செவ்வாய், 7 ஜனவரி, 2020

பெரியார் நூலகம் - ஆய்வகத்தில் ‘‘டிஜிட்டல் பிரிவு'' தொடக்கம்

புத்தாண்டுப் பரிசு

நேற்று (1.1.2020) பெரியார் பகுத்தறிவு  நூலகம் மற்றும் ஆய்வகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  டிஜிட்டில் பிரிவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். டாக்டர் ஏ.ராஜசேகரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புலவர் பா.வீரமணி மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த டிஜிட்டல் பிரிவில் உள்ள தொடு திரை வாயிலாக மிக எளிதில் புத்தகங்களையும், ஏடுகளையும் வாசிக்க முடியும். வாசகர்களுக்குத் தேவையான புத்தகங்களை எளிதில் தேர்ந்தெடுத்து வாசிக்க உதவுவதோடு, அவரவர்க்குத் தேவையான அளவில் எழுத்துகளின் அளவையும் பெரிதாக்கியும் படிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். தொடர்ந்து டிஜிட்டல் பிரிவு விரிவாக்கப்படும் என்றும் தமிழர் தலைவர் அறிவித்தார்.

- விடுதலை நாளேடு 2 .1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக