செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய 58 பேருக்கு பணி ஆணை

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

சென்னை, ஆக. 15- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் கொள்கையை சட்டமாக்கியவர் கலைஞர்; அவர் தனயனோ அதனை செயல்படுத்தி - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி சரித்திரம் படைத்தார் என்று நேற்று (14.8.2021) பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மனம் திறந்து வாழ்த்தினார்.

தந்தை பெரியார் அவர்களின் விருப்பத் தினை நிறைவேற்றும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதை யொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் நேற்று மாலை சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளை யம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத் தினார்.

முன்னதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கி வாழ்த்து களைத் தெரிவித்தார்.

பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் பெரியார் அருங் காட்சியகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டார். பின்னர் அனைவரும் விடை பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்

சோ.சுரேஷ், எழும்பூர் பகுதி தி.மு.க. பொறுப் பாளர் கோ.ஏகப்பன், வட்டச் செயலாளர்

ஜெ. கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர்கள் விஜய குமார், சோ.வேல் மற்றும் ரங்கநாதன், மொய் தீன், மருதன், புனிதவதி எத்திராஜ், தேவந்தி அப்பாய் உள்ளிட்ட பலர் இந்நிகழ் வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக