செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

பெரியார் உலகம்: களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர்! வாரீர்!!


பெரியார் உலகம் - களப்பணியாளர்களாக மாறிகச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர்வாரீர்என்று  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரியார் உலகம் ஒரு திராவிட அறிவியல் உலகம்.

தலைமுறைகளைத் தாண்டிதத்துவங்களால் தலைநிமிர்ந்த மானுடத்தின் சுயமரியாதை எழுச்சியை அனைத்து மக்களுக்கும் அறிவு விளக்கமாக விளக்கும் அரிய அருங்காட்சியகக் கருவூலம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை -  வயது இடைவெளி சிறிதுமின்றிசில மணி நேரத்தில் பல நூற்றாண்டுச் சாதனைகளை கற்பிக்கும் கல்விக் கூடமான கலைக்கூடம்!

பெரியார் ஒலிக்காட்சியகங்கள் - குழந்தைகள் பூங்கா - நூலகம் - காலக்குறியீட்டில் புதுமை வரலாறு பெ.மு. - பெ.பிஉள்பட!

உலக மக்களை ஈர்க்கும் வண்ணம் புதுமை பூத்துக் குலுங்கும் புத்தாக்கங்கள்!

நம் ‘அறிவின் தேக்கமாம்அய்யாவின் அருந்தொண்டால் எப்படி புழுவினும் கேடாய் மிதிக்கப்பட்டவர்களின் எழுச்சிக்குப் பிறகுஎப்படி மதிக்கப்படுகிறார்கள் -  ஆயுதம் ஏந்தா அமைதிப் புரட்சிமூலம் என்ற வரலாற்றுச் சுவடுகளைக் காட்டிகாணும் மக்களுக்குக் கல்லூரி எனக் கற்றுக் கொடுக்கும் காலம் தந்த அறிவுக்கொடை!

பணிகள் தொடங்கிவிட்டன -

பங்களிப்புகள் பொங்கி வர வேண்டாமா?

பெரியார் சகாப்தத்தின் பெருமிதப் பூரிப்பில் உள்ள என்னருந் தோழர்களே,

கடமை மறவா கருஞ்சட்டை உறவுகளே,

களப் பணியாளர்களாக மாறிடுவோம்!

கச்சிதமாக முடித்து - வாகை சூடுவோம்வாரீர்வாரீர்!!

உங்களது முதல் களப்பணியாளன்,

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

31.8.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக