பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2026

பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!




* நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
* தந்தை பெரியார் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா?  தமிழை நீஷப் பாைஷ என்றும், சமஸ்கிருதத்தைத் தேவ பாைஷ என்றும் கூறுவோர் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினருக்குத் தமிழ்மீதும், தமிழர்மீதும் இருப்பது வயிற்றெரிச்சல்! தந்தை பெரியாருக்கு இருப்பதோ தாய்க் கோழியின் எரிச்சல்!

மாநிலங்களவையில் ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் மிகச் சரியாகத் தான் பேசி இருக்கிறார். தந்தை பெரியாரைப்பற்றி திரித்துப் பேசிய,   நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  முதல் பிஜேபியினர் அனைவரும் பதறுகின்றனர். பெரியார் அந்தக் கூட்டத்தை இன்னும் பதறடித்துக் கொண்டுதான் இருப்பார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தனது முதல் ‘கன்னி’ உரையைச் (Maiden Speech) சிறப்பாக நிகழ்த்தியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்   ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் அவர்கள். தன்னுடைய உரையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காந்தியார் உள்ளிட்டோரைத் தன்னுடைய ஆசான்களாகவும், தாத்தா, தந்தையராகவும் முன்னிறுத்தி அவர் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கதாகும்.

நிதி அமைச்சருக்குக் கமல்ஹாசன் எதிர்ப்பு!

எஸ்.அய்.ஆர்., நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட தோழர் கமல்ஹாசன், கடந்த ஆண்டு 2025 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆற்றிய உரையில் தமிழ் பற்றித் தெரிவித்த கருத்துகளுக்குக் கடும் மறுப்பையும் பதிவு செய்துள்ளார்.

‘தமிழன் பிச்சையெடுக்க மாட்டான்; அதிலும் உங்களிடம் பிச்சையெடுக்க மாட்டான். பிச்சையெடுத்துப் பழக்கப்பட்டவர்கள், அது உதவாதென்று, பின்னர் உண்டியலை நீட்டியது வரை’, தன் கோபத்தை நாடறிய வெளிக்காட்டி அமர்ந்தார் கமல்ஹாசன்.

கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசியது அவருடைய கருத்தில்லை என்றும், பெரியாரின் கருத்தையே அவர் எடுத்துக் காட்டியதாகவும் பா.ஜ.க.வினர் ஊடகங்களில் விளக்கமளிக்கின்றனர்.

தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமலேயே நிதியமைச்சர் அம்மையார் பேசினாலும்   எந்தச் சூழலில் அவர் பெரியாரைத் துணைக்கழைத்தார்?

ஒன்றிய கல்வி அமைச்சரின் சண்டித்தனம்!

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தர முடியாது என்று சண்டித்தனம் செய்தார்; தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்த முயற்சித்தார். தமிழ்நாடு அதைக் கண்டித்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அதனைக் கண்டித்தனர்.

அதன் நியாயத்தை உணராத தர்மேந்திர பிரதான், தமிழர்களை ‘நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள்’ என்று அவையிலேயே பேசினார். கொதித்தெழுந்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களைக் கொச்சைப்படுத்திய அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். அவரது வார்த்தைகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

தந்தை பெரியார் பேச்சைத் திரித்துப் பேசிய நிர்மலா சீத்தாராமன்

அந்த நிலையில் தான், தாங்கள் பின்வாங்கிய கோபத்துடன், தர்மேந்திர பிரதானுக்கு வக்காலத்து வாங்கி நாடாளுமன்றத்தில் பேசினார் நிதியமைச்சர் அம்மையார். அதில், “தமிழ்நாடு போற்றிக் கொண்டாடும் ஒரு முக்கியமான தலைவர், நான் அவர் (பெரியார்) பெயரைச் சொல்லப் போவதில்லை, அவர் தமிழைப் பற்றி குறை சொல்லவில்லையா?  அவரை எப்படி இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்று பேசிவிட்டு, ஆதாரம் காட்டுவதாகச் சொல்லி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் வழக்கத்தைப் போல, தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், தந்தை பெரியார் எழுதியவற்றை முன் – பின் வெட்டிவிட்டு,  நடுவில் சில வரிகளை மட்டும் சுட்டிக் காட்டிப் பேசினார்.

காலம் காலமாக இந்துத்துவவாதிகள் ஓட்டித் தேய்ந்துபோன அதே பழைய கிராமபோன் தட்டை இவர் நாடாளுமன்றத்தில் ஓட்டினார். நாடாளுமன்றத்தில் பேசுபவர் கொஞ்சம் ஆதாரத்துடன், சரியான தரவுகளுடன் பேச வேண்டாமா? அவர் இரண்டு தேதிகளில் ‘‘விடுதலை’’யில் செய்தி வந்ததாகச் சுட்டிக் காட்டினார்.

வாட்ஸ் அப் வதந்திகளை நம்பும் பரிதாபத்துக்குரிய நிதி அமைச்சர்

27.11.1943 ‘‘விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதியதாக எதையோ படித்தார். முடிந்தால் அம்மையார் அந்த நாள் ‘விடுதலை’யை எடுத்துக் காட்டலாமே! முடியாது. ஏனெனில், 1943 செப்டம்பர் மாதத்திலிருந்து விடுதலை ஏடு யுத்தப் பிரச்சாரத்திற்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் அது பெரியாரின் கைகளுக்கு வருகிறது. ஆனால், வாட்ஸ் அப் வதந்திகளைப் பரப்புவோர் அதையே ஆதாரமாகக் காட்டி நாடாளுமன்றத்திலும் பேசி அதன் மாண்பைக் கெடுக்கலாமா?

மற்றொரு தேதியில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதிலாவது ‘அறிவு நாணயம்’ இருக்க வேண்டாமா? ‘துக்ளக்’கில் வந்த ஒரு துண்டுப் பகுதியை எடுத்துப் படித்த அவர், அதிலேயே ‘தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடிய வில்லை’ என்று ஒரு ‘புலவர் பாடியிருப்பதாகப் பெரியார் சுட்டிக் காட்டியிருப்பதை’த் தமிழில் படித்துக்காட்டிவிட்டு, ஆங்கிலத்தில் அதைச் சொல்லும்போது, பெரியாரே அப்படிச் சொன்னது போல் திரித்துப் பேசினாரே! ஏன்?

தந்தை பெரியார் பேசியதை எல்லாம்
ஒப்புக் கொள்கிறார்களா?

‘பெரியார் பேசியதைத் தானே நிர்மலா அம்மையார் எடுத்துக்காட்டினார்’ என்று சொல்வோர், ‘மற்றொரு புலவரின் பாடலைத் தானே பெரியார் எடுத்துக்காட்டினார்’ என்ற உண்மையை மறைப்பதேன்? 16-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்பவர் எழுதிய தனிப் பாடல் ஒன்றைத் தானே பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அதை நியாயமாக எடுத்துச் சொல்வதில் என்ன தயக்கம்? அதைத் திரிப்பானேன்?

அதன் வரலாறு தெரியாதவர் இப்படிப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

‘தந்தை பெரியார் தமிழைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார், அப்படிச் சொல்லிவிட்டார்; அதனால் தர்மேந்திர பிரதான் சொன்னது தவறில்லை’ என்ற தொனியில் தானே அந்த அம்மையார் பேசினார். அப்படியென்றால் பெரியார் பேசியதையெல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா? பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அதே கட்டுரையில், பெரியார், ‘ஏன் தமிழ் இலக்கியங்களை ஏற்க மறுக்கிறேன்’ என்று எழுதுகிறாரே! இவர்கள் இப்போது தூக்கிக் கொண்டு வரும் அகஸ்தியரைக் கிழித்துப் போட்டிருக்கிறாரே! அவற்றைப் பற்றிப் பேசுவோமா?

பெரியாருக்கு யாரும் உரை எழுத வேண்டியதுமில்லை; விளக்கம் சொல்ல வேண்டியதுமில்லை. தந்தை பெரியாரின் எழுத்தை, பேச்சை முழுமையாகப் படித்தாலேயே அதற்கான காரண, காரியங்கள், நோக்கங்கள் (அவருக்கு உள்நோக்கம் எதுவுமில்லை; அவர் என்றும் வெளிப்படையானவரே, அவருடைய கருத்துகள் எல்லாம் வெளிப்படையானவையே!) அனைத்தும் எளிதில் விளங்கிவிடுமே!

தமிழர்கள்மீது தந்தை பெரியாருக்கு
இல்லாத அக்கறையா?

யார் தமிழர்களைப் பற்றிப் பேச, தமிழைப் பற்றிப் பேச அருகதை உடையவர்? ‘தமிழருக்காக நான் பலிகடா ஆகிறேன்’ என்று தன் 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாய் அலைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்ட பெரியாருக்குத் தமிழர்கள் மீது இல்லாத அக்கறையா? தமிழர்கள் வளர்ச்சி அடைய, பகுத்தறிவு பெற, மான உணர்வு பெற எவையெல்லாம் தடை என்று கண்டறிந்து, அவற்றைத் தகர்த்தெறிந்த தளகர்த்தர் அவர். தமிழர்கள் நல் வாழ்வு வாழத் தமிழும், ஆங்கிலமும் வேண்டும் என்று அவர் முன்மொழிந்ததைத் தானே அண்ணா சட்டமாக்கினார். அதனால் தானே இன்று தமிழர்கள் உலகம் முழுக்க அறிவியலில் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. காரர்கள் செய்வது என்ன? ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தியை, சமஸ் கிருதத்தைத் திணித்து தமிழர் தம் வளர்ச்சியைத் தடுத்து, மீண்டும் மனுவாதத்தின் பிடியில் தள்ள முயல்வது தானே அவர்களின் நிலைப்பாடு! அதற்குத் தடையாகத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும், அவர்கள் தந்த சமூக நீதியும், கல்வியும் இருக்கிறது என்பதால் தானே இவற்றையெல்லாம் ஒழிக்க நினைக்கிறார்கள்.

தமிழை நீஷ பாைஷயாக்கி, தீட்டு மொழியாக்கி, சமஸ்கிருதத்தை – வடமொழி ‘‘தேவபாைஷ’’யாக்கிய பேதவாதிகள் ஆணவக்காரர்கள் யார்? மொழி மற்றும் சமத்துவத்தை ஏற்காதவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினருக்கு
தமிழ்மீதும், தமிழர்மீதும் வயிற்றெரிச்சல்!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினருக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் இருப்பது வயிற்றெரிச்ச்சல்! தந்தை பெரியாருக்கு இருந்தது தாய்க் கோழியின் எரிச்சல்! முட்டையிட்ட கோழிக்குத் தானே வலி தெரியும். பார்ப்பனர்களுடனும் போராடி, அதைப் புரிந்துகொள்ளத் தமிழர்களின் அறிவுடனும் போராடி, படிப்படியாய்த் தமிழர்களைத் தூக்கி நிறுத்தியவருக்குத் தானே தடைகள் எங்கே என்று தெரியும். ‘‘தமிழின் வளர்ச்சிக்கும், தமிழர்தம் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவை தமிழ் இலக்கியங்களே ஆனாலும், அவற்றை ஒழித்தாக வேண்டும்’’ என்ற பெரியாரின் சிந்தனை – ஒரு சமூக மருத்துவரின் சிந்தனை! நம்முடல் தான் எனினும், புற்று வந்த பகுதியை வெட்டி வீசுவதில்லையா? அழுகிப் போன திசுக்களை அடியோடு நறுக்கி எறிவதில்லையா? அப்படித்தான் பெரியாரும் – தமிழருக்கும், தமிழுக்கும் கேடு செய்தவற்றை ஒழிக்கச் சொன்னார் – தனக்கே உரிய அறுவைச் சிகிச்சை நிபுணரின் முடிவோடு!

ஈரோடு தமிழன்பன் கூறியதுதான்
நினைவிற்கு வருகிறது

மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் சொன்னது போல, தந்தை பெரியார் நடத்தியவை யாவும் ‘அக்கறைக் கலவரங்கள்!’ ஒரு தாய்ப்புலி தன் குட்டியைக் கவ்வுவது போல தமிழர்களைக் கவ்விய கருணை மறவர் தந்தை பெரியார். அவரைத் திரித்தும், புரட்டியும் பேசுவதை ஒருபோதும் ஒப்ப முடியாது. கடந்த ஆண்டே இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பதில் அளித்துவிட்டார்.

எனினும், ஓராண்டு கடந்தாலும் தன் தமிழ்க் கோபத்தைக் காட்டி, போலியாகத் தமிழர்கள் மீது அக்கறையுடன் நடிப்பவர்களுக்கு, நண்பர் கமல்ஹாசன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டி யதைப் போல, தமிழன் பிச்சையெடுக்க மாட்டான். திராவிட இயக்கம் பிச்சையெடுக்க விடாது! அதிலும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிச்சையை ஒரு நாளும் ஏற்காது. உரிமையைக் கேட்கும்; மக்களுக்கு உரிமை கொடுக்கும்; உடைமையைப் பொதுவாக்கும்.

“தமிழன் என்றொரு இனமுண்டு – தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடிய நாமக்கல் கவிஞர் அடுத்தடுத்த வரிகளில் அதைச் சரியாகவே விளக்குகிறார்.

“மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயர் படுவான்; தானம் வாங்கக் கூசிடுவான்; தருவது மேலெனப் பேசிடுவான்”

பிச்சை எடுப்பதுதான் பார்ப்பனர்களின் தர்மம் என்று அவாளின் மகா பெரியவாள் கூறியதை மறுக்கிறார்களா?

பூதானம், கோதானம், அன்னதானம், சொர்ணதானம் வாங்கியே பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலல்ல; ‘உண்டியலில் போடாதீர்கள் – அர்ச்சகர் தட்டில் போடுங்கள்’ கோயிலில் போய் பக்தர்களிடம், ‘தங்களவர்’களுக்காகச் சிறீவைகுண்டத்தில் ‘பரிந்துரை செய்தவர்கள்’ போலல்ல.

”ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்பது பழந்தமிழர் மரபு.

பிக்‌ஷாந்தேகிகளுக்கு அது உகந்ததல்ல; அவர் களுக்குப் போடுங்கள் என்று பரிந்துரைப்போருக்கும் உகந்ததல்ல என்பதும் நமக்கு நன்கு தெரியும்.

மகா மகா பெரியவர் ‘‘பிராமணர்’’களுக்கு  என்ன அறிவுரை கூறுகிறார். ‘‘பிச்சையெடுத்தல் தான தர்மம் அதை விட்டு விட்டார்களே’’ என்று ‘தெய்வத்தின் குரலில்’ கூறினாரே  அதை   மறுக்கிறார்களா?

நண்பர் கமல்ஹாசனின் நாடாளுமன்ற முதல் உரை, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். அதனால்தான் பதறுகிறார்கள். தந்தை  பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டிருக்கிறார்.

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

7.2.2026        

புதன், 27 மார்ச், 2024

தந்தை பெரியார்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம் – நீதிமன்றங்களை சந்திக்கத் தயாராக இருக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை



விடுதலை நாளேடு
Published March 22, 2024

* இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார்பற்றி அவர் பாடக் கூடாதா?
* வன்முறையை எந்த நிலையிலும் ஆதரிக்காதவர் தந்தை பெரியார்
*தந்தை பெரியார்மீது சம்பந்தமே இல்லாமல் பாடகிகள் இருவர் அவதூறு பரப்புவதன் நோக்கமென்ன?
*  அவதூறுகளைப் புறந்தள்ளி பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது அளிப்பதில் உறுதிகாட்டும் மியூசிக் அகாடமிக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!

இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்க இருப்பதாக அறிவித்த நிலையில், இரு பார்ப்பனப் பாடகிகள், டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் பற்றி எல்லாம் பாடி இருக்கிறார் என்றும், பெரியார் வன்முறையாளர் என்றும் தந்தை பெரியார்பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியும், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பும் தெரிவித்து வருவதைக் கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா வுக்கு அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இசைத் துறையில் புகழ் பெற்ற
டி.எம். கிருஷ்ணாவுக்கு விருதும் – எதிர்க்கும் சக்திகளும்!
கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும், கருநாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலமும் கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்து வதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர் திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன் படுத்துவதற்காகவும் இவ் விருது வழங்கப்படுவதாக அவ் வமைப்பு கடந்த மார்ச் 17 அன்று அறிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மியூசிக் அகாடமி இத்தகைய விருதுகளை அறிவிப்பதும், அவ் வமைப்பின் உயரிய விருதான சங்கீத கலாநிதி பெறுபவரை அவ்வாண்டின் இறுதியில் நடக்கும் இசை விழாவுக்குத் தலைமையேற்கச் செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.

அவ் வகையில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1 வரை நடைபெறும் விழாவிற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்பார் என்றும் அறிவிப்புச் செய்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 20-ஆம் தேதியன்று, அதே இசைத் துறையில் உள்ள ரஞ்சனி, காயத்ரி ஆகி யோர், டி.எம்.கிருஷ்ணா தலைமை யில் நடைபெறும் விழாவில் தாங்கள் பங் கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதனை மியூசிக் அகாட மியின் தலைவருக்குத் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் இது குறித்து பரப்பினர். விருதுத் தேர்வு தொடர்பான கருத்து அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.
ஆனால், அதற்கு அவர்கள் தந்தை பெரியாரைத் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள காரணம், உண்மைக்கு மாறானதும், அறியாமையின் பாற்பட்டதும், சமூக – ஜாதி வெறுப்புணர்ச்சியினால் தூண்டப்பட்டதுமாகும். (அவர் களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.)
தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப் பிற்காகவும், ஜாதி – மதவாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவரு டைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி.

இசை மேதை டி.எம். கிருஷ்ணா ஜாதி, மத, உணர்வு களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயர் (A Humanist). “மனித குலத்தை ஒரு குலமாகக் கருதி, காற்றும், மழையும், சூரிய ஒளியும் எப்படி மானுடத்திற்கு இயற்கை அளித்த பொது உரிமையுள்ள பொது உடைமைகளோ அதுபோல, இசையின்பமும்கூட அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் ஓர் அற்புத ஊற்றாக, அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாக்க வேண்டும்! யாருக்கும் எட்டாது, ஒரு சிலருக்கே என்ற ஏகபோகத்தை மாற்றி திறமையும் – புதுமையும் – புத்தாக்கங்களும் (Innovation) இசையிலும் புகுத்தப்பட வேண்டும். இசையை ஜாதிக் கண்ணாடி போட்டு பார்ப்பது தவறு” என்ற புதிய பார்வை கொண்டவர்.
இதன் காரணமாக அவர் ஒரு பெரியார் பற்றாளர்கூட.
கடந்த ஆண்டு, வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய இசை மற்றும் குரலிலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் வரிகளிலும் “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல் வெளியானது. இவை தான் மேற்சொன்ன பாடகிகள் இருவரின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாகி யுள்ளது.

டி.எம். கிருஷ்ணாவின் முயற்சிகளிலும், அவரது சமூக – அரசியல் நிலைப் பாடுகளிலும் முரண் பாடுகள் யாருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் முழுக்க தந்தை பெரியாரின் மீதான அவதூறும் வெறுப்புணர்வும் நிரம்பியவை ஆகும்.
தந்தை பெரியார் மனித நேயத்துக்காகவும், சமத் துவம் – சமூகநீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடிய உலகத் தலைவராவார். தந்தை பெரியாரின் கருத்துகள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி, உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுவதும், சமூகநீதிக்கான அடையாளமாக தந்தை பெரியார் கொண்டாடப்படுவதும் பெரியார் உலகமயமாகி வருவதும், அவர்களை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே, இனப் படுகொலையை முன்மொழிந்தவர் என்று அவரைப் பற்றி திட்டமிட்டு, தொடர்ந்து சில பார்ப் பனர்கள் இட்டுக் கட்டி ஆங்கிலத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
(கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மாநாடு வரை இவர்களின் அவதூறு பரப்பும் முயற்சிகள் தொடர்ந்தன.) இன்று அதனையே கர்நாடக இசைப் பாடகிகளான மேற்சொன்ன இருவரும் தங்கள் பதிவில் எழுதியுள்ளனர்.

வன்முறையைத் தவிர்த்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவதா?
உலகிலேயே வன்முறையை நாடாமல், ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திய தலைவர் தந்தை பெரியார். உலகில் வேறெங்கும் இல்லாத வர்ணாசிரம – ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தி, அதற்காகவே சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிட இயக்கத்தை வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்டு வருபவர் தந்தை பெரியார். காரணம், அவர் ஓர் தனி மனிதரல்லர் – தத்துவம்! உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னும், அவரது கொள்கைகள், போராட்டங்கள் தான் இன்றும் வெற்றி பெறுகின்றன. இத்தனைப் பெரிய சமூகப் போராட்டத்தில் எந்த இடத்திலும் வன்முறையில் ஈடுபடாமல் ஓர் அமைதிப் புரட்சி இயக்கமாக இதை உருவாக்கி, வழிநடத்தியவர். இன்று வரை அந்தப் பாதையில் தடம்மாறாமல் திராவிடர் கழகம் நடை போடுகிறது. தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு சமூகத்திற்காகப் போராடும் கருப்பு மெழுகுவர்த்திகள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று, தாக்குதல்களுக்கு உள் ளாகி பெரியார் தொண்டர்கள் உயிரைத் துறந்ததுண்டு. ஆனால், அப்போதும் நாம் வன்முறையை நாடிய தில்லை.

காந்தியாரைப் படுகொலை செய்த கால கட்டத்தில்கூட, பார்ப்பனர்கள்மீது ஏவாமல் அமைதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்
இந்துத்துவ வெறியன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனரால் காந்தியார் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டபோது, இந்தியா முழுவதும் கலவரங்கள் நடை பெற்றன; மராட்டியத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மீது துளி வன்முறைகூட நிகழாமல் காப்பாற்றியவர் தந்தை பெரியார். அகில இந்திய வானொலியில் உரையாற்றி, அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகத் தக்க வைத்த மனிதநேய மாண்பாளர் அவர்.
குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதி ஒழிப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுக்க போராட்டங்களால் பொழுதளந்தவர் – தந்தை பெரியார் இவற்றில் எங்கேனும் வன்முறையைக் கைக் கொண்டவரல்லர். அதனால்தான் இன்றளவும் போற்றப்படுகிற தலைவராக அவர் இருக்கிறார்.

இராயப்பேட்டை யுவர் சங்கக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குத் தந்தை பெரியார் கூறிய அறிவுரை
05.01.1953-இல் இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (பார்ப்பன இளைஞர்களால் நடத்தப்பட்ட அமைப்பு) பெரியார் ஆற்றிய உரை, பார்ப்பன எதிர்ப்பு எத்தகையது என்பதைத் தெளிவாக விளக்கும் ஒன்றாகும். “பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம், நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பது தான். இது பிராமணர்களை வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்ன தாகவோ, அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை” என்று அந்தக் கூட்டத்திற்காக மட்டுமல்ல; தன் வாழ்நாள் இறுதி வரைக்கும் வன்முறையின் பக்கம் இந்த இயக்கத்தை நடத்திடாமல், இன்றைக்கும் அறவழிப் போராட்ட இயக்கமாகவே இதனை நடத்தி வருவதற்கும் வழிகோலியவர் தந்தை பெரியார்.
அவரை வன்முறையாளர் என்றும், இன்னும் அதிகப்படியான வார்த்தைகளால் இனப்படுகொலையை முன்மொழிந்தவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவதும், இழிவு செய்வதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்டனத்திற்குரியவையாகும்.
எந்த பேதமும் இல்லாமல் மனித குலம் வாழ வேண்டும் என்பதே அவரது தத்துவம், நோக்கம், செயல்பாடுகள் அத்தனைக்கும் அடிப்படை.

பார்ப்பனப் பெண்களின் விடுதலைக்கு
தந்தை பெரியாரின் பங்களிப்பு உண்டே!
தந்தை பெரியார் இல்லையேல் பெண்ணடிமைத் தனம் இந்த நாட்டில் நீங்கியிருக்க வழி உண்டா? தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் மட்டுமானது அல்லவே! அவருடைய கருத்துகள் தானே பார்ப்பனர் சமூகத்திலும் புரட்சியை உண்டாக்கின. விதவை என்று கூறி, மொட்டையடிக்கப்பட்டு, முக்காடிட்டு மூலையில் அமர்த்தப்பட்ட கொடுமைகள் எல்லாம் மறைந்து, பார்ப்பன மகளிரும் தங்கள் சுயமரியாதையைப் பெறுவதற்குத் தந்தை பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும், செயல்பாடும் தானே காரணம்!

வர்ணாசிரம, ஜாதி, பாலின அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும், பாகுபாடுகளுக்கும், அனைத் துத் துறையிலும் இதே நிலை கோலோச்சி வந்ததற்கும் எதிராகப் போராடிய தந்தை பெரியார், அப்படி ஆதிக்கம் செலுத்தியவர்களையும் திருத்தி, சமத்துவ நிலைக்குக் கொண்டு வரவிரும்பி உழைத்தவரே அல் லாமல், அவர்களை அழிக்க நினைத்தவர் அல்லர்.
பெரியார் மீதான அவதூறுகளையும், அவரை வன்முறையாளராகச் சித்தரிக்கும் போக்கையும் தொடர்ந்து ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். பலமுறை அவை பொய்கள் என்பது நிரூபிக்கப்பட்டும், உண்மை நிலையை உணர்ந்தும் கூட தொடர்ந்து இதனைப் பரப்புவது கயமையானதாகும்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பேசியுள்ள இருவருக்கு ஆதரவாக அரிகதா நடத்தும் துஷ்யத்து சிறீதர், விஷாகாஅரி, சித்ரவீணாரவிகிரண் உள்ளிட்ட இன்னும் சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பெரியார் என்பவர் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக உயர்ந்து நிற்பதைச் சகிக்க முடியாத வெறுப்புணர்ச்சி தான் இத்தகைய நிலைப்பாடுகளுக்கும், அவதூறு களுக்கும் காரணமாகும்.
சம்பந்தப்பட்ட மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவர் திரு.முரளி அவர்கள் இசைக் கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி ஆகியோருக்கு எழுதிய பதிலில், தனக்கு எழுதப்பட்ட கடிதம் பொது வெளியில் பகிரப்ப ட்டதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். மேலும், விருதுக்கான தங்கள் தேர்வில் உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் அரியக்குடி, ராமானுஜ அய்யங்காரின் எதிர்ப்பும், ‘குடிஅரசு’ இதழில் கலைஞர் எழுதிய ‘தீட்டாயிடுத்து’ என்ற கட்டுரையும்
1946-ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘தீட்டாயிடுத்து’ என்னும் தலைப்பில் எழுதிய துணைத் தலையங்கத்தை (09.02.1946) இந்தச் சூழலில் நினைவூட்டுவது பொருத்த மாகும்.
திருவையாறு தியாக ராயர் உற்சவத்தில் (கர்நாடக இசை மேடையில்) தமிழ ரான தண்டபாணி தேசிகர், ‘சித்தி விநாயகனே’ என்று தமிழ்ப் பாட்டு பாடியதற்காக, “தமிழில் பாடி, சந்நிதானத் தைத் தண்டபாணி தேசிகர் தீட்டுப்படுத்தி விட்டார்; நான் அதே மேடையில் பாட மாட்டேன்” என்று அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்கள் அரற்றியது 1946-ஆம் ஆண்டோடு முடிந்துபோகவில்லை; அதே நிலை தான் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்கிறது என்பதற்கு இப்போது சங்கீத கலாநிதி விருது பெறவுள்ள நண்பர் டி.எம்.கிருஷ்ணா தலைமை யேற்கும் நிகழ்ச்சியில் “பாட மாட்டோம்” என்று பாடகிகள் இருவர் தெரிவித்திருக்கும் எதிர்ப்பே சான்றாகும்.

போராட்டம் இரண்டு தத்துவங்களுக்கிடையில்! அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும், அனை வரும் சமம், அனைவருக்கும் உரிமை வேண்டும், மொழி, இன பேதம் கூடாது என்று கருதும் சமத்துவத் திற்கு எதிராக எதிலும் மேல்-கீழ் இருக்க வேண்டும். எதுவும், யாரும் சமமில்லை, தமிழ் நீச பாஷை, தமிழர்களின் கலையுடன் கர்நாடக இசை கலக்கக் கூடாது என்று கருதும் போக்குக்கும் நடக்கும் போராட் டமே இது! தன்னுடைய தளத்தில் நின்று, தான் கற்ற கலையை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும், அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து, இசைந்து செயல்படுத்திவரும் டி.எம்.கிருஷ்ணாவின் செயல்களே – இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை, மேற் சொன்ன இருவரின் எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

முற்போக்குக் கருத்துக்களை முன் வைத்துப் பாடினால், அது அவதூறா – இழுக்கா?
கர்நாடக இசைக்கு அவர் சேதம் ஏற்படுத்தி உள்ள தாகவும், இசையில் ஆன்மீகத்துக்கு டி.எம்.கிருஷ்ணா இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பதை வெட்கப்படத்தக்கதாகக் கருதும் அளவுக்கு அவரது செயல்கள் ஆக்கியுள்ளன என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அவர்கள் இன்னார் என்பதை அடையாளம் காட்டுகிறது.

கலை அனைவருக்கும் பொதுவானதே!
கலை அனைவருக்குமானது, கலையில் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்ற கருத்தைத் தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
டி.எம்.கிருஷ்ணா எங்கு பிறந்தார் என்பது முக்கிய மில்லை; அவர் எதை முன்னிறுத்துகிறார் என்பதே முக்கியம். சமத்துவத்திற்கான குரல் எங்கிருந்து வந்தா லும், அதைக் கரம் நீட்டி வரவேற்க வேண்டியது நமது கடமை!
டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக, ஏராளமான பார்ப்பன நண்பர்களும் குரல் கொடுத்திருப்பதும், கலை அமைப்புகள் ஆதரவாக நிற்பதும் வரவேற்கத் தக்கனவாகும்.
அவசியமற்ற இந்த சர்ச்சை எழுந்த பின்னாலும், விருது தேர்விலும், தங்கள் நிலைப்பாட்டிலும் மிக உறுதியாக நிற்கும் மியூசிக் அகாடமி அமைப்புக்கும், அதன் தலைவர் திரு.முரளிக்கும் நமது பாராட்டுகள் வாழ்த்துகள்!
நண்பர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல சிறப்புகளைப் பெற்றவர் என்றாலும், அவரது சமூகக் கருத்துகளுக்காகவே அவர் எதிர்க்கப்படுகிறார் என்றால் அவரை ஆதரிக்க வேண்டியதும் நமது கடமை! அதே வேளையில், அவருடைய கருத்துகளுக்கு எதிராகப் பேசுகிறோம் என்ற பெயரில் வன்மத்தைக் கக்கும் அனைவரின் சிந்தனையும் இன்னும் வர்ணாசிரமத்தில் இருந்து மீளவில்லை என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பெரியார்மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் சந்திக்க நேரும்.
இசைத்துறையைச் சார்ந்த இரண்டு பெண்களை முன்னிறுத்தி, இந்தச் சூழலில் இதைப் பொதுத் தளத்தில் விவாதிக்கச் செய்து, இதன் பின்னணியில் இருந்து இயங்குவோரையும் தந்தை பெரியார் மீது அவர்கள் அவதூறு பரப்புவதையும், அவரை இழிவு செய்வதையும் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது!
இப்படி பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அவர்களே ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பது உறுதி!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.3.2024

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரத்து 567 எக்டேரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம் தமிழ்நாடு அரசு ஆணை



விடுதலை நாளேடு,
Published February 2, 2024

சென்னை, பிப்.2 ஈரோடு மாவட் டத்தில் 80,567 எக்டேர் பரப்பில் ‘தந்தை பெரியார்வன உயிரின சரணாலயம்’ உதயமானது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபி செட்டிபாளையம் வட்டங் களைச் சேர்ந்த 80,567 எக்டேர் வனப் பரப்பில் ‘தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்’ என்ற புதிய சரணாலயம் அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமை வன உயிரினக் காப்பாளர் அரசுக்குஅனுப்பிய கருத்துரு பரிசீலிக்கப்பட்டு, கடந்த ஜன. 30ஆ-ம் தேதி அந்தியூர், கோபி வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளை ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம்’ என அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட் டில் உள்ள வன உயிரின சரணா லயங்களின் எண் ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
வட பர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங் கலம், நகலூர் காப்புக்காடுகளைச் சேர்ந்த 80,567.76 எக்டேர் பரப்பை வன உயிரின சரணா லயமாக அறிவிக்குமாறு வனத் துறை கருத்து அனுப்பியுள்ளது.

இந்த காப்புக்காடுகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கருநாடக மாநிலத்தில் உள்ள மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும்போது முக்கிய வழித்தடம் உருவாகி, புலிகளின் வாழ்விடப் பகுதியாக அமையும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் பல்வேறு தாவ ரங்கள், வன விலங்குகள் நிறைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள காவிரி வனப் பகுதிகளுடன் இணைக் கும் முக்கியப் பகுதியான இந்த இடத்தைப் பாதுகாப்பது, சந்தன மரங்களின் மீள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும்.
இந்த காப்புக்காடு 70 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள், 35 வகை மீன் இனங்கள், 10 வகை நீர்நிலவாழ் இனங்கள், 25வகை ஊர்வன இனங்கள், நிலத்தில் வாழும் 5 வகை முதுகெலும்பில்லா விலங் குகள், 233 வகை பறவை இனங்கள், 48 வகை பாலூட்டி இனங்களை கொண்ட பல்லு யிர் பரவல் பகுதியாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித-வன உயிரினமோதலைத் தணிக்கவும் இதை வன உயிரினச் சரணாலய மாக நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, மேற் கூறிய பகுதிகள் தந்தை பெரியார் வன உயிரினசரணாலயமாக அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 24 டிசம்பர், 2022

பகுத்தறிவுப் பகலவனின் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

சனி, 26 நவம்பர், 2022

அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்

புதன், 10 ஆகஸ்ட், 2022

வரவேற்கிறேன் (ஆசிரியரின் முழு நேர தொண்டுக்கு)

புதன், 30 மார்ச், 2022

மாநிலங்களவையில் பெரியார் அவர்களின் 'சச்சி இராமாயணம்' "பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள்!" ஆர்.ஜே.டி. உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா முழக்கம்

 

புதுடில்லி, மார்ச் 28- நாடாளுமன்றம் -மாநிலங்களவையில் ராஷ்ட் ரிய ஜனதா தளம் உறுப்பினர் தந்தை பெரியாரின் "சச்சி ராமாயணம்" இந்தி நூலைத் தூக்கிக் காட்டி பெரியாரைப் புரிந்து கொள்வீர்! என்று முழங்கினார்.

மாநிலங்களவையில் கடந்த 25 3.2022 அன்று பாஜக உறுப் பினர் ராகேஷ் சின்கா என்பவர் முன்மொழிந்த  “பண்டைய இந் திய அறிவு மரபுகளை புதுப் பிக்க வேண்டும்” என்ற தனி நபர் மசோதாமீது பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர்  டாக்டர் மனோஜ் குமார் ஜா உரையாற்றுகையில், தந்தை பெரியார் எழுதிய "இராமா யணப் பாத்திரங்கள்" நூலின் இந்தி மொழியாக்கம் செய்யப் பட்டு வெளியான ‘சச்சி இரா மாயணம்’ புத்தகத்தை எடுத் துக்காட்டி உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்ட தாவது,

பெரியாரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வட இந்தியாவில் அவரது பெய ரைத் தவிர மற்ற அவரின் படைப்புகளை படித்தவர்கள் மிகக் குறைவு. அய்யா, அது ஒரு புத்தகம், 'சச்சி ராமாயணம்' - தடை செய்யப்பட்டது. அவரு டைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவருடைய புத்தகம் தடை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, மக்கள் போராடிய போது, "அலகாபாத் உயர்நீதிமன்றம் பெரியார் பற்றி என்ன கூறியது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." ராகேஷ் ஜி, இதை உங்கள் முன் வைக்கி றேன்,

 'இதில் எழுதப்பட்டிருப்பது அய்ரிஷ் மக்களின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைக ளையோ புண்படுத்தும் என்று நாங்கள் நம்ப முடியாது. வேண்டுமென்றே இந்துக்க ளின் உணர்வுகளைப் புண்படுத் துவதை விட, தனது ஜாதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை காட்டுவதே ஆசிரியரின் நோக் கமாக இருக்கலாம், நிச்சயமாக அதை அரசமைப்புச் சட்டத் துக்கு எதிரானதாகக் கருத முடியாது”. இவ்வாறு அலகா பாத் உயர்நீதிமன்றம் கூறியுள் ளது. 

பெரியார் என்ன நம்பினார், அவரது கருத்தைப் பார்க்க வேண்டாமா? பாபாசாகேப் எதை நம்பினார்? நமது பழங் கால இந்தியா என்ற கருத்து ஏன் நடக்கிறது - நமது தமிழ்நாடு சகாக்களும் சொன்னதை, சிவதாசன்ஜியும் சொல்கிறார் - உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், இது மாட்டு பெல்ட் (நீஷீஷ் தீமீறீt), அதன் கருத்தை பண்டைய கருத்தாகவே கருதுவோம். பிறகு, இந்தியா, எப்படி, 'ஏக் பாரத், சிறந்த இந்தியா'வாக முன்னேற முடியும்?

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை இந்தியா ஒன்று என்று நீங்கள் சொன்னால், 'ஏக் பாரத், ஷ்ரேத் பாரத்' என்று நீங்கள் சொன்னால், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இனத்தை மய்யமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல் நாம் முன்னேற வேண்டும்.

கடந்த கால அரு வருப்பான பயணம் குறித்துப் பேசினேன். விமர்சனக் கல்வி என்பது ஒரு விஷயம். கல்விக்கு பல வரையறைகள் இருக்கலாம், ஆனால் கல்வியின் இறுதி வரையறை - "கல்வி என்பது விடுதலைக்கான கருவியாக இருக்க வேண்டும். எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும், அது சித்தாந்த பந்தமாக இருந் தாலும், மத பந்தமாக இருந்தா லும் அல்லது எந்த வகையான அடிமைத்தனமாக இருந்தா லும் சரி, அந்த மக்களை விடு விப்பதாக இருக்க வேண்டும்" என்று பீகார் மாநில மாநிலங் களவை உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா பேசியுள்ளார்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலை காப்பியடித்தாரா பெரியார்?








*”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத்தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்?*
-------------------------------------------------------------

”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்கிறார் ஒருவர். 

அதை எப்படியும் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவார் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். 'போர்டு' தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள். 

நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம்.
“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல. 

தந்தை பெரியார் தன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்து காட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமைப் பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படித்தவர்கள் உணர முடியும். 

அதெல்லாம் தெரியாமல் வன்மத்தை மட்டும் மனதில் கொண்டு திரியும் இந்த 'ஸோம்பிகள்' "தான் திருடி பிறரை நம்பாது" என்பதைப் போல பெரியார் மீது குற்றம் சுமத்துகிறார்கள். (ஒரு போட்டோவை வைத்துக் கொண்டே ஒரு மாமாங்கமாகப் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்லவா?)

தந்தை பெரியார் தன்னுடைய கருத்தை, அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதைத் தன்னுடையது என்று சொல்லும் துணிவு கொண்டவர். இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. 
அதேபோல் தன் சிந்தனைக்கு ஒத்துவரும் அடுத்தவர் கருத்தை வரவேற்று, அதை அவர்கள் பெயரிலேயே வெளியிட்டுப் பரப்பியவர். மேனாட்டு அறிஞர்கள் தொடங்கி, தன் பத்திரிகையில் பணியாற்றியவர் வரை அவரவர் பெயரிலேயே குறைந்த விலையில் வெளியிட்டுப் பரப்பிய கொள்கை - அறிவு நாணயத்திற்குச் சொந்தக்காரர். 

இங்கர்சால், ஜீன் மெஸ்லியர், அண்ணல் அம்பேத்கர், பகத்சிங், பாதிரியார் சென்னிகியூ, லெனின், ஜோசப் மெக்காபி, சார்ல்ஸ் டீகோர்ம்,  மொழி பெயர்ப்பாளர்களான குருசாமி, ஜீவா, எழுத்தாளர்களான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பண்டிதர் இ.மு.சு. என அனைவரின் படைப்புகளையும் பதிப்பாளராக இருந்து வெளியிட்டவர். 

இவர்கள் எடுத்துக்காட்டும் சிந்தனையாளர் பெட்ரண்ட் ரஸலின் மற்றொரு நூலான Why I am not a Christian நூலைத் தமிழில் “நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல?” என்று வெளியிட்டிருக்கிறார். இவர்கள் சொல்கிறபடி காப்பி அடிக்கலாம் என்றால், இதே நூலை ”கிறிஸ்துவ மத ஆராய்ச்சி” என்ற பெயரில் தமிழில்  வெளியிட்டுத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள முடியாதா என்ன? 

எத்தனையோ புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்ட பெரியாருக்கு இதை மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன?
ஒன்றா, இரண்டா எத்தனை மொழிபெயர்ப்பு நூல்கள் - அதுவும் பெரும் தொடர்பு வளர்ந்திராத 1920-30 களில்! 

தமிழில் இந்த முற்போக்கு நூல்களெல்லாம் வெளிவந்து அதைப் படித்து தமிழர்கள் சிறப்பாக வந்துவிடமாட்டார்களா என்ற ஆசைதானே பெரியாருக்கு!

பெரியார் ஒரு சுயசிந்தனையாளர்! (Original Thinker) படித்து அறிவை வளர்த்துக் கொண்டவர் அல்ல! கேள்விகளால், பட்டறிவால், பகுத்தறிவால் கூர்மைப்பட்டவர். அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியதால், தன் வாழ்நாள் முழுக்க நட்டத்தை, எதிர்ப்பைக் கண்டவரே ஒழிய பாராட்டுகளையும், இலாபத்தையும் பெற்றவர் அல்லர். 

சரி, பெண் ஏன் அடிமையானாள் நூலுக்கு வருவோம். ’கற்பு’ என்கிற தமிழ்ச் சொல் பற்றிய ஆய்வுடன் தொடங்குகிறது பெரியாரின் கட்டுரை. அடுத்த கட்டுரை திருக்குறளும் கற்பும் பற்றி விமர்சிக்கிறது. பெண் ஏன் அடிமையானாள் நூலைப் படித்தவர்களுக்குத் தெரியும், அதன் Context முழுக்கவுமே இந்திய/ தமிழகச் சூழல் சார்ந்தது. இதையா பெட்ரண்ட் ரஸல் எழுதினார்? படித்தால் தானே தெரியவரும்? படத்தையும், தலைப்பையும் வைத்துக் கதைக1 கட்டினால் எப்படி புரியும்?

விரிவாக, விலாவாரியாக வரிக்கு வரி இவர்களின் உளறல்களை மறுக்கலாம். ஆனால், மிக எளிமையாக, ஒரே வாதத்தில் இவர்களின் பொய்யை அம்பலப்படுத்தவோம்!  

இதோ சொல்கிறேன்!

பெட்ரண்ட் ரஸலின் Marriages and Morals வெளியிடப்பட்ட ஆண்டு 1929.
’பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையான கற்பு - 8.1.1928 அன்று வெளியானது. அடுத்த கட்டுரையான வள்ளுவரும் கற்பும் 12.2.1928 அன்று வெளியானது. ஏழாவதாக இடம் பெற்றுள்ள விதவைகள் நிலைமை பற்றிய கட்டுரை 22.8.1926 இல் வெளியானது. பத்தாவது கட்டுரை 1928 ஆகஸ்டில் வெளியானது. 
இப்படி 1926 இல் தொடங்கி 1931 வரை எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்!

உண்மை இப்படி இருக்க, பெட்ரண்ட் ரசலின் நூலைத் தான் தமிழில் மாற்றி எழுதி தன் பெயரைப் போட்டுக் கொண்டார் பெரியார் என்று இந்தப் புரட்டர்கள், பொய்யர்கள் கூறுகின்றனர். கேடுகெட்ட, மானமற்ற, அயோக்கியர்களுடன் தான் நாம் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்!

"பெரியாருக்கும், ரசலுக்கும் 
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை மலர்ந்திருக்கிறது",  என்று ஓர் ஒப்புமையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணியின் அவர்களின் ஒப்புமை என்பது அறிவு வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சியின் வெளிப்பாடு! அதை வைத்துக் கொண்டு அளந்து கொட்டியிருக்கிறது ஓர் அரைவேக்காடு. 

1929 இல் வெளியான Marriages and Morals நூலை 1926-லிருந்தே காப்பி அடித்தாரா பெரியார்? இவர்கள் சொல்லும்படி பார்த்தால், ஒரு வேளை புரூப் பார்ப்பதற்காக பெரியாருக்கு அனுப்பி வைத்திருப்பாரோ பெட்ரண்ட் ரசல்? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமாகச் சொல்லுங்களேன்?

 - *ச.பிரின்சு என்னாரெசு பெரியார்*

Marriage and Morals

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
First edition (publ. Allen & Unwin)

Marriage and Morals is a 1929 book by philosopher Bertrand Russell, in which the author questions the Victorian notions of morality regarding sex and marriage.

Russell argues that the laws and ideas about sex of his time were a potpourri from various sources and were no longer valid. The subjects range from criticisms of social norms, theories about their origins and tendencies, evolutionary psychology, and instinctual attachment to children (or lack thereof), among others. Notably, the book found marital rape to be common, stating: "Marriage is for woman the commonest mode of livelihood, and the total amount of undesired sex endured by women is probably greater in marriage than in prostitution."[1]


வியாழன், 7 அக்டோபர், 2021

'துக்ளக்' குருமூர்த்தி பார்வையில் பெரியாரும், பெரியவாளும்!


மின்சாரம்

கேள்வி: தியாக வாழ்க்கை வாழ்ந்தது பெரியாராமஹாப் பெரியவரா?

பதில்நாத்திகர்களை ஒரு போதும் புண்படுத்தாத மஹா பெரியவரையும்ஆத்திகர்களை எப்போதும் புண்படுத்திய பெரியாரையும் ஒப்பிடுவது முறையல்லஒரு சந்தர்ப்பத்தில் .வெ.ரா.வை குறிப்பிட்டு மஹா பெரியவர் (கூறியதை கேட்டவர்கள்கூறியதை இங்கு கூறலாம். ‘தெய்வம்  என்பது பொய்விவகார உலகம் மட்டுமே உண்மை’ என்று .வெ.ராமசாமி நாயக்கர் போலவாழ்நாள் முழுவதும் உறுதியாக இருப்பவரும் கோடியில் ஒருவர்தெய்வம் மட்டுமே சத்தியம்மற்றவையெல்லாம் பொய் என்றுவாழ்நாள் முழுவதும் உறுதியாக இருப்பவரும்  கோடியில் ஒருவர்மற்றவர்கள் இருப்பவர்கள் தான்’ என்று ஒருமுறை கூறினாராம் பெரியவர்இன்னொரு முறை ‘.வெராமசாமி நாயக்கர் பிள்ளையாரை உடைத்ததால்தான் பிள்ளையாருக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு மகத்துவம்மூலை முடுக்கில் எல்லாம் அவருக்கு கோவில்’ என்று சொன்னாராம்அவர் போதனைகளுக்கு நேர் விரோதமாக .வெ.ராசெயல்பட்டாலும்  மஹானான அவர் .வெ.ரா.வைப் பற்றி கண்ணியமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

- ‘துக்ளக்‘ 2.6.2021 பக்.29

நாத்திகர்களை ஒரு போதும் புண்படுத்தாத மஹா பெரியவர் என்கிறாரே திருவாளர் குருமூர்த்தி (இதே ‘துக்ளக்கில் இன்னொரு கேள்விக்கான பதிலில் ‘காஞ்சிப் பெரியவர் உபன்யாசங்களின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ எல்லோரும் படிக்க வேண்டிய நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று பதில் கூறியுள்ளார்.

எனவே அந்தத் தெய்வத்தின் குரலிலிருந்தே பதிலடி கொடுக்கிறோம்.

வேத சாஸ்திரங்களுக்கு ஒத்துப் போவதாகவே நம்முடைய வைத்திய சாஸ்திரம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது முக்கியம் என்பதற்காகவே வேத சாஸ்திரத்திற்கு விரோதமாகப் போகக் கூடாதுஏனென்றால்  இப்படி விரோதமாகப் போனால் அதுதான் நாஸ்திகம்நாஸ்தி கனுக்குத்தான் வைத்தியமே பண்ணக் கூடாதே!” என்கிற சங்கராச்சாரியார்தான் நாத்திகர்களைப் புண்படுத்தாத மஹா பெரியவராம்.  நாஸ்திகனுக்கு வைத்தியம் பண்ணி ஆயுளை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்து கொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்தியம் பண்ணக் கூடாதாம் - (தெய்வத்தின் குரல்  3ஆம் பாகம் பக்கம் 148).

மனிதனை மனிதனாகப் பார் - பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்கிற தந்தை பெரியார் எங்கேநாத்திகனாக இருப்பதாலேயே வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறும்மனிதத் தன்மைக்கே இலாயக்கற்ற ஆசாமி எங்கேஇந்த இலட்சணத்தில் அவர் மஹா பெரியவராம்!

அவனவன் கிரகப்படிதான் எல்லாம் நடக்கும் - நோய் நொடிகளும்கூட அவன் கர்மப் பலன் என்பதற்கு எதிராக மருந்துகளையும்தடுப்பூசிகளையும் கண்டுபிடிப்பவர் களும் அறுவைச் சிகிச்சை செய்பவர்களும்கூட நாத்திகர் தானேஏற்றுக் கொள்ளு கிறதா குருமூர்த்தி கும்பல்?

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்இது தப்புஸ்வாமி இல்லை என்று சொல்லிக் கொண்டேகூட ‘ஆஸ்திகர்களாக இருக்க முடியும்  ஆஸ்திகம் என்றால் வேதத்தின்மீது நம்பிக்கையாக இருப்பது என்றுதான் அர்த்தம்ஸ்வாமியிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை” என்று குருமூர்த்தி மதிக்கும் அதே ‘தெய்வத்தின் குரலில்’ அவர் போற்றும் மஹாப் பெரியவாள் எழுதுகிறது.

கடவுளை மறுக்கலாம் - ஆனால் வேதங்களை மறுக்கக் கூடாது - இவர் ஆஸ்திகராம்.

வேதம் தானே இவர்களை பிராமணன் என்கிறதுபெரும்பாலான மக்களை சூத்திரன் என்கிறது - அதனால்தான் இவர்கள் கடவுளுக்கு மேலாக வேதங்களைத் தூக்கிச் சுமப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் வேதங்களை ஏற்காதவர் - அப்படி என்றால் சங்கராச்சாரியார் பார்வையில் அவரும் நாஸ்திகர்தான் (இன்று “ஆஸ்திகர்” என்பது உயர் ஜாதியினரின் நலம்இன்று “நாஸ்திகம்“ என்பது பெருவாரியான மக்களின் நலம்“ என்று அடிகளார் கூறியுள்ளார் -  அருமை புரிகிறதுபுரிகிறது!!)

ஹிந்து மதத்துக்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் - பிளவுகள் உண்டுவேதங்களை ஏற்காதவர்கள் உண்டு என்பதால் அவர்களும் நாஸ்திகர்கள் தான் - அவர்களுக் கெல்லாம் வைத்தியம் பார்க்கக் கூடாது - அப்படித்தானேஅப்படி ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் மஹா பெரியவராக இருக்க முடியாது - மஹா மஹா மட்டமான ‘மனிதராகத்தான் (?) இருக்க முடியும்!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லும் பேர்வழிதானே இந்த ஆசாமிஒரு மனிதனைப் பார்த்து தீண்டத்தகாதவன் என்று ஒரு மதம் சொல்லுமானால்ஒரு மதத் தலைவர் சொல்லுவார் என்றால்  அத்தகைய வரை எந்தப் பட்டியில் அடைப்பது?

இடஒதுக்கீடுப் பிரச்சினையில் பிராமணர்களுக்காக நான் கம்யூனல் பேஸிஸில் பேசுகிறேன் என்று சொல்லுபவர் பார்ப்பன மடத் தலைவராமஹா பெரியவாளா?

மனிதன் தானாகப் பிறக்கவில்லை - ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லைமற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்அப்படிஎண்ணிப் பார்த்துச் செயல்புரிவதுதான் மனிதத் தன்மை (‘விடுதலை’ 21.7.1962). என்று சொன்ன மானுடத்தின் மகத்தான தலைவர் தந்தை பெரியார் எங்கே - மற்ற மனிதனைப் பார்த்துத் தீண்டாதவன் என்று முத்திரை குத்தி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் காஞ்சி சந்திரசேகரேந்திரர் எங்கே - எங்கே?

தந்தை பெரியார் பற்றி சங்கராச்சாரியார் சொன்னது இருக்கட்டும்இதே சங்கராச்சாரியாருக்கு தந்தை பெரியார் செய்த உபகாரம் என்ன?

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பல்லக்கில் போகாமல் குருமூர்த்தி போற்றும் அந்த ‘மஹா பெரியவாள்’ நடந்து செல்ல ஆரம்பித்தது எப்பொழுது? - அதற்கு யார் காரணம்என்பதை தனியே காண்க!