உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக். 19 'மாற்று முறை ஆவண சட்டப்படி அறிவிக்கப்பட்ட விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது' என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூலையில் மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத் தும் விதமாக மறைவுற்ற தேதியை பொது விடுமுறை யாக அரசு அறிவித்தது. மாற்றுமுறை ஆவண சட் டத்தின் கீழ் கல்வி நிறுவனங் கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொது மற் றும் முதல் 'ஷிப்ட்'டில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் கிருஷ்ணகிரி மாவட் டம் பேரண்டபள்ளியில் உள்ள 'பைமெட்டல் பேரிங்' நிறுவனம் ஊதியத்துடன் விடுமுறை வழங்கியது. இரண்டாவது மூன்றாவது ஷிப்ட்டில் உள்ள தொழிலா ளர்களை பணியாற்றும்படி உத்தரவிட்டது.இதை யடுத்து அவர்களுக்கும் விடு முறை வழங்கும்படி தொழிற் சங்க நிர்வாகிகள் கோரினர். அதற்கு நிர்வாகம் வார விடுமுறையில் அவர்கள் பணியாற்றினால் விடுமுறை வழங்குவதாக தெரிவித்தது.
இதை தொழிற்சங்கம் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டு மூன் றாவது ஷிப்ட் தொழிலா ளர்கள் பணிக்கு வரவில்லை. வார விடுமுறையிலும் அவர் கள் பணிக்கு வரவில்லை. அதனால் பணிக்கு வராத நாளுக்கு சம்பளம் கிடை யாது என நிர்வாகம் அறிவித்தது.
இந்தப் பிரச்சினை தொழி லாளர் நல நீதிமன்றத்துக்கு சென்றது. பணிக்கு வராத நாளுக்கு சம்பளம் வழங் கும்படி தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் பைமெட்டல் பேரிங் நிறு வனம் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதி பதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் அரசு அறி விக்கும் விடுமுறை தொழிற் சாலை சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவனங்க ளுக்கு நேரடியாக பொருந் தாது. வார விடுமுறையில் பணியாற்ற ஒப்புக் கொண் டால் விடுமுறை வழங்குவ தாக நிர்வாகம் தெரிவித் துள்ளது.தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய நிபந் தனை சலுகையை தொழி லாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் பணிபுரியாத நாளுக்கு ஊதி யம் கோர அவர்களுக்கு உரிமை இல்லை. 'பணி இல்லை; சம்பளம் இல்லை' என்ற கொள்கை இதற்கும் பொருந்தும். எனவே தொழி லாளர் நல நீதிமன்ற உத்த ரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
- விடுதலை நாளேடு, 19 10 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக