• Viduthalai
கன்னிப்பேச்சில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்
சென்னை, ஆக.18 நீட் தேர்வு குறித்து தனது கன்னிப்பேச்சில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
• தமிழ்நாட்டின் தலையாய பிரச் சினைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு.
• தங்கை அனிதாவில் தொடங்கி 14 மாணவ - மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர்.
•அவர்களின் பெயரை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.
• தங்கை அனிதா, செஞ்சி பிரதீபா, ஏஞ்சலினா சுருதி, திருச்சி சுபசிறீ, அரியலூர் விக்னேஷ், கோவை சுபசிறீ, திருச்செங்கோடு மோதிலால், தர்மபுரி ஆதித்யா, மதுரை ஜோதிசிறீ துர்கா, தேனி ரிதுசிறீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா என 14 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டனர்.
• முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி உயிரிழந்த தங்கை அனிதா, ஆதித்யா, விக்னேஷ், மோதிலால், ஜோதிஸ்ரீ துர்கா ஆகியோர் வீடுகளுக்கே நான் நேரில் சென்று அந்த மாணவர்- மாணவியரின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னேன்.
• பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சொன்ன ஒரே வார்த்தை நீட் வேண்டாம் என்பது தான்.
• முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலம் வரை வராத நீட் - அம்மையார் ஜெயலலிதா ஆட்சியின் போதும் வராத நீட் தேர்வு, கடந்த ஆட்சியில்தான் திணிக்கப்பட்டது.
• நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே நம்முடைய கழக தலைவர் - முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
• நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் - நம் கழக தலைவர் அவர்கள் அறிவுரைப்படி கழக இளைஞரணி சார்பில் நானும், மாணவரணி சார்பில் அதன் செயலாளர் அண்ணன் சி.வி.எம்.பி எழிலரசன் அவர்களும் போராட்டங்களை முன்னின்று நடத்தினோம்.
• ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும் நீட் வேண்டாம் என்பது தான்.
• மக்களின் இந்த உணர்வை பிரதிபலிக்கும் விதமாகத்தான் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம் கழக தலைவர் - முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார்கள்.
• தற்போது இதை மய்யப் படுத்தி, ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகிவிட்டனவே, உங்கள் வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன?
• எதிர்க்கட்சிகள் மட்டுமில்லை, பத்திரிகைக்களும் - ஊடகங்களும் அத்தகைய கேள்வியை எழுப்புகின்றன.
• இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். கடந்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.
• கடந்த ஆட்சிக்காலத்தின் நிர் வாக சீர்கேட்டால் அரசு என்ற ஒன்று இயங்குகிறதா இல்லையா என்றே தெரியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் போராட வலுவற்று சோர்வடைந்து இருந்தனர்.
• ஒட்டுமொத்த மாநிலமே மந்த நிலையிலேயே இருந்தது. இதை பயன்படுத்தி கடந்த ஆட்சியாளர்கள் இன்னும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர்.
• ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நீட் ஒழிப்பின் முதல்படியாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் கருத்துக்கேட்பு குழு ஒன்றை நியமித்து, அந்த குழு தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.
• இப்படி பணிகள் சென்று கொண்டிருக்கும் போதே, நீட் தேர்வு ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விகள் வருகின்றன.
• நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதமெல்லாம் கிடையாது.
• நீட்டால் நம் தி.மு.கழகத்துக்காரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமில்லை, அதிமுக, பாமக, காங்கிரஸ், வி.சி.க ஏன் பாஜகவினர் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.
• கட்சி சாராத நடுநிலையாளர்களின் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.
• எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
• தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல மகளிருக்கு இலவச பேருந்து பயணம், - அதனை முதலமைச்சர் அவர்களின் பெயரை சொல்லித்தான் - அதாவது கலைஞர் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய போது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதே போல நம் முதலமைச்சர் அவர்கள் இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு நகர பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின் பஸ்” என்றே அழைக்கின்றனர்.
• ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
• பெட்ரோல் விலையை குறைத்தது உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பேசாதவர்கள் நீட்டை மட்டும் குறி வைப்பது ஏன்?
• நீட் தேர்வு தவறானது என்பதை உணர்ந்துள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் அவற்றின் உரிமையா ளர்களும் நீட்டுக்கு எதிரான தங்களின் குரலை பதிவு செய்ய வேண்டும்.
• முதலமைச்சர் அவர்கள் இதனை எனது அரசு என்று சொல்லவில்லை. மாறாக நமது அரசு சொல்லியுள்ளார்கள். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுப்போம் என்று மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
நீட் போராட்ட வழக்குகள் வாபஸ்
• இந்த நேரத்தில் நான் உங்களின் வாயிலாக முதலமைச்சர் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
• முதலாவது கோரிக்கை : நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட.
• இக்கோரிக்கையை முதல மைச்சர் அவர்கள் நிறைவேற்றி தரு வார்கள் என நம்புகிறேன்.
இரண்டாவது கோரிக்கை
நம்முடைய அரசு அமைந்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த அதிமுக அரசு போட்டிருந்த அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
• அதேபோல, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக