புதன், 2 அக்டோபர், 2019

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய வழக்கு ₹4 லட்சம் அபராதம்

பட்டறை உரிமையாளர்களுக்கு ₹4 லட்சம் அபராதம் விதிப்பு

செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை , அக் 2 : குழந்தை தொழிலாளர்களை சட்டவிரோதமாக வைத்து வேலை வாங்கிய நகை பட்டறை உரிமையாளர்களுக்கு 4 லட்சம் அப் ராதம் விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . சென்னை ஏழுகிணறு பகுதியில் இயங்கி வரும் தங்க நகை செய்யும் பட்டறைகளில் வடமாநில சிறு வர்கள் பலர் , சட்ட விரோதமாக வேலை செய்து வருவதாக புகார் வந்தது . அதன்பேரில் , சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் ஜெயந்தி , போலீசார் உதவியுடன் , அங்குள்ள பட்டறைகளில் சோதனை மோற்கொண்டார் . அப்போது 60 பேர் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது . இதனையடுத்து , அனைவரும் மீட்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் . பின்னர் , இது தொடர்பாக நகை பட்டறை உரிமையாளர்கள் கணேஷ் கர் , சஹிப் ஷேக் , கவுதம் மைதி மற்றும் சமீன் ஜனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . பின்னர் நீதிபதி ஜெயந்தி , மீட்கப்பட்ட வடமாநில குழந்தை தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அமைப்பி வைத்தார் . இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 4 பேரும் , ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தனர் . இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் கூறுகையில் , நகை பட்டறைகளில் வேலை செய்வது குழந்தை தொழில் கொடுமையின் கீழ் வராது . இது திற மைக்கான தொழில் . இதில் வேலை செய்தால் பயிற்சி பெற்று , சொந்தமாக தொழில் செய்ய லாம் , என்று தெரிவித்தனர் . அப்போது , சட்டபணிகள் ஆணை குழு , மீட்கப் பட்ட சிறுவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி உற வினர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது . இதனையடுத்து நீதிபதி 4 பேருக்கும் ₹10 ஆயிரம் பினைத்தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினர் . மேலும் தலா ஒரு லட்சம் என 4 பேரும் ₹4 லட்சம் செலுத்த உத்தரவிட்டார் . அதன்படி ₹4 லட்சத்தை சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணைய குழுவில் நகை பட்டறை உரிமையாளர்கள் செலுத்தினர் .
- தினகரன், 2 .10 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக