வியாழன், 14 நவம்பர், 2019

தப்புத் தப்பாக உளறுவது யார் 'தினமலரே'?

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முடிச்சவிழ்க்கிகள் 'தினமலர்' உருவத்தில் நடமாடத்தான் செய்கிறார்கள்.

தளபதி ஸ்டாலின் சொன்னது என்ன? 'தினமலர்' கூறுவது என்ன? 1937இல் தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில்  13 சர்வாதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 1948 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா அவர்கள் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த உண்மையைத் தானே தளபதி ஸ்டாலின் சொன்னார்.

இது தவறு என்று சொன்னால் ஆதாரத்துடன் மறுக்கலாம். அதுதான் அறிவு நாணயம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை.

வரலாற்றை மக்கள் மறந்திருப்பர் என்று ஸ்டாலின் தப்புத் தப்பாக சொல்லுகிறார் என்று இந்தத் 'தப்பிலி'கள் சொல்லு வதுதான் வேடிக்கை. தளபதி ஸ்டாலின் தப்புத் தப்பாக எதையும் சொல்லவில்லை. வரலாற்றை சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அண்ணா சர்வாதிகாரி யாக பெரியாரால் நியமிக்கப்பட்டதற்கும், திகவிலிருந்து திமுக பிரிந்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அப்பட்டமாக  அபாண்டமாக எதையாவது கிறுக்குவதும், உளறுவதும் பிறகு நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் இந்தப் பார்ப்பன சவுண்டிகளுக்குச் சர்வ சாதாரணம் தானே!

-  கருஞ்சட்டை

 - விடுதலை நாளேடு 14 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக