திருச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மார்ச், 2024

கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம்! வெற்றி நமதே!! (தகவல் தொழில் நுட்பக்குழுக் கூட்டம்)


விடுதலை நாளேடு

 

தகவல் தொழில் நுட்பக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!

திருச்சி, மார்ச் 3; கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம், வெற்றி நமதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுவின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நேற்று (2-3-2024) திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுக் கலந்துரையாடல் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! யாருமே எதிர்பார்க்காத வகையில் பெருந்திரளாக இங்கே கூடி இருக்கின்றீர்கள்! உங்களின் உற்சாக வருகை பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!

நம்மால் முடியும்!
சென்ற மாதம் 24-2-2024 அன்று சென்னை பெரியார் திடலில் மாநில இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதிதாக 110 பேருக்கு “ட்விட்டர்” கணக்கு தொடங்கப்பட்டு, சில பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அவ்வகையில் தோழர்கள் பதிவிட்டு, ஒவ்வொரு பதிவின் கீழும் “ஸிமீழீமீநீt ஙியிறி”, “மக்கள் விரோத பாஜக” என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டது!
சரியாக 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு “ட்விட்டர்” கணக்கை மேற்பார்வையிட்ட போது, கழகத் தோழர்கள் 110 பேரின் பதிவுகளை, 2800 பேர் பகிர்ந்திருந்தனர் (ஷிலீணீக்ஷீமீ). இந்தப் பதிவுகளுக்குச் சுமார் 50 ஆயிரம் பேர் விருப்பம் (லிவீளீமீs) தெரிவித் திருந்தனர். மிக முக்கியமாக, “ஸிமீழீமீநீt ஙியிறி”, “மக்கள் விரோத பாஜக” என்பது “ட்ரெண்டிங்” (ஜிக்ஷீமீஸீபீவீஸீரீ) என்கிற நிலையை அடைந்தது!

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த…
ஒவ்வொரு தேர்தலின் போது பாஜக பல முழக்கங் களை முன் வைக்கும். நல்ல காலம் பிறக்கிறது என்றும், வளர்ச்சி நோக்கி வருகிறோம் என்றும், வேலை வாய்ப்புகளை கோடிக்கணக்கில் உருவாக்கு வோம் என்றும் கூறுவார்கள். ஆனால் எதையுமே அவர்கள் செய்ததில்லை. மாறாக பொய்யான வாக்குறுதி களாகவே அவை இருக்கும்!
அதுவும் சமூக வலைத்தளங்கள் வளர்ந்த பின்னர், கண்மூடி கண் திறப்பதற்குள் பொய்ச் செய்திகளைப் பரப்பிவிடுகின்றனர். உண்மைச் செய்திகள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற் காகவே இந்தப் பொய்களைப் பரப்புகின்றனர்! போர் நடக்கும் போது, ஆயுதத் தாக்குதலை விட, உளவியல் தாக்குதல் அதிகம் முக்கியத்துவம் பெறும். அதே பாணியில் தான் பாஜகவும் செயல்படுகிறது! வதந்திகளைப் பரப்புவது, மிகையான செய்திகளை உருவாக்குவது, கலவரச் சூழலை ஏற்படுத்துவது என முற்றிலும் மனித விரோத செயலைச் செய்து வருகிறார்கள்.

“கவுண்டவுன்” தொடங்கும் நேரம்!
இங்கே அரங்கம் நிறைந்து தோழர்கள் இருக்கின் றீர்கள். இதில் கைப்பேசி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாம் ஆதாரப்பூர்வமான, உறுதி செய்யப்பட்ட தகவல்களையே பதிவு செய்ய வேண் டும். அதற்குரிய செய்திகளைத் தலைமை நிலையத் தில் இருந்து தயார் செய்து தருகிறோம். நீங்கள் அதை ‘விநியோகம்’ செய்தால் மட்டும் போதுமானது.
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக் கிறார்கள். அதனைத் தொடர்ந்து “கவுண்டவுன்” தொடங்கிவிடும். தேர்தல் முடியும் வரை, ஏனைய பணிகளைத் தவிர்த்துவிட்டு, அவரவர் வாய்ப்பிற்கு ஏற்ப உத்வேகமாகச் செயல்பட வேண்டும்! உயிர் அச்சம் இருந்த கரோனா காலத்தில் கூட, தொடர்ந்து காணொலி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர்கள் நாம்!

பக்குவமாகக் கையாள்வோம்!
பொதுவாகச் சமூக ஊடகங்களில் அனைத்துத் தோழர்களுமே சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். அதே நேரம் எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, அதைப் பரப்பிட வேண் டும். அதற்கான குழு ஒன்று தலைமைக் கழகத்தால் உரு வாக்கப்படும். அதில் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், வி.சி.வில்வம் ஆகியோர் செயல்படுவர். குழுவும் விரிவாக்கம் செய்யப்படும்.
அக்குழு சொல்லும் ஒருமித்த முறையைக் கையாளுங்கள்! எதிர்வரும் 100 நாள்களில் நம் செய்திகள், இலட்சக்கணக்கில் செல்ல வேண்டும். பேருந்துகளில், இரயில் பயணங்களில், நிகழ்ச்சிகளில், திருமண வீடு களில் என எங்கிருந்தாலும் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்!
நம்மிடம் அறிவியல் கருவிகள் இருக்கிறது, அறிவு, ஆற்றல் இருக்கிறது, நல்ல வாய்ப்பும் இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் ஊடகப் பணிகளில் திட்ட மிட்டு செய்திட வேண்டும்! சமூக ஊடகங்களில் பதி விடும் போது அல்லது பிறருக்குப் பதில் கூறும் போது கோபம், வேகம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை இருக்கக் கூடாது! பொய்யும், புரட்டும் கொண்டவர்களை நாம் பக்குவமாகக் கையாள வேண்டும். நாம் அளிக்கும் பதில்களால் மற்றவர்கள் நமது நியாயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்!

தனி மரம் தோப்பாகாது!
அந்தளவிற்குச் சிறப்பான தத்துவம் நம்மிடம் இருக்கிறது. உண்மையை மட்டுமே பேசக் கூடியவர்கள் நாம்! அதுவும் ஆதாரத்துடன் பேசுவோம்! சமூகத்தைக் காக்கும் பொறுப்பு மற்றவர்களை விட, நமக்குக் கூடுத லாக இருக்கிறது! நம் பணி என்பது நன்றி பாராத தொண்டு! நம் கொள்கைகள் எண்ணிக்கையைச் சார்ந் தது அல்ல; மாறாக எவ்வளவு ஆழமானது என்பதைப் பொறுத்தது!
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களின் உழைப்பை நாம் பயன்படுத்த வேண்டும்!
ஒரு கை ஓசை ஒலி தராது; தனி மரம் தோப்பாகாது! எனவே ஒருங்கிணைந்து செயல்படுவது மிக, மிக முக்கியமானது!

கற்கும்போது என் வயது 91 அல்ல, 19!
ஊடகங்களில் எளிதாகச் செயல்பட புதிய உத்திகளை நாம் கையாள இருக்கிறோம்! நானும் கூட‌ ஊடகங்களில் செயல்பட மேலும் சில செய்திகளைக் கற்க வேண்டும். எனினும் நான் விடமாட்டேன். அதுபோன்ற நிலைகளில் என் வயது 91 இல் இருந்து, 19 ஆக மாறிவிடும்.
காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது என்பார்கள். ஒருபோதும் காடு வா வா என்று சொல்லாது, வீடு போ போ என்றும் சொல்லாது. அதை நாம் கேட்க வும் கூடாது. எப்போதும் நாம் நம் பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் என் றென்றும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன். கற்றுக் கொண்டே இருக்கிறேன். பயிற்சி வகுப்பாக இருந்தால் கற்றுக் கொள்வதற்கு முதல் மாணவனாகப் பதிவு செய்திடுவேன்!

உலகம் ஊடகமயம்!
சமூக வலைதளங்களில் தான் இன்று உலகம் இயங்கி வருகிறது‌. தமிழ்நாட்டில் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், மாலை 4 மணிக்கு விடுதலை நாளிதழை இணையம் வழி படித்துவிடலாம். ‌புதிய சிந்தனைகளை யார் கொடுத்தாலும், ஏற்க வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் எனும்‌ நிலை மாறி, எப்பொருள் யார் யார் கை மூலம் வந்தாலும் பின்பற்ற வேண்டும்!

“சிக்கென” பிடியுங்கள்!
நல்ல மனிதர்களை எப்போதும் “சிக்கென” பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி காமராஜர் அவர்களைச் சிக்கென பிடித்துக் கொண்டதால் தான் தமிழ்நாட்டிற்குக் கல்வி வளர்ச்சி வந்தது! அதேபோல எம்ஜிஆர் அவர் களைப் பிடித்துக் கொண்டதால் தான், வருமான வரம்பு நீக்கம் செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு அளவும் அதிகரிக் கப்பட்டது. அதேபோல ஜெயலலிதா அவர்கள் மூலம், 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குச் சட்டப் பாதுகாப்பு பெறப்பட்டது. இன்றைக்குப் பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி எடுக்கும் சாதனையைச் செய்து மேலும், மேலும் சிறப்பான ஆட்சி செய்து வரும் நமது ஒப்பற்ற முதல்வர், சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பெற்றுள்ளோம்!
2024 தேர்தல் வெற்றி என்பது நம் கொள்கைக்குக் கிடைக்கும் வெற்றியாகக் கருதப்படும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், டாக்டர் கலைஞர் ஆகியோர் போராடித் தந்த உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்! எனவே அதிகக் கவனம் செலுத்தி, மனதை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வேண்டும்!

வேண்டும் திராவிட இந்தியா!
புதிய தமிழ்நாடு மட்டுமின்றி, திராவிட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியா முழுவதுமே திராவிடர்கள் தான் வாழ்ந்தார்கள் என அண்ணல் அம்பேத்கர் ஆதாரத்துடன் எழுதியுள்ளார். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமது அடுத்த தலைமுறை வெகுவாகப் பாதிக்கப்படும். சமூகமும் அமைதியை இழக்கும். எனவே தகவல் தொழில் நுட்பக் குழுவின் கூட்டத்தின் வாயிலாக உறுதிமொழி ஒன்றை ஏற்போம்!
உண்மைகளைத் தொடர்ந்து பரப்பிடுவோம்! எதிரி களின் முகத்திரையைக் கிழித்திடுவோம்! பொய்யை அகற்றிடுவோம்! மெய்யை நிலை நிறுத்துவோம்! திராவி டம் வெல்லும்; வரலாறு சொல்லும்! கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாகக் கொண்டு செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்!! எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்கள்.

பயிற்சி வகுப்புகள்!
முன்னதாகத் தொடங்கிய நிகழ்வில், கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் வாட்சப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களில் எளிமையாகப் பணியாற்றுவது குறித்தும், புதிய நுட்பங்கள் குறித்தும் “புரஜெக்டர்” மூலம் திரையிட்டுக் காட்டப்பட்டது. சுயபடிவம் கூட, னிஸி சிளிஞிணி மூலமே பூர்த்தி செய்யப்பட்டது.
வயது 15 தொடங்கி, 80 வரை அனைவரும் ஆர்வ முடன் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோழர்கள் வருகை தந்தனர்! மொத்தம் 350 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது!

பங்கேற்றோர்!
செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், புதுச் சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலை மைக் கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், மதுரை வே.செல்வம், க.சிந்தனைச் செல்வன், ஆத்தூர் சு.சுரேசு, குடந்தை க.குருசாமி, திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி க.நா.பாலு, இலால்குடி ப.ஆல்பர்ட், காவேரிபட்டிணம் திராவிடமணி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களின் தோழர்கள் அனைவரும் பங்கேன்றனர்.
நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்!

 


 ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்!

சனி, 24 டிசம்பர், 2022

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (24.12.2022)

பகுத்தறிவுப் பகலவனின் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

புதன், 26 பிப்ரவரி, 2020

சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம்

அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது; அதனை அழிப்பதுதான்

பா.ஜ.க.வின் பணி!

* உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூகநீதி என்ற சொல் இல்லை

சமூகநீதி வெல்ல போராடுவோம்!

திருச்சி, பிப்.22 அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங் களை வலியுறுத்துகிறது. அதனை அழிப்பதுதான் பாரதீய ஜனதாவின் பணி. உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூக நீதி என்ற சொல் இல்லை. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை சிதைக்கப்படுகிறது என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (21.2.2020) திருச்சி உழவர் சந்தையில் பொன் மாலைப் பொழுதில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. மைதானம் ஒளி வெள்ளத்தில் திளைத்தது. கழகத் தோழர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் இருக்கையை நிறைத்தனர். மாநாடு தொடங்குவதற்கு முன் எழுச்சி யூட்டும் பறை இசை எங்கும் பரவியது. லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வால்டேர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகக் கொடியேற்றிய அம்பிகா கணேசன் சுருக்கமான உரையாற்ற, மேடையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

தமிழர் தலைவர் தம் உரையில் செங்கல்பட்டில் நடை பெற்ற முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுபடுத்தினார். மண விழாவின் சிறப்பை சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

தமிழர் தலைவர் தம் நிறைவுரையில்,

மார்ச் 23ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தார். இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போராட்டம் என்றார். அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது. அதனை அழிப்பதுதான் பாரதீய ஜனதாவின் பணி. உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூக நீதி என்ற சொல் இல்லை.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை சிதைக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் எல்லாமே விற்கப்படுகின்றன.

கூட்டாட்சிக்கு விடை தரப்படுகிறது. ஒரே ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, போராட்ட பூமியாக மாறி இருக்கிறது என்பதை ‘ஆனந்த விகடன்' கட்டுரை மூலம் விளக்கினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பவர் களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்கும் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

நாங்கள் அறவழி நடப்பவர்கள் - வன்முறைக்கு எதிரான வர்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.

பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் இந்திய அரசமைப் புக் கல்வெட்டைக் கட்டி அணைத்து மரியாதை செலுத் தினார். ஆனால் வள்ளுவர், ‘‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்'' என்றார். கோட்சே, காந்தியை சுடுவ தற்கு முன்பு கும்பிட்டு விட்டே சுட்டான். இந்திய அர சமைப்புச்  சட்டம் அடிக் கட்டுமானம் உருவி எறியப்படு கிறது என்று தமிழர் தலைவர் உரைத்தார். ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளை உறுப்பினர்களாக, பாபர் மசூதியை இடித்தவர்கள் இரண்டு பேர் நியமிக்கப்படுவது கொடுமை என்றார். சமூகநீதி வெல்லப் போராடுவோம் என்றார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் அவர்கள் மாநாட்டை திறந்து வைத்து உரை நிகழ்த்தும் போது, திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மா னங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றார்.

தாய்மொழி நாளில் மாநாடு நடைபெறுவது சிறப்பிற்குரியது. பல மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றிருக்கிறது.

ஆனால் தமிழ் மொழிக்கு கடந்த மூன்றாண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.22 கோடி. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 643 கோடி ரூபாய். மத்திய அரசாங்கம் பாரபட்சமாக செயல்படுகிறது என்று குற்றஞ் சாட்டினார். மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கை வெளியான நாள் இன்று என்று பெருமிதம் கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் கல்விக் கொள்கை, சமூக நீதி, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்த்தல் என்று பல்வேறு செய்திகளை முத்தரசன் அடுக்கினார்.

துரை.சந்திரசேகரன்

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற் றும்போது, காஷ்மீர் பிரச்சினை, அஸ்ஸாம் பிரச்சினை, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை பறிப்பு முதலியவற்றை எடுத்துரைத்தார்.

அப்துல் சமது

மனிதநேய கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது உரையாற்றும்போது, தமிழ்நாடு சமூகநீதியின் முகவரி என்று வருணித்தார். இந்தியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றார். இந்து ராஷ்டிரம் அமைப்பது பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு என்றார்.

இது மனுநீதிக்கும் சமூக நீதிக்கும் இடையே ஆன போராட்டம் என்றார். முஸ்லீம் சமூகத்தை நிர்மூலமாக்கி இருக்கிறார்கள். எந்தவித அதிகாரத்திலும் இஸ்லாமி யர்கள் இல்லை. அதிகாரம் இல்லை என்றால் அடிமை யாகத்தான் வாழ முடியும். தமிழ்நாட்டில் 56 லட்சம் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவை மதிப்பு இழந்த வாக்குகள் என்றார். கல்வி பறிக்கப்படுகிறது. சமூகநீதி பறிக்கப்படுகிறது. மாநில உரிமை மட்டுமல்ல மாநிலமே பறிக்கப்படுகிறது என்றார். இந்து ராஜ்ஜியம் என்பது பார்ப்பன ராஜ்ஜியம் என்று குறிப்பிட்டார்.

பவுத்தர்களையும், சமணர்களையும் அழித்து ஒழித் தது பார்ப்பனியம் என்றார். நாடாளுமன்றம் நிறைவேற் றிய சட்டத்தை 11 மாநிலங்கள் எதிர்க்கின்றன என்றார். தொடர்ந்து போராடுவோம் என்று முழங்கினார்.

கனகராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் உரையாற்றும்போது, இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களின் ஒன்றியம் என் கிறது. மொழிவாரி மாநிலங்கள் போராட்டத்தின் மூலமே உருவானது. இந்தியாவை உருவாக்கி இருக்கிற இணைப் புக்கயிறு கூட்டாட்சித் தத்துவம், மதச் சார்பின்மை என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானது என்றார்.

தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றும் போது, திராவிடர் கழக தீர்மானங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிப் பதாக அறிவித்தார். உச்சநீதிமன்றம் சமூகநீதிக் கொள் கைக்கு எதிராக தீர்ப்பு அளிக்கிறது. மண்டல் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பாரதீய ஜனதா சங்பரிவாரக் கும்பல். அயோத்தி தீர்ப்பு என்பது அவர்கள் விரும்பிய தீர்ப்பு என்றார். இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன் றம் தீர்ப்பு எழுதியபோது மக்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். மதத்தை அளவு கோலாகக் கொண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பாரதீய ஜனதாவின் நீண்ட காலத் திட்டங்கள் முத்தலாக் சட்டம், காஷ்மீர் 370ஆம் பிரிவு நீக்குதல், ராமர் கோவில் கட்டுதல், இஸ்லாமியர்களின் வாக்குக ளைப் பறித்தல் என்று அடுக்கினார்.

திருச்சி சிவா

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் உரையாற்றும்போது, இன்றுதான் பேச வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று பெருமையாக கூறினார். மதிப்பிற்குரிய ஆசிரியர் முன்னிலையில் பேச வேண்டும் என்று விரும்பினேன். இங்கு பேசினால் கருத்து சரியாக சென்று சேரும் என்பது எனக்குத் தெரியும் என்றார். அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் ஒரு வாக்கில்தான் இந்தி ஆட்சி மொழி ஆனது. உயர்ந்த தத்துவங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி முடிவு கட்டிக் கொண்டிருக்கிறது. பேராபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரையும் எதிர்த்துப் போராடவில்லை. நம்மை பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறோம். எதிர்க் கட்சியின் ஒற்றுமையின்மைதான் பாரதீய ஜனதாவின் வெற்றி என்றார். முத்தலாக் தடைச் சட்டம் இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானது என்றார்.

விதவைப் பெண்களுக்கு ஆதரவாக தனி நபர் மசோதா கொண்டு வந்த போது எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியினர் என்று குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370ஆம் பிரிவு, ரத்து செய்ய காரணம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதுதான். பாரதீய ஜனதாவின் பாதகத்திற்கு ஆதரவு தருவது அதிமுகதான் என்றார். திராவிடர் கழகம் எல்லோருக்கும் தாய்வீடு என்று புகழ்ந்தார்.

சமூக நீதி மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.

கழக பொதுக் குழு

திராவிடர் கழகப்  பொதுக்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று,  தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர் (திருச்சி, 21.2.2020)

காலையில் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு பிப்ரவரி 21 ஆம் தேதி காலை பெரியார் மாளிகையில் கருஞ்சட்டைத் தொண்டர்கள் திரண்டனர். தமிழகத்தின் வடக்குக்கும், தெற்குக்கும் மத்திய பகுதியான தந்தை பெரியார் நேசித்து, விரும்பித் தங்கிய திருச்சி மாநகரில் கூடினர். பொதுக் குழுக் கூட்டம் தொடங்கு வதற்கு முன்பு இயக்கப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.  காலை 10.30 மணிக்கு அரங்கத்திற்குள் வருகை புரிந்த தமிழர் தலைவர், கழகத் தோழர்கள் அமர்ந் திருக்கும் பகுதிக்கு வந்து, ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்.

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கடவுள் மறுப்புச் சொல்ல, கூட்டம் இனிதே தொடங்கியது. செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், கழகத் தலைவர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் சுருக்கமாய் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முதலாவதாக இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நிமிடம் மவுனம் கடைப்பிடித்து வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது பொதுக் குழுக் கூட்டம்.

சு.அறிவுக்கரசு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தம் தலைமையு ரையில், நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போது கூடும் பொதுக்குழு இது. பாரதீய ஜனதா கட்சி தமது கொள்கைகளை திணித்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படுகின்றது. மாநில ஆட்சி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. இது சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கும் பொதுக்குழு. தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது தோழர்கள் கரவொலி எழுப்பி வரவேற்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ப.சுப்பிர மணியம் அவர்கள் தம் உரையில் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் அமைய 10 அமைப்புகளிடமிருந்து தடையில்லா சான்று பெற்றுள்ளதை விளக்கினார்.

‘‘திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தடையில்லா சான்று வழங்கவேண்டும் - அது மட்டும் நிலுவையில் இருக்கிறது. அரசுதான் அனுமதி வழங்கவேண்டும் என்று காரணம் காட்டுகிறார்கள். ஆட்சி மாற்றம்தான் இதற்கு வழிவகுக்கும், அதற்கும் தயார்'' என்று அறிவித்தார்.

வீ.அன்புராஜ்

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்பு ராஜ் அவர்கள் தம் உரையில் கடந்த ஓராண்டில் திராவிடர் கழகம் செய்த பணிகளைப் பட்டியலிட்டார்.

தஞ்சை மாநாடு,  மணியம்மையார் நூற்றாண்டு விழா வினைத் தொடங்கியது, பெரியார் 1000 சிறப்பாக நடை பெற்றமை, அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனித நேய சுயமரியாதை மாநாடு, ‘விடுதலை' நாளிதழ் தரமாக வெளிவருவது, (விளம்பரம் வந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்), ‘விடுதலை', ‘உண்மை', ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' வாசகர் வட்டம் உருவாக்குவது, சுயமரியாதைத் திருமண நிலையத்தில், கடந்த ஆண்டு 461 திருமணங்கள் நடை பெற்றன. அதில் ஜாதி மறுப்பு திருமணங்கள் 420. வேறு மாநிலத்தவர் இணையேற்பு 13. பார்ப்பனர்கள் விரும்பி செய்த திருமணங்கள் 9;  மணமுறிவுத் திருமணங்கள் 19.

கிராமப்புறப் பிரச்சாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பான பிரச்சாரம், வேறு யாராலும் செய்ய முடியாத அளவிற்கு புத்தக விற்பனை, பெரியாரியல் பயிற்சி வகுப்புகள், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாடு, தமிழர் தலைவர் அவர்கள் கலந்துகொண்ட 371 நிகழ்ச்சிகள் என்று நடைபெற்ற ஏராளமான பணிகளை விளக்கி உரையாற்றினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தம் உரையில்:- இயக்கம் வலிமையாக இருக்கிறது. தொண்டர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. கழகப் பொறுப்பாளர்களுக்கு காவல்துறையுடன் இணக்கமான நட்பு இருக்க வேண்டும். சமூகநீதி, மதச்சார்பின்மை இரண்டும் முக்கியமான பிரச் சினைகள். நாம் இடைவிடாது உழைப்போம். எல்லைவரை செல்வோம். பெரியாரின் தத்துவம்தான் தீர்வு. பெரியார் படமும், அம்பேத்கர் படமும் மட்டும்தான் போராளிகளின் கையில் பதாகையாக ஏந்தியிருக்கிறார்கள். இந்த எழுச்சியை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மண்டலப் பொறுப்பாளர்களின் பணி கேள்விக்குறியாக இருக்கிறது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய தன்மை நமக்கு இருக்கக்கூடாது. கழகத் தோழர்கள் கண்டிப்பாய் விடுதலை சந்தா உறுப்பினர் ஆக வேண்டும். மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிற அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்துகின்ற பெரியாரி யல் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தலைமையிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெறுங்கள். முகநூலில் எழுதுங்கள். தலைமைக் கழகம் அறிவித்தால் மட்டுமே கூட்டம் நடத்தும் நிலை கூடாது. தலைவர் உரையில் அறிவிப்புகள் வரும். உங்கள் ஆசை பூர்த்தியாகும் என்று உரை நிகழ்த்தினார் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கணீரென்ற குரலில் அழுத்தந்திருத்தமாக வாசித்து முடிக்க தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை ஒட்டி மணியம்மையார் அவர்களின் அஞ்சல்தலை வெளியிடுவது தொடர்பாக கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் சில விளக்கங்கள் அளித்தார். ஓர் அட்டையின் விலை ரூ. 500 என்றும், அஞ்சல்தலை

மார்ச் 10 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

கழக மகளிரணி பொறுப்பாளர் இன்பக்கனி கடந்த ஆண்டில் மகளிரணி செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு அணியின் பொறுப்பாளர்கள் தத்தம்துறை தொடர்பான கருத்துரை வழங்க கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அழைத்தார். தொழிலாளர் அணியின் சார்பாக மகளிர் பாசறை செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாணவர் கழக செயலாளர்கள் சுரேஷ், பிரின்சு என்னாரெசு, மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துகளை வழங்கினார்கள்.

பொதுக்குழுவில், கழக காப்பாளர்களும், மகளிரணி பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும் அறிவிக் கப்பட்டனர்.

கழகத் தலைவர் நிறைவுரை

கழகத் தலைவர் உரையாற்றத் தொடங்கும்போது தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் வரிசையில் நின்று விடுதலைச் சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தார்கள். கழகத் தலைவர் 45 நிமிடம் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில், பெரியார் வாழ்கிறார், துடிப்போடு வாழ்கிறார், என்றென்றும் வாழ்வார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆனந்த விகடன் எழுதிய செய்திக்கட்டுரையினை மேற்கோள் காட்டி எதிரிகளை உலக மகா பைத்தியக்காரர்கள் என்றார். பெரியாரும், அம்பேத்கரும் போராட்டக் கருவிகள் என்றார். போராட்டத்தைத் தூண்டி விட்டது மோடியும், அமித்ஷாவும் என்றார். படித்தவர்கள் கூலித்தொழிலாளர்களாக அலைகிறார்கள். குடும்பம் குடும்பமாக தற்கொலைகள் நிகழ்கின்றன.

கொள்கை, கொள்கை என்று லட்சியப் பயணம் செய்த வர்கள் இப்போது காப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள் ளனர். தந்தை பெரியார் அவர்கள் 90 வயதுக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டார். தோழர்கள் வியந்து கேட்டனர். சுற்றுப்பயணத்தால் நான் தளர்ச்சி - சோர்வு அடையவில்லை என்றார். இயக்கப் பொறுப்பாளர்கள் ஒரு வாரத்தில் ஒரு நாளையாவது இயக்கப் பணிக்கு ஒதுக்குங்கள் என்றார். மகளிர் அணி தொடங்க மணியம்மையாருக்குக் கூட தயக்கம் இருந்தது. ஆனால் சிறப்பாக எந்தவித குற்றமும் இல்லாமல் சிறப்பாக நடை பெறுகிறது.

கருப்புச்சட்டை இன்று பேஷனாக கருதப்படுகிறது. நம்முடைய கருப்புச்சட்டை - கொள்கை சாயம் போகாத கருப்புச்சட்டை. கருப்புச்சட்டைக்காரர்கள் உலகில் எதற்கும் பயப்படத் தேவையில்லை. தன் வாழ்வுக்கு யாரையும் எதிர்பார்க்கக்கூடாது, சுயநலத்திற்கு என்று எந்தக் காரியத்தையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தந்தை பெரியார் தனி வாழ்க்கை வைத்துக் கொண்டதில்லை. அதுபோல எனக்கும் தனி வாழ்க்கை கிடையாது. அண்மைக் காலத்தில் வெளிவந்த நல்ல நூல் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம். ஒவ்வொருவர் வீட்டிலும் இடம்பெற வேண்டும். தோழர்கள் படிக்க வேண்டும்.

இந்த நூலைப் படித்த போது எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. நாகம்மையார் மொழி தெரியாத நாட்டில் திருவாங்கூரில் போராட்டம் நடத்துகின்றார். பெரியாரின் போராட்ட குணம் இந்நூலில் வெளிப்படுகிறது. பெரியார் விடுதலை பெற்றவுடன் மீண்டும் போராட்டத்தில் குதிக்கின்றார். கடுங்காவல் தண் டனை பெறுகிறார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காக பெரியார் கதர்ப் பிரச்சாரத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்.  நாகம்மையார் வருத்தப்படுகிறார் வைக்கம் போராட்டத்திற்கு போகமுடியவில்லை என்று, எனவே நாம் போராட்டத்திற்கு தயங்காதவர்கள்.

பொறுப்பு மாறி மாறி வரவேண்டும். 1960இல் தந்தை பெரியார் இதே இடத்தில் என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கினார். என் வாழ்நாள் இயக்க வளர்ச்சிக்கு - கொள் கைக்கு பயன்பட வேண்டும். பிரச்சாரம் - போராட்டம் நம் இயக்கப் பண்பு, ஒழுக்கம் - கட்டுப்பாடு - நாணயம் - நமது தனித்தன்மை.

தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை தமிழர் தலைவர் தெளிவுற எடுத்துரைத்தார். திருச்சி மாவட் டச் செயலாளர் தோழர் மோகன்தாஸ் நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் நிறைவுற்றது.

தொகுப்பு: பேராசிரியர் நம்.சீனிவாசன்

சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (திருச்சி, 21.2.2020)

திருச்சி சமூகநீதி மாநாட்டில் ஜாதி மறுப்பு மணவிழா

திருச்சி சமூகநீதி மாநாட்டு மேடையில் குடிகாடு  அழகேசன் - இலஞ்சியம் ஆகியோரின் மகன் ஆனந்தராஜுக்கும், உங்களாபாடி துரையரசன் - ரமலா ஆகியோரின் மகள்  மாயாவதிக்கும்,  ஈரோடு மாவட்டம் ரெட்டிப்பாளையம் ப.ஆறுமுகம் -

ஆ. ஜோதி ஆகியோரின் மகன் தேவராஜுக்கும், ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் அ. பாட்டுச்சாமி- பெ. மல்லிகா ஆகியோரின் மகள் பா.ம.  தேன்மொழிக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.

உடன்: மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் கனகராசு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,  திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராசு மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (21.2.2020)

- விடுதலை நாளேடு 22.2. 20

திருச்சி - திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

* நீட் தேர்வை ரத்து செய்க! தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக!

* ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக!

* சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடுக்கு வழி செய்க!

* குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேட்டைக் கை விடுக!

சென்னையில் மார்ச் 10ஆம் தேதி

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

மார்ச் 23 ஆம் தேதி ‘நீட்' மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடெங்கும் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்!

திருச்சி, பிப்.21 சென்னையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா உள்ளிட்ட 14 தீர்மானங்கள், திருச்சி பெரியார்  மாளிகை, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில், (21.2.2020) திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1  இரங்கல் தீர்மானம்

இன்று (21.2.2020) திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட

இரங்கல் தீர்மானம்

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், திராவிட இயக்க ஆர்வலருமான ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் (வயது 90, மறைவு 27.12.2019),

குஜராத் மாநில உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (வயது 93, மறைவு 15.1.2020),

முதுபெரும் சுயமரியாதை வீரர் புரவலர் மதுரை ஆசிரியர் இராமசாமி (வயது 85, மறைவு 21.1.2020 - உடற்கொடை)

கோவை பாரதியார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் கே.மாரிமுத்து (வயது 92, மறைவு 28.1.2020)

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நெல்லை தோப்பில் முகமது மீரான் (வயது 74, மறைவு 10.5.2019),

சுயமரியாதை வீரர், மேனாள் மக்களவை உறுப்பினர் கோவை மு.இராமநாதன் (வயது 87, மறைவு 9.5.2019), சென்னை மாவட்ட தி.மு.க. மேனாள் செயலாளரும், மேனாள் மேலவை உறுப்பி னருமான ஆர்.டி.சீதாபதி  (வயது 82, மறைவு 21.5.2019), புதுச்சேரி திராவிடப் பேரவை நிறுவனர் ‘மிசா' நந்திவர்மன் (30.5.2019), திராவிட இயக்க எழுத்தாளர் ஆங்கில நூல்களின் படைப்பாளர் பேராசிரியர் அ.அய்யாசாமி (வயது 78, மறைவு 16.6.2019), திருமருகல் ஒன்றிய மேனாள் பெருந்தலை வர் சுயமரியாதை வீரர் சற்குணம் (வயது 91, மறைவு 30.6.2019), பகுத்தறிவுப் பாவலர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 6.11.2029 - உடற்கொடை), சிகாகோ தமிழ் ஆர்வலர் புரவலர் ராம்மோகன் (மறைவு, 12.12.2019), மலேசிய திராவிடர் கழகத் தோழர் மோகன் இராமசாமி (வயது 45, மறைவு 28.12.2019),

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள் அவர்க ளின் வாழ்விணையரும், சுயமரியாதைச் சுடரொளி யுமான இரா.சின்னப்பன் (வயது 71, மறைவு 28.1.2020),

பிரபல அறுவை மருத்துவரும் அரசு மருத்து வர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் லட்சுமி நரசிம் மன் (வயது 51, மறைவு 7.2.2020) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தன் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவரும், இளைஞர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவருமான - கழகப் பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை

கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற் கொடை), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்த திருச்சி ஞான செபஸ்தியான் (வயது 101, மறைவு 4.6.2019), முது பெரும் பெரியார் பெருந்தொண்டர், மேனாள்  சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர் பொறியாளர் சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் (வயது 90, மறைவு 6.6.2019), முதுபெரும் சுயமரியாதை வீராங் கனையும் எழுத்தாளர் ஓவியா அவர்களின் பாட்டியு மாகிய ஒரு நூற்றாண்டையும் கண்ட காந்திமதியம் மாள் (வயது 100, மறைவு 12.7.2019),

சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந் தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டினமூர்த்தி (வயது 84, மறைவு 19.8.2019 - உடற்கொடை), கழகச் செயல் வீரர் கபிஸ்தலம் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019), கழக வீராங்கனை - மகளிரணி செயற்பாட்டாளர் ஆசிரியர் பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை), திருச்சி மாவட்டக் கழக மேனாள் செயலாளரும், இயக்கச் செயல்வீரருமான ‘உண்மை' கிருஷ்ணன் (வயது 92, மறைவு 24.12.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஓடாக்கநல்லூர் தன.திருமலை (வயது 94, மறைவு 10.1.2020), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்புப் போராட்ட வீரர், செந்துறை கருத்தமணி என்ற நாராயணசாமி (வயது 96, மறைவு 24.7.2019),முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை கோ.அரங்கநாதன் (வயது 98, மறைவு 5.2.2020),

திருச்சி மேலகற்கண்டார்கோட்டை கழகத் தோழர் ஜோசப் செல்வராஜ் (வயது 44, மறைவு 26.4.2019), தூத்துக்குடி கழக மாவட்ட  மகளிரணி தலைவர் பெ.சாந்தி (வயது 53, மறைவு 1.5.2019 - உடற்கொடை), தூத்துக்குடி மாவட்ட புதூர் ஒன்றிய கழகத் தலைவர் சா.முத்துராஜ் (மறைவு 18.5.2019), கல்லக்குறிச்சி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.கண்ணன் (மறைவு 27.5.2019), பண்ருட்டி திருவதிகை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் து.செல்வராஜ் (வயது 78, மறைவு 31.5.2019), திருத்துறைப் பூண்டி கழக மாவட்டம் - விக்கிரபாண்டியம் கழகத் தலைவர் இரா.அழகேசன் (வயது 96, மறைவு 1.6.2019),

பிச்சாண்டார் கோவில் தோழர் செங்குளத்தான் (மறைவு, 20.6.2019), வேட்டவலம் பெரியார் பெருந்தொண்டர் ம.ஜெயராம் (வயது 82), ஆத்தூர் வாழப்பாடி பொறியாளர் பகுத்தறிவு (வயது 45, மறைவு 15.7.2019), பண்ருட்டி கோ.புஷ்பவல்லி (வயது 86, மறைவு 20.7.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காஞ்சிபுரம் அ.கோவிந்தன் (வயது 97, மறைவு 6.8.2019), தஞ்சை மாவட்ட மேனாள் மாவட்டக் கழக இளைஞரணி தலைவர் நீடாமங்கலம் வழக்குரைஞர் வி.அருளரசன் (மறைவு 6.8.2019), திருவாரூர் மாவட்டக் கழக மேனாள் செயலாளர் கமலாபுரம் காமராஜ் (மறைவு 11.8.2019), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் லால்குடி ராஜா என்ற இன்னாசிமுத்து (வயது 93, மறைவு 11.8.2019), தஞ்சை பூதலூர் கழகத் தலைவர் சந்தானம் (வயது 96, மறைவு 31.8.2019), மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை கழக செயலாளர் முருகன் (வயது 69, மறைவு 29.8.2019), லால்குடி - மேலவாளாடி திராவிடர் கழக செயலாளர் க.மாரிமுத்து (வயது 73, மறைவு 17.9.2019),

கோவை மாவட்ட வெள்ளலூர் கழக செயலாளர் தி.க. மணி (மறைவு 30.9.2019), கரூர் மாவட்டக் கழக மகளிர்ப் பாசறை செயலாளர் ஜே.செயலட்சுமி (வயது 29, மறைவு 1.10.2019), புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி கழக செயலாளர் கருப்பையா (வயது 75, மறைவு 21.10.2019), திருவாரூர் கிடாரங்கொண்டான் கழகத் தலைவர் கண்ணையன் (வயது 62, மறைவு 14.10.2019), தஞ்சை மாவட்டம் உடையார் கோவில் கழகத் தலைவர் சா.புகழேந்தி (வயது 60, மறைவு 11.11.2019), கும்பகோணம் கழக மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியக் கழக வீரர் பிச்சைமுத்து (மறைவு 27.11.2019), ஆவடி திருமுல்லைவாயில் எஸ்.பால கிருஷ்ணன் (வயது 83, மறைவு 1.12.2019), தஞ்சை பூதலூர் கோவிலடி பெரியார் பெருந்தொண்டர் சவுந்தரராசன் (வயது 81, மறைவு 2.12.2019),

கும்பகோணம் கழக மாவட்ட மகளிரணி  அமை ப்பாளர் கலைச்செல்வி (வயது 60, மறைவு 4.12.2019), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம்.சாகுல் அமீது (வயது 92), புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் சு.இளங்கோவன் (வயது 78, மறைவு 1.1.2020), தோழர் பெங்களூர் பாண்டியன், கழக செயல் வீரர் வாண்டையார் இருப்பு இராம கிருஷ்ணன் (மறைவு 30.1.2020), கந்தர்வக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் கோமாபுரம் இ.முரு கையா (மறைவு 30.1.2020), வடலூர் கழக வீரர் துரை.ஞானசேகரன் (மறைவு 13.5.2019 - உடற்கொடை),

வேலூர் மாவட்டம் - திருவலம் பெரியார் பெருந் தொண்டர் ‘தொண்டறச் செம்மல்' சி.எம்.சி.ராஜா (வயது 94, மறைவு 9.2.2020)

ஆகிய இயக்க வீரர்கள், வீராங்கனைகளின் மறைவுக்கு இப்பொதுக்குழு இரங்கலைத் தெரிவிப் பதுடன், அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆறுதலையும் தெரிவித்து, அப்பெருமக் களின் அளப்பரியா, ஈடு இணையற்ற கழகப் பெருந் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

தீர்மானம் எண்: 2

அன்னை மணியம்மையாருக்கு

நூற்றாண்டு நிறைவு விழா நடத்துதல்

தந்தை பெரியார் அவர்களுக்குச் செயலாளராகவும், தாயாகவும், செவிலியராகவும் இருந்தவரும், அவர்களின் ஆயுள் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவரும், தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், கல்வி நிறுவனங்களையும் கட்டிக் காத்தவருமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை வரும் மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் வெகு சிறப்புடன் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2020 மே 16 ஆம் தேதி அரியலூரில் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டை எழுச்சியுடன் நடத் துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 3

நீட் மற்றும் நெக்ஸ்ட் (NEXT)

தேர்வை நிரந்தரமாக நீக்குக!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை தொடர்ந்து பதினொரு நாட்கள் தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய நீட் ரத்து, புதிய கல்விக் கொள்கையின் விபரீதம், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகளால் ஏற்படும் இடர்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய விழிப் புணர்வுப் பயணம், கட்சிகளைக் கடந்து அனைத்து மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நீட் தேர்வின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப் பைப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அளவில் கொண்டு சேர்த்தது.

சமூகநீதி வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியான இந்தப் பரப்புரைப் பயணத்தினை மேற்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பயண ஏற்பாட்டாளர் களுக்கும், கழகத் தோழர்களுக்கும் இப்பொதுக் குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆதரவு அளித்த பொது மக்களுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.

வட நாட்டில், நீட் தேர்வு என்பது கண் துடைப்புக்கான தேர்வு, மோசடி என்பதை வட நாட்டுச் செய்தித்தாள்களே அம்பலப்படுத்தி வருகின்றன.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா குறித்து, மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த நீட் தேர்வு மற்றும் மருத்துவர் தகுதிக்கான நெக்ஸ்ட் (NEXT) தேர்வையும் நிரந்தரமாக ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. நீட்டினால் ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய புள்ளி விவரங் களே தெளிவாக உணர்த்துகின்றன. தனிப் பயிற்சி (Coaching) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் இலட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். ஏழை எளிய மக்கள் அத்தகு பயிற்சிகளில் சேர முடியாத நிலை. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீட்டைத் தொடர்வது கண்டனத்திற்குரியது - மாநில அரசும் இப்பிரச்சினையில் போதிய அக்கறை செலுத்தவில்லை. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

‘நீட்'டை முழுவதுமாக ரத்து செய்யக் கோரும் வகை யில் மத்திய அரசு அலுவலகங்களின்முன், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4

தேசிய கல்விக் கொள்கை வரைவு- 2019 - திரும்பப் பெறுக!

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரானதாகவும், சமஸ்கிருதமயமான கல்வியைத் திணிக்கக்கூடியதாகவும் முழுமையாக வணிக மயமாக்குகின்ற வகையிலும் வகை செய்யப் பட்டுள்ள இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.

இந்தியப் பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

1976இல் நெருக்கடி காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் (State List) இருந்து ஒத்திசைவுப் பட்டி யலுக்கு (Concurrent  List)  கொண்டு செல்லப்பட்டது. இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு, கல்வியை முற்றிலும் மத்திய தொகுப்புக்கு மட்டும் உரியது போன்று தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.

இந்தியா போன்ற பன்மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல மதங்கள் மாறுபட்ட இயற்கைச் சூழல்கள் கொண்ட நாட்டில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு, மொழி சார்ந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் கொண்டு செல்வதற்கான நியாயத் தீர்வாக இருக்கும். இதற்கான முயற்சியை அனைத்துக் கட்சி களும் எடுத்திட வேண்டும் என்றும் நாடாளுமன்றம் வாயிலாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (அ)

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி

சமூக நீதிக் கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கும் வகையில், மத்திய அரசு பார்ப்பன  உயர்ஜாதியினர்க்கு 10% இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி அதனை அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் அமல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் அனைத்துத் துறை சார்ந்த உயர் பதவிகளிலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன-உயர்ஜாதி யினர்க்கு, மேலும் இடஒதுக்கீடு என்பது சட்ட விரோத மான சமூகநீதிக்கு விரோதமான, நியாய விரோதமான செயலேயாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு, பல அமைப்புகளால் தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பினை விரைவில் வழங்கி, சமூக  நீதியைக் காத்திட வேண்டும் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், மாநில அரசுகளும் இந்த வகையில் வலியுறுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (ஆ)

யு.பி.எஸ்.சி., அய்.ஏ.எஸ். முதலிய  மத்திய அரசு தேர்வுகள் எழுதுவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக உயர்ஜாதி ஏழையினருக்கும்  வயது வரம்பு சலுகை என்கிற அளவுக்கு மத்திய பி.ஜே.பி. உயர் ஜாதியினர்மீது பெரும் அக்கறை கொண்டு மேலும் மேலும் சலுகைகள் அளிப்பதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக ஏற்கெனவே கல்வி, வேலை வாய்ப்புகளில் வளர்ந்த நிலையில் உள்ளவர்களை சமநிலையில் வைத்துப் பார்ப் பது சமூகநீதிக்கு எதிரானது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதனைக் கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்

ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவை

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினரின் கணக்குகள்தான் எடுக்கப் படும்; பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள ஜாதி வாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக் காட்டில் இடஒதுக்கீடு கேட்டு  வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஜாதிவாரிப் பட்டியல் எடுக்கப்படும்போது, உயர் ஜாதியினரின் எண்ணிக்கையும் வெளிப்பட்டு, அவர் களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் உண்மை வெளிப்படும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் -உயர்ஜாதி அதிகார வர்க்கம் தடுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படை யாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப்  புள்ளி விவரம் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் கபடத்தனமான இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுத்து, ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன் னிட்டும் தவிர்க்கக் கூடாது; ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் பொதுக்குழு அனைத்துக் கட்சி களையும் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஒடிசா மாநில அர சைப் போல, தமிழக அரசும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006 இல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  எத னையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப் பட வேண்டும் எனஇப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8 (அ)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக ஆட்சி யில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லும் என்ற அடிப்படை யில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநில இடது சாரி அரசால் 60-க்கும் மேற்பட்ட கோவில் களில் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை நியமித்துள்ளது. தமிழ் நாட்டில் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகராக பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.மாரிசாமி என்ற ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மேலும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக பணி நியமனம் செய்யு மாறு பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் பயிற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.

தீர்மானம் எண்: 8 (ஆ)

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்ற அரசு ஆணை (நிலை) எண் 28 ஊரக வளர்ச்சி (மதிக) தெளிவாக இருந்தும் சில சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதமாகும். இதனைத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிடுக!

நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான் மையை தவறாகப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் (CAA), மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை குழிதோண்டிப் புதைப் பதேயாகும். அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சி னையைத் திசைதிருப்பி, மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் விபரீத செயலே என்று இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.

மேலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) என்பதும், அதில் பெற்றோரின் பிறந்த சான்றிதழ் உள் ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் கேட்பதும், அனைத்து மக்களையும் துன்புறுத்தும் அலைக்கழிக்கவும் செய்யும் நடைமுறை சாத்தியமில்லாத செயல்பாடே ஆகும்.

அனைத்துத் தரப்பு மக்களும், இதன் ஆபத்தை உணர்ந்து, மத்திய அரசு இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்துவதை  அலட்சியப்படுத்தாமல், மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும்வகையில், மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மக்கள் பதிவு ஆகியவற்றை உடனே திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10

ஜாதி ஒழிப்பு - பாலியல் வன்கொடுமைத் தடுப்பு - சட்டங்கள் தேவை

ஜாதி ஆணவக் கொலைகளும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் நாளும் பெருகி வருவது வெட்கக் கேடானதாகும். சுதந்திர நாடு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, உண்மை சுதந்திரத்துக்கு எதிரான ஜாதிய கட்டமைப்பு காப்பாற்றப்படுவது வேத னைக்குரியதாகும். அதேபோல பாலின பாகுபாடும் சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் சகோதரத்துவத் துக்கும் முற்றும் எதிரானவையே!

இந்த நிலையில் ஜாதி ஒழிப்புக்கான சட்டங்களும் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளால் இயற்றப் படுவதோடுகூட, அவற்றைத் துல்லியமாக செயல்படுத் துவதுதான் சுதந்திர நாடு என்பதற்கான அடிப்படை அடையாளம் என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகவே தெரிவித்துக் கொள்கிறது.

அதுபோலவே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை பெற்றோர்களே படுகொலை செய்வது என்பது மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் குற்றமாகும்.

சுடுகாட்டிலும்கூட ஜாதி வேறுபாடு கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். கையால் மலம் அள்ளும் கொடுமை உடனடியாகத் தடுக்கப்டவேண்டும் என்றும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்கள் மீதான 576 வன்முறை வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே நிலுவையில் உள்ளன. தமிழ் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 14,545 நிலுவையில் உள்ளன. இதில் 1751 பாலியல் வல்லுறவு வழக்குகளுடன் 3181 பெண் களுக்குத் தொந்தரவு கொடுத்த வழக்குகளும் ஆகும்.

மாநிலக் குற்றவியல் பதிவுச் செயலகத்தின் பகுப் பாய்வுப் புள்ளி விவரம், தமிழ்நாட்டில் 82 விழுக்காடு பாலியல் குற்ற வழக்குகள் காவல்துறை மற்றும் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது!

இந்தியக் குழந்தைகளில் 53.22 விழுக்காடு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், இதில் 21.09 விழுக்காடு குழந்தைகள் மிகவும் கொடூரமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய உறவினர்களே இக்குற்றங்களில் ஈடுபடு கின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையங்கள் என்று இருந்தும், மகளிருக்கென்றே தனிக் காவல் நிலை யங்கள்கூட இருந்தும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்வது வெட்கக் கேடானது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகள் முடிக்கப் பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் கடினமான விதிகளை வகுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த நிர்பயா பெயரில் பெண்கள் வன்கொடுமையைத் தடுப்பதற்காக மத்திய அரசு ஓர் ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தும், அந்த நிதியைப் பெரும்பாலான மாநிலங்கள் தமிழ்நாடு உள்பட பயன்படுத்தவில்லை என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியதே. அந்நிதியைத் தக்க வகையில் பயன்படுத்திட முன்வர வேண்டும் என்று இப்பொதுக் குழு மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகளையும் துப் பாக்கிப் பயிற்சியையும் அளிப்பதற்கும் வகை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

கல்வி, உத்தியோகங்களில் பெண்களுக்கு 50 விழுக் காடு இடங்கள் அளிக்கப்படுவதற்குத் தேவையான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மத்திய அமைச்சரவையில் 75 பேர்களுள் பெண் களுக்கான எண்ணிக்கை வெறும் ஒன்பது பேர்கள் மட்டுமே. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றிட, தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ) இதனை நிறைவேற்றுவதில் காட்டும் தயக்கம், அதன் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

பெண்களின் 50 விழுக்காடு வாக்குகள் மட்டும் தேவை; அதே நேரத்தில் அவர்களுக்கான உரிமை களைப் பெற்றுத் தருவதில் தயக்கமும், தடங்கலும் செய்யும் அரசியலைப் புரிந்து கொண்டு, 50 விழுக்காடு இடங்கள் என்பதை முன்னிறுத்தி வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஆதரவு தருவது - வாக்களிப்பது என்ற முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் சமுகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 11

இரயில்வே துறையில்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ளன. ரூ.15,000 கோடி அளவுக்கான திட்டங்கள் இவை.

2019 செப்டம்பரில் தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் தென்னக இரயில்வே மேலாளரைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் வைத்தனர்.

ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில்  வெறும் பத்தாயிரம் ரூபாயை அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கேலிக்குரியதாக ஆக்கி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத் துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12

இணைய வழி சூதாட்டம் என்னும்

பேராபத்தினைத் தடுத்து நிறுத்துக!

ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையவழி சூதாட்டம்  விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழி கின்றன.  நாட்டு மக்களை சீரழிக்கும் வகையில், பல்வேறு வடிவங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது இணையவழி சூதாட்டங்கள் மக்களின் பணத்தை மட்டுமின்றி, நிம்மதியையும் பறிக்கின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் இணையவழி சூதாட்ட மாகும். முகநூல் தொடங்கி செய்தி இணையதளங்கள் வரை எதைத் திறந்தாலும், அதில் வாசகர்களை கவரும் வகையில் பெரிய அளவில் தெரியும் விளம்பரங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களாகவே உள் ளன. அத்துடன், ஆன்லைன் சூதாட்டத்தில் பங் கேற்க விரும்புபவர்கள் அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது.

இதற்கு மயங்கி, ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள், தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகின்றனர். கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. நவீன செல்போன்களின் வருகையால் பாமரர்கூட  இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் சிக்கிவருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து விட்டு தவிக்கின்றனர்.

பிரபலமடைந்து வரும் ஆன்லைன் ரம்மி இணையத்தில் நஞ்சு போன்று பரவி லட்சக்கணக் கானவர்களை பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஒருமுறை இதில் விளையாட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும். கடந்த காலங்களில் தமிழகத்தில் பெருக்கெடுத்த பரிசுச் சீட்டுக்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்தன. மக்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு அதற்குத் தடை விதித்தது.

தற்போது இணையவழி  சூதாட்டம் தமிழகத்தில்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

2018 ஆம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் ‘மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் நடைபெறுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரம்மி ஆடுவதும் சூதாட்டம் தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால், அதை எதிர்த்து சூதாட்ட விடுதிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டி ஆன் லைன் ரம்மி நிறுவனங்கள் மனுத் தாக்கல் செய்தன. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி, தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்று கூறி, பல நிறுவனங்கள் அதை நடத்தி வருகின்றன.

தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரபல நடிகர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் இந்த விளையாட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்புடனே விளம்பரம் செய்யப்படுகிறது.

உண்மையில், சூதாட்ட விடுதிகளில் விளையாடப் படுவதைப் போன்றுதான் ஆன்லைனிலும் ரம்மி விளையாடப்படுகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்;  ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சினை கள் ஏற்படக்கூடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

இந்த இணையவழி சூதாட்டம் காரணமாக சென்னை,  கோவை, பெங்களூரு, போபால், டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் 15 தற்கொலைகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

எனவே, இந்தச் சமூக அழிவு விஷ விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13

‘ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரால் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பதும், கிராமப்புற வளர்ச்சிகளில் கவனம் செலுத்தாமையும்!

‘ஸ்மார்ட் சிட்டி' என்று கூறி, ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டுவதும், அதேநேரத்தில், கிராமப்புறங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமையும் கண்டிக்கத்தக்கதாகும்.

நகரங்கள் என்றால் வருண தருமத்தில் பிராமணத்தன்மை கொண்டது போலும், கிராமப்புறங்கள் பஞ்சம, சூத்திர வருணத்தன்மை கொண்டதுபோலும் நிலவுவதை - தந்தை பெரியார் சுட்டிக்காட்டியதையும் இந்த இடத்தில் நினைவூட்டி, கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்ற திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் ‘இஸ்கான்' அமைப்பு என்ற ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின்மூலமாக சென்னை மாநகரத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் காலை உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்க்கப்பட இருப்பது - பார்ப்பனீய, இந்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கையே! உணவுப் பிரச்சினையில் மத நஞ்சைப் புகுத்துவதை ஏற்க முடியாது என்றும், இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

உணவில் மத நஞ்சைப் புகுத்தும் இந்தத் திட்டத்தைக் கண்டித்தும், எதிர்த்தும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் வரும் 25.2.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள்

கரவொலி எழுப்பி வரவேற்றனர்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை கழகத் தோழர்கள் எழுந்து நின்று உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். (21.2.2020)

- விடுதலை நாளேடு 21.2. 20