ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

பள்ளிப் பாடத் திட்டத்தில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ஜாதி' நீக்கப்படுவது போற்றி வரவேற்கத்தக்கது!

 

1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே தலைவர்கள் ‘ஜாதிப் பட்டம்நீக்கம்

பொதுவான ஜாதி ஒழிப்பை விவாதப் பொருள் ஆக்கவேண்டாம்!

தளபதி  மு..ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில்  நடக்கும் அமைதிப் புரட்சி!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சார்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர் களுக்கான பாடப் புத்தகங்களில் உள்ள  தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஜாதி ஒட்டு நீக்கப்படுவது போற்றி  வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே தலைவர்கள் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்தனர்எக்காரணம் கொண்டும் ஜாதி ஒழிப்பை விவாதப் பொருளாக்க வேண்டாம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது  அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு பாடப் புத்தகங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் உள்ள தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களின் பின்னால் உள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கம் வரவேற்கத்தக்கது.

1929-லேயே தந்தை பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே (செங்கற்பட்டில்பெயருக்குப் பின் ‘ஜாதிப் பட்டம்போடுவதை தமிழ் நாட்டு மக்கள் கைவிடவேண்டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டுஅம்மேடையிலேயே தலைவர்கள் பெய ருக்குப் பின்னால் இருந்து ஜாதிப் பட்டங்கள் அகன்றன.

இந்தியாவில் இதர மாநிலங்களில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்கள்!

இந்தியாவின் இதர மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் பெயர்களில்கூட ஜாதி பின்னொட்டுகள் போடப்பட்டே வருகின்றன இன்றும்கூட!

ஆனால்தமிழ்நாட்டில் ஜாதிக்கட்சிகள் என்று சொல்லப்படுகிற பல அரசியல் கட்சிகள்சமூக அமைப்பு களில்கூட  தலைவர்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்ளாதது தந்தை பெரியா ருக்கும்அவர்தம் இயக்கத்திற்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்!

ஜாதிப்பட்டத்தை  நீக்கினால் ஜாதி உணர்வு நீங்கி விடுமா?' என்று குதர்க்கக் கேள்வி கேட்கக் கூடாதுஅது ஒரு வெளிப்படையானஜாதி ஒழிப்பின் முதல் அம்சம்நல்ல தொடக்கம்முடிவு அல்ல!

பெரியார் நூற்றாண்டு விழாவின்போது எம்.ஜி.ஆர்ஆட்சியில் தெருக்களில் ஜாதி பெயர் ஒழித்த ஆணை!

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது ஒன்றிய அரசு (ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்ஜனதா என்ற கூட்டு அரசில்சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட்டு பெருமைப்படுத்தியபோதுவைக்கம் போராட்டம்அவரது ஜாதி ஒழிப்புப் பணிபற்றி விளக்கம் தனியே அச்சிடப்பட்ட மடலில் குறிப்பிடப்பட்டது!

தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்ஆட்சி (.தி.மு..) நடத்தியபோதுமாநில அரசின் சார்பில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஓராண்டு கொண்டாடியபோதுதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையை அமலாக்கம் செய்யும் வகையில் (அடுத்த கட்டமாகதமிழ்நாட்டு ஊர்களின்தெருக்கள் பெயர் களில் ஜாதிப் பட்டங்கள் நீக்கப்பட அரசு ஆணையே பிறப்பித்தார் - செயலுக்கும் வந்தது!

(இன்று சில தலைவர்கள் பெயர்களில் ஜாதி குறிப் பிடப்படுவதும்சென்ற .தி.மு.அரசு தெருக்களின் பெயர்களில் ஜாதிகுறித்து பெயர்ப் பலகை வைத்ததும் - எம்.ஜி.ஆர்செய்ததற்கே முரணான செயல் ஆகும்!)

பாடத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்களில் ஜாதிப் பட்டம் நீக்குவது பாராட்டத்தக்கது!

தமிழ்நாடுப் பாட நூல் நிறுவனம் சார்பில் பாடப் புத்தகங்களில் பிரபலமானவர் பெயர்களில் உள்ள ஜாதிப் பட்டத்தை அகற்றுவதினால் அவர்களது அடையாளமோபெருமையோபுகழோ ஒருபோதும் மங்காதுமறையாதுஒளிரும்!

எடுத்துக்காட்டாக .வே.சாமிநாதய்யர் என்பதை பாட நூலில் .வே.சாமிநாதர் என்றும்.வே.சா.வின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்றும் மாற்றப்பட்டுள்ளது!

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை என்பதை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளதுஅதுபோலகப்பலோட்டிய தமிழன்என்று பேசப்படும் ..சிதம்பரம் பிள்ளைவெகு காலத் திற்குமுன்பே திராவிட இயக்கத்தவரால் செக்கிழுத்தச் செம்மல் ..சிதம்பரனார்' என்றே அழைக்கப்பட்டு நிலைத்துள்ளது.

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்என்று அழைக் கப்படும் சிந்தனைச் சிற்பி மா.சிங்காரவேலர் அவர்களைக்கூடபல கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் - பழைய பழக்க தோஷம் காரணமாகவோ என்னவோ - ‘சிங்காரவேலுச் செட்டியார்என்று குறிப்பிடும்போதுநாம் மிகவும் வேதனைப்பட்டதுண்டு - அவரே ஜாதிமத ஒழிப்பு வீரர்.

இயக்குநர் இமயம் நண்பர் பாரதிராஜா அவர்கள் எடுத்து வெற்றிகரமாக ஓடிய ‘வேதம் புதிதுஎன்ற திரைப்படத்தில், ‘பாலுத் தேவர்பாத்திரமான சத்தியராஜ் அவர்கள்ஒரு பார்ப்பனச் சிறுவனை தோளில் அமர வைத்துஆற்றைக் கடப்பார்அந்தப் பார்ப்பன சிறுவன், ‘‘பாலுத் தேவர் என்ற உங்கள் பெயரில்பாலு என்பது உங்கள் பெயர்தேவர் என்பது நீங்கள் (படித்துவாங்கிய பட்டமா?'' என்று பொறி தட்டும் கேள்வியைக் கேட்கும் காட்சியை வைத்துப் பாடம் புகட்டியுள்ளார்.

ஜாதி - 5000 ஆண்டு பிற்போக்குப் பாசி!

5000 ஆண்டுகாலம் மூளையில் பாசி பிடித்து உள்ளே ஏறிய கற்பனை நோய்தான் ஜாதிஅதற்கு எந்த விஞ்ஞான அடிப்படையோகாரண காரிய விளக்கமோ இல்லை - மனுவும்ஆரியமும் இறக்குமதி செய்த சரக்கு. ‘பகவத் கீதைபோன்ற நூல்களில் ‘நான்கு ஜாதிகளை நானே உருவாக்கினேன்என்று ‘பகவான் கண்ணனேகூறுவதாக, ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்என்று எழுதிஇன்றும் ஏய்க்கும் நிலை - வர்ணப் பாதுகாப்பு நிலை!

வருகைப் பதிவேட்டில் ஜாதி குறியா?

உடனே நீக்குக!

பள்ளிகளில் - அண்மைக்கால வருகைப் பதி வேட்டில், (Attendance Registerஎஸ்.சிமாணவர்' என்று பெயருக்குப் பக்கத்தில் அடையாளப்படுத்திசில பள்ளிகளில் எழுதிஆசிரியர்கள்மாணவர்களிடையே வேற்றுமைவெறுப்புணர்வை விதைக்கும் அவலம் பற்றியும் கூறப்படுகின்றது.

பள்ளிக்கல்வித் துறை இதுபற்றி ஒரு சுற்றறிக்கையை அனுப்பிடுவது அவசியம்தடுத்து நிறுத்துவது அவசரஅவசியமாகும்.

தமிழ்நாட்டில் முன்காலத்தில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப்போடுவது மரியாதை - பெருமை என்று கருதப்பட்டதுதந்தை பெரியாரால்சுயமரியாதை இயக்கத்தால் அது தகர்க்கப்பட்டு விட்டது.

எனவேஇப்போது பழைய தமிழறிஞர்கள்தலை வர்களின் பெயரை ஜாதி பின்னொட்டு இல்லாமல் குறிப்பிட்டாலும்அவர்களின் அடையாளம்புகழ் காக்கப்படும்.

தளபதி மு..ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப்புரட்சி!

இதனை ஒரு விவாதப் பொருளாக ஆக்கவேண்டாம் - நாட்டையே சமத்துவபுரமாக்க வேண்டுமென்ற திராவிட இயக்க லட்சிய அடிப்படையில் - முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களது ஆட்சியில் - ஆரவாரமற்ற அமைதிப் புரட்சியில் இதுவும் ஒரு மைல்கல் என்பதை வரலாறு பதிவு செய்வது உறுதிஉறுதியிலும் உறுதி!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.8.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக