வெள்ளி, 24 ஜனவரி, 2020

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை உடைத்த காலிகள் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜன.24  உத்திர மேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத் திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று இரவு வந்த காலிகள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றனர். இன்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

பெரியார் சிலை உடைப்பில் ஈடுபட்ட வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்  கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதி யில் காவல்துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவல்துறைத் தலைமை இயக் குநருக்கும், தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

1998ஆம் ஆண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் இந்த பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி  மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள் ளதாவது:

“95 ஆண்டுகாலம் தமிழகத் திற்காக குரல் கொடுத்த, போராடிய தந்தை பெரியாரை இழிவு படுத்துவதென்பது வேதனைக்குரிய ஒன்று. அந்தச் செயலில் ஈடு பட்டோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என்றார்.

- விடுதலை நாளேடு 24 120

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக