய அரசுவழங்கும் நிதி உதவியை பெற கடந்த 3 ஆண்டுகளாக எடப்பாடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பணி புரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.

மாநில அரசின் கீழ் செயல்படும் பெண்கள் மேம்பாட்டு நிறுவனம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், மகளிர் சுய உதவி குழுக்கள், அங்கீகரிக்கப்பட்ட கல் லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அமைப்புகள் இதற்காக விண்ணப் பிக்கலாம்.

மத்திய அரசு வழங்கும்

60 சதவிகித நிதி!

இதன்படி விடுதி அமைப்பதற்கான மொத்த தொகையில் 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மாநில அரசு 15 சதவீத நிதியையும், திட்டத்தை செயல் படுத்தும் நிறுவனங்கள் 25 சதவீத நிதியையும் செலவு செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பணி புரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி அமைக்க நிதி அளிக்க கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு எந்த கோரிக் கையும் வைக்கவில்லை.

தனியார் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.

மாநிலங்களுக்கு 2017 முதல் 2019 வரை

மத்திய அரசு அளித்துள்ள நிதி விவரம்

மகாராஷ்டிரா 202.4 லட்சம் ரூபாய், அருணாச்சல பிரதேசம் 193.47 லட்சம் ரூபாய், அசாம் 8.83 லட்சம் ரூபாய், குஜராத் 183.76 லட்சம் ரூபாய், இமாச்சலப்பிரதேசம் 265.83 லட்சம் ரூபாய், கருநாடகா 973.66 லட்சம் ரூபாய், மத்தியபிரதேசம் 244.03 லட்சம் ரூபாய், மணிப்பூர் 991 லட்சம் ரூபாய், தெலங்கானா 115.01 லட்சம் ரூபாய், மிசோரம் 170.62 லட்சம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளில் பத்து மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு சுமார் 1330 கோடிகளுக்கு மேல் நிதி வழங்கியுள்ளது.

நிதி பெற்ற அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தில் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று மகளிர் தங்கும் விடுதிகள் அரசு சார்பில் கட்டப்பட்டு அவர்களின் நலனை காத்து வருகின்றது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் சரி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக தங்குவதற்கு விடுதிகள் அமைத்துத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை அல்லவா? அதற்குரிய நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசிடமிருந்து உரிமையுடன் பெறவேண்டியதும் அரசின் கடமை அல்லவா?

உடனடியாக மத்திய அரசிடமிருந்த உரிய நிதியை பெற்று பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அரசின் சார்பில் அமைத்து தரவேண்டும் என்று மகளிர் உரிமைகளுக்கான அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

- விடுதலை நாளேடு 9 11 19

தப்புத் தப்பாக உளறுவது யார் 'தினமலரே'?

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முடிச்சவிழ்க்கிகள் 'தினமலர்' உருவத்தில் நடமாடத்தான் செய்கிறார்கள்.

தளபதி ஸ்டாலின் சொன்னது என்ன? 'தினமலர்' கூறுவது என்ன? 1937இல் தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில்  13 சர்வாதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 1948 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா அவர்கள் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த உண்மையைத் தானே தளபதி ஸ்டாலின் சொன்னார்.

இது தவறு என்று சொன்னால் ஆதாரத்துடன் மறுக்கலாம். அதுதான் அறிவு நாணயம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை.

வரலாற்றை மக்கள் மறந்திருப்பர் என்று ஸ்டாலின் தப்புத் தப்பாக சொல்லுகிறார் என்று இந்தத் 'தப்பிலி'கள் சொல்லு வதுதான் வேடிக்கை. தளபதி ஸ்டாலின் தப்புத் தப்பாக எதையும் சொல்லவில்லை. வரலாற்றை சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அண்ணா சர்வாதிகாரி யாக பெரியாரால் நியமிக்கப்பட்டதற்கும், திகவிலிருந்து திமுக பிரிந்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அப்பட்டமாக  அபாண்டமாக எதையாவது கிறுக்குவதும், உளறுவதும் பிறகு நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் இந்தப் பார்ப்பன சவுண்டிகளுக்குச் சர்வ சாதாரணம் தானே!

-  கருஞ்சட்டை

 - விடுதலை நாளேடு 14 11 19

பழைய தீர்ப்புக்குத் தடையில்லை சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம்!

* உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ.14 சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந் துரைத்துள்ளதோடு, பெண்களை அனுமதிக்க லாம் என்கிற உத்தரவே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றி யது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண் கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை நீக்கியது. அத் தோடு, பக்தியை பாலின பாகு பாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திர சூட், கன்வில்கர் மற்றும் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா ஆகியோர் இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் மாறாக தீர்ப்புகளை அளித்தனர். உச்சநீதி மன்ற நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பின்மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது.

இதனைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் மத்தியில் இவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கவே, தேவசம்போர்டு தரப்பில் தலைமை நம்பூதி கண்டரரு ராஜீவரரு சார் பில் மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவோடு மேலும் 64 மனுக்கள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விசா ரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத் திருந்தது.

இந்நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது இன்று (14.11.2019) தீர்ப்பு  வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பெண் களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் பெண்கள் செல்ல தடை விதிப்பதாகவும் தீர்ப்புகளை வழங்கினர். தீர்ப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், இந்து மல் கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மறுபரிசீலனை மனுக்கள் நிலுவையில் இருப்பதால், பழைய நிலைப்படி பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 14 11 19

குறளும் - பெரியாரும்!

இதோ ஒரு விளம்பரம்.

திருக்குறள்

கிரவுன் 1-க்கு 16 சைசில் 170 பக்கமுள்ள பாக்கெட் சைஸ் திருக்குறள் புத்தகம் திராவிடன் அச்சகத்தில் பதிப்பித்தது.

புத்தகம் 1-க்கு விலை அணா 0-5-0 விற்பனையா ளருக்கு 100-க்கு 25 வீதம் கழிவு தரப்படும்.

சொற்ப பிரதிகளே உள் ளன.

தேவை உள்ளவர்கள் முந்திக் கொள்ளவும்.

குறிப்பு: 14.1.1953 வரை யில் விளம்பரத்தில் குறள் விலை 6 அணா என்று போடப்பட்டிருந்தது. பிறகு கொள்முதல் பார்த்ததில் விலையில் சிறிது குறைக்க லாம் என்று தெரிய வந்தது. ஆகவே, விலையை இப் போது 5 அணாவாகக் குறைத்திருக்கிறோம். 5 அணாவுக்குத்தான் ஏஜண்டு கள் விற்க வேண்டும். வாங்குபவர்களும் இதைக் கவனித்து வாங்கவேண்டும். வாங்குகிற ஏஜெண்டுகள் தங்கள் கமிஷனையும் சிறிது விட்டுக் கொடுத்துதவினால் பொது மக்கள் ஏராளமாக வாங்கிப் படிக்க முடியும். பெரியார் சுற்றுப்பிரயாணத் தில் குறள் புத்தகம் கிடைக் கும்.

விடுதலை செயலகம்,

325 P.B.மவுண்ட் ரோடு,

சென்னை-2

(‘விடுதலை', 1.2.1953)

தந்தை பெரியார் திருக் குறளுக்கு எத்தகைய தொண்டாற்றினார் என்ப தற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதாதா?

பரண்மீது இருந்த குறளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் பெரியார் என்பதற்கு திருக் குறளை மலிவுப் பதிப்பாகக் கொண்டு சென்ற ஆக்க ரீதியான செயல்தானே இது!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என் றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்ற குறள் மொழிப்படி, திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத் தோதி, அதற்குச் சிறப்பு உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியாரிடம் ஒப்படைத்திருக்கிறது' என்ற தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் (15.1.1949) பேராசிரியர் சி.இலக்குவனாரின் கூற்றை இங்கு குறிப்பிடுவது முக்கிய மானது - சிறப்பானதேயாகும்.பார்ப்பனர்களின் சான்றுகள் தேவையில்லை.

‘நான் இந்து அல்ல - திராவிடனே - திருக்குற ளனே' என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

(‘விடுதலை', 5.11.1948)

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 14 11 19

புதன், 13 நவம்பர், 2019

பாரதீய ஜனதாவே ரப்பர் ஸ்டாம்ப் எப்பொழுது வந்தது?

சென்னை, நவ.9ஆசியான் மாநாட்டிற்காக தாய்லாந்து சென்ற மோடி அங்கே அந்த மாநாட்டிற்கும் இதர வணிக ஒப்பந்தங்களுக்கும் தொடர் பில்லாமல்  திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இந்த செய்தியை வழக்கத்தை விட அதிகமாக முக்கியப் படுத்தவேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டமாக இருந்தது. இதையொட்டி தமிழகத்திலுள்ள முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊட கங்களுக்கு பிரதமர் அலு வலகத்திலிருந்தும், பாஜக தலைமையிலிருந்தும்- உத்தர வுகள் பறந்தன.

திருக்குறளை தாய்லாந்து மொழியில் மோடி வெளியிட் டது உண்மையாக இருக்க லாம். அது ஒரு விளம்பரத் திற்காகவே! 1964-ஆம் ஆண்டே ரமிலி பின் தக்கீர் என்ற மலாய் மொழி அறிஞர் மலாய் மொழியிலும், தாய் லாந்து  மொழியிலும் மொழி பெயர்த்துவிட்டார்.

இந்த நிலையில் மோடி தாய்லாந்து மொழியில் திருக் குறளை வெளியிட்டார் என்று தமிழக பாஜகவினர் பெருமை கொண்டாடி வரும் நிலையில், அவர்களே திரு வள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்து தங்களின் குயுக் தியை காட்டிவருகின்றனர்.

இவர்களின் இந்தச்செய லுக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளி வந்த நிலையில், தஞ்சை-பிள் ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சில விசமிகள் அவமதித்துள்ள னர். இந்த இரண்டு நிகழ்வு களுக்கும் தொடர்பு இருப் பதை அடுத்து குறிப்பிட்ட அமைப்பினர்தான் இந்த வேலையைச் செய்துள்ளனர் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின் றனர் மேலும். அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக வினர் மீண்டும் ஒரு படத்தை வெளியிட்டு 1800-களிலேயே திருவள்ளுவரை இந்து துற வியாக மதித்து புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்று கூறி அதனை நம்பவைக்க ரப் பர் ஸ்டாம்ப் அடையாளம் ஒன்று இருப்பதையும் காட் டியுள்ளனர்.

27.7.1865 என்ற தேதியிட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அந்த நூலில் உள்ளது.

இவர்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் பற்றிய  வரலாறு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

மனித இன நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே முத்திரை வழக் கத்தில் வந்துவிட்டது, இதை எளிமையாக்க 1500-களில் கிறிஸ்தவ சபைகள் உல கெங்கும் மிசினரிகளை அமைத்து அதற்கு ஆணை களைப் பிறப்பிக்க  நீண்ட மரக்கட்டையின் அடியில் தேவைப்படும் எழுத்துக் களைச் செதுக்கி அதை மையில் நனைத்து காகிதத்தில் முத்திரை இடும் முறையை கொண்டுவந்தனர்., அதில் எழுத்துக்கள் தெளிவில்லாத காரணத்தால் 1880-களுக்குப் பிறகுதான் ரப்பர் ஸ்டாம்ப் கண்டுபிடிக்கப்பட்டது, முதல் முதலாக 1895-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் வங்கி ரப்பர் ஸ்டாம்பு களை அலுவலகப் பயன் பாட்டிற்கு பயன்படுத்தியது,

அதன் பிறகு நீண்ட கால மாக ஒரே மாதிரியாக பயன் படுத்தப்பட்டு வந்த ரப்பர் ஸ்டாம்ப் கணினி பயன் பாட்டிற்கு வந்த பிறகு 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து பல்வேறு வடிவங்களில் பயன் படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் புழக்கத்திற்கு வந்தன,

முக்கியமாக இந்த நூலில் இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப் 1980களுக்குப் பிறகுதான் பிர பலமானது, மேலும் இதில் உள்ள எழுத்துக்கள் கணினி எழுத்துருவான டைம்ஸ் ரோமனில் உருவாக்கப்பட் டவை ஆகும்., திருவள்ளுவர் ஒரு இந்து மத வீரத் துறவி என நிறுவுவதற்கு எப்படி எல்லாம் பித்தலாட்டம்-மோசடி செய்கிறது காவிக் கூட்டம் என்பதைப் பார்த் தீர்களா?

- விடுதலை நாளேடு 9 11 19

மதங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

சென்னை, நவ. 13- திருவள்ளுவரை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடை, ருத்திராட்சம், விபூதி ஆகிய இந்து மத அடையாளங்களுடன் திருவள் ளுவர் படம் வெளியிடப்பட்டதைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (12.11.2019) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக பொதுச்செயலாளர் து.ரவிக் குமார், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

"கடவுள், மதம், ஜாதி, கோவில், மோட்சம், நரகம், மறுபிறப்பு, ஆத்மா என்ற சொல்லை எங்கும் பயன்படுத் தாதவர் திருவள்ளுவர். “கடவுள் வாழ்த்து‘ என்று அதிகாரம் பிரித்தவரும் திரு வள்ளுவர் கிடையாது. இந்த நிலை யில் திருக்குறள் ஹிந்து நூல் என்பது மோசடியே"- என்றார் திராவிடர்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள்.

எழுச்சித் தமிழர் உரை

இதில் திருமாவளவன் பேசியதா வது: உலகப் பொதுமறையான திருக் குறளை எழுதிய திருவள்ளுவரை இந்து மதத் துறவி என்று அடை யாளப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி புதிது இல்லை என்றாலும் இப்போது சில மாதங்களாக இந்துத்துவ சக் திகள் திருவள்ளுவர் தங்களுக்கு மட் டுமே உரியவர் என்று சொந்தம் கொண் டாடி வருகின்றனர். திருவள்ளுவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இதை சாதாரண மாக எடுத்துக் கொள்ள முடியாது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை. மதம் என்ற கட்டமைப்பே இல்லாமல் வழிபாட்டு முறைகள் இருந்த காலம் அது. மனிதர்கள் அனைவரும் சமம். பிறப்பின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்று உயரிய கருத்தைச் சொன்னவர் திருவள்ளுவர். அவரது சிந்தனைகள் இந்து மதத்துக்கு எதிரானது. எனவே, அவர் இந்து துறவியாக ஒருபோதும் இருக்க முடியாது.

அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட மதச்சாயம் பூசியவர்கள் மீதும், வள் ளுவரின் சிலைக்கு காவி சால்வை அணிவித்து அவமானப்படுத்தியவர் கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக் காமல் அதிமுக அரசு அமைதியாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வள்ளுவரை அவமானப்படுத்தியவர் கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிந்தனை செல்வன், மு.முகமது யூசுப், எஸ்.எஸ்.பாலாஜி, த.பார்வேந்தன், வி.கோ.ஆதவன், அ. அசோகன், வீர.ராஜேந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு 13 11 19

ஜாதியும், மதமும் சேர்ந்ததுதான் பி.ஜே.பி. ஆட்சியா?

‘‘அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!''

ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம்

ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில் உணவு அளிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள  நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிய அகர்வால் வைசிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று விளம்பரம் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ரயில்வேதுறை உணவு வழங்கலுக்கு அய்.ஆர்.சி. டி.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங் களிடம் ரயிலில் உணவுவழங்கும் பணியை ஒப்படைத்து வருகிறது, ராஜஸ்தானைச்சேர்ந்த  பிருந்தா வன் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமும் மத்திய மேற்கு ரயில்வே சார்பில் உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவ னம் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடையில் ஓடும் சில ரயில்களில் உணவு வழங்கும் பணியைச் செய் கிறது. இந்த நிறுவனத்திற்கு சமீபத் தில் மேலும் பல புதிய ரயில்களில் உணவு வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிறுவ னத்தின் சார்பில் ரயில் உணவக மேலாளருக்கான ஆட்கள் தேவை என விளம்பரம்  செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் “ரயில்வேயில் கேட்டரிங், கிச்சன் மற்றும் ஸ்டோர் மேலாளர் காலி பணியிடங்களுக்கு 100 ஆண்கள் தேவை, விண்ணப்பதாரர்கள் அகர் வால் வைஷ்ணவ சமூகம், நல்ல குடும்பப் பின்னணியை  உடையவர் களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்''  என குறிப்பிடப்பட்டி ருந்தது.

இது தொடர்பாக புனே அய்.ஆர்.சி.டி.சி. ஊழியர் ஒருவர் கூறும் போது, ”இவ்விவகாரம் ஊடகத்தில் வெளிவந்த காரணத் தால் தான் விவாதப் பொருளானது. ஆனால் நீண்ட காலமாகவே ரயில் வேயில் உணவு வழங்குபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.

ராமன்தான் பணித்தாராம்!

அகர்வால் பிரிவினர் அனை வரும் ராமன் அயோத்தி திரும்பிய பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது தன்னலமில்லாமல் உணவு சமைத்து தங்களது கையாலேயே அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ராமன் தனது சேனைகளுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தார். இதனா லேயே மிகப்பெரிய உணவுப் பரி மாறல் வலைப்பின்னலைக் கொண்ட  இந்திய ரயில்வேதுறையில் பெரும்பாலும் அகர்வால் ஜாதி னரையே தேர்ந்தெடுக்கின்றனர்.  சமீப காலமாக ரயில்வே சார்பில் வெளியிடப்படும் ஒப்பந்ததாரர் பணியிடங்களுக்குத் தரும் விளம் பரத்தைப் பார்த்து பலரும் வரு கின்றனர். இதனால் அனைவரிட மும் நேர்காணல் நடத்தவேண்டியுள் ளது. ஆகவே ஊடகத்திலேயே குறிப்பிட்ட ஜாதியினர் தான் ரயில் வேயில் உணவு வழங்கும் பணிக்கு வரவேண்டுமென்று விளம்பரம் கொடுத்துவிட்டால் நேரம் மிச்ச மாகும்'' என்று கூறினார்.

”இந்தியாவைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் இந்துக்கள் ஆவார் கள். இவர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அகர் வால் ஜாதியைச்சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கின்றனர்” என்றும் கூறினார்.

மதிய உணவிலும்

குறிப்பிட்ட ஜாதியினர் தானாம்!

இஸ்கான் என்ற அரே ராமா அரே கிருஷ்ணா அமைப்பின் சார்பில் மோடி பிப்ரவரி மாதம் மதுராவில் உள்ள சந்திரோதயா பிருந்தாவன் கோவிலுக்குச் சென்று அக்ஷயா பாத்திரம் என்ற ”3 கோடிப் பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு” என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இஸ்கான் சார்பில் உணவு வழங்கப்படுகிறது, இங்கு பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். அதாவது கிருஷ்ணனை மட்டும் கும்பிடுபவரக்ளாக இருக்க வேண்டும் கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனை  வரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது ”இங்கு ஜாதி பேதம் இல்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைப்படி வாழ நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கே அனைத்து ஜாதியினரும் வேலை பார்க்கின்றனர்'' என்று விளக்கம் கொடுத்திருந்ததுதான் வேடிக்கையும், விஷமமுமாகும்.

- விடுதலை நாளேடு 13 11 19

தங்கக் கிண்ணத்தில் மலமா?

தந்தை பெரியார் திருக் குறளை இழிவுபடுத்தியதுபோல பார்ப்பனர்களும், பி.ஜே.பி., சங் பரிவார்களும் கூடிப் பேசி, ஒரே மாதிரியான கட்டுக்கதையை பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்சின் குரு நாதர்கள் இவர்கள்.

தங்கத் தட்டில் உள்ள மலம் என்று பெரியார் திருக்குறளை சொன்னாராம். எங்கே சொன் னார்? ஆதாரம் காட்டுவீர் என்று திருப்பிக் கேட்டால், தொலைக்காட்சிகளில் காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். அரட்டை அடிக்கிறார்கள்.

முகநூலில் நாம் விடுத்த ஒரு சவாலுக்கு மூச்சுப் பேச்சு இல்லை.

அவர்களால் ஆதாரம் காட்ட முடியாது. ஏனென்றால், அது கடைந்தெடுத்த ‘அக்மார்க் பொய்!' உண்மை ஆதாரம் என்ன?

இதோ ஆதாரம் பேசுகிறது.

‘‘ஒரு சமயம் பெரியார் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அங்கு பேசிய தமிழன்பர் ஒருவர், ‘‘பெரியார் இராமாயணத்தைக் குறை கூறு வது தவறு என்றும், கலை யுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும்'' என்றும் கூறினார்.

அதற்குப் பெரியார் கூறிய பதில்:

‘‘நான் கலையுணர்ச்சியை யும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத் தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத் தியைப் புசிக்க முடியுமா? அது போல், கம்பராமாயணப் பாட்டு கள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமான வற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?'' என்றார்.''

ஆதாரம்: சாமி.சிதம்பரனார் எழுதிய ‘‘தமிழர் தலைவர்'', பக்கம் 162 (11 ஆம் பதிப்பு,15 ஆம் பதிப்பு பக்கம், 187).

கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை, திருக் குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரை இதன் மூலமாகத் தெரிந்து கொள்வீர்!

உண்மை இவ்வாறு இருக்க - பொய்யிலே பிறந்து, பொய் யிலே வளர்ந்து, பொய்யையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண் டவர்கள் மோசடியாக திருக் குறள்பற்றி பெரியார் இப்படி சொன்னார் என்று திரித்துப் பேசுவது - திரிநூலாருக்கே ஏகபோக உரிமையான இழிப் புத்தியாகும்.

ஆதாரத்தோடு எடுத்துக் காட்டிய பிறகு, பாரப்பனர்களோ, சங் பரிவார்களோ, பி.ஜே.பி. வட்டாரமோ அறிவு நாணயம் எள் மூக்கு முனை அளவுக்கு இருந்தால், என்ன செய்யவேண் டும்? பகிரங்க மன்னிப்புக் கூடக் கேட்கவேண்டாம் - தவறுக்கு வருந்தலாம் அல்லவா?

அதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. புத்த ரையே மகாவிஷ்ணுவின் அவ தாரம் என்று ஆக்கிய (அ)‘யோக் கிய சிகாமணி'கள் ஆயிற்றே!

விநாயகன் என்று புத்த ருக்குப் பெயர் - அந்த விநாய கனை பிள்ளையார் ஆக்கிய வர்கள் ஆயிற்றே! சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் - அந்த சாஸ்தாவை அய்யப்பன் ஆக்கிய (அ)‘யோக்கியர்கள்' என்னதான் செய்யமாட்டார்கள்?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 13 11 19

செவ்வாய், 12 நவம்பர், 2019

நம்மை இணைப்பதை விரிவுபடுத்துவோம் - பிரிப்பதை அலட்சியப்படுத்துவோம்!- அமெரிக்கத் தமிழ் வானொலிக்குத் தமிழர் தலைவர் பேட்டி- 2

* இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வருமா?

* பெரியார் அறக்கட்டளைகளின் செயல்பாடுகள் எத்தகையவை?

* பெரியார் நூல்களைப் பொதுவுடைமை ஆக்குவதில் என்ன தயக்கம்?

* வெளிநாட்டுத் தமிழர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

அமெரிக்கத் தமிழ் வானொலிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

வாசிங்டன், நவ.12 நம்மை இணைப்பதை விரிவுபடுத்துவோம் - பிரிப்பதை அலட்சியப்படுத்துவோம் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அமெரிக்கத் தமிழ் வானொலியின் சார்பில் தோழர் இந்திரா தங்கசாமி அவர்களால் (கலிஃபோர்னியா),  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

என்றைக்காவது இட ஒதுக்கீட்டிற்கு

ஆபத்து வருமா?

இந்திரா தங்கசாமி: காஷ்மீரில் அரசமைப்புச் சட்டமான 370- அய் ரத்து செய்துவிட்டார்கள். அதுபோன்று இட ஒதுக்கீட் டிற்கு என்றைக்காவது ஆபத்து வரும் என்று நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: என்றைக்காவது இல்லை; எப்போதுமே ஆபத்து உண்டு. ஏனென்றால், மத்தியில்  இருக்கக்கூடிய கட்சியை வழிநடத்தக்கூடிய ஓர் அமைப்பு இருக்கிறது.

இப்போது மத்தியில் இருக்கக்கூடிய அரசை வழிநடத்தக் கூடிய ஒரு மதவெறி அமைப்பு இருக்கிறது. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை.

அந்த அமைப்பின் தலைவர் மிகத் தெளிவாகச் சொல் கிறார்,  ‘‘இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்; தேவையில்லை'' என்று சொன்னார்.

பீகாரில் தேர்தல் நடைபெற்றபொழுது அங்கே சொன்னார்; மக்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி வந்தது. ஏனென்றால், இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது. அந்த அளவிற்குப் பெரியார் கருத்துகள், இந்த இயக்கக் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன! நேரிடையாக திராவிட இயக்கம் அங்கே போகவில்லையென்றாலும், அதனுடைய கொள்கைத் தாக்கம் உண்டு.

நேற்று நடைபெற்ற நிகழ்வில்கூட நான் சொன்னேன், மண்டல் கமிஷனை அமல்படுத்த 42 மாநாடுகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்; அதேபோன்று 16 போராட்டங்களை நடத்தினோம். டில்லியில்கூட நடத்தினோம். பிறகு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தவுடன், ஒரு பகுதியை செயல்படுத்தினார். பிறகு, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் அர்ஜூன் சிங் மத்திய அமைச்சராக இருந்தபொழுது இன்னொரு பகுதி கல்வியிலும் இட ஒதுக்கீடு தரப்பட்டது.

ஆகவே, வடபுலத்தில் இந்த நிலை வந்தாயிற்று. அவர் களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால், பாம்பு புற்றுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டுவது போன்று எட்டிப் பார்க்கும்.

சில மாதங்களுக்கு முன்பு, அதே ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘‘இட ஒதுக்கீட்டைப்பற்றி நாம் உட்கார்ந்து பேசவேண்டும்'' என்று, புண்ணுக்குப் புனுகு பூசுவதுபோல, விஷ உருண்டை போன்று சொன்னார்.

உடனே திராவிடர் கழகம் எதிர்த்தது; தமிழகம்தான் முதன்முதலாக எதிர்த்தது. எல்லா கட்சிக்காரர்களும் குரல் கொடுத்தார்கள். வடநாட்டிலும் எதிர்ப்புக் குரல் எழும்பியதும்,

‘‘நாங்கள் அப்படி சொல்லவில்லை; தவறாக அதைப் பத்திரிகைகள் வெளியிட்டுவிட்டன'' என்று பின்வாங்கினார்கள்.

பாம்பு புற்றுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டுவது போன்று எட்டிப் பார்க்கும். தலையில் ஒரு தட்டுத் தட்டியதும், தலையை உள்ளே இழுத்துக் கொள்ளும். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!

ஆகவே, நாங்கள் இதில் கவனமாக இருக்கின்றோம். சமூகநீதி போராட்டம் இருக்கிறதே, இது முழுக்க முழுக்க புராண காலத்திலிருந்து தொடங்கிய போராட்டமாகும்.

ஆகவே, அது இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இதில் கவனமாக இருக்கவேண்டும். அதுதான் எங்களுடைய வேலை!

பெரியார் அவர்கள், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறியதற்குக் காரணமே, சமூகநீதிக் காகத்தான், இட ஒதுக்கீட்டிற்காகத்தான்.

50 சதவிகித இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்று சொன்னார்கள்; அப்படியென்றால், நான் வெளியேறு கிறேன் என்று சொன்னார்.

இன்றைக்கு 50 சதவிகிதத்தையும் தாண்டி, 69 சதவிகிதத்தை அவருடைய தொண்டர்கள் காலத்தில் நாங்கள் அடையச் செய்திருக்கின்றோம்.

மூன்று அரசியல் சட்டத் திருத்தங்கள் திராவிடர் கழகத்தால் வந்திருக்கின்றன.

ஒன்று, முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் - அது பெரியார் காலத்தில் 1951 ஆம் ஆண்டு.

69 விழுக்காடு இட ஒதுக்கீடு வந்த வரலாறு

பெரியாருக்குப் பிறகு, எளியவர்களாக என்னைப் போன்ற வர்கள் இந்த இயக்கத்தை நடத்தக் கூடிய நிலையில், 69 சதவிகிதம் வந்தது.

இந்த 69 சதவிகிதத்தைப்பற்றி ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும். இந்த சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது? ஜெயலலிதா அம்மையாரால்.

தன்னை அவர் சட்டமன்றத்தில் பார்ப்பனர் என்று அறி வித்துக் கொண்டவர். யாராக இருந்தாலும், அவர்களைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள்.

அந்த சட்டத்தை எழுதிக் கொடுத்தது நாங்கள். முதல மைச்சராக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார். அவர் ஒரு பார்ப்பனர்.

அப்பொழுது பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். அவர் ஓர் ஆந்திரப் பார்ப்பனர்.

அரசியல் சட்டத் திருத்தம் 9 ஆவது அட்டவணைப் பாது காப்பிற்காக வந்தபொழுது, குடியரசுத் தலைவர் கையொப்பம் போடவேண்டும்.

அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா. அவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர்.

ஆக, மூன்று பார்ப்பனரையும் வைத்து வேலை வாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்!

26 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது 69 சதவிகித சட்டம்.

மூன்றாவதாக, மத்திய அரசில் இட ஒதுக்கீடு - கல்வித் துறைகளான அய்.அய்.டி., அய்.அய்.எம்.எஸ். போன்ற துறை களில்.

2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, மத்திய அரசாங்கத்தோடு கூட்டணி வைத் திருந்தார். மத்திய அமைச்சராக அர்ஜூன்சிங் அவர்கள் இருந்தார். 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தோம்.

எனவே, மூன்று அரசியல் சட்டத் திருத்தங்களை திராவிடர் கழகம் கொண்டு வந்திருக்கிறது.

அரசியல் சட்டம் வருவதற்கு முன்பிருந்தே கம்யூனல் ஜி.ஓ. என்று சொல்லக்கூடிய வகுப்புவாரி உரிமை 1928 ஆம் ஆண் டில் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து வந்த வரலாறு, இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை!

ஆகவே,  சமூகநீதி என்பது இருக்கிறதே, அது இதயம் போன்றது. திராவிட இயக்கங்களுடைய மூச்சுக் கொள்கையே சமூகநீதிதான்.

அதற்கு ஆபத்து ஏற்படும்பொழுதெல்லாம் குரல் கொடுத் துக் கொண்டே இருக்கவேண்டும். கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால், எதிரிகள், நாம் எப்பொழுது ஏமாறுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். விஷ உருண்டையில் தேனைத் தடவு கிறார்கள்.

இட ஒதுக்கீடு எவ்வளவு நாளைக்கு என்று கேட்கிறார்கள், பாலம் கட்டுகிறார்கள், அதுவரையில் மாற்றுப் பாதையில் தானே செல்லவேண்டும். எவ்வளவு நாள் மாற்றுப் பாதையில் செல்லவேண்டும் என்றால், அதற்கு என்ன பதில் என்றால்,

எவ்வளவு நாளைக்குப் பாலம் கட்டுவதற்குத் தாமதம் ஆகிறதோ, அதுவரையில் மாற்றுப் பாதையைப் பயன்படுத்த வேண்டும்.

பாலத்தை சீக்கிரம் கட்டுங்கள்; ஜாதியை ஒழியுங்கள். பிறகு சரியாகிவிடும்.

பல்கலைக் கழகங்களில் தமிழர் அல்லாதவர்களை நியமிக்கிறார்களே....!

இந்திரா தங்கசாமி: இப்பொழுது திராவிட இயக்கம்தான் ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருந்தும், பின்வாசல் வழியாக நிறைய திணிக்கப்படுகின்றன. அண்மையில், பொறியியல் கல்லூரியில் மதம் சார்ந்த பாடத் திட்டங்களைக் கொண்டு வருகிறார்களே, பல்கலைக் கழகங்களில் தமிழர் அல்லாதவர் களை நியமிக்கிறார்களே, இதையெல்லாம் எப்படி தடுக்க முடியும்?

தமிழர் தலைவர்: இராமாயணத்தை எடுத்துக்கொண்டால், விபீஷ்ணன் இராவணனின் சகோதரன்தான். கும்பகர்ணனும் இராவணனின் சகோதரன்தான். வாலியும், இராவணனும் உறவினர்கள்தான்.

வாலியினுடைய பங்களிப்பும், வாலியினுடைய கவனமும், கும்பகர்ணனுடைய பாதுகாப்பும் இராவணனுக்கு இருந்தது.

ஆனால், விபீஷணன் யார் பக்கம் இருந்தான்? அதனால் தான், இந்த இயக்கத்தை உடைத்தார்கள். அதை தங்கள் வயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

மடியிலே கனம்; வழியிலே பயம்.

அந்த நிலைமை அரசியல் ரீதியாக மாறினால், சரியாகி விடும்.

இதற்குமேலே இந்த நாட்டிலே, இந்த மண்ணிலே விளக்கம் சொல்ல நான் விரும்பவில்லை.

பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியில் தெரிவதில்லையே?

இந்திரா தங்கசாமி: உங்களுடைய இயக்கத்தைப்பற்றி எல்லோருக்கும் தெரியும், மிகவும் வெளிப்படையானது என்று. பெரியார் அறக்கட்டளை சார்பில் நிறைய கல்வி நிறுவனங் களும், பல்கலைக் கழகமும் உள்ளன. நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால், அதுபற்றி வெளியில் தெரிவதில்லையே, ஏன்?

தமிழர் தலைவர்: மிகவும் அருமையான கேள்வி. அடிப் படையான கேள்வியாகும்.

உங்களுக்குத் தெரியும், தந்தை பெரியார் அவர்களைப் போல ஒரு சிக்கனவாதியை உலகத்தில் பார்க்க முடியாது. பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரிலேயே அதிகமான முனிசிபல் வரியைக் கட்டவேண்டிய வீடுகள் அனைத்தும் பெரியாருடையது. அதற்கும் ஒரு அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள், அதிலிருந்து வரக்கூடிய பணத்தையும் இயக்கத்திற்கே கொடுத்தார்கள்.

கையெழுத்து போடுவதற்குக்கூட நாலணா வாங்குவார் தந்தை பெரியார் அவர்கள். ஒளிப்படம் எடுக்கவேண்டும் என்றால், 5 ரூபாய் கொடுக்கவேண்டும். அதையெல்லாம் முடிச்சுப் போட்டு வைத்து, கணக்கு வைத்திருப்பார்.

ஒரு வேடிக்கையான சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒளிப்படம் எடுக்கும்பொழுது புலவர் இமயவரம்பன், என்னைப் போன்றவர்கள் எல்லாம் கூட இருந்தோம்.

ஒருவரிடம் நீங்கள் பணம் வாங்கவில்லையா? என்று கேட்டார் தந்தை பெரியார்.

எங்களுக்கு வியப்பாக இருந்தது, எப்படி அவர் கணக்கு கேட்கிறார் என்று.

அவர் பளிச்சென்று காரணம் சொன்னார், 21 முறை பிளாஷ் பல்பு எரிந்ததே? என்றார்.

அப்படியென்றால், எத்தனை முறை பிளாஷ் அடித்தது என்று எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்படியெல்லாம் சேர்த்த பணத்தை பெரியார் என்ன செய்தார்? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பொது அறக்கட்டளையை உருவாக்கினார்.

அந்த அறக்கட்டளையை ஒழிப்பதற்காக நிறைய வரி போட்டார்கள்.

பெரியார் காலத்தில் 15 லட்சம் ரூபாய்

மணியம்மையார் அவர்கள் தலைமை ஏற்றபொழுது 60 லட்சம் ரூபாய்.

அவருடைய காலத்திற்குப் பிறகு, நான் பொறுப்பேற்றவுடன், 1978 ஆம் ஆண்டு வட்டிக்கு மேல் வட்டி போட்டு, வரிக்கு மேல் வரிகள் போட்டு, இரட்டை வரிகள் போட்டு - அதனுடைய நோக்கம் என்னவென்றால், இந்த அறக்கட்டளையின் சார்பில்தான் எல்லாமே நடைபெறுகின்றன என்று நினைத்த ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு செய்தன. ஆகவே, எரிவதை இழுத்தால், கொதிப்பது நின்று போகும் என்று திட்டமிட்டு செய்தார்கள்.

அதற்குப் பிறகு, கடைசி கட்டத்தில் வாதாடி, 80 லட்சம் ரூபாய் வருமான வரியை நீக்கினார்கள்.

பிறகு அது அறக்கட்டளையே என்று சொன்னார்கள். அது தனி நபருடைய நிறுவனம் என்று வரி போட்டார்கள்.

இதை அத்தனையும் கடந்து, பிறகு ஒரு அறக்கட்டளை என்று உருவாகிய நிலையில், பெரியார் காலத்தில், இரண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்.

ஏனென்றால், அன்றைய காலகட்டத்தில், உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் ஆசிரியர்களாக இருந்தார்கள். நம்முடைய பிள்ளைகளும் ஆசிரியர் பயிற்சி பெறவேண்டும் என்பதற்காக பெண்களுக்கு ஒரு ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி; ஆண் களுக்காக ஆசிரியர் பயிற்சிப் பள்ளி.

நாகம்மை குழந்தைகள் இல்லம். அந்த இல்லத்தில், கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்தார்கள். பிறந்த ஒரு நாள் குழந்தையையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து, அன்னை மணியம்மையார் அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு முன்னெழுத்தாக (இனிசியல்) ஈ.வி.ஆர்.எம். என்று வைத்தார்கள்.

நாகம்மையார் குழந்தைகள் இல்லம்

அந்த இல்லத்தில் வளர்ந்து படித்த பெண்கள் இதுவரையில் 34 பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, பட்டதாரிகளாக ஆக்கியிருக்கிறோம். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இன்றைக்கு நல்லவிதமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

பிஎச்.டி. பட்டம் பெற்று இருக்கிறார் ஒரு பெண்.  பேராசி ரியராக இருக்கிறார். அவருடைய கணவர் ஆடிட்டராக இருக்கிறார். அவர்கள் குடந்தையில் இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லியபடி, விளம்பரம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இது வியாபாரம் அல்ல.

நாங்கள் வாக்கு வாங்கக்கூடிய இயக்கமல்ல. மக்களுக்கு என்ன தேவையோ அதனை செய்துகொண்டிருக்கிறோம்.

பெரியார் அவர்கள் ஒவ்வொரு காசையும் முடிச்சு போட்டு வைத்திருந்தார். அவை அத்தனையையும் மக்களுக்கே கொடுத்தார்.

அந்த அறக்கட்டளையில் அவருடைய சொந்த பந்தங் களுக்கு இடமில்லை. ஜாதிக்கு இடமில்லை.

அதுபோன்ற அளவிற்கு அதனை வளர்த்து, பாதுகாத்து இன்றைக்கு அது எந்த அளவில் இருக்கிறது என்றால், ஏராள மான மருத்துவமனைகளாக - 10 மருத்துவமனைகள் கிராமப்புறங்களில் நடக்கின்றன.

முதன்முதலாக தனியார் துறையில் பாலிடெக்னிக் உரு வானது வல்லத்தில்தான். அதற்குப் பிறகு, கல்லூரி.

உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன், எம்.ஜி.ஆரே எங்களை அழைத்து பொறியியல் கல்லூரியை ஆரம்பிக்கச் சொன்னார். அவருடைய கல்வி அமைச்சர்மூலம் சொல் லியனுப்பினார். அந்த காலகட்டத்தில் நாங்கள் கலைஞரை ஆதரித்துக் கொண்டிருந்தோம்.

பெரியார் அறக்கட்டளையில், பாலிடெக்னிக் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஆகவே, கல்லூரியைத் தொடங்கச் சொல்லுங்கள். அதற்கு ஆதரவை நாங்கள் தருகி றோம் என்று சொல்லியனுப்பினார்.

உடனே நாங்கள் பொறியியல் கல்லூரியைத் தொடங் கினோம்.

நேற்றுகூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், இந்த ஊரில் 35 பெண்கள் பழைய மாணவிகள் நன்றி உணர்ச்சியோடு இருக்கிறார்கள்.

. கனடாவில், அமெரிக்காவில், சிங்கப்பூரில் என்று உலகம் முழுவதும் பழைய மாணவர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இதில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால்,  அந்தப் பிள்ளைகள் எங்களை அன்போடு, ஒரு தந்தையை வர வேற்கின்ற உணர்ச்சியோடு வரவேற்கும்பொழுது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அந்தக் கல்லூரி,  பெண்களுக்கான உலகத்தின் முதல் பொறியியல் கல்லூரியாகும். கனடா நாட்டில், பெண்கள் பொறியியல் படிப்பு படிப்பதற்கு முன்வருவதில்லை. இவ்வளவு வளர்ந்துள்ள அமெரிக்காவிலும் பெண்கள் பொறியியல் படிப்பு படிப்பதற்கு அதிகம் முன்வருவதில்லை.

என்னிடம் கேள்வி கேட்டார்கள், தனியே ஒரு பெண்கள் பொறியியல் கல்லூரியை நடத்தும் அளவிற்கு, பெண்கள் வருகிறார்களா? என்று.

ஆம் என்றேன்.

அந்தப் பெண்கள் எல்லாம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

மற்ற கல்லூரிகளில் இருக்கும் பாடத் திட்டம்தான் எங்கள் கல்லூரியிலும். ஆனால், எதையும் துணிவுடன் சந்திக்கக்கூடிய  பெரியாரின் துணிவுதான் மிகவும் முக்கியம்.

பிறகு அது பல்கலைக் கழகமாக மாறிற்று. இன்றைக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக இருக்கிறது.

கழகத்தின் வெளியீடுகள்

அதேபோன்று, மருந்தியல் கல்லூரி. 37 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஆக, 10 ஆயிரம் பெண்கள் பாலிடெக்னிக்கில் படித்து முடித்து வெளியே சென்றிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை மாறியிருக்கிறது.

அதேபோன்று, நிறைய பட்டதாரிகளை உருவாக்கியி ருக்கிறோம். 27 ஆண்டுகளாக கல்லூரியாக இருந்தது, இப்பொழுது நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்.

பிரச்சாரத்தைப் பொறுத்தவரையில், ‘விடுதலை', ‘உண்மை', குழந்தைகளுக்காக ‘பெரியார் பிஞ்சு', அதேபோன்று ஆங்கில மொழியில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழ்.

பெரியாருடைய கொள்கைகள் பரவவேண்டும் என்பதற் காக புத்தகங்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடு கிறோம்.

முதன்முதலாக இணையத்தில் வெளிவந்த தமிழ் நாளேடு  ‘விடுதலை'தான். 85 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொள்கையோடு நடைபெறக்கூடிய நாளிதழ் விடுதலை. விடுதலையில் சினிமா விளம்பரமோ, சோதிடச் செய்திகளையோ, ராசி பலன்களையோ போடுவதில்லை. கொள்கை ரீதியாக நாளிதழ் நடத்துவது என்பது எதிர்நீச்சல் அடிப்பது போன்றதாகும். அதற்கெல்லாம் காரணம், இந்த அறக்கட்டளைதான்.

ஆகவேதான், ஒரு பக்கம் அறிவுப் பணி, இன்னொரு பக்கம் கல்விப் பணி; இன்னொரு பக்கம் தொண்டு; இன்னொரு பக்கம் சமுதாயப் பணிகளை செய்துகொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, எங்கெல்லாம் தமிழர்களுக்கு, திராவிடர் களுக்கு, மானிட உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படுகிறதோ, அப் போதெல்லாம் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிடு வோம்.

மற்றவர்கள் சொல்ல பயப்படுகிற, சொல்லத் தயங்குகிற கருத்துகளை விடுதலை ஏடு தனித்தன்மையோடு சொல்லி வருகிறது. இன்றைக்கும் இணையத்தில் உலகம் முழுவதும் படிக்கிறார்கள்.

பெரியாருடைய அறக்கட்டளைதான் அதற்கெல்லாம் காரணம். பெரியாருடைய காலத்திற்குப் பின்பு, மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கப் பொறுப்பை ஏற்றார்கள். அந்த அம்மையாருக்கு இருந்த சொத்துகளை வைத்து, தனியாக ஒரு அறக்கட்டளையை அமைத்து, அதன் சார்பாக கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே, பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு மிகப்பெரிய பணியை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு அதில் முழுத் திருப்தி இருக்கிறது.

பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அதனுடைய பயன் விரிவடைந்து இருக்கிறது, ஒரு பெரிய ஆலமரம் போல. விளம்பர வெளிச்சம் என்பது இல்லை. உங்களைப் போன்றவர்கள் அதனைப் புரிந்து கேட்டதற்கு நன்றி.

பொதுவுடைமை ஆக்குவதில்

உங்களுக்கென்ன தயக்கம்?

இந்திரா தங்கசாமி: பெரியாருடைய படைப்புகளை பொதுவுடைமை ஆக்குவதில் உங்களுக்கென்ன தயக்கம்?

தமிழர் தலைவர்: ஒரு தயக்கமும் இல்லை. யார் வேண்டுமானாலும், பெரியாருடைய கருத்துகளை புத்தகமாகப் போடவேண்டும் என்றால், நாங்கள் அதற்கு அனுமதி கொடுக்கிறோம்.

மற்றவர்கள் போன்று நாங்கள் கிடையாது. பெரியாருடைய கருத்துகள் புரட்சிகரமான கருத்துகளாகும். அதில் ஒரு சொல்லை மாற்றிவிட்டார்கள் என்றால், பொருளே மாறிப் போய்விடும்.

பிற்கால சமுதாயத்திலே பெரியார் முரண்பட்டுப் பேசினார் என்று சொல்வார்கள். இப்பொழுதே பெரியாரைபற்றி முரண் பாடான செய்திகளும், தவறான செய்திகளும், திரிபுவாதங்களும் நடைபெறுகின்றன. நாங்கள் உயிரோடு இருக்கும்போதே இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன.

பெரியார் அவர்கள், ‘‘பார்ப்பானை பிராமணன் என்று அழைக்காதே - சூத்திரன் என்று உன்னை சொல்வதற்குச் சமம்'' என்று சொல்லியிருப்பார்.

மற்றவர்கள் என்ன செய்வார்கள், பார்ப்பனர் என்ற சொற்களை உச்சரிப்பதற்கு யோசிப்பார்கள். ஆனால், அந்தச் சொல் இலக்கியத்தில் வரக்கூடிய சொல்லாகும்.

பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்பது பாரதியாருடைய பாட்டு.

‘‘மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்''

திருவள்ளுவருடைய குறளாகும்.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி

தீவலம் வந்து

இது சிலப்பதிகாரம்.

பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண் மின்

இது கபிலர் அகவல்.

இப்படி வரிசையாக இருக்கும்.

அதனாலே இரண்டு வார்த்தையை மாற்றிப் போட்டு விட்டால் போதும்.

அதனால்தான் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், எங்களிடம் அனுமதி பெற்று வெளியிடலாம்.

நாங்கள் அதற்காகப் பணம் ஏதும் வாங்குவதில்லை. பெரியாருடைய கொள்கைகளில் பாதகம் ஏதும் இல்லாமல் பார்த்து, அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அனுமதி கொடுக்கிறோம்.

இந்த ஒரு பாதுகாப்பு - பெரியாரைப் பொறுத்தவரை தேவை. ஏனென்றால், பிற்காலத்தில், பெரியாரை தலைகீழாக மாற்றிவிடக் கூடிய ஆபத்தும் உண்டு - புத்தருக்கு ஏற்பட்ட ஆபத்துபோல.

ஏன் இப்பொழுது அம்பேத்கரையே தழுவி அழித்து விடலாம் என்று நினைக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இன்னொரு செய்தி என்னவென்றால், பெரியார் காங்கிரசில் இருந்தபொழுது, காந்தியாரை ஆதரித்து கொள்கைப் பிரச் சாரம் செய்தபொழுது அப்பொழுது ஒரு கருத்து பெரியாருக்கு.

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு,  அதே காந்தியாரை பெரியார் எதிர்த்திருக்கிறார். அதே காந்தியாரை கோட்சே சுட்டுக்கொன்ற பொழுது, இந்த நாட்டிற்குக் காந்தி நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொல்கிறார்.

அதற்கு அவர் விளக்கமும் சொல்கிறார், ‘‘வாழ்ந்த காந்தி யார் வேறு; அவர் வருணாசிரமத்தை ஆதரித்தவர். மறைந்த காந்தியார்,  அதனைப் புரிந்துகொண்டு விழித்தெழுந்தார். உடனே அவரை வாழவிடவில்லை'' என்றார்.

பெரியார் அவர்கள், கடல் அளவுக்குப் பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். இவை அத்தனையையும் முன் வைக்க வேண்டியதை பின் வைத்து, பின் வைக்கவேண்டியதை முன் வைத்து- மாற்றினாலோ அது மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கும்.

ஆகவேதான், பாதுகாப்பு கருதி நாங்கள் அதனை செய்தி ருக்கிறோம். திரிபுவாதங்கள் உள்ளே வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறோமே தவிர, அனுமதி கொடுக்கக்கூடாது என்பதல்ல.

எங்களிடம் அனுமதி கேட்டால், உடனடியாக அதனை சரி பார்த்து அனுமதி கொடுத்துவிடுவோம்.

இன்னொரு ஆபத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அரசுடைமையானால், உரிமை அரசுக்கு. அவர்கள் வெளியிடாமல் இருந்தால், யாரும் அதுபற்றி கேட்க முடியாது. அரசுகள் மாறி மாறி வருகின்றன. அப்படி வருகின்ற ஒரு அரசு, ‘‘பெரியாருடைய நூல்களை வெளியிடவேண்டிய அவசிய மில்லை'' என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவேதான், அது தேவையில்லை என்று சொல்கிறோம்.

பெரியார் அனைவருக்கும் உரியார்.

‘எனக்குப் பிறகு என்னுடைய நூல்கள்' என்று சொன்னார் பெரியார்.

அந்த நூல்கள், கருத்துகள் பரவுவதற்கு நாங்கள் எளிமையான வெளியீடுகள் முதல் பெரிய வெளியீடுகள்வரை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு அதிகமான அளவிற்குப் புத்தகங்கள் உலகளா விய அளவிற்கு உலகம் முழுவதும் செல்வதற்கும், பெரியார் உயராய்வு மய்யம் என்ற அமைப்பு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இருக்கிறது.

அந்த அமைப்பின் சார்பில், பெரியாருடைய ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகம் ஜெர்மன் மொழியில் மொழி யாக்கம் செய்யப்பட்டு, அண்மையில் வாசிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது.

இந்திய மொழிகளில் பல மொழிகளில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் வெளிவந்திருக்கிறது.

பெரியாருடைய கருத்து சிதையக்கூடாது; திரிபுவாதத்திற்கு ஆளாகக்கூடாது என்கிற கவலைதான் எங்களுக்கு.

பெரியாருடைய படைப்புகள் கணினி மயமாக்கப்படுமா?

இந்திரா தங்கசாமி: பெரியாருடைய படைப்புகளை கணினி மயமாக்குகின்ற பணிகள் நடைபெறுகிறதா?

தமிழர் தலைவர்: நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறப்பாக அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

முதலில் நாங்கள் செய்திருப்பது, சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலகம் - ஆய்வகத்தில் தனிப் பிரிவு ஒன்று இருக்கிறது; அதில் சான்றாவணங்கள் எங்கெங்கே இருக் கிறதோ அதை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். அதிலிருந்து தகவல்களை எல்லோருக்கும் கொடுக்கிறோம்.

விரைவில் நீங்கள் எல்லாப் படைப்புகளையும் கணினியில் பார்க்கலாம். ஆனால், ஒரே ஒரு பாதுகாப்புதான் - திரிபுவாதம் வரக்கூடாது என்பதுதான்.

பெரியாரை யாராலும் மறைத்துவிட முடியாது. மற்றவர் களுக்கு இல்லாத ஒரு வசதி பெரியாருக்கு  உண்டு. அது என்னவென்றால், மதத் தலைவர்களுடைய நூல்களை புனித நூல்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், யாரும் கிட்டே இருந்து எழுதியது கிடையாது.

மகாபாரதத்தில் ஒரிஜினல் மகாபாரதம் உண்டா என்றால், கிடையாது. இடைச்செருகல்தான் என்று  அறிஞர்களும், ஆய்வாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

பகவத் கீதையை எடுத்துக்கொண்டால், எதிரே படைகள் நிற்கின்றன; கிருஷ்ணன் கீதா உபதேசம் செய்கிறார்; 700 சுலோகங்கள் சொல்கின்ற வரையில், எதிரே நிற்கின்ற படையினர் சும்மா இருப்பார்களா?

அன்றைக்கு எழுத்துக்கள் அச்சுக்கு வராத காலத்தில், கேட்டார், கண்டார் என்பதுதான் மத நூல்களுக்கு இருக்கிற வாய்ப்பு.

பெரியாருக்கு அப்படியில்லை. பெரியாருடைய கருத்துகள் பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அவராலேயே திருத்தி வெளியிடப்பட்டு இருக்கின்றன. அது அதிகாரப்பூர்வ மானது.

அதற்குப் பிறகு எங்களுடைய காலம், மின்னணு காலம் வந்த பிறகு, நிறைய அளவிற்கு, அவரது இறுதிப் பேச்சுகூட ஒலிப்பதிவாக இருக்கிறது.

ஆகவே, இப்படி பல செய்திகள் ஆதாரங்களோடு இருக் கின்றன. மற்ற தலைவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு தந்தை பெரியாருக்கு இருக்கிறது. எனவே, தந்தை பெரியார் என்பவர் மக்கள் தலைவர். அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தம் இல்லை.

இன்னுங்கேட்டால், அனைத்து மானிடத்திற்கும் சொந்த மானவர் அவர்.

‘‘திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கவேண்டும். உலக மக்களைப் போல் என்னுடைய மக்கள் இருக்கவேண்டும்'' என்று சொன்னார்.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று நான்கே வார்த்தையில் சொல்லிவிட்டார். ஆகவேதான், அதனை சொன்ன பெரியாருக்கு மானுடப் பார்வை. எனக்குத் தனிப் பற்று கிடையாது என்றும் சொன்னார்.

அவருடைய கருத்துகள் அத்தனையும் பாதுகாக்கப்பட்டு, எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். எல்லா மொழி களிலும் கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அதனை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். அதற்கு உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்குத் தேவை.

உலகம் முழுவதும் இருக்கிற மக்கள்,  இளைஞர்கள் இன்றைக்குப் பெரியாரை வாசிப்பதைவிட, பெரியாரை சுவாசிக்கவேண்டும் என்கிற அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

பெரியாருடைய எழுத்துக்களும், அம்பேத்கருடைய எழுத்துக்களும் புரட்சிகரமான அளவிற்கு இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் இன்றைக்கு ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள்.

எனவே, அது பொதுச் சொத்து; அந்தப் பொதுச்சொத்தை எல்லா மக்களும் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு, பாதுகாப்போடு பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது எங்களுடைய பணி. அந்தப் பணியை நாங்கள் செய்து வருகிறோம்.

உங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுக்கவேண்டுமானால்,

அதற்கு என்ன வழிமுறை?

இந்திரா தங்கசாமி: இதுபோன்ற பணிகளுக்கு வெளியில் இருந்து நன்கொடை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? நன்கொடை கொடுக்கவேண்டுமானால் அதற்கு என்ன வழிமுறை?

தமிழர் தலைவர்: தாராளமாக; நன்கொடை கொடுக்க வேண்டும் என்றால், எங்கள் நாட்டில் அதற்குரிய சட்டம் இருக்கிறது. வருமான வரித் துறையில்,  ‘‘பாரின் கான்ட்ரிபூஷன் ஆக்ட்'' என்ற சட்டம் இருக்கிறது. வெளிநாட்டவர்கள் நன் கொடை கொடுத்தால், அந்த நன்கொடைகள் முறையான ஒரு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அந்தக் கணக்கில் செலுத்தலாம் என்று இருக்கிறது.

நன்கொடை யார் கொடுத்தாலும், அந்தக் கணக்கில் வரவு வைத்து, ஒவ்வொரு ஆண்டும் அதுபற்றிய கணக்குகளை நாங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பவேண்டும். முறைப்படி அதனை நாங்கள் செய்கின்றோம்.

தாராளமாக நன்கொடை கொடுக்கலாம்; மக்களுடைய பங்களிப்பு என்பதுதான் மிகவும் முக்கியம்.

தந்தை பெரியார் சொல்வார், வெளியில் சென்று வசூல் செய்யவேண்டும். காரணம் என்னவென்றால், மக்கள் பங்களிப்பு இருக்கவேண்டும்; அப்போதுதான் அந்த இயக்கம் வளரும் என்பார்.

ஒரு பெரிய பணக்காரன் இயக்கத்தை தொடங்குவதற்கும்;  சாதாரண ஆள்கள் இயக்கத்தைத் தொடங்குவதற்கும் வேறு பாடு உண்டு. ஏனென்றால், எல்லோருடைய பங்களிப்பும் இருந்தால்தான், இயக்கம் வளரும். பணம் மட்டுமல்ல, உழைப்பைக் கொடுக்கிறவர்கள் உழைப்பைக் கொடுக்கலாம்; பணத்தைக் கொடுப்பவர்கள் பணத்தைக் கொடுக்கலாம்.

சிலரால் பணம் கொடுக்க முடியாது; உழைப்பைக் கொடுப் பர். சிலருக்கு வசதி இருக்கும் பணத்தைக் கொடுப்பார்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்களும் தாரளமாக உதவிகளை செய்கிறார்கள். இப்போதுகூட, அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள்; அதில் ஒரு நண்பர் மோகனன் என்பவர். தமிழ்நாடு பவுண்டேசன் என்ற அமைப்பு அமெரிக்காவில் இருக்கிறது. அதன்மூலமாக நன்கொடை கொடுக்கிறோம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.

மேசை, நாற்காலி புதிதாக வாங்கவேண்டும் என்று சொன்னவுடன், அதற்காக ஒரு லட்சம் ரூபாயை அதனுடைய தலைவரே கொண்டு வந்து கொடுத்தார்.

பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற வசதியற்ற பிள்ளை களுக்கு உதவித் தொகையை, சில நிபந்தனைகளுடன், நிபந்தனை என்றால், இவ்வளவு மதிப்பெண் வாங்கவேண்டும் என்று சொல்லி உதவித் தொகையை நேரிடையாகவே வந்து படிக்கின்ற பிள்ளைகளுக்கு அளிக்கிறார்கள்.

யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும்?

இந்திரா தங்கசாமி: உதவி செய்யவேண்டுமானால், யாரை தொடர்பு கொள்ளவேண்டும்?

தமிழர் தலைவர்: நேரிடையாக எங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால், மின்னஞ்சல் முகவரி இருக்கிறது.

செயலாளர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் என்ற முகவரிக்கு நன்கொடை அளிக்கலாம்.

இங்கே உங்களுக்கு முழு விவரம் வேண்டும் என்றால், டாக்டர் சோம.இளங்கோவன், பெரியார் பன்னாட்டு அமைப்பு இருக்கிறது. அவர்களை நீங்கள் தொடர்பு கொண்டால், சரியான வழிமுறையை சொல்வார்கள்.

பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் வேளையில், பெரியார் காலத்திலிருந்து ஒரு பெரிய புரட்சி என்னவென்றால், மாலை போடாதீர்கள்; மாலை வீணாகத்தான் போகிறது. அதற்குப் பதிலாக பணமாகக் கொடுங்கள் என்று சொல்வார்.

நாங்கள் மாணவப் பருவத்தில் அய்யாவோடு செல்கையில், மாலையை நிறைய பேர் அணிவிப்பார்கள்.

அய்யா இந்த மாலைகளை என்ன செய்வது? என்று கேட்டால்,

அந்த மாலைகளை ஏலம் விட்டுவிடுங்கள் என்பார்.

நாங்களும் ஏலம் விடுவோம். இரண்டனா என்று பெரியாரே ஆரம்பித்து வைப்பார் ஏலத்தை!

ஏலத்தில் கிடைத்த அந்தப் பணத்தையும் இயக்க வளர்ச்சிக்கே கொடுப்பார்.

இயக்கத்திற்குப் பணம் கொடுத்தாலும், நன்கொடை கொடுத்தாலும், வளர்ச்சி நிதி கொடுத்தாலும் அவை அத்தனையும் தனித்தனி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, முறையாகக் கணக்கு வைக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது.

பெரியார் அறக்கட்டளையிலும்

வாரிசு அரசியல் இருக்கிறதா?

இந்திரா தங்கசாமி: எல்லா இடங்களிலும் வாரிசு அரசியல் இருக்கிறது; பெரியார் அறக்கட்டளையிலும் அதுபோன்ற வாரிசு அரசியல் இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கிறதே, அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அது தவறானது. பெரியார் அறக் கட்டளையில் 13 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பெரியார் காலத்தில், பெரியார் தலைவராக இருந்தார்; மணியம்மையார் செயலாளராக இருந்தார். அது வாரிசு அரசியல் அல்ல.  அதற்குப் பாதுகாப்பாக யார் இருக்கிறார்களோ, அவர்களை நியமிப்பதுதான்.

‘டிரஸ்ட்' என்கிற வார்த்தைக்குப் பெயரே நம்பிக்கை என்று அர்த்தம். யாரை வேண்டுமானாலும் நம்ப முடியாது.

‘‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்

தீரா  இடும்பை தரும்''

இதுதான் வள்ளுவருடைய குறளாகும்.

‘‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்''

அதுதான் அடிப்படை.

எங்களுக்கு வாரிசு அரசியல் கிடையாது. அரசியலே இல்லை என்று சொல்லும்பொழுது, பிறகு எப்படி வாரிசு வரப் போகிறது?

ஆனால், பாதுகாக்கவேண்டும்.

தந்தை பெரியாருடைய தொலைநோக்கு இருக்கிறதே, அன்னை மணியம்மையாரோடு திருமணம் என்று வரும் பொழுது,  மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தன. வயதானவர், சிறிய பெண்ணை மணம் செய்யப் போகிறார் என்றெல்லாம்.

அதைப்பற்றியெல்லாம் பெரியார் அவர்கள் கவலைப் படாமல், அன்றைக்கு மணியம்மையார் திருமணம் என்பது, சட்டப்படிக்கான பெயரே தவிர, ஏற்பாடே தவிர, அது இயக்கத்திற்குச் செய்யக்கூடிய எதிர்கால பாதுகாப்பே ஆகும் என்று சொன்னார்.

பிறகு, அண்ணாவே அதை கடைசியில் ஒப்புக்கொண்டு சொல்லக்கூடிய அளவிற்கு வந்தது.

அதனால்தான், இன்றைக்கு இத்தனைக் கல்வி நிறு வனங்கள், பல்கலைக் கழகம் எல்லாம் வந்திருக்கின்றன.

நான் ஒப்பிடக் கூடாது; வேறு சில தலைவர்களின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகள், கொலை வழக்குவரை சென்றிருக்கிறது. அதனை நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை.

ஆகையால், இரண்டு குறள் சொன்னேன் பாருங்கள், அதனை வேறு கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு இடமும் இல்லை.

பல பேர் இருக்கிறார்கள்; இயக்கத் தோழர்கள் இருக் கிறார்கள். ஒரே ஒரு நபர் கிடையாது. அமைப்பு ரீதியாக இருக்கக்கூடிய இந்த இயக்கம்.

13 பேர் இருக்கிறார்கள்; மூன்று  மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் தணிக்கை இருக்கிறது. ஆகையால், எந்தப் பிரச்சினையும் கிடையாது.

இந்திரா தங்கசாமி: இது எங்களுடைய ஆசையும்கூட; திராவிட இயக்கங்கள் பிரிந்து இருக்கின்றனவே, அவை எல்லாம் ஒன்றாக இணையக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: அது பிளேடு போன்றது. பிரிந்தல்ல; விரிந்து இருக்கிறது.

பிரிவது வேறு; விரிவது வேறு.

படைகளில், விமானப் படை, தரைப்படை, கப்பல் படை என்று இருக்கிறது. அது பிரிந்துதான் இருக்கிறது. ஆனால், அடிப்படை என்ன, அப்படைகள்தான் நாட்டைப் பாதுகாக்கின்றன.

அதுபோன்று, திராவிட இயக்கங்களில், உண்மையான திராவிட இயக்கங்கள், பிரிந்திருக்கவில்லை - விரிந்திருக் கின்றன.

நான் அடிக்கடி சொன்ன உதாரணம், பவள விழா மாநாட்டில் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்கிறேன்.

கத்திரிக்கோல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்தால் போதாது; இரண்டாகப் பிரிந்திருந்தால்தான், வெட்ட முடியும். ஆகவே, கத்திரிக்கோல் போன்றுதான்.

அமெரிக்கத் தமிழர்களுக்கு

நீங்கள் சொல்ல விரும்புவது!

இந்திரா தங்கசாமி: நல்ல விளக்கம் அய்யா. திராவிட இயக்கங்களால்தான், நிறைய சாமானியர்கள் இங்கே வந்திருக்கிறோம். இங்கே இருக்கிற தமிழர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழர் தலைவர்: அறிவுரை சொல்லக்கூடிய தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. அறிவுரையை யாரும் விரும்புவதும் இல்லை.

உலகத்திலேயே மிகவும் சுலபமான ஒரு பணி என்றால், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதுதான்.

ஆகையால், இது அறிவுரையல்ல - வேண்டுகோளாக சொல்கிறோம்.

புலம் பெயர்ந்து வந்திருக்கின்ற நீங்கள், முதலாவது தமிழ்நாட்டில்தான் ஜாதி, மதவெறியெல்லாம் இருக்கிறது. அப்படியல்லாமல், மானிடப் பற்றோடு வாழுங்கள்.

உலகம் ஓர் குலம் என்கிற உணர்வோடு வாழுங்கள். பரந்த மானுடம்.

வண்ணங்கள் பல இருக்கலாம்; ஆனால், அது நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கக்கூடாது.

வேற்றுமையில் ஒற்றுமை - அதற்கு அய்யா அவர்கள் சொன்ன கருத்தையே நான் வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

புலம்பெயர்ந்த தமிழர்கள், திராவிடர்கள், இங்கே வாழக் கூடியவர்கள் - நேற்றுகூட நீங்கள் பார்த்திருப்பீர்கள் - பஞ்சாபில் இருக்கிறவர்களும், மதத்தால் வேறுபட்டவர்களும், மனதால் ஒன்றுபட்ட காட்சியை நாம் பார்த்தோம். அந்த உணர்வை உருவாக்கவேண்டும்.

இந்த நாட்டில் வந்து, என்னுடைய ஜாதி, நீ என்ன ஜாதி? என்று சொல்வதற்கு அடையாளம் எதுவும் கிடையாது.

ஆகவே, ஜாதி உணர்ச்சிக்கோ, மத உணர்ச்சிக்கோ இடங்கொடாமல், மானிடப் பற்றுதான் அவசியம்.

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்பதுதான் நம்முடைய பண்பாடு.

யாயும் ஞாயும் யாரா கியரோ,

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல,

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

என்ற குறுந்தொகை வரவேண்டும். ‘பெருந்' தொகை வந்தவுடன் குறுந்தொகை மறந்துபோய்விட்டது நம்முடைய நாட்டில்.

ஆகவே, அதைப்பற்றி கவலைப்படாமல், மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.

கடைசியாக ஒன்று,

சமுதாய ஒற்றுமைக்காக தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார்,

எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உங்களுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; அவருடைய உடை வேறு;

உங்கள் உயரம் வேறு; என்னுடைய உயரம் வேறு; அவருடைய உயரம் வேறு.

ஆனால், நாம் எல்லோரும் மனிதத் தன்மையில் ஒன்று.

மூளைச்சாவு ஏற்படும்பொழுது மானிட உறுப்புகளை  கொடையாகக் கொடுக்கிறோம். விழிக்கொடை கொடுக்கிறோம். அதில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. நாடு பார்ப்பதில்லை.

யாருக்குப் பொருந்தும் என்றுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு இருக்கும்பொழுது,

பெரியார் சொல்வது போன்று,

எது நம்மை பிரிக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்;

எது நம்மைப் இணைக்கிறது என்ற பொது இடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

இணைப்பதை அகலப்படுத்துங்கள்; ஆழப்படுத்துங்கள்;

பிரிப்பதை அலட்சியப்படுத்துங்கள்.

இதுதான் நம்முடைய வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்.

இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

இந்திரா தங்கசாமி: நன்றி அய்யா! எங்கள் அமெரிக்கத் தமிழர்கள் வானொலி நேயர்கள் சார்பாக நீங்கள் நீண்ட காலம் நலத்தோடு வாழ்ந்து பணியாற்றவேண்டும்.

தமிழர் தலைவர்: மிக்க மகிழ்ச்சி, நன்றி!

மேற்கண்டவாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.

- விடுதலை நாளேடு 12 11 19