புதன், 25 அக்டோபர், 2023

ஆரியர் - திராவிடர்பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம்

சென்னை,அக்.25 - ஆரியர் - திராவிடர்பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய ‘நீட்' விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்! ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ. பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். ‘தமிழ்நாடு' என்று சொல்லாதீர்கள், ‘தமிழகம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்கவில்லையா? வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தைத் தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித் திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகி களின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்து விட்டதாம். பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வர லாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து - ஒன்றிய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து- ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த திரு.ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை? சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவது தி.மு.க. அரசு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண் டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது ‘திராவிட மாடல்' அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி யேற்றியபோது மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார். விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ் நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதோ ஒரு நீண்ட பட்டியல்! விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்! பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை! மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு! பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது! பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்! மூதறிஞர் இராஜாஜிக்கு, நினைவாலயம்! தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்! வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி! வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது! விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்! தியாகிகளுக்கு, மணிமண்டபம்! விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்! தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு! நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போசுக்குச் சிலை! தியாகி கக்கனுக்குச் சிலை! சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்! - இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று - இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம். இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடினோம். மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம். மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம். செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் படைப்புகளைத் தொகுத்துப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம். உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப் பட்டுள்ளது. காந்தியாரிடம் மாற்றம் தந்தது மதுரை! விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளிக் காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் அண்ணல் காந்தியடிகள் அவர்கள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாகச் சென்னை அருங் காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம். விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால், தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் - விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இப்படி பட்டியல்கள் ‘திராவிட மாடல்' அரசில் ஏராளமாக இருக்கின்றன என்பதை ஆளுநர் திரு.ரவி புரிந்து கொள்ள வேண்டும். ‘‘இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும்'' என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றினார்கள். முதலமைச்சர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ்அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும். இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது. அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்கா தவர் என்று விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித் தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல் வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந் தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். திராவிட இயக்கம்பற்றி முனைவர் பட்டங்கள்! தமிழ்நாட்டில் பி.எச்.டி ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப் பட்ட தலைப்புகள்- குறிப்பாக திராவிடத்தைப் பற்றிய தலைப்புகள் அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பித்தம் ஏறச் செய்திருக்கிறது. விடுதலைப் போராட் டத்தைப் பற்றி ஆய்வுகள் இல்லையாம். மகாகவி பாரதியைப் பற்றி, வ.உசி. பற்றி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. பிஎச்.டியாக மட்டுமல்ல, வெகுமக்கள் வாங்கிப் படிக்கக்கூடிய புத்தகங் களாகப் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன.அது போலவே, திராவிட இயக்கப் படைப்புகள் - படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளும் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்டு ஆளுநர் வயிறெரிந்திருக்கிறார். தந்தை பெரியாரின் தொலைநோக்கு! விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பது தான் தமிழ்நாட்டின் வரலாறு. விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற் போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, காந்தியாரைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறிய வர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’க் கடைப் பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ‘‘வெள்ளையர் ஆட்சி ஏன் ஒழியவேண்டும்'' என்று தலையங்கம் தீட்டிய பெரியார்! திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று கூவுவது ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்படும் உரைகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் யார், ‘குடிஅரசு' ஏட்டில் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ எனத் தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை ‘‘ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை!'' பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய ‘கவர்னர்' என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்து கொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை படித்திருக்கிறார். அதிமுக மேனாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் திரு.ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்! தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு- தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்! இல்லை யென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல் வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்! -இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 23 அக்டோபர், 2023

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும் - கடற்கொள்ளையர்களாலும் அன்றாடம் தாக்கப்படுவதை இனியும் பொறுக்க முடியாது - அனுமதிக்க முடியாது - கூடாது!


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை

 இதுதான் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒன்றிய அரசின் சாதனையா?

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும் - கடற்கொள்ளையர்களாலும் அன்றாடம் தாக்கப்படுவதை இனியும் பொறுக்க முடியாது - அனுமதிக்க முடியாது - கூடாது!

தமிழ்நாடு மீனவர்கள் என்றால் பா.ஜ.க. அரசுக்குப் பாரபட்சமா?
அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்!

