மூத்த பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு அவர்களின் நூற்றாண்டு விழாவில், அவருக்கு பெங்களூரு மாநில திராவிடர் கழகத்தின் சார்பில், ‘வீரவாளினை' தமிழர் தலைவர் வழங்கினார். ‘வாழ்நாள் சாதனையாளர் விருது'' பெற்ற தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் (ரூ.16 ஆயிரம்) மாநில தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ, மாநில பொருளாளர் கு.செயகிருட்டிணன், குணவேந்தன், முத்துச்செல்வன், தங்கம் ராமச்சந்திரன், புரா.கஜபதி, சொர்ணா அரங்கநாதன், இரா.இராஜாராமன், வெ.நடராசன், வி.கிருபாநிதி, சி.சக்ரவர்த்தி, அமுதபாண்டியன், வே.கண்ணியம், வே.பாவேந்தன், வீ.மு.வேலு, ஊமை.செயராமன், பேராசிரியர் கோவிந்தராசன், ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டது. (பெங்களூரு, 29.12.2019).
கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் கயத்தாற்றிலிருந்து வாங்கப்பட்ட கருப்பட்டி வெல்லம், ஊட்டியிலிருந்து வாங்கப்பட்ட காபி கொட்டை ஆகியவற்றை பலத்த கழகக் கொள்கை முழக்கத்திற்கிடையே தராசில் தமிழர் தலைவர் அமர வைக்கப்பட்டு வழங்கினர்.
பெங்களூரு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ஒன்பது வகையான காய்கறிகளை வழங்கினர். நூற்றாண்டு விழா காணும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் வீ.மு. வேலுவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர், மோகனா வீரமணி ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தமிழர் தலைவருக்கும், மோகனா வீரமணி அம்மையாருக்கும் கருநாடக திராவிடர் கழகத்தின் சார்பில் மு. ஜானகிராமன், இரா. முல்லைகோ ஆகியோர் பொன்னாடை அணிவித்து மாலை அணிவித்தனர். உடன்: ஆர்.டி. வீரபத்திரன், வந்தியதேவன் (ம.தி.மு.க.) உள்ளனர்.
கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் மூத்த வழக்குரைஞர் ரவிவர்மகுமார் தமிழர் தலைவரை சந்தித்தார்.
கருநாடக மாநில பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் எச். காந்தராஜா தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்.
பிறந்தநாள் காணும் சாமிசமதர்மம், (76 வயது) ஒசூர் கண்மணி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துவாழ்த்துக்களை தெரிவித்தார்.
பெங்களூரு கழகக் கொள்கை விழாவினை சிறப்பாக நடத்திய மு. ஜானகிராமன், இரா. முல்லைகோ, ஆர்.டி. வீரபத்திரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினர்.
கருநாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி மற்றும் தோழர்களும் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
80ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் பெரியார் பெருந்தொண்டர் ஒசூர் துக்காராமுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கருநாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணி வித்து மணவிழா அழைப்பிதழை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக