துக்ளக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துக்ளக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஆகஸ்ட், 2022

திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்?

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

“பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வது மூடத்தனமே!” - துக்ளக் ஒப்புதல்

21 மொழிகளில் பெரியார் சிந்தனைகள்: எது விபரீத சிந்தனை - துக்ளக்கே?

புதன், 6 ஏப்ரல், 2022

அட, அரை குறையே! (துக்ளக்)


கேள்வி: திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தன்னைத் 'தமிழர் தலைவர்' என்று அழைத்துக் கொள்கிறாரே?

பதில்: கருணாநிதி தன் வாழ்நாள் முழுதும் அமர்ந்திருந்த தமிழர் தலைவர், சமூகநீதிக் காவலர் - ஆகிய இரண்டு நாற்காலிகளும் அவருக்குப் பிறகு 5  ஆண்டுகள் காலியாக இருந்தன. அதில் தமிழர் தலைவர் நாற்காலியைக் குறி வைத்துக் கொண்டிருந்தார் கி. வீரமணி. சமயம் பார்த்து, சமூகநீதி சரித்திர நாயகர் என்று புகழ்ந்து ஸ்டாலினை சமூகநீதி காவலர் நாற்காலியில் அமர்த்தி விட்டு, காலியாக இருந்த தமிழர் தலைவர் நாற்காலியில் ஓசைப்படாமல் அமர்ந்து விட்டார் வீரமணி. ஸ்டாலின் புகழ் பாடியபடி இருந்த தி.மு.க.வினர் அதைக் கவனிக்கவில்லை. இனி அந்த நாற்காலியை வீரமணி விடவே மாட்டார். பாவம், ஸ்டாலின். கருணாநிதிக்குப் பிறகு தமிழர் தலைவர் வீரமணி தான். ஸ்டாலின் அல்ல.

'துக்ளக்' 13.4.2022

சிந்தனை: தமிழ்நாட்டுச் சரித்திரத்தின் 'அரிச் சுவடியே'  தெரியாத ஓர் ஆள் 'துக்ளக்'கை அபகரித்துக் கொண்டு உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார். கலைஞர் அவர்களே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைத் "தமிழர் தலைவர்" என்றுதான் அழைத்தார் என்பது தெரியுமா? 'தத்துப் பித்து' என்று உளறுவது 'துக்ளக்'கின் வாடிக்கைப் புத்தி!

புதன், 9 மார்ச், 2022

துக்ளக்'குக்குப் பதிலடி!


கேள்வி: ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையா? என்ற ஸ்டாலினின் கருத்தைப்பற்றி?

பதில்: ஸ்டாலினுக்கு ஆடுபற்றியும் கொஞ்சம் கூற வேண்டியிருக்கிறது. செம்மறி ஆட்டுக்குத் தாடி கிடையாது. எனவே, இயற்கையில் தாடி இல்லாத ஆடும் உண்டு. ஆனால், அரசியல் சாசனத்தில் ஆளுநர் இல்லாத மாநிலம் இருக்க முடியாது. ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்கும் அரசியல் சாசனத்தில் முதல்வர் இல்லாத மாநிலம் இருக்க முடியும்.

- 'துக்ளக்'

சிந்தனை: ஆட்டுக்குத் தாடி எதற்கு என்று கேட்டால், செம்மறி ஆட்டின் வாலைப் பிடித்துத் தொங்குகிறார் குரு மூர்த்தி அய்யர்வாள்.

செம்மறி ஆட்டுக்குத் தாடி இல்லாமையால் அதற்கு என்ன பயன்?

மிக சாமர்த்தியமாக எழுதுவதாக 'துக்ளக்'குகளுக்கு ஒரு அற்பத்தனம்!

ஆளுநர் என்போர் ஒன்றிய அரசின் ஏஜெண்டாகத்தானே நடந்து வரு கின்றனர்; மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட ஆட்சியின் முடிவுகளுக்கு முட்டுக் கட்டை போட குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி தானே ஆளுநர். அதிகாரிகள், ஆட்சியாளர்களை அதிகாரம் செய்ய முடியுமா?

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க ஆளுநர் ஒப்புதல் மறுத்தும், or other wise    என்ற அரசியல் சாசனப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்தது எப்படி?

மற்றவற்றிற்கெல்லாம் வெள்ளைக்காரன் - கிறிஸ்தவன் ஏற்பாடு களை ஏளனம் செய்யும் பா.ஜ.க., இதில் மட்டும் வெள்ளைக்காரர் களுக்கு வெண் சாமரம் வீசுவானேன்?

வியாழன், 25 நவம்பர், 2021

அட, "பிச்சைக்கார" பார்ப்பனர்களே!


நிர,புவனாநாகராஜன், செம்பனார்கோவில்

கேள்வி: கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளாராமே?

பதில்: வீரமணி, அவர் மனைவி மோஹனா இருவரும் கொரோனா வந்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்று செய்தி படித்தோம். அவர்கள் நலமடைய, அவர் உடைத்த பிள்ளை யாரையே பிரார்த்திக்கிறோம். இது தொடர்பாக ஒரு செய்தி. 2018-ல் பெரியார் திடலில் வீரமணி பேரன் கபிலனுக்கும், மஹாலஷ்மிக்கும் நடந்த திருமண ஃபோட்டோவில் மணப்பெண், ஹிந்துக்கள் வணங்கும் மஹாலக்ஷ்மி போலவே நெற்றியில் பொட்டுடன் சர்வாலங்கார பூஷிதையாக இருப்பதைக் காணலாம். அவர் தாயாரும் அப்படியே தெரிகிறார். வீரமணி தம்பதிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர் போலத் தெரியும் அந்த மணப்பெண். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார். (ஃபோட்டோ கீழே) வேண்டுமானால் இணையதளத்தில் அதைப் பெரிதுபடுத்திப் பார்க்க.

ஒரு உபகதை. ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட் டுப் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் ஆறடி, ஏழடி கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரீகமும், தேவையற்ற தொல்லையும் ஆகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்‘ என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார் ஈ.வெ.ரா. (2). வீரமணி மனைவி உள்பட ஃபோட்டோவில் உள்ள பெண்கள் ஈ.வெ.ரா கூறியதைக் குப்பையில் போட்டு விட்டுத்தான் ஃபோட்டோவில் நிற்கிறார்கள்.

(1)https://www.dailythanthi.com/News/State/2018/06/18013240/invitation-has-been-done-without-printing-K-Veeramani.vpf (2) https:\\newindian.activeboard.com/t64544642/topic-64544642

துக்ளக், 1.12.2021, பக்கம் 30

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவரைச் சீண்ட வேண்டும் - அப்படிச் சீண்டாவிட்டால்  அவாளுக்கு தூக்கம் வராதே! இதனால் தான் இந்தப் பினாத்தல்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒன்றை வைத்துக் கூட கிண்டலும் கேலியும் செய்யும் அளவுக்கு அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகி விட்டார்கள். அவாளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஓடுகாலி சங்கராச்சாரியார் மரணத்துக்குக்கூட இரங்கல் தெரிவித்தவர் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது கூட குத்துக் கல்லுபோல உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி தானே அவர்களின் ஜெகத்குரு  - அவர்களிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமோ!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் பேரன் - கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம் - அதில் என்ன தப்பு?

யாரையும் வற்புறுத்திட வேண்டிய அவசியம் இல்லை. கால ஓட்டத்தில் அவர்களும் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டே - அதுதானே இப்பொழுது நடந்தும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கும் திராவிடர் கழகத் தலைவருக்கும், அவர் தம் இணையர்க்கும் கரோனா வந்ததற்கும் என்ன சம்பந்தம்?

எதையாவது உளறிக் கொட்டி ஆற்றாமையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அரிப்பு நோய் - நாம் என்ன செய்ய!

சங்கர மடத்தைப் பழித்தார் கருணாநிதி. அவர் படுத்துண்டார் என்று சொன்ன நாகரிக மற்ற மனிதர்தான் அவர்களின் குலக்குரு.

 புத்தி அப்படித்தானே இருக்கும்.

கூந்தலை வெட்டியும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும், பெண்கள் லுங்கி கட்ட வேண்டும், ஜிப்பா போட வேண்டும் என்றார் ஈ.வெ.ரா. ஆனால் அதுமாதிரி அவர்களின் குடும்பப் பெண்கள் இல்லையே என்று பெரிய குற்றச்சாட்டைக் கண்டுபிடித்து விட்டார்.

தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துக்கள் இன்று கூறி நாளையே நடந்து விடும் என்பதல்ல. காலவோட்டத்தில் அந்த மாறுதல் வந்தே தீரும் - வந்து கொண்டும் இருக்கிறது.

நாமும் கூட திருப்பி அடிக்கலாம், குருமூர்த்தி அய்யர் ஏன் அவுட்டுத் திரி வைக்கவில்லை. அவர் ஏன் பஞ்ச கச்சம் கட்டாமல் வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்த பேண்ட்டை ஏன் போட வேண்டும்?

புருஷனை இழந்த அக்ரகாரப் பெண்கள் ஏன் மொட்டைப் போட்டுக் கொள்ளவில்லை? வெள்ளைப் புடவை கட்டி ஏன் மூலையில் ஒதுங்கிக் கிடக்கவில்லை?

குருமூர்த்தி அய்யர் ஏன் உஞ்சி விருத்தி செய்யவில்லை? நாலுதெரு சுற்றிப் பிச்சை எடுத்துத்தானே வயிறு கழுவ வேண்டும்.  காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னது போல கும்பகோணத்தில் பிச்சைக்கார பார்ப்பான் தெரு என்று இன்றும் இருக்கிறதே என்று காஞ்சி சந்திரசேகரன் (அதுதான் அந்த சங்கராச்சாரியார்) சொன்னதுண்டே!

இதுபோல் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை நம்மாலும் கேட்க முடியுமே!

மேலும் தகவல் வேண்டுமானால் எழுத்தாளர் சகோதரி சிவசங்கரி அவர்கள், திராவிடர் கழகத் தலைவரைக் கண்ட பேட்டி- காலங் கடந்து, வீரமணி சொன்னது சரிதான் என்று  தம் அனுபவத்தின் அடிப்படையில் ஒப்புக் கொண்டதுமான தகவலை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வியாழன், 7 அக்டோபர், 2021

'துக்ளக்' குருமூர்த்தி பார்வையில் பெரியாரும், பெரியவாளும்!


மின்சாரம்

கேள்வி: தியாக வாழ்க்கை வாழ்ந்தது பெரியாராமஹாப் பெரியவரா?

பதில்நாத்திகர்களை ஒரு போதும் புண்படுத்தாத மஹா பெரியவரையும்ஆத்திகர்களை எப்போதும் புண்படுத்திய பெரியாரையும் ஒப்பிடுவது முறையல்லஒரு சந்தர்ப்பத்தில் .வெ.ரா.வை குறிப்பிட்டு மஹா பெரியவர் (கூறியதை கேட்டவர்கள்கூறியதை இங்கு கூறலாம். ‘தெய்வம்  என்பது பொய்விவகார உலகம் மட்டுமே உண்மை’ என்று .வெ.ராமசாமி நாயக்கர் போலவாழ்நாள் முழுவதும் உறுதியாக இருப்பவரும் கோடியில் ஒருவர்தெய்வம் மட்டுமே சத்தியம்மற்றவையெல்லாம் பொய் என்றுவாழ்நாள் முழுவதும் உறுதியாக இருப்பவரும்  கோடியில் ஒருவர்மற்றவர்கள் இருப்பவர்கள் தான்’ என்று ஒருமுறை கூறினாராம் பெரியவர்இன்னொரு முறை ‘.வெராமசாமி நாயக்கர் பிள்ளையாரை உடைத்ததால்தான் பிள்ளையாருக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு மகத்துவம்மூலை முடுக்கில் எல்லாம் அவருக்கு கோவில்’ என்று சொன்னாராம்அவர் போதனைகளுக்கு நேர் விரோதமாக .வெ.ராசெயல்பட்டாலும்  மஹானான அவர் .வெ.ரா.வைப் பற்றி கண்ணியமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

- ‘துக்ளக்‘ 2.6.2021 பக்.29

நாத்திகர்களை ஒரு போதும் புண்படுத்தாத மஹா பெரியவர் என்கிறாரே திருவாளர் குருமூர்த்தி (இதே ‘துக்ளக்கில் இன்னொரு கேள்விக்கான பதிலில் ‘காஞ்சிப் பெரியவர் உபன்யாசங்களின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ எல்லோரும் படிக்க வேண்டிய நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று பதில் கூறியுள்ளார்.

எனவே அந்தத் தெய்வத்தின் குரலிலிருந்தே பதிலடி கொடுக்கிறோம்.

வேத சாஸ்திரங்களுக்கு ஒத்துப் போவதாகவே நம்முடைய வைத்திய சாஸ்திரம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது முக்கியம் என்பதற்காகவே வேத சாஸ்திரத்திற்கு விரோதமாகப் போகக் கூடாதுஏனென்றால்  இப்படி விரோதமாகப் போனால் அதுதான் நாஸ்திகம்நாஸ்தி கனுக்குத்தான் வைத்தியமே பண்ணக் கூடாதே!” என்கிற சங்கராச்சாரியார்தான் நாத்திகர்களைப் புண்படுத்தாத மஹா பெரியவராம்.  நாஸ்திகனுக்கு வைத்தியம் பண்ணி ஆயுளை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்து கொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்தியம் பண்ணக் கூடாதாம் - (தெய்வத்தின் குரல்  3ஆம் பாகம் பக்கம் 148).

மனிதனை மனிதனாகப் பார் - பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்கிற தந்தை பெரியார் எங்கேநாத்திகனாக இருப்பதாலேயே வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறும்மனிதத் தன்மைக்கே இலாயக்கற்ற ஆசாமி எங்கேஇந்த இலட்சணத்தில் அவர் மஹா பெரியவராம்!

அவனவன் கிரகப்படிதான் எல்லாம் நடக்கும் - நோய் நொடிகளும்கூட அவன் கர்மப் பலன் என்பதற்கு எதிராக மருந்துகளையும்தடுப்பூசிகளையும் கண்டுபிடிப்பவர் களும் அறுவைச் சிகிச்சை செய்பவர்களும்கூட நாத்திகர் தானேஏற்றுக் கொள்ளு கிறதா குருமூர்த்தி கும்பல்?

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்இது தப்புஸ்வாமி இல்லை என்று சொல்லிக் கொண்டேகூட ‘ஆஸ்திகர்களாக இருக்க முடியும்  ஆஸ்திகம் என்றால் வேதத்தின்மீது நம்பிக்கையாக இருப்பது என்றுதான் அர்த்தம்ஸ்வாமியிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை” என்று குருமூர்த்தி மதிக்கும் அதே ‘தெய்வத்தின் குரலில்’ அவர் போற்றும் மஹாப் பெரியவாள் எழுதுகிறது.

கடவுளை மறுக்கலாம் - ஆனால் வேதங்களை மறுக்கக் கூடாது - இவர் ஆஸ்திகராம்.

வேதம் தானே இவர்களை பிராமணன் என்கிறதுபெரும்பாலான மக்களை சூத்திரன் என்கிறது - அதனால்தான் இவர்கள் கடவுளுக்கு மேலாக வேதங்களைத் தூக்கிச் சுமப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் வேதங்களை ஏற்காதவர் - அப்படி என்றால் சங்கராச்சாரியார் பார்வையில் அவரும் நாஸ்திகர்தான் (இன்று “ஆஸ்திகர்” என்பது உயர் ஜாதியினரின் நலம்இன்று “நாஸ்திகம்“ என்பது பெருவாரியான மக்களின் நலம்“ என்று அடிகளார் கூறியுள்ளார் -  அருமை புரிகிறதுபுரிகிறது!!)

ஹிந்து மதத்துக்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் - பிளவுகள் உண்டுவேதங்களை ஏற்காதவர்கள் உண்டு என்பதால் அவர்களும் நாஸ்திகர்கள் தான் - அவர்களுக் கெல்லாம் வைத்தியம் பார்க்கக் கூடாது - அப்படித்தானேஅப்படி ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் மஹா பெரியவராக இருக்க முடியாது - மஹா மஹா மட்டமான ‘மனிதராகத்தான் (?) இருக்க முடியும்!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லும் பேர்வழிதானே இந்த ஆசாமிஒரு மனிதனைப் பார்த்து தீண்டத்தகாதவன் என்று ஒரு மதம் சொல்லுமானால்ஒரு மதத் தலைவர் சொல்லுவார் என்றால்  அத்தகைய வரை எந்தப் பட்டியில் அடைப்பது?

இடஒதுக்கீடுப் பிரச்சினையில் பிராமணர்களுக்காக நான் கம்யூனல் பேஸிஸில் பேசுகிறேன் என்று சொல்லுபவர் பார்ப்பன மடத் தலைவராமஹா பெரியவாளா?

