வியாழன், 25 மார்ச், 2021

மாநில அரசுப் பணிகளுக்கு அகில இந்தியத் தேர்வா?


 மாநில அரசுப் பணிகளுக்குத் தகுதியான பணியாளர் களைத் தேர்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தலாம் என்றும், இதற்காக உருவாக்கப்படும் அமைப்புடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு விஷமமான ஒன்றை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது - உடனடியாக தமிழக அரசு இதனை எதிர்த்துக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி மாநில அரசின் பல்வேறு துறைகள், வங்கிகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழில்நுட்பம் சாராத 'பி' மற்றும் 'சி' நிலைப் பணிகளுக்கு தேசிய அளவில் பொதுப் போட்டித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்போர் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகுமாம்.

மாநில அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் சேர விண்ணப்பம் செய்பவர்களை, அவர்களின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு முறை தேர்வு எழுதியவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் எந்த வேலையும் கிடைக்காவிட்டால், அவர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். தரவரிசையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒரு தேர்வை எழுதலாம். அதேநேரத்தில் ஒருவர் அவரது வாழ்நாளில் 3 முறைக்கு மேல் இத்தேர்வை எழுத முடியாது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதே! மாநில அரசுகள் அவற்றின் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவற்றுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.  அதற்காக அரசமைப்புச் சட்டத்தின்

14 ஆவது பகுதியில் 308 முதல் 323 வரை 16 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பணியாளர்கள் நியமனம், மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வா ணையம் ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளில் பணிகளின் தன்மைக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், பொறியாளர்கள் தேர்வு வாரியம், மின்துறை பணியா ளர்கள் தேர்வு வாரியம் என ஏராளமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் கலைத்து விட்டு, பலவிதமான பணிகளுக்கு ஒரே அமைப்பை ஏற்படுத்தி, அனைத்து வேலைகளுக்கும் ஒரே தேர்வு என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

 2016-ஆம் ஆண்டு அதிமுக அரசின் அரசாணைப்படி, தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்புக்கு யார்வேண்டு மானாலும் தேர்வெழுதலாம் என்ற திருத்தவிதியின் படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்து வருகிறார்கள். அதனுடைய நீட்சியே, இது எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் கிட்டத்தட்ட 70% பிற மாநிலத்தவர் களால் அபகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மாநில அரசுப் பணிகளும் வேறு மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கும்  சூழ்ச்சி இதில் பதுங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வையும் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும். அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு களை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 முறையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வாறு இருக்கும் போது பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத வேண்டும் என்பது அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.

 4.12.2019 அன்று மத்திய அரசு இந்த திட்டத்தை

அறிவித்தது, அதன் பிறகு கரோனா பரவல் முழு முடக்கம் காரணமாக ஓராண்டு இந்த விவகாரத்தை அப்படியே வைத்திருந்து தற்போது அமித்ஷா மீண்டும் மேற்கு வங்கத் தேர்தலில் இந்த விவகாரத்தைக் கையி லெடுத்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது என்பதை இப்பொழுதாவது விளங்கிக் கொள்ளாவிட்டால், இதனை முறியடிக்கா விட்டால் தமிழ்நாடு தமிழர் நாடாக இருக்காது - மாறாக வடவர் நாடாக, ஆரியர் நாடாக முற்றிலும் மாறும் - ஆபத்து - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

அத்துமீறுகிறவர்களுக்குப் பதிலடி என்ன? மகாதானபுரம் மஹாதானபுரமாக மாற்றப்பட்டது, எப்படி?


தமிழ் இனி மெல்ல பாஜகவினரால் அழிக்கப்படும் என்பதற்கு அடுத்த சான்று,

 கரூர் மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் என்ற பெயர் கொண்ட ரயில் நிலையத்தின் பெயர் பலகையை எடுத்துவிட்டு புதிய பெயர்பலகையில் மஹாதானபுரம் என்ற வடமொழிச்சொல்லைச் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் சக்திவேல் கூறியதாவது:

‘‘ரயில் நிலையத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து எங்களுக்குப் பெயர் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது. அதில் தமிழில் இருந்த மகாதானபுரம் என்பதில் உள்ள ‘‘கா'' என்பதை மட்டும் அகற்றிவிட்டு ‘‘ஹா'' என்று சேர்த்துள்ளனர். தலைமையிடமிருந்து  வந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. ஆகவே, பழைய எழுத்துப்பலகையில் இருந்த பெயரை அழித்துவிட்டு புதிய பெயரைச் சேர்த்துள்ளோம்'' என்று கூறினார்.

இது தொடர்பாக சேலம் கோட்டம் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

 பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று ஒன்றை வெளியிட்டவர்கள் அதில் முதல்பக்கமே வழக்கொழிந்து போன எழுத்துருவிலேயே இல்லாத ‘‘      ” பயன்படுத்தி தங்களின் தமிழ் வெறுப்பைக்  காட்டி னார்கள்.

 ஆனால், மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழில் பாரதி, திருக்குறள், அவ்வையார் பாட்டு எல்லாம் அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் வித்தியாசமான உச்சரிப்பில் பேசிவிட்டுச் செல்வார். அவர் இதைத்தான் சொல்கிறார் என்று, அடுத்த நாள் ஊடகத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொள்ளவேண்டிய அவலம் உள்ளது.

 இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஊடுருவி உள்ள வட இந்திய அதிகாரிகள், தங்களின் தமிழ் வெறுப்பை எந்த அளவு   அரங்கேற்ற வேண்டுமோ அந்த   அளவு செயல்படுத்தி வருகின்றனர்.

 கடந்த ஆண்டு முழு அடைப்பின் போது சேலம் கோட்டத்தில் அதிக அளவு வட இந்தியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அப்படிச் சேர்ந்தவர்களின் நடவடிக்கையே தற்போது வெளிவந்துள்ளது, இந்தி பேசுபவர்களை திட்டமிட்டே மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்புகிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும்.

தமிழுணர்வு தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை இந்தி  மயமாக்க - இந்து மயமாக்கத் துடிப்போர்க்குப் பதிலடி கொடுக்கவேண்டாமா?

பா.ஜ.க.வுக்கு அடிமையாகிவிட்ட அதிமுகவுக்கும் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்க வேண்டாமா?

ஆதரிப்பீர், தி.மு.க.

நீட்’ தொடருவதற்குக் காரணம் யார்?காங்கிரஸ் கூட்டணியா - பா.ஜ.க. கூட்டணியா?

உண்மை என்ன?

 ‘நீட்’ தொடருவதற்குக் காரணம் யார்?காங்கிரஸ் கூட்டணியா - பா..கூட்டணியா?

பொய்யர்களை அடையாளம் காண்பீர்!

நீட்’ தி.மு.அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய ஆட்சியின் போதுதான் கொண்டு வரப்பட்டது என்று வார இதழ்கள் முதல் நாள் ஏடுகள் வரை பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறார்களே... அதன் உண்மை நிலை என்னபடித்த வர்களும்பாமரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன?

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்போர் 98 விழுக்காடுசி.பி.எஸ்.உள்ளிட்ட பாடத்திட்டத்தில் படிப்போர் வெறும் இரு விழுக்காடே!

ஆனால்மருத்துவக் கல்லூரிக்கு ‘நீட்’ தேர்வு மூலம் கிடைத்திட்ட இடங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றனமாநிலக் கல்வித் திட்டத்தில் தேர்வு எழுதிய 98 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 63 விழுக்காடுசி.பி.எஸ்.உள்ளிட்ட வேறு கல்வி திட்டத்தில் பயின்ற இரு சதவீதத்தினருக்குக் கிடைத்த இடங்களோ 37 விழுக்காடாகும்.

நீட்’ தேர்வை திராவிடர் கழகம் ஏன் எதிர்த்து வருகிறது என்பதற்கான நியாயத்தை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நீட்’ தேர்வினை இந்திய மருத்துவக் குழு (MCI) அறிமுகப்படுத்திய அந்த முதற்கட்டத்திலேயே (2012) திராவிடர் கழகம் கடுமையாக எதிர்ப்புக் குரலை உயர்த்தியது - கண்டனத்தை அழுத்தமாகவும் தெரிவித்தது. ‘நீட்’ தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 வழக்குகள் பதிவாயினதி.மு..வும் வழக்குத் தொடுத்ததுண்டுநீதிபதிகள் அல்தமாஸ் கபீர்விக்ரம் ஜித்சென்அனில்தவே அடங்கிய அமர்வில் முதல் இரு நீதிபதிகள் ‘நீட்’ தேர்வுக்குத் தடை விதித்தனர்மூன்றாமவர் மாறுபட்ட தீர்ப்பினை எழுதினார் (18.7.2013).

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு(MCI க்குதேர்வு நடத்தும் அதிகா ரமே கிடையாது என்று அந்தப் பெரும் பான்மை தீர்ப்பை அறுதியிட்டுக் கூறியிருந்தனர் - இது எல்லாம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்  (UPA)  நடைபெற்ற நிகழ்வுகள் ‘நீட்’ தேர்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது என்று சமூக நீதியாளர்களுக்கும்ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்ட நிலையில்மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பி.ஜே.பிதலைமையிலான - நரேந்திர மோடி பிரதமரான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மீண்டும் இடி விழுந்தது. ‘நீட்’ செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய பி.ஜே.பிஅரசும்தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அனில்தவே.கே.சிக்ரிஆர்.கே.அகர்வால்.கே.கோயல்ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய சாசன அமர்வு ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ‘நீட்’ தேர்வை நடத்திட அனுமதியளித்ததுஇதில் குறிப்பிட்டதக்கது என்னவெனில், 2013இல் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ‘நீட்டுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த அதே அனில்தவேதான் இந்த அய்ந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வுக்குத் தலைவர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

சமூகநீதி எத்தனை எத்தனைத் தடைகளையும்கண்ணி வெடிகளையும் தாண்டிவர வேண்டியுள்ளது என்பதை எண்ணும் போது இரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டும். +2 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம்மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான முன்னெடுப்புப் பாடப் பகுதிகள் இதில்தான் உள்ளன என்பதை அறிய மாட்டார்களாஎல்லாம் தெரியும்.

கிராமத்தைச் சேர்ந்த அனிதாக்கள் எல்லாம்கூட 1200 மதிப்பெண்களுக்கு 1,176 பெற முடிகிறதுஅந்த அளவுக்கு மேலே வந்து விட்டனர்இதனை வளர விட்டால் தங்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகத் திணிக்கப்பட்ட ஆரியச் சதிதான் இந்த ‘நீட்’.

(28.6.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் காணொலி மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆதாரப்பூர்வ தகவலும் கருத்தும் இது)

நீட்டுக்கு உயிரூட்டி நடைமுறைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தது - இருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பா..அரசே - அதனோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அரசு  தி.மு.பொய் சொல்லுவதாக தலைகீழாகப் பிரட்டி விளம்பரம் செய்யும் அசல் பொய்யர்களை அடையாளம் காண்பீர்வாக்குச் சீட்டு மூலம் தண்டிப்பீர்!

இலங்கைக்கு எதிரான அய்.நா. தீர்மானம்: பாஜகவின் தமிழர் விரோதப்போக்கு!


இலங்கை அரசுக்கு எதிரான அய்.நா.தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக, அங்கு 2009  இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும், முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் அய்.நா. மனித உரிமை அவையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அய்.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியுள்ளது ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும்.

ஆனால், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசோ எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும், துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது.

தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்!

கி.வீரமணி  

தலைவர்,

திராவிடர் கழகம்

23.3.2021          

செவ்வாய், 23 மார்ச், 2021

'நீட்' NEET அல்லது 'சீட்' SEET இன்னும் புதிதாக வரும் எல்லாமே நவீன மனுநீதி தான்


'நீட்' NEET அல்லது 'சீட்' SEET இன்னும் புதிதாக வரும் எல்லாமே நவீன மனுநீதி தான். மீண்டும் மீண்டும் பதிய வைப்போம் இந்த புதிய வருகையாளர்களுக்கு

கலைஞர் அவர்கள் ‘நுழைவுத் தேர்வு ரத்து 2006’ அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார். இந்த குழு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டபின் அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி - நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். 

அந்த சட்டத்திற்குப் பெயர், “Tamilnadu Professional Education Institution Admission Act 2006”! கல்வி “Concurrent List” இல் இருப்பதால் - இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3-3-2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது தி.மு.க. ஆட்சிதான். 

இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும், பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதி மன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் திமுக ஆட்சி இருந்தபோதுதான். 

பாவம் கமலஹாசனுக்கு இந்த அடிப்படைத் தகவல்கள் கூட தெரியவில்லை; (நடுநிலை ஊடகங்களுக்கும்) தற்போது இருக்கும் இந்த சட்டத்தை பயன்படுத்தி நீட் தேர்வை கூட தமிழகத்தில் வர விடாமல் செய்யலாம்.(விரைவில் நடக்கும்.) 

இவர்களின் நோக்கம் நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தால் என்னைப்போல் யாரும் பொறியியல் பட்டதாரிகள் (அதுவும் அண்ணா பல்கலைகழகத்தில் நேரடியாக படித்தவன்)  உருவாகிவிட கூடாது என்பதே முதல் நோக்கம். 

இந்த நுழைவுத் தேர்வு ரத்து மூலம் பெரும் பாலான கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை நிலை நிறுதிக்கொண்டனர். 

நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்திற்கு இன்னும் வலுசேர்த்தது முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை. சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்விப் பயணம் தடைபடாத வகையிலான முக்கிய முடிவு; பட்டதாரி அல்லாத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்குக் கட்டணத்தை ரத்து செய்தது. இதன் மூலம் பலர் குலத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

திராவிடம் நம் கையை பிடித்து முன்னேற கூட்டி செல்கிறது.

கமல் போன்றவர்கள் நம்மை குறைந்தது 15 வருடம் பின்னோக்கி கூட்டி செல்வார்கள்.

பின் குறிப்பு: அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “நுழைவுத் தேர்வு ரத்து சட்டம், “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, அம்மையார் ஜெயலலிதா ஆட்சி யிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 

- முகநூலிலிருந்து தகவல் 

குடந்தை கோ.கருணாநிதி

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று கேட்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கும் - கவனத்துக்கும்...


ஒப்புக்கொள்ளப்பட்ட விழுக்காடு இடங்கள் எஸ்.சி., எஸ்.டி., .பி.சி.,களுக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை!

இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிப்பது மாநில அரசுக்குரியதே!

இட ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விக்குப் புள்ளி விவரங்களுடன்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகாராட்டிரா மாநிலத்தில் 2018 இல் மராத்தா ஜாதி யினருக்கு கல்விவேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதுஅதற்கு எதி ராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம்மராத்தா ஜாதியினருக்கு வேலைவாய்ப்பில் 12 விழுக் காடும்,  கல்வியில் 13 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க லாம் என தீர்ப்பளித்ததுஇதற்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திரா சஹானி வழக்கு

இந்த வழக்குகளின் முக்கிய சாராம்சம், ‘‘முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி (இந்திரா சஹானி வழக்குமண்டல் கமிஷன் வழக்குஇடஒதுக்கீடு 50விழுக்காடு தான் இருக்க வேண்டும்ஆனால் மராத்தா ஜாதியின ருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 50 விழுக் காடு என்ற அளவுகோல் மீறப்பட்டது'' என்பதாகும்இதேபோல் தமிழக அரசின் 69விழுக்காடு இடஒதுக் கீடுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளனமராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின் தமிழக அரசுக்கு எதிரான வழக்குகள்மீது தனியே விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை (மார்ச் 19) விசாரணைக்கு வந்ததுநீதிபதிகள் எல்நாகேஸ்வர ராவ்எஸ்அப்துல் நசீர்ஹேமந்த் குப்தாரவீந்திர பட் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.

அப்போது மகாராட்டிரா அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்: ‘‘ மண்டல் தீர்ப்பு அடிப்படையிலும்சூழல்கள் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்மராத்தா ஜாதியி னருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது சரிதான்மத்திய அரசு முற்படுத்தப்பட்ட -  பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திருக்கிறதுஇதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பான இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறியதாகும்.''

இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.

நீதிபதிகளின் குறுக்கீடுகள்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘50 விழுக்காடு இடஒதுக்கீடு வரம்பு இல்லை என்றால் சமூகங்க ளிடையேயான சமத்துவம் என்பது எப்படி வரும்இந்த விவகாரத்தை தன்னிச்சையாகவே நாங்கள் கையாளவும் நேரிடும்அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்இன் னமும் எத்தனை தலைமுறைகளுக்குத்தான் இட ஒதுக் கீடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்?'' என்றனர்.

மேலும், ‘‘நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகி விட்ட நிலையில் எத்தனை நலத்திட்டங்களை அரசுகள் செயல்படுத்தியும் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னமும் முன்னேற்றம் பெறவில்லையா?'' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்இதற்குப் பதிலளித்த முகுல் ரோத்தகி, ‘‘ நிச்சயம் முன்னேறி இருக்கிறோம்அதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் 50 விழுக் காட்டில் இருந்து 20 விழுக்காடு என குறைந்துவிடாதுஇந்த நாட்டில் இன்னமும் பட்டினிச் சாவுகள் இருக்கின்றன.

இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு (இந்த வழக்கில்தான் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுகுப்பைக்குப் போக வேண்டியது என்று சொல்லவில்லை. 30 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம்'' என்றார்.

அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

நீதிபதிகள் பொதுவாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப் படாதகுறிப்பிடப்படாத ஒன்று - இட ஒதுக்கீடு இத்தனை விழுக்காட்டுக்குள்தான் இருக்கவேண்டும் என்பது.

சட்டம் என்ன கூறுகிறது?

அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கு வழி ஏற்படுத்திடும் வகையில் சமூக நீதிக்கான அரசமைப்புச் சட்டப் பிரிவு 16(4) இன்படி இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

'பிரிவு 16 இல்என்ன கூறப்பட்டிருந்தாலும்அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் வகையில்அவர்களுடைய பிரதிநிதித்துவம் போதுமானவையாக இல்லை என கருதிடும் வரையில் அரசு இட ஒதுக்கீட்டிற்கு உகந்த எந்த வகை விதிமுறையினையும் உருவாக்கிக் கொள்ளலாம்.'

16(4) : Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.

மேற்கண்ட அரசமைப்புச் சட்டப் பிரிவில் கூறப்பட்டadequately (போதுமான அளவில்எனும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள்  till it becomes equal   (சமமான அளவில் பிரதிநிதித்துவம் பெறும் வரையில்ஆகும்ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்துகின்ற வகையில்பிரதிநிதித்துவம் பெற்றுள்ள வகுப்பினருக்கு சமமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவம் பெறும் வரையில் இட ஒதுக்கீட்டினை அரசு வழங்கிட வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்ட விதியின் உள் ளார்ந்த பொருளாகும். (இதையேதான் முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த பொழுது 1970 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சட்டநாதன் குழுவும் விளக்கம் அளித்துள்ளது).

சட்ட நிலை இவ்வளவுத் தெளிவாக இருக்கும்பொழுதுஉச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கு மாறான - வேறான போக்கில் நீதிமன்றத்தில் கூறியிருப்பது அசாதாரண மானதும் - தவிர்க்கப்படவேண்டியதும்கூடநீதிபதி களின் கருத்துஒடுக்கப்பட்ட மக்களை அதிர்ச்சிக்கும்பெரும் துயரத்திற்கும் ஆளாக்கக் கூடியதுமாகும்.

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாதவற்றை நீதிபதிகள் தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் பேசுவது எப்படி சரியாகும்?

இட ஒதுக்கீடு எத்தனை ஆண்டுகளாக செயல்பாட் டில் உள்ளது என்பது முக்கியமல்லஇந்த இட ஒதுக்கீடு இருந்தும் தாழ்த்தப்பட்டவர்கள்பிற்படுத்தப்பட்ட வர்கள் - அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்றுள்ளனரா என்பதுதான் முக்கியமான கேள்வி - நியாயமாக நீதிபதிகள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்பியிருக்கவேண்டும்.

பிற்படுத்தப்பட்டோருக்கு

இட ஒதுக்கீடு எப்போது வந்தது?

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் செயல் பாட்டுக்கு வந்த 1950 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப் படவில்லை என்பது நீதிபதிகளுக்குத் தெரியாதா?

அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகுதான் - பல்வேறு தடைகளுக்கும்முட்டுக்கட்டைகளுக்குப் பிறகுதான் அமலுக்கு வந்தது.

முதற்கட்டமாக வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதுகல்வியில் இட ஒதுக்கீடு என்பது அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்துதான் ஆண்டு ஒன்றுக்கு 9 விழுக்காடு என்ற வகையில் மூன்று ஆண்டுகள் கழித்துதான் செயல்பாட்டுக்கு வந்தது என்பதுதான் உண்மைஅதிலும்கூட எல்லாத் துறை களிலும் அல்லவிதிவிலக்குகளுடன் தான் செயல் படுத்தப்பட்டதுஉண்மை இவ்வாறு இருக்கஇன்னும் எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்பது ஆச்சரியமானது என்பதைவிட அதிர்ச்சியானது என்பதே உண்மை - உண்மையிலும் உண்மை!

எங்கெங்கும் உயர்ஜாதியினர் ஆதிக்கம்:

இதோ புள்ளி விவரங்கள் பேசுகின்றன

புள்ளிவிவரங்கள் என்ன சொல்லுகின்றன?

மத்திய அரசின் குரூப்  பதவிகளில் 27 துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பூஜ்ஜியம்குரூப் B-யில் 23 துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடம் பூஜ்ஜியம்.

தாராளமாகப் பார்த்தாலும் பார்ப்பனர் உள்பட உயர்ஜாதியினர் விழுக்காடு 15 மட்டுமேஆனால்கல்வியிலும்வேலை வாய்ப்பிலும் அவர்கள் தானே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.

குரூப் A-யில் உயர்ஜாதியினர் - 69.63%

குரூப் B-யில் உயர்ஜாதியினர் 64.59%

மக்கள் தொகையில் 85 விழுக்காடு உள்ள தாழ்த் தப்பட்டோர்பழங்குடியினர்பிற்படுத்தப்பட்டோருக் கான இடங்கள்  குரூப்A-யில் 30.97%

குரூப்B-யில் 35.4%

வங்கிகளில் பொது மேலாளர்கள்

உயர்ஜாதியினர்  (FC)422 (94%)

எஸ்ஸி., எஸ்டி.,  ஓபிசி - வெறும் 28 (6%)

துணைப் பொது மேலாளர்கள்

உயர்ஜாதியினர்   (FC)  1108 (91%)

எஸ்ஸி., எஸ்டி.,  ஓபிசி - 107 (9%)

ஆயுள் காப்பீட்டுக் கழகம்

பொதுமேலாளர்கள்

உயர்ஜாதியினர்   (FC) 96 (84%)

எஸ்ஸிஎஸ்டி., ஓபிசி 19(16%)

துணைப் பொதுமேலாளர்கள்

உயர்ஜாதியினர்  (FC) 344 (87%)

எஸ்ஸிஎஸ்டி., ஓபிசி 52 (13%)

2019 மே 12-19 நாளிட்ட ‘எகனாமிக் டைம்ஸ்இதழ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரங்கள்.

குடியரசுத் தலைவர் அலுவலகங்கள் - செயலகத்தில் இருக்கைகள்

மொத்தம் 49.

பார்ப்பனர்கள் 39

இதர பிற்படுத்தப்பட்டோர் 6

எஸ்ஸி., எஸ்டி. 4

துணைக் குடியரசுத் தலைவர் செயலகத்தில் பதவிகள்

மொத்தம் 7.

பார்ப்பனர்கள் 7

மற்றவர்கள் பூஜ்ஜியம்.

காபினெட் செயலாளர்கள்

மொத்தம் 20.

பார்ப்பனர்கள் 17

இதர பிற்படுத்தப்பட்டோர் 2

எஸ்ஸி., எஸ்டி. 1

பிரதமர் அலுவலகம்

மொத்தம் 35.

பார்ப்பனர்கள் 31

இதர பிற்படுத்தப்பட்டோர் 2

எஸ்ஸி., எஸ்டி. 2

மத்திய செயலாளர்கள்

மொத்தம் 26.

பார்ப்பனர்கள் 18

இதர பிற்படுத்தப்பட்டோர் 7

எஸ்ஸி., எஸ்டி. 1

இதுபோன்ற நீண்ட பட்டியல் உண்டு.

மத்திய பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்

மொத்தம் 108.

பார்ப்பனர்கள் 100

இதர பிற்படுத்தப்பட்டோர் 5

எஸ்ஸி., எஸ்டி., 3

அய்..எஸ்அதிகாரிகள்

மொத்தம் 3600.

பார்ப்பனர்கள் 2750

இதர பிற்படுத்தப்பட்டோர் 350

எஸ்ஸி., எஸ்டி. 300

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கநீதித்துறையை எடுத்துக்கொள்வோமா?

இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை

மொத்தம் 330

பார்ப்பனர் - உயர்ஜாதியினர் 306

இதர பிற்படுத்தப்பட்டோர் 20

எஸ்ஸி., எஸ்டி., 4

உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை

மொத்தம் 26

பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர் 25

இதர பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்

எஸ்ஸி., 1

(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியாஎனப்படும் நிறுவனத்திற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்தவை).

உண்மை நிலவரம் இப்படி இருக்கஇன்னும் எத்தனைக் காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று திறந்த நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்பது நீதிதானாநியாயம்தானாஎன்று கேட்கத் தோன்றுகிறது.

மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி

கூறியது என்ன?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான ராம்ஜெத்மலானி - அவர்களை நோக்கி 100 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்பீர்களாஎன்று நீதிபதி ஒருவர் வினா எழுப்பியபோது,  ‘Why Not?'என்று பதில் சொன்னதும் உண்டே!

கரியமுண்டா எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளு மன்ற நிலைக்குழு நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தியதையும் இந்த இடத்தில் நினைவூட்டுவது மிகவும் பொருத்தமானது.

தி.மு.மாநிலங்களவை உறுப்பினர் திரு.வில்சன் அவர்கள், ‘‘நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்டோருக்குரிய இடங்கள் மிகவும் குறைவாக உள்ளனஉயர்ஜாதியினர் நிரம்பி வழிவது நல்லதல்ல'' என்று சொன்னபோதுமத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டு,

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று கூறியதுண்டே!

மாநில அரசுக்கே உரிமை!

உண்மை நிலவரம் இப்படி இருக்கஇந்திய அரச மைப்புச் சட்டத்தின்  முகவுரையில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதியைக்  (Justice Social) காப்பாற்றும் பொறுப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கரங்களில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீட்டின் அளவை - விழுக்காட்டை முடிவு செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே உண்டு - மாநிலங்களுக்குத்தான் மக்கள் உண்டு - அவர் களுக்குத்தான் உண்மை நிலவரம் தெரியும் என்பதையும் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்           

22.3.2021