2

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்படுவது, கொல்லப்படுவது அன்றாட செய்தியாகிவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய ஒன்றிய பி.ஜே.பி. அரசு - தமிழர்கள் என்பதால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது. இந்தப் பிரச் சினைக்கு முடிவு கட்ட அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்    என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர் களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். இலங்கை அரசின் கடற்படைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவோம் என்றெல்லாம் வாய்க்கிழிய பேசியது பி.ஜே.பி.

தாக்கப்படுவதும், பொருள்களைக் கொள்ளை அடிக்கும் படுபாதகமும்...
ஆனால், நடப்பு என்ன?

வானிலை அறிக்கைபோல் நாள்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், கடற்கொள் ளையர்களாலும் தாக்கப்படுவதும், பொருள்களைக் கொள்ளை அடிக்கப்படுவதும் படுபாதகமும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் உலகிலேயே அதிக அளவு மீன்களைப் பிடிக்கக் கூடிய பகுதியாகும். உலகளவில் 15 விழுக்காடு மீன்கள் இங்கே பிடிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டு மீனவர்கள் பரம்பரைப் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டுச் சண்டை நடைபெற்ற போது, அதைக் காரணமாகக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள்மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.

போர்தான் முடிந்துவிட்டதே! இப்பொழுது எதற்காக இந்தக் கெடுபிடிகளும், இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களும்?

இலங்கைக் கடற்படையின்
தொடர் அட்டூழியம்!

2006 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படை துப்பாக் கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்; 12 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதே ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கன்னியா குமரி அருகே இலங்கைக் கடற்படை தமிழ்நாடு மீனவர் களின் வலைகளை அறுத்துத் துவம்சம் செய்தது. மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி உயிர் தப்பி வந்தனர்.

2011 ஆம் ஆண்டு நாகை இராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 62 பேர் கைது செய்யப்பட்டனர். 

2013 இல் 150 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது.

2014 ஆம் ஆண்டில் 110 மீனவர்கள் கைது!

2015 இல் 67 மீனவர்கள் கைது, 38 படகுகள் அப கரிக்கப்பட்டன.

2016 ஆம் ஆண்டில் 82 மீனவர்கள் கைது, 29 படகுகள் பறிமுதல்.

2.2.2021 அன்று தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கொடூர மான வகையில் இலங்கைக் கடற்படையால் கொல்லப் பட்டார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பாம்பனைச் சேர்ந்த மீனவர் தோழர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டார்.

தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஹிந்தியில்
பேசச் சொன்ன இந்தியக் கடற்படையினர்!

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி மற்றும் தரங்கம் பாடி, செருதூர், கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46), சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர்    ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனை வரும் கடந்த  ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெள் ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாப்பட்டினத் திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்தியக் கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.

பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனை யிட்டு, ‘‘நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? போதைப்பொருள்கள் ஏதும் கடத்துகிறீர்களா?'' எனக் கேட்டுள்ளனர்! என்ன நடக் கிறது எனப் புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர். இலங்கைக் கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர்.

ஆனால், ஹிந்தியில் பேசச் சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கியவர்கள் இந்திய கடற்படையைச் சேர்ந்த வர்கள் என்பது பின்னர்தான் தெரியவந்திருக்கிறது. மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். படகில் சென்ற மீனவர்களை இரும்பு கம்பி யால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டி யிடச் செய்துள்ளனர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் ஹிந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற இந்தியக் கடற்படை காவலர்கள் ஹிந்தி மொழியில் பதில் சொல் லுமாறு மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீன வர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளை யர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வு மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ராமகிருஷ்ணன், மதியழகன், குமாரவேல் ஆகியோர் ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான பைபர் படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

ஏற்கெனவே கடந்த மாதம் இறுதியில், நாகையில் 15 மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைக் கடற்கொள் ளையர்களின் தாக்குதல் நிகழ்வுகள் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இலங்கைக் கடற்கொள்ளையர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள் ளையடித்துச் செல்லும் இலங்கைக் கடற்கொள்ளையர் களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாடு மீனவர்கள், இந்தியக் கடற்படை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி இலங்கைக் கடற்கொள்ளையர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அரசு பலமுறை இந்நிகழ்வுகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்தியக் கடல்பகுதியிலிருந்து இலங் கையின் கடல் எல்லைக்குள் இந்த மீனவர்கள் அத்து மீறுவதால் இலங்கை அரசு அவர்களைக் கைது செய்து, மீன்பிடிச் சாதனங்களையும் படகுகளையும் கைப்பற்று வதாகக் கூறுகிறது. ஆயினும் மீனவர்கள் கைது செய்யப் படாமல் கொல்லப்படுவதாக தமிழ்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 2006 ஆம் ஆண்டில் இந்திய மீனவர்கள் கடல் எல்லையை மீறு வதைக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு அவர்கள் மீறினா லும் அவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படாதிருக் கவும் கைப்பற்றப்பட்ட படகுகளை விரைவாக திருப் பவும் வேண்டிய வழிமுறைகளை வரையறுக்கவும் இரு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் பெற்ற மீன்பிடிப்பிற்கான வாய்ப்புகளை கண்டறியவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இணை செயற்குழு செயலற்று உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

கடந்த 30 ஆண்டுகளில் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தீவிரமாக எதிர்க்காத ஒன்றிய அரசின் போக்கையும் ஊடகங்களின் அக்கறையின்மையையும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது .

இவ்வளவுக்கும் இந்தியா - இலங்கை - மாலத்தீவு களுக்கிடையே திருட்டு -பயங்கரவாதம் மற்றும் கடல் பாதுகாப்பு போன்றவற்றில் கூட்டாகத் தகவல்களைப் பகிர்ந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும், அது காகிதக் கப்பலாகத்தான் இருந்துவருகிறது.

இந்தியா நினைத்தால் ஒரு கையளவு உள்ள சுண்டைக்காய் நாடான இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாதா? மாறாக, என்ன நடக்கிறது? இலங்கைத் தீவு பொருளாதாரச் சீரழிவில் கவிழ்ந்த கப்பலான நிலையில், இந்தியாவின் மோடி அரசு நேசக்கரம் நீட்டியதும், கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டியழுததுமுண்டே!

காரணம், தமிழ்நாடு தமிழர்கள் சம்பந்தப்பட்டது என்றால், இந்தியாவை ஆளும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை என்பதுதானே!

இலங்கையின்மீது தமிழ்நாட்டு மீனவர்கள் படையெடுத்தா சென்றார்கள்?

ஒன்றிய அமைச்சராக இருந்த மறைந்த பி.ஜே.பி.யைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், 2015 மார்ச் முதல் நாள் இலங் கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போது என்ன சொன்னார்? ‘‘ஒரு நாடு அதன் நாட்டு எல்லையைப் பாதுகாக்க முழு உரிமையும் உள்ளது'' என்று கூறினாரா இல்லையா?

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின்மீது படை யெடுத்தா சென்றார்கள்?

ஒரு பொறுப்பு வாய்ந்த ஒன்றிய காபினெட் அமைச்சர் இப்படி பேசினார் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கான பாதுகாப்பை எங்கே போய்த் தேட முடியும்?

ஒரு மாநில அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தத்தான் முடியும் - அதற்குமேல் அதற்கு அதிகாரம் கிடையாதே! நமது முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு இந்தப் பிரச்சினைமீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கேளாக் காதுடையதாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடந்து கொள்வது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது அல்லவா!

ஆடு - ஓநாய்க் கதை போல்...

கடலில் எல்லையை வரையறை செய்ய முடியாமல் காற்றடித்த திசையில் மீன் பிடிப் படகுகள் செல்லுவது இயற்கையானதுதானே! ஆடு - ஓநாய்க் கதை போல் இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குபவர்கள். இலங் கையில் மட்டுமல்ல - இந்தியாவுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்காக திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இராமேசுவரத்தில் மாநாடு நடத்தியதுண்டு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற வர்கள் பங்கேற்ற அம்மாநாட்டில் இதுகுறித்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஜெகதாப்பட்டினத்தில் அண்மையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘மீனவர்கள் பாதுகாப்பு மாநாடு'' நடத்தப்பட்டது.

ஜனநாயக முறைப்படி மக்கள் குரல் எழுப்பினால், அதை மதிக்கக் கூடிய மாண்பு - ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அரசால்தான் புரிந்துகொள்ள முடியும்.

அப்படி புரிந்துகொள்ள மறுக்கும் எதேச்சதிகாரப் பாசிச பி.ஜே.பி. அரசை வீழ்த்த மக்கள் சக்தியால் கண்டிப்பாக முடியும்.

வாதாடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

மீனவர்கள் பிரச்சினைதானே என்று அலட்சியப் படுத்தாமல், அவர்கள் நம் இனத்தவர்கள் என்பதற்காகக் கூட அல்ல - மனித உரிமை, மனிதநேய அடிப்படையில், ‘‘அவர்களுக்காக வாதாடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!'' என்ற உறுதியை ஏற்போம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.10.2023

வெள்ளி, 13 அக்டோபர், 2023

குஜராத் மாடலும் - திராவிட மாடலும்' இதோ! விளையாட்டில் பதக்கம் குஜராத்-0, தமிழ்நாடு-17


மோடி அரசின் ‘பாரபட்சம்’: ஆசிய விளையாட்டில் ‘படுதோல்வி’

ரூ.608 கோடி ஒதுக்கி ஒரு பதக்கம் கூட பெறாத குஜராத் 

33 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள 

தமிழ்நாடு மட்டும் தனியாக 17 பதக்கங்களை வென்று அசத்தல்

WhatsApp%20Image%202023-10-13%20at%2017.16.45

புதுடில்லி, அக்.13 சீனாவின் ஹாங்சோ நகரில் நடை பெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. 

மாநில வாரியாக அதிகபட்சமாக அரியானா 44 பதக்கங்களும், பஞ்சாப் 32 பதக்கங்களும், மகாராட்டிரா 31 பதக்கங்களும், உத்தரப்பிரதேசம் 21 பதக்கங்களும், தமிழ்நாடு 17 பதக்கங்களும், மேற்கு வங்கம் 13 பதக்கங் களும், ராஜஸ்தான் 13 பதக்கங்களும், மிசோரம் ஒரு பதக்கமும் வென்றுள்ளன.

இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென் றால், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறை பட்ஜெட்டில், மிகக் குறைவான நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலங்களே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க வேட்டை நடத்தி யுள்ளன. மாறாக, நாட்டிலேயே மிக அதிகமான நிதி ஒதுக்கீட்டை பெற்ற குஜராத் மாநிலம் ஒரு பதக்கம் வெல்ல முடியாமல் சோகத்துடன் திரும்பியுள்ளது என்பதுதான்.

குஜராத் ரூ.608 கோடி-“0” பதக்கம்

‘கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் ஹரியானா ரூ. 88.89 கோடியும், பஞ்சாப் ரூ. 93.71 கோடியும், மகாராட்டிரா ரூ. 110.8 கோடியும், உத்தரப் பிரதேசம் ரூ. 503.02 கோடியும், தமிழ்நாடு ரூ. 33 கோடியும், மேற்கு வங்கம் ரூ. 26.77 கோடியும், ராஜஸ்தான் ரூ. 112.26 கோடியும், மிசோரம் ரூ.39 கோடியும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத் அதிகப்பட்சமாக ரூ. 608 கோடி நிதியை பெற்றுள்ளன.

இதில், மோடி அரசிடமிருந்து ரூ.200 கோடிக்கும் குறைவான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்கள்தான், இந்தியா வென்றுள்ள 107 பதக்கங்களில் 75 பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளன. வெறும் 33 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள தமிழ்நாடு மட்டும் தனியாக 17 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

ஆனால், ரூ. 608 கோடி என பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள குஜராத் மாநிலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் திரும்பியுள்ளது. மேற்குறிப்பிட்ட விஷயம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல. மாநில எல்லைகளின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய பாஜக அரசும், இனிமேலாவது அனைத்து மாநிலங் களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான்.

விளையாட்டிலும் தங்களுக்கு வேண்டிய மாநிலம் வேண்டாத மாநிலம் என்று பாகுபாடு பார்த்து நிதி ஒதுக்கீடு செய்வதைக் கைவிட வேண்டும் என்பதுதான்.

புதன், 4 அக்டோபர், 2023

ஒன்றிய அரசின் இந்தப் போக்கை மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவேண்டும்! அக்.9 இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!


*     10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படவேண்டுமாம்!

* அப்படியானால் இன்னும் பல ஆண்டுகளுக்கு  தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது!

* ஒன்றிய அரசு மக்கள் வளர்ச்சிக்கா, வீழ்ச்சிக்கா?

* மாநில அரசின் உரிமையில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது!

1

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க கதவை மூடுகிறது ஒன்றிய அரசு - மாநில உரிமைகளில் தலையிடும் ஒன்றிய அரசின் தான் தோன்றித்தனமான இந்தப் போக்கை மாநில அரசு கள் தடுத்து நிறுத்தவேண்டும்; ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 9 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

‘‘தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை'' என்ற பெயரில் ஓர் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல மாநிலங்களின் உரிமைப்பறிப்பு -  சமூகநீதி ஒழிப்பு என்ற உள்நோக்கம் கொண்ட திட்டமாகவே இதனைக் கருதவேண்டும்.

மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கை மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும் என்பதுதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டும் அறிக்கை.

ஒன்றிய அரசிதழில் ஆகஸ்ட் 16 ஆம் நாள் வெளி யிடப்பட்டுள்ள இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடையாதா - கூடாதா?

10 ஆண்டுகளுக்கு: 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021 ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது; அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது.  (மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதில் அடங்குமோ!) புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங் கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும்.

அதிகளவில் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு வேலை கிடைக்காது என்பதால்தான் இந்தப் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.  தமிழ்நாட்டில் 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தாலும் கூட, அந்த இடங்கள் அனைத் திலும் படிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

வெளிநாடுகளிலிருந்தும்கூட மருத்துவ கல்விக்கு - மருத்துவ உதவிக்குத் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் - வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களை எல்லாம் மொத்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளுமோ ஒன்றிய அரசு?

மருத்துவக் கல்லூரி தொடங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு (Policy Decision). அதனைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் அந்த அமைப்பிற்குக் கிடையாது - அரசமைப்புச் சட்ட விரோதமே!

நோயாளிகளுக்கு டாக்டர்கள் விகிதாச்சாரம் இந்தியாவில் எட்டிவிட்டதா?

என்னே அறியாமை!

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அள்ளிச் செல்கின்றனரே!

தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள 2500 இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 783 இடங்கள், தனியார் கல்லூரிகளில் கடைசி நேரத்தில் நிர்வாகத்தால் நிரப்ப அனுமதிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை சேர்த்தால் கிட்டத்தட்ட 4,000 இடங்களில் யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். அந்த இடங்களில் பெரும்பாலும் பிற மாநில மாணவர்கள்தான் சேருகின்றனர். அதனால், அந்த இடங்கள் அனைத்தையும் தமிழ்நாட்டின் கணக்கில் சேர்ப்பது எப்படி சரியாகும்?

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கானவை; அவற்றில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் சேவை செய்வார்கள் என்று மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.  இது உண்மையான தகவல் அல்ல!

 தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளனவே தவிர, வட மாநிலங்கள் அனைத்தும் மருத்துவக் கல்வி வழங்குவதில் இன்னும் பின்தங்கித்தான் உள்ளன. அங்கு மருத்துவர் களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.

உலகின் பல நாடுகளில் விகிதாசாரம் எப்படி?

உலகில் மக்கள் தொகைக்கு இணையாக அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா தான். 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அங்கு 110 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அதற்காக அந்த நாடுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கத் தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடை விதிப்பது அநீதி.

மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனு மதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பதையும், அதற்கு ஒன்றிய அரசு உடந்தையாக இருப்பதையும் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்குமா? 

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்ட மிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். இந்த வளர்ச்சிப் பணி தண்டனைக்குரியது என்று தேசிய மருத்துவ ஆணைய மும், ஒன்றிய அரசும் கருதுகிறதா?

வட மாநிலங்களின் பரிதாப நிலை!

வட இந்தியாவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனையின் அவலங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டு - 2020 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி குழந்தை களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கபில்கான்மீது கொலைப்பழி சுமத்தி சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தது உத்தரப்பிரதேச அரசு! தற்போது அவர் சென்னையில் மருத்துவராக உள்ளார். அதேபோல் வாரணாசி மருத்துவ மனையிலும் இதே நிலைதான். அங்கும் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணமடைந்தனர். 

மருந்து பற்றாக்குறையால் மகாராட்டிரத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 2 ஆம் தேதி மகாராட்டிராவில்  உள்ள நன்னேட் என்ற நகரத்தில் சங்கர்ராவ் சவன் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இரண்டே நாள்களில் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதை யடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருத்துவர் பற்றாக் குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் அச் சத்தில் உள்ளனர். மருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 அங்குள்ள மருத்துவமனைகளின் நிலை இப்படி இருக்க, இவர்கள் தமிழ்நாட்டையும் அந்த மாநிலங் களைப் போல் மாற்ற புதுப்புது விதிகளைக் கொண்டு வருகின்றனர். வளர்ச்சிக்காக ஒன்றிய அரசா? வளர்ச்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிய அரசா?

மாநில அரசுகள் இதனைக் கடுமையாக எதிர்த்து முறியடிக்கவேண்டும்.

இதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் 9.10.2023 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.10.2023

திங்கள், 2 அக்டோபர், 2023

காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகட்டும்! ‘‘ஜாதி, மதமற்ற மனிதத்தை'' உருவாக்க காந்தியார் பிறந்த நாளில் சபதமேற்போம்!


*   காந்தியாரை ‘மகாத்மா' என்று அழைத்த பார்ப்பனர்கள் கடைசி காலத்தில் காந்தியாரின் மனமாற்றத்தைக் கண்டு அஞ்சினர்!
* காந்தியாரை விட்டு வைத்தால் ‘இனி தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து' என்று கருதியே திட்டம் தீட்டினர்!
காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது இந்தப் பின்னணியில்தான்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் அறிக்கை
1

மதவெறிக்குப் பலியான காந்தியாரின் பிறந்த நாளில், மத, ஜாதி கலவரமற்ற மனிதத்தை உருவாக்க சபதம் ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு:
இன்று (2.10.2023) அண்ணல் காந்தியாரின் 155 ஆவது பிறந்த நாள். 120 வயது வரை வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றவே பெரிதும் விரும்பியவர் அண்ணல் அவர்கள்.
இடையில் ஆதிதிராவிடர்களுக்கு ‘‘தாழ்த்தப்பட் டோருக்கு'' தொகுதி முறை கூடாது என்று சாகும்வரை ‘உண்ணாவிரதத்தை' மேற்கொண்ட காந்தியாரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு - மனிதநேயத்துடன் - தனது உறுதியான தனித்தொகுதி நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்து - மனிதநேயத்தோடு நடந்துகொண்டு அவரது உயிரைக் காப்பாற்றினார் அண்ணல் அம்பேத்கர்.

காந்தியார் படுகொலையை நடத்தியவர்கள் யார்?
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற பார்ப்பன கோட்சே கூட்டம், காந்தியாரின் உயிரைப் பறிக்க மூன்று முறை முயற்சி - மூன்றாவது முறையில், இறுதியில் ‘வெற்றி' பெற்றது.காந்தியாரை நாடு ‘‘சுதந்திரம்'' அடைந்த ஆறு மாதங்களில் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சி இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை மட்டுமல்ல, மிகப்பெரும் தலைகுனிவை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய கோரச் சம்பவமாகும்!
இத்தனைக்கும் தேசத் தந்தை காந்தியார் அவர்கள் ஹிந்து மத விரோதியா? இல்லை, இல்லை.
இதோ அவரே கூறுகிறார், படியுங்கள்!
‘‘நான் ஒரு ஸநாதன ஹிந்து என்று உரிமை பாராட்டி வருகிறேன்.
ஆயினும், ஹிந்து மதத்தின் பெயரால் நடக்கும் சிலவழக்கங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.

காந்தியாரின் மத ஆதரவும் - எதிர்ப்பும்!
‘‘வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் முதலிய ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலும், பகவான் அவதாரங்களி லும், மனிதன் மறுபிறப்பிலும் எனக்கு நம்பிக்கையுண்டு.
வேத காலத்திலிருந்த பண்டைய வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. தற்காலத்தில் அர்த்தமற்ற முறையில் அனுஷ்டிக்கப்படும் வர்ணா சிரம தர்மம் என்பது தர்மமல்ல.''
வேதங்கள் முதலியவற்றைப்பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘அவை தெய்வங்களிடமிருந்து தோன்றியவை என்ற பதங்களை நான் உபயோகிக்கவில்லை. ஏனெனில், வேதங்களுக்கு மட்டும் தனித்த ஈசுவரத்தன்மை உண்டு என்று நான் கருதுவதில்லை.
ஹிந்து வேதங்களுக்கு எவ்வளவு ஈசுவரத்தன்மை உண்டோ, அவ்வளவு ஈசுவரத்தன்மை கிறிஸ்து வேத மாகிய பைபிளுக்கும், முகமதியர் வேதமாகிய குர்ஆனுக் கும், பாரசீகரின் வேதமாகிய ஜெண்டாவஸ்தாவுக்கும் உண்டு என்று கருதுகிறவன்.

நெற்றியில் நெடுக விபூதி, நாமம் அணிவதுதான் ஹிந்து தர்மமோ? மந்திரங்களை சரியாக உச்சரிப்பதுதான் நமது மதச் சித்தாந்தமோ? அங்குமிங்கும் ஓடியாடி யாத்திரை செல்வதுதான் மதச் சேவையோ? அவற்றை யெல்லாம் போதனையல்லவென்று நான் தைரியமாய்க் கூறுவேன்.
எனக்கு என் மனைவியிடத்தில் என்ன அன்பு ஊறு கின்றதோ, அத்தகைய அன்பு மதத்திடமும் ஏற்படுகிறது.
என் மனைவியிடத்தில் எத்தனையோ குறை களுண்டு; - ஆயினும் அவரிடத்தில் ஒரு பிரேமை ஏற்படுகிறது அல்லவா? அதேபோல, எனது மதத்திடமும் நான் பிரேமை பாராட்டுகிறேன்.
அநேக கோவில்களில் கொடிய அக்கிரமங்கள் நடக் கின்றனவென்று அறிந்திருப்பினும், நான் அவைகளிடத் தில் வர்ணிக்க முடியாத பக்தி காட்டுகிறேன்.

நான் ஒரு சீர்திருத்தக்காரன். ஆயினும் ஹிந்து தர்மத்தின் ஆணிவேரான தத்துவங்களை ஒருபோதும் மீறி நடக்கமாட்டேன்.
சாசுவதமான சுதந்திரத்தையும், சாந்தியையும் அடைய நான் செய்துவரும் யாத்திரையில் எனது தேசாபிமானம் ஒரு பாகமுமாகும்.''
- இது காந்தியாரின் திட்டவட்டப் பிரகடனம்!

ஹிந்து என்ற போர்வையில் இருந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலை!
வேத மதம், ஆரிய மதம் என்ற பெயர்களாலேயே முதலில் அழைக்கப்பட்டு, பிறகு அந்நியர்களால் சூட்டப் பட்ட ‘ஹிந்து' என்ற பெயரில் அழைக்கப்படும் மதத் தினரின் பிரார்த்தனைக் கூட்டத்தில் பஜனை பாடி துவக்கிய அண்ணல் காந்தியாரை ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி பெற்று, பிறகு விலகியதாகச் சொல்லப்படும் கோட்சேவும், அவரது நண்பர்களும் கூட்டுச் சதி செய்து, ஏன் சுட்டுக் கொன்றார்கள் என்ற நியாயமான கேள்வி பொதுவாக எவருக்கும்  எழவே செய்யும் - இன்றைய இளைய தலைமுறை உள்பட!
காந்தியார் வெறும் ஹிந்து மத பக்தராக மட்டுமல்ல பிரார்த்தனைகளில், பிரசங்கங்களில் அவர் ‘ஈசுவர அல்லா தேரே நாம்' என்று மற்ற மதங்களையும் இணைத்தே பாட வைத்தார் பக்தியோடு மக்களை! என்றாலும், ஏன் ‘‘கோட்சேக்கள்'' உருவானார்கள்?
காந்தியார் ஆதரித்த மற்ற மதங்கள்  அந்நிய மதங்கள்  -ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி!

அதுமட்டுமா? காந்தியாரின் மக்கள் செல்வாக்கு - தங்களின் மத முகமூடியோடு, உயர்ஜாதி ஆதிக்க பார்ப்பன - பனியா கூட்டாட்சி உருவாக்குவதற்கு வரும் காலத்தில் தடையாக இருக்கும் என்ற கணிப்பு ஆர்.எஸ்.எசுக்கு! அதனால்தான் அந்த கொலைத் திட்டம்!
அதைத் தாண்டி காந்தியாரின் ‘‘அரசியலில் மதத்தைக் கலக்கக்கூடாது, மதச்சார்பற்ற அரசாகவே  இந்திய அரசு நடக்கவேண்டும்'' என்று கூறியதோடு,

தமிழ்நாட்டிற்கு வந்தபோது, சமூகநீதியின் அவசியத்தை உணர்ந்தவர் காந்தியார்!

சமூகநீதியின் தேவை, முக்கியத்துவத்தைத் தமிழ் நாட்டிற்கு இருமுறை வந்தபோது - பார்ப்பனர்கள் ஓமாந்தூரார் அரசுமீது ‘‘வகுப்புவாதக்'' குற்றச்சாட்டினைக் கூறி - அவர் புள்ளி விவர ஆதாரங்களுடன் மறுத்து, காந்தியாரிடம் முதலமைச்சர் ஓமாந்தூரார் விளக்கிய பிறகு, பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து, பார்ப்பனர்களிடம் காந்தியார் ‘வேதமோத வேண்டியவர்களுக்கு மெடிக்கல், என்ஜினியரிங் கல்லூரியில் எதற்கு இடம்? வருணா சிரமத்திற்கு இது விரோதமில்லையா?' என்றார்.
காந்தியாரின் மக்கள் செல்வாக்கு, தாங்கள் நினைக் கும் ஜாதி, மத ஆதிக்க ஆட்சியை அமைக்க எதிராகி விடும், மக்கள் காந்தியார் பக்கமே நிற்கக் கூடும் என் பதை அடிநீரோட்டமாக்கி, மத வெறுப்பு வைத்து, அவர்கள் காந்தியாரை விட்டு வைக்கவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக களமாடிய டாக்டர் அம்பேத்கர், தனது இலட்சியத்தையும் ‘‘பலி கொடுத்து'', காந்தியாரின் உயிரைக் காப்பாற்றி, அவர் விரும்பியபடி 120ஆண்டு வாழ தாராள ‘விசா' தருவது போல ஒதுங்கி வழிவிட்டார்!
ஆனால், ஆரியம், மதவெறி, ஜாதி வெறி அவரை விட்டு வைத்தால் எதிர்காலத்தில் மத வேடமணிந்து ஒரு பார்ப்பன சாம்ராஜ்ஜியம் அமைக்க காந்தியார் தடை யாகி, அமோக மக்களின் செல்வாக்குப் பெற்றவராகி விடாமல் தடுக்கவே அத்திட்டம்!

‘காந்தி நாடு, காந்தி மதம்' என்று பெயர் சூட்டவேண்டும் என்று 
தந்தை பெரியார் கூறியது ஏன்?
தந்தை பெரியார் முன்னோக்கோடு உரையாடினார் காந்தியாரிடமே 1928 இல், பெங்களூர் சந்திப்பின்போதே - தொலைநோக்குப் பார்வையோடு கூறியதும் வரலாறு.
அதனால் முற்பகுதியில் வருணாசிரமக் கொள்கைக் காக காந்தியாரை வன்மையாகக் கண்டித்த பெரியார், காந்தியாரை - மாறிய காந்தியார் - ஆரியக் கொடுமையை உணர்ந்த காந்தியாரைக் கண்டறிந்து உணர்ந்து, காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் வையுங்கள் என்றார்.
காந்தியார் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபொழுது, மராட்டியத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், தனது மூதுரையால் அவர்களுக்குப் பாதுகாப்புத் தந்து, வெறுக்கப்படவேண்டியது தத்துவங்களே தவிர, தனிமனிதர்கள் அல்ல என்று மக்களுக்குப் புரிய வைத்து, அமைதிப் பூங்காவாக்கினார் தந்தை பெரியார்!
இந்தியாவை மதக்கலவரமற்ற, ஜாதிக் கலவரமற்ற, மனித வெறுப்பற்ற பூமியாக்கி, கறையைக் கழுவ காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகி, அறிவுத் தெளிவை, சமத்துவ, சம வாய்ப்பை, ‘மனிதத்தை' மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இந்நாளில் சபதமேற்போம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.10.2023