பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 செப்டம்பர், 2022

பழங்குடியின பணிப்பெண் சித்திரவதை பிஜேபி பெண் பிரமுகர் கைது


ராஞ்சி, செப்.1- ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சீமா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். அதன்படி, ராஞ்சி நகரின் அர்கோரா காவல்துறையினர் பத்ராவை தேடி வந்தனர். காவல்துறையினர் தேடுவது பற்றி அறிந்ததும் சீமா தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதில், ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்ப முயன்ற சீமாவை காவல்துறையினர்  கைது செய்துள் ளனர். பழங்குடியின பெண்ணான சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுஉள்ளன.

அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிப்பறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164இன் கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை இடைநீக்கம் செய்துள்ளது. ராஞ்சி காவல்துறையினர் சீமா பத்ராவை நீதிமன்றத்தில்   நிறுத்தினர். சிறையில் அடைத்தனர்.

வீட்டுக்கு வேலைக்கு வந்த இடத்தில், பழங்குடியின பெண்ணை கொடுமையாக சித்ரவதை செய்த, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான அவரது செயலால் அந்த பகுதி மக்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.  

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கோயில் ஓதுவார் பணிக்கு பெண் நியமனம்


மாடம்பாக்கம், ஆக.16- தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு பெண் ஒருவர் ஓதுவார் பணிக்கு நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு பெண் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ தொடங் கப்பட்டுள்ள நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (14.8.2021) தொடங்கி வைத் தார். 58 பேருக்கு அர்ச்சகர்களாக பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என் பவரது மனைவி சுகாஞ்சனா என்ற பெண், ஓதுவாராக நியமிக்கப்பட்டுள் ளார்.

இவர் தற்போது தாம்பரம் சேலை யூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் கோபிநாத் ‘டிசைனிங் இன் ஜினியராக' பணி புரிந்துவருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர் இந்துசமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக் கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓது வாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவயதில் பாடல்களை நன்றாக பாடுவார் என்பதால் இவரது பெற்றோர் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளியில் பாடல்களை சிறப்பாக பாடி பயிற்சியை சிறப்பாக முடித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன் முறையாக பெண் ஓதுவாராக இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின் றனர். நேற்று (15.8.2021) முதல் பணியில் சேர்ந்த சுகாஞ்சனா காலையில் பஞ்ச புராணம், தேவாரம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணப் பாடல்களைப் பாடினார். இதைத் தொடர்ந்து மாலையும் பூஜைகள் முடிந்த பிறகு பாடல்களைப் பாடினார். பெண் ஒருவர் ஓதுவாராக மாடம்பாக்கம் கோயிலில் நியமிக்கப்பட்டுள்ள செய்தி வேகமாகப் பரவியது. இதனால் மக்கள் இவர் பாடுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.

இதுகுறித்து சுகாஞ்சனா கூறும் போது, "கரூரில் அரசு இசைப் பள்ளியில் பயிற்சி பெற்றுஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். சமீ பத்தில் பத்திரிகைகளில் விளம்பரத்தைக் கண்டு ஓதுவார் பணிக்கு விண்ணப்பித் தேன்; பணி ஆணையை பெற்றுள் ளேன். எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன். இந்த பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என் றார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2019

மாதவிடாய் நாளில் கூலி இழப்பை தவிர்ப்பதற்காக கரும்பு பெண் தொழிலாளர்கள் கருப்பையை அகற்றும் கொடுமை

மகாராஷ்டிரா முதல்வர் தலையிட காங்கிரஸ் அமைச்சர் கோரிக்கை

மும்பை , டிச . 26 : கூலி இழப்பை தவிர்ப்ப தற்காக பெண் கரும்பு கூலித் தொழிலா ளிகள் தங்கள் கருப்பையை அகற்றும் கொடுமை மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது . இந்த பிரச்னையில் உடனே தலையிடக்கோரி மாநில அமைச்சர் நிதின் ராவுத் முதல்வர் உத்தவ் தாக்க ரேக்கு கடிதம் எழுதி இருக்கிறார் . மத்திய மகாராஷ்டிராவில் உள்ள மராத்வாடா பிராந்தியத்தில் கரும்புத் தொழிலாளிகள் பெருமளவில் உள்ள னர் . அவர்களில் கணிசமான எண் ணிக்கையில் பெண்கள் இருக்கின்ற னர் . மாதவிடாய் காலங்களில் இந்த பெண்கள் வேலைக்கு செல்வதில்லை . எனவே அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது . இதை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றி விடுவதாகவும் இதுபோன்று சுமார் 30 , 000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பதாகவும் நிதின் ராவுத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் . மேலும் , இந்த பெண்களுக்கு மாத விடாய் காலமான நான்கு நாட்களுக் கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிரா அரசு மனிதாபிமான அடிப்படையில் இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு பிறப் பிக்க வேண்டும் என்று நிதின் ராவுத் தமது கடிதத்தில் கோரியுள்ளார் . காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச் சர் நிதின் ராவுத் , பொதுப்பணித்துறை , பழங்குடியினர் நலத்துறை , பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை , ஜவு ளித்துறை உள்ளிட்ட இலாகாக்களை தன் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
- தினகரன் நாளேடு 26 12 19