தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்
மனுதர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனுதர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 செப்டம்பர், 2022

இந்து தமிழ் திசை' ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடா?



   September 22, 2022 • Viduthalai

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மானமிகு ஆ. இராசா பெரியார் திடலில் பேசியது ஆதாரமற்றது- உண்மைக்கு மாறானது என்று சொல்ல அவர்களிடம் ஆதாரம் இல்லை.

1) இந்து என்றால் - யார் கிறித்தவர் இல்லையோ, யார் முஸ்லிம் இல்லையோ, யார் பார்சி இல்லையோ - அவன்தான் இந்து என்ற சட்ட நிலையை எடுத்துக் கூறினார் ஆ. இராசா. இது தவறு என்று 'தமிழ் இந்து' கூறுமா? இரண்டாவது இனமலராகி வருகிறது.

2) இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் இருக்கிறது என்று ஆ.இராசா கூறுவதை ஏன் மறுக்க முடியவில்லை?

3) இந்து மதத்தில் சூத்திரன் என்பவன் பிர்மாவின் பாதத்தில் பிறந்தவன். அவன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தன்னுடைய தேவடியாள் மகன் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது உண்மையா, இல்லையா? இல்லை என்று 'தமிழ் இந்து' ஏன் மறுக்கவில்லை?

4) இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் யார்? மனு தர்மத்தை ஆதரிக்கும் தமிழ் இந்து வகையறாக்களா? சுயமரியாதையோடு சுட்டிக்காட்டிய ஆ. இராசாவா?

5) நூற்றாண்டு கண்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆதாரப் பூர்வமாக கூறி வந்ததைத்தானே - அந்த இயக்க வழி வந்த ஆ. இராசாவும் எடுத்துக்காட்டுகிறார்.

6) இழிவுபடுத்தப்படும் மக்களின் சார்பாக ஆவேசக் குரல் எழுப்புவதுதான் - சுத்த ரத்த வோட்டமுடையவனின் அடிப்படைக் கடமை.

7) உண்மையைச் சொன்னதற்காக, ஓர் இனத்தின் சுயமரியாதைக்காகக் குரல் கொடுப்பவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பார்ப்பனர்கள், சங்பரிவார் சக்திகள் 'தமிழ் இந்து' போன்ற பார்ப்பன ஏடுகள் கூறுகின்றன என்றால் இதன் பொருள் என்ன?

"ஆமாம், நீங்கள் சூத்திரர்கள் தான், வைப்பாட்டி மக்கள்தான் அதனை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் - எதிர்த்துப் பேசக் கூடாது" என்று இந்த 2022லும் அடம் பிடிக்கிறார்களா? அதற்காகக் கடை அடைப்பு நடத்தச் சொல்லுவது எந்த மனப்பான்மையில்?

8) பக்திப் போதையில் வீழ்ந்து கிடப்பதால் நாம் எதைச் சொன்னாலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் கண் மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைதான் இதற்குக் காரணமா?

9) இராமாயண காலத்திலிருந்து விபீஷணர்கள் இருந்து வருகிறார்கள் என்ற தைரியமா?

10) நாங்கள் சூத்திரர்கள் தான், வைப்பாட்டி மக்கள்தான் - அதைக் கேட்க நீ யார் என்று அண்ணாமலைகள் கேட்கிறார்களா?

11) அண்ணா திமுக என்று பெயர் வைத்துள்ள கட்சியும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவது எவ்வளவுக் கேவலம்!

12) அண்ணா எழுதிய 'ஆரிய மாயை' நூலை அண்ணா திமுகவில் உள்ள ஒருவர் கூடப் படித்ததில்லையா?

13) கம்ப இராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று சொன்ன 'அதிமேதாவி' தான் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரா?

14) 'ஆரிய மாயை'யில்  நாம் இந்து இல்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளாரே - இதோ ஓரிரண்டு எடுத்துக்காட்டு:

"ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல, சுதல, தராதல, இராசாதல, மகாதல, பாதாளம் என கீழ் உலகம் ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக,  சத்தியலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே.  நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும், புன்செயும் சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனுவும், கற்பகவிருட்சமும், ரம்பையும், ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்!  நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம்  கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி "நாமார்க்குங் குடியல்லோம்" என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது, சேரியும் கூடாது, அக்கிரகாரமும் ஆகாது, யோக - யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர்  எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? "இந்து மதம்" என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் "இந்து" என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் 'இந்து மார்க்கத்தில்,' போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!"

(அண்ணா தீட்டிய 'ஆரிய மாயை' நூலின் பக்கம் 31, 32)


அண்ணா பெயரில் கட்சியை வைத்திருக்கும் ஆசாமிகள் கட்சியிலிருந்து அண்ணா பெயரை நீக்கப் போகிறார்களா? கொடியிலிருந்து அண்ணாவின் உருவத்தைக் கிழித்து எறியப் போகிறார்களா?

15) ஏதாவது பிரச்சினை கிடைக்காதா? அதை வைத்து அரசியல் நடத்தி விளம்பரம் பெறலாம் என்று அண்ணாமலைகள் நப்பாசை கொள்ளலாம்.

பார்ப்பனர்களின் கைதட்டலைப் பெறலாம்.

முருகனுக்கு லாட்டரி அடித்ததுபோல பிஜேபி ஆட்சியில் ஏதாவது பதவி பெறலாம் என்ற எண்ணத்தில்  அன்றாடம் ஏடுகளில் பெயர் வருவதற்கு ஆலாபரணம் செய்யலாம்.

இது தந்தை பெரியாரின் திராவிட மண் - உங்கள் 'பாச்சா' பலிக்காது 1971 தேர்தலை விடவா? திராவிடர் கழகம் நடத்திய சேலம் மாநாட்டை மய்யப்படுத்தி, ராமனைத் தூக்கிக் கொண்டு பட்டிதொட்டி எல்லாம் ராஜாஜி தலைமையில் பிரச்சாரம் செய்தார்களே - என்னாச்சு?

இதுவரை எந்தக் கட்சியும் பெறாத 184 இடங்களில் அல்லவா தி.மு.க. வெற்றி பெற்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் முதலமைச்சர் ஆனார். 

முருகன் வேல்யாத்திரை நடத்தினாரே, கடந்த தேர்தலில் கிருஷ்ணனைக் கையிருப்பாகக் கொண்டு அலைந்தது எல்லாம் என்னாச்சு? 

"ஆன்மீகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களது தனித்துவம்" என்று 'துக்ளக்'கில் குருமூர்த்தி (19.2.2022 பக்கம் 29) எழுதியதை நினைவூட்டுகிறோம். பார்ப்பன ஏடுகளே, அனுமார் அண்ணாமலைகளே ரொம்பவும்தான் துள்ளாதீர்கள்!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:11 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்து தமிழ் திசை, பதிலடி, மனுதர்மம்

வியாழன், 12 நவம்பர், 2020

திருமாவளவன்மீது பாயும் தீவட்டிகளே ! (மனு-பெண்)

 இதற்கென்ன உங்கள் பதில் ? 

மனுதர்மம் - அத்தியாயம் 9 ; ஸ்மிருதி சுலோகம் 19 " மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் , சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன . அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்திற்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தங்களைக் கேளுங்கள் . "

 ஸ்மிருதி சுலோகம் 20 : " ஒருவன் தன்னிட தாய்க்கு மா விபச்சாரம் நேரிட்டதாக அறிந்து அதற்குப் பிராயாச்சித்தம் செய்கிறான் . என் தாயானவள் கற்பின்றி அயலான் வீட்டிற்குப் போய் , அங்கு பரபுருஷனைப் பார்த்து , யாதாவது மனதினால் ஆசைப்பட்டிருந்தால் அந்த ஆசையினால் உண்டான ரேதஸ்ஸை என் பிதா தனது ரேதஸ்தினால் பரிசுத்தம் செய்யக் கடவன் . "
இது மாதர் நிலையில்லா மனமுடையவர் என்கிறதற்கு திருஷ்டாந்தரம் . 

ஆதாரம் : 1979 ஆம் ஆண்டு மனுதர்ம சாஸ்த்ரம்.
- விடுதலை நாளேடு, 28.10.20
இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:54 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திருமாவளவன், பெண்கள், மனுதர்மம்

செவ்வாய், 10 நவம்பர், 2020

மனுதர்மத்தை விமர்சித்து தொல்.திருமாவளவன் பேச்சு - எம்.பி., பதவியிலிருந்து விலக்கக் கோரிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி!


பெண்களையும், பார்ப்பனரல்லாதாரையும் இழிவுபடுத்தும் மனுதர்மம் - மக்களின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே!
-------------------------------------------------------------
மனுஸ்மிருதி - ஜாதியை, பெண்ணடிமையை வற்புறுத்திப் பாதுகாக்கும் அறத்திற்கும், சமத்துவத்திற்கும், அறிவுச் சுதந்திரத்திற்கும் எதிரான ஒரு நூல் என்பதை, அய்ரோப்பிய யூனியன் நாடுகள் சார்பில் கடந்த செப்டம்பரில் (25, 26), அங்கே நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களது உரையைத் திரித்து வெளியிட்டதோடு, அதன் காரணமாக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றெல்லாம் பா.ஜ.க.வினர் - வேறு அரசியல் மூலதன சரக்கு தி.மு.க. கூட்டணிக்கு எதிராக ஒன்றும் கிடைக்காததால், இதனை வைத்துப் பிரச்சாரம், சிற்சில இடங்களில் போராட்டம் என்ற கூத்தும் நடைபெற்றன!

வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

ஒரு வழக்குரைஞர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், திருமாவளவனை நாடாளுமன்றப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உத்தரவிடவேண்டும் என்று வழக்கு ஒன்றையும் தொடுத்தார்; அது விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்து, தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு (ஜஸ்டீஸ் சத்திய நாராயணன், ஜஸ்டீஸ் ஹேமலதா) முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்து, சில கேள்விகளையும் எழுப்பியது. அதற்கு உரிய முறையில் வழக்குப் போட்டவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில், அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு மறுத்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்!

1. திருமாவளவனின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது; ஆட்சேபகரமாக இருந்தால், அதுபற்றி யோசித்து நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும்.

2. இதுபோன்ற வழக்குகள் போடுவதன்மூலம் நீதிமன்றத்தை அரசியல் பிரச்சாரமாக, பிரச்சினைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை களமாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

3. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் திருமாவளவனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோருகிறீர்கள்? 
என்று எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித தெளிவான பதிலும் அளிக்க முடியாமல் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் ‘மிஸ்டு கால்’மூலம் தங்கள் கட்சியை வளர்க்க முயன்ற பா.ஜ.க.வினர் அதில் வெற்றி பெற முடியாத நிலையில், இப்படி திட்டமிட்டே, திரிபுவாதம், அழிவழக்குகள் போடுவதை ஒரு அச்சுறுத்தல் உத்தியாகவும், அரசியல் பிரச்சாரம், கட்சி மேலிடத்தின் செல்வாக்கை உண்டாக்கி,  அதன் பார்வை விழுந்தால் தாங்கள் ஏதாவது பதவி பெறலாமே என்பதற்காக (மத்திய ஆட்சி பா.ஜ.க. வசம் இருப்பதால், பல மத்திய அரசு நிறுவனங்களில் இவர்கள் இடந்தேடிகளாகவும் ஆகும் வாய்ப்புகள் உள்ளன) இப்படி ஒரு முயற்சியில்  ஈடுபடுவதும், தமிழ்நாட்டில் உள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இரவோடு இரவாக காவி பூசுதல், சிலரைக் காட்டி (லெட்டர் பேட் அமைப்புகள்மூலம்)  விளம்பரம் தேடிடும் வித்தைகளையும் கையாளும் மலிவான ‘புஸ்’வாண வேடிக்கை விட்டுப் பார்க்கிறார்கள்.

வல்லடி வழக்கு - வம்பு வளர்ப்புகள் 
அசைத்துவிட முடியாது!

கடற்பாறைகளான கொள்கை லட்சிய மாவீரர்களை, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், கழக வழி நிற்கும் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்களானவர்களையும் இத்தகைய வல்லடி வழக்கு, வம்பு வளர்ப்புகளும் ஒன்றும் அசைத்துவிட முடியாது!

மாறாக, இது காவிகளுக்கு எதிராகவே இளைஞர்கள் மத்தியில் திரும்பும்; திரும்பிக் கொண்டிருப்பது உறுதி!
வழக்குப் போட்டவர்களால் எவ்வளவு பலவீனமான வாதம் - அந்த உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை படித்தால், எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.

‘‘2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ள மனுஸ்மிருதிக்கு (இதுவே கடைந்தெடுத்த புளுகு) விளக்கமளிக்க திருமாவளவன் சமஸ்கிருதப் புலமை பெற்றவர் அல்ல; அவர் கருத்துத் தவறானது. அவர்தாம் கூறியதை நியாயப்படுத்தி பேசி வருகிறார்; எனவே, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்‘’ என்று கோரிக்கை வைத்தது எவ்வகையிலாவது பொருத்தமான வாதம் ஆகுமா?

ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?

(1) சமஸ்கிருத நூல்களைப்பற்றி சமஸ்கிருதம் தெரிந்தவர் மட்டும்தான் பேசவேண்டும் என்றால், அசல் மனுதர்ம மொழி பெயர்ப்புகள் சமஸ்கிருத சுலோகத்தோடு இணைத்து போடப்பட்டு, அச்சிடப்பட்டு, நூறாண்டுகளுக்கு முன் வந்த பதிப்பு - ஆதாரமில்லையா?

(2) டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம் படித்த அறிஞர், சமஸ்கிருதப் பண்டிதர்கள் கருத்தையெல்லாம் கரைத்துக் குடித்து மனுதர்ம நூலைப் படித்து 1927 இல் பகிரங்கமாகக் கொளுத்தினார் - அவர்தான் அரசமைப்புச் சட்டம் உருவாகவே மூலகர்த்தா என்பதை மறந்துவிட்டு, இப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதனை அரசியல் மேடையாக்கிட முயலலாமா?

(3) நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டுக்கு விரோதம் மனு என்பதால்தானே, மனித தர்மத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் மனுதர்மத்தை எதிர்க்கின்றனர்!

(4) நாட்டில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் சரி பகுதியாக உள்ள பெண்களை, சம உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் லாயக்கானவர்கள் அல்ல என்றும், இழிவுபடுத்தியும் எழுதியிருப்பது ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?

‘‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி’’ என்ற மனோன்மணியம் சுந்தரனார் கூற்றை மறுக்க முடியுமா?

காவிகளே, உருப்படியான அரசியலை 
நடத்திட முன்வாருங்கள்!!

எனவே, ஆழந்தெரியாமல் காலை விட்டு, அவதிப்பட்டு, அவமானத்தைச் சுமக்கின்ற காவிகளே, உருப்படியான அரசியலை நடத்திட முன்வாருங்கள்!!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்

10.11.2020 
சென்னை.
இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:11 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, திருமாவளவன், மனுதர்மம்

சனி, 7 நவம்பர், 2020

மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற மனுநீதிக்கொள்கை

ஆத்திரம் ஆவேசம் அடையாதீர்கள் ; படித்த பின்..... பிராமணன் எழுதிவைத்துள்ள மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற  மனுநீதிக்கொள்கை
(தயவுசெய்து ஆழ்ந்து கருத்தூண்றி கவனமாகப் படியுங்கள்... குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக படித்துணர்ந்து சிந்திக்க வேண்டும்)
1. *"பிராமண குலத்தில் பிறந்தவன் ஆச்சாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது"*
 (அத்தியாயம் 8. சுலோகம் 20.)

2. *"சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாயிருக்கும்"*
 (அத்தியாயம்8. சுலோகம்.22.)

3. *"சூத்திரனாகவும், மிலேச்சனாகவும் (இழிவானவன்) பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி"*
 (அத்.8. சுலோ. 22.)

4. *"ஸ்திரிகள்(பெண்கள்) புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை"* 
(அத்.8. சுலோ.112.)

5. *"நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை 'சத்தியமாகச் சொல்லுகிறேன்' என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது 'சத்தியம்'என உணர வேண்டும்"*
 (அத். 8. சுலோ. 113 115.)

6. *"சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ. 270.)

7. *"சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ.271.)

8. *"பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்* 
(அத்.8. சுலோ.272.)

9. *"சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்"* 
(அத்.8. சுலோ.281.)

10. *"பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை"* 
(அத்.8. சுலோ.349.)

11. *"சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."*
*"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்."* 
(அத்.8. சுலோ.380.)

12. *"அரசன் ; பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு சூத்திரனை பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்."* 
(அத். 8. சுலோ.410.)

13. *"பிராமணன் கூலி கொடுக்காமல் சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவதற்குத்தான் கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்"* 
(அத். 8. சுலோ.413.)

14. *"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்"* 
(அத். 8. சுலோ.417.)

15. *"சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது"* 
(அத். 9. சுலோ.416.)

16. *"பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை"*
 (அத். 8. சுலோ.155.)

17. *"பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்."* 
(அத்.9. சுலோ.248.)

18. *"பிராமணன் மூடனானாலும்(முட்டாள்) அவனே மேலானதெய்வம்"* 
(அத். 9. சுலோ. 317.)

19. *"பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவர்கள் (வணங்கத் தக்கவர்கள்) ஆவார்கள்."* 
(அத். 9. சுலோ.319.)

20. *"பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்."* 
(அத்.9 சுலோ. 320.)

21. *"சூத்திரன் ;  பிராமணுக்குபணி விடை செய்வது  ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும் க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால்களவு செய்தாவது, அல்லது பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு."* 
(அத்.11. சுலோ.12.)

22. *"சூத்திரன் வீட்டிலிருந்து கேட்காமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." 
(அத்.11. சுலோ.13.)

23. *"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது."* 
(அத்.11. சுலோ.20.)

24. *"பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."* 
(அத்.11. சுலோ.66.)

25. *"ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் என்னவோ ; அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்."* 
(அத்.11. சுலோ.131.)

25(அ). *"அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது."* 
(அத்.11. சுலோ.132.)

26. *"க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் (அரசாட்சி) பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமணுக்கு பணி விடை செய்வதே தவமாகும்."* 
(அத்.11 சுலோ.285.)

27. *"சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்."*
 (அத்.10. சுலோ.75.)

28. *"பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் ; அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

29. *"சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

30. *"பிராமணன் உண்டு மிகுந்த(மீதி) எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்."* 
(அத்.10. சுலோ.125.)

31. *"சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாக இருந்தாலும் கண்டிப்பாக பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்."* (அத்.10. சுலோ.129.)
(கோபம் கொப்பளிக்க ; மனக்குமுறலுடன் படித்து முடித்திருப்பீர்கள்.....சிந்தித்துப் பாருங்கள்...)
பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரான மனுஸ்மிருதி...என்பதை புரிந்து கொள்ளுங்கள்; தமிழ் மக்களே...
-கட்செவி வழியாக...
இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:39 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மனுதர்மம்

வெள்ளி, 6 நவம்பர், 2020

மனுதர்மத்தைக் காப்பாற்ற முடியாத மனுவாதிகள்!

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் கற்பிக்கிறதே - ஒரு குலத்துக்கொரு நீதி பேசுகிறதே மனுஸ்மிருதி - பெண்களை விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று ஒட்டு மொத்தமாகக் கேவலப்படுத்துகிறதே - நான்கு வருணங்களைக் கடவுள் பிர்மாவே படைத்தார், அதில் நான்காம் வருணத்தவரான சூத்திரன் விபச்சாரி மகன் என்று கூறுகிறதே என்று ஆதாரத்தோடு சுட்டிக் காட் டினால் அறிவு நாணயமாகப் பதில் சொல்ல வாக்கற்ற கோழைகள் வேறு பக்கம் திசை திருப்புகிறார்கள்.

தொல்காப்பியம் போன்ற சங்க நூல்களைக் கொளுத்துவீர்களா என்று 'துக்ளக்' குருமூர்த்தி அய்யர் எதிர் கேள்வி எழுப்புகிறார். இதன் மூலம் 'ஆம் நாங்கள் மனுஸ்மிருதி பேர்வழிகள் தான் - அதில் எள்ளளவும் யாருக்கும் அய்யப்பாடு வேண்டாம்' என்று 'காப்புக் கட்டி' சத்தியம் செய்து விட்டார்கள் என்று பொருள்.
இனி யாராவது 'பார்ப்பனர்கள் முன்புபோல் இல்லை - எவ்வளவோ திருந்தி விட்டார்கள்' என்று நாக் கூசாமல்  சொல்ல முன் வருவார்களேயானால், அவர் களை பைத்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்பி, 'சங்கிலி போட்டுக்' கட்டி வைக்க வேண்டியதுதான்.

தொல்காப்பியம் குறித்து தந்தை பெரியார் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

"தமிழர்களிடத்தில் இல்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் ஜாதி முறையை ஆரியர் மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்” என்று பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) 'தமிழ்மொழியின் வரலாறு' எனும் நூலில் எழுதுவதும் உண்மையே!
அதே நேரத்தில் தொல்காப்பியத்தில் பெண்கள் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்றோ, சூத்திரன் என்றோ, அவன் விபச்சாரி மகன் என்றோ சொல்லப் பட்டிருந்தால் 'துக்ளக்' பூணூல் கூட்டம் எடுத்துக்காட்ட வேண்டும்.

ஆண்களுக்குச் சமத்துவமாகப் பெண்கள் இல்லை என்பது வேறு. அந்தப் பெண்களே விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று இழிவுபடுத்துவது வேறு.
இழிவுபடுத்துவதும், உரிமை மறுப்பதும் ஒன்றல்ல; உரிமை மறுப்பு என்பது கருத்துக்குக் கருத்து மோதல் - எதிர்த்துப் போராடுதல் ஆகும். ஆனால் இழிவு படுத்துவது என்பது எதுவாக இருந்தாலும் எரிக்கப்பட வேண்டியது என்பதை சுயமரியாதை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

"எதிர்ப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு - எரிப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு;  இரண்டும் ஒன்றல்ல;  ஆனால் பகுத்தறிவு என்றாலே, அது பித்தலாட்டம்" ('துக்ளக்' 4.3.2009) என்று கருதுகிற கூட்டத்திடம் இதனை எதிர்பார்க்க முடியாதல்லவா!

மனிதன் என்றாலே ஆறாவது அறிவு - அது பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியானது- மானுடவியல் கூறுமாகும்.

அதையே பித்தலாட்டம் என்பவர்களை அய்ந்தறி வுப் பட்டியலில் வைக்க வேண்டியதுதான்; நாம் யாரா ரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெட்கப்படத்தான் வேண்டும்.  மனுதர்மத்திற்கு வக்காலத்து  வாங்கும் 'சோ'வே கடைசி வரை அதைக் காப்பாற்ற முடியவில்லையே!

"சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று ஒருபுறம் கூறுகிறது மனுதர்மம் - பிராமணர் அல்லாதார்களிட மிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமண னுக்கு அளிக்கிறது. பிராமணர் அல்லாதவன் எனும் போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா?

இந்த முரண்பாடு - அதாவது மேற்கண்ட விதிக்கு சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு மனுஸ்மிருதியில் இருக்கத்தான் செய்கிறது"
('துக்ளக்' 8.11.2000)
என்று உண்மையை வேறு வழியின்றி ஒப்புக் கொண்டவர்தான் குருமூர்த்தி அய்யரின் குருநாதர் திருவாளர் சோ. ராமசாமி. 

இதற்கெல்லாம் அவர் களிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அடுத்த இதழில் வேறு பக்கம் தாவி விடுவார்கள் - பகுத்தறிவை வெறுக்கும் இந்த அறிவுக் 'கொழுந்துகள்(?)'

நன்றி விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper, 6.11.20
இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:04 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மனுதர்மம், மின்சாரம்

வியாழன், 5 நவம்பர், 2020

வேளுக்குடி வேதியர்க்கு வினாக்கள்

இவ்வார 'துக்ளக்' (11.11.2020) முழுவதும் மனுஸ்மிருதிக்கே அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.
சகோதரர் திருமாவளவன் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டக் கருத்தரங்கில் மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் உண்மையை எடுத்துச் சொன்னாலும் சொன்னார் - பா.ஜ.க.வினரும் சங்பரிவார்களும் பார்ப்பனர்களும் இடுப்பு வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல் ஆத்திரத்தில் அம்மணமாக ஆடித் திரிகிறார்கள்.

ஆதாரப் பூர்வமாக இத்தனையாவது அத்தியாயம் - இத்தனையாவது சுலோகம் என்று எடுத்துக்காட்டிய நிலையில் அதற்குப் பதில் சொல்ல முடியாத பரிதாப நிலையில் விழி பிதுங்கி, உடல் வியர்த்து உளற ஆரம்பித்து விட்டனர்.

இப்படி ஆதாரத்தோடு அத்தியாயம் எண், சுலோகம் எண்களைக் கூறி எடுத்துச் சொன்ன பிறகும்கூட யாரோ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் என்ற நாமதாரியை தேடிப் பிடித்து இவ்வார துக்ளக்கில் (பக்கம் 13) எழுத வைத்துள்ளனர்.

அத்தியாயம் - சுலோகங்களைக் குறிப்பிட்டு எழுதிய பிறகும், அய்யங்கார் வாள் எழுதுகிறார்:
பெண்கள் இழிவாகக் கூறப்பட்டிருந்தால், அது எந்த ஸ்லோகம் என்று குறிப்பிட்டு, அதன் அர்த்தம் தெரிந்தால் அதையும் சொல்ல வேண்டும். ஆனால் மனுஸ்மிருதியை விமர்சிக்கும் யாரும் அப்படி தெளிவாகக் கூறவில்லை என்று எழுதுகிறாரே - இவர்களை என்ன சொல்ல!

ஏதோ இந்த அய்யங்கார் தான் நாம் எழுதியதைப் படிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் - 'விடுதலை' ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியவற்றை அறிவு நாணயத்தோடு துக்ளக் ஆசிரியர் குழுவில் ஒரே ஒருவராவது யோக்கியமாக எடுத்துக் காட்டியிருக்க வேண்டாமா?

கிருஷ்ணன் அய்யங்கார் ஸ்வாமிகள் கேட்ட தற்காக ஒன்றிரண்டை மீண்டும் ஆதாரத்தோடு இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.

1) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 14 என்ன கூறுகிறது!
மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

2) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 17 என்ன கூறுகிறது?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

3) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 19 என்ன கூறுகிறது?

மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ள வர்களென்று அனேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்குத் திருஷ்டாந்தரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில்  சொல்லிய பிரயாச்சித்தத்தைக் கேளுங்கள்.

எடுத்துக்காட்டுக்கு இவை மூன்றும் போதும் என்று கருதுகிறோம்.

அடுத்த 'துக்ளக்' இதழில் திருவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இதுகுறித்து வியாஸம் எழுதுவாரா?
அறிவு நாணயம் இருந்தால் 'துக்ளக்' அவரிடம் பதிலைப் பெற்றுப் பிரசுரிக்குமா? எங்கே பார்ப்போம்.

எந்தப் பதிப்பில் யார் எழுதி, யாரால் வெளியிடப் பட்டது என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள். அதற்கும் இடம் கொடுக்காமல் அதற்கும் இதோ ஆதாரம்:
இவ்வளவுக்குப் பிறகும் பழைய பொய் மூட்டைகளை  அவிழ்த்துக் கொட்டினால் உங்கள் யோக்கியதையின் ஆபாசம் இதுதான் இதுதான் என்று தமக்குத்தானே அம்பலமாகும்.
- மின்சாரம்
4.11.20
இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:18 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: துக்ளக், மனுதர்மம்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • வாகை சூடிய வாசிங்டன்
    கலி. பூங்குன்றன் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத்...
  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.