மனிதன் தானாகப் பிறக்கவில்லை - ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லைமற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்அப்படிஎண்ணிப் பார்த்துச் செயல்புரிவதுதான் மனிதத் தன்மை (‘விடுதலை’ 21.7.1962). என்று சொன்ன மானுடத்தின் மகத்தான தலைவர் தந்தை பெரியார் எங்கே - மற்ற மனிதனைப் பார்த்துத் தீண்டாதவன் என்று முத்திரை குத்தி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் காஞ்சி சந்திரசேகரேந்திரர் எங்கே - எங்கே?

தந்தை பெரியார் பற்றி சங்கராச்சாரியார் சொன்னது இருக்கட்டும்இதே சங்கராச்சாரியாருக்கு தந்தை பெரியார் செய்த உபகாரம் என்ன?

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பல்லக்கில் போகாமல் குருமூர்த்தி போற்றும் அந்த ‘மஹா பெரியவாள்’ நடந்து செல்ல ஆரம்பித்தது எப்பொழுது? - அதற்கு யார் காரணம்என்பதை தனியே காண்க!

பெண்கள் கோடாரிகளாம்! கோடாரிகள் என்ன செய்யும் தெரியுமா?

 

மின்சாரம்

(பார்ப்பன ‘துக்ளக்‘ தொடர்ந்து பெண்களை இழிவு படுத்தி வருகிறது. ‘பெண்களுக்கு இரங்க நாங்கள் என்ன பேய்களாபிசாசுகளா?’ என்று கேட்கிறது.

பெண்ணுரிமை என்னும் கோடாரிகளால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றனவாம் - இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்களின் மனப்பான்மை இது தான் - புரிந்து கொள்வீர்!)

சில கேள்விகளும் பதில்களும்

கேள்விபுதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கும் ஸ்டாலின் கலைஞர் நினைவு நூலகத்தை மதுரையில் அமைக்க ரூ. 70 கோடி செலவழிக்கிறாரே?

பதில்: “கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” என்பார்கள்நூலகம் அமைப்பது என்பது அறிவு சார்ந்தது - அவசியமானதுதமிழ் அறிஞர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

- ‘துக்ளக், 23.6.2021

நாடாளுமன்ற கட்டடம் என்பது இன்றைய பொருளாதார நெருக்கடியில் ரூ.13 ஆயிரம் கோடி செலவு செய்வது அவசியமா? 450 ஆண்டு கால வரலாறு படைத்த ஒரு மசூதியை இடித்துவிட்டு ரூ. 1,100 கோடி செலவில் ராமன் கோயில் கட்டுவது எல்லாம் எந்த அளவுக்காவது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் உகந்ததாக இருக்க முடியுமா?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம்நூலகம் வேறு - கோயில் வேறு.

கேள்விஇன்றைய காங்கிரஸ் பதாகைகளில் காந்திநேருஇந்திராராஜிவ் ஆகியோரின் படங்கள் இருப்பதை ஜீரணிக்க முடிகிறதா?

பதில்நேரு கொள்ளு தாத்தாஇந்திரா பாட்டிராஜிவ் அப்பா என்று அவர்கள் படங்களை வைத்துக் கொள்கிறார் கள் என்பதால் ஜீரணித்துக் கொள்ளலாம்.

ஆனால் எதை வைத்துகாந்திநேரு படத்தை வைத்துக் கொள்வதை ஜீரணம் செய்வதுதெரியவில்லை.

- ‘துக்ளக், 23.6.2021

நேரு முதல் ராஜீவ் வரை காங்கிரஸ்காரர்கள்தாம்காந்தி யாரும் காங்கிரஸ்காரர்தாம்அந்த வகையில் காங்கிரஸ்காரர் கள் தங்கள் பதாகைகளில் அவர்களின் படங்களை வைத்துக் கொள்கிறார்கள்இதிலென்ன என்ன குற்றம்?

ஆனால் நாடாளுமன்றத்தில் காந்தியாரையும் - அவ ரைப் படுகொலை செய்வதற்கு மூளையாக இருந்து செயல் பட்ட சாவர்க்காரையும் ஒன்றாக வைத்திருப்பது எந்த வகையில் சரி என்று ‘துக்ளக்‘ விளக்குமா?

கேள்வி: ‘கணவனும்மனைவியும் ஈகோவைக் காலணியாகக் கருதி வீட்டுக்கு வெளியே விட்டுவிட வேண்டும்‘ என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.செந்தில்நாதன் கூறி இருக்கிறாரே?

பதில்குடும்ப அமைப்பு தொடங்கிசமுதாயம்கட்சிஆட்சி அமைப்புகள் வரை நிலையாக இருக்க காஞ்சிப் பெரியவர் ஒரு தாரக மந்திரத்தை அளிக்கிறார்ஒன்று ‘அபரிகிரஹ’ (இதுபோதும் என்ற திருப்தி), அடுத்தது ‘நிரகம் பவானா’. (ஈகோஅகம்பாவம் இல்லாமல் இருப்பதுஇந்த இரண்டு குணங்களும் இல்லை என்றால் குடும்பம் தொடங்கி எதுவும் நிலைக்காதுஇரண்டும் கடமை உணர்வால்தான் வரும்உரிமைக்குரல் அழியும்இன்று தனி நபர் உரிமைபெண்ணுரிமை எனும் கோடாரிகளால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றனஇதை வெளிப்படையாகக் கூறாத நீதிமன்றம்சுற்றி வளைத்து ‘ஈகோவை விடுங்கள்’ என்று கூறுகிறதுஈகோ தனி நபர் உரிமையின் வாரிசுதனி நபர் உரிமை குடும்பத்துக்கு எதிரான கோஷமாக மாறும்போது குடும்பங்கள் அழிகின்றன - என்பது ‘துக்ளக்‘ குருமூர்த்தி பார்ப்பனரின் பதில்.

பெண்கள் குறித்த சிந்தனையில் வடியும் மனுதர்மப் புத்தியின் துர்நாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதோ சோ ராமசாமி பேசுகிறார்

கேள்வி: ‘கொலம்பியாவில் வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்ளாவிடில்அதைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரலாம்‘ என்று சட்டம் கொண்டு வரப்போகிறார்களாமே?

பதில்வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் பெண்களுக்குப் புத்தி வரும்! ‘அய்யய்யோஎல்லாம் இப்படி குளறுபடி ஆகிறதே’ என்று அலறி புதிய சட்டம் கோருவார்கள். “வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் அதையே காரணம் காட்டிபெண்கள் விவாகரத்துக் கோரலாம்‘’ என்று புதிய சட்டம் வரும் (‘துக்ளக்‘, 10.5.2005).

வீட்டு வேலைகளை ஆண்களும் செய்யலாம்பெண்களும் செய்யலாம்தவறு ஏதுமில்லை என்று சொல்ல மனம் வருகிறதா இந்த மனுதர்மவாதிகளுக்குஎப்படி எப்படியெல்லாம் கேலி - கிண்டல்!

அதைவிட இன்னொரு கேள்வி - பதில்.

கேள்விஆனானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும்போது உங்கள் மனம் மட்டும் அவர்கள் மீது இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?

பதில்பெண்களைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியாபேயாபிசாசா? (‘துக்ளக்‘ 14.9..2005)

இதற்கு விளக்கமும் வேண்டுமாசோ ராமசாமி இப்படி என்றால் இந்த குருமூர்த்தி எப்படிப்பட்டவர்?

கேள்விபெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்ராயம் தான் என்ன?

பதில்உயர்ந்தவர்கள்அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (‘துக்ளக்‘ 18.3.2009)

இதுதான் ‘துக்ளக்‘ பார்ப்பனர்களின் பார்வையாகி விட்டபிறகு - அவர்கள் வேறு விதமாக எழுது வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

சோ ராமசாமி தனக்குப் பிறகு ‘துக்ளக்கை’ நடத்த அந்தத் தரத்தில் உள்ள பார்ப்பனரைத்தானே ‘பொறுக்கி’ எடுத்து அந்த இடத்தில் நியமனம் செய்வார்.

காஞ்சி “காமகோடி சங்கராச்சரியார் ஜெயேந்திர சரஸ்வதி தனது மடத்துக்கு வந்த எழுத் தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்தார்இந்தத் தகவலை கண்ணீரும் கம்பலையுமாகக் கதறி கதறிக் கூறியதை தொலைக் காட்சி களும் ஒளிபரப்பின.

பாதிக்கப்பட்ட பெண்ணே பதறிப்பதறி சொல்லுகிறார்அந்த நேரத்தில் இந்த குருமூர்த்தி குருக்கள் என்ன செய்தார் - சொன்னார் தெரியுமா?

அனுராதா ரமணனுக்குப் பக்கவாத நோய் வந்ததாகவும்காஞ்சி ஆச்சாரியாரின் அனுக்கிரகத்தால் தான் குணம் பெற்றதாக வும்இதே அனுராதா ரமணன் கூறியதாகக் குருமூர்த்தி அண்டப்புளுகை அவிழ்த்துக் கொட்ட (‘துக்ளக்‘ 29.12.2004) பாதிக்கப்பட்ட அந்த எழுத்தாளரான அனுராதா ரமணனும் செவிளில் அறைந்த மாதிரி பதிலடி கொடுத் தாரே!

காஞ்சி சங்கராச்சாரியாருடன் காம்பர மைஸ் ஆகி விட்டதாக அவிழ்த்து விடும் அவர்களை என் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்துங்கள் பார்க்கலாம்மிரட்டல் களையும்துரத்தல்களையும் எப்படி நிறுத்தி னேன் என்று சொல்லுகிறேன்” (‘குமுதம்‘ 10.1.2005, பக்கம் 61-63) என்று சொன்னாரே - ஆசாமி குருமூர்த்தி எங்கோ மூலையில் முக்காடு போட்டுப் பதுங்கியது எல்லாம் மறந்து போச்சா?

சங்கராச்சாரியாரையும் இழுத்து வந்து குளிர்காய்கிறாரேபெண்களைப் பற்றி இந்த சங்கராச்சாரியார்களின் யோக்கியதை என்ன?

பிராமணப் பெண்கள் வரதட்சணை தர முடியாவிட்டால் அதற்காக இன்னொரு ஜாதிக்காரரைத் திருமணம் செய்து கொள் வது சரியல்ல.

பெற்றோர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைமரத்திற்கு அந்தப் பெண் ணைத் திருமணம் செய்து வைத்துவிடுங்கள்பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விடுங்கள்இப்பொழுது அந்தப் பெண் விதவையாகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்துவிடுங்கள்அந்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவர் நம் மதத்தைக் காப்பாற்ற வேண்டும்!”

என்று சொன்னாரே அந்த சங்கராச் சாரியாரைத்தான் (சந்திரசேகரேந்திர சரஸ் வதிகுருமூர்த்தி சாட்சிக்கு அழைக்கிறார்.

இன்னொரு சங்கராச்சாரியார் - ஜெயி லுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்தவர்ஒரு கொலை வழக்கில் சிறைக்குள் கம்பி எண்ணியவர் என்ன சொன்னார் தெரி யுமோ!

விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள்!” என்றாரே (‘தினமணி’ தீபாவளிமலர் 1997).

அதனைக் கண்டித்து காஞ்சி சங்கர மடம் முன் திராவிடர் கழக மகளிரணியினர் போராட்டம் நடத்தியதுண்டே!

அதோடு நின்றாராவேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவான வர்கள் என்று சொல்லி பெண்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

எந்த தைரியத்தில் இந்த 21ஆம் நூற் றாண்டிலும் ‘துக்ளக்குகள்குருமூர்த்திகள் பெண்களைக் கேவலமாக இழிவாக எழுது கிறார்கள் - பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்ற துணிச்சலாலா?

இன்று தனி நபர் உரிமைபெண்ணுரிமை என்னும் கோடாரிகளால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றனவாம்‘’ - எழுதுகிறார் குடுமி குருமூர்த்தி.

ஆக பெண்கள் என்றால் உரிமை கோரக்கூடாது - குஷ்டரோகி கணவனை தாசி வீட்டுக்குத் தூக்கிச்சென்ற நளாயினி களாக இருக்க வேண்டும்அய்வருக்கும் தேவியாக இருக்க வேண்டும் - அப்படித் தானே?

ஒன்றை எண்ணிப்பாருங்கள் - பேய் தான் பெண்களுக்காக இரங்கும் என்று சொல்லுகிற இவர்கள் வீட்டிலும் பெண்கள் இல்லையாதாய் இல்லையாமகள்கள் இல்லையாசகோதரிகள் இல்லையா?

இந்த இரக்கமற்ற மனுவாதிகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இதற்கு ஒரு முடிவை பெண்கள் தான் காண வேண்டும்பெண்கள் கோடாரிகளாம் - கோடாரிகள் என்ன செய்யும் தெரியுமா?

அடக்க நினைத்தால்அடக்கப்பட்ட வர்கள் அரிமாக்களாக எழுவார்கள் - எச்சரிக்கை!