வெள்ளி, 30 ஏப்ரல், 2021

என்று விடியும் இந்த மடமை? அடாடா என்ன அற்புதமான அரிய அறிவியல் கண்டுபிடிப்பு!

புதிய அரசு - ஆட்சியில் ‘புதிய விடியல் வராதா' என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளாகட்டும்' மே தின நாள்!


தமிழர் தலைவரின் மே தின வாழ்த்து!!

நாளை (1.5.2021) மே முதல் நாள்; மேதினியெங்கும் மே தின நாள்!

உழைப்பாளர் உரிமை பெற்ற வரலாற்றை உழைக்கும் வர்க்கமாம் தொழிலாளத் தோழர்கள் கொண்டாடி மகிழும் பெருநாள் - திருநாள்!

நம் நாட்டில் தொழிலாளர்கள் என்றால் வர்க்கத்தைவிட வருணத்தையே மய்யப்படுத்தி, குலத்தொழிலால் கொத்தடிமைகளாக காலங்காலமாய் வாழ்ந்த மக்களுக்கு, சமூக விடுதலையும், மனித சமத்துவமும் தேவை என்று முழங்கி, இயக்கங் கண்ட தந்தை பெரியார் ‘‘தொழிலாளியை பங்காளியாக்கி, உரிமையில் பங்குபெறும் சம ஈவினை உண்டாக்குக'' என்று தாம் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மூலம் புதியதோர் உலகு காண வழி வகுத்தவர்.

இன்றும் உண்மையான திராவிடர் இயக்கங்கள் அந்த சுயமரியாதைச் சூரியக் கதிரொளியாக தொழிலாளர் பிரச்சினை முதல் அனைத்திலும் செயல்படுகின்றன!

கரோனா காலத்தில் மேலும் தொழிலாளர்கள் - புலம் பெயர்ந்தோர் உட்பட ‘‘காணத் தகுந்தது வறுமையே, அவர்கள் பூணத் தெரிந்தது பொறுமையே'' என்று வறுமையாலும், தொற்று நோய் அச்சத்தினாலும் அலைக்கழிக்கப்படும் அவதியில் அல்லல் பட்டு ஆற்றாது அழு கின்ற கண்ணீர் விடும் நிலை மாறவேண்டும்.

புதிய அரசு - ஆட்சியில் ‘‘புதிய விடியல் வராதா'' என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளா கட்டும்' மே தின நாள்!

சோவியத் ரஷ்யா வின் 1932 மே நாள் கொண்டாட்டத்தில் நேரில் விருந்தினராகக் கலந்துகொண்ட தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் உள் அடக்கம் நமது மே தின நாள் -

அனைவருக்கும் மே தின  நாள் வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.4.2021

சனி, 24 ஏப்ரல், 2021

தமிழ் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

“சாஷ்டாங்க நமஸ்காரம் மு.க. ஸ்டாலின்ஜி!”


மின்சாரம்

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர் களே! நீங்கள் முதல் அமைச்சர் ஆகப் போவது திண்ணம் என்று அறிந்ததால் முன் கூட்டியே “மாண்புமிகு” என்று அழைக்கிறோம். கால் கை (காக்கா) பிடிப்பதுதான் எங்களின்  பரம்பரைக்  குணம் என்பது தங்களுக்குத் தான் ‘பேஷா’ தெரியுமே!

சென்ட்ரலிலும், ஸ்டேட்டிலும் முறையே எங்களவா ஆட்சியும், அதற்கு அடிமைப்பட்ட ஆட்சியும் இருந்ததால் நாங்கள் ஏதோ ‘தத்துப் பித்து’ன்னு உளறியிருப்போம்.

பெரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதையெல்லாம் மனஸில வச்சிக்காதீங்கோ!

‘ஸ்ரீவீரமணியிடமிருந்து விலகி இருங்கோ’ என்று சொல்லிப் பாத்தோம் நீங்கள் கேக்கலை - இப்படியெல்லாம் ‘மித்திரபேதம்‘ செய்வதெல்லாம் எங்கள வாள் ரத்தத்திலேயே பிறந்தது- அதை யெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கோ!

நாயக்கர் சிலைக்கு எங்களவாள் தூண்டுதலால் ஆங்காங்கே விஷமங்கள் நடந்தது வாஸ்தவம்தான். இனிமே அதெல்லாம் நடக்காதுன்னு எங்களுக்கு நன்னாதெரியும்.

ஈ.வெ.ரா. சாலை என்னும் பெரியார் பெயரை மாத்தியிருக்கா - அதெல்லாம் பிசகு.

இதற்காக ‘டுவிட்டரில்’ தாங்கள் எழு திய வாசகத்தில் உஷ்ணம் அதிகமாயிருந் ததை நாங்கள் புரிந்துகொண்டோம் - இனிமேல் நாங்கள் ‘உஷாரா’ இருப் போம்!


‘விஜயபாரதம்', 16.4.2021 - பக்கம் 34
இந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடி தான் நமது கட்டுரையும் கார்ட்டூனும்!

அனைத்து ஜாதியினரையும் ஹிந்துக் கோயில்களில் வேக வேகமாக அர்ச்ச கராக நியமிப்பேள். அது எங்கள் அஸ் திவாரத்தில் கை வைக்கும் வேலைதான். ஆனாலும் நாங்கள் என்ன செய்யட்டும் - எங்களையும் கொஞ்சம் கவனிச்சிக் கிங்கோ!

ஜெயலலிதாதான் எங்களவாளில் கடைசி சீஃப் மினிஸ்டர்.  அதைத் தெரிஞ்சுதான் எங்கள் ஜெகத் குருவை   ‘அரஸ்ட்’ செய்து ஜெயிலில் தள்ளியபோதுகூட, உணர்ச்சி வயப்படாமல், மிகவும் புத்தி சாலித்தனமாக (இதை உங்களவா எங்க ளிடம் கத்துக் கொள்ள வேண்டிய விஷ யம்) ஜாக்கிரதையாக ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரிச்சோம்!

எதிர் காலத்திலே உங்களவாள்தான் ஆட்சிப் பீடத்திலே இருப்பா - உங்களை தாஜா பண்ணிதான் எங்கக் காலத்தை வோட்டணும்.

சிறுபிள்ளைத்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது குத்துக் கல்லாட் டம் (காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந் திர சரஸ்வதி கூறுவது) நான் உட்கார்ந் திருந்தது தப்புதான்! தமிழ் என்பது எங்கள் கண்ணோட்டத்தில் நீஷப் பாஷை. திருக்குறள் மனு தர்மத்தின் சாரம் என்று சொல்லுவது - நம்புவ தெல்லாம் எங்களுக்கே உரித்தானவை தான்!

திடீர்’னு இவற்றையெல்லாம் மாத்திக் கிறது என்பது பஷ்டமான கஷ்டம்! எங்க நிலையைப் புரிஞ்சிக்கிங்கோ!

எங்களவாளில் சில அதிகப் பிரசங்கி அபிஷ்டு ராஜாக்கள் இருக்கா - அவங்களாலே எங்களுக்கு எப்போதும் ரோதனைதான்!

வீரமா பேசுவா - அடுத்த நிமிஷமே மன்னிச்சிடுங்கோ என்று காலைப் பிடிப்பா, அவங்களை வச்சு தயவு செய்து எங்களையும் அந்த லிஸ்டில்  சேர்த் திடாதீங்கோ!

ஆர்.எஸ்.எஸ். மெகசினான ‘விஜய பாரத’த்துக்கு எப்பொழுதும் கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம்.

அதுல ஒரு கார்ட்டூன் போட்டிருக்கா! நீங்க நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், வீரமணியும், சுப.வீர பாண்டியனும் உங்க (மு.க.ஸ்டாலின்) காலைப் பிடிச்சிக் கெஞ்சுவது போலவும் போட்டிருக்கா.!

அதெல்லாம் முட்டாள்தனம் - வீண் வம்பை விலைக்கு வாங்கும் விஷமம் . 

அனுகூல சத்ரு என்ற ஒன்று உண்டு. அதுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்கள் - அதன் வார இதழ்தான் ‘விஜயபாரதம்‘  அதையெல்லாம் காலைப்பிடிச்சிக்  கேட்கிறோம், அலட் சியப்படுத்துங்கள்.

1946இல் சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர் களுக்கு நல்ல புத்தியைக் காட்டும் வகையில் சர். சி.பி. ராமசாமி அய்யர் சொன்னதை யெல்லாம் மறந்த காரணத் தால் நாதியில்லாமல் நடு ரோட்டில் நிக்கிறோம்.

‘பிராமணர்களே!

இடஒதுக்கீட்டை கிண்டல் செய்யா தீர்கள் - எதிர்க்காதீர்கள்’ என்றார். ‘பிராமணரல்லாதாரை ஏளனம் செய் தால் சீரழிந்து வேரறுந்து போவீர்கள்’ என்று தொலைநோக்கோடு சொன்னார் சர். சி.பி. அய்யர். முட்டாள்தனமாகக் அவற்றை யோசிக்க மறுத்தோம். ‘விஜய பாரதம்‘ அப்படித்தான் வீரமணியையும், சுப.வீ.யையும் ஏளனம் செய்து கார்ட்டூன் போட்டுள்ளது.

உங்கள் பாதார விந்தத்துக்குக் கோடிக் கோடி நமஸ்காரம்! எங்களைப் பெரிய மனசு வைத்து மன்னித்து விடுங் கள். உங்கள் வம்புக்கு இனி ஒருக்காலும் வர மாட்டோம், வரவே மாட்டோம்.

இப்படிக்கு

கு. மூர்த்தி

விஜயேந்திர சரஸ்வதி

குறிப்பு: எங்கள் தலைவர்களை இழிவு படுத்தினால் சங்கராச்சாரியார்களின்  ‘தி(தெ)ருவிளையாடல்கள்’  - அனுராதா ரமணனின் பேட்டிகள் என்று வண்டி வண்டியாக வெளிவரும் - எச்சரிக்கை!

உடைபடும் ‘துக்ளக்'கின் மூக்கு!அவமானப்பட்டது எந்த முருகன்?

 உடைபடும் ‘துக்ளக்'கின் மூக்கு!

அவமானப்பட்டது எந்த முருகன்?

*           பா.ஜ.க. தலைவர் முருகன் வேல் எடுத்தார். சீமான் வேல் எடுத்தார். ஸ்டாலினும் வேலைக் கையில் எடுத்தார். துரைமுருகனும் வேலைப் பிடித்தார். லேட்டஸ்ட் உறுப்பினர் திருமாவளவன் வேலைப் பிடித்தார். கழகங்கள் கேவலப்படுத்திய முருகக் கடவுளின் வேல் பிடிக்கும் அரசியல் களமாகி விட்டது பெரியார் மண். நல்ல  வேளை ஈ.வெ.ரா.வும், கருணாநிதியும் அவர்கள் கொள்கைக்கு நேர்ந்த அவமானத்தைப் பார்க்காமல் போய்ச் சேர்ந்தார்கள்.

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி

>>           ஆக வேலைப் பிடிப்பது அவமானம் என்று குருமூர்த்தி கும்பலுக்குத் தெரிந்துவிட்டது.

பா.ஜ.க. தலைவர் முருகன் தூக்கிச் சென்ற வேலினை திருத்தணி முருகன் கோவில் கருவறைக்குள் வைத்துப் பூஜை செய்ய விடுத்த வேண்டுகோளை அர்ச்சகப் பார்ப்பான் மறுத்தானே - அப்பொழுது அவமானப்பட்டது எந்த முருகன்?

நடிகவேலா - வேளா?

*           பட்டுக்கோட்டை அழகிரிசாமி மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதாவுக்கு ‘நடிகவேல்' என்ற பட்டத்தைக் கொடுத்தார். பிறகு ‘வேல்' ‘வேள்' ஆகிவிட்டது.

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி

>>           அட அவுட்டுத்திரி அண்டப் புளுகே, இது என்ன காஞ்சி குச்சிக்காரருக்கு ஜெகத்குரு என்று நீங்கள் அழைப்பது போன்றதா?

அஞ்சா நெஞ்சன் கொடுத்தப் பட்டம் ‘‘நடிகவேள்'' என்பதுதான்.

‘திடீர் ஞானோதயம்!'

*           மனு ஒரு திராவிடர்.

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி

>>           ஆரியர் - திராவிடர் என்பதே ஒரு புரட்டு - வெள்ளைக் காரன் கற்பித்தது என்று சொன்ன கும்பலுக்கு இப்பொழுது திடீர் ‘திராவிட ஞானோதயம்' ஏற்பட்டுவிட்டதோ!

ஜீவ சுபாவமோ!

*          அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவு 15, 16-ன்படி சமூக, கல்வி நிலையில் பின்தங்கி இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று வரையறை செய்யப்பட்டது.

- ‘துக்ளக்'கில்  சிறப்புக் கட்டுரை

>>           இது உண்மையா? அரசமைப்புச் சட்டத்தில் எங்கே சொல்லப்பட்டுள்ளது? சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலிக்கவேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளதே தவிர - கல்வி, வேலை வாய்ப்பில் 15 ஆண்டுகள் என்று வரையறை செய்யப்படவில்லையே!

பொய்யும், புரட்டும்தான் இந்தப் பிறவிகளுக்கு ஜீவ சுபாவமோ!

இப்படியும் விளக்கம் சொல்லலாம்!

*          பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பாரதியாரின் பாடல் வரிகளைச் சொல்லுகிறார் என்று எல்லாம் புகழாரம் சூட்டும் திருவாளர் நாராயண அய்யர் (மாலன்) பாரதியாரின் ‘‘பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்!'' என்ற பாடல் வரிக்குச் சொல்லும் பாஷ்யம் இதோ:

‘‘மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறையிலிருந்து, மூளையைக் கூர் சீவும் புதிய கல்வித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக  அமல்படுத்தப்படுகிறது'' என்று எழுதியுள்ளார்.

>>           மொட்டைத் தலைக்கும், விளக்கெண்ணெய்த் தடவிய முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பார்களே, அது இதுதான்.

புதிய கல்விக் கொள்கையை எதோடு முடிச்சிப் போடுகிறார் பார்த்தீர்களா? ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார். இப்பொழுது மார்க் வாங்கும் கல்வி முறை என்பது மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பது என்று தந்தை பெரியார் சொல்லி வந்ததைக் காலம் கடந்தாலும் ஒப்புக் கொண்டுவிட்டார்களே!

பாரதியின் பாடல் வரிக்கு இப்படியும் விளக்கம் சொல்லலாம்தான்.

‘‘பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் - முஸ்லிம்களின் பள்ளி வாசல்களை இடித்துவிட்டு ஹிந்துக் கோவிலாக்குவோம்.'' (அயோத்தியில் என்ன நடந்தது) என்று பாரதி பாடினார் என்று சொல்லலாம்;

‘‘பள்ளிகளை எல்லாம் இழுத்து மூடிவிட்டு (ராஜாஜி பாதையில்) பார்ப்பனச் சுரண்டலுக்கு வழிவகுக்கக் கோவிலாக்குவோம்'' என்று பாரதி பாடினான் என்று கூட சொல்லலாமே!

- மின்சாரம்


கோவிட் - 19 வைரசும் மூடநம்பிக்கைக் கிருமிகளும்


அதிவேகமாக பரவி வரும் கரோனா தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடிகளைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 30 லட்சமாக அதிகரித்துள்ளது.

 பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து கரோனா நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து வினோதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலே மும்பையில் ஒரு நிகழ்வில் ‘கோ கரோனா கோ’ முழக்கத்தை எழுப்பினார். 

மேலும், அசாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிப்ரியா, மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தை கரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என்று கூறினார். அதே போல்  அகில இந்திய இந்து மகாசபா கரோனாவை  தடுக்கும் பொருட்டு டில்லியில் ஒரு  மாட்டு கோமிய விருந்தையும்  நடத்தியது.

சமீபத்தில் சில அமைப்பினர் கரோனாவுக்கு மருந்தாக கோமியத்தைக் கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கரோனா அண்டாது என்றும் கூறினர்.

கரோனா வைரசை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச்சாணத்தையும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

 பசு மாட்டின் கோமியத்தைக் குடித்தால் கரோனா வைரஸ் தாக்கம் குணமடையும் என்று கூறும் இந்து அமைப்புகள் பசு மாட்டுக் கோமியத்தைக் குடிக்கும் நிகழ்ச்சிகளை பல இடங்களில் நடத்தி வருகின்றன. அதேபோல, மேற்குவங்க மாநிலம் - கொல்கத்தாவில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கரோனாவைக் குணப்படுத்தும் என்று மாட்டு கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அவர் வழங்கிய கோமியத்தை ஒருவர் வாங்கிக் குடித்துள்ளார். கோமியம் குடித்தவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாட்டுக் கோமியம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகி நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க., நிர்வாகி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் சாயன்டன் பாசு, ‘நாராயண் சட்டர்ஜி, பசு கோமியம் என்று கூறியே அதனை வழங்கியுள்ளார். மக்கள் யாரையும் அவர் ஏமாற்றவில்லை. யாரையும் அவர் கட்டாயப்படுத்தி குடிக்கச் சொல்லவில்லை. பசுக் கோமியம் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று இதுவரையில் நிரூபணம் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய வைராலஜிகல் சொசைட்டியின் டாக்டர் ஷைலேந்திர சக்சேனாபசு சிறுநீரில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன என்பதைக் காட்ட எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை.

"மேலும், பசுவின் சாணத்தைப் பயன்படுத்துவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் பசுவின்  மலம் சார்ந்த விஷயங்கள் ஒரு கரோனா வைரசைக் கொண்டிருக்கக்கூடும், இது மனிதர்களிடம் பரவலாம் என கூறி உள்ளார்.

மாட்டுச் சாணம் சோப்பைப் போலவே,  ஆல்கஹால் இல்லாத கை கழுவும் சானிடிசரை "நாட்டு மாடுகளிலிருந்து பெறப்பட்ட வடிகட்டிய மாட்டு சிறுநீருடன்" செய்து இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. தற்போது இது கையிருப்பு இல்லை என கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், பிரபல இந்தி செய்தி சேனலில் யோகா குருவான ராம்தேவ், வீட்டில் மூலிகை கை கழுவும் சானிடிசர்களை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களும் (சி.டி.சி) ஆல்கஹாலை  அடிப்படையாகக் கொண்ட கை சுத்திகரிப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று கூறுகின்றன.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் பேராசிரியர் சாலி ப்ளூம்ஃபீல்ட் கூறுகையில், ஓட்காவில் கூட 40 சதவீத  ஆல்கஹால் மட்டுமே இருப்பதால் வீட்டில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு கை சுத்திகரிப்பு மருந்துகளும் பயனற்றதாக இருக்கும் என கூறி உள்ளார்.

கடந்த வாரம், வட இந்தியாவில் அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ், மக்கள் இறைச்சி சாப்பிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். "சைவமாக இருங்கள்" என்று அவர் 'டுவீட்' செய்துள்ளார்.

"பல்வேறு வகையான விலங்குகளின் இறைச்சியை வைத்திருப்பதன் மூலம் மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கரோனா வைரஸ் போன்ற வைரஸ்களை உருவாக்கும் என கூறினார்.

ஆனால் கால்நடை   அமைச்சகம் இது முட்டை மற்றும் கோழி விற்பனையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறிய பின்னர், இந்திய அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு சேவை அந்தக் கோரிக்கையை மறுத்தது.

அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.மீன், கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதில்லை. கோழி மற்றும் மீன்களைத் தவிர முட்டைகளின்   புரதம் முக்கிய சத்துக்களாகும், எனவே எந்த பயமும் இல்லாமல் இதை சாப்பிடுங்கள் என கூறினார்.

உயிர்க்கொல்லி என்று அஞ்சப்படும் ஒரு நோயைப் பயன்படுத்தி எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள். தமிழ்நாட்டில் இத்தகு மூடநம்பிக்கைகள் போணியாவதில்லை - காரணம் இது பெரியார் மண் - திராவிடப் பூமி.

 

மானமிகு வைகோ கூறுவது முக்கியமானது (பாட திட்டத்தில் தலைகீழ் மாற்றம்)


 ம.தி.மு.க. பொதுச்செயலாளர் - திராவிட இயக்கப் போர் வாள் வைகோ எம்.பி., அவர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கை இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்க கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், “பாரத் வர்ஷாவின் கருத்துருவாக்கம் (Concept of Bharatvarsha)” என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. “பாரதத்தின் நித்தியம்” எனும் தலைப்பில் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘ஆரம்ப காலத்திலிருந்து கி.மு. 550 வரை' என்ற மூன்றாவது தாளில், ‘‘சிந்து - சரஸ்வதி நாகரிகம் மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி” பாடமாக இடம்பெற்று இருக்கின்றது. ‘சரஸ்வதி’ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஆறு; இதற்கு வரலாறோ, தொல்லியல் ஆதாரமோ கிடையாது.

புராண கால ‘சரஸ்வதி’ நதியை உண்மை வரலாறாக ஆர்.எஸ்.எஸ். சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும்  புகுத்திவிட்டனர்.

‘இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்’ என்ற 12 ஆவது தாளில், “இராமாயணம் மற்றும் மகாபாரதம்” போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

‘இடைக்கால இந்தியா’ பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒன்றை முஸ்லிம் மன்னர்கள் பற்றிய பாடங்களில் ‘படையெடுப்பு’ என்ற சொல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை ‘இந்திய சமூகம்’ என்று பொதுத் தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை மாற்றி, ஏழாவது தாளில், ஹிந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் ஹிந்து சமூகத்தின் ஜாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் என்று பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

‘நவீன இந்தியா’ குறித்த பாடத்தில், தற்போது 1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்தில் நீக்கப்பட்டுள்ளன.

‘1857’ சிப்பாய் கிளர்ச்சியை, ‘முதல் சுதந்திரப் போர்’ என்று ஹிந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் வர்ணித்ததை அப்படியே பாடத்தில் சேர்த்துள்ளனர். அதற்கு முன் வங்காளத்தில் நடந்த சன்யாசி கிளர்ச்சி, ஒடிசாவில் பைக்கா கிளர்ச்சி, தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி போன்றவை இடம்பெறவில்லை.

1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் பாடத் திட்டத்தில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளன.

காந்தியார், பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற வரலாற்றில் வாழும் மாபெரும் தலைவர்களின் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

ஹிந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்‘’ என்று தம் அறிக்கையில் வைகோ அவர்கள் குறிப்பிட்டு இருப்பது இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

மத்திய அரசுப் பள்ளிகளில் 4 ஆம் வகுப்புப் பாடத்தில் ‘‘பட்டியல் இன மக்கள் யார்?’’ என்பதற்கான பதில், ‘‘இந்தியாவின் தீண்டத்தகாத ஜாதி’’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. (Scheduled Caste - Untouchable Castes of India). 

இப்பொழுது மட்டுமல்ல, என்.சி.இ.ஆர்.டி. என்ற பாடநூல் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ள பாடத் திட்டங்கள் காவி மயம் ஆக்கப்படுவதாக ‘சகமத்’ என்னும் வரலாற்றுப் பேராசிரியர்களின் பெருமன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதுண்டே!

‘‘சிந்து சமவெளி, அரப்பா நாகரிகம் வேத காலத்துக்கு உரியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது'' என்று அவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டது (‘தி இந்து’, 1.2.2002).

வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் ‘ஃப்ரண்ட் லைன்’ இதழிலும் (19.1.2001) விரிவாக எழுதியுள்ளார். மறுப்பு அளிக்கப்படவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான அரசு அதி£ரத்தில் இருப்பதால், ஹிந்து சனாதனக் கண்ணோட்டத்தோடு பாடத் திட்டங்கள் வகுக்கப்படுவதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டி இருப்பதை நாட்டு நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்துடன் அணுகி, எதிர்ப்புக்குரலை எல்லா வகைகளிலும் உயர்த்தித் தடுத்து நிறுத்த முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும்!

புதன், 21 ஏப்ரல், 2021

நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!


நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலைபெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவேஅண்ணா சாலை'யின் பெயரும் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு' என்றும்சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடுஎன்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடுஎன்பது ‘அண்ணா சாலைஎன்று மாற்றப்பட்ட நிலையில்மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியைஅண் ணாவுக்கும்காமராசருக்கும் செய்துள்ளனர்!

விமான நிலையத்தில் அண்ணாகாமராசர் பெயர்களும் அகற்றப்பட்டுஅப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை.

விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்துமாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு .தி.மு.அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!

அரசே இப்படி போராட்டங்களைத் தூண் டலாமாஅண்ணா பெயரில் கட்சி - ஆனால்அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால்இதன் ‘‘மூலப் புருஷர்கள்'' யார்எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப் பட்டன?

தமிழ்நாட்டு மக்களேஅறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2021

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்


சென்னைஏப். 14- பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையின் பெயர்  மாற்றப் பட்டுள்ளதற்கு தமிழக  தலைவர்கள் பலரும் கண்டன தெரிவித்துள்ளனர்விவரம் வருமாறு:

வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வரு மாறு,

சென்னை மய்யத் தொடரி நிலை யம்ரிப்பன் மாளிகை அருகேநெடுஞ்சாலைத் துறையினர்கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையைபுதிதாக நாட்டி இருக்கின்றார்கள்.

1979 ஆம் ஆண்டுதந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவைஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர்தலைமையில்  .தி.மு.அரசு கொண்டாடியது.

அப்போதுபூவிருந்தவல்லி நெடுஞ்சாலைஎன்ற பெயரை ‘‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை’’ என்று மாற்றமக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுமுதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.

ஆனால்எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்து கின்ற எடப்பாடி பழனிசாமி அரசுநெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில்தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூ கத்தின்படிடில்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையைஅடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார்தமிழ்நாட்டின் தன் மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கெனவேசென்னை வான் ஊர்தி நிலையத்தில் இருந்துகாம ராசர் அண்ணா பெயரை நீக்கியதை யும் அடிமை எடப்பாடி அரசு கண்டு கொள்ளவில்லைஅதன் விளைவாகஇப்போது இந்த மாற்றம் நடந்தது இருக்கின்றது.

தமிழக முதலமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடிக்குசூடு சொரணை இருந்தால்தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளஇந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும்.

தவறினால்மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளார்.

இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை பெருமாநகரில் கடந்த 1979 ஆம் ஆண்டில்பெரியார் .வெ.ராநூற்றாண்டு விழாவை யொட்டிபொதுமக்களின் கோரிக் கையை ஏற்று அப்போதைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர்முன்முயற்சியில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு “பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை”  என பெயர் சூட்டப்பட்டதுகடந்த 42 ஆண்டுளாக மக்கள் பயன்பாட்டில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயர் நிலைத்து நிற்கிறதுஇந்த நிலையில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயரை நீக்கி விட்டு, “கிராண்ட் வெஸ்ட்ன் டிரங்க் ரோடு” என பெயர் மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜகவின் அதிகார மிரட்டலுக்கு அடிபணிந்து கிடந்த எடிப்பாடி ஆட்சியில் தந்தை பெரியாரின் சிலை கள் உடைக்கப்பட்டனபெரியார் பற்றி ஆபாசமாக பேசி இழிவுபடுத் தினர்கருப்புச் சட்டைக்கு காவி சாயம் பூசிப் பார்த்தனர்காவி ஆடை யுடுத்தி அவமதித்தனர்இந்த இழி செயலில் தொடர்ந்து ஈடுபட்ட கும்பலைக்  கட்டுப்படுத்த எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லைஇப்போது 40 ஆண்டு களுக்கும் மேலாக மக்களிடம் பழகிப் போனமுன்னாள் முதல்வர் எம்ஜி ஆரால் சூட்டப்பட்ட பெரியார் ..வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றப்படுகிறது என்றால் முதல மைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு தெரியாமல் நடந்ததாயார் நிர்ப் பந்தம் கொடுத்ததுபெரியாரின் பெயரை தமிழ்நாட்டில் நீக்கும் துணிவு எப்படி வந்ததுஎவர் ஒருவரும் வெட்கப்படவில்லையாஇந்த அக்கிரமச் செயலை தடுக்கும் முதுகெலும்பு கொண்ட எவரும் ஆளும்தரப்பில் இல்லையாவெட் கம்வெட்கம்இதனை ஒரு கணமும் சகித்துக் கொள்ள முடியாதுஉடன டியாக பெயர் மாற்ற உத்தரவை ரத்து செய்துபெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயர் நிரந்தரமாக நீடிக்கும் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்


சென்னையில் உள்ள பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

1979இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் .வெ.ரா.நெடுஞ்சாலை என்று மாற்றி அதற்கான ஆணையையும் வெளியிட்டவர் அதிமுக நிறுவனரும்முன் னாள் முதலமைச்சருமான மறைந்த எம்ஜிஆர் அவர்கள்அந்த எம்ஜி ஆரின் பாதையில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண் டுள்ள தற்போதைய தமிழக அரசு பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என்ற பெயரை மாற்றி உள்ளது கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணிந்து இந்த பெயர் மாற்றம் நடந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும்இந்த பெயர் மாற்றத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க மாட்டார்கள்.

எனவே இந்த புதிய பெயரை உடனடியாக நீக்கிமீண்டும் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்திட உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமி ழக அரசை மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

இரா.அதியமான் கண்டனம்

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில்   பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்பட்டு  அழைக் கப்பட்டு வருகின்றது.

தற்போது நெடுஞ்சாலையின் பெயர் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டடிருக்கும் அறிவிப்புப் பலகையில்  Grand Western Trunk Road  என குறிப்பிட்டு வைத்திருப்பதற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில்  கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்தின் பண்பாடுமொழிகலாச்சாரம் என அனைத்திலும் படையெடுப்பு நடத்தி அதை  தனக்கேற்றவாறு மாற்றிட துடிக்கும் மதவாத சக்திகளுக்கு முழு நேர வேலையாட்களாக மாறிய  தமிழ கத்தின் தற்போதைய காபந்து அர சாக செயல்பட்டு வருபவர்கள் உட னடியாக இந்தப் பெயரை பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என மாற்றி அறிவிப்பு பலகை வைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என  ஆதித்தமிழர் பேரவை சார்பில் வலியுறுத்துகின்றேன்.

தமிழுக்காகவும்தமிழ் மண்ணின் சுயமரியாதைக்காகவும் அரும்பாடு பட்டு உழைத்தவர் தந்தை பெரியார்.

தமிழர்களின் இதயத்தில் ஆழப் பதிந்ததுள்ள தந்தை பெரியாரின் பெயரை அந்தந்த இடத்தில் படிப் படியாக நீக்கம் செய்யத் துடிக்கின்ற மத்திய பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையிலே தமிழகத்தின் பெயரை மாற்றுவதற்கும் முனைப்பு காட்டி யுள்ளது.

இதற்கு துளியும் கூட கவலை தெரி விக்காத எடப்பாடி அரசு தற்போது தேர்தல் முடிந்து  காபந்து அரசாக செயல்பட்டு வரும் நிலையில் இந்தப் பெயர் நீக்கம்மாற்றம் செய்து தமிழர்களின் நெஞ்சத்தில் கோபத்தை வரவைத்துள்ளது இந்த எடப்பாடி அரசு.

மே 2 தேர்தல் முடிவுகள் வந்தபின் வரப்போகும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு இந்த நெடுஞ்சாலைக்கு மீண்டும் பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாற் றிடும் என திமுக தலைவர் மரியா தைக்குரிய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையை தருகின்றது.

தொடர்ந்து தமிழகத்திற்கும்தமி ழக மக்களுக்கும் இந்த காபந்து அரசு செய்துவரும் அனைத்து துரோகங் களுக்கும் இன்னும் சில நாட்களில் தமிழக மக்கள் சபையில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

டி.டி.வி தினகரன் கண்டனம்


சென்னையில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலை பெயரை தமிழக அரசு மாற்றி இருப்பதற்கு .மு.மு.பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட் டரில் கூறியுள்ள அவர், ‘சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்அவர் களால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.