புதன், 13 நவம்பர், 2019

பாரதீய ஜனதாவே ரப்பர் ஸ்டாம்ப் எப்பொழுது வந்தது?

சென்னை, நவ.9ஆசியான் மாநாட்டிற்காக தாய்லாந்து சென்ற மோடி அங்கே அந்த மாநாட்டிற்கும் இதர வணிக ஒப்பந்தங்களுக்கும் தொடர் பில்லாமல்  திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இந்த செய்தியை வழக்கத்தை விட அதிகமாக முக்கியப் படுத்தவேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டமாக இருந்தது. இதையொட்டி தமிழகத்திலுள்ள முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊட கங்களுக்கு பிரதமர் அலு வலகத்திலிருந்தும், பாஜக தலைமையிலிருந்தும்- உத்தர வுகள் பறந்தன.

திருக்குறளை தாய்லாந்து மொழியில் மோடி வெளியிட் டது உண்மையாக இருக்க லாம். அது ஒரு விளம்பரத் திற்காகவே! 1964-ஆம் ஆண்டே ரமிலி பின் தக்கீர் என்ற மலாய் மொழி அறிஞர் மலாய் மொழியிலும், தாய் லாந்து  மொழியிலும் மொழி பெயர்த்துவிட்டார்.

இந்த நிலையில் மோடி தாய்லாந்து மொழியில் திருக் குறளை வெளியிட்டார் என்று தமிழக பாஜகவினர் பெருமை கொண்டாடி வரும் நிலையில், அவர்களே திரு வள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்து தங்களின் குயுக் தியை காட்டிவருகின்றனர்.

இவர்களின் இந்தச்செய லுக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளி வந்த நிலையில், தஞ்சை-பிள் ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சில விசமிகள் அவமதித்துள்ள னர். இந்த இரண்டு நிகழ்வு களுக்கும் தொடர்பு இருப் பதை அடுத்து குறிப்பிட்ட அமைப்பினர்தான் இந்த வேலையைச் செய்துள்ளனர் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின் றனர் மேலும். அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக வினர் மீண்டும் ஒரு படத்தை வெளியிட்டு 1800-களிலேயே திருவள்ளுவரை இந்து துற வியாக மதித்து புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்று கூறி அதனை நம்பவைக்க ரப் பர் ஸ்டாம்ப் அடையாளம் ஒன்று இருப்பதையும் காட் டியுள்ளனர்.

27.7.1865 என்ற தேதியிட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அந்த நூலில் உள்ளது.

இவர்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் பற்றிய  வரலாறு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

மனித இன நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே முத்திரை வழக் கத்தில் வந்துவிட்டது, இதை எளிமையாக்க 1500-களில் கிறிஸ்தவ சபைகள் உல கெங்கும் மிசினரிகளை அமைத்து அதற்கு ஆணை களைப் பிறப்பிக்க  நீண்ட மரக்கட்டையின் அடியில் தேவைப்படும் எழுத்துக் களைச் செதுக்கி அதை மையில் நனைத்து காகிதத்தில் முத்திரை இடும் முறையை கொண்டுவந்தனர்., அதில் எழுத்துக்கள் தெளிவில்லாத காரணத்தால் 1880-களுக்குப் பிறகுதான் ரப்பர் ஸ்டாம்ப் கண்டுபிடிக்கப்பட்டது, முதல் முதலாக 1895-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் வங்கி ரப்பர் ஸ்டாம்பு களை அலுவலகப் பயன் பாட்டிற்கு பயன்படுத்தியது,

அதன் பிறகு நீண்ட கால மாக ஒரே மாதிரியாக பயன் படுத்தப்பட்டு வந்த ரப்பர் ஸ்டாம்ப் கணினி பயன் பாட்டிற்கு வந்த பிறகு 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து பல்வேறு வடிவங்களில் பயன் படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் புழக்கத்திற்கு வந்தன,

முக்கியமாக இந்த நூலில் இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப் 1980களுக்குப் பிறகுதான் பிர பலமானது, மேலும் இதில் உள்ள எழுத்துக்கள் கணினி எழுத்துருவான டைம்ஸ் ரோமனில் உருவாக்கப்பட் டவை ஆகும்., திருவள்ளுவர் ஒரு இந்து மத வீரத் துறவி என நிறுவுவதற்கு எப்படி எல்லாம் பித்தலாட்டம்-மோசடி செய்கிறது காவிக் கூட்டம் என்பதைப் பார்த் தீர்களா?

- விடுதலை நாளேடு 9 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக