தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

இந்து மதத்தைக் ‘கொச்சைப்படுத்தும்' ‘துக்ளக்'

செய்தியும், சிந்தனையும்....!
August 31, 2021 • Viduthalai

இந்து மதத்தைக் ‘கொச்சைப்படுத்தும்' ‘துக்ளக்'

* கேள்வி: தி.க.வின் அடுத்த கட்ட யோசனை எதுவாக இருக்கும்?

பதில்: துர்கா ஸ்டாலின் பூஜை அறை - அவர் கோவில் கோவிலாக, மடம் மடமாகப் போவதுபற்றி வைரலாக வீடியோக்கள் சுற்றுவதைப் பார்த்து கலங்கிப் போயிருப்பார் வீரமணி. அதிலிருந்து ஸ்டா லினுடைய நாத்திக இமேஜை எப்படி பாதுகாப்பது என்பதுதான் அவர்களின் அடுத்தகட்ட யோசனை (‘கவலையாக' இருக்கும்).

- ‘துக்ளக்', (இன்று வந்தது)

>>  பகுத்தறிவு - நாத்திகம் என்பது கட்டாயப்படுத்திக் கொண்டு வரப்படுவதல்ல என்ற சிறுபிள்ளைப் பாடம்கூடத் தெரியாத சிண்டுகள் விறைப்பதுதான் வேடிக்கை.

இவர்களின் வீர சாவர்க்கார் நாத்திகர் என்பதால், அவரின் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நாத்திகர்கள் தானா?

இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டு என்று ஆன பிறகு, அதனைக் கொச்சைப்படுத்துவது கூட இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவதுதானே!

கைவசம் சரக்கு இல்லாதபோது அரட்டை அடிப்பதைத் தவிர வேறு வேலை எதுவாகத்தான் இருக்க முடியும்?

பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்களுக்கா இந்த நிலை?

* கேள்வி: ஒடுக்கப்பட்ட சமுதாயமான பிராமணர் களுக்கு சமூகநீதியில் நீதி கிடைக்கவில்லை, ஒடுக்கப்படுகிறார்களே?

பதில்: பிராமணர்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது தானே சமூகநீதியின் நோக்கம். அதில் எப்படி பிராமணர்களுக்கு நீதி கிடைக்கும்?

- ‘துக்ளக்', 9.9.2021

>>  ஆக, ‘துக்ளக்' என்பது ‘பிராமணர்களுக்கான' பத்திரிகை என்பதை ‘துக்ளக்'கை வாங்கும் பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொள்ள வேண்டும். ஜெகத்குரு(?) என்று ஒரு குச்சி முனிவரைத் தூக்கிச் சுமக்கப்படும் சங்கராச்சாரியாரே, நான் பிராமணர் களுக்காக ‘கம்யூனலாக' வாதாடுகிறேன் என்று சொன்ன பிறகு, இந்த நண்டு சிண்டுகள் வேறு எப்படித்தான் எழுதும்?

மல்லாக்கப்படுத்து...

* கேள்வி: கேரளாவில் கட்சி அலுவலகங்களில் முதல் முறையாக சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்றியுள்ளதுபற்றி?

பதில்: உலக கம்யூனிஸ்ட் இயக்கக் கொடியை மட்டும் வைத்து, இந்தியாவில் அரசியல் செய்தால் போணி ஆக மாட்டோம் என்பது புரிந்த பிறகு, அவர்கள் தம் நாட்டுக் கொடியையும் ஏற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

- ‘துக்ளக்', 9.9.2021

>>  ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமான நாக்பூரில் தேசியக் கொடியை எப்ப ஏற்றத் தொடங்கி னார்களாம்?

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:52 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: துக்ளக், பதிலடி

இந்திய அரசமைப்புச் சட்டம் 105 திருத்தம் வந்த பின் 'கிரீமிலேயர்' என்பது நீக்கப்பட்டு விட்டது!



August 31, 2021 • Viduthalai

 திராவிடர் கழக சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, ஆக.31 இந்தியஅரசமைப்புச் சட்டம் 105 திருத்தத்தின்படி பிற்படுத்தப் பட்டோருக்கான வரையறை (Defìnition) வரையறுக்கப்பட்டதற்குப் பின் 'கிரீமி லேயர்' என்ற ஒன்று -  அளவுகோல்  தானாகவே ஒழிந்து விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள்.

 திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் "இட ஒதுக்கீடும் - இடர்ப்பாடுகளும் தீர்வுகளும்! எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவ தற்கு முன்பே சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆட்சி காலத்திலிருந்து ஒடுக்க ப்பட்டோர் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு பின்னர் 1928 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. பின்னர் 1947இல் பிறப்டுத்தப்பட் டோருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அந்த அரசு ஆணையில் இடம் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் 1950இல்  இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி வாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு விதி உருவாக்கப்படவில்லை. இதனால் உயர் ஜாதியினைச் சார்ந்தோர் ஏடுகள் சென்னை நீதிமன்றம் சென்று அரசமைப்புச் சட்டப்படி வகுப்புரிமை அரசாணை செல்லாது எனும் தீர்ப்பினைப் பெற்றனர். அப்போதைய மாகாண அரசு செய்த மேல்முறையீட்டிலும் உச்சநீதிமன்றம் அதே தீர்ப்பினை உறுதி செய்தது.

ஒடுக்கப்பட்டோரின் இடஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட்டதால் தந்தை பெரியார் தலைமையில் மாபெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் புதிதாக பிரிவு 15(4) சேர்க்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீடு சென்னை மாகாணத் தில் மட்டுமல்ல நாடு தழுவிய அளவில் நடைமுறைக்கு வழிவகுத்தது. அந்த சட்டப்பிரிவில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிக் குறிப்பிடுகையில், “சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Socially and Educationally Backward Classes) என குறிப்பிடப்பட்டது. நாடாளு மன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பொழுது ‘பொருளாதார ரீதி யாகவும்‘ (Economically)  என்பதுவும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்டது. அப்பொழுது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, பொருளாதார அளவு கோல் என்பது பொருந்தாத ஒன்று; பொருளாதார நிலைமை என்பது நிலையானது அல்ல; இன்று ஏழை, நாளை பணக்காரர் ஆகலாம்; இன்று பணக்காரர் வருங்காலத்தில் ஏழையாகும் நிலைமையும் ஏற்படும்; நிலையில்லாத ஒன்றின் அடிப்படையில் - பொருளாதார அளவுகோல் என்பது இடஒதுக்கீட்டிற்கு பொருந்தி வராதது. எனவே “பொருளாதார ரீதியாக” என்ற சொல்லாடலை சட்டப்பிரிவு 15(4)இல் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் விரிவாக பதிலளித்தார். பிரிவு 15(4)இன்படி சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதாகவே அரசமைப்புச் சட்டம் இடஒதுக்கீடு பற்றிய விதியாக ஏற்படுத்தி விட்டது.

இதற்கு மாறாக பின்னர் தமிழ்நட்டில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற பொருளாதார வரம்பாக ஆண்டு வருமானம் ரூ.9000க்கும் மிகாதவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்று ஆணை பிறப்பித்தார். அதனை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடஒதுக்கீட்டில் ஒத்த கருத்துடைய பிற அரசியல் கட்சிகள் ஓராண்டு தொடர்ந்து மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்து பொருளாதார அடிப் படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்தனர். இதனால் 1980ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அ.தி.மு.க. படுதோல்வியை அடைந்தது. எம்.ஜி.ஆர். அறிவித்த வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டார். கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அளவை 31லிருந்து 50 விழுக்காடாகவும் உயர்த்தி அரசாரணை பிறப்பித்தார்.

அன்றிலிருந்து தமிழ்நாட்டில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான மொத்த இடஒதுக்கீடு (தாழ்த்தப்பட்ட ஜாதியினர் - பழங்குடி மக்கள் இடஒதுக்கீட்டையும் சேர்த்து) 50 விழுக்காட் டிற்கு மேல் சென்று விட்டது; நடைமுறையில் தமிழ்நாட்டில் நிலைத்து விட்டது.

1992இல் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் மேல் செல்லக்கூடாது என தீர்ப்பு அளித்தது. (பிரத்தியேகக் காரணங்களுக்காக அந்த உச்ச வரம்பிற்கு அதிகமாகவும் அளிக்கலாம் எனவும் தீர்ப்பில் உள்ளது). அந்தத் தீர்ப்பிலேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் வகையினர் என பிரித்தும் குறிப்பிடப்பட்டு அந்த வகையினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்று பிறப்பிக்கப்பட்ட ஆணை பற்றி வழங்கப்பட்டதாகும்).

தமிழ்நாட்டில் கிரீமிலேயர் வழிமுறை என்பது நடைமுறையாக்கப்படவில்லை. பின்னர் தமிழ்நாட்டில் நிலவிய மொத்த இடஒதுக்கீடான 69 விழுக்காட்டிற்குஆபத்து வந்த பொழுது அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது திராவிடர் கழகம் 69 விழுக்காட்டை பாதுகாத்திட அரசமைப்புச் சட்டப் பிரிவு 31(C)யின் படி தனிச்சட்டம் இயற்றிடவும் இயற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 31(B) பிரிவினைப் பயன்படுத்தி அரச மைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணை யில் சேர்க்கவும் ஆலோசனை வழங்கி அதன்படி ஆவன செய்யப்பட்டு 69 விழுக் காட்டிற்கு சட்டப் பாதுகாப்பும் உருவாக்கப்பட் டது. இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் 76ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப் பட உரிய வகையில் ஆலோ சனைகளை முயற்சிகளை திராவிடர் கழகம் எடுத்தது. நாட்டிலேயே இடஒதுக்கீட் டிற்காக முதன்முதல் சட்டம் இயற்றப்பட்டதும் 69 விழுக் காட்டை பாதுகாத்திடத்தான்.  அதற்குமுன்னர் அரசு ஆணைகள் மூலமாகத்தான் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இன்றுவரை தமிழ் நாட்டில் இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 விழுக் காட்டிற்கு மேலாக பின்பற் றப்படுவதும், இடஒதுக்கீட் டிற்கு பொருளாதார அளவு கோலான ‘கிரீமிலேயர்’ முறையும் (அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அளவுகோல்) பின்பற்றப் படாத நிலையும் நீடித்து வருகிறது. இதற்கு அடிப் படைக் காரணம் இந்த மாநிலம் தந்தை பெரியார் சமூகநீதியை பேணி வளர்த்த மாநிலம் - உரிமை காத்திட போராட்டங்கள் நடத்தி இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திய மாநிலம் - பெரியார் மண் என்பதாகும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திற்கு, பட்டியலின ஜாதியினர் மற்றும் பழங்குடி மரபினருக்கு உள்ள ஆணையத் தைப் போலவே அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கிட அரசமைப்பு 102ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பினை ஏற்படுத்திடும் வகையில் அவர்களை கண்டறியும் அதிகாரம் (இடஒதுக்கீட்டு வாய்ப்புப் பெற்றிட) மாநில அரசுகளிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சட்டம், மசோ தாவாக இருந்த நிலையிலேயே திராவிடர் கழகம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக் கப்படும் விதி முறை நீக்கப்பட வேண்டும் என்று நேரிலேயே மாநிலங்களவை தெரிவுக் குழுவில் தெரிவித்தது. ஆனால் அரசு அந்தப் பிரிவினை நீக்காமலேயே சட்டத் திருத்தத் தினை கொண்டு வந்தது. மாநில அதிகாரம் உரிமை பறிக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும் அண்மையில் ஒரு தீர்ப்பில் உறுதி செய்தது. அந்தப்பிரிவு உரிமையை மறுப்பதாகத் தான் உள்ளது என தெளிவு படுத்தியது.

அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடை முறைக்கு வந்த 1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை “பிற்படுத்தப்பட்டோர் யார்?” என்பதற்கான வரை யறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. இதனால் நீதிமன்றங்களும், ஒன்றிய அரசில் இருந்த ஆதிக்க சக் திகளும் பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டிற்கு தடை ஏற்படுத்துகின்ற வகையில் கிரீமிலேயர் முறை போன்றவற்றை நடைமுறையில் கொண்டு வந்தனர். கிரீமிலேயர் முறை என்பது பொருளாதார அளவுகோல் அடிப் படையில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தில் இடம் பெறக் கூடாததை அளவுகோலாகக் கொண்டு அரசு ஆணை பிறப்பிக்கும் நிலைமைகள் நீடித்து வருகின்றன என்பது உண்மையில் அரசமைப்புச் சட்ட மீறல் நடவடிக்கையே.

மாநில அரசின் அதி காரம் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல் பரவலாக கிளம்பிய நிலையில் ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட 105ஆம் திருத்தத்தினை மேற்கொண்டது. இதன்படி பிற்படுத்தப்பட் டோரைக் கண்டறியும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகள் வசம் ஒப்படைக்கப்பட்டு சட்ட விதி உருவாக்கப்பட்டன. கூடுதலாக முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் என்ப தற்கு வரையறை என்பதுவும் அரசமைப்புச் சட்டத்தில் புதிய விதிகளாகச் சேர்க்கப்பட்டது மிகவும் முக்கித்துவம் வய்ந்தது.

மாநில அரசுகள் தெரிவு செய்து பட்டி யலில் இடம் பெறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வர்கள் என்பதையும், இதில் ஒன்றிய பட் டியல், மாநிலப் பட்டியல் எனத் தனித்தனியாக அந்தந்த அரசு அதிகார இடஒதுக்கீட்டிற்கு (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரையறையில், ‘கிரீமிலேயர்‘ எனும் இடஒதுக்கீடு மறுப்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோருக்கான வரை யறை  சட்டத்தில் இல்லாத நிலையில் உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் பிற்படுத்தப் பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை மறுத்திடும் வகையில் கிரீமிலேயர் முறையை வலியுறுத்தி வந்தனர். நீதிமன்ற தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இனி அந்த ஆணைகள் நடைமுறைக்கு பொருந்தாதவை.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த பொழுது சட்டத்திற்குப் புறம்பாக பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் கொண்டு வந்தார்.  போராட்டம், தேர்தல் தோல்வி காரணமாக ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டார். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்திடவும் செய்தார்.

இன்றைய ஒன்றிய அரசும் அரசமைப்புச் சட்டம் 102ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறியும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறித்தது. பின்னர் 105ஆம் திருத்தத்தின் மூலம் மீண்டும் மாநில அரசுகள் வசம் ஒப்படைத்தது. கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறை சட்ட விதியையும் முதன்முதலாக ஏற்படுத்தியது. அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் திராவிடர் கழகம் போராட்டம், பிரச்சாரம் செய்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பாதுகாத்தது. இன்று ஒன்றிய அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்தால் பிற்படுத்தப்பட்டோர் வரையறையின் மூலம் கிரீமிலேயர் முறைக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருங்காலங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில்  நாடு தழுவிய அளவில் கிரீமிலேயர் முறை பின்பற்றப் படக்கூடாது. பின்பற்றப்பட்டால் நிச்சயம் கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டை பாதுகாத்ததைப் போலவே திராவிடர் கழகம் களத்தில் இறங்கிப் போராடும் - இடஒதுக்கீட்டை பாதுகாத்திடும். பெரியார் மண் - தமிழ்நாடு இடஒதுக்கீட்டிற்கு வழி காட்டுகின்ற மாநிலமாக தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஜாதி அடையாளமும், ஜாதி அடிப்படை யில் உயர்வு தாழ்வு நிலவிடும் சமூகஅநீதி நிலைமையே இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த சமூக அநீதியை களைந்து மனிதரிடையே சமத்துவத்தை ஏற்படுத்திட சமூகநீதி நிலை நாட்டப்பட வேண்டும். தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூகநீதி சமுதாயத்தில் நிலவிட வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரம், களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால் ஓரளவு சமூகநீதி நிலவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட ஜாதியினர், பழங்குடி மக்கள் ஏற்றம் பெற வேண்டும். அப்படிப்பட்ட சமூகநீதியை அடைகின்ற வழிமுறைகளுள் முக்கிய மானது இட ஒதுக்கீடு. கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும், வேலை வாய்ப்பு, குலத்தொழில் தொடர்ச்சி என்பதாக இருந்த நிலை மாறிட கற்ற கல்விக்கேற்ற வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்கு கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக திராவிடர் இயக்கம் போராடி வருகிறது. சமூகநீதித் தளத்தில் பெற்ற வெற்றிகள் முழுமையானவை அல்ல. பெற்ற வெற்றிகளும் முழுமையாக நடை முறையாவதற்கு பல்வேறு தடைகளை அனைத்துத் தளத்திலும் இருக்கின்ற ஆதிக்க சக்திகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு, உயர்விற்கு, மற்றவர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்திடும் இடஒதுக்கிட்டினைப் பற்றிய கூட்டத்தினை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது, ‘இடஒதுக்கீடு இடர்ப்பாடுகளும் தீர்வுகளும்‘ என்ற தலைப்பிலேயே சிறப்புக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் 30.8.2021 அன்று நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். சட்ட அறிஞரும், இடஒதுக்கீடு பற்றி ஏராளமான ஆய்வுப் புத்தகங்களை எழுதியவருமான சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி கூட்டத்தின் நோக்கவுரையினை வழங்கினார். தொடக்கத்தில் சிறப்புக் கூட்டத்தில் அறிமுக உரையினை திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் வரவேற்புரையினை பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் ஆற்றினர்.

நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து...

நோக்கவுரை ஆற்றிய கழக வெளியுற வுச் செயலாளர் கோ.கருணாநிதி இட ஒதுக்கீடு, நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து படிப்படியாக பரவலான வரலாறு பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறினார். 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 102ஆம் அரசமைப்புச் சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அதிகாரத்தை வழங்கிய போதிலும், பிற்படுத்தப்பட்ட மக்களை கண்டறிவதற்கான அதிகாரத்தை, அது வரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கண்டறியப்பட்டதை ஒன்றிய அரசின் மூலம் இந்திய குடியரசுத் தலைவர் அங்கீகரிக்கும் சட்ட விதியை உருவாக்கியது. பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான நிலைமையை அறியக்கூடிய வாய்ப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு என்பதை 102ஆம் ஆண்டு திருத்தச்சட்டம் மசோதா நிலையில் நாடாளுமன்ற மாநி லங்களவை தெரிவுக்குழுவின் அழைப்பின் பேரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் டில்லிக்கு நேரில் சென்று விளக்கமாக - அறிக்கையாக அளித்தார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தெரிந்தெடுத்து வந்த மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில்தான் தெரிவுக்குழுவும் அறிக்கை அளித்தது. 102ஆம் அரசமைப்பு திருத்தமும் சட்டமாகியது. மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும், மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டு மேல் முறையீட்டு வழக்கில் உறுதி செய்து விட்டது. பறிக்கப்பட்ட மாநில உரிமைக்கு மாநிலங்கள் குரல் எழுப்பத் தொடங்கின.

உச்சநீதிமன்றம் 102ஆம் அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றி மீளாய்வு முறையீட்டிலும் அதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட   நிலையில், ஒன்றிய அரசிற்கு மீண்டும் அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதைத் தவிர வேறுவழியில்லை. இந்த ஆகஸ்டு மாதம் 105ஆம் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களை தெரிவுசெய்கின்ற அதிகாரம் மீண்டும் மாநில அரசுகள் வசம் உறுதி செய்யப்பட்டது. கூடுதலாக ‘பிற்படுத் தப்பட்டோர் என்போர் யார்?’, என்பதற் கான வரையறையும் (Definition)105ஆம் அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதுவரை அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (Scheduled Castes), பழங்குடி மக்கள் (Scheduled Tribes), ஆகியோர் பற்றிய வரையறை விதிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற இடஒதுக்கீட்டு வாய்பினை முழுமையாக பெற முடியாத நிலைமையே நிலவி வருகிறது. கிரீமிலேயர் என்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறாத வழிமுறையில் இடஒதுக்கீட்டை   சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுத்திடும் கோட்பாடு தற்பொழுது பிற்படுத்தப்பட்டோர் பற்றிய அரசமைப்புச் சட்ட திருத்த விதிகளிலும் இடம் பெறவில்லை.  இப்படிப்பட்ட நிலைமை சட்டரீதியாக நிலவிடும் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ள இடர்ப்பாடுகளையும் அதற்கான தீர்வுகளையும் விளக்கும்  ஆய்வரங்கக்   கூட்டமாக நடைபெறுகிறது என்பதை  தமது  நோக்க உரையில் வெளியுறவுச் செய லாளர் கோ.கருணாநிதி குறிப்பிட்டார்.

டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன்

நீதியரசர் டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அரசமைப்புச் சட்ட விதிகள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பற்றி விளக்கி தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

மண்டல் குழு பரிந்துரைகளுள் ஒன்றாக அன்றைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஒன்றிய அரசானது, ஒன்றிய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடாக முதன் முறையாக 27 விழுக்காடு என ஆணையிட்டது. அந்த அரசு ஆணையினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அரசு ஆணை நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதித்து 9 நீதிபதிகள் அடங் கிய அமர்வு விசாரித்தது. இந்திரா சகானி வழக்கு என பின்னர் பரவலாக அறியப்பட்ட வழக்கில் பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது. கூடுதலாக பிற்படுத்தப்பட்டோரில் ‘கிரீமிலேயர்’ எனப்படுவோரை (பொருளாதார அளவு கோல் கொண்டு அறியப்பட்டது) வரைப்படுத்தச் சொல்லி அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டது. பிற்படுத்தப்பட்ட நிலைமை அரசமைப்புச் சட்டப்படி சமூகநீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோர் என்பதாகும். இங்கு பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது பொருந்தாது. ‘கிரீமிலேயர்’ முறையை வலியுறுத்திய உச்சநீதிமன்றம் அதற்குரிய காரணமாக “பிற்படுத்தப்பட்டோர் யார்” என்பதற்கான வரையறை அரசமைப்புச் சட்டத்தில் அப்போது  இல்லை என்ப தாகக் கூறியது. வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயர் நிலையிலானவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது.

பின்னர் 2006ஆம் ஆண்டில் அன் றைய ஒன்றிய அரசு, ஒன்றிய கல்வி நிலையங்களிலும், தனியார் கல்வி நிலையங் களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என அரச மைப்புச் சட்டத்தை திருத்த முனைந்த நிலையிலும் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அசோக் தாக்கூர் வழக்கு என அறியப்பட்ட அந்த வழக்கில் கிரீமிலேயர் முறை என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதாக தீர்ப்பு அளித்தது. பிற்படுத்தப்பட்டோரில் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை தவிர்ப்பது என்பது மாநில அரசு கல்வி நிலையங்களுக்கும், தனியார் கல்வி நிலையங்களுக்கும் பொருத்தப்பாடு உடைய தாக தீர்ப்பு அளிக்கப்பட வில்லை.

‘பிற்படுத்தப்பட்டோர் யார்’ என்பது பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போல வரையறை செய்யப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் வரையறை இல்லாத நிலையைக்காரணமாகக் காட்டி பிற்படுத்தப்பட்டோ ரில் சிலரை கிரீமிலேயர் என வகைப்படுத்தி அந்த வகையினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. பல மாநில அரசுகளும் தங்களது கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட் டில் சட்டக் கட்டாயம் ஏதும் இல்லாமல் கிரீமிலேயர் முறையைக் கடைப்பிடித்து வருகின்றன. சமூகநீதியில் முன்னோடியான தமிழ்நாடு மாநில அரசு கிரீமிலேயர் முறையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட 105ஆம் அரசமைப்பு திருத்தச் சட்டத் தின்படி பிற்படுத்தப்பட்டோரை கண்ட றியும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறை பற்றி முதன்முதலாக புதிய சட்டப் பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. பிரிவு 342 ஏ என்பதாக ஒரு பிரிவு - அந்த பிரிவின்படி பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை விளக்கும் வகையில் மேலும் ஒரு பிரிவு 366 (26சி) என்பதாகவும் சேர்க்கப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் என குடியரசுத் தலைவர் ஒப்புதல்படி ஒன்றிய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, ஒன்றிய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்ப்பு என்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்படும். அதில் மாநில அரசு மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்ப்பு ஆகியவற்றிற்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாநில அரசுகள் கண்டறியும்.

இந்த இரண்டு வகைப்பட்டியலிலும் இடஒதுக்கீட்டுப் பயன்பெறும் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு ‘கிரீமிலேயர் வகை’ என எதுவும் குறிப்பிடப்பட்டு அப்படிப்பட்ட வகையினராக இடஒதுக்கீடு மறுக்கப்படவில்லை என்பதே உண்மையான சட்ட நிலைப்பாடு.

அரசமைப்புச்சட்டம் குறிப்பிடுவதே பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயர் வகையினர் என்பதாக இடஒதுக்கீட்டை எந்த அரசும் வலியுறுத்த முடியாது. உச்ச நீதமன்றமும தீர்ப்பு அளிக்கமுடியாது. பிற்படுத்தப்பட்டோர் யார் என்று 105ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டம் உருவாக்கும் வரை வரையறை செய்யப்படவில்லை. எனவே ஒன்றிய அரசும், அவசியமே எழாமல் பெரும்பாலான மாநில அரசுகளும் கிரீமிலேயர் வழிமுறையை கடைப்பிடித்து வந்துள்ளன. அரசமைப்புச் சட்ட திருத்தத்தின்படி அதற்கு அவசியமே இல்லை என்பதுதான்.

சரியான சட்ட விதிகளும், இனிவரும் காலங்களில் கிரீமிலேயர்   வகையினர் என்பதாக எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஒதுக்கப்பட மாட்டார்கள், ஒன்றிய அரசு அந்தந்த மாநில அரசுகளின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர்) இடம் பெற்றிருந்தால் போதுமானது. அந்த பிற்படுத்தப்பட்டேர் அனைவருக்கும் இடஒதுக்கீடு பெறுகின்ற வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட சட்ட விளக்கமாக நீதியரசர் ஏ.கே.ராஜன் தனது உரையில் ஆங்கிலத்தில் விளக்கமளித்தார்.

தமிழர் தலைவர்

கூட்டத்திற்கு சமூகநீதி அமைப்பினைச் சார்ந்த தோழர்கள், வழக்குரைஞர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் வருகை தந்திருந்தனர். சிறப்புக் கூட்டம் வருகை தந்தோர் முகக் கவசம், தனி நபர் இடைவெளியில் போடப்பட்ட இருக்கையில் அமர்வு ஆகிய கரோனா பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிப்புடன் நடைபெற்றது.

தொகுப்பு: வீ.குமரேசன்

புத்தக வெளியீடு விற்பனை

சிறப்புக் கூட்டத்தில் சமூகநீதி, புரட்சிக்கவிஞர் பற்றிய மூன்று புத்தகங்களை மேடையில் தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர். மூன்று புத்தகங்களின் மொத்த விலையான ரூ. 125லிருந்து சிறப்புத் தள்ளுபடியாக ரூ. 100க்கு வழங்கப்பட்டது.

1) “69% இடஒதுக்கீடு புதிய ஆபத்தா?” (புதிய வெளியீடு)

2) “புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்” - கி.வீரமணி

3) “சமூகநீதி” - கி.வீரமணி

முகக்கவசம் அணிந்து தனி நபர் இடைவெளி ஆகிய கரோனா பாதுகாப்பு விதிகளுடன் கழகத் தோழர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:29 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கிரிமிலேயர், சட்டத்திருத்தம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ▼  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ▼  ஆகஸ்ட் (46)
      • இந்து மதத்தைக் ‘கொச்சைப்படுத்தும்' ‘துக்ளக்'
      • இந்திய அரசமைப்புச் சட்டம் 105 திருத்தம் வந்த பின் ...
      • ‘‘பெரியார் உலகம்'' அமைக்கத் தேவைப்படும் தமிழ்நாடு ...
      • பெரியார் உலகம்: களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வ...
      • பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மு.க.ஸ்டாலின்!
      • தேவை மனநல மருத்துவம்
      • நந்தன் தீக்குளித்த காலமல்ல இது - நந்தன் அர்ச்சகராக...
      • பலே! பலே!!: வேறு தீவுக்குக் குடியேறப்போகிறார்களாம்...
      • முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர...
      • 1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!
      • சட்டமன்றத்தில் இன்று... பகுத்தறிவுப் பகலவன் தந்தை ...
      • அர்ச்சகர்களுள் ஆகமம் தெரிந்தவர்கள் எத்தனைப் பேர்?
      • பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி சாமியார்கள் மக்கள...
      • தமிழர் தலைவரை சந்தித்தார் திருச்செந்தூர் அர்ச்சகர்...
      • வங்கி அதிகாரிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
      • 'இந்தியா டுடே' கருத்துக்கணிப்பு மக்களின் மனம் கவர்...
      • சட்டமன்றத்தில் இன்று "நீட்" தேர்வு ரத்து என்பதை ஓர...
      • நீட்: தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற கூட்டத் தொடரில...
      • திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவா...
      • அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டப்படி ...
      • கோயில் ஓதுவார் பணிக்கு பெண் நியமனம்
      • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான அரசாணை! தமிழ்நா...
      • அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களுக்...
      • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலை...
      • தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்க...
      • கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் த...
      • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை - புதிய சரிதம்...
      • பெரியார் - அண்ணா - கலைஞர் - நீதிக்கட்சி வழியில் நட...
      • சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் ...
      • தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் மேனாள் முதலமைச்ச...
      • கலைஞர் நினைவுநாள் சிந்தனைகள் (1924-2018) (சாதனை)
      • அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இ...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள்:
      • ஆரியப் புத்தி எங்கே மேயப் போச்சு?
      • இதர பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை முடிவு செய்யும...
      • மொழியின் அடையாளத்தை மறைக்கும் நடவடிக்கை கூடாது
      • தமிழ்நாடு முதலமைச்சருடன் அகில இந்திய பிற்படுத்தப்ப...
      • சட்ட விரோத கோயில்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்
      • இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் - ஒன்றிய அரசுக்கு...
      • பள்ளிப் பாடத் திட்டத்தில் தலைவர்களின் பெயர்களுக்கு...
      • முத்தமிழறிஞர் கலைஞர் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் (7.8....
      • "சனாதன மதவாத சக்திகளை முறியடிப்போம்! சமூக நீதி - ம...
      • இந்திய விளையாட்டு வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்ட...
      • திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர்...
      • முரசொலி'க்கு குருமூர்த்தியின் பதிலும் 'விடுதலை'யின...
      • சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமா...
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ▼  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ▼  ஆகஸ்ட் (46)
      • இந்து மதத்தைக் ‘கொச்சைப்படுத்தும்' ‘துக்ளக்'
      • இந்திய அரசமைப்புச் சட்டம் 105 திருத்தம் வந்த பின் ...
      • ‘‘பெரியார் உலகம்'' அமைக்கத் தேவைப்படும் தமிழ்நாடு ...
      • பெரியார் உலகம்: களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வ...
      • பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மு.க.ஸ்டாலின்!
      • தேவை மனநல மருத்துவம்
      • நந்தன் தீக்குளித்த காலமல்ல இது - நந்தன் அர்ச்சகராக...
      • பலே! பலே!!: வேறு தீவுக்குக் குடியேறப்போகிறார்களாம்...
      • முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர...
      • 1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!
      • சட்டமன்றத்தில் இன்று... பகுத்தறிவுப் பகலவன் தந்தை ...
      • அர்ச்சகர்களுள் ஆகமம் தெரிந்தவர்கள் எத்தனைப் பேர்?
      • பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி சாமியார்கள் மக்கள...
      • தமிழர் தலைவரை சந்தித்தார் திருச்செந்தூர் அர்ச்சகர்...
      • வங்கி அதிகாரிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
      • 'இந்தியா டுடே' கருத்துக்கணிப்பு மக்களின் மனம் கவர்...
      • சட்டமன்றத்தில் இன்று "நீட்" தேர்வு ரத்து என்பதை ஓர...
      • நீட்: தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற கூட்டத் தொடரில...
      • திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவா...
      • அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டப்படி ...
      • கோயில் ஓதுவார் பணிக்கு பெண் நியமனம்
      • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான அரசாணை! தமிழ்நா...
      • அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களுக்...
      • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலை...
      • தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்க...
      • கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் த...
      • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை - புதிய சரிதம்...
      • பெரியார் - அண்ணா - கலைஞர் - நீதிக்கட்சி வழியில் நட...
      • சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் ...
      • தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் மேனாள் முதலமைச்ச...
      • கலைஞர் நினைவுநாள் சிந்தனைகள் (1924-2018) (சாதனை)
      • அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இ...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள்:
      • ஆரியப் புத்தி எங்கே மேயப் போச்சு?
      • இதர பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை முடிவு செய்யும...
      • மொழியின் அடையாளத்தை மறைக்கும் நடவடிக்கை கூடாது
      • தமிழ்நாடு முதலமைச்சருடன் அகில இந்திய பிற்படுத்தப்ப...
      • சட்ட விரோத கோயில்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்
      • இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் - ஒன்றிய அரசுக்கு...
      • பள்ளிப் பாடத் திட்டத்தில் தலைவர்களின் பெயர்களுக்கு...
      • முத்தமிழறிஞர் கலைஞர் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் (7.8....
      • "சனாதன மதவாத சக்திகளை முறியடிப்போம்! சமூக நீதி - ம...
      • இந்திய விளையாட்டு வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்ட...
      • திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர்...
      • முரசொலி'க்கு குருமூர்த்தியின் பதிலும் 'விடுதலை'யின...
      • சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமா...
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.