தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 நவம்பர், 2020

ராமர் கோவிலுக்குள் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பா ?

விடுதலைச் செய்தி!

படித்ததில் பிடித்ததைச் சூத்திர/பட்டியிலினச் சங்கி அடிமைகளின் கவனத்திற்குக் மொண்டுவர விரும்புகிறேன்.

ராமர் கோவிலுக்குள் செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பா ?
 
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுத்து வருவது பல ஆண்டுகள் கடந்து தற்பொழுது நடைமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டு உள்ளீர்களா ? இப்பொழுது எல்லாம் யார் சார் அப்படி பார்க்குறா, அனைவரும் கோவில்களுக்கு போகிறோம் என சொல்பவர்களே அதிகம்.

” ஆனால், நடைமுறையில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கோவில்களில் நுழைய அனுமதி மறுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் “.

” உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிக்கை விட்டதாக ” யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கூறி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அதில் கூறப்பட்டுள்ள கோவில் அடையாள சொற்களை வைத்து தேடிய பொழுது விடுதலை நாளிதழில் ” ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடதாம் ” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் துவக்கம் கிடைத்தது. அதில், குறிப்பிட்டு இருக்கும் விவரங்களை வைத்து எப்பொழுது நிகழ்ந்தது என்று மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்தோம்.

2017 ஆகஸ்ட் 24-ம் தேதி நியூஸ் 18-ன் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கோவிலுக்குள் செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள கதா என்ற கிராமத்தில் உள்ள ராம் ஜானகி கோவிலில் ” ராமாயணம் பாடல் ” நிகழ்ச்சி நடைபெற இருந்ததை தொடர்ந்து 10 நாட்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒட்டப்பட்டு இருந்தது.

உயர் சாதி எனக் கூறிக் கொள்பவர்கள் அதிகம் வருவதாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் ” சுத்தமானவர்கள் ” இல்லை என்பதால் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும். 10 நாட்கள் ராமாயணம் பாடல் நிகழ்ச்சி முடியும் வரை வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

எனினும், மாவட்ட நிர்வாகத்தின் அழுத்ததின் காரணமாக ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன. ஆனால், வழிபாடு நடக்கும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து விடக் கூடாது என கோவில் வாசலில் கையில் தடியுடன் இருவர் பாதுகாப்பிற்கு நின்றுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கும் நோட்டீசில் கையெழுத்திட்ட கோவில் பூசாரி குன்வர் பகதூர் கூறுகையில், ” கோவிலுக்கு வரும் அவர்கள் குடித்து விட்டு வருவதால், கோவிலின் புனிதம் கேட்டு விடும் என்ற காரணத்தினால் வேறு வழியின்றி செய்ததாக கூறி இருக்கிறார். மேலும், கோவில் உள்ள நிலம் தன்னுடைய மூதாதையருக்கு சொந்தமானது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுப்பது புதிய கட்டுப்பாடுகள் இல்லை, நீண்ட காலமாக கடைபிடிக்கும் ஒன்று எனத் தெரிவித்து இருக்கிறார்.

ராஜு சாஹு என்பவர் கூறுகையில், வழிபாட்டிற்காக கோவிலுக்குள் சென்ற பொழுது அடித்து, வலுக்கட்டாயமாக கோவிலுக்குள் வெளியே விரப்பட்டதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பில், கதா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பது தவறு, அது குற்றமாகும் ” என கூறியதை ETV வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிலுகளுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுப்பது பல பகுதிகளில் அரங்கேறி வருகிறது. 2016-ல் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் நடைமுறையை இந்தியா டுடே களத்தில் சென்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

2019-ல் கர்நாடகாவில் கல்லேஸ்வரா கோவில் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் நிதி திரட்டி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறிய பிறகு அரசு அதிகாரிகள் தலையிட்டனர்.

இன்றைய காலத்திலும் இப்படி தீண்டாமை எனும் தீய எண்ணத்தை கடைபிடிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அனைவரும் இந்துக்கள் எனக் கூறும் தேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். இந்நிலை மாறவே பல தலைவர்கள் போராடினார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் தீண்டாமை தொடர்வது வேதனையளிக்கிறது.

ஆனால் வேலைப் பிடித்தால் 'விமோசனம்' என்பதையும் நம்புவோர் உள்ளவரையில் சங்கிகளுக்குக் கொண்டாட்டம்தான்
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு
6.11.20

திங்கள், 13 ஜனவரி, 2020

70 ஆண்டு குடியரசின் இலட்சணம்!

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குமுறல்!

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சர்  ராஜீவ் சைசால், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த காட்சி.

சிம்லா, ஜன. 13 இமாச்சலப் பிரதேசத்தின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ராஜிவ் சைசால் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது தன்னை கோவிலில் நுழைய விடாமல் அவமானப்படுத்திவிட்டனர். என்னை மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வரு கின்றனர் என்று புலம்பியுள்ளார்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட் டும் வழங்கப்பட வேண்டுமென அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டம், வரும் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

‘‘எம் ஓட்டுநர் கோவிலுக்குள் போகலாம்;

நான் போக முடியாது!''

இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்தில் நடை முறைப்படுத்த விவாதம் நடைபெற்றது. அப்போது சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறும் போது, “நானும் சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவி லுக்குச் சென்றோம் (கோவில் பெயர் குறிப் பிடப்படவில்லை). அப்போது கோவி லுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட் டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வந்துவிட்டனர், அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது,  எனது ஓட்டுனர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கின்னரூ ஜகத் சிங் நெஹி என்பவர், ‘‘உண்மைதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இது போன்று பல கோவில்களில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

இதற்குப் பிறகும் பேசிய சைசால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேபினெட் தகுதி பெற்ற என்னைப் போன்ற அமைச்சருக்கே இந்த அவமான சூழ்நிலை என்றால், மற்றவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த இழிநிலை எப்போதுதான் முடிவிற்கு வரும் என்று கண்கள் கலங்க சபையில் பேசினார். மேலும் அவர் பேசும் போது, சீக்கிய மதகுரு இந்த பேதங்களை நீக்க அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் முறையையும் (லங்கர்), அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்கும் முறையையும் கொண்டுவந்தார். இதன் மூலம் சீக்கியர்களிடம் ஜாதிய முறை ஒழிந்தே போனது என்று கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுக்வீந்தர் சிங்சாக்கு  கூறும் போது, “நமது மாநில கேபினெட் தகுதி பெற்ற அமைச்சரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தவர்களை தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ராஜீவ் காந்தி சிறப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்'' என் றார்.

கோவில்களில் தீண்டாமை இன்றும் உள்ளது -முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

தனக்கு ஏற்பட்ட இந்த அவமானமான நிகழ்வு குறித்து அமைச்சர் ராஜிவ் சைசால் கூறியதும், சிறிது நேரம் அவையே அமைதி யானது. அதன் பிறகு முதல்வர் ஜெயராம் தாக்கூர் பேசிய போது, “சைசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வேதனை எங்களுக்குப் புரிகிறது, அவரைப்போலவே அவையில் உள்ள பலரின் வேதனைகளையும் நான் கணக்கில் எடுத்துள்ளேன்.  சில இடங்களில் நானும் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உணவு வழங்கும் போது தனிவரிசை மற்றும் தனி பாத்திரம் கொடுப் பதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதற்கான மாற்றங்கள் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். இன்னும் நிறைய தூரம் நாம் செல்லவேண்டியுள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசா குமாரி பேசும் போது முதல்வர் இவ்விவகாரத்தை சாதாரணமாகப் பேசுவது போல் தெரிகிறது, மாநிலம் முழுவதுமே இந்த தீண்டாமை தொடர்கிறது.  ஒரு சில இடங்களில் மட் டும் நடக்கிறது என்பது போல் உள்ளது முதல்வரின் பேச்சு என்று கூறினார்

இதனை அடுத்து சிபிஅய்(மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா பேசும்போது, மாநிலத்தில் தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை நீடிப் பது அவமானகரமான ஒன்றாகும் என்று கூறினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போதும் தீண்டாமை இருந்தது இப்போதுமட்டும் புதிதாக தோன்றியது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் உறுப் பினர் ஆசாகுமாரி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஒரு வாரம் நடைபெறுகிறது, உறுப்பினர்கள் அனைவருமே பேச வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு நாள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெறு கிறது. இச்சபையில் இருக்கும் அனைத்து உயர்ஜாதியில்லாத உறுப்பினர்கள் தாங்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டோம் என்றுகூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்து, சபையை விரைவில் முடித்துவிடப் பார்க் கிறது. இதுதான் பாஜகவினரின் தீண்டா மையை ஒழிக்கும் நடைமுறையா என்று கூறினார். இதனை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்திலும் கோவில்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப் போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மீது திடீர் பாசம் கொண்டவருமான தருண் விஜய் சில தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு உத்தராகண்டில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். அப் போது கோவில் நிர்வாகத்தினர் அவருடன் வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்கள் மீது கல்லெறிந்தனர். அதன் பிறகு அவருடன் சென்ற தாழ்த்தப்பட்ட நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப் பட்டனர். இது தொடர்பாக ‘‘தைனிக் பாஸ்கர்'' என்ற இந்தி இதழில் செய்தி வந்த பிறகும், இது தொடர்பாக தருண் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 13 1 20