வெள்ளை அறிக்கை வெளியிடுக!
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, நவ.23, “பொதுத் தொகுப்பிலுள்ள மருத்துவ இடங்களிலும், இதர பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தினருக் கான இடஒதுக்கீட்டை நிரா கரிப்பது மாபெரும் துரோக மாகும்” என தி.மு.க. தலைவர் தளபதி மு.க.. ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.11.2019) மத்திய பா.ஜ.க. அரசுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
“மாநில அரசும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங் களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங் களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை” என்று தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சரோ, அல்லது மாண்புமிகு பிரதமர் அவர்களோ நாடாளுமன்றத்தில் உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
2017_18-ஆம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத் துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமு தாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் ‘மண்டல் கமிஷன்’ அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்!
இடஒதுக்கீடு கொள்கை பறிக்கப்பட்டுள்ளது
2018_19-ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே! இரு வருடங் களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இட ஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற் குரியது
பிற்படுத்தப்பட்ட
சமுதாயத்தினரை வஞ்சிப்பதா?
பா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப் பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலு வலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், இப்போது பொதுத் தொகுப் பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இட ஒதுக்கீட்டை’ நிராகரிப்பது பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப் பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச் சர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக் கப்பட்டு விட்டது.
மத்திய அரசின் செய லகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் மட்டத்தில் அறவே இல்லை என்றதொரு நிலை உருவாக் கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ‘நீட்’ தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு - இப்போது அரசியல் சட் டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும் - மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
வெள்ளை அறிக்கை தாக்கல் செய்க!
ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017_18, 2018_19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத் தனை மருத்துவ இடங்கள் வழங்கப் பட்டன?
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத் திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள் ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங் களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்து வதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோ தாவைக் கொண்டு வர வேண்டும்
என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு 23 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக