ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சண்டி மாடு சவுண்டிகள் திருந்துவதில்லை!

எங்கள் அமைப்பில் பாசிசம் கிடையாது - மாறாக பார்ப்பனீய பாசிசத்தை பச்சையாகத் தோல் உரிக்கக் கூடியது. 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று கூறும் பேர்வழிகளை, லோகக் குரு சங்கராச்சாரியார் என்று கூறும் பாசிசத்தின் முகத்திரையைக் கிழிக்கக் கூடியது. நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்று எழுதி வைத்து (வேசிமகன்  - ஆதாரம் மனுதர்மம் அத்தியாயம் - 8, சுலோகம் - 415) இழிவு படுத்தும் ஈனத்தனமாம் பாசிசத்தை மட்டை ஒன்று கீற்று  இரண்டாகக் கிழிக்கக் கூடியது. பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று தன்னைப் பெற்றெடுத்த தாயையும் சேர்த்து கூறும் (அத்தியாயம் - 9,  சுலோகம் - 32) கீதையைக் கிழித்துக் காட்டியவர் எங்கள் தலைவர் வீரமணியாவார்! எவ்வளவு சூடு கொடுத்தாலும் சண்டி மாடு  சவுண்டிகள் திருந்துவதில்லை என்று திருப்பதி ஏழுமலை யானிடம் சத்திய வாக்குக் கொடுத்துள்ளார்களோ, வெட்கக் கேடு! வெட்கக்கேடு!!
- விடுதலை நாளேடு, 12.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக