புதன், 26 மே, 2021

கேதார்நாத்?


 உத்தரகாண்டில் உள்ள ஒரு கோவில் கேதார்நாத். கடந்த 17 ஆம் தேதி அக்கோவில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை நடத்தப்பட்டது.

உண்மை என்னவென்றால், கரோனா காரணமாக கடந்த ஆறு மாதங்களாகக் கோவில் திறக்கப்படவில்லை என்பதுதான்.

இப்பொழுதாவது நம் மக்களுக்கு புத்தி வருமா என்று தெரியவில்லை. கோவிட்-19 என்னும் வைரசுக்குமுன் சர்வ சக்திக் கடவுள்கள் சர்வ ‘சரண்டர்!'

உத்தரகாண்ட் முதலமைச்சர்  தீரத்சிங் கூறியதுதான் வயிறு குலுங்கும் தமாஷோ தமாஷ்! ‘‘கேதாரீஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்படி பிரார்த்தனை செய்கிறேன்'' என்று சொன்னதுதான் அந்தத் தமாஷ்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன.

ஜூன் 16, 2013 அன்று மாலை  கேதார்நாத் கோவிலுக்கு அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது பெரும் பாறைகளையும் அடித்துக் கொண்டு ஓடியது. வெள்ளத்தில் சிக்கிய கேதார்நாத் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கேதார்நாத்திலுள்ள கடைகள், விடுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பகுதியை மொத்தமாக அழித்துவிட்டது, சுமார் 40-க் கும் மேற்பட்ட மலைக்கிராமம் முற்றிலும் அழிந்துவிட்டது.  மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய 25,000  குஜராத்திகளை மோடி மீட்டதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து சமூகவலைதளம் மற்றும் பாஜக ஹிந்துத்துவ ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தன்னை நாடி வந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியாத கேதாரீஸ்வரர்தான் பக்தர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பாராம், ஹி...! ஹி...!!

இதில் கவனிக்கவேண்டிய அண்டப் புளுகு - ஆகாயப் புளுகு ஒன்று உண்டு.

ரீடிஃமெயில் டாட் காம் செய்திப் பிரிவு குஜராத் அதிகாரிகளிடம் கேதார்நாத் பிரச்சினையில் குஜராத் அரசு எப்படி செயல்பட்டது என்று கேட்டபோது, நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநில அதிகாரி ஒருவர் அளந்து கொட்டியதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

பூகம்ப இயற்கைப் பேரழிவை ஏற்கெனவே அனுபவித்த குஜராத் பேரிடர் மீட்புக் குழு திறமையானது என்றும், அதன் திறமையை வைத்து முதலமைச்சர் மோடியால் காப்பாற்றப்பட்ட குஜராத்திகள் 25 ஆயிரம் பேர்களாம்!

கேட்பவன் கேனயனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டியது என்பானாம். அதேபோல், என்ன சொன்னார்கள்?

டேராடூனுக்கும் - கேதார்நாத்துக்கும் இடைப்பட்ட தூரம் 221 கி.மீ. 7 பேர் முதல் நெருக்கி அமர்ந்தால் 10 பேர் பயணம் செய்யும் ஒரு சில ‘இன்னோவா' கார்மூலம் இரண்டே நாளில் 25 ஆயிரம் குஜராத்திகளை மீட்டார் மோடி என்று சொன்னது நினைவில் இருக்கிறதா?

‘நட்ட கல்லும் பேசுமோ!' - சித்தர் சிவவாக்கியம்.

 - மயிலாடன்

செவ்வாய், 25 மே, 2021

தந்தை பெரியார் - திராவிட இயக்கச் சிந்தனைகளை தரணியெங்கும் கொண்டு செல்லுவோம்; ஆறு நாடுகளைச் சேர்ந்த அறிவுசார் இளைஞர்கள் முழக்கம்

தந்தை பெரியார் - திராவிட இயக்கச் சிந்தனைகளை தரணியெங்கும் கொண்டு செல்லுவோம்; தொழில்நுட்ப உதவிகள் செய்யத் தயார்!- தமிழர் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!

ஆறு நாடுகளைச் சேர்ந்த அறிவுசார் இளைஞர்கள் முழக்கம்

நமது சிறப்பு செய்தியாளர்

22.5.2021 சனியன்று மாலை காணொலி மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், நார்வே, சிங்கப்பூர், ஓமன் நாடுகளில் பணியாற்றும் அயலக திராவிடச் சிந்தனைச் செல்வர்கள் - திராவிட இயக்க உணர்வோடும், தந்தை பெரியார் தம் சிந்தனை உரத்தோடும் தெரிவித்த கருத்துக்களின் திரட்டுகள் இங்கே!

சிங்கப்பூர் இராஜராஜன்

சிங்கப்பூரில் வசிக்கும் இராஜராஜன்,  தகவல் தொழில் நுட்பத்   துறையில் பணியாற்றி வருகிறார். திராவிட இயக்க  சிந்தனையாளர்.  இரு  சிறுகதை  தொகுப்புகள்,  திராவிட  நம்பிக்கை  மு.க. ஸ்டாலின்  உள்ளிட்ட 6 புத்தகங்கள் எழுதியுள் ளார். திராவிட  வாசிப்பு  எனும் மாத மின்னிதழை செப் 2019 இல்    இருந்து   நடத்தி   வருகிறார்.  திராவிட இயக்கக்    கருத்துக் களைத் தொடர்ச்சியாகப் பேசியும்,  எழுதியும் வருபவர்! அன்னை மணியம்மையார் குறித்துச் சிறப்பிதழ் வெளியிட்டவர்.

“இணையத்தில் நமது பிரச்சார முறைகள்” என்கிற தலைப்பில் பேசும் பொழுது... மரியாதைக் குரிய ஆசிரியர் அவர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கங்கள்! இந்த அருமையான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து எனக்கு பேச வாய்ப்பளித்த அயலக திராவிட நண்பர்கள் குழுவிற்கும், தோழர் வில்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்று நான் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அதற்கான காரணத்தை சொல்ல என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில்.  என்னுடைய தந்தையார் பெயரை சொன்னால் ஆசிரியருக்கு நன்றாக தெரியும். தஞ்சாவூர் ரெட்கிராஸ் ராஜமகேந்திரன் அவர்களின் மூத்த மகன் தான் நான். எனது தந்தையார் ஆசிரியருடன் இணைந்து பல சேவைகளை செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டு எனது தந்தையார் காலமான போது, ஆசிரியர் எனது தந்தைக்கான இறுதி மரியா தையை செலுத்திவிட்டு, யார் அவரது பிள்ளைகள் எனக் கேட்டு, என்னிடமும் என் தம்பிகளிடமும் விசாரித்தார்.

நான் சில ஆண்டுகளாகவே, ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று, இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆசிரியரிடம் இதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! திராவிட இயக்க வரலாறு நீண்ட நெடியது. திராவிட இயக்க வரலாற்றில் நாம் பல்வேறு இதழ்களை நடத்தி இருக்கிறோம், பல புத்தகங்கள் எழுதி இருக்கிறோம், நமது வரலாறு ஆவணங்களாக இருக்கிறது.

திராவிட இயக்கம் குறித்தான கேள்விகளுக்கும், அவதூறு களுக்கும் பெரியாரில் இருந்து பல தலைவர்கள் ஏற்கனவே பதில் அளித்து விட்டார்கள். எல்லாவற்றிற்குமான பதில்கள் ஏற்கெனவே இருக்கிறது.

அதை திரும்ப திரும்ப நாம் பல்வேறு வழிகளில் சொல்லிக்கொண்டிருப்பது தான் தேவையாக இருக்கிறது. சிறந்த பேச்சாளர்கள் நம்மிடம் தான் இருக்கிறார்கள். பேச்சால் வளர்ந்த இயக்கம் இது. நம் பேச்சு என்பது வெறும் அலங்காரமாக இருக்காது. அதில் பொருள் இருக்கும். வசவு மொழி இருக்காது. மானுடத்தின் மீதான அன்பு அதில் இருக்கும்! இன்று வெறுப்பை உமிழ்வதும், கத்துவதுமே மேடை பேச்சாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் எத்தனை கத்தினாலும் அவர்களின் குரல் எடு படாது. ஏனெனில் அவர்களின் குரலில் உண்மையில்லை.

ஆனாலும், நாம் அமைதியாக இருக்க முடியாது. ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். மீனு என்றொரு பெண். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோரிக்கையுடன் வந்தார்..அவரது காணொலி ஒன்றை தந்து, இதைப்பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்றார். அது ஒரு கல்லூரி மேடை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழுமி இருந்தார்கள். மீனு அழகான தமிழில் ஒரு உரையை தந்திருந்தார். அந்த பேச்சில் போகிற போக்கில் இட ஒதுக்கீடு குறித்த ஒரு தவறான கருத்தை சொன்னார். அந்த கருத்திற்கு மாணவர்களிடம் பெரும் கரவொலி எழுந்தது. 

நான் காணொலியை பார்த்துவிட்டு மீனுவிடம் பேசினேன். அவரது கருத்தில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டிவிட்டு, உங்களுக்கு பிடித்த மேடை பேச்சாளர் யார் என்று கேட்டேன். ஒரு பெண் பட்டிமன்ற பேச்சாளரின் பெயரை சொன்னார். நான் தோழர் அருள்மொழி அவர்களின் உரைகளை கேட்டுப்பாருங்கள் என்றேன். சில மாதங்கள் கழித்து மீனு பேசினார். தான் எத்தகைய அறியாமையில் இருந்தோம் என்பதை உணர்ந் தாகவும் இனி திராவிட பாதையில் செல்ல இருப்ப தாகவும் சொன்னார். இன்று அவர் திராவிட சுடராக விளங்கிக்கொண்டிருக்கிறார்.  ஆகவே, நாம் நமது ஆயுதமான பேச்சாளர்களை உருவாக்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். நாங்கள் திராவிட வாசிப்பு என்றொரு மின்னிதழ் நடத்துகிறோம். அதில் அன்னை மணியம்மையாருக்கு சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்தோம். அது பரவலாக வாசிக்கப் பட்டும், பாராட்டையும் பெற்றது. பிறகு, அதே நூலை திறனாய்வு செய்ய அய்ந்து பெண் களை அழைத்தோம். அதில் பெரும்பான்மையாக திராவிடம் குறித்து அறிமுகம் இல்லாத வர்கள் தான் கலந்துக்கொண்டார்கள். அவர்கள் இதழை வாசித்துவிட்டு சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.  ஆக, இன்றைய இளைஞர்கள் தேடிக்கொண்டு  இருக்கிறார்கள்.  அவர்களை நான் சென்று அடைய வேண்டும். அவ்வளவு தான்! 

இணையத்தை பொறுத்தவரை நாம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாகவே செயல்படுகிறோம். நம்மிடம் அமைப்பின் பலம் இருக்கிறது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெரிய அமைப்புகள் இருக்கிறது. அவர்களின் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் ஒருபுறம் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம், அமைப்பு சாராமல் சமூக ஊடகங்களில் திராவிடம் சார்ந்து இயக்குபவர்களும் திராவிட இயக்கத்துக்கு பலமாக இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பறந்து வாழும் இவர்கள், திராவிட இயக்கத்தின் மீதுகொண்ட பற்றாலும், நன்றியாலும் இயங்கிக் கொண்டு இருப்பவர்கள். 

இப்படி அமைப்பு சாராத இளைஞர்கள் செய்யும் சிலவற்றை இங்கே தருகிறேன். திராவிட ஆய்வு குழுமம் - முகநூலில் சிறப்பான விவாதங்கள், கலந்துரையாடல் நடக்கும் குழு We Dravidians - திராவிட இயக்க கொள்கைகளை தமிழகம் தாண்டி பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும் குழு திராவிட வாசகர் வட்டம் - திராவிட இலக்கியங்கள் குறித்தான வாசக குழு கிண்டில் எழுத்தாளர்கள் குழுமம் - கிண்டிலில் எழுத வருபவர்களுக்கு உதவும்/ ஊக்கப்படுத்தும் குழு. 

5)   Dravidian Quotes பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் என பல்வேறு தலைவர் களின் பொன்மொழிகளை அழகான மீம்களாக உருவாக்கும் குழு.  இப்படி நாம் பல்வேறு குழுக்களாக இயங்கி வருகிறோம். இன்னொரு புறம், நாம் செய்ய வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கிறது. இணைய புத்தகங்கள் () - திராவிட இயக்கம் சார்ந்த நிறைய புத்தகங்களை நாம் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்க வேண்டும். அது பலரை சென்றடைய உதவும்.

2)   Dravidian FAQ Website திராவிட இயக்கம் குறித்தான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் வகையில், கேள்வி பதில் பாணியில் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும்.

3) திராவிட இயக்கம் குறித்து தேடும் போது நமது இணையதளங்கள் முன்னே வரவேண்டும். அதற்கான  என்று சொல்லப்படும்   Search Engine Optimision வேலைகளை செய்ய வேண்டும்.

4)   Distribution channels நமது சிந்தாந்த எதிரி களால், ஒரு பொய்யான செய்தியை இந்தியா முழுவதற்கும் ஒரு சில மணிநேரங்களில் கொண்டு செல்ல முடிகிறது. காரணம் அவர்கள் வாட்சாப் நெட்வொர்க்கில் பலமாக இருக்கிறார்கள். நாமும் நமது    WhatsApp Distribution channels அய் பலப் படுத்த வேண்டும்.

5)   Audio books - இன்று பல்வேறு புத்தகங்கள் ஒலிவடிவில் வெளியாகிறது. பெரியாரின் புத்தகங்கள், ஆசிரியரின் புத்தகங்கள், திராவிட இயக்க புத்தகங்கள் நிறைய ஒலி வடிவில் மாற்றப்பட வேண்டும். திராவிட இயக்கத்தினால் பயன்பெற்று, திராவிட இயக்கத்திற்காக உழைக்க என்னைப்போன்ற எண்ணற்றோர் இருக்கிறோம். தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி திராவிட இயக்க கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல, இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இராஜராஜன் பேசினார்.

ஸ்பெயின் குமார் பழனிச்சாமி

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் குமார் பழனிச்சாமி    ஈரோடு  மாவட்டம்  கோபி செட்டிப் பாளையத்தைச்  சேர்ந்தவர்.   பள்ளிக் கல்வியைத்   தமிழ்  வழியில் முடித்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் ஆராய்ச்சி   படிப்பை மேற்கொண்டார்.

முனைவர் பட்டம் பெற்ற பிறகு முது முனைவராக மூன்று ஆண்டு காலம்  ஜப்பானில் ஆராய்ச்சி பணியினை  தொடர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு  முதல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு  நிறுவனத்தில் அறிவியல் விஞ்ஞானியாக இணைந்து தற்போது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையின்  தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

செயல்முறை மற்றும் தொழிநுட்பக் கருவிகள் வடிவ மைப்பதில் மிகுந்தஆர்வம். அதை தாண்டி நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வது, தற்போது வசித்து வரும் ஸ்பெயினின் கலாச்சாரங்களை தெரிந்துகொள்வதில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவர் “ஸ்பெயின் வளர்ச்சியில் சுற்றுலா துறையின் பங்கு” என்கிற தலைப்பில் பேசும் போது, முற்றிலும் மாறுபட்ட, அறிவார்ந்த இக் கலந்துரையாடலில் பங்குபெற்று தாய்மொழியில் பேசுவது உள்ள படியே மிகவும் மகிழ்ச்சி.  எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதை விட நான் எடுத்துக் கொண்ட தலைப்பு என்பதே சரி. நான் பேச உள்ள தலைப்பு “ஸ்பெயின் வளர்ச்சியில் சுற்றுலா துறையின் பங்களிப்பு” அடுத்த 7 அல்லது 8 நிமிடங்கள் இதுகுறித்து நான் சேகரித்துள்ள பல சுவையான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள் ளேன்.  ஸ்பெயின் நாடானது அய்ரோப்பிய ஒன்றி யத்தின் ஓர் உறுப்பு நாடாகும். மொத்த மக்கள் தொகை 4 கோடியே 73 லட்சத்து 51 ஆயிரத்து 567 இதில் வெளிநாட்டினர் எண்ணிக்கை சுமார் 54 லட்சத்து 7 ஆயிரத்து 822 பேர். (ஜனவரி 2021 புள்ளியியல் விவரப்படி).

இதில்  இந்தியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 795  பேர். இதன் மொத்த பரப்பளவு 5,05,990  சதுர கிலோமீட்டர்கள்.   இந்தியாவில் உள்ளதை போலவே ஸ்பெயினிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்திய மாநிலங்களின் எண்ணிக்கை மொத்தம் 17. அலுவல் மொழியாக நான்கு உள்ளன.

அடுத்ததாக ஸ்பெயின் ஏன் அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்கிறது, அதற்கான முக்கிய காரணிகள் என்ன என்பதை பார்ப்போம். 

1. நட்பான வரவேற்பு, திறந்த மனதுடன் உபசரிப்பு. மேலும் அடிப்படையான ஸ்பானிஷ் வார்த்தைகளை பேசினால் கூடுதலாக வரவேற்பு.

2. பேசாட்டா நாணய முறையில் இருந்து அய்ரோப்பிய கூட்டமைப்பின் யூரோ முறைக்கு மாறிய போதும் அதனின் தாக்கம் விலையேற்றத்தில் அதிகரிக்காமல் பார்த்துக்க கொண்டதால் குறைந்த செலவில் நிறைவான சுற்றுலா அனுபவத்தை பெற முடிகிறது.

3 அடுத்த மிக முக்கிய காரணி ரம்மியமான தட்பவெப்ப நிலை. ஆண்டில் சுமார் 300  நாட்கள் சூரிய வெளிச்சம் கிடைக்கும் நாடு. பிரான்சில் இருந்து மேலே சென்றால் , ஜெர்மனி, சுவிட்சர் லாந்தில் அதிகமான குளிர் காலங்கள் வெயில் காலம் குறைவு. ஆதலால் மற்ற அய்ரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் திரளாக கோடை கால சுற்றுலாவிற்கு இங்கு வருகின்றனர்.

4  மிகவும் அழகிய குட்டி தீவுகளை தன்னகத்தே கொண் டுள்ளது. malorrkka menorkka ibiza canary தீவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

5. மிக அதிகமான நீலக் கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளை கொண்ட ( Blue Flag Beaches  ) நாடு ஸ்பெயின். உலக அளவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடம். மொத்த கடற்கரைகளின் எண்ணிக்கை 584.

Foundation for Envoirmental Education, Denmark

நீலக்கொடி அங்கீகாரம் பெற கடுமையான மற்றும் தொடர்ந்து புதுப்பிக்க படும் விதிகளை பின்பற்ற வேண்டும். அதாவது, சுற்றுச்சூழலை பேணுவது, பயணிகளின் பாதுகாப்பு எளிதில் சுற்றுலா தளங்களை அடையும் வசதி, மேற்பார்வை தகவல் அலுவலகம் சுகாதார அமைப்பு அவசர கால உதவிகள் போன்றவற்றை மறுமதிப்பீடு செய்து கொண்டு இருக்க வேண்டும்.

மத்திய கடலை ஒட்டியுள்ள கடற்கரைகள், வெண்மையான மண், மிக தெளிவான சுகாதாரமான நீர் என உள்ளடக்கியவை. அதே போல் வடக்கு அட்லாண்டிக் கடலை ஒட்டியுள்ள கடற்கரைகள் தங்க நிற மணல் அமைப்பை கொண்டவை.

கடந்த 2019 ஆண்டு மட்டும் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சுமார் 84 லட்சம் பேர்.  அதில் முதல் இடம் இங்கிலாந்து, இரண்டாவது ஜெர்மனி மூன்றாவதாக பிரான்ஸ். இதன் மூலம் கிடைக்கப் பெற்ற வருமான சுமார் 178 பில்லியன் யூரோக்கள்.

பலதரப்பட்ட கலாச்சாரங்கள், ரோமானிய, கிரேக்க ஆட்சியின் வரலாற்று பொக்கிஷங்கள், சுவையான உணவு வகைகள் மற்றும் விசேடமான பண்டிகைகள் போன்ற காரணிகளாலும் பல்வேறு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது.

நார்வே சேசாத்ரி தனசேகரன்

நார்வே நாட்டில் வசிக்கும் சேசாத்ரி தனசேகரன் கணிப்பொறியியலில் இளங்கலை பட்டம் அண்ணா பல்கலைக் கழகத்திலும், முன்கணிப்பு பகுப்பாய்வில் (Aredictive Analytics) முதுநிலை பட்டம் பெற்ற வெகு சிலரில் ஒருவர்.    செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி யாளர். நான்காம் தலைமுறை திராவிட பாரம்பரியத்தை சார்ந்தவர். நீதிக்கட்சியின் துவக்கக் காலத்தில் இருந்து பங்காற்றிய குடும்பத்தை சார்ந்தவர்.

 தற்போது நார்வேயில் உள்ள ட்ரம்சோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக பணிபுரிகிறார். பகுத்தறிவு, சமூகநீதி கருத்துகளை தரவுகளுடன் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியை சமூக வலைதளங்கள் மூலமாக செய்து வருகிறார்.

இவர் தமிழகத் தேர்தலில் வெளிநாட்டினர் பங்கு எனும் தலைப்பில் பேசும் போது, ஆசிரியர் அவர்களுக்கும் திராவிட நண்பர்கள் அனை வருக்கும் வணக்கம். நீதி கட்சியின் வழி வந்த ஆற்காடு சகோதரர்களின் நான்காம் தலைமுறை இளைஞன் நான்.

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “தமிழகத் தேர்தலில் வெளிநாட்டினரின் பங்கு “. தலைப்பு சற்றே வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இந்த தேர்தலில் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பரப்புரை செய்யும் தம்பிகளுக்கு பதில் கூறவும் , அவர் களுக்கு உண்மை நிலையை புரிய வைக்கவும் பலர் இணையத்தில் உழைத்து கொண்டு இருக்கின்றனர். அதில் வெளிநாட்டினர் பங்கு இன்றியமையாதது.

சமீபத்தில் நெதர்லாந்து என்னும் சிறிய நாட்டை பாருங்கள். வெறும் மாட்டை மட்டுமே வைத்து கொண்டு எவ்வாறு முன்னேறி இருக் கிறார்கள். அங்கே  25% வரி விதித்தாலும், கல்வி மருத்துவம் இலவசமாக கிடைக்கிறது, இங்கே அப்படி இருக்கிறதா என பொய் பிரச்சாரம் செய்தார்கள். உண்மை நிலை என்னவென்றால் நெதர்லாந்து நாட்டில் பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன. இன்று உலகம் முழுதும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் அங்கே தான் இருக்கின்றன.

மேலும் அங்கே வரி விகிதம் உங்களின் வருவாய்க்கு ஏற்ப 11%, 25%, 34%, 50% என வேறுபடுகிறது.  எவ்வளவு அழகாக கால் உண்மை, முக்கால் பொய் கலந்து நமக்கு உரைத்து உள்ளனர். இது போன்ற  Fact - checking மற்றும் பொய் செய்திகள் பரவுவதை உடைக்க வெளிநாடு வாழ் தமிழர்களின் தேவையும் , இருப்பும் அத்தியா வசியம்.  என்னுடைய பேராசிரியருடன் ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும்போது கூறினார் ,” எங்கள் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவு தருகிறோம் “ என்றார்.  நான் நம்முடைய பிட்டி தியாகராயரின் வரலாறை சொல்லி இந்த திட்டத்தை 1920இல் இருந்து தமிழகம் பின்பற்றுகிறது என கூற அவர் ஆச்சரியம் அடைந்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி தொலைநோக்கு சிந்தனை உடன் சிந்தித்து செயலாற்றியவர்கள் தான் நீதி கட்சி வழி வந்த திராவிடர் கழகம். இன்றைய தலைமுறைக்கு இதை எடுத்து செல்ல நாம் கடந்த 100 ஆண்டுகளின் சாதனையை தொகுத்து ஒரு ஓபன் சோர்ஸ் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என்று அய்யாவிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

அமெரிக்கா ரோகிணி

அமெரிக்காவில் வசிக் கும் ரோகிணி,  தமிழகத் திலும், சவுதியில் பல் மருத் துவராக பணிபுரிந்தவர்,  2012 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வில் வசிக்கும் இவர்- அமெ ரிக்காவில் உள்ள   மாகாணத் தின்    Certified Family Partner (CFP) Special Education-Domestic Violence Victims Advocacy,  NRI Crisis Intervention போன்ற சமூகபணிகளில்  அங்கு உள்ள  குழுக் களுடன் இணைந்து  செயல் பட்டு வருகிறார்.

திராவிட இயக்க கருத் துக்களைத்  தொடர்ச்சியாக எழுதி வருபவர்!

இவர்  அமெரிக்கா தொடக்கக் கல்வி சிறப்புக் குழந்தைகளைக் கண்ட றிதல் எனும் தலைப்பில் பேசும் பொழுது,     குழந்தை பிறந்து 0-3 வயது வரை மாநில அரசின் பொறுப்பு, சிறப்பு குழந்தை களை கண்டு அறிந்து தேவையான சிகிச்சை அல்லது தெரபி வழங்குவது. 3-21 வயது வரை மாவட்ட பள்ளி கல்வியின் பொறுப்பு. அந்த அந்த வார்டு குழந்தைகள் அந்த வார்டு பள்ளியில் படிப்பது..

வீட்டுக்கு அருகிலே கல்வியை கொண்டு செல் லும் முறை..அந்த பள்ளி செயல்பாடு பொறுத்து அந்த பகுதி வீடு மதிப்பு கூட கூடும் குறையும்.. கரோனா நேரத்தில் அனைத்து குழந்தைக்கு தேவையான உணவை வீட்டுக்கு அருகிலே தரு வது.. இலவசமாக.

இது அனைத்தையும் நமது பால் வாடி போன்ற அமைப்பின் மூலமும் ஆசிரிய பயிற்சி பெறும் மாணவர் வழியும் நிறை வேற்ற வேண்டும்.. மருத் துவ துறை போல 3 மாதம் ஆறு மாதம் அந்த அந்த பகுதி பள்ளி, பால்வாடியில் பணியாற்றி பட்டம் பெறுதல் இருவருக்கும் உதவும்

பள்ளி, கல்லூரி மாண வர்கள் அரசு மருத்துவ மனை,  அரசு பள்ளிகளில் தன்னார்வலராக பணியாற்றி கம்யூனிட்டி நேரம் பெறுவது பாட திட்டத்தில் கொண்டு வர வேண்டும்  எனக் கேட்டுக் கொண்டார்.

ஓமன் செந்தில்பாலன்

ஓமன் நாட்டில் வசிக்கும் செந்தில் பாலன், மதுரை மருத்துவக் கல்லூரியில் இள நிலையும், சென்னை மருத் துவக் கல்லூரியில் முட நீக்கியல் முதுநிலை பட்டயக் கல்வியும் பயின்றவர். தற் போது ஓமன் நாட்டில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

 தொடர்ந்து மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவரது கட்டுரைகள் தமிழின் முன்னணி பத்திரிகைகளில் வெளியாகிறது. கரோனா பெருந்தொற்றின் போது இவர் எழுதிய பல கட்டுரை களில் சமூக வலை தளங் களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

 அமேசான் கிண்டில் நடத்திய பென் டு பப்ளிஷ் போட்டியில் வெற்றி பெற்று, சிறந்த புனைவாசிரிய ராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இவர் எழுதிய துப்பறிவாளர் கார்த்திக் ஆல்டோ தொடர் நாவல்களுக்கென தமிழ் புனைவுலகில் தனி வாசகர் பரப்பு உள்ளது.

பகுத்தறிவு, சமூகநீதிக் கருத்துகளை தன் கதை களிலும், சமூக வலைதளங் களிலும் தொடர்ந்து பேசி வரும் இவர், பெரியாரை தனது வழிகாட்டியாக ஏற்றுள்ளார்.

இவர் “கிண்டில் அறி முகம் நமது பங்களிப்புகள்” எனும் தலைப்பில் பேசும் போது, இந்த இனிமையான மாலைப் பொழுதில் எங்களுடன் இணைந்துள்ள மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கும், இந்த அருமையான நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்துள்ள ஒருங்கிணைப் பாளர்களுக்கும், பங்கேற்றுள்ள நண்பர்களுக்கும் மாலை வணக்கம். பேச்சின் மூலமே வளர்ந்த இயக்கம், எழுத்தின் மூலமே வளர்ந்த இயக்கம் அப்படின்னு சொல்றோம்.

ஆதி மனிதனின் முதலில் குகையின் சுவர்களில் சித்திர எழுத்துகளால் எழுதினான். பின்னர் கல்வெட்டுகள், பனை ஓலைகளில் எழுதி னான். காகிதமும் அச்சும் கண்டுபிடிக்கப்பட்ட பின் அச்சடிக்கப்பட்ட காகிதப் புத்தகங்கள் வந்தன. இதன் அடுத்தகட்டமாக இப்போது மின் புத்தகங்கள், மென் புத்தகங்கள்.

ஓலைச்சுவடியில் படித்தவர்களுக்கு எப்படி காகிதப் புத்தகம் வித்தியாசமாக இருந்ததோ அதேபோல தற்போது கிண்டில் உள்ளிட்ட மென் புத்தகங்கள் வித்தியாசமாக உள்ளன.

அரசர்கள் மட்டும் எழுதக்கூடிய கல்வெட்டு களில் இருந்து அரசவைப் புலவர்கள் எழுதக்கூடிய ஓலைச்சுவடி வந்தது. அதன் பின் பதிப்பகம் இருந்தால் அச்சுப்புத்தகம் பதிப்பிக்கலாம் எனும் நிலை. இன்று செல்பேசி இருந்தாலே போதும். உங்கள் புத்தகத்தை மென் புத்தகமாக மாற்றி எந்த வித முதலீடும் இன்றி வெளியிடலாம். உலகம் முழுக்க இருக்கும் அனைவரும் அதை வெளியிட்ட அடுத்த நொடியே யார் வேண்டுமானாலும் தரவிறக்கி படிக்கலாம்.

இப்படி எழுதுவதும் பதிப்பிப்பதும் எளிதான தால் நிறைய பேர் எழுத வருவாங்க. நல்ல கருத்துகள் நல்ல புத்தகங்கள் அந்த இடத்தை நிரப்பாவிட்டால் மூடநம்பிக்கை பிற்போக்கு கருத்துகள் உடைய புத்தகங்கள் வரும். இதை நாம் சமூகவலைதளங்களிலும் யூட்யூப் உள்ளிட்ட வற்றிலும் இதை நாம் கண்கூடாகக் கான்கிறோம்.

இதனால் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் கிண்டிலில் பதிப்பிப்பது மிகவும் அவசியமாகிறது.  சமீபத்தில் ஏற்பட்ட கிண்டில் எழுச்சி- திராவிட இயக்கத்தின் இதுவரை 90 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திராவிடச் சிந்தனை பதிப்பகங்கள் அதிகம் இல்லாத இந்தச் சூழலில் நம் போன்றோருக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பு. எந்த சமரசமும் இன்றி நாம் நினைத்த முற்போக்கு கருத்துகளை புத்தகத்தில் கொண்டுவர முடியும். முடிகிறது. இங்குள்ள பல தோழர்கள் அப்படி எழுதியுள்ளனர்

எப்படி மின்விளக்கு எனும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான பேய்களை விரட்டியதோ அப்படி ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகளை விரட்டி பகுத்தறிவை வளர்க்கும். அந்த விதமாக அறிவியலின் அடுத்த கண்டுபிடிப்பான கிண்டில் மூலம் மனித குல வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சமூக வலைதளங்களில் எழுதுவது கால ஓட்டத்தில் காணாமல் போகலாம். அதேநேரம் கிண்டில் போன்று பதிப்பிக்கப்படும் போது அவை காலம் கடந்து நிற்கின்றன. உதாரணமாக 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. மணியம்மை சிறப்பிதழ் மூலம் பலரின் அவதூறை முறியடிக்க முடிந்தது.

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் புதிய நூல்களை இயற்று வோம். பகுத்தறிவுக் கருத்துகளை கொண்டு செல்வோம்.

அதேமாதிரி தோழர்கள் கிண்டில் பயன்படுத்த வேண்டும். பெரியார் புதிய தொழில்நுட்பங்களை மிகவும் விரும்புவார் என கேள்விப்பட்டுள்ளேன். அதைப்போல நம் தோழர்களும் படிப்பதற்கு எளிதான கிண்டிலைப் பயன் படுத்த வேண்டும். மொபைல் செயலியிலும் படிக்கலாம். இதன் மூலம் எழுதுவோருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும். அதேபோல பரிசுகளாக கிண்டில் புத்தகங்களையும் பரிசளிக்கலாம்.

இது தொடர்பாக நிறைய பயிற்சிகளையும், கையேடுகளையும் திராவிட எழுத்தாளர் குழுமம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தியுள்ளோம். இனிமேலும் செய்வோம்.  நமது தோழர் களுக்கும் பதிப்பிக்க உதவிகள் தேவைப்பட்டால் பயிற்சிப் பட்டறைகளை நடத்தத் தயாராக உள்ளோம் எனக் கூறினார்.

பிரிட்டன் சுதாகர் பிச்சைமுத்து

6) பிரிட்டனில் வசிக்கும் சுதாகர் பிச்சைமுத்து  இயற்பியல் துறையில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். தென் கொரியா, ஜப்பான், வடக்கு அயர்லாந்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் முது முனைவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர்.

ஜப்பான் நாட்டின்  ஆய்வு விருதையும், அய்ரோப்பிய ஒன்றியம் மற்றும் வேல்சு அரசின் கூட்டு விருதான “சர் கம்ரே ரைசிங் ஸ்டார் ( -   )” விருதையும் வென்றவர்.

தற்போது பிரிட்டனில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில்   நானோ டெக்னாலஜி குறித்த ஆய்வுக் குழுவின் தலைவராகவும், மூத்த ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றுகிறார். ஸ்காட்லாந்தில் உள்ள கெரியட் வாட்  பல்கலையில் இணைப் பேராசிரியராக விரைவில் புதிய பணியை மேற்கொள்ள உள்ளார்.

இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பன்னாட்டு ஆய்விதழில் வெளியிட்டுள்ளார். தமிழில் அறிவியல், உயர்கல்வி ஆராய்ச்சி,  பயணக் கட்டுரைகள் மற்றும் திராவிட ஆட்சிகளின் நன்மைகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுதி வருபவர். சமீபத்தில் இவர் எழுதிய கிண்டில் நூலான “அய்க்கிய வளநாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் திமுகவின் தேர்தல் அறிக்கை 2021” பலரது கவனத்தைப் பெற்றது. இவர் பிரித்தானியாவில் உயர்கல்விக் கட்டமைப்பில்  சமூக நீதி எனும் தலைப்பில் பேசும்போது,

உலகின் வளர்ந்த முன்னோடி நாடுகளில் ஒன்று பிரிட்டன் எனப்படும் அய்க்கிய ராஜ்ஜியம். ஏறத்தாழ 130 பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட 453 உயர் கல்வி நிறுவனங்கள் (கல்லூரிகள், உறுப்பு நிறுவன தகுதி பெற்றவை). பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 57,000 மாணவர்கள் உயர்கல்வி நிறுவ னங்களில்  முதலாம் ஆண்டு பட்டப் படிப்பிற்கு சேர்கிறார்கள். பல லட்சம் மாணவர்கள் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணமே பிரிட்டனின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பவை. இத்தகைய உயர்கல்வி நிறுவன கட்டமைப்பில் பெண்கள், கறுப்பின மற்றும் சிறுபான்மை இனக்குழுக்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவம், மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகைகள் இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு உரிமை போல் ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று முனைவர் சுதாகர் பிச்சைமுத்து ஒப்பிட்டு பேசினார்.

தமிழ்நாட்டை ஒப்பிடும் போது பிரிட்டனில் பேராசிரியர் பணியிடங்களில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பெண்கள் பணி வாய்ப்பினை பெறுகின்றனர். இந்த இடத்தில் திராவிட அரசுகள் முன்னெடுத்த பெண் கல்வி, உயர் கல்வி நிறுவனங்களில் பெண் வேலை வாய்ப்பு குறித்து பிரிட்டன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் ஸ்காட்லாந்து நாடு தனது நிலப்பரப்பில் வசிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை இலவசமாக்கி இருக்கிறது.  அதே நேரம் உலக தர வரிசைப் பட்டியலில் ஸ்காட்லாந்து பல்கலைக் கழகங்கள் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. மேலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான தேவையான கல்வி கட்டண சலுகைகளையும் பிரிட்டன் பல்கலைக் கழகங்கள் தருகிறது. இவை யாவும் கல்வியில் இட ஒதுக்கீட்டை போலவே சமூகப் படி நிலைகளில் சமூக மற்றும் பொருளாதாரப் படி நிலையில் பின் தங்கி இருப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு திட்டங்கள் தருவது நீடித்த, நிலையான சமூக வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகும். பிரிட்டனை ஒப்பிடும் போது உயர்கல்விக்கான வாய்ப்புகள் பெண்கள் மற்றும் சமூக, கல்வி நிலையில் பின் தங்கி இருப்பவர்களுக்கு அரசே நேரடியாக பல வாய்ப்புகள் தருவதை பாராட்ட வேண்டும். அதே நேரம் பிரிட்டன் எவ்வாறு பெண்களை மய்யப்படுத்தி செயலாற்றுகிறது என்பதையும் நாம் கற்க வேண்டும்.

 இட ஒதுக்கீடு சார்ந்த சமூக நீதி உரிமைகளை தவறு என நச்சுப் பரப்புரைகள் செய்பவர்களுக்கு உலக நாடுகள் எவ்வாறு அந்தந்த நாடுகளில் இதே போன்ற திட்டங்கள் உள்ளது என ஆவணப்படுத்த வேண்டும், மேலும் திராவிட நெறி கொள்கைகளை மேலும் வளர்க்க ஒருங்கிணைந்த அறிஞர் குழு ஒன்றும் அமைக்கவும் வேண்டும்.

மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்' தேர்வு கூடாது


சென்னை, மே 24 மருத் துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கூடாது, பழைய நடைமுறைப் படி மாணவர் சேர்க் கையை நடத்த அனு மதிக்க வேண்டும் என்று மத்திய அமைச் சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத் தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி வலியுறுத்தினார்.

ஜே.இ.இ. உள்பட மத்திய அரசு சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கரோனா நோய்த்தொற்று காரணமாக நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கரோனா நோய்த் தொற்று நிலையை கேட்பதற்காகவும், நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனையை கேட்பதற்காகாவும், மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று (23.5.2021) நடத்தியது.

காணொலி காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார். இதில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய கல்வி வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்வித்துறை அமைச்சர்களும், செயலாளர் களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத் தில் மத்திய அமைச்சர்கள், நோய்த் தொற்றுக்கு மத்தியில் மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி னார்கள்.அப்போது தமிழக அரசு தரப்பில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி சில கருத்து களை முன்வைத்தார். குறிப்பாக, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வை நடத்தக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வுக்கு பதிலாக, முன்பு மாநில அரசு பின்பற்றி வந்த நடைமுறையின்படியே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்திய கருத்துகளையும் முன்வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேட்டி

இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கெ னவே ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல், விவசாய படிப்புகளில் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், 'நீட்' தேர்வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏற்கெனவே நாங்கள் 'நீட்' தேர்வுக்கு முன்பு பின்பற்றிய நடைமுறையின்படி, அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறிய கோரிக்கையை வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்கள், பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதே? என்று கேள்வியெ ழுப்பினர்.

அதற்கு அவர், அவர்கள் அப்படி பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்தினால் எதிர்ப் போம் என்று பதில் அளித்தார்.

நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு


 தமிழர் தலைவர் அறிக்கை

நாளை நடைபெறவிருக்கும் நாடு தழுவிய விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

முறையற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட,  விவசாயி களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கறுப்புச் சட்டங்களான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெறும்வரை போராடுவோம் என்ற உணர்வோடு, கடந்த 6 மாதங்களுக்கு மேல் தலைநகர் டில்லியின் எல்லையில் கொளுத்தும் வெயில், வாட்டும் குளிர், கொட்டும்பனி, கடும் மழை என்று பாராமல் கொள்கை உறுதியோடு போராடும் விவசாயப் பெருங்குடி மக்கள் வரலாறு காணாத வகையில் நடத்தும் அறப்போரையும், அவர்களது அந்த நியாயமான மக்களாட்சி உரிமையையும் ஆதரிக்கும் வகையில் நாளை (26.5.2021) நடைபெற விருக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்குத் திராவிடர் கழகம் அதன் ஆதரவினை நல்குகிறது.

விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்போம்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை      

25.5.2021         

செவ்வாய், 18 மே, 2021

சமூக விஞ்ஞானி பெர்ட்ரண்ட் ரசலின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை - வாழ்த்து!


இங்கிலாந்து நாடு தந்த சிறந்த பகுத்தறிவுவாதி பெர்ட் ரண்ட் ரசல் அவர்கள் சிறந்த தத்துவஞானி - போரற்ற - புதிய உலகை உருவாக்க இறுதி மூச்சு உள்ளவரை உழைத்த ஒரு சிறந்த சிந்தனையாளர்.

‘‘திருமண முறையும், ஒழுக்க நியதிகளும்'' (Marriage and  Morals)என்ற அவரது நூலை அமெரிக்காவில் தடை செய்து, பிறகு தடை நீக்கினார்கள்.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்று தந்தை பெரியார் எழுதிய நூலின் பல கருத்துகளும் - பெர்ட்ரண்ட் ரசலின் அந்நூலில் காணும் எழுத்துக்களும் ஒரு மொழி பெயர்ப்பு போல காணப்படும் அதிசயத்தை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்!

அவரது பகுத்தறிவு சிந்தனைகள் உலக

மயமாகட்டும்!

  கி.வீரமணி

தலைவர்,

 திராவிடர் கழகம்

சென்னை    

18.5.2021             

சமூகநீதி எதிர்கொள்ளும் பெரும் அபாயங்கள்


எஸ்.வி.ராஜதுரை

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. இந்தியாவின் ஜாதிப் படிநிலையை வலுப்படுத்தி, அதன் உச்சத்தில் எப்போதும்போல பார்ப்பனர்கள் இருக்கிற இந்து இராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டத்தை 2014இல் ஆட்சிக்கு வந்த மோடியையும், அவரது அரசாங் கத்தையும் கொண்டு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதற்கு உறுதுணையாக அண்மைக்காலங் களில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளும் அமைந்துள்ளன.

மாநில உரிமைகளைப் பறித்த மோடி அரசு

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு மோடி அரசாங்கம் 2018இல் கொண்டுவந்த திருத்தம் மூலமாக இரண்டு பிரிவுகளைச் சேர்த்தது. பிரிவு 338பி, 1993ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் ‘தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்’துக்கு அரசமைப்புச் சட்டத் தகுதியை வழங்குகிறது. பிரிவு 342ஏ, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 'சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதை அறிவிப்பு செய்யும் அதி காரத்தை குடியரசுத் தலைவருக்கும், இந்தப் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலை மாற்றி அமைக் கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் அளிக்கிறது. இந்த அதிகாரத்தை வலுப்படுத்தும் விதமாக அரச மைப்புச் சட்டப்பிரிவு 366-லும் மாற்றங்களைச் செய் துள்ளது. அதாவது ‘சமூக, கல்விரீதியாகப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் யார்’ என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசாங்கங்களிடமிருந்தும், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் பறித்துவிட்டது.

அரசமைப்புச் சட்டத்தை மீறும் திருத்தங்களை உச்சநீதிமன்றம் பரிசீலிக்காதது ஏன்?

மோடி அரசாங்கம் அடுத்ததாக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கான 103ஆம் திருத்தத்தை நிறைவேற்றியது. இது ‘பொருளாதார ரீதியாகப் பிற் படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு’ 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வழிவகுத்தது.

1990களில் மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான இந்திரா சஹானி வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் (Constitutional Bench) இட ஒதுக்கீடு 50 விழுக் காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. எனினும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாநில அரசாங்கங்கள் இந்த வரம்பை மீறலாம் என்றும் கூறியது. அரசமைப்புச் சட்டப்படி தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தவிர, பிற இட ஒதுக்கீடு என்பது 'சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானதே. மேற்சொன்ன மூன்று பிரிவினருக்குமாகச் சேர்த்து 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது என்று உச்சவரம்பு விதித்த வரம்பில் 10 விழுக்காட்டைப் பிடுங்கி ‘பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு’ வழங்குவது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று அதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இதுவரை பரிசீலிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இந்தத் திருத்தத்தின் கீழ் ஒன்றிய அரசாங்கப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் ‘பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு’ அரசாங்கப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ‘பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்ற பெயரில் பெரிதும் பார்ப்பனர்களையே அரசாங்கப் பணிகளில் அமர்த்துவதும், உயர் கல்வி நிறுவனங்களில் பார்ப்பன மாணவர்களுக்கு அவர்களுக்கு இடம் ஒதுக்குவதும்தான் இந்த 10 சதவிகித ஒதுக்கீடு. மிக அண்மையில் உச்ச நீதி மன்றமும்கூட சமூகநீதிக் கோட்பாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதில் ஒன்றிய அரசாங்கத்துக்குக் காப்பரண் செய்துள்ளது. மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மகாராஷ்டிர அரசாங்கம் பிறப்பித்த சட்டம், உச்ச நீதி மன்றம் முன்பு விதித்துள்ள உச்சவரம்பான 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்றும், எனவே அது செல்லாது என்றும், மண்டல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 50 விழுக்காட்டுக்கு மேற்பட்டு இட ஒதுக்கீடு அமையுமானால், அது தனி விதி விலக்குக்குரியது என்பதை - போதிய ஆதாரத்துடன் விளக்குவதாக இருந்தால் மட்டுமே - அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைக்கு உட்படும் வகையில் மகாராஷ்டிர அரசாங்கம், அது அமைத்த ஆணையத்தின் பரிந் துரையின் அடிப்படையில் பிறப்பித்த சட்டம் இருக்க வில்லை என்பதால் அது செல்லாது என்றும் அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்புக் கூறியுள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு போதுமான (Adequate) பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று கூறுகிறதேயன்றி விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தையல்ல என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?

சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்ப்பதற்கும், விலக்குவ தற்குமான இறுதி அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்றும், முதலில் வெளியிடப்பட்ட பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கோ, ஒரு குறிப்பிட்ட ஜாதி யினரை விலக்குவதற்கோ நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது.

'சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்குக் குடி யரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 338பி-இன் கீழ் அமைக்கப்படும் ‘தேசிய ஆணையம்’ வழிகாட்டும் என்றும், மாநில அரசாங்கம் இட ஒதுக்கீடு தொடர்பான தன் கொள்கைகளை வகுப் பதற்கு மேற்சொன்ன ஆணையத்தின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும் என்றும், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை அடையாளம் காண்பது தொடர்பாக மேற் சொன்ன ஆணையம் தயாரிக்கும் அறிக்கையை அரச மைப்புச் சட்டப் பிரிவு 338பி-இல் உள்ள விதிகளின்படி மாநில அரசாங்கம் கையாள வேண்டும் என்றும், ஆனால் இந்தப் பட்டியல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்றும் இத்தீர்ப்பு கூறியுள்ளது

அரசமைப்புச் சட்டப் பிரிவு 338பி-இன் கீழ் அமைக்கப்படும் ஆணையம் தனது பணிகளைத் துரிதமாகச் செய்து இந்திய ஒன்றியம், மாநில அரசாங் கங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு உதவ வேண்டும் என்றும், அதுவரை இப்போதுள்ள ஒன்றிய, மாநில அரசாங்கப் பட்டியல் களின்படியான இட ஒதுக்கீடு தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

சமூகநீதிக்குப் பேராபத்து

சமூக நீதிக்குப் பேராபத்து விளைவிக்கும் வகையில் இத்தீர்ப்பு, மோடி அரசாங்கம் நிறைவேற்றிய, அரசமைப்புச் சட்டத்துக்கான 102ஆம் அந்தத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி, 'சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்' பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளம் கண்டு அதற்கேற்றவாறு இட ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநில அரசாங்கங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது. மாநில அரசாங்கங்களும் ஒன்றிய அர சாங்கங்களும் ‘கூட்டுறவு உணர்வுடன் கூடிய கூட்டாட்சித் தத்துவத்தை’ கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளை (எந்தெந்த வகுப் பினருக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்பது போன்றவை) மேற்கொள்ளும் அதிகாரம் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படவில்லை என்று கூறுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் முழுவதையும் ஒன்றிய அரசாங்கம் எடுத்துக்கொண்ட பிறகு, அந்த அரசாங்கம் தரும் பட்டியலின்படியே மாநில அரசாங்கங்கள் இட ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளா என்பது விளங்கவில்லை.

 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பிளவு உண்டாகக் காரணமாகும் செயல்கள்!

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள மோடி அரசாங்கம் அந்த வகுப்பினரிடையே பிளவு ஏற்படுத்தும் வேலையை ஏற்கெனவே தொடங்கியிருந்தது. ஒன்றிய அரசாங்கப் பணியிடங்களுக்கும் ஒன்றிய அரசாங்க நிதியில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் அவர்களுக்குள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ”சமத்துவமான முறையில் பிரித்து வழங்குவதற்காக” ஒன்றிய அரசாங்கத்தால் 2017இல் நீதிபதி ரோஹிணி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், மத்திய அரசாங்கப் பட்டியலிலுள்ள 2633 ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ ஜாதியினரை நான்கு பிரிவினராகப் பிரிக்க வேண்டும் என்றும், 1,2,3,4ஆம் பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முறையே 2, 6, 9, 10 விழுக்காட்டைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளது. இப்படிப் பிரிப்பது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ‘ஆதிக்கம் செலுத்தும் ஜாதியினரே’ இட ஒதுக்கீட்டின் முழுப் பயன்களை அனுபவிக்க விடாமல் செய்வதற்குத்தான் என்று கூறுகிறது. இப்படி நான்கு உட்பிரிவுகளைச் செய் வதற்கு அது பயன்படுத்தியுள்ள அளவுகோல் ஒவ் வொரு ஜாதியும் இட ஒதுக்கீட்டினால் பெற்றுள்ள வேலைகளின் எண்ணிக்கையாகும். ஆனால், அந்த ஜாதியினரின் மொத்த எண்ணிக்கை அல்ல. எனவே ரோஹினி ஆணையம் நியாயமற்ற அடிப்படையிலேயே உட்பிரிவுகளை உருவாக்குகிறது. எடுத்துக் காட்டாக ‘அ’ ஜாதியைச் சேர்ந்தவர்களின் எண் ணிக்கை 10 லட்சம் என்றும், இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்கள் பெற்றுள்ள வேலைகளின் எண் ணிக்கை 10 என்றும், ‘ஆ’ ஜாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்றும் அவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுள்ள வேலையின் எண்ணிக்கை ஒன்று என்றும் வைத்துக் கொள்வோம். அப்படியானால், அவர்கள் தத்தம் ஜாதியினரின் எண்ணிக்கைக்கு ஏற்பவே இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். வேலையின் எண் ணிக்கை நிரந்தரமானது அல்ல; எனவே அதன் அடிப்படையில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது தர்க்கரீதியானது அல்ல.

ஒன்றிய அரசாங்கம்,அரசமைப்புப் பிரிவு 342-பி தரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவுக்கு ஆதர வளிக்காத ஜாதியினரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, அவர்களுக்குப் பதிலாக தனக்கு ஆதரவளிக்கக்கூடிய ‘ஆ’ ஜாதியினரை அந்தப் பட்டியலில் தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது இதுவரை ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னராக’ கருதப்படாத வேறு ஜாதியினரை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

ஜாதிவாரியான விவரங்களை மூடி மறைக்கும் மோடி அரசு

மேலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு ஜாதியின் எண்ணிக்கை எவ்வளவு என் பதை மோடி அரசாங்கம் இதுவரை வெளியிட மறுத்து வருகிறது. அந்த விவரங்களை வெளியிட்டால் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை மண்டல் குழு உத்தேசமாகக் கணக்கிட்டிருந்த 52 சதவிகிதத்தைத் தாண்டி 70 - 80 சதவிகிதத்துக்குப் பக்கம் வந்துவிடும் என்பதாலும், அந்த எண்ணிக் கைக்கு ஏற்ப தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடமிருந்து எழும் என்பதாலுமே 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமூக பொருளாதார ஜாதிவாரியான விவரங்களை மோடி அரசாங்கம் மூடி மறைக்கிறது.

ரோஹினி ஆணையத்தின் ஆலோசனைகள், அரசமைப்புச் சட்டத்தின் 102ஆம் திருத்தம் ஆகிய வற்றைப் பயன்படுத்தி, மோடி அரசாங்கம் ஒன்றிய அரசாங்கப் பட்டியலிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைப் பிளவுபடுத்தி, ஜாதிப் படிநிலையில் பார்ப்பனர்களுக்குள்ள மேலாண்மையை வலுப் படுத்தும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது வழிகாட்டல்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை கூறுவது போல "இந்த ஆபத்து - பேராபத்து மட்டுமல்லாது அரச மைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான 15(4) மற்றும் 16(4) உரிமைகளையே தகர்த்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிமுதல் செய்யும் அதிர்ச்சிக்குரியது ஆகும். இதுபற்றிசமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலைநாட்டி, அதனைப் பாதுகாக்க முன்வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.

தமிழ்நாட்டில் மலர்ந்துள்ள விடியல் ஆட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண - கரோனாவுக்கு முன்னுரிமை கொடுப் பதைப் போல, இதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப் பிடும் பணியைச் செய்திட வேண்டும். மேலும் திமுக - தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிடவும், மற்ற மாநில முதல்வர்களிடையே இதுபற்றிய ஆபத்தினை விளக்கி, மாநில உரிமைப் பாதுகாப்பினை ஏற்படுத்தவும் உடனடியாக ஏற் பாடுகள் செய்து, காணொலி மூலமாகவாவது அனைத்துக் கட்சி கூட்டத் தினையும் கூட்டி, ஒருமித்த தீர்மானத்தையும் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிட ஏற்பாடு செய்தல் வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சினையில் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ‘மாநில உரிமை - சமூகநீதியினைப் பாது காப்போம்‘ என்ற குரலை வலிமையாக எழுப்ப வேண்டும்” என்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட அமைச்சர் கோ.ரகுபதியுடனும், அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந் தரத்துடனும் ஆலோசனை நடத்தியதாகவும், இந்திரா சாஹானி வழக்கு தீர்ப்பு வந்த பிறகே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரம்பு 60 சதவிகிதத்துக்கு உயர்த்தப் பட்டதென்றும், அதற்கான சட்டத்தை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்ததன் மூலம் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புப் பெறப் பட்டுள்ளது என்றும் அவர்கள் முதலமைச்சரிடம் கூறியதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் சில கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன என்பதோடு, 102ஆம் திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் திராவிடர் கழகத் தலைவர் தன் அறிக்கையில் கூறியுள்ள நடவ டிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டியது அவசர, அவசியக் கடமையாகும். இன்னும் பல சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிவதும் முக்கியமானது.

நன்றி: மின்னம்பலம்

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

புதிய கல்விக் கொள்கை: அமைச்சர்களை அழைக்காமல் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்ததால் தமிழக அரசு நிராகரித்தது சரியான முடிவே!

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

புதிய கல்விக்  கொள்கை என்னும் குலக்கல்வியை என்றைக்கும் தமிழகம் ஏற்காது - அதனைக் கைவிடுக!

மத்திய கல்வி அமைச்சரின் புதிய கல்விக் கொள்கைபற்றிய ஆலோ சனைக் கூட்டத்தில் மாநில அமைச்சர்களை அழைக்காமல்அதிகாரிகளை அழைத்தது சரியானதல்லஅதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர் - அந்த வகையில்தமிழ்நாடு அரசு அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் நிராகரித்தது சரியானதேமத்திய பா..அரசு திணிக்க விரும்பும் புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2019 என்பது குலக் கல்வித் திட்டமே - இந்திசமஸ்கிருதத் திணிப்பே - கார்ப்பரேட்டுகளின்  நலனுக்கே என்பதால்தமிழ்நாட்டு மக்களும்தமிழ்நாடு அரசும் எந்த நிலையிலும் ஏற்கப் போவதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கல்வியில் சிறந்த தமிழ்நாடுஎன்ற பெருமையை குலைக்கும் வகையிலும்மீண்டும் புதுவகை மனுதர்மம் - குலதர்மம் கல்வித் துறையில் தனது கொடுங்கரங்களை நீட்டவுமான முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்னும் மத்திய கல்விக் கொள் கையாகும்.

இதற்குத் தமிழ்நாடு தொடக்கம் முதலே தனது எதிர்ப்பைப் பதிவு செய்தே வந் துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்தலைவர் உள்பட வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்

மக்களாட்சி என்பதன் தனித்துவம் மாநில உரிமைகளின் பாதுகாப்புமுன்னே வேகமாகச் செல்லும் மாநிலத்தை பல ஆண்டுகள் பின்னே இழுப்பது போன்ற வைதான் இப்புதிய கல்விக் கொள்கை.

மத்தியில் ஆட்சி செய்யும் பா... - அதன் அரசியல் வழிகாட்டியும்ஆணை யருமான ஆர்.எஸ்.எஸ்வகுத்துத் தந்த கல்வித் திட்டம்தான் இது என்பதைஆர்.எஸ்.எஸ்தலைவர் உள்பட வெளிப் படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்!

இதனை தமிழ்நாட்டில் பா..ஒன்றைத் தவிரமற்ற அத்துணைக் கட்சிகளும்பெரும்பாலான கூர்த்த மதி படைத்த கல்வி யாளர்களும் கடுமையாக எதிர்த்தே வந் துள்ளனர் - கடந்த ஓராண்டுக்கு மேலாக.

அரசமைப்புச் சட்டப்படி ‘கல்விஎன்பது மத்திய அரசின்கீழ் மட்டுமே உள்ள அதி காரம் அல்ல. (It is not in the Union List); ஒத்திசைவுப் பட்டியல் என்ற (Concurrent List) இல் உள்ள அதிகாரம் ஆனதால்மத்திய அரசுக்கு உள்ள உரிமை அளவு மாநிலங்களுக்கும் உண்டுமேலும் இந்தியா ஒரு கூட்டாட்சி (Union of States) என்ப தாலும்பல கலாச்சாரங்கள்பல மொழிகள் என்ற பன்முகத் தன்மை கொண்ட பரந்த நாட்டில்அவரவர் அவர்தம் மொழிபண்பாடுகலைநாகரிகம் இவற்றைப் பாதுகாக்க - பரப்ப - இளம்தலைமுறைகளை ஆயத்தப்படுத்த - அந்த மக்களின் உரிமை களைப் பாதுகாக்க கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும்!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் விளக்கம்!

இதனை ஏதோ ஒற்றை ஆட்சியாகவே கருதிக்கொண்டு,  வகுக்கப்பட்டுத் திணிக் கப்படும் இக்கல்வித் திட்டத்திற்கு தமிழ் நாட்டின் எதிர்ப்பு ஏன் என்பதை நேற்று (17.5.2021) கூட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் தெளிவாக விளக்கி யுள்ளார்.

அதற்குமுன் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு..பொன்முடி அவர்களும்புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங் களை எங்களால் ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பொதுநலவாதிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்

1. குலக்கல்வித் திட்டத்தை மறைமுக மாகப் புகுத்துதல்

2. கடந்த 54 ஆண்டுகளாக செயல் பாட்டில் இருந்துவரும் அறிஞர் அண்ணா பிரகடனப்படுத்திய இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைத்துமும்மொழிக் கொள்கைத் திணிப்பு.

3. 22 மொழிகளை அரசமைப்புச் சட்டம் ஏற்றிருக்கும் நிலையில்மக்களிடம் ஒரு சதவிகிதம்கூட புழக்கத்தில் இல்லாத சமஸ் கிருதத்திற்கே முக்கியத்துவம்திணிப்பு.

4. கல்வியை அனைவருக்கும் கற்றுத் தருவதற்குப் பதிலாக, 5 ஆவது வகுப்பு, 8 ஆவது வகுப்பு நுழைவுத் தேர்வு - அதன் பின்னரும் கல்லூரிப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்ற வடிகட்டும் பன்னாடை முறை திணிப்பு.

5. இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை அறவே பறித்துஒப்புக்கு  ஏதோ கூறி சமூகநீதியைத் தகர்த்தல்.

6. இலவசக் கல்விஏழைஎளிய மற்றும் மக்களுக்கு இனி எட்டாக் கனி - கார்ப்ப ரேட்டுகளுக்குக் கதவு திறக்கும் கல்வி முறை என்று இத்திட்டம் தயாரிக்கப்பட் டிருப்பதால்அத்துணை பொதுநலவாதி களும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்நிலையில்தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துகடந்த 7 ஆம் தேதிமுதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.ஆட்சிப் பொறுப்பேற்றுஅமைச்சர்கள் பல துறை களுக்குப் பொறுப்பேற்றுகரோனா கொடுந் தொற்றிலும் முதல்வர் தொடங்கி அனை வரும் ‘பம்பரமாகசுழன்று செயல்பட்டு வருகின்றனர் - கடும் சோதனைகளுக் கிடையில்!

தமிழ்நாடு பங்கேற்காமல்நிராகரித்து தவிர்த்துள்ளது!

இந்நிலையில்மத்திய கல்வி அமைச்சர் புதிய கல்வித் திட்டம்பற்றி விவாதிக்கும் கூட்டத்தினை மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களை அழைத்து நடத்துவதும் தானே அரசமைப்புச் சட்டப்படியும்ஜன நாயக முறைப்படியும் சரியானது. (5 மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய அரசுகள் வந்துள்ள நிலையில்ஏதோ குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதுபோலவெறும் மாநிலபள்ளிக் கல்வித் துறை செயலாளர்களை மட்டுமே அழைத்து (அய்..எஸ்அதிகாரிகள்கூட்டம் அறிவித்தபோதுதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து விவாதிப்பதே சரி என்ற கோரிக்கையை சில நாள் களுக்குமுன் வைத்ததைமத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் கண்டுகொண்ட தாகக் காட்டிக் கொள்ளாமல்தானடித்த மூப்பாகவே அந்தக் கூட்டத்தை - தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்காமல் கூட்டம் நடத்தியதால்தமிழ்நாடு அக்கூட்டத்தில் பங்கேற்காமல்நிராகரித்து தவிர்த்துள்ளது!

இதுபற்றி  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்செய்தியாளர்களிடையே காரண காரியங்களையும் நன்கு விளக்கி யுள்ளார்!

கொள்கைபூர்வமாகவே

அறிவித்திருக்கிறார்கள்

தி.மு..வைப் பொறுத்தவரை - மத்திய அரசுடன் எப்படி உறவு (கூட்டாட்சி என்பதால்இருக்கும் என்பதை அறிஞர் அண்ணாகலைஞர் ஆட்சியில் விளக்க மாக - கொள்கைபூர்வமாகவே அறிவித் திருக்கிறார்கள்.

‘‘உறவுக்குக் கைகொடுப்போம் -

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!''

என்பதாகும்.

பிரச்சினைக்குரிய புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த நிலைப்பாட்டுடன் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கூட்டணிக்கு வாக்களித்துள்ள நிலையில்அந்த அரசின் நிலைப்பாட்டை (ஷிtணீஸீபீமத்திய கல்வித் துறை அமைச்சர் அறியசரியான வழி - தமிழ்நாட்டு கல்வித் துறை அமைச்சரை அழைத்து அறிவதுதானே நியாயம்முறையானது?

ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சி'

பா...வே ஒரு புதிய ‘சொற்றொடரை'  ‘சிஷீஷீஜீமீக்ஷீணீtவீஸ்மீ திமீபீமீக்ஷீணீறீவீsனீ' - ‘ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சிஎன்ற சொற்றொடரை கையாளுகின்றனரேஅதன்படி மாறுபட்ட கருத்து ஏன் - அதற்கான காரண காரியங்கள் என்னவென்று ஆராய வாய்ப்பு பெறஅமைச்சர்கள்தானே தெளிவுபடுத்த முடியும்?

அய்..எஸ்அதிகாரிகள் முழு சுதந்திரம் பெற்றவர்கள் அல்லகொள்கை வகுப்பாளர்கள் அல்ல.

எனவேதமிழகத்தின் கரோனாவோடு போராடும் நிலையில்இப்படி மாநில உரிமைகளையும் பாதுகாப்பதும்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தந்த ஆணையை (விணீஸீபீணீtமீசெயல்படுத்தும் வகையில்கடமையாற்றி வரும்போதுதமிழ்நாட்டு கல்விக் கண் குத்தப்படாமல் பாதுகாக்க எடுத்த எடுப்பிலேயே கவனமாக இருப்பது என்பது முக்கியம் என்பதை எடுத்துக்காட் டியுள்ள முதல்வர்அமைச்சர் பெருமக் களை நம் மக்கள் - கல்வியாளர்கள் பாராட்டுவர்!

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

மற்றொரு முக்கிய பிரச்சினை முதல்வர் அவர்களும்அரசும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களின் பதவிகளை ரத்து செய்துஅனைத்தும் ஒருங்கே ஆணையர் என்ற அய்..எஸ்அதிகாரியின் மூலம் என்று ஆக்குவது அதிகாரப் பரவலைத் தலைகீழாக்கிஒரே ஒருவரிடம் குவிப்பதுகல்வி வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்!

அய்..எஸ்அதிகாரிகள் ஒரே துறையில் இருப்பவர்கள் அல்லர் - மாற்றப்படுபவர்கள்.

கல்வித் துறையில் ஆழ்ந்த அறிவும்அனுபவமும் பெற்றவர்களாலேயே சாதனை செய்ய முடியும்கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் காமராசர் ஆட்சிக் காலத்தில் செய்த கல்விப் புரட்சிதான் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளம்எனவேஇந்தப் புதிய மாற்றத்தை ரத்து செய்தோமாற்றியோ பழையபடி இயக்குநர்கள்கல்வி அறிஞர் களால் நிர்வகிக்கப்படுவதே சிறந்த வளர்ச்சி யைப் பெருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.

இதே தத்துவம் பல ஆட்சித் துறை களிலும் பரவலானால் - ஆளுமை சிறந் தோங்கும் என்பது உறுதி!

மாண்பமை முதல்வர் இதுபற்றி காலந்தாழ்த்தாமல் விரைந்து மறு ஆய்வு செய்துஇயக்குநர்களை மீண்டும் கொண்டு வருவது அவசியம் ஆகும்.

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை      

18.5.2021