வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் - உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்து பெருமிதம்

 

சென்னைஆக. 3- இந்த நாள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்சமூக சீர்த்திருத் தங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் என அவரது உருவப்படத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து பெருமிதம் கொண்டார் இந்திய குடியரசுத் தலைவர் மாண்புமிகு திருராம்நாத் கோவிந்த் அவர்கள்

 சென்னை மாகாணமாக முன்பு தமிழ்நாடு இருந்தபோதுமுதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுஅந்த வகையில்,தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இது நூற்றாண்டு விழாவாகும்இந்த விழாவுடன் தமிழ்நாடு முதல் அமைச்சராக 5 முறையும்சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்த மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமழ் அறிஞர் கலைஞரின் உருவப்படம் திறப்பு விழாவையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான கோலாகல விழாசென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் நேற்று (2.8.2021) மாலை 5 மணிக்கு நடைபெற்றதுவிழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்முதலமைச்சர்மு..ஸ்டாலின் முன்னிலை வகித் தார்தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றினார்அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடை கிறேன்உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள்முன்னர்மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவை யின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஆகஸ்டு மாதம் என்பது நமது தேசிய நாள்காட்டியில் சிறந்ததொரு மாதமாகும்ஏனெனில்இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறதுவிடுதலைக்கு பிறகான ஆண்டுகளில்தேசம் பல துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதுமக்களும்தலைவர்களும் இணைந்து மேற்கொண்ட பணிகளினால் இது சாத்தியமானது.

மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861-ஆம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள்ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தான், 1921-ஆம் ஆண்டில்சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டதுகால னித்துவ ஆட்சியின் கீழ்அத்தகைய அமைப்பு செயல்படுவதற்குபல வரையறைகளும்சவால்களும் நிச்சயம் இருந்தன.

மக்களின் நீதிக்கட்சி

தமிழ்நாடுகேரளாகருநாடகாஆந்திரப் பிரதேசம்தெலங்கானாஒடிசாலட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்த புதிய தொடக்கம் வரவேற்கப்பட்டதுவிடுதலை போராட்ட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கனவுகளும்விருப்பங்களும் புதிய சட்டமன்றம் மூலம் வெளிப்பட முடிந்ததுமக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு தளமாகஆரம்ப கட்டத்தில் மக்கள் வாக்குகளை வென்ற நீதிக்கட்சி இருந்ததுசட்டமன்ற கவுன்சில்பின்வரவிருக்கும் காலத்திற்கான பல சட்டங்களை இயற்றியது.

மெட்ராஸ் சட்டமன்றம்ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளு மைக்கான விதைகளை விதைத்ததுநாட்டு விடு தலைக்கு பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன.

தேவதாசி முறையை ஒழித்தல்

ஆளுகையில் கவனம் செலுத்தி ஏழைகளை மேம்படுத்துவதற்கும்சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டுதேவதாசி முறையை ஒழித்தல்கைம்பெண் மறுமணம்பள்ளிகளில் மதிய உணவுநிலமற்றவர்களுக்கு விவசாய நிலம் வினியோகம் ஆகியவை சமூகத்தை மாற்றியமைத்த சில புரட்சிகர எண்ணங்களாகும்.

இங்கு யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நலன் என்ற கருத்தாக்கமே இந்த சட்டமன்றத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதுதமிழ்நாட்டு மக்களின் முற்போக்கு சிந்தனையை எடுத்துக் காட்டுகின்ற வகையில்மிகச்சிறந்த தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும் புகிறேன். “மந்திரம் கற்போம்வினைத்தந்திரம் கற்போம்வானை அளப்போம்கடல் மீனை யளப்போம்சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்சந்திதெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்“.

நிலவின் இயல்புகள்

இதை இவ்வாறு விளக்கலாம்வேதம்அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம்நாம் வானத்தையும்பெருங்கடல் களையும் ஆராய்வோம்நிலவின் இயல்புகள் என்ன வென்று நாம் தெரிந்து கொள்வோம்நமது தெருக் களைத் தூய்மையாக்குவது குறித்தும் அறிந்து கொள்வோம்.

மண்ணின் மிகச்சிறந்த தலைமைகளை சட்டமன்றத் தில் பெருமைப்படுத்தும் பாரம் பரியம் உள்ளது என்பதை அறிவது உண்மையில் மகிழ்ச் சியளிக்கிறதுதிருவள்ளுவர்காந்தியார்சி.ராஜகோபாலாச் சாரிசி.என்.அண்ணாதுரைகே.காமராஜ்.வி.ராமசாமிபி.ஆர்.அம்பேத்கர்முத்துராம லிங்கத் தேவர்முகமது இஸ்மாயில் சாஹிப்எம்.ஜி.ராமச் சந்திரன்ஜெ.ஜெயலலிதாஎஸ்.எஸ்.ராமசாமி..சிதம்பரனார்பி.சுப்ப ராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி போன்ற பல தலைவர்களின் படங்கள் இப்பேரவையில் ஏற்கெனவே உள்ளன.

மக்கள் நலனுக்காக கலைஞர்

இப்போது இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத் தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கலைஞர் அவர்களது உருவப்படமும் இருக்கும்நான் இங்கு வந்தபோதுகாந்தியடிகளின் மனசாட்சிக் காவலராக திகழ்ந்தவரும்சுதந்திர போராட்ட வீரர்களில் சிறந்த தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்குடியரசுத் தலைவர் மாளிகையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் அவர்அவருடைய வருகை இந்த மதிப்பிற்குரிய அரங்கினையும் அலங்கரித்ததுஅவர் சென்னை மாநிலத்தின் முதல் பிரதமர் அல்லது முதல மைச்சர் ஆவார்அவருக்கு பின் வந்தவர்களும்முன்மாதிரியாக திகழ்ந்த அரசியல் தலைவர்கள்.

இருப்பினும்ராஜாஜிக்குப் பின் வந்தவர் களில்கலைஞர் தான் நீண்ட காலம் ஆட்சி செய்தார்இதனால் தமிழ்நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்துச் சென்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக...

இந்தியாவிடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தபோதுகலைஞர் தனது இளமைப் பருவத்திலேயேதனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்அவர் சமீபத்தில் தான் நம்மை விட்டுப்பிரிந்தார்உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய சிறுவனாக இருந்தபோதுதாழ்த்தப்பட்டவர்களுக்காகஏழைஎளிய மக்களுக்காக அவர் பணியாற்றத் தொடங்கியபோதுநீண்டகாலமாக வெளி நாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாஅன்னிய ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வறுமையிலும்கல்வியறிவின்மையாலும் சிக்கலில் இருந்தது.

அவர் தமது இறுதி மூச்சின்போதுஇந்த மண்ணும்இதன் மக்களும் அனைத்து துறை களிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும்வளர்ச்சியையும் அடைந்துள்ளதாக திருப்தி அடைந்திருக்க வேண்டும்தமது நீண்ட காலஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித் திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும்தேசத்தின் சேவைக் காகவும் செலவிட்டோம் என்பதும் அவருக்கு திருப்தியளித்திருக்கும்.

செம்மொழிக்காக...

தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?. எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால்மொழி மீது ஆர்வம் கொண்ட அரசியல் தலைவர்கள் வெகு குறைவுஅவரைப் பொறுத்தவரைஅவரது தாய்மொழி வழிபாட்டுக்குரியதுதமிழ்நிச்சயமாகமனிதகுலத்தின் மிகச்சிறந்தமிகப் பழைமையான மொழிகளுள் ஒன்றாகும்உலகம் முழுமையும் அதன் வளமான பாரம் பரியத்தில் பெருமை கொள்கிறதுஆனால்அது செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கலைஞர்.

தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்

கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தலை வராக திகழ்ந்தார்நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர்விடுதலை பெற்று 75-ஆவது ஆண்டு நிறைவை நாடு கொண்டாடும்போதுஇத்தகைய தலைவர்கள் குறித்தே எனது எண்ணங்கள் செல்கின்றன. .

அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட மதிப்பிலும்மரியாதையிலும் ஒன்றுபட்டிருந் தனர்ஒவ்வொருவரும் அவரவர் வழியில்இந்திய தாய்த்திரு நாட்டிற்கு சேவை செய்ய பாடுபட்டனர்ஒரு ஆற்றில் வெவ்வேறு கிளை நதிகள் ஒன்றிணைவது போலஅவர்கள் அனை வரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றி ணைந்தனர்.

அவர்கள் அனைவரும் காந்தியிடம் ஒரு சங்கமத்தைக் கண்டனர்காந்தியார் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் சிறந்தவைகள் அனைத்தின் ஆளுமையாகவும் திகழ்ந்தார்.

டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கரைப் பற்றி சிந்தியுங்கள்எத்துணை உயர்ந்த மேதைஎத்தகைய தொலைநோக்குஆனால் வரலாற்றுப் புத்தகங் களில் எழுதப்பட்ட ஒவ்வொரு பெயருடனும்எண்ணற்ற மற்றவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லைஅவர்கள் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதற்காக தங்கள் வசதிகளைதொழில்களைசில சமயங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.

நிகழ்காலத்தையும்எதிர்கால முன்னேற்றத் தையும் புரிந்துகொள்ளகடந்த காலத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்காந்தியார்சுப்பிரமணிய பாரதி மற்றும் பிறரின் வாழ்க்கையில்உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களைக் காண்பீர்கள்நமது சமீபத்திய வரலாற்றில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதை நான் காண்கிறேன்தெரிந்த மற்றும் தெரியாத விடுதலை போராட்ட வீரர்களுடன் தொடங்கிய பணிகள் தொடரும் என்ற நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்இந்த நூற் றாண்டில் இந்தியா தனது ஞானத்தால் உலகிற்கு வழி காட்டும்இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நன்றியுரை ஆற்றினார்மாலை 6 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்ததுவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிஅமைச்சர்கள்எம்.பி., எம்.எல்..க்கள்பல்வேறு கட்சி தலைவர்கள்சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக