சனி, 4 ஜனவரி, 2020

பாசிச நகர்வுகளுக்கு எதிராக...

இன்று பெரியார் நினைவு தினம். பெரி யாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் இன்றும் வாழ்கின்றன. பெரியாரின் கருத்துகளை முற் போக்காளர்கள் முன்வைப்பதில் மட்டுமல்ல; சங் பரிவாரத்தினர் பெரியாருக்கு எதிராக வெளிப்படுத்தும் நஞ்சிலும் இது தெளிவாகிறது. பெரியாரின் பெயரை கேட்டாலே எச்.ராஜாவி லிருந்து ராம்தேவ் வரை அவர்களுக்கு கோபம் தலைக்கேறிவிடுகிறது. நவம்பர் மாதம் ரிபப்ளிக் டிவிக்கு பேட்டி அளித்த ராம்தேவ் கீழ்கண்ட வாறு கூறினார்:

“என் காலத்தில் பெரியார் இருந்திருந்தால் அவரை செருப்புகளால் விளாசியிருப்பேன். அவர் உயிரோடு தப்பித்திருக்க முடியாது. என்ன செய்வது! அன்று நான் இல்லாமல் போய்விட்டேன்” என்று கூறினார். "லெனின், மார்க்ஸ், மாவோ ஆகியோரின் கருத்துகள் நமக்கு அந்நியமானவை" என கூறிய ராம்தேவ், பெரியாரும் அம்பேத்காரும் “சித்தாந்த பயங்கரவாதிகள்” எனவும் கூறினார். சங்பரி வாரத்தினருக்கு பொதுவுடைமை கருத்துகளும், பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துகளும் கடும் கோபத்தை ஏற்படுத்துகின்றன.  ஏனெ னில் இன்று “இந்து ராஷ்ட்ரா”வை நிர்மாணிப் பதில் இந்த, கருத்தாக்கங்கள்தான் அவர் களுக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக உள்ளன. மோடி 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பொழுது ரூ.100 கோடிக்கும் குறைவான வணிகம் செய்த பதஞ்சலி நிறுவனம் இன்று சுமார் ரூ.11000 கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளது. இந்த விரிவாக் கத்திற்கு இந்துத்துவா ஆதரவு நிலை முக்கிய காரணம். எனவே இந்துத்துவாவின் எதிர் கருத்தாக்கங்களை இழிவுபடுத்தவும், முடிந்தால் அழிக்கவும் ராம்தேவ்களுக்கு தேவையாக உள்ளது.

பெரியாரின் தேசியம்

இந்திய விடுதலை போராட்டத்தின் பொழுது மூன்றுவித தேசிய கருத்தாக்கங்கள் தோன்றின. அவை காங்கிரஸ் பிரதிநிதித்துவப் படுத்திய முதலாளித்துவ ஆதரவு விடுதலைக் கான தேசியம், உழைக்கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமை இயக்கம் முன்வைத்த தேசியம், ஜின்னா தலைமையில் முஸ்லிம் மதவாதம் மற்றும் சாவர்க்கர்/ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்துத் துவா அடிப்படையிலான மதவாத தேசியம் ஆகியவை. இவை மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட சமூகங்களின் குரலாய் ஜார்நிலை தேசிய கருத்தாக்கங்களும் முன் வந்தன. அவற்றில் மிக முக்கியமானது பெரியார் முன்வைத்த திராவிட கருத்தியல் ஆகும்.

பொருளாதார விடுதலைக்கு முன்பு ஜாதிய விடுதலை தேவை என பெரியார் கருதினார். பிரிட் டிஷார் ஆட்சிக்கு எதிராக போராடிய பொதுவுடைமை இயக்கம் ஜாதிய ஒழிப்பையும் தனது வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஜாதிய ஒழிப்பை பற்றி கவனம் கொள்ளவில்லை. எனவே பெரியாரின் கருத்தாக்கம் ஒரு பிரிவு மக்களின் ஆதரவை பெற்றது.  பெரியார் முன்பு ஒரு கேள்வி எழுந்தது. யார் முக்கிய எதிரி? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமா? ஜாதியத்தை தூக்கிப் பிடிக்கும் பிராமணியமா? ஜாதியத்தை தூக்கிப் பிடிக்கும் பிராமணியம்தான் முக்கிய எதிரி எனும் முடிவுக்கு பெரியார் வந்தார். (பெரியார் முன் வைத்தது பிராமணிய எதிர்ப்புதானே தவிர பிராமணர்கள் எதிர்ப்பு அல்ல என்பதை நினைவில் நிறுத்துவது அவசியம்.)

எனவேதான் அவர் தேசப் பிரிவினையின் பொழுது இந்துஸ்தான், பாகிஸ்தான் போல திராவி டஸ்தான் தேவை என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை பிரிட்டிஷார் பரிசீலிக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு இருக்கவில்லை. எனினும் விடுதலை நாளை துக்க நாளாக பெரியார் அறிவித்தார். இதுவும் வேறு சில காரணங்களும் இணைந்து  திரா விடர் கழகத்திலிருந்து அண்ணா தலைமையில் தி.மு.க. உருவானதில் முடிந்தது. விடுதலைக்கு பின்பும் தனி தமிழ்நாடு கோரிக்கையை பெரியார் கைவிடவில்லை.

பெரியாரின் திராவிட தேசியம் பின்னர் தமிழகத்தில் மட்டுமே இயங்கும் ஒரு கருத் தாக்கமாக சுருங்கியது.  தனி திராவிட அல்லது தமிழ் தேசம்  என்பது மக்களின் ஆதரவு பெறவில்லை. எனினும் பெரியார் முன்வைத்த சில கருத்துகள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆர்.எஸ்.எஸ். வழி காட்டலில் இயங்கும் மோடி ஆட்சியில்  இந்துத்துவா எனும் ஒற்றை சிமிழிக்குள் அனைத்து பன்முக கருத்தாக்கங்களையும் அடக்கி வைக்க கடுமை யான முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு எதிர்ப்பு களும் எழுகின்றன. காஷ்மீரில், அசாமில், ஏனைய வடகிழக்கு மாநிலங்களில் இன்று இவை பிரதி பலிக்கின்றன.  இந்துத்துவா தாக்குதலின் இலக்கு களில் ஒன்று தமிழ் மொழியும் பண்பாடும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சூழலில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்து பெரியார் முன் வைத்த கருத்துகளின் முக்கியத்துவம் அதிகரித்துள் ளது எனில் மிகை அல்ல!

ஜாதியத்திற்கு எதிராக

பெரியாரின் வாழ்நாள் போராட்டங்களில் ஒன்று ஜாதியத்திற்கு எதிரானது ஆகும். வர்ணாசிரமத்துக்கு எதிராக தொடக்கத்தி லிருந்தே பெரியார் களம் கண்டார். வர்ணா சிரமம் எனும் அதர்மத்தை தமிழ கத்தின் மூலை முடுக்கெல்லாம் அம்பலப்படுத்திய தில் பெரியாருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியாவில் ஜாதியத்திற்கு எதிரான போராளி களில் பெரியாருக்கு இணை மிகச் சிலரே எனில் மிகை அல்ல.

தன் வாழ்நாளிலேயே ஜாதியம் பல பரிணா மங்களை எடுத்தது என்பதை பெரியார் உணர்ந்து இருந்தார். வர்ணாசிரமத்தை கண்டித்து பிராமணிய எதிர்ப்பு அடிப்படையில் உருவான ஜாதிய எதிர்ப்பு சில சவால்களை பெரியார் முன்பு நிறுத்தியது. குறிப்பாக சில இடைநிலை ஜாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உருவான முரண்பாடு புதிய சவாலாக உருவெடுத்தது. பிராமணிய எதிர்ப்பு இயக்கம் சில இடைநிலை ஜாதியினரை சமூகரீதியாக மட்டுமல்ல; பொருளாதார ரீதியாகவும் முன்னேற வழிவகுத்தது. சிலர் தேசிய முதலாளி களாகவும் உருவாயினர். ஆனால் தலித் மக் களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள் தொடர்ந் தன. இதனை பெரியார் அவருக்கே உரித்தான பாணியில் கண்டித்தார். இடைநிலை ஜாதி யினரிடமும் பார்ப்பனியம் அதாவது ஜாதிய அடக்குமுறை சிந்தனை உருவாவதை சுட்டிக் காட்டி அதனை எதிர்த்தார்.

பெரியார் தான் மறைவதற்கு முன்பு அகில இந்திய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் ஜாதியத்திற்கு எதிரான தனது போராட் டம் என்பது ஒரு மலையை கயிறு கட்டி இழுப்பது போல அமைந்துவிட்டது எனக் கூறி னார். நான் எது சரி என நினைத்தேனோ அதனை எனது சக்திக்கு உட்பட்டு செய் துள்ளேன் எனக் கூறினார். ஜாதியத்திற்கு எதிரான போராட்டம் எவ்வளவு சவால் மிக்கது என்பதையே பெரி யாரின் கூற்று தெளிவு படுத்துகிறது.

ஜாதியத்தின் புதிய சவால்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டும் மோடி ஆட் சியில் ஜாதியம் மீண்டும் வர்ணாசிரமத்தையும் இணைத்து முன்னுக்கு வருகிறது. நாடு முழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதலுக்கு உள்ளா கின்றனர். கொலையும் செய்யப்படுகின்றனர். பெரு முதலாளிகள் கொள்ளை அடிக்க வனங் களில் வாழும் பழங்குடியின மக்கள் விரட்டப்படு கின்றனர்.  அதே சமயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. உயர்கல்வி நிலையங்களில் அவர்களின் இட ஒதுக்கீடு பறிக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பல கிராமங்களில் உயர்ஜாதி யினரான ராஜபுத்திரர்கள் மட்டுமே திரும ணத்தின் பொழுது மண மகன் குதிரை சவாரி செய்ய முடியும். பிற்படுத்தப் பட்ட பார்மர் சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது திருமணத்தின் பொழுது குதிரையில் சவாரி செய்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மோடி ஆட்சியில் உயர் ஜாதியினர் தமது ஆதிக்கத்தை மேலும் கெட்டிப்படுத்த ஆரம் பித்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

அதே சமயத்தில் மோடி - அமித்ஷா கூட்டணி முன்வைப்பது பிராமணரல்லாத இந்துத்துவா என ஒரு கருத்தாக்கம் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.  இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிற் படுத்தப்பட்ட மக்களை இந்துத்துவா விஷ வட்டத்திற்குள் இழுக்கும் முயற்சியே! ஜாதிய வேறுபாடுகளை களை யாமலேயே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வர இந்துத்துவ சக்திகள் முயல்கின்றன. ஜாதிய எதிர்ப்பு சக்திகள் சந்திக்கும் புதிய சவால் இது!

பெரியாரின் ஜாதிய ஒழிப்பு போராட்டங்களி லிருந்து கற்றுக்கொள்வதற்கு நமக்கு நிறைய உள்ளது.  ஜாதிய ஒழிப்பு இல்லாமல் ஜனநாயக புரட்சி இல்லை; அதே சமயத்தில் ஜனநாயக புரட்சி எனும் களத்திற்கு வெளியே ஜாதிய ஒழிப்பு சாத்தியமில்லை.

பாலின சமத்துவம், அறிவியல் முன் னேற்றம், மூட நம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என பல தளங்களில் பெரியார் இயங்கினார். பெரியா ருக்கும், பொதுவுடமை கருத்துகளுக்கும் வேறு பாடுகளே இல்லை என கூற இயலாது. எனினும் இன்று முன்னிலைப்படுத்த வேண்டியது பெரியார் கருத்துகளுக்கும் பொதுவுடைமை கருத்துகளுக்கும் உள்ள ஒற்றுமைதான்! பாசிச நகர்வுகளுக்கு எதிராக இந்த ஒற்றுமை மிக மிக அவசியம் எனில் மிகை அல்ல.

நன்றி: 'தீக்கதிர்' 24.12.2019

- விடுதலை நாளேடு, 29.12.!9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக