ஞாயிறு, 12 ஜனவரி, 2020

அவுட்டுத் திரிகள் துள்ள வேண்டாம்!

திராவிடர் கழகம் அரசியல், பதவிப் பக்கம் செல்லாத அமைப்பு என்பது ஊருக்கும் உலகுக்குமே தெரிந்த ஒன்று; ஆனால் இந்த அடிப்படைப் பாடம் கூடப் படிக்காததுகள் எல்லாம் பத்திரிக்கை நடத்த வந்திருப்பதுதான் பரிதாபம்!
முதல் அமைச்சர் பதவியை ஏற்க இரு முறை வெள்ளைக்கார கவர்னர் பெரியாரின் கதவைத் தட்டியபோதுகூட "'அட்ரஸ்' தெரியாமல் வந்து  விட்டீர்கள், என்னுடைய பணி இந்த சமூகத்தை மாற்றியமைக்கும் சமூகப் புரட்சிப் பணி" என்று பதவிகளை உதறித் தள்ளிய தந்தை பெரியார் கண்ட இயக்கம் திராவிடர் கழகம்! அதே நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்களிடம் சாட்டையைச் சுழற்றி வேலை வாங்கும் இடத்தில் இருப்பது திராவிடர் கழகம்; "இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!" என்று முதல் அமைச்சர் அண்ணா சொன்னதையும், "தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறேன். இது நான்காம் ஜாதி மக்களின் சூத்திரர்களின் ஆட்சியே" என்று முதல் அமைச்சர் கலைஞர் சட்டப் பேரவையில் அறிவித்ததும் நினைவில் நிற்கட்டும்!
அரைகுறை 'தினமலர்'கள், அவுட்டுத் திரிகள் ரொம்பவும் துள்ள வேண்டாம்!
- விடுதலை நாளேடு, 12.